பக்கங்கள்

திங்கள், 26 மார்ச், 2018

டார்வின்

பிறந்த நாள்: 12 பிப்ரவரி 1809



அறிவியல் உலகத்தில் மகத்தான கண்டுபிடிப்பு என்பது - விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையாகும். அதுவரை மதம் நம்பி வந்த, கற்பித்துவந்த கடவுள் படைப்புக் கொள்கைக்கு மரண அடி கொடுத்த மாமனிதர் அவர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். விலங்கியல், தாவரவியல் துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். கப்பலிலேயே சுற்றி பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். 1859-இல் அவரால் எழுதப்பட்ட “உயிரினங்களின் தோற்றம்’’  (Origin of species) எனும் நூலும், 1871இல் அவரால் எழுதப்பட்ட “மனிதனுடைய பாரம்பரியம்’’  (The Desent of man) எனும் நூலும் மனித சமுதாய வளர்ச்சித் திசையில் மிகப் பெரிய திருப்பத்தைத் தந்த அரிய அறிவுக் கருவூலங்கள் ஆகும்.

இயற்கையானது, எந்த உயிர் தன் சூழ்நிலையில் வாழ்வதற்கு மிகவும் அனுகூலமான மாறுபாடுகளை உடையதோ, அந்த உயிரைத் தேர்வு செய்து கொள்கிறது. இத்தகு இயற்கைத் தேர்வு தொடர்ச்சியாகவும், வழி வழியாகவும் நடந்து வருவதால், சூழ்நிலையிலே எவ்வளவுக்கு வேறுபாடுகள் உண்டாகியிருக்குமோ, அந்த அளவுக்கு வேறுபட்ட விலங்கினங்களும் தோன்றிக் கொண்டு வரும் என்று டார்வின் தம் கண்டுபிடிப்பாகக் கூறினார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது இதுதான். குரங்கிலிருந்து படிப்படியாக மனிதன் உருவானான் என்பது அவர்தம் ஆய்வின் முடிவு. தன்னைப் போலவே தேவன் மனிதனைப் படைத்தான் என்ற பைபிள் மொழிக்கு இது விரோதமாக இருக்கிறதே என்று உலகம் ஆத்திரப்பட்டது. கடவுளை மறுக்க வந்த சூழ்ச்சி, மனிதனின் ஆபாசமும், நஞ்சும் பொருந்திய துர்க்காற்று என்று தூற்றினர். இவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள் என்று மண்ணை வாரி இறைத்தனர்.

டார்வின் கண்டுபிடிப்பு சரியானதே என்று சொன்ன தற்காக அமெரிக்காவின் கொலம்பியா மதக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் உட்ரோ வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டார் (1884). 1925 ஆம் ஆண்டில் கூட அமெரிக்காவின் தென்னசி மாநிலத்தில் டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கற்பித்ததற்காக ஸ்கோபஸ் என்னும் ஆசிரியர் நீதி மன்றத்தின் கூண்டிலே நிறுத்தப் பட்டதுண்டு. 1950 ஆம் ஆண்டில்கூட 12ஆம் போப் பயஸ் பரிணாமக் கொள்கையை பயங்கரமாக எதிர்த்தார். என்ன அதிசயம்! 1996இல் ஓர் அதிசயம் நடந்தது. போப் ஜான் பால் டார்வினின் தத்துவம் சரியானதே.

ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்ற அணுகுண்டைத் தூக்கிப் போட்டாரே பார்க்கலாம். ஃபோன்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற அமைப்புக்கு அனுப்பியுள்ள செய்தியில், புதிய அறிவு பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினை அங்கீகரிக்கச் செய்கிறது. பரிணாமக் கொள்கையை பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்றாரே பார்க்கலாம். ஆதாரம்:  (‘The Hindu’ 26-10-1996) போப் கத்தோலிக்க அமைப்பின் தலைவர் என்றால் இங்கிலாந்தைத் தலைமை இடமாகக் கொண்ட புரொட்டஸ்டண்ட் கிறித்துவப் பிரிவினரின் தலைவரான ரைட் ரெவரெண்ட் டாக்டர் மால்கம் பிரவுனும் டார்வின் கொள்கையை எதிர்த்ததற்காக 126 ஆண்டுகளுக்குப்பின் 15-9-2008 அன்று மன்னிப்புக் கோரினார்.

-  உண்மை இதழ், 1-15.2.18

வெள்ளி, 2 மார்ச், 2018

புரட்டி பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!


பார்ப்பனீய சீழில் புழுத்த பரிதாபத்துக்கு உரியவர்களே!

புரட்டி பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!

கொலையே புரியும் கொடிய  இந்துத்துவம்!

ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவில் ஏற்றி

கொன்ற இந்துத்துவம்!

கொத்து  கொத்தாய் பவுத்தர்களை,

ஒழித்த இந்துத்துவம்!

விரட்டி அடித்து, குகைகளில், சித்தர்களை

புதைத்த இந்துத்துவம்!

பிரமாண்டமாய் கோவில் கட்ட அப்பாவிக் கூலிகளை

பலி கொடுத்த இந்துத்துவம்!

விதவை பெண்களை உடன் கட்டை ஏற்றி

எரித்த இந்துத்துவம்!

நம் இன ராவணனை வஞ்சகமாய் கொன்ற இந்துத்துவம்!

நம் இன சம்பூகனை தந்திரமாய் அழித்த இந்துத்துவம்!

நம் இன நரகாசுரனை  நயவஞ்சகமாய் ,

கொன்ற இந்துத்துவம்!

நம் இன மாவலியை மண்ணோடு

புதைத்த இந்துத்துவம்!

நம் இன நந்தனாரை உயிரோடு, தீயிலே

இறக்கிய இந்துத்துவம்!

நம் இன வள்ளலாரை தீ வைத்து

கொன்ற இந்துத்துவம்!

நம் இன வாலியினை அம்பெய்தி அழித்த இந்துத்துவம்!

கோட்சேவை வைத்து  காந்தியாரைக் கொன்ற இந்துத்துவம்!

காமராஜரை உயிரோடு எரிக்க முயன்ற இந்துத்துவம்!

ஆயிரம் ஆயிரமாய் விவசாயிகளை

தற்கொலைக்கு தூண்டிய இந்துத்துவம்!

குஜராத்திலே மனித வேட்டையாடி

மலை மலையாய் மக்களை குவித்த  இந்துத்துவம்!

ரோஹித் வேமூலாக்களை, சரவணன்களை,

முத்துக் குமார்களை மறைமுகமாய்,

கொலை செய்த இந்துத்துவம்!

நரேந்திர தபோல்கரை, கோவிந்த் பன்சாரேக்களை,

கல்புர்கிகளை, கவுரி லங்கேஷ்களை,

கொன்ற இந்துத்துவம்!

வியாபம் ஊழலை மறைக்க,

உயிர்களை மர்மமாய் கொன்ற இந்துத்துவம்!

நீட்டு கயிறால் அனிதாவை, இறுக்கி

கொன்றதும்  இந்துத்துவம்!

புரட்டிப் பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!

கொலையே புரியும் கொடிய  இந்துத்துவம்!

- தகடூர் தமிழ்ச்செல்வி

- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18