பக்கங்கள்

ஞாயிறு, 28 நவம்பர், 2021

மகாத்மா' ஜோதிராவ் புலே


உலகமே மகாத்மா என்றால் காந்தி என்று பேசிக்கொண்டு இருந்த நேரம்; இந்தியாவில் 1954ஆம் ஆண்டு  மராட்டிய மாநி லத்தில் மகாத்மா புலே என்ற மராட்டி திரைப்படம்  வெளியானது.

அப்படத்தின் அறிமுகக் காட்சியில் மராட்டி மற்றும் ஆங்கிலத்தில் இப்படி எழுதப் பட்டிருக்கும்.  "இந்திய மண்ணில் வேறு எங்குமில்லாத ஜாதியம், ஒடுக்குமுறையாக, சுரண்டல் முறையாக, அடிமைத்தனமாக மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. பார்ப்பனீய ஆதிக்கத் தின் நால்வருணப் பேதத்தின் உச்சபட்சக் கொடுமைகளை அனுபவித்த மாநிலம் மராட்டிய மாநிலமாகும்.  அங்கே ஆதிக்க ஜாதியினரால் சூத்திரர்கள். ஆதி சூத்திரர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு கொடுமைகளுக்கு ஆளானார்கள். கொடுமைகளுக்கு எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட மக்களினம்-மகர். மாங் ஜாதியினர் வீதிகளில் பகலில் நடக்க முடியாது; நடக்கவும் கூடாது. ஏனெனில் அவர்களின் நிழல் பார்ப்பனர் களுக்குத் தீட்டாகும். பார்ப்பன பேஷ்வாக்கள் ஆட்சியில் பார்ப்பனீய ஆதிக்கம் மிக வலிமையுடன் வேரூன்றியிருந்தது. மராட்டியத்தில் பிறந்த மகாத்மா புலேவின் கதை" என்று அத் திரைப்படத்தில் கூறப்பட்டிருக்கும்.

1848இல் புனாவில் ஒரு 'சூத்திர' வகுப்பைச் சேர்ந்த படித்த இளைஞன், தன்னுடைய பார்ப்பன நண்பனின் திருமண மாப்பிள்ளை வரவேற்பில் கலந்து கொண்டான். அப்பொழுது அவ்விளைஞன் மாலி இனத்தைச் சார்ந்த சூத்திரன் என்று பார்ப்பனர்கள் கண்டு கொண்டனர். அவர்கள் கடுஞ் சீற்றத்துடன் அவனைப் பார்த்து 'ஏய் மாலியே-சூத்திரனே, எங்க ளுடன் சரிசமமாக நடந்து வர உனக்கு எவ்வளவு துணிச்சல்? ஜாதிக்கட்டுப்பாடுகளை மறந்து விட்டாயா? ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டால், நீ மேலானவன் ஆகிவிட முடியுமா? பிரிட்டிஷ் காரர்கள் உன்னைப் போன்ற சூத்திரர்களை மனம்போன போக் கில் நடக்கவிடுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட் டோம்! மரியாதையாக ஓடிவிடு' என்று கூறி அவமானப் படுத்தி, ஊர்வலத்திலிருந்து துரத்தி விட்டனர்.

அவ்விளைஞன் இச்சம்ப வத்தைக் குறித்து ஆத்திரமுடன் தன் நண்பர்களிடம் விவரித்தான். நண்பர்கள், 'நாம் சூத்திரர்கள், பிராமணர்களோடு சமமாக எப்படி நடந்து வர முடியும்? உனது நல்லகாலம் உன்னை அடித்து உதைக் காமல் விட்டுவிட்டனர்! பேஷ்வா ஆட்சிக்காலமாக இருந் திருந்தால், உன்னைக் கலகக்காரன் என்று முத்திரை குத்திக் கடுமை யாகத் தண்டித்திருப்பார்கள், நல்லவேளை, பிரிட்டிஷ் ஆட்சி நடைபெறுகிறது! தப்பித்தாய் தண்டனையிலிருந்து!' என்று கூறி, நண்பர்கள் அவனை சமாதானப் படுத்த முயன்றார்கள். ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை.

பின் தன் தந்தையிடமும் கூறி வருந்தினான். 'பார்ப்பனர்களை விரோதித்துக் கொள்ளாதே! அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையிலுள்ளவர்கள். அவர்கள் என்ன வேண்டு மானாலும் செய்ய வல்லவர்கள். ஆட்சியதிகாரம் அவர்கள் கையில். எனவே அவர் களை அனுசரித்துப் போய்விடு' என்று தந்தையும் அறிவுரை புகன்றார். மகன் எரிமலையாக மாறினான்.

அவமானமடைந்த அந்த இளைஞன் தான், சனாதன-பார்ப்பனீய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய  சமூகப் போராளியான மகாத்மா ஜோதி ராவ் புலே.

அவரின் மறைவு நாள் (1890) இன்று.

- மயிலாடன்
28.11.19

வெள்ளி, 5 நவம்பர், 2021

சும்மா இருந்தால் மாற்றம் வந்திருக்குமா?

விருப்பு, வெறுப்பு இல்லாமல் சிந்தித்து பாருங்கள்...be unbiased ,impartial etc

பெண்களை 
#உடன்கட்டை ஏற்றி 
கொளுத்திக்  கொல்வது
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா ?

#பால்யவயதில்_திருமணம் 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
பால்ய விவாக 
தடுப்பு சட்டம் 
வந்திருக்குமா ?

#வர்ணாசிரம_சாதி_ஏற்றத்தாழ்வுகள் 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைவரும் 
சட்டதின் முன் சமம் 
என்னும் உரிமை கிடைத்திருக்குமா??

கணவன் இறந்தால், 
மனைவிக்கு 
#மொட்டை_அடித்து, 
முக்காடு போட்டு, 
மூலையில் 
உட்க்காரவைப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா ?

பெண்களுக்கு 
பொட்டுகட்டி 
கோவில் 
#தேவதாசியாக்குவது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா ?

பார்ப்பனர் 
அல்லாதோர்
#படிக்கக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
நாட்டின் 
பெரும்பான்மையான 
மக்கள் படித்திருக்க
முடியுமா??

சில பிரிவு பெண்கள் 
#மேலாடை_உடுத்தக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைத்து 
பெண்களுக்கும் 
மேலாடை அணிய 
உரிமையுண்டு 
என்ற சட்டம் 
வந்திருக்குமா ?

#அடுப்பூதும்_பெண்களுக்கு_படிப்பெதற்கு 
என்பது
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
பெண் கல்வி சாத்தியப்பட்டிருக்குமா ?

திருமணம் 
முடிந்த பெண், 
முதல் நாள் 
#பார்ப்பன_நம்பூதிரியுடன்தான்_முதலிரவு கொள்ளவேண்டும் 
என்பது 

இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால்,
இந்த இழி பழக்கம்
மறைந்திருக்குமா??      

ஒரே மத அமைப்பு 
என்று சொல்லிக்கொண்டு, 
ஒரு பிரிவின் மீது 
#தீண்டாமை 
கடைபிடிப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தீண்டாமை தடை சட்டம்
வந்திருக்குமா ?

ஒரே மத அமைப்பு 
என்று சொல்லிக்கொண்டு,
எங்கள் 
#கோவிலினுள்_நுழையாதே என்று மக்களின் ஒரு பிரிவினரை
தடுப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைத்து சாதிக்கும் 
ஆலய நுழைவு
சாத்தியப்பட்டிருக்குமா ?

#பார்ப்பனர்கள்_கடல்தாண்டி_போகக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
இன்றைய நிலையில்
லட்சகணக்கான 
பார்ப்பனர்கள் 
வெளிநாடுகளில் 
வசிக்க, 
வேலைசெய்ய 
முடியுமா ?

#உலகம்_தட்டையானது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
உலகம் 
உருண்டையானது 
என்பது 
நிருபிக்கப்பட்டிருக்குமா ?

#பூமியைத்தான்_சூரியன்_சந்திரன் 
போன்றவை 
#சுற்றிவருகின்றன 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அறிவியல் 
வளர்ந்திருக்குமா ?

#ராகுகேது 
என்ற #பாம்புகள் 
சூரியனையும் 
சந்திரனையும் 
விழுகுவதால்தான் 
#கிரகணங்கள் 
உருவாகின்றன 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
வான்வெளி அறிவு
வளர்ந்திருக்குமா ?

#பிராத்தனைசெய்தால்_குணமாகும் 
என்பது 
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால், 
மருத்துவ அறிவியல்
வளர்ந்திருக்குமா ?

#தமிழ்_நீசபாஷை, 
தமிழில் கடவுளை 
வழிபடக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தமிழ் அர்ச்சனை 
என்னும் சட்டம் 
நடைமுறைக்கு 
வந்திருக்குமா ?

யார் சொல்லியிருந்தாலும் எதைச் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும், அதை நம்பாதே !
உன் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிவு பெறு என்று
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தைப் பெரியார்  கூறியதால் தான் மேலே  உள்ள அனைத்தும் சாத்தியமானது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது.

அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய அய்யப்பன் இன்று LED விளக்கில் ஜொலிக்கிறான், இப்போது எங்கு போனது உங்கள் 'ஆகம விதி' ?

48 நாள் விரதமிருந்த உங்களது Vargin சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி , அன்று மாலையே Tasmac மலையேறும் போது எங்கேடா  போனது 'உங்க ஆகம விதி' ?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோஷத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 
'ஆகம விதி' ?

இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு Android phone களை அனுமதிக்கிறது ?

இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் உங்களது
"ஆகம விதி"
பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் ஒன்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது....

உங்களது அய்யப்பனுக்கு பெண்கள் ஏற்புடையவர்கள் அல்லவெனில் 
எங்களது தமிழ்ச் சமூகத்திற்கே அய்யப்பன் தேவையே இல்லை!

Rangasamy Rajaraman
-கட்செவி வழியாக