பக்கங்கள்

ஆரிய பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரிய பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜூன், 2024

ஆரிய பூமி என்பதற்கு ஆதாரம் எங்கே? - எதிர்வினை (108)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (108) 

நேயன்

திருக்குறளுக்கும் ஆரியர்களுக்கும் என்ன தொடர்பு? தமிழில், தமிழரால் எழுதப்பட்ட ஒப்பற்ற உயர்நூல் திருக்குறள். திருக்குறளுக்கு இணையாக உலகில் வேறு ஒரு நூல் இல்லை. இது உலகமே ஒப்புக் கொண்ட உண்மை. அப்படியிருக்க, தமிழரின் முதன்மை நூலான திருக்குறளை ஆரியர்களின் சொத்து என்பது மோசடியான கருத்தல்லவா? சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் என்னும் தமிழரால் எழுதப்பட்ட காப்பியம்; தமிழ்ப்பெண் ஆண்டாள் எழுதியது திருப்பாவை; தஞ்சை பெரிய கோயில் தமிழ்மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. கட்டியவர்கள் தமிழர்கள். இப்படி முழுக்க முழுக்க தமிழுக்கு உரியவற்றை ஆரிய சம்பத் என்பது கூறுவது உலகமகா மோசடியல்லவா? எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்லாமிய மன்னன் ஷாஜகானால், அவன் மனைவி பெயரால் கட்டப்பட்ட தாஜ்மகாலை ஆரிய சம்பத் (ஆரியர்க்குரிய சொத்து) என்பது நகைப்பிற்குரிய பித்தலாட்டமல்லமா? இப்படிக் கஞ்சா போதையில் பாரதி கக்கிய பிதற்றல் கருத்துகளை அடிப்படையாக வைத்து இந்தியாஆரிய நாடு என்று இந்த முற்றிய பைத்தியம் அரவிந்தன் நீலகண்டன் கூறுவது கேலிக்குரியது அல்லவா?

தமிழர்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை, இசைக்கலை, இந்தியா எங்கும் உள்ள மற்ற கலைச் செல்வங்கள் எல்லாம் ஆரிய சம்பத் என்று பாரதி கூறியதை எடுத்துக் கூறி இந்தியா ஆரிய நாடு என்பது அறிவார்ந்த வாதமா? சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாபாரதம், இராமாயணம், சாகுந்தலம் போன்றவற்றை ஆரிய சம்பத் என்றது மட்டும் சரி. சமஸ்கிருதத்தில் இவை எழுதப்பட்டிருப்பதால் இந்தியா எப்படி ஆரிய நாடாகும்? ஒரு நாடு யாருக்குரியது என்பது ஆய்வின் மூலம், அரிய தடயங்கள் மூலம் அல்லவா உறுதி செய்யப்பட வேண்டும்?
“பாரதியும், அம்பேத்கரும், விவேகாநந்தரும் எதிர்த்த இந்த இனவாதக் கோட்டுபாடு, வேதத்தின் மீது சுமத்தப்பட்டு, நம் குழந்தைகள் மீது திணிக்கப்படுவதன் காரணம் என்ன? அய்ரோப்பிய மனம் ஆராய்ச்சித் தன்மை கொண்டது என நாம் கருதுவதே. அதன் ஆராய்ச்சிக்கு உள்நோக்கங்கள் இருக்க முடியாது என நாம் நினைக்கிறோம்.’’
“உண்மைகளைத் தேடும் ஆய்வாளர்கள் விவேகாநந்தரும், அம்பேத்கரும், பாரதியும் சொன்ன கருத்துகளுக்கே வந்தடைகிறார்கள்’’ என்கிறார், அரவிந்தன் நீலகண்டன்.
இது எப்படிப்பட்ட பித்தலாட்டம் பாருங்கள்!

விவேகாநந்தர் என்ன சொன்னார் என்றும் சொல்லவில்லை; அம்பேத்கர் என்ன சொன்னார் என்றும் சொல்லவில்லை; பாரதி சொன்னதில் 10 வரிகளை மட்டும் கூறியுள்ளார்.
உண்மைகளைத் தேடும் ஆய்வாளர்கள் என்ன கூறியுள்ளனர் என்றும் சொல்லவில்லை; ஆக, எவர் கூறியதையும். எடுத்துக் கூறாது, விவேகாநந்தர், பாரதி, அம்பேத்கர் கூறிய கருத்துகளையே உண்மைகளைத் தேடும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் என்பது என்ன ஆய்வு முறை?
கண்ணைக் கட்டி காட்டுக்குள் அழைத்துச் செல்வது போல, தமது கருத்துகளை வாசகர்களுக்குக் கூறிச் செல்கிறார் இவர்.
“ஆரியர் இந்தியாவுக்குள் வந்தேறிய அயல் நாட்டார்; தமிழர்கள் (திராவிடர்கள்) இந்தியாவின் பூர்வக் குடிகள்’’ என்ற இருபெரும் வரலாற்று உண்மைகள், அகழ் ஆய்வு, மரபணு ஆய்வு, தொல்பொருள் ஆய்வு மூலம் அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டு விட்ட இக்காலத்தில், வேதங்களையும், விவேகாநந்தரையும் பாரதியையும் காட்டி, வரலாற்றைத் திரித்து, ஆரியர்களின் தாயகம் இந்தியா என்று ஏமாற்றப் பார்க்கிறார், இந்த ஆரியப் பார்ப்பன எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்.
அய்ரோப்பிய ஆய்வாளர்கள் விருப்பு வெறுப்போடு இந்திய வரலாற்றை எழுதி, ஆரியர்கள் அயல்நாட்டினர் என்று காட்டி வருகிறார்கள் என்று அவர்கள் மீது பழி சுமத்துகிறார் இந்த ஆரியப் பார்ப்பனர். அய்ரோப்பியர் சொன்னாலும், ஆஸ்திரேலியா ஆய்வாளர் சொன்னாலும், வேறு யார் சொன்னாலும் அவர்கள் கூறும் தடயங்கள் (ஆதாரங்கள்) தான் முதன்மையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அவர்கள் எந்த நாட்டினர் என்று பார்ப்பது சரியல்ல.
அப்படி இதுவரை பலராலும் நடத்தப்பட்ட அகழ் ஆய்வு, கல்வெட்டு ஆய்வு, மரபணு ஆய்வு, எலும்புக் கூடு ஆய்வு அனைத்துமே, தமிழர்களே இந்தியாவின் ஆதிக்குடிகள்; ஆரியர்கள் வந்தேறிகள் என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

அப்படியிருக்க, எதையெதையோ பிதற்றி இந்தியா ஆரிய பூமி என்று இவர் கூறுவது மோசடிக் கருத்தாகும்; வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
“வேத இலக்கியங்களை, அய்ரோப்பியர்கள் அணுகிய ஒவ்வொரு கணத்திலும், அவர்கள் தங்கள் மனச்சிக்கலுடன் மோத வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் மனநிலைகள், நம்பிக்கைகளைக் கொண்டே அவற்றை அணுகினர்’’ என்றும், “ஹிந்து நூல்களின் பழைமையை அவர்கள் ஏற்றுக் கொண்டால் பைபிள் வெறும் கதையென்றே கருத வேண்டியிருக்கும் என்று அவர்கள் கருதினர்’’ என்றும் இந்தப் பார்ப்பனர் அரவிந்தன் நீலகண்டன் கூறுகிறார்.

வேதங்கள் என்பவை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட ஒருவரால் எழுதப்பட்டவை அல்ல. அவை, ஆரிய வந்தேறிகள், மண்ணின் மக்களான தமிழர்கள் (திராவிடர்கள்) அழிந்து போக வேண்டும் என்று தங்களின் கடவுளான இந்திரன், அக்கினி, வாயு, வருணன் போன்றவர்களை பிரார்த்திப்பவையே! இது பல்வேறு காலக்கட்டத்தில் பலரால் பாடப்பட்டு செவிவழியாக மனத்தில் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை. வேத-மொழியே சமஸ்கிருதம் அல்ல. அது ‘சந்தஸ்’ என்னும் மொழி என்கிறார் காஞ்சிபுரத்து பெரிய சங்கராச்சாரி. அந்த வேதங்கள் காழ்ப்புணர்வின் கதம்பமாலையே யன்றி அதில் எந்த வரலாற்றுப் பதிவுகளும் இல்லை.
ஆரியரின் குறைந்த எண்ணிக்கை, அவர்களின் நிறம், வாழ்வியல் முறை, நில உரிமை இல்லா நிலை, பிச்சையெடுத்து வாழ்ந்த வாழ்க்கை முறை இவை எல்லாம் அவர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

தமிழரின் நில உரிமை, அவர்களின் நிறம், உடல் அமைப்பு, அவர்கள் தெற்காசிய பகுதி முழுவதும் பரவி வாழ்ந்த தடயங்கள் எல்லாம் அவர்கள் மண்ணின் மக்கள் என்பதை உறுதி செய்கின்றன.
அப்படியிருக்க, எதையெதையோ உளறி இந்தியா ஆரிய நாடு என்று நிலைநாட்ட முற்படுகிறார் இந்தக் கோயபல்ஸ்.
இந்தியா ஆரிய பூமி என்பதற்கு தொல்பொருள் ஆய்வுகள் மூலம் என்ன தடயங்கள் கிடைத்துள்ளன? அகழ் ஆய்வுகள் மூலம் என்ன ஆதாரங்கள் கிடைத்துள்ளன? மரபணு ஆய்வுகள் மூலம் கிடைத்த முடிவுகள் என்ன என்று அரவிந்தன் நீலகண்டன் வரிசையாய் பட்டியல் இட்டுக் காட்டத் தயாரா? அப்படிக் காட்ட முடியவில்லையென்றால் ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான மோசடிக் கருத்துகளைக் கூறியமைக்கு மன்னிப்புக் கேட்டு, தன் கருத்துகளைத் திருப்பப் பெறவேண்டும்.
இல்லையென்றால், இவர் ஓர் மோசடிப் பேர்வழியென்றே ஆய்வாளர்கள் கண்டிப்பர்; இவர் கருத்துகளைக் குப்பையில் தள்ளுவர்.

செவ்வாய், 28 மே, 2024

இந்தியா ஆரிய பூமியா? -எதிர்வினை (107)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (107)

செப்டம்பர் 1-15-2022 உண்மை இதழ்

இந்தியா ஆரிய பூமியா?
நேயன்

ஆரியப் பார்ப்பனர்களின் மோசடிகளுக்கும், திரிபுகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், கற்பனை வரலாறுகளுக்கும் அவ்வப்போது முட்டுக் கொடுத்து, அவை உண்மையானவை, சரியானவை என்பதுபோலக் காட்டுவதற்கு, காலந்தோறும் ஆரிய இனத்தின் அறிவு ஜீவிகள் எனப்படுவோர் முயற்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் போலித்-தனத்தையும், பொய்யுரைகளையும் அவ்வப்-போது முறியடித்து, மூக்குடைத்தாலும், அவர்கள் தங்களின் மோசடி முயற்சிகளை மட்டும் கைவிடுவதே இல்லை. அப்படிப்பட்ட மோசடிப் பிரச்சாரத்திற்கு இக்காலத்தில், முனைந்து நிற்பவர்தான் இந்த அரவிந்தன் நீலகண்டன் என்பவர். இவர், 2014 காலகட்டத்தில், அம்பேத்கரும் பெரியாரும் கருத்தால் எதிர்நிலையில் நின்றவர்கள். அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டவர்கள் என்று எழுதியிருந்தார். அதற்கு நாம் முறையான, சரியான மறுப்பைக் கூறி அம்பேத்கரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். முதன்மை நோக்கங்களில், கருத்துகளில் ஒத்துப்போகக் கூடியவர்கள் என்பதை உறுதி செய்தோம்.
அதே அரவிந்தன் நீலகண்டன் அதே காலகட்டத்தில், “ஆழி பெரிது’ என்று ஒரு நூலையும் எழுதி வெளியிட்டுள்ளனர். “இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா’’ என்று அதற்கு அறிமுகமும் அட்டையிலேயே செய்துள்ளார்.

அந்த நூலில் 52 தலைப்புகளில் அவரது பித்தலாட்ட, திரிபு வேலைகளையெல்லாம் செய்துள்ளார். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய சில தலைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் ஆரிய பூமி என்னும் தலைப்பை ஆய்வோம். இந்தத் தலைப்பிலே, எடுத்த எடுப்பிலே ஒரு மாபெரும் பொய்யைச் சொல்கிறார்.
“சுவாமி விவேகாநந்தரும், பாபாசாஹிப் அம்பேத்கரும் மட்டுமல்ல; வேதங்களை ஆழ்ந்து படித்த தமிழ்க்கவி சுப்பிரமணிய பாரதியும், ஆரியப் படையெடுப்பு வாதத்தைத் தெளிவாக மறுத்தார். இத்தனைக்கும், பாரதி தமது பாடல்களில் பல இடங்களில் ‘ஆரிய’ எனும் பதத்தினைப் பயன்படுத்தியுள்ளார். தாம் எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலில் ‘ஆரிய பூமி’ என்றே பாரதத்தைப் புகழ்கிறார். தமிழ்மொழியை உருவாக்கிய அகத்திய மாமுனியை ‘ஆரியன்’ எனக் குறிப்பிடுகிறார். குரு கோவிந்தசிம்மன் ஆற்றிய வீர உரையைக் கவிதையாக்கித் தந்த பாரதி, அப்பாடலில் பாரத சமுதாயம் முழுமையும் “ஆரிய ஜாதி’’ எனக் குறிப்பிடுகிறார்.

மகாகவியின் பார்வையில் “ஆரிய’’ என்னும் பதத்துக்குப் பொருள் என்ன? இதோ அவரது வார்த்தைகளிலேயே அதைக் காணலாம்.
“நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் _இவைஅனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளசிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி _ இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆரிய சம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவில் உள்ள குகைக்கோயில், ஆக்ராவில் உள்ள ராஜ் மஹல், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் _ இவை-யனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. எனவே, ஆரிய சம்பத்தாவது ஹிந்துஸ்-தானத்தின் நாகரிகம்.’ (பாரதியார், ‘புனர்ஜென்மம்_1’; கட்டுரைகள்_தத்துவம்)
ஒரு விதத்தில், பாரதி ‘ஆரிய’ எனும் வேத வார்த்தையைத் தீர்மானமாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதை, காலனியவாதிகள் அப்பெயருக்கு அளித்த இனவாதப் பொருளுக்கு எதிரான ஓர் எதிர்வினையாகவே நாம் காண வேண்டும்.

பாரதியும், அம்பேத்கரும், விவேகாநந்தரும் எதிர்த்த இந்த இனவாதக் கோட்பாடு, வேதத்தின் மீது சுமத்தப்பட்டு, நம் குழந்தைகள் மீது திணிக்கப்படுவதன் காரணம் என்ன? அய்ரோப்பிய மனம் ஆராய்ச்சிக்கு உள்நோக்கங்-கள் இருக்க முடியாது என நாம் நினைக்கிறோம்.
முதலில் ஓர் ஆய்வாளனின் அறிவு நாணயம் என்பது, அவர் கூறுகின்ற கருத்துகளுக்கு ஆதாரங்களைக் காட்ட வேண்டும். விவேகாநந்தர் கூறியவை என்ன? அதற்கு என்ன ஆதாரம்? அம்பேத்கர் கூறியது என்ன? அதற்கு என்ன ஆதாரம்? என்பவற்றை தவறாது குறிப்பிட வேண்டும் என்பதுதான். ஆனால், எந்த ஆதாரமும் இன்றி ஒரு கருத்தை இவர் நிலைநாட்ட விரும்புகிறார். இதுதான் ஹைடெக் மோசடி.
ஆரியர்கள் வந்தேறிகளா? இல்லையா? என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விவேகாநந்தரும், பாரதியும் வரலாற்று ஆய்வாளர்கள் அல்லர். எனவே, அவர்களின் கருத்துகளை இதற்கு ஆதாரமாகக் காட்ட முற்படுவது மோசடியானது. அம்பேத்கர் வரலாற்று ஆய்வாளர். அவர் கருத்தை இவர் எடுத்துக்காட்டவில்லை.
இந்தியா முழுமைக்கும் வாழ்ந்த தொன்மைக் குடிகள் நாகர்கள் (தமிழர்கள்) என்று அம்பேத்கர் தமது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளார்.
அம்பேத்கரின், இனம் சார்ந்த ஆய்வும் முழுமையான, சரியான, ஏற்றுக்கொள்ளத்தக்க ஆய்வு என்று கொள்ள இயலாது. காரணம் அவர் ஆய்வு செய்த காலத்தில் இனம் சார்ந்த முழுமையான ஆய்வுகள் நடைபெற்று முடியவில்லை.

அம்பேத்கர் ஆய்வு மேற்கொண்ட காலத்திற்குப் பின் தொல்பொருள், அகழ் ஆய்வுகள் நிறைய நடந்துள்ளன. ஞிழிகி சோதனைகளும் அண்மையில் நடந்துள்ளன. இவையெல்லாம் இந்தியாவின் தொல்குடி மக்கள் தமிழர்கள் என்பதை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்கின்றன.
மறுபுறம் இந்த ஆய்வுகள் அனைத்தும் ஆரியர்கள் வந்தேறிகள் என்பதையும் உறுதி செய்கின்றன.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை உள்பட எல்லா இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ் ஆய்வுகள், தொல்பொருள் ஆய்வுகள் எல்லாம் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தொன்மைக்குடி தமிழ்மக்களே என்கின்றன.

‘பரதேசி’ என்ற வார்த்தையே ஆரியர் அயல்நாட்டார் என்பதை உறுதி செய்கின்றது. இந்தியாவிற்குள் பிழைப்பதற்காக வந்த ஆரியர்கள், தொடக்க காலத்தில் தமிழர்களிடம் பிச்சையெடுத்தே வாழ்ந்தனர். அவ்வாறு அவர்கள் பிச்சை கேட்டபோது, தமிழ் மக்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?’’ என்று கேட்டபோது, ‘பரதேசி’ என்று பதில் சொன்னார்கள். பரதேசம் என்றால் அயல்நாடு; பரதேசி என்றால் அயல்நாட்டான் என்று பொருள்.
அன்று ஆரியர்களைக் குறித்த “பரதேசி’’ என்ற சொல். நாளடைவில் பிச்சைக்காரர்-களைக் குறிப்பதாய் மாறிவிட்டது. தொடக்கத்தில் வாயில் காக்கும் பணிக்கு ‘கூர்க்கர்’ இனத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டனர். காலப்போக்கில் ‘கூர்க்கர்’ என்னும் சொல், வாயில் காக்கின்றவர்-களைக் குறிப்பதாய் மாறியது போலவே, பார்ப்பனர்களைக் குறித்த பரதேசி எனும் சொல், பிற்காலத்தில் பிச்சைக்காரர்களைக் குறிப்பதாய் மாறியது. ஆக, ‘பரதேசி’ என்னும் சொல்லே பார்ப்பனர் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.
‘ஆர்ய சம்பத்’ பற்றி பாரதி கூறிய பைத்தியக்கார உளறல்களை, இந்த அரவிந்தன் நீலகண்டன் எடுத்துக்காட்டுவதன் மூலம் இவரும் ஒரு பைத்தியம் என்பது உறுதியாகிறது.
ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்கள் இந்தியாவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளான தமிழர்களிடம் பகைமை கொண்டு, தமிழர்களுக்கு எதிராய், தமிழர்கள் தோற்க வேண்டும், அழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவையே வேதங்கள்.
இந்த வேதங்கள் கூறப்படுவதற்கு முன்னமே சிறந்த மொழி வளமும், இலக்கிய வளமும் பெற்று விளங்கியவர்கள் தமிழர்கள். அப்படி தமிழர்களின் ஈடு இணையற்ற திருக்குறள் ஆரிய சம்பத்தாம்! இஸ்லாமியரால் கட்டப்பட்ட தாஜ்மகால் ஆரிய சம்பத்தாம்! இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயில் ஆரிய சம்பத்தாம்! ஆண்டாள் திருமொழியும் ஆரிய சம்பத்தாம்! தமிழர்கள் உருவாக்கிய கலை, கட்டுமானம், சிற்பம் எல்லாம் ஆரிய சம்பத்தாம்! இதைவிட பைத்தியக்கார உளறல் உலகில் வேறு இருக்க முடியுமா? இந்த உளறலைத் தன் வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டும் அரவிந்தன் நீலகண்டன் ஆய்வும் எப்படிப்பட்ட பிதற்றல் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
(தொடரும்…)