பக்கங்கள்

தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 மார்ச், 2023

மானமிகு ஆ.இராசா மீது பெண் எம்.பி.க்கள் புகாரா? 'பலே' 'பலே!'


மின்சாரம்

'தினமலர்', 'இந்து தமிழ் திசை', 'துக்ளக்' பார்ப்பன வகையறாக்கள் மானமிகு ஆ. இராசாமீது அவதூறுச் சேற்றை கூச்ச நாச்சமில்லாமல் அள்ளி வீசுகின்றார்கள். அவர் கூறியதில் என்ன குற்றம் என்று அவர்களால் எடுத்துச் சொல்ல முடியவில்லை; காரணம் - அவர் கூறியதெல்லாம் உண்மை - ஆதாரப் பூர்வமானவை.

இந்த நிலையில் ராசாவுக்கு எதிராக பெண் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் செய்துள்ளார்களாம். 

இதைவிடக் கேவலம் ஒன்று இருக்க முடியுமா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மனு தருமத்தை முதலில் கொளுத்த வேண்டியவர்கள் பெண்கள்தான்.

இதைவிடக் கேவலமாக எழுத முடியாது - பேச முடியாது - புழுத்த நாய் குறுக்கே போனது என்பதுபோல அவ்வளவுக் கேவலமாக பெண்களைப்பற்றி மனுதர்மம் சாக்கடைக் கும்பி எழுதுகோலால் கிறுக்கித் தள்ளியுள்ளது.

எடுத்துக்காட்டுக்காக, ஒன்றிரண்டு இதோ! 

மனுதர்மம் அத்தியாயம் - 5 பாலியத்தில்' தகப்பன் ஆஞ்சையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாது, ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (சுலோகம் 148).

- இதன்படி பார்த்தால் பெண்கள் படிக்கலாமா? உத்தியோகம் செல்லலாமா? தேர்தலில் நிற்கலாமா? அமைச்சராகலாமா? நீதிபதியாகலாமா?

மனுதர்மம் அத்தியாயம் 9 என்ன கூறுகிறது?

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள் (சுலோகம் 14).

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (சுலோகம் 17).

மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ்   - சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன (சுலோகம் 19).

மனுதருமத்தில் உள்ளதை உள்ளபடியே மானமிகு ஆ. இராசா எடுத்துக் கூறினால் கோபம் கொப்பளிக்க கூக்குரல் போடும் அருமைச் சகோதரிகளான பெண் எம்.பி.க்களே!

மனு தர்மத்தில் கூறப்படும் பெண்கள்பற்றிய இந்தக்  கேவலத்தை, இழிவை ஏற்றுக் கொள் கிறீர்களா?

மனுதர்மம் தான் எங்கள் வழிகாட்டி என்று கூறும் மங்கையர்த் திலகங்களே, மனுதர்மம் கூறுவதை ஏற்று உங்கள் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வீர்களா?

அடுத்து என்ன செய்யப் போகிறார்களாம்? 

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளனராம்.

அதில் ராசாவின் பேச்சு தொடர்பான பத்திரிகை செய்திகள், 'வீடியோ'வின் எழுத்து வடிவம் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து உள்ளனராம்.

லோக் சபாவில் மக்களவைத் தலைவர் இல்லாத நேரத்தில் சபையை நடத்துவதற்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக  மக்களவைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அதில் ஒருவரான ஆ.ராசாவை அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வலியுறுத்தி உள்ளனராம்.

இது போன்றவற்றை வித்தாரமாக, விஸ்தாரமாக வெளியிடுவதற்கென்றே 'தினமலர்' என்ற திரிநூல் ஏடு 'அவதாரம்' எடுத்திருக்கின்றது ('தினமலர்' 22.9.2022 பக்கம் 9).

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் முறையிடும் பெண் எம்.பி.க்களே, உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா?

யார் இந்த ஓர்பிர்லா?

'பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. 

லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு'

ஜெய்ப்பூர் (11.9.2019) பிராமணர்கள் பிறப்பால் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில பிராமண மகாசபை கூட்டம் நடைபெற்றது. அதில் ஓம் பிர்லா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அக்கூட்டத்தில் பிர்லா பேசுகையில், "மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வியையும், நெறிகளையும் சமூகத்தில் பரவி தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம்தான்.

இன்று கூட ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தாலும் கூட மற்றவர்களை அந்தக் குடும்பம் கல்வியிலும், தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் மற்றவர்களை விட உயர்ந்ததாக இருக்கும். பிராமணர்கள் பிறப்பாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர்" என்று கூறியிருந்தார்.

அத்தோடு நில்லாமல், இதுதொடர்பாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கூடஅவர் கருத்து கூறியிருந்தார். அதில், பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர் என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் கவிதா சிறீவாத்சவா கூறு கையில், பிர்லா பேச்சு மிகத் தவறானது, கண்டனத்துக்குரியது. அவர் உடனடியாக இதை திரும்பப்  பெற வேண்டும்

ஒரு சமூகத்தை உயர்த்திப் பேசுவதன் மூலம் அவர் மற்ற சமூகங்களை தாழ்த்தியுள்ளார். இது அரசியல் சாசனச் சட்டம் 14ஆவது பிரிவின் படி தண்டனைக்குரியது. ஜாதிய துவேஷத்தை பரப்பியுள்ளார் ஓம் பிர்லா. இதுதொடர்பாக அவர் மீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் மனு கொடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார் கவிதா.

பிறப்பால் உயர்ந்தவர்கள் பிராமணர்கள் என்று பிராமணர் மாநாட்டிற்குச் சென்று - அரசமைப்புச் சட்டத்தின்படி உயர்ந்த பதவிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஒருவர் கூறுகிறாரே - இதற்குப் பெயர்தான் மனுதர்மப்புத்தி என்பது!

மனுதர்ம சிந்தனை உள்ளவர்கள், அதற்கு விரோதமாக அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் ஒருவர் சபாநாயகராக இருக்க லாமா என்று கேட்க வேண்டிய பெண்கள் மனு தர்மத்தை எதிர்த்து அரசமைப்புச் சட்டத்திற்கு உகந்த வகையில் உயர்ந்த வகையில் பேசிய மானமிகு ஆ. இராசாவைக் குறை கூறிப் புகார் செய்யலாமா?

மானமிகு ஆ. இராசா கூறியது எவ்வளவுப் பொறுப்பானது! வழிகாட்டத் தகுந்தது; மனிதத்தை உயர்த்தி மனு தர்மத்தின் கீழ்க் குணத்தை விமர்சித்தது - அவர் செய்துள்ள மகத்தான மானுடத்தொண்டாகும். குறிப்பாகப் பெண்கள் அவருக்கு ஒரு பாராட்டு விழாவையே நடத்த வேண்டும்.

பரவாயில்லை - இதைப் பூதாகரப்படுத்தியதன் மூலம் மனுதர்மத்தின் முகத்திரையைக் கிழித்துக் காட்டும் நல்லதோர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லவா!

வியாழன், 2 ஜூலை, 2020

"ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறாரா கணக்கப்பிள்ள" மின்சாரம்




‘தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிற நிலைதான் உள்ளது’ என்கிறாரே வீரமணி’ என்று யாரோ ஒருவர் கேட்டதாகக் கூறும் ஒரு கேள்விக்கு ‘துக்ளக்‘ ஏட்டில் (10.6.2020) திருவாளர் குருமூர்த்தி அய்யர் பதில் கூற முயற்சி செய்துள்ளார்.
கி. வீரமணி கூறுவது உண்மையானால், ஈ.வெ.ரா. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதுவும் இன்றுதான் பெரியார் மண் ஆகியிருக்கிறது தமிழைப் புறக்கணித்தால் தான் தமிழர்கள் மானம், பகுத்தறிவு ஆகியவை உள்ளவர்களாக ஆக முடியும் என்று தொடர்ந்து அடித்துக் கூறி வந்திருக்கிறார் ஈ.வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய ஈ.வெ.ரா.வின் அந்த உயர்ந்த கருத்துக்களை வீரமணி படிக்கவில்லை என்பது நிச்சயம்’ - என்று எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள். ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறார் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை.
ஆமாம் பெரியாரைப் பற்றி குருமூர்த்திதான் அதிகம் படித்தவர் - பெரியார் பேச்சுக்களையும் எழுத்து களையும் அப்படியே கரைத்துக் குடித்தவர், பாவம் வீரமணிக்குப் பெரியாரைப் பற்றி என்ன தெரியும் - நம்புங்கள்!
எவ்வளவு தின’வெட்டு’ இருந்தால் இந்தத் திரிநூல் களுக்கு இப்படியெல்லாம் எழுதத் ÔதுணிவுÕ வரும்?
திராவிடர் கழகத் தலைவர் ஒன்றைச் சொல்லி யுள்ளார் என்று குறிப்பிட்டால், அதை எங்கே சொன் னார், எப்பொழுது சொன்னார் என்று கூறும் குறைந்த பட்ச அறிவு நாணயம் இருக்க வேண்டாமா?
அதே போல, பெரியார் சொன்னார் என்று ஒன்றை சொன்னால் எப்பொழுது சொன்னார்? எங்கே சொன் னார்? என்று கூறும் அடிப்படை யோக்கியத்தன்மை இருக்க வேண்டாமா?
இந்தப் பார்ப்பனர்தான் இப்படியெல்லாம் எழுது வதை - சொல்லுவதைப் பார்க்கும் பொழுது, சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள் கூறும் எடுத்துக் காட்டுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
கும்பகோணத்தில் பார்ப்பான் குட்டையில் விழுந் தான் என்ற கதையாக அல்லவோ இருக்கிறது. இதோ சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள்:
“ஒரு நாள் உபய வேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து குளப்படிக்கட்டில் வழுக்கி விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்க, தன் பணியாளிடம் பின்வருமாறு சொல்லியனுப்பினார் ஒரு நிலக்கிழார்.
“திருக்குடந்தை திருலோக தாத்தாச்சாரி, திருத்தங்கல் திருநின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்கத் திருக்கோவிலுக்குவந்து திருக்கோவில் வளாகத்தில் இருக்கக்கூடிய திருப்படிக்கட்டுகளில் இறங்கி திருத் துழாய் பிடுங்கிறச்சே, திருக்குளத்துப் பாசிகள் வழுக்கி திருக்குளத்தில் விழுந்து திருக்காலில் ஹீன மடைந்தார்னு போய்ச் சொல்லிடு” என்றார்.
கும்பகோணத்து நிலக்கிழாருக்கும் இப்படி கூறும் குருமூர்த்திகளுக்கும் என்ன தொடர்போ!
தமிழைப் பற்றி தந்தை பெரியார் என்ன சொன்னார் எந்தப் பொருளில் சொன்னார் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அதைப் பார்ப்பனர்கள் சொல்லத் தேவையில்லை.
தமிழை நீஷப்பாஷை என்றும், நீஷப் பாஷையை பூஜை வேளையில் ‘பெரியவாள்’ (காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) பேச மாட்டாள் என்ற நிலையில் உள்ளவர்கள் தந்தை பெரியார் தமிழைப் பற்றிச் சொன்னதுபற்றிப் பேசிட அருகதை யற்றவர்களே (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - ‘உண்மை’ 1,15-12-1980)
‘தீக்குறளைச் சென்றோதோம்‘ என்ற ஆண்டாளின் பாடலுக்குத் தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று சொன்ன ஓர் ஆசாமியை லோகக் குரு என்று கூறிக் கூத்தாடும் குருமூர்த்தி கூட்டம் எந்த முகத்தைக் கொண்டு தந்தை பெரியாரை விமர்சிக்கக் கிளம்பி யிருக்கிறது?
ஆண்டாள் கூறிய ‘குறளை’ என்ற சொல்லுக்கு கோள் சொல்லுதல் என்னும் பொருள்கூடத் தெரி யாதவாள் எல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்தவாளா!
அவருக்கா தெரியாது? அண்டத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுவார்களேயானால், அவர் ஒரு Ôவிஷமி’ என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று பொருள்.
திரு என்ற அழகிய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்து வதற்கு ‘தமிழ்த் தாத்தா’ என்று கூறப்படும் உ.வே. சாமிநாதய்யர், இரா. இராகவ அய்யங்கார்கள் உமிழ்ந்த வெறுப்புணர்ச்சி ஒன்று போதாதா? (முனைவர் சாரதா நம்பி ஆரூரான் எழுதிய “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்ÕÕ) .
கரூர் அருகே திருமலை முத்தீஸ்வரர் கோயில் குட முழுக்கு தமிழில் நடந்ததால் (9.9.2002) அதனைக் கண்டித்தவர்தானே காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி (இந்தியா டுடே 2.10.2002).
திருக்குறள் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு என்று சொன்னவரும் சாட்சாத் இந்த ஜெயேந்திரர்தான் (‘தினத்தந்தி’ 15.4.2004)
கேள்வி: எல்லா உள்ளாட்சி அலுவலகங்களிலும் இனி ‘தமிழ் வாழ்க! என்ற நியான் விளக்குகள் வைக்கப் படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன?
பதில்: இதனால்தான் தமிழ் வளரும் என்றால், அதைவிட தமிழுக்குக் கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்கல்ல. நியான் விளக்குக் காண்டிராக்ட் எடுப்பவர் வாழ; அது வழி செய்யும் அது போதுமே! (‘துக்ளக்‘ 19.5.2010 பக்கம் 25)
தமிழ்மீது ‘துக்ளக்‘கின் வயிற்றெரிச்சல் இதுதான்.
இந்த யோக்கியதை உள்ள பார்ப்பனர்கள் தந்தை பெரியார் தமிழைப் பழித்து விட்டார்; கேவலமாகக் கூறி விட்டார் என்று பரப்புரை செய்வது - தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி எரிமலையைத் தூங்காமல் விழிக்கச் செய்து விட்டுச் சென்று விட்டாரே என்ற ஆத்திரத்தில் அலை மோதலும் - மொத்துதலும்தான்
தமிழ்மீது தந்தை பெரியாருக்கு வெறுப்பா - அல்லது புராணச் சகதியிலிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கறையா?
தந்தை பெரியார் உருவாக்கிய குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை போன்றவற்றின் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே தந்தை பெரியார் தமிழ்மீது அக்கறை கொண்டவர் என்பதற்கு
தமிழ்பற்றி தந்தை பெரியார் கருத்தென்ன?
“முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” (குடிஅரசு 26.1.1936).
“தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தை பல முறை சொல் லியிருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி- ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்கு வெறுப்பில்லை” (விடுதலை 1.12.1970).
தமிழ்மீதான தந்தை பெரியாரின் பார்வை இதுதான்! தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் அவரே! அதைத்தான் இப்பொழுது ‘துக்ளக்‘ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகளும் கடைப்பிடித்தே தீர வேண்டிய கட்டாயம் - அரசே சட்டரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள நிலை.
தமிழில் பெயர் சூட்டுதல் என்ற புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவர் அவர்தானே! ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர - தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்ட முடியுமா?
தமிழர் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழிலே நடத்தும் நிலையை நிறுவியவர் தந்தை பெரியார்தானே!
இந்த நிலையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிற நிலைதான் உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளதாகவும், தமிழைப் பற்றி பெரியார் சொன்னதையெல்லாம் வீரமணி படிக்கவில்லை என்றும் குடுமி குருமூர்த்தி உளறிக் கொட்டியிருக்கிறார்.
தந்தை பெரியாரைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் எந்த அளவு படித்திருக்கிறார்- அறிந்து இருக்கிறார் - தந்தை பெரியாரிடம் பாடம் படித்திருக் கிறார் என்பதற்கு பார்ப்பனக் குருமூர்த்திகளின் சான்று பத்திரம் தேவையில்லை. இதை உலகம் அறியும்.
கடைசியாக ஒன்று: தந்தை பெரியார் பற்றி யாரோ அனாமதேயங்கள் எழுதுவதையெல்லாம் போட்டு நிரப்பும் குப்பைத் தொட்டியாக ‘துக்ளக்‘ ‘அவதாரம்‘ எடுத்திருக்கிறது.
அனாமதேயங்களுக்குப் பரிவட்டம் கட்டி தந்தை பெரியாரைப் பற்றித் தூற்றச் செய்யலாம் - அதற்கு மலிவாகவும் தமிழர்களில் ஆட்களும் கிடைப்பார்கள்.
நாங்கள் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காஞ்சி மடத்திலேயே வளர்ந்து முக்கியப் பொறுப்புகளிலும் அமர்ந்து Ôஅவனன்றி ஓரணுவும் அசையாதுÕ என்று சொல்லும் அளவுக்கு அனைத்திலும் அத்துப்படியானவர் சங்கரராமன் (அவர்தான் வரதராஜ பெருமாள் முன்னிலையில் பட்டப் பகலில் கொல்லப் பட்டார். இந்த வழக்கில்தான் ‘லோகக் குரு’ காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி 61 நாள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார்).
அந்த சங்கரராமன் சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் வண்டி வண்டியாக ‘ஜெகத்குரு ஜெயேந்திரரின் வண்டவாளங்களை எழுதித் தள்ளினாரே - அவற்றை எல்லாம் மக்கள் மத்தியில் கொட்ட வேண்டுமா? (ஊரே நாறிப் போய் விடும்) எப்படி வசதி? குருமூர்த்திகள் Ôகுஸ்திÕக்கு வருவார்களா? எங்கே பார்ப்போம்!

செவ்வாய், 30 ஜூன், 2020

'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்!

லாலா லஜபதி ஒரு முறை சொன்னார் தென்னாட்டுப் பிராமணர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து ‘துவேஷிகள், துவேஷிகள்!’ என்று சொல்லுவார்கள் என்ற கருத்துதான் ‘தினமலரில்’ (28.6.2020 பக்கம் 7) வெளிவந்த ஒரு கட்டுரையைப் பார்த்தவுடன் பளிச் சென்று நினைவிற்கு வருகிறது Òஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்?Ó என்பது அக்கட்டுரையின் தலைப்பு. எழுதுகோல் பிடித்தவர் எஸ். கார்த்திகேயன் - சமூக ஆர்வலராம்.
சமூக ஆர்வலர் என்ற போர்வையில் தொலைக்காட்சி களில்கூட அவ்வப்போது வந்துவந்து போவார்கள் பெரும்பாலும் பூணூல்காரர்கள்.
கட்டுரை முழுவதும் இவர் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ளார். ‘நான் ஜாதி பார்ப்பதில்லை. நான் ஜாதி பார்ப்பதில்லை -  நான் பரிசுத்தம்!’ என்பதுபோல அடிக்கடி ஒரு தடவை தன்னைப் பற்றி தன் முதுகைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்.
அவரிடம் ஒரே ஒரு கேள்வி உங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறதா? என்பதுதான்.
பூணூல் எல்லோரும் தான் போடுகிறார்கள் என்றெல் லாம் சொல்லித் தப்பிக்க வேண்டாம் - ஒரு முறை ‘சோ’ இராமசாமி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் ஒரு பே¢ட்டியில் சரியாக சிக்கி மூச்சுத் திணறினார். ‘வீட்டாரைத் திருப்திபடுத்தத்தான் சங்கடப்படுத்தாமல் இருக்கத்தான்! என்றார்.
பூணூல் கல்யாணம் நடத்தி முதுகில் அதைத் தொங்க விட்ட பிறகுதான் பிராமணன் -அதாவது துவிஜாதி - இருபிறப்பாளன் ஆகிறான்.
இது சரியா, தவறா என்பதை சங்கர மடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்!
பிராமணர்கள் மட்டுமா போடுகிறார்கள்? ஆசாரி, பத்தர் செட்டியார் கூடத்தான் போடுகிறார்கள் என்று தப்பித்து ஓட வேண்டாம். அதற்கு இந்து மத சாத்திரத்தில் இடம் உண்டா என்பதற்குப் பதில் சொல்லட்டும்.
பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசிய னுக்கு க்ஷணப்பநாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல் லியதாகப் பின்னி மூன்று வடமா மேலரைஞாண் கட்ட வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் 42).
இதில் எங்காவது சூத்திரர் பூணூல் அணியலாம் என்று கூறப்பட்டுள்ளதா?
சந்தேகமில்லாமல் இன்னொரு இடத்தில் மிகவும் வெளிப்படையாகவே மனுதர்மம் அறைந்து கூறுகிறது.
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலி யதைத் தரித்தால் அரசர் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் - 224).
இதை எடுத்துச் சொன்னால், இப்போதெல்லாம் மனுவை யாருங்க கடைப்பிடிக்கிறாங்க - நீங்கதான்  ஞாபகப்படுத்துறீங்க என்று நழுவும் Ôமீன்களைÕப் பார்க்க முடிகிறது.
‘துக்ளக்‘ இதழில் வரிந்து வரிந்து மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி ‘சோ’ இராமசாமி எழுதியதுண்டே!
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ‘'திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றுதான்” என்று காஞ்சிபுரம் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் பேசினாரே (12.8.1976).
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் திருக்குறளும், பிறவியின் அடிப்படையிலேயே வருணபேதம் கற்பிக்கும் மனுதர்மமும் ஒன்று என்று சொல்லுகிறார் இவர்களின் ஜெகத்குரு என்றால், மனுதர்மத்தை எந்த அளவுக்கு  அவர்கள் இன்றளவும் போற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாமே!
📷📷
ஏதோ அதே நேரத்தில் தப்பிப்பதற்காக தப்பிலித் தனமாகப் பேசலாமா? பதினெட்டு ஸ்மிருதிகளில் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதி களும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும், அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று என்று மனுதர்ம சாஸ்திரத்தின்  பீடிகையில் கூறப்பட்டுள்ளதே!
இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்த முடியாத நிலையில், இப்போதெல்லாம் யார் பார்க்கிறார்கள் - கடைப்பிடிக்கிறார்கள் என்று கூறுவது அசல் ஏமாற்று வேலையே!
வேண்டுமானால் ஒன்று செய்யட்டுமே! சங்கராச் சாரியார் தலைமையில் ஒரு நாளைக் குறிப்பிட்டு, மனுதர்மத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியை நடத்த முன் வரட்டுமே - வருவார்களா என்று சவால் விட்டே கேட்கின்றோம்.
மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏன் கொளுத்தினார்கள் என்பதை உணரட்டும்.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தங்கத்தினால் செய்த பூணூலைப் போட்டதுதான். திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் (5.4.2002) திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரூ.15 லட்சம் செலவில் பூணூல் (தினமணி 27.2.2014 படத்துடன் வெளியிட்டு இருந்தது) சீரங்க ரங்கநாதனுக்கோ ரூ.50 லட்சம் மதிப்பில் வைரப் பூணூல் போட்டவர்தானே ஜீயர்.
சங்கராச்சாரியார் ஒருவர் பிரதிஷ்டை செய்யப் படும் போது - அவர் அதுவரை அணிந்திருந்த பூணூலை அகற்றி விடுவார்கள் எந்தவித ஆசாபாசங்களுக்கும் ஆளாகக் கூடாது என்று; ஆனால், அதே சங்கராச்சாரியார் அவர்கள் நம்பும் கடவுள்களுக்கே பூணூல் அணிவித்து, ‘கடவுள்களும், நாங்களும் ஒரே ஜாதி!’ என்று காட்டுவதுதானே இதன் நோக்கம்? என்று தணியும் இந்த பிராமண துவேஷம்!” என்று தினமலரில் கட்டுரை எழுதும் திருவாளர் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.
பிராமணர்கள் எல்லாம் சாதுவானவர்களாம் - எந்த அடிதடிக்கும், சச்சரவுக்கும் போகாதவர்களாம். அத்தகைய பிராமணர்களைத் துவேஷிக்கிறார்கள் என்று துக்கம் தொண்டையை அடைக்க தூரிகை பிடிக்கும் இவர் என்ன எழுதுகிறார்? எந்த சொல்லைக் கையாளுகிறார்?
“ஒன்று பட்டிருந்த சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்த சில சண்டாளர்கள்தான் பிராமண துவேஷம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து, பிராமணர்களுக்கு எதிராக, பிற ஜாதியினரை தூண்டிவிட முயன்றனர்” என்று எழுதுகிறார்.
சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்தவர்கள் யார்? பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் வருணாசிரமத்தை உருவாக்கியவர்கள் யார்? இன்றுவரை ஆவணி அவிட் டம் என்ற பெயராலே நாங்கள் பிர்மாவின் முகத்திலே பிறந்த துவிஜாதி என்பதற்கான பூணூலை புதுப்பித்துக் கொள்பவர்கள் யார்?
சண்டாளர்கள் என்கிற தடித்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதிலிருந்தே இவர் போடும் நரி வேஷம் என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!
சண்டாளர் என்றால் என்ன பொருள் இந்து மதத்திலே தெரியுமா? சூத்திரன் மூலம் பிராமணன் மற்றும் இதர வருணத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பிறந்தவன் என்று பொருள்.
‘இழிந்த சூத்திரன் - உயர் வருணத்துப் பெண்ணைக் கூடிப் பிள்ளை பெற்றதை ஆத்திரத்தோடு கண்டிக்கும் அந்த சொல்லை - இந்த ஜாதி ஒழிப்பு(?) வீரர் பயன்படுத்துகிறார் என்றால் என்ன பொருள்? இவர் வேடத்தை இவரே கலைத்துக்கொண்டு விட்டாரே!
“எத்தனையோ காலத்திற்கு முன், யாராலோ நடத்தப் பட்டதாகக் கூறி, அதற்கு இப்போதைய பிராமணர்களான என்னைப் போன்றவர்களை துவேஷத்துடன் பார்க்கின்றன'' என்று எழுதுகிறார்.
📷📷
9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற Ôஅருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியிட்டு விழாவிலே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும், அந்தணர்கள்தான் குருவாக இருந்தார்கள். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் காஞ்சி பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில் என்று பேச வில்லையா? அனைத்தையும் கட்டறுத்தவர் என்பதற் காகப் பூணூலை அறுத்துக் கொண்ட சங்கராச்சாரியார் தான் ஒரு பிராமணர் என்ற அகந்தையிலிருந்து விலகவில்லையே!
கடவுளுக்கு மேலே பிராமணன் எனும் ஆரிய ஆணவம் தலைக்கேறி பேசிய காலம் - தினமலர் எழுத்தாளர் கூறும் எத்தனையோ காலத்திற்கு முன்பு தானா? நாம் வாழும் காலத்தில்தானே!
இந்து மதத்தில்கூட அனைவருக்கும் ஒரு சுடுகாடு கூடாது என்று சொன்னவரும் அதே காஞ்சி பெரியவாள்தானே (8.3.1962).
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் மகா பெரியவாள் என்று மகத்தான குரலில்-போக்கில் பேசப்படும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தானே! (நூல் - ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்)
தீண்டாமையை வலியுறுத்திய இவரை பிணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் நியாயமாக (PCR act) சிறையில் தள்ளியிருக்க வேண்டாமா?
வெகு நாட்களுக்கு முன் போக வேண்டாம் - இந்தியாவின் முதல் குடிமகனான முப்படையின் தலைவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் காப்பாளரான இந்தியக் குடியரசு தலைவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்தால், வடநாட்டில் இரண்டுகோயில்களில் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப்பட்டது மனுமந்தாதா காலத்திலா? நம் கண் முன்னாலா?
அஜ்மீர் பிர்மா கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 15.5.2018), பூரி ஜெகநாதர் கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 27.6.2018) ஒரு குடியரசுத் தலைவருக்கே இந்த அவமானம் நடந்ததே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள்தானே மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சிறீபெரும்புதூர் ஜீயர் பின்னணியில் அது நடக்கவில்லையா?
ராஜாஜியின் சிபாரிசின் பெயரில்  ஃபீஸ் வாங்காத வக்கீலாக பல்கிவாலா ஆஜராகி வாதாடவில்லையா?
வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி சூத்திரன் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி செத்து விடும், தீட்டுப்பட்டு விடும், அந்தத் தீட்டைக் கழிக்க ஆயிரம் கலசங்களைப் புதிதாக வைக்க வேண்டும், பிராமண போஜனம் நடத்த வேண்டும் என்று சொன்னவர்கள் யார் - தினமலர் எழுத்தாளரே?
உங்களுக்கு அடியாட்கள் தேவைப்படும் பொழுது இந்துக்களே ஒன்று சேர்வீர் என்பீர்! மற்ற நேரத்தில் சூத்திரன் அர்ச்சகரானால் சாமி செத்துப் போய்விடும், தீட்டுப் பட்டு விடும் என்பீர்!
காஞ்சிமடத்திலே சுப்பிரமணியசாமி சென்றால் சங்கராச்சாரி பக்கத்திலே சமமாக நாற்காலி போட்டு ஜம்மென்று உட்கார முடிகிறது. அப்துல் கலாமும், அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனும் தரையில் உட்கார வேண்டியிருந்ததே!
இவை எல்லாம் எப்பொழுதோ நடந்தது என்று சொல்லப் போகிறீர்களா திருவாளர் கார்த்திகேயன் அய்யர் அவர்களே?
ஈ.வெ.ரா. தூண்டி விட்டது ஜாதி துவேஷம் என்று குறிப்பிட் டுள்ளீர்களே -
ஈ.வெ.ரா. ஜாதியையும் உண்டாக்கவில்லை, யாரையும் தூண்டியும் விடவில்லை - ஜாதியை உண்டாக்கியது நீங்கள்; ‘இன்றும் நாங்கள் பிராமணர், பூணூல்காரர் கடவுளுக்கும் மேலே நாங்கள்!” என்று சொல்லுவது நீங்கள்.
நீங்கள் பிராமணர்கள் என்றால் நாங்கள் சூத்திரர்களா? நான்கு வருண அமைப்பில் அப்படிதானே பொருளாகும்! சூத்திரர்கள் என்றால் ஏழு வகைப்படும் -அதில் ஒன்று வேசி மக்கள் என்பதுதானே உங்களின் ஹிந்து மதம்!
இதை எதிர்த்துக் கேட்டால் துவேஷமா? உண்மையிலேயே திருடியவனை விரட்டினால் ‘திருடன் திருடன்’ என்று உண்மைத் திருடனும் சேர்ந்து கத்திக் கொண்டு ஓடித் தப்பிக்கும் தந்திரம் பெரியார் சகாப்தத்தில் நடக்காது, நடக்க விடவும் மாட்டோம் - அதற்கான ஆணித்தரமான அசல் தலைமையும் உண்டு - எஃகு பலம் படைத்த இயக்கமும் உண்டு!
உண்மையைச் சொல்லப் போனால் உங்களுக்கு ஒரு வகையில் பாதுகாப்பாக இருந்தவர்தான் பெரியார். மக்கள் மத்தியிலே தக்க பிரச்சாரத்தின்மூலம் விழிப்புணர்வை உண்டாக்கி ஜாதியை ஒழித்து பிராமணனும் இல்லை - சூத்திரனும் இல்லை, “அனைவரும் மனிதர்தான்” என்ற நிலையை உண்டாக்கத்தான் 95ஆம் வயதிலும் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன்தான் தந்தை பெரியார்! நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டீர்கள்.
உடல் எல்லாம் மூளை என்று கூறிக் கொள்ளும் ராஜாஜியே இவ்வாறு சொன்னதுண்டு!
In fact in one occasion Rajaji Proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (caravan april 1, 1978. Gandhiji’s Crusade against Casteism) முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணராக இருப்பதில்தான் பெருமைப்படுவதாகச் சொன்னார் என்றால் வேறு யாரை எதிர்ப்பார்ப்பது?
தீண்டாமை ஒழிக, ஜாதி ஒழிக என்று சங்கராச்சாரியார் சொல்லுவாரா? பார்ப்பனர் சங்கம் தீர்மானம் போடுமா?
பார்ப்பனிய ஆதிக்க நஞ்சை ஏதோ பெரியார்தான் எதிர்த்தாரா? சமூகத்தில் மாற்றம் தேவை  என்று எண்ணியவர்கள் எல்லாம் பார்ப்பனர்களை வெறுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையா?
புத்தர் முதல் சித்தர்கள் உட்பட, ஜோதி பாபூலே, நாராயண குரு, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் (ஏன் விவேகானந்தர்கூட) என்று தொடர்ச்சியாக ஏன் எதிர்த்தனர் - வெறுத்தனர் என்பதைக் கொஞ்சம் அறிவோடு சிந்திக்க வேண்டாமா? பூணூல், பூணூல் ஆணவத்தோடு அணுகினால் அவர்களின் புத்தி தினமலர், ‘துக்ளக் போல்தான் மேயப் போகும்.
காந்தியாரை மகாராட்டிரத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே எனும் சித்பவன் பார்ப்பான் சுட்டுக் கொன்றபோது, மும்பையில் அக்கிரகாரங்கள் எரிந்தன; பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர்.
பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புணர்வு கொதி நிலையில் உள்ள தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் தாக்குதலைத் தொடுத்திருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது; அதனைத் தடுத்தாட்கொண்டவர் தந்தை பெரியார் என்ற நன்றியை மறந்து விட்டு, தர்ப்பைப் புற்கள் தலைகொழுத்துத் திரிய வேண்டாம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு வேட்பாளராகக்கூட பார்ப்பனரை நிறுத்த எந்த கட்சியும் முன்வராததற்கு என்ன காரணம்? நாதியற்ற நிலையைத் தேடிக் கொண்டது யார் என்பதை திரிநூல் பத்திரிகை எண்ணிப் பார்க்கட்டும்.
இந்தக் கட்டுரையில் கூட, Ôஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்?Õ - என்று தானே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம். இந்தப் பிராமணன் எனும் தொனியும், உச்சரிப்பும், அடையாளமும், உங்களிடம் ஆணவமாக துள்ளித் திரியும்  வரையிலே, ஆவணி அவிட்டங்கள் தொடரும் வரையில், அதனை  எதிர்த்து- துவேஷமல்ல - மனித உரிமையும், சமத்துவ உணர்வும் - சமர் செய்து கொண்டுதானிருக்கும். மேலும் மேலும் உங்களின் புலம்பலும், உங்கள்மீதான வெகு மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் எரிமலையாய்க் கனன்று கொண்டுதானிருக்கும்-ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள் ஆவணி அவிட்டப் பூணூல்கார்களே!
யாரால் பாதுகாப்பு?
இதற்கு மேல் இழைக்கப்பட முடியாது என்கிற அளவுக்குக் கொடுமைகளையும், இழிவுகளையும், உரிமைப்பறிப்புகளையும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும்பாலான-மண்ணுக்கு உரிய மக்கள்மீது சுமத்திய-திணித்த உண்மையை - ஒரு மாபெரும் தலைவரால், ஒரு மாபெரும் இயக்கத் தால் புரிய வைக்கப்பட்ட நிலையில், இன்றளவும் பிராமண - சூத்திரத் தன்மையை நிலை நிறுத்து வதில் குறியாக இருக்கும் ஓர் ஆதிக்க வெறிக் கூட்டம் பாதுகாப்பாக, நிம்மதியாக, தங்கள் விகிதாச்சாரத்துக்கும் மேல் பன்மடங்கு எல்லாவற் றிலும் அனுபவிப்பவர்களாக இங்கு வாழ முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அந்தத் தலைவர் தந்தை பெரியாரும், அந்த இயக்கமும்தான் அதன் பண்பாட்டால்தான்  என்பதை உணர வேண்டிய வர்கள் உணர வேண்டும். இதைப் பலகீனமாக எடுத்துக் கொள்ளுகிறார்களா என்று தெரிய வில்லை. முடிவு அவர்கள் கையில்!
-மின்சாரம்

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

'தினமலரே' புரிஞ்சுண்டுதோ?



'தமிழகத்தில் ஜாதியை, தன் காலத்தில் ஒழிக்கவே முடியாது' என்பதை, மறை முகமாக தன் அமைப்பினருக்கு உணர்த்தும் வகையில், திராவிடர் கழகத் தலைவரும், 'விடுதலை' நாளிதழ் ஆசிரியருமான, கி.வீரமணி பேச்சு:

ஜாதியை ஒழித்து, சமத்துவத்தை சமைப்பது தான், திராவிடர் கழகத்தின் கொள்கை, அதை சாதிக்கும் வரை, நம் போராட்டம் தொடரும். அந்த சாதனை நிறைவேறும் கால கட்டத்தில் நாங்கள் இல்லாமல் போனால், இளைஞர்களே... நீங்கள் அந்த லட்சியக் கொடியை உயர்த்திப் பிடித்து, சாதித்து காட்டுங்கள்.

'தினமலர்' 8.9.2019 பக்கம் 6

திராவிடர் கழகத் தலைவர் கூறியது உண்மைதான். இதில் 'தினமலர்' என்ன குறையைக் கண்டு பிடித்து விட்டதாம்?

ஜாதி ஒழிய வேண்டும் என்கிறதா? கூடாது என்கிறதா? முதலில் அதற்குப் பதில் சொல்லட்டும்.

ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகாலமாக ஆரிய நச்சு நோயால் ஏற்பட்ட ஜாதிப்பாம்பானது ஒரு நூற்றாண்டுக் காலத்தில் எவ்வளவோ நசுக்கப்பட்டுள்ளது. ஆணிவேரும் ஆட்டம் கண்டுள்ளது.

ஏன், 'தினமலர்' கிருஷ்ணமூர்த்திகள் கூட மொட்டையாகத் தான் பெயரைப் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அய்யர் வா(ளை)லை ஒட்ட நறுக்கிக் கொண்டது ஏன்? அய்யரைப் போட்டுக்கொள்ள வெட்கப்படும்படி செய்தது யார்? தந்தை பெரியார் தானே - இயக்கம் திராவிடர் கழகம் தானே!

அந்த அளவுக்கு வீரமணிக்கு வெற்றிதானே! சட்டப்பூர்வ மாகவே ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு.

அது இன்றைக்கு நடைபெறவில்லை. அந்த அடிப்படையில் தான் திராவிடர் கழகத் தலைவர் சொல்லுகிறார். போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு  இருக்கிறது.

இதில் தோல்வி என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஜாதி ஒழிக்கப் பட வேண்டும் என்பது மனிதப்பண்பும், மனிதநேயமும், மனிதத்துவமும், உரிமையும் விரும்புவோர் கூறும் கருத்து.

இதில் 'தினமலர்' எந்த இடத்தில் நிற்கிறது என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லட்டுமே பார்க்கலாம்.

காலரா ஒழியவில்லை, ஒழியவில்லை, அம்மை ஒழிய வில்லை, ஒழியவில்லை, எய்ட்ஸ் ஒழியவில்லை, ஒழிய வில்லை என்று ஒருவன் மகிழ்ச்சியில் கூத்தாடுவானானால் - அவன் கடைந்தெடுத்த மனநோயாளியும், மனுதர்மத்தின் ஆசை நாயகனுமே ஆவான்.

என்ன இன மலரே புரிஞ்சுண்டுதோ?

- கருஞ்சட்டை

- விடுதலை நாளேடு, 12.9.19

வியாழன், 25 அக்டோபர், 2018

தினமலரின் மூன்று கடிதங்கள் திமிர் அடங்கவில்லை என்பதற்கான அடையாளமே!



தினமலர் எனும் பார்ப்பன ஏடு கடந்த ஒரு வாரத்தில் திராவிடர் கழகத்தையும், அதன் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களையும் பற்றி மூன்று கடிதங்களை வெளியிட்டுள்ளது.

அரைத்த மாவையே அரைப்பது என்ப தற்கு அட்சரம் பிறழாமல் எடுத்துக்காட்டாக இந்தக் கடிதங்கள் நூற்றுக்கு நூறு துல்லிய மாகப் பொருந்தும். ஏற்கெனவே பதில் சொல்லப்பட்டது என்றாலும் மூடனும் முதலையும் கொண்டது விடான் என்பது தெரிந்திருந்தாலும் வாசகர்கள் தெளிவு பெறவே மீண்டும் நாம் எழுத நேர்கிறது.

(1.) தினமலர் கேள்வி

கடவுள் நம்பிக்கைகளே இல்லாத திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் போவது  என்ற பிரச்சினையில் தலையிடுவானேன்?

நமது பதில்

கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்பது மனித உரிமை; கொள்கைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவு என்ற ஒன்று இருந்தால் சிந்தித்துப் பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்ற கூட திராவிடர் கழகம் பாடுபட்டு வெற்றி பெற்றுள்ளதே.

கோயிலில் தமிழில் வழிபாட்டு உரிமை வேண்டும் என்பதற்காகவும், திராவிடர் கழகம் குரல் கொடுத்து வந்துள்ளதே, தமிழ்வழி பாட்டு உரிமை கூடாது என்பதற்குக் கூறப்படும் காரணம் என்ன? சமஸ்கிருதம் தேவபாஷை, தமிழ் நீஷப்பாஷை என்று கூறப்படும் காரணம்தானே.

தமிழைக் கேவலப்படுத்தும்போது, கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் வழிபாட்டு உரிமை பற்றிப் பேசக்கூடாதா? மாநாடு நடத்தக்கூடாதா?

கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் இவற்றில் தலையிடக்கூடாது என்றால் கடவுள் நம்பிக்கையுள்ள தினமலர் கூட்டம் இதற்காக போராடாதது ஏன்?

கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்று கூறி விட்டு, குறிப்பிட்ட கோயிலுக்குள் பெண்கள் போகக் கூடாது என்பது கடவுளையே அவமதிக்கும் காரியம் இல்லையா?

கண்ணனூர் பகவதியம்மனின்  மாத விடாயை முன்னிறுத்தி விழா எடுக்கும் நிலையில் மாத விடாயை காரணம் காட்டி, அய்யப்பன் கோயிலுக்குள் வழிபடப் போகக்கூடாது என்பது இந்துமதத்திற்குள் நெளியும் முரண் பாடல்லவா!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காகக்கூட தந்தை பெரியார் அவர்கள் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையாரும், கி.வீரமணி அவர்களும் போராடிக்கொண்டு வந்த நிலையில், இப்பொழுது அதில் வெற்றியும் கிடைத் துள்ளதே! அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மதுரை தல்லாக்குளம் அய்யப்பன் கோயிலில் அர்ச்சகராக்கப்பட்டுள்ளாரே! - இதுபற்றி தினமலர் கூறுவது என்ன?

தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகரானால் கோயிலும், கடவுளும் தீட்டுப்பட்டு விடும், சாமி செத்து விடும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வைகனாச ஆகமங்களை எடுத்துக் காட்டி வாதாடியவர்கள் யார்? 13 பேர் வழக்கு தொடுத்தார்களே அவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள் தானே.

தாழ்த்தப்பட்டவர்களை இந்து என்று ஒரு பக்கத்தில் கூறிக்  கொண்டு, தேவைப் படும் பொழுது இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று அழைப்புக் கொடுத்துக் கொண்டே, கோயிலுக்குள் அந்த இந்துக்களான தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராக அரு கதையற்றவர்கள் - அது இந்துக்களின் ஆகமத்துக்கு விரோதமானது என்றே தினமலர் கூட்டம் இன்றும் நியாயப் படுத்தும் போது பார்ப்பனர்கள் பற்றி விடுதலை எழுதினால், திராவிடர் கழகத் தலைவர் பேசினால், அது குற்றம் என்று கூறுவதிலிருந்து இன்று வரை பார்ப்பனர்கள் திருந்தவில்லை என்பது தெரியவில்லையா?

கடவுள் நம்பிக்கை இல்லாத தி.க.வினர் இதற்காகக் குரல் கொடுக்கக் கூடாது என்பது தினமலர்களின் கருத்தானால், தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் என்று கூறும் தினமலர் அவர்களுக்காகக் குரல் கொடுக் காதது ஏன்? நாங்களும் தாழ்த்தப்பட்ட வர்களை அனுமதிக்க மாட்டோம் - நீங்களும் அதற்காகக் குரல் கொடுக்கக் கூடாது என்று தினமலர் எழுதுவது பார்ப்பனர்களின் ஜாதித் திமிர் இன்னும் தறிகெட்டு நிற்கிறது என்று தானே பொருள்!

தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,  பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், திராவிடர் கழக இடஒதுக்கீட்டு கோரினால்  பகுத்தறிவாளர் களுக்கும் மட்டும்தான் அது தேவை என்றா குரல் கொடுக்க முடியுமா?

(2) தினமலர் கேள்வி

பார்ப்பனர்கள் என்று சொல்லித் திட்டுகிறார்கள் தி.க.வினர்.

நமது பதில்:

பார்ப்பனர்களைப் பார்ப்பனர்கள் என்று சொல்லாமல் வேறு எப்படிதான் சொல்ல முடியும்? இப்படிஅவர்கள் சொல்லுவதன் நோக்கம் என்ன தெரியுமா? பிராமணன் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர் என்று பொருள்.

பார்ப்பனன் பிராமணர் என்றால் பார்ப்பனர் அல்லாதார் தங்களை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டதாகத் தானே பொருள். பிராமணன் என்றால் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் -வைதிகமாக இருந்தாலும், லௌகீகமாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 317) என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.  சூத்திரன் என்றால் விபசாரி மகன் (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415), என்று நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தினமலர் கூறுகிறது என்றால் -தினமலரின் பூணூல் ஆணவம் இன்னும் கொக்கரிக்கிறது என்றுதானே பொருள்.

பார்ப்பான் என்பதுதானே தமிழ்ச்சொல்- 'பார்ப்பன மாந்தர்காள்' பகர்வது கேண் மின் என்று கபிலர் கூறவில்லையா? பார்ப்பான் பிறப்பொழுக்கம் என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா? 'சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண் ணும் பார்ப்பானுக்கொரு நீதி, சாத்திரம் சொல்லிடு மாயின் சாத்திர மன்று சதி என்று கண்டோம்' என்று பார்ப்பன பாரதி கூறிட வில்லையா?

(3) தினமலர் கேள்வி

பிராமணர் -அறிவு ஜீவிகளாம்.

நமது பதில்: பார்ப்பனர் அறிவு ஜீவிகள் என்று தினமலர் இன்றைக்கும் எழுதுகிறது என்றால் இவர்கள் சுலபத்தில் அடங்கமாட்டார்கள் - அடக்கப்பட வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு இதுபோதாது என்ற உணர்ச்சியைத் தானே இது ஏற்படுத்தும்? மறைந்த காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட பார்ப்பனர்தாம் - அவரின் அறிவு ஜீவிதம் எதற்குப் பயன்பட்டது என்று உலகிற்கே தெரியுமே! காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோயில் அர்ச்சகர் தேவநாதனை எந்தப்பட்டியலில் சேர்ப்பதாக உத்தேசம்?

(4) தினமலர் கேள்வி

பூணூலைப் பிராமணர்கள் மட்டும்தானா போடுகிறார்கள்?

நமது பதில்:

மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது. அப்படி பூணூலை சூத்திரன் அணிந்தால் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும். (மனுதர்மம், அத்தியாயம் -9, சுலோகம் 224)

இதற்கெல்லாம் தினமலர் என்ன பதில் சொல்லப்போகிறது? மனுதர்மம் எப்பொழுதோ எழுதியது என்பதுதான் அவாளின் சமாதானம் என்றால், அந்த மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எரித்தது போல தினமலர் கூட்டம் நாள் குறித்து தீ வைத்துச் சாம்பலாக்கத் தயார்தானா?

திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங் குன்றம் முருகனுக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தங்கப் பூணூல் அணிவித்தது, சிரீங்கம் ரெங்கநாதனுக்கும் ஜீயர் தங்கப் பூணூலும் அணிவித்ததும் - எந்த அடிப்படை? கடவளும் பார்ப்பானும் ஒரே ஜாதியா? உள்நோக்கம் புரிகிறதா?

(5) தினமலர் கேள்வி

ஜாதிக்கலவரம் பிராமணர்களாலா உண்டாகிறது?

நமது பதில்:

ஜாதியின் மூல ஊற்று இந்துமதம் - வேதம்- இதிகாசங்கள் - சாஸ்திரங்கள் இந்து மதத்தில் ஜாதி அமைப்பு என்பது ஏணிப்படி முறை (GRADED IN EQUALITY) என்றார் அண்ணல் அம்பேத்கர்.

நோயை ஒழிக்க அதன் மூலக்கிருமியை ஒழித்தாக வேண்டும் -இதற்கு காரணமான பார்ப்பனர்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டாமா? சங்கரமடத்தில் ஒரு தாழ்த்தப் பட்டவர் சங்கராச்சாரியாக வரட்டும்; கோயில் களில் அர்ச்சகர்களாக அதிகமான வகையில் தாழ்த்தப் பட்டவர்கள் அர்ச்சகர்களாக வரட்டும் - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்கு பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்ற திருத்தம் வரட்டும் - சங்கராச்சாரியார் ஜாதி ஒழிக என்று ஒரே ஒரு முறை உதிர்க்கட்டும். ஜாதிவேர் அறுகிறதா இல்லையா? என்று அப்புறம் சொல் லுங்கள்.

யார் யார் அருகில் பழகுகிறார்களோ, குடியிருக் கிறார்களோ, வேலை செய்கிறார் களோ அவர்களிடை யேதான் சச்சரவு களும் வரும்.  சேரிகளுக்கும் - அக்ர காரத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணக்கிட்டால் இதற்கான காரணமும் எளிதில் விளங்கும். சுடுகாட்டில் கூட ஜாதி அடிப்படையில் தான் இருக்க வேண்டும் (மதுரை பேட்டி, 1982) என்று கூறும் சங்கராச்சாரி பற்றி தினமலர் என்ன கூறுகிறது.

(6) தினமலர் கேள்வி

பார்ப்பன எதிர்ப்பு இனி செல்லாது!

நமது பதில்: இப்படி சொல்லுவதன் அர்த்தம் என்ன? நாங்கள் ஜாதி ஆணவத்துடன்தான் இருப்போம் - உங்களால் என்ன செய்ய முடியும் என்று சவால் விடுவதாகத்தானே அர்த்தம். நாடு ஆஸ்திகர்கள் வாழத்தகுதி இழந்து விட்டது. மகா புருஷர்கள் எல்லாம் வெளிநாடு செல்லத் திட்ட மிட்டுள்ளனர் என்று ராஜாஜி அவர்களை எழுத வைத்த பெரியார் பூமி இது-இந்த சவால்கள் எல்லாம் இங்கு வேண்டாம்!

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் பார்ப்பனர் ஒரே ஒருவர்தானே- இதுதான் பெரியார் பூமி நினைவிருக்கட்டும்!

(7) தினமலர் கேள்வி

தி.க.தலைவர் வீரமணிக்காக தினமலர் பக்கங்களை வீணடிக்க வேண்டாம்.....

நமது பதில்:

அடேயப்பா, எவ்வளவு பெரிய மனசு! தினமலர் களையும், சங்கரமடங்களையும், விஜயபாரதங்களையும், துக்ளக்குகளை யும் நோக்கி விடுதலையும், அதன் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் ஏவும் கணைகளின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் ஒரு பாதுகாப்பு எண்ணத்துடன் இப்படி சரண் அடைந் திருக்கிறது தினமலர்.

கடைசி பூணூல் உள்ள வரை, சங்கரமடங்களில் தாழ்த்தப்பட்டவர் அமரும் வரை, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமத்துவ நிலை உருவாகும் வரை வேதங்களும், மனுசாஸ்திரங்களும், மகாபாரதங்களும், இராமயணங்களும், ஆட்டம் போடும் வரை, பார்ப்பன எதிர்ப்பு என்பது தவிர்க்கப்பட முடியாது -  ஆமாம் தவிர்க்கப்படவே முடியாது!

எங்கள் கைகளில் இருக்க  வேண்டிய ஆயுதங்களை முடிவு செய்வது நமது எதிரிகள்தானே!

குறிப்பு: பார்ப்பனர்களுக்கு சர் சிபி ராமசாமி அய்யர் கூறிய (1946) அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஒரு முறை தினமலர் மட்டுமல்ல - பார்ப்ப னர்கள் அனைவரும் படிக்கட்டும்!

இன்னொன்று பார்ப்பனர்கள் பற்றி எழுதும்போது தினமலரின் ரத்தம் கொதிப்பது -ஏன்? 'அந்த உணர்வு'தானே காரணம்!

- விடுதலை ஞாயிறு மலர், 13.10.18