இன்று சாகுமகராஜ் பிறந்த நாள் (1902). மகாராட்டிர மாநிலத்தில் முதன் முறையாக இடஒதுக்கீடுக்கு வித்தூன்றிய பெருமகனார்; மன்னர் சிவாஜியின் வழி வந்தவர்; கோலாப்பூர் பகுதியை ஆண்டவர்.
அவர் செய்த மகத்தான ஒரு புரட்சியுண்டு. தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரைத் தேநீர் கடை திறக்கச் செய்து, நாள்தோறும் நண்பர்களுடன், அதிகாரிகளுடன் அங்கு சென்று தேநீர் அருந்தி வந்தவர்.
நூறு ஆண்டுகளுக்குமுன் இந்தத் துணிவும், முற்போக்கும் அவரைச் சூழ்ந்திருந்தன என்பது சாதாரணமல்ல! அண்ணல் அம்பேத்கர் அவர்களை அடையாளம் கண்டு, பிற்காலத்தில் பெரிய தலைவராக வரக் கூடியவர் என்று தொலைநோக்கோடு கணித்தவர். அம்பேத்கர் அவர்கள் லண்டன் சென்று மேற்பட்டம் பெறுவதற்குத் துணை புரிந்தவர்.
அரசனை அந்தக் காலத்து பார்ப்பனர்கள் எப்படி நடத்தினர்? நாள்தோறும் ஆற்றுக்குச் சென்று குளிப்பார் அரசர் சாகு மகராஜ்; அப்பொழுது அரண்மனைப் புரோகிதப் பார்ப்பனர்கள் மன்னனுக்கு வேத மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
ஆனால், அந்தப் புரோகிதர்களோ வேத மந்திரங்களை ஓதுவதில்லை; மாறாகப் புராணங்களிலிருந்து ஓதி வந்தனர். காரணம் கேட்டபோது, சூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை!
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நாள்தோறும் மன்னர் சாகு மகராஜ் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும்போது அரசாங்கப் புரோகிதரை அழைத்து வர அரண்மனையிலிருந்து ஆள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அந்த நேரத்தில் அந்தப் புரோகிதர் எங்கு இருப்பார் தெரியுமா?
தேவடியாள் வீட்டில் இரவு பூராவும் சல்லாபம்! காலையிலோ குளிக்காமல் முழுகாமல் மன்னனுக்கு மந்திரங்களை ஓதுவார்!
இதுதான் பார்ப்பனர்களின் யோக்கியதை; அவர்களுக்குள்ள தகுதியும் திறமையும் இதுதான்.
பிறப்பின் அடிப்படையில் உயர்ஜாதி என்ற நிலையைக் கற்பிக்கும் இந்து மதத்தில் ஒழுக்கத்துக்கும், உண்மையான தகுதிக்கும் இடம் எப்படியிருக்க முடியும்?
2002 இல் சாகுமகராஜ் அவர்களின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் நடைபெற்றது. மறைந்த நீதியரசர் சமூகநீதிப் போராளி பி.எஸ்.ஏ.சாமி விழாவினை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
26.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
26.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்