பக்கங்கள்

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பக்தியோ! பக்தி!! - பார், பார்!

பக்தியோ! பக்தி!! - பார், பார்!

3.12.2017 நாளிட்ட ‘தினமலர்’ நாளேட்டின் வார மலரில் வந்துள்ள கேள்வியும் - பதிலும் இதோ:

‘‘ஜி.தேவி, நிலக்கோட்டை

கேள்வி: தற்போது, கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறதே.... காரணம் என்ன?

பதில்: தப்பு செய்பவர்கள் பெருகி விட்டனரோ என்னமோ.... செய்யும் தப்புக்குப் பரிகாரம் தேட, நியாயம் கற்பித்துக்கொள்ள கோவிலை நாடுகின்றனர் போலும்!

‘‘கோவிலில் கூட்டம் சேருவதற்குக் காரணம் கடவுள் பக்தி அதிகரித்து, எல்லோரும் ஆஸ்திகர்களாகி விட்டார்கள் என்பதற்கு இது அடையாளம்; நாத்திகத்தின் செல்வாக்கு சரிந்தே வருகிறது'' என்று வழக்கமாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக் கூட்டத்தினர்போல -முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்யாமல், ‘தினமலர்’ ஏட்டில் உண்மைகளைச் சொல்லியுள்ளனர். பலே! பலே! உண்மை ஒரு நாள் வெளியாகித்தானே தீரும்.

முன்பே திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் மிகுந்த சலிப்பு - சங்கடத்துடன் ‘‘கோவிலில் கூட்டம் சேருகிறது; பக்தி பெருகி விட்டதா என்று பார்த்தால், ஏமாற் றம்தான்! ஒழுக்கம் வளரவில்லையே. கட வுளைவேண்டுகிறவர்கள்கூடமுன்பு‘அரகர மகாதேவா’ என்று ஓங்கி ஒருமித்துக் கூறுவார்கள்.

இப்போது பக்தியுடன் கண்ணைமூடிக் கொண்டதுபோலக் காட்சியளிக்கும் புது இளம் பக்தன் எப்படிக் கூறுகிறான் அதை - தெரியுமா? ‘அர, கர மாதே வா!’ என்று அல்லவா கூவுகிறான்! இதுவா பக்தி?‘‘ இப்படிக் கூறினார்!

முன்பு, தந்தை பெரியார் சொல்வார்; சுயமரி யாதை மேடைகளிலும் பேசுவார்கள்:

‘‘ஆண்களுக்கு மட்டும் ஒரு நாள் கடவுள் தரிசனம்; பெண்களுக்கு வேறு ஒரு நாள் கடவுள் தரிசனம் என்று தனித்தனியே பார்த்து அனுப்பினால், வண்டாட்டம் - கொண்டாட்டம் குறைந்து, உண்டியல் வசூலே குறைந்துவிடுமே!

கடவுள் பிறகு தர்மகர்த்தா கனவில் தோன்றி, ‘அய்யோ இப்படி ஆண் - பெண் பிரிவினை ஏற்படுத்தி, என் பொழப்பைக் கெடுத்துவிட்டீர்களே பாவிகளே; உடனே இந்த சிஸ்டத்தை மாற்றி, பழையபடி ஆண் - பெண் பேதமின்றி அனுப்புங்கள்’’ என்றல்லவா உத்தரவு போடுவார்!

அட கடவுள் பக்தர்களே, அந்த பக்தி வியா பாரத் தரகர்களான அர்ச்சகர்களே, உங்கள் பிழைப்பு நடந்து வசூல் குறையாமல் இருந்தால் சரி!

******




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அவ்வப்போது ‘சோதனைகள்’ ஏற்பட்ட வண்ணமே உள்ளது!

‘வைதாரையும் வாழ வைப்பான் என்னப்பன் முருகன்’ என்பார் வாரியார்!

‘முருகன் என் முப்பாட்டன்' என்று சொந்தங் கொண்டாடி முருகனடியில் ஓட்டுத் தேடுவார் சிலர்!

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, வள்ளி - தெய்வானை சமேதரராக அமர்ந்துள்ள, அவரது மண்டம் இடிந்து விழுந்து, பரிதாபமாக ஒரு பெண் பக்தை சாவு; பலருக்குப் படுகாயம்!

கந்தன் கருணை இப்படியா காட்சியளிப்பது? பக்தர்களை இப்படியா உயிர்ப்பலி வாங்கி சோதிப்பது!

எல்லாம் வல்ல முத்தித்திரு சக்திப் பெற்ற முருகனே, உன் பக்தர்களை திருச்செந்தூரில் இப்படியா இடிபாடுகளில் சிக்க வைத்து சோதிப்பது?

கடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகத்தினன், கருணையே வடிவானவன். எல்லாம் ‘புஸ்‘சென போய்விட்டதே! இன்னமுமா கடவுள் நம்பிக்கை - பக்தி வியாபாரம்?

 

ஊசிமிளகாய்
- விடுதலை நாளேடு,15.12.17