சனி, 28 மார்ச், 2020
கரோனாவும் திருப்பதி கோயிலும்
மோடியின் இந்தி உரை வெறும் விளம்பரமா?
அவர்கள் கட்சி சாமியார் முதல்வரே மதிக்கவில்லையே!
கரோனா வைரஸ் தொற்றும் உக்கிரம் குறித்து பிரதமர் மோடி, இந்தியில் அரைமணி நேரத்திற்கு உரையாற்றினார். ‘‘அனைவரிடம் காலில் விழாத குறையாக வேண்டுகிறேன். தயவு செய்து யாருமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; வீட்டிற்கு வெளியே ‘லட்சுமண ரேகை போட்டுக்கொள்ளுங்கள்'' என்று என்ன என்னவோ கூறினார். கூடவே மூடநம்பிக்கை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கெஞ்சிக் கெட்டுக்கொண்டு இருந்தார். ஆனால், இன்று (25.3.2020) காலை உத்தரப்பிரதேச சாமியார் முதல்வர் புதிய ராமர் கோவில்கட்டுவதால், ராமர் சிலையை தற்காலிக கோவிலில் உள்ள வெள்ளி சிம்மாசனத்தில் வைக்கும் நிகழ்வில் பிசியாக இருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவருடன் அதிகாரிகள் 20 பேர், சாமியார்கள் 300 பேர்வரை பொதுமக்கள் என மொத்தம் 8000 ஆயிரம் பேர்வரை ஒன்று கூடியிருக்கிறார்கள்.
- விடுதலை நாளேடு 25 3 20
வியாழன், 19 மார்ச், 2020
‘‘கடவுளை மற! மனிதனை நினை!'' என்றார் தந்தை பெரியார் அதற்கு ஏற்ற எடுத்துக்காட்டு இந்தப்படமே!
மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் முகத்தில் பக்தர்களிடமிருந்து நோய்த் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிந்துகொண்டும், சில நிமிடங்கள் இடைவெளி விட்டு டி.எல்.எஃப். என்ற நிறுவனம் கொடையாக வழங்கிய கிருமிநாசினி தெளிப்பானை உடலில் தெளித்துக்கொண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கும் படம்.
- விடுதலை நாளேடு, 14.3.20