தஸ்லிமா நஸ்ரீன் எழுப்பியுள்ள பகுத்தறிவுக் கேள்வி
எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவரு டைய எழுத்தின் காரணமாக இசுலாமிய அடிப்படைவாதிகளால் தண்டனைவிதிக் கப்பட்டவர். வங்கதேசத்திலிருந்து வெளி யேறி, அடைக்கலமாக இந்தியாவில் வசித்து வருபவர்.
அவர் எந்த மத அடிப்படைவாதத்தை யும் ஏற்காமல், சுதந்திரமாக தன்னுடைய கருத்தை வெளியிட்டுவருபவர். அவரு டைய டிவிட்டர் பக்கத்தில் இந்துமதத்தி லுள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
தந்தை தன் மகளை மணமகனுக்கு பரிசுப்பொருளை அளிப்பதைப்போல் அளிப்பது கன்னிகாதானம் என்று உள்ளது. பரிசாக அளிக்கப்படுகின்ற ஒரு பொருளாக ஒரு பெண்ணை எப்படி கருத முடியும்? கன்னியாதானம் போல், புத்திரதானம் என்று எந்த சடங்கும் இருக்கிறதா? இல்லையே.
மனித சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும். திருமணம் என்பது வயதுக்கு வந்த மனிதர்களில் இருவரை, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இணைப்பது என்று பொருள் ஆகும்.
- விடுதலை ஞாயிறு மலர், 5.1.19