பக்கங்கள்

புதன், 24 ஜூலை, 2024

மகா மகா சாணக்கியர் என்று பார்ப்பனர்களால் கூறப்பட்ட பானகல் அரசர் (9.7.1866)

 


விடுதலைஞாயிறு மலர்

-முனைவர் க.அன்பழகன் கிராம பிச்சார குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்

மனித இனம் தோற்றம் கண்டபின் தொடக்கத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில், குடும்பம் தோன்றியபின் குடும்பத் தலைவர், அதன்பின் பல குடும்பங்கள் இணைந்த தொகுப்பிற்கு ஒரு தலைவர், அதனைத் தொடர்ந்து ஒரு பகுதியில் வாழும் மக்களின் தலைவர், தொடர்ந்து குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் இனக்குழுவின் தலைவர், பிறகு பெருநிலப்பரப்பின் தலைவர் – அவரே மன்னர் அல்லது அரசர் என்றும், அவரது ஆட்சி மன்னராட்சி என்றும் இருந்து – இற்றை நாளில் மக்களே தங்களை ஆளும் மக்களாட்சி வரை ஆட்சிகள் வளர்ந்து வந்துள்ளன.

அரசர்கள் காலம் முடியாட்சியாக விளங்கிய காலத்தில் அனைத்தும் அரசனுக்குச் சொந்தமானது. அரசர்கள் அவ்வளவு பெருமையும் உரிமையும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.

இச்சிறப்பிற்குரிய அரச குடும்பத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள பானகல்லு கிராமத்திற்குரிய அரச குடும்பத்தில் பிறந்தவர்தான் பானகல் அரசர். இவரது பெயர் பி. இராமராய நிங்கர் என்பதாகும்.

பானகல் அரசரின் மூதாதையர்கள் பானகல்லு என்ற கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து காளாஸ்திரியில் குடியேறியபின், காளாஸ்திரியில் தான் பானகல் அரசர் பிறந்தார்.

இவர் தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்தார். சமஸ்கிருதத்தில் நன்கு புலமை பெற்றிருந்தார்.

இவர் பிறந்த நாள் 9.7.1866. இவர் பின்னாளில் சென்னை இராஜதானியின் பிரதம அமைச்சராக (Premier of Madras Presidency) பொறுப்பேற்று புரட்சிகரமான சாதனைகளை நிகழ்த்தி சரித்திரம் படைத்தார். சாகாச் சரித்திரம் ஆனார்.
அரச குடும்பத்தில் பிறந்து, அடிமைகளாய் – உரிமை இழந்தவர்களாய் – நாடோடி ஆரிய இனத்தின் சுரண்டல் கொடுமையைச் சுகமாக ஏற்றிருந்த திராவிடர் இன மக்களுக்கு உரிமை இரத்தத்தை உடலில் செலுத்தி, உணர்ச்சியூட்டி அவர்களை உயர்த்திய உத்தமர்.

பானகல் அரசரின் ஆட்சிச் சிறப்பை- ஆளுமை நெருப்பை- அதனால் விளைந்த திராவிடர் செழிப்பைக் கண்டோம்.
டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய முப்பெரும் மேதைகள் – திராவிடர் இனத்தை வாழ்விக்க வழிகண்ட வரலாற்று நாயகர்கள் – இணைந்து உருவாக்கிய அமைப்புதான் – 1916இல் உருவான தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இதன் சிறப்புப் பெயர் நீதிக்கட்சி. இந்த அமைப்பு ‘ஜஸ்டிஸ்’ என்னும் பெயரில் பத்திரிகை ஒன்று நடத்தியதால் நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களான திராவிடர் இன மக்கள் கல்வி மற்றும் அரசு உத்தியோகங்களில் உரிய விகிதாச்சார அளவில் சட்டப்படியான வாய்ப்பைப் பெறப் பாடுபடுவது என்ப தேயாகும்.
நீதிக்கட்சி தொடங்கு வதற்கு அடித்தளமிட்ட முதல் சிறப்புக் கூட்டம் 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் அன்று சென்னை வேப்பேரி எத்திராஜுலு (முதலியார்) இல்லத்தில் நடைபெற்றது.

நீதிக்கட்சியின் கொள்கை விளக்க அறிக்கை பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்க அறிக்கை” (The Non-Brahmin Manifesto December – 1916) என்ற பெயரில், புதியதோர் வரலாற்றை திராவிடர் இனத்து மக்களுக்கு வழங்கிடும் புகழ்மிக்க புரட்சிகர அறிக்கையாக வெளியானது.

மாண்டேகு – செம்ஸ்போர்டு வழங்கிய இரட்டை ஆட்சித் திட்டத்தின் கீழ் நீதிக்கட்சி 1920ஆம் ஆண்டு தேர்தலை முதன்முதல் சந்தித்து – வெற்றியும் பெற்று சென்னை இராஜதானியில் திராவிடர் ஆட்சியை நிறுவியது.

நீதிக்கட்சியின் தந்தை என்ற பெருமைக்குரிய சர்.பிட்டி தியாகராயர் அவர்களை ஆங்கிலேயக் கவர்னர் லார்டு வெல்லிங்டன் முதலமைச்சராகப் பொறுப்பேற்க அழைத்தார். தான் முதலமைச்சராக விரும்பவில்லை என அறிவித்து கடலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் திரு.ஏ. சுப்பராயலு (ரெட்டியார்) அவர்களை முதலமைச்சராக்கினார்.

இந்திய அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்திட்ட- மக்கள் பணியே மகத்தான பணி என்று வாழ்ந்திட்ட வணக்கத்திற்குரிய முதல் மனிதர் சர்.பிட்டி தியாகராயர் ஆவார்.

அந்த வரிசையில் இரண்டாமவராக ஏன், இறுதி மனிதர் என்றே கருதிடும் ஆங்கிலேய கவர்னரால் இரண்டு முறை (வெவ்வேறு காலகட்டங்களில்) சென்னை ராஜதானிக்கு முதல்வர் பொறுப்பேற்க (Premier) அழைத்தும் பதவியைவிட மானமுள்ள சமுதாயமாக திரா விடர் சமுதாயத்தை மாற்றும் தொண்டு என்ற மாபெரும் பணி என்று வாழ்ந்து காட்டிய புதிய வரலாற்றுக்குப் புகழ் சேர்த்த தந்தை பெரியார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்ற திரு.ஏ. சுப்பராயலு (ரெட்டியார்) அவர்கள் ஆட்சி பெறுப்பேற்ற சில மாதங்களில் உடல் நலம் குன்றிய நிலையில் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் திரு.பி. இராமராய நிங்கர் எனும் பெயர் கொண்ட பானகல் அரசர் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1921 முதல் 1926 வரை முதலமைச்சராக இருந்த பானகல் அரசர் நீதிக்கட்சியின் கொள்கை வழிநின்று ஆற்றிய தொண்டுகள் ஏராளம். அவற்றில் சில இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

நீதிக்கட்சியின் சாதனைகள்

பார்ப்பனரல்லாதார் என்பவர்கள் யார் என்பதற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி – வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வருவதற்கான அடிப்படையை உருவாக்கினார்.

பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமையில்லை என்றிருந்த தடையை அரசாணை எண்.108 சட்டம் (legislative) (நாள்: 10.05.1921) மூலம் நீக்கி பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினார்.

1921 ஆகஸ்ட் 16ஆம் நாள் எல்லாச் சமூகத்திற்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தார்.

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக் குழு ஒன்று அமைத்து அதன் மூலம் அனைத்து சமூக மாணவர்களும் கல்லூரிப் படிப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசாணை எண்: 636 சட்டம் (கல்வி) நாள்: 20.8.1922 மூலம் உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக பார்ப்பனர் இனத்து மாணவர்களே படித்திடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை பார்ப்பனரல்லாதார்க்கு 60% பார்ப்பனர்களுக்கு 40% என வரையறை செய்து அரசாணை எண்.1880 சட்டம் (கல்வி) (நாள்: 20.05.1922) ஒன்றைப் பிறப்பித்தார். பார்ப்பன ஏகபோகக் கொள்ளைக்கு முடிவு கட்டினார்.

அரசாணை எண்: 817 சட்டம்(பொது) (நாள்: 25.03.1922) மூலம் பஞ்சமர் – பறையர் என்று தொல் திராவிடர் குடியினரை அழைக்கும் – எழுதும் நிலைக்கு முடிவுகட்டி, தமிழில் “ஆதிதிராவிடர்” என்றும் தெலுங்கில் “ஆதி தெலுங்கர்” என்றும் அழைத்திட – எழுதிட ஆணையிட்டார்.

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பட்டியலை அனுப்பும்போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்று அரசாணை எண்: 205 சட்டம் (கல்வி) (நாள்: 11.12.1924) ஒன்றைப் பிறப்பித்தார்.

முதன்முதல் சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை நிறுவிய பெருமைக்குரியவர் பானகல் அரசரே ஆவார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக பானகல் அரசர் காலத்திலே தான் அடிப்படைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் பானகல் அரசர் ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. அரசாணை எண்: 29 சட்டம் (legislative) (நாள்: 27.01.1925)

அரசு அலுவல்களுக்கு அந்தந்த துறையினரே நியமனங்கள் செய்து வந்தனர். பெரும்பாலும் உயர் ஜாதியினரே இருந்த நிலையில் அவர்களுக்கே வாய்ப்பு கிடைத்தது. பனகல் அரசர் ஆட்சிக்கு வந்தவுடன் நியமனங்களை ஒருமுகப்படுத்த (Staff Selection Board) “அலுவலர் தேர்வு வாரியம்” அமைத்தார். இதுவே இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பணியாளர் தேர்வு வாரியம் ஆகும். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும் முன்னோடி அமைப்பு இது. வகுப்புரிமை ஆணை அமலுக்கு வந்த பின் இதன் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு 1929ஆம் ஆண்டைய சென்னை சர்வீஸ் கமிஷன் சட்டம் ஏற்பட்டது. மேன்மைமிகு இந்திய கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்தார். அரசு ஆணை எண் 484 சட்டம் (லெஜிஸ்லேடிவ்) (18.10.1929) இதைக் குறிப்பிடுகிறது.

பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப் பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன ஜாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25 நிதி உதவிகள் (ஸ்காலர் ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற ஜாதியினரிடமிருந்து பாதுகாப்பு – அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை, இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டது.

மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப் பட்டார்.

கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக்கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமை யாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

பி அண்டு சி மில்லின் வேலை நிறுத்தத்தின் விளை வுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப் பட்டன.
தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற – மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறைச் செலவுகளை ஏற்றல். சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.

மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

பானகல் அரசர் நிறைவேற்றிய மேற்கண்ட சட்டங்கள்தான் தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது என்பதோடு – இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமை ஏற்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆணிவேருமாகும் என்றால் அது மிகையாகாது.

நீதிக்கட்சியின் சார்பில் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு கோவை ஜில்லா மாநாடாக- ஒப்பனைக்காரத் தெரு நாடக மேடையில் 1917 ஆகஸ்ட் 19ஆம் நாள் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் அன்றைய நாளில் இம்பீரியல் கவுன்சில் மெம்பராக இருந்திட்ட திரு.பானகல் அரசர் ஆவார். இந்த மாநாட்டில் அவரது எழுச்சி உரை திராவிடர் இனத்து மக்களின் சமூகநீதிச் சாசனமாகும்.

பானகல் அரசரின் மறைவு 1928 டிசம்பர் 15 அன்று திடீர் உடல்நலக் குறைவால் நிகழ்ந்தது. சென்னை தியாகராயர் நகரில் பானகல் அரசருக்குச் சிலை வைத்து – பானகல் பூங்காவும் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பானகல் அரசர் காலமானபின் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தியின் தலைப்பு

“மறைந்தார் நம் அருமைத் தலைவர்!
எனினும் மனமுடைந்து போகாதீர்!”

பெரியார் தனது இரங்கல் செய்தியில் ஒரு இடத்தில் குறிப்பிடும்போது,
“நாயர் பெருமான் அவர்களும் இதே மாதிரி நெருக்கடியான சமயத்தில் தேசம் விட்டுத் தேசம் போய் உயிர் துறந்தார்.
தியாகராய வள்ளலும் இதேபோல் இறந்தார்.

பானகல் வீரரும் அவர்களைப் பின்பற்றி நடந்தார். ஆனால் நாயர் பெருமான் காலமானவுடன் மக்கள் கண்ணிலும் மனதிலும் தியாகராய வள்ளல் தோன்றினார். அதுபோலவே தியாராய வள்ளல் மறைந்தவுடன் நமது பானகல் வீரர் தோன்றினார். பானகல் வீரர் மறைந்த பிறகு யாரும் தோன்றக் காணோம். அவர் மறைந்த பிறகு சந்றேறக் குறைவாக இரவும் பகலுமாக 192 மணி நேரம் – லட்சக்கணக்கானவர்கள் காலஞ்சென்ற தலைவரைப்போல் ஒரு தலைவரைத் தேடித்தேடி களைத்தாய்விட்டது. இன்னமும் ஒருவரும் புலப்படவில்லை. இது ஒன்றே நம் பானகல் வீரர், ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது.”

தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி குறிப்பிட்டுள்ள திலிருந்து பானகல் அரசர் – பானகல் வீரர் வாழ்வும் தொண்டும் நம்மினத்திற்கு எந்த அளவிற்குப் பயன் தந்தது என்பதும், அவரது மறைவும் இழப்பும் யாரும் நிரப்ப முடியாத இடமென்பதும் அறிந்திடும் நிலையில் அப்பெரும் வரலாற்று நாயகர் பானகல் அரசர் பிறந்த நாளில் (9.7.1866) சமூகநீதி

நிலைக்க – திராவிடம் வெல்ல சூளுரைப்போம்!

வாழ்க பானகல் அரசர்!

சனி, 6 ஜூலை, 2024

கருப்புச் சட்டை அணிவது போலவா பூணூல் அணிவது? - எதிர்வினை (51)

 

ஜனவரி 01-15 2020

கருப்புச் சட்டை அணிவது போலவா பூணூல் அணிவது?

கேள்வி: ஈ.வெ.ரா. கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்கிற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்கிற பயமா?

பதில்: பதிப்புரிமை பற்றிய வழக்கைப் புரிந்துகொள்ளாமல், திரிபுவாதம் பேசுவதற்கு இது நல்ல ஓர் எடுத்துக்காட்டு. பெரியார் கொள்கையை யார் பரப்ப வேண்டாம் என்றது. அவர் கொள்கை பரப்ப ஒரு நிறுவனம் அவரால் அமைக்கப்பட்டு இருக்கையில் அவர் நூலை வெளியிடும் உரிமை அதற்குத்தானே இருக்க முடியும்? அது வெளியிடும் நூலை ஆயிரக்கணக்கில் யார் வேண்டுமானாலும் வாங்கிப் பரப்பலாமே? ஆளாளுக்கு அச்சிட்டு விற்கத் தலைப்படும்போது திரிபுகள், வர வாய்ப்புண்டு.

பெரியாரின் மூத்த தொண்டர் ஒருவர் வெளியிட்ட நூலிலே பெரியார் பாஸ்போர்ட் இல்லாமல் அயல்நாடு போனார் என்று தவறான கருத்து வெளிவந்த வரலாறு உமக்குத் தெரியாது. இதுபோன்ற தவறு நிகழக் கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டதே அது!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இலாப நோக்கில் நூல் வெளியிடுவதில்லை என்பது உமக்குத் தெரியுமா? தெரிந்தால் சில்லறைத்தனமாக இப்படிக் கேட்க மாட்டீர்!

கேள்வி : பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்புச் சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பதில் : அசல் அயோக்கியத்தனமான கேள்வி இது! பூணூலும் கருப்புச் சட்டையும் ஒன்றா? கருப்புச் சட்டை என்பது ஓர் இயக்கத்தின் சீருடை. அது இழிவு நீக்கவந்த ஏற்பாடு. அது யாரையும் எப்போதும் இழிவு படுத்தாது.

ஆனால், பூணூல் என்பது பெரும்பாலான மக்களை இழிவுபடுத்தும் அடையாளம். 3% ஆரியப் பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் இழிமக்கள்; தீட்டு உள்ளவர்கள் என்று இழிவு செய்யும் ஏற்பாடு பூணூல். ஆரிய பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக அவர்களால் அணியப்படுவது.

ஒரு தெருவில் இது பத்தினியின் வீடு என்று ஒரு வீட்டில் எழுதி வைத்தால் அதன் பொருள் என்ன? மற்ற வீடெல்லாம் விபச்சாரிகளின் வீடுகள் என்பதுதானே! நான் மட்டும் உயர்ந்தவன் என்று ஆரிய பார்ப்பனர்கள் பூணூல் மாட்டிக்கொள்வது மற்றவர்கள் இழிமக்கள் என்று கூறத்தானே?

அப்படியிருக்க கருப்புச் சட்டை போடுவது போல்தான் பூணூல் போடுவது என்கிற உமது வாதம் அறிவற்ற, அடிமுட்டாள்தனமானது என்பதை இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும். கருப்புச் சட்டை இழிவு நீக்கப் பாடுபடும் தொண்டர்களின் அடையாளம். அப்படிப் பாடுபடும் எவரும் அதை அணியலாம். ஆனால், பூணூலை எல்லோரும் அணிய முடியுமா?

பூணூல் அணிவது உரிமை என்கிறீரே… அந்த உரிமையைக் கொடுத்தது யார்? அந்த உரிமை ஆரியப் பார்ப்பானுக்கு மட்டும் எப்படி வந்தது? உம்மால் பதில் சொல்ல முடியுமா?

97% மக்களை ஏமாற்ற சாஸ்திரங்களை தாங்களே எழுதி, அதில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் இழிவானவர்கள், எங்களுக்கு மட்டுமே பூணூல் என்று எழுதிக்கொண்ட மோசடிக் கூட்டம்தானே ஆரிய பார்ப்பனக் கூட்டம். அப்படிப்பட்ட ஏமாற்றுக்கும், பித்தலாட்டத்திற்கும் உரிமை என்று பெயரா?

கேள்வி : ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதைப் பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் திட்டியே பொழப்பு நடத்துகிறீர்களே, உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?

பதில்: மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் கூட்டம் இந்தக் கேள்வியைக் கேட்பதுதான் வேடிக்கை! தன் வீட்டுச் சாப்பாடு, தன் பணம், பதவி  பலன் எதிர்பாராத ஆனால், இழிவு, ஏச்சு, பேச்சு எல்லாவற்றையும் ஏற்று இந்த மக்கள் சுயமரியாதையும், சூடு, சொரணையும், விழிப்பும் சமவாய்ப்பும் பெற உழைப்பவர்கள் நாங்கள். இதில் பிழைப்புக்கு, வருவாய்க்கு வழியேது? மூடநம்பிக்கையால் அறிவு, மானம், உரிமை, உயர்வு இழந்து, அடிநிலையில் உழலும் மக்களை சிந்திக்கச் செய்து அவர்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக்கி, அவர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, பார்ப்பனர்களை விடவும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து, உயர்ந்து வர பாடுபடுபவர்கள் நாங்கள்.

 இது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நன்கு தெரியும். இந்து என்கிற போர்வையில் நீங்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று பகற்கனவு காணாதீர்கள்! பார்ப்பனரல்லாதார் விரைவில் விழிப்புடன் வீறு கொண்டு எழத்தான் போகிறார்கள். அப்பொழுது தெரியும் உங்கள் நிலை! எச்சரிக்கை!

நேயன்

                                                                  (தொடரும்)

 

வெள்ளி, 5 ஜூலை, 2024

இந்து மதம் ஒழிவதே நல்லது! --டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

 

சுவடுகள் : இந்து மதம் ஒழிவதே நல்லது!

டிசம்பர் 01-15, 2020

-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து…)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்.

(1929இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்…)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். “நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன்.’’ -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில்,

இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே, இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

– டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

நினைவு நாள்: 6 டிசம்பர், 1956.

வியாழன், 4 ஜூலை, 2024

பாரதி தமிழ் இலக்கணம் கற்றவரா? -எதிர்வினை (62)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (62): பாரதி தமிழ் இலக்கணம் கற்றவரா?

செப்டம்பர் 16-30, 2020

நேயன்

கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் முதல் பதிப்பு 1856ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பும் பாரதியின் காலத்திலேயே 1915ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்படி இருந்தும், பாரதி கால்டுவெல் அவர்களின் நூலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது மோசடியாகும்.

பாரதி போன்ற சமஸ்கிருதப் பற்றுக் கொண்ட பார்ப்பனப் பண்டிதர்களைக் பற்றி கால்டுவெல் கூறியதாவது.

“திராவிட மொழிகள் வடஇந்திய மொழிகளி-லிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள், வடஇந்திய மொழிகளைப் போலவே, சமசுகிருதத்திலிருந்து பிறந்தவையாகச் சமசுகிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண்டிதர்கள்.’’ (ஆதாரம்: கால்டுவெல், திராவிடம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)

1915இல் சூலைத் திங்களில் ‘ஞானபானு’ என்னும் இதழில் பாரதியார் தமிழில் எழுத்துக் குறை என்னும் தலைப்பில் “சமஸ்கிருதத்தில் க, ச, ட, த, ப, ற போன்ற வல்லின எழுத்துகளுக்கு வர்க்க – எழுத்துகள் இருப்பதுபோல், தமிழில் வர்க்க எழுத்துகள் இல்லாததால், தமிழில் எழுத்துக் குறையுள்ளது’’ என்கிறார். (ஆதாரம்: வ.உ.சியும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி)

ஒரு மொழியிலுள்ள ஒலிகள், அதற்குண்டான குறியீடுகள் மற்ற மொழியில் இல்லாதிருந்தால், அது அம்மொழியின் குறைபாடு ஆகாது. ஏனெனில், ஒலிப்பு, ஒலிக்குறியீடு என்பவை அம்மொழிக்கே உரிய இயற்கையான இயல்புகள் ஆகும். ஆகவே சமசுகிருத வர்க்க எழுத்துகள் தமிழில் இல்லை என்று பாரதியார் குறைபட்டுக் கொள்வது ஏற்புடையது ஆகாது.

பாரதியின் இக்கூற்றை அறிஞர் வ.உ.சி. அவர்கள் 1915 செப்டம்பர்த் திங்களில் அதே ‘ஞானபானு’ ஏட்டில் கடுமையாக மறுத்துக் கூறியுள்ளார். “தமிழில் எழுத்துக் குறை என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சமசுகிருதச் சார்புடையவராகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக்காதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமிழுக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் என்னும் உன்னத நூலையும், அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்’’ என்கிறார். (ஆதாரம்: வ.உ.சியும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி)

தமிழில் எழுத்துப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி, அதையே வாய்ப்பாகக் கருதி, வேண்டுமென்றே தமிழில் வடமொழிச் சொற்களை அளவுக்கு அதிகமாகக் கலந்து எழுத ஆரம்பித்தார் பாரதியார். இதை அவருடைய பிற்கால எழுத்துகளில் காணலாம்.

“மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களூர், திருச்சினாப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலிஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்தியா வந்தனம் எவ்வளவு சொற்பம்? தீர்த்தபானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா, இந்த ரிஷிகளெல்லாரும் என்ன பிராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதிப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.’’ (ஆதாரம்: பாரதி தமிழ், புதூரன்)

இது 1917 சூன் 21இல் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘ப்ராயச் சித்தம்’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய கதையின் ஒரு பகுதி. (பாரதியார் தன் பெயரைக் கூட ஸி. ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார்.)

பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா. குறிப்பிடுவதாவது.

“தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்

மூன்றும் மொழி மூவிடத்து மாகும்

இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படி-யெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிக்கூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்புக் கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்யோகம் பார்த்தார் என்பது குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.’’ (ஆதாரம்: வ.ரா. _ மகாகவி பாரதியார்)

ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக் கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா, எவ்வளவு உண்மை! (ஆதாரம்: கவிக்குயில் பாரதியார் _ சுத்தானந்த பாரதி) என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார்.

இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன் முதலில் சொன்னவர் பாரதியே! 1906இலேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார். 15.12.1906 “இந்தியா’’ வார ஏட்டில் ‘இந்தி பாஷைப் பக்கம்’ என்னும் தலைப்பில் இவர் கூறுவதாவது: “தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க ஹிந்திப் பாஷையை அப்பியஸிக்க என்ன அவசியம் இருக்கிறது என்று (என்பதை?) சொல்லுகின்றோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும், ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்-பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும். தமிழர், தெலுங்கர் முதலானவர்கள் கூடச் சிறிது பிரயாசையின் பேரில் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளலாம்.’’ (ஆதாரம்: பாரதி தரிசனம், சி.எஸ்.சுப்பிரமணியம்)

(தொடரும்…)

புதன், 3 ஜூலை, 2024

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

அக்டோபர் 16-31 2019

 நேயன்

அடுத்த 10ஆவது குற்றச்சாட்டும் தலித் சார்ந்ததாக இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து உரிய பதிலைத் தர விரும்புகிறோம்.

10.          தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஈ.வெ.ரா. இருந்ததில்லை.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?

1.            ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்ல முடியாது.

2.            ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.

3.            தங்க நகைகள் அணியக் கூடாது.

4.            மண்குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.

5.            ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6.            அடிமையாக இருக்க வேண்டும்.

7.            சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

8.            திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

9.            பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

10.          குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது.

11.          வண்டி ஏறிச் செல்லக் கூடாது.

12.          பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

13.          சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.

14.          பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.

15.          மேல் அங்கியோ, துண்டு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது.

16.          பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

17.          நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.

பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதி வைத்தனர்.

தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்று தலைப்பில் 24.11.1929 “குடிஅரசில்” எழுதினார்.

அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதினார்.

ஆதிதிராவிடர், தீயர், தீண்டாமை விலக்க மாநாடுகளை பெரியார் நடத்தினார்.

21.7.1929இல் சென்னையிலும், 25.8.1929இல் இராமநாதபுரத்திலும், 10.6.1930இல் திருநெல்வேலியிலும், 16.5.1931இல் சேலத்திலும், 7.6.1931இல் லால்குடியிலும், 5.7.1931இல் கோவையிலும், 4.7.1931இல் தஞ்சையிலும், 7.12.1931இல் கோவையிலும், 7.2.1932இல் லால்குடியிலும், 28.8.1932இல் அருப்புக்கோட்டையிலும், 7.8.1933இல் சென்னையிலும், 1.7.1938இல் சீர்காழியிலும், 7.3.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.5.1936இல் கொச்சியிலும், 2.9.1936இல் சேலத்திலும், 6.5.1937இல் சிதம்பரத்திலும், 4.7.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டனத் தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.

மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்ப்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.

ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும்  பழங்குடி மக்களும் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 9.2.1982இல் ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’, தலித்திய ஏடுகள் போன்றவற்றைப் படியுங்கள்.

பெரியார் பேசுகிறார்: “நானோ, திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை; இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாகக் கருதவேண்டாம். ஆதிதிராவிடன் – திராவிடன் என்கிற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.

இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன்: திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதைச் செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்று வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்கிற உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர, தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்று மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர்.

நான் மிக எதிர்பார்த்திருந்தேன் _ அவரின் ஒத்துழைப்பை – இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால், எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ  அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாள்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்ற நான் அஞ்சுகிறேன்.

எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?

என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இருக்கும் இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு.

                                                                      (‘விடுதலை’ 8.7.1947)

சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கும் பி.என்.சர்மாவுக்கும் தந்த பதவியை சிவராஜுக்கு, வீரய்யனுக்கும் தராதது ஏன்? - எதிர்வினை 27

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 27

ஜனவரி 1-15 2019

சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கும் பி.என்.சர்மாவுக்கும் தந்த பதவியை சிவராஜுக்கு, வீரய்யனுக்கும் தராதது ஏன்?

’குடிஅரசு’ கேள்வி

நேயன்

இப்படிப்பட்ட தரவுகள் கொண்டு மிகக் கனமான, செறிவான வரலாற்றை எழுதலாம். இது எல்லாம் தெரியாததால்தான் தலித் அரசியலை பெரியார் மறைக்க நினைத்தார் என்றும், அம்பேத்கர் தவிர மற்ற தலித் தலைவர்களை பெரியார் மறைத்தார் என்றும் எழுதுகிறார்கள்.

‘சென்னையில் கலவரம்’ என்ற செய்தியைப் பாருங்கள்; சென்னை திருவல்லிக்கேணி கடல்கரையிலும், மவுன்ட்ரோடு நேப்பியர் பார்க்கிலும் எழுமூர் ஏரியிலுமாக மூன்று பொதுக் கூட்டங்கள் ஆதி திராவிட மகாஜனசபையாரால் கூடப் பெற்று திருவாளர்கள் வீ.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ.,பி.எல்., எம்.எல்.சி., எம்.சி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியவர்கள் தலைமையில் 11.10.1931, 14.10.1931, 18.10.1931 ஆகிய மூன்று தினங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதல்நாள் 1,000 பேரும், 2ஆம் நாள் 2,000 பேரும், 3ஆம் நாள் 7,000 பேரும் விஜயம் செய்திருந்தார்கள். அக்கூட்டங்களில் வட்டமேஜை மகாநாட்டில் தாழ்த்தப்பட்ட வர்களுக்குத் தனித்தொகுதி வேண்டாமென்று கூறிய திரு.காந்தியைக் கண்டித்தும் அவர் மீதும் காங்கிரஸ் மீதும் தங்கட்கு நம்பிக்கையில்லை யென்றும் தங்கள் பிரதிநிதிகளான டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சீனிவாசன் ஆகியவர்களால் வேண்டப்படும் கொள்கை-களையே முழு மனதோடு ஆதரிப்பதாகவும் தீர்மானம் செய்தார்கள். அதனையொட்டி திருவாளர்கள்: பொன்னு, கே.ஆர்.சாமி, கே.ஆர்.எத்திராஜுலு, தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதம், வி.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., பாலகுரு முதலி, சிவம், து.பொன்னம்பலம் ஆகிய கனவான்கள் நன்கு விளக்கி ஆதிதிராவிடர்களின் நிலைமையையும், வட்ட மேஜை மகாநாட்டையும், காந்தி காங்கிரஸ் முதலியவைகளைப் பற்றியும் எடுத்துப் பேசினார்கள். இந்நிகழ்ச்சியை சகியாத பார்ப்பனர்கள் கடல்கரை கூட்டத்தில், ‘வந்தே மாதரம்! காந்திக்கு ஜே!’ எனறு சத்தமிட்டு குழப்பத்தையுண்டாக்கி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தார்கள். பொது ஜனங்களில் இருவர் கூச்சல் போட்டு குழப்பம் செய்தவர்கட்கு நல்ல புத்திமதி கொடுத்தார்கள். அதன்பின் ஓட்டம் பிடித்தார்கள். அமைதியும் ஏற்பட்டது. அதேபோல் 14.10.1931 தேதியிலும் பொதுக்-கூட்டம் முடிந்து பஜனையாகப் போய்க் கொண்டிருந்த ஆதிதிராவிட மகாஜனங்களை பெரியமேட்டு பெரியண்ண மேஸ்திரி தெரு பக்கத்தில் ஒரு வீட்டு மாடியிலிருந்து கொண்டு கல்லாலும், சோடாப் புட்டிகளாலும் (தேச பக்தர்கள்) தாக்கியிருக்கின்றார்கள். அவர்கள், கையில் பஜனையில் கொண்டு போன படத்தையும் கீழே பிடுங்கி உடைத்திருக் கிறார்கள். பின்னர் இரு சாரார்கட்கும் ஆவேசம் ஏற்படவே, அது சமயம் போலீஸ் படைகளும் சோல்சர்களும் வந்து கூட்டத்தை கலைத்தனராம். பிறகு 18ஆம் தேதி கூட்டம் முடிந்த பிறகும் ஆயிரம் விளக்குக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கலகம் நடந்து இரு கட்சியிலும் பலர் காயமடைமந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பார்ப்பன தேச பக்தர்களின் ஏவுதலின்படி நம்மவர்களும் சிலர் கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது. பார்ப்பனர்களுடைய தேசபக்தி இதுபோன்ற கலவரம் இனியும் பல ஏற்பட்டு சைமன் கமிஷன் காலத்தில் நடந்ததுபோல் திருவல்லிக்கேணியிலும், மைலாப்பூரிலும் போய் புகும்வரையில் நிற்காது என்பதாகவே தெரிகின்றது.

திருவாளர்கள்: பொன்னு, கே.ஆர்.சாமி, கே.ஆர்.எத்திராஜுலு, தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதம், வி.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., பாலகுரு முதலி, சிவம், து.பொன்னம்பலம் ஆகிய கனவான்கள் நன்கு விளக்கி ஆதிதிராவிடர்களின் நிலைமையையும், வட்ட மேஜை மகாநாட்டையும், காந்தி காங்கிரஸ் முதலியவைகளைப் பற்றியும் எடுத்துப் பேசினார்கள்.

இன்னும் பல கூட்டங்கள், பலயிடங்-களில்வட ஆதிதிராவிடர்கள் ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள். அதிலும் சில பார்ப்பனர்கள் வழக்கம்போல் தங்கள் விஷமத்தையும், காலித்தனத்தையும் கையாளக் கூடும். ஏன் இவ்வாறு அவர்கள் பொறாமை கொண்டு காலித்தனம் செய்யவும், கலகம் செய்யவும் முன்வருகிறார்கள், அல்லது பிறரைத் தூண்டி விடுகின்றார்கள் என்பது எல்லாருக்கும் தெரியாததல்ல. ‘தேசியம்’ என்பதற்கே பொருள் ‘பார்ப்பனியம்’ என்றுதான் அர்த்தம். எனவே, பார்ப்பனீயம் சென்னையில் நடக்கும் தாழ்த்தப்-பட்டடவர்கள் பொதுக் கூட்டங்களைக் கண்டு தங்கள் புரட்டுகளும் சூழ்ச்சிகளும் வெளிப்-படுமென்று எப்படியாவது கலவரத்தை-யுண்டாக்கி பார்ப்பனரல்லாத சமூகத்தின் முக்கியஸ்தர்-களுக்கு கெட்ட பெயரைச் சூட்டி அவர்கள் முயற்சியை தடைப்படுத்தவே பார்ப்பனப் பத்திரிகைகள் நடந்த செயலை மறைத்து பொய் பிரச்சாரமும் அவதூறாகவும் எழுதுகிறது. பார்ப்பனரல்லாத வியாபாரப் பத்திரிகைகளும் பார்ப்பனீயத்திற்குத் தான் ஆதரவளிக்கின்றன. எப்படி இருந்தபோதிலும் ‘தேசிய’ப் பார்ப்பனர்கள் முயற்சிக்கும் சூழ்ச்சிக்கும் இந்தக் காலத்தில் எந்த மனிதனும் பின்வாங்கப் போவதில்லை. இனியும் தொடர்ச்சியாக பல கூட்டங்கள் போட்டு  காந்தியின் செயலைக் கண்டிக்கத்தான் போகிறார்கள். தேசியத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியை வெளியிடத்தான் போகிறார்கள். ஆதிதிராவிடர்-களில் குறைந்தது 5,000 பேராவது ஜெயிலுக்குப் போவது என உறுதி கொண்டு விட்டார்கள். பார்ப்பனீயம் ஜெயிக்குமா? சமதர்மம் ஜெயிக்குமா? என்று பார்த்துவிட உறுதி-கொண்டு விட்டார்கள்.

ஒன்றாக மனிதத்தன்மை அடைவது அல்லது வாழ்வது இரண்டிலொன்றுதான் முடிவு. எத்தனை நாட்களுக்கு ஒரு சமூகம் ஏமாற்றப்-பட்டு அடிமையாகவே இருக்க சம்மதிக்கும். இனியும் இப்பகுதியில் நடைபெறும் பொதுக்-கூட்டங்கட்கு தோழர் அ.பொன்னம்-பலனார், காளியப்பன் முதலானவர்கள் வர ஒப்பியுள்ளார்கள்.

சைமன் கமிஷனில் யாரை நியமிக்கலாம் என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தபோது பெரியார் என்ன எழுதினார் என்றால்…

சிவபூஷனம் (‘குடிஅரசு’ 25.10.1931)

அதாவது சுயமரியாதை இயக்கம் ஒரு கூட்டம் நடத்தி அதில் ஒரு கலவரம் ஏற்பட்டால் எப்படி செய்தி வெளியிட்டு இருப்பார்களோ, அப்படி ஆதிதிராவிட மகாஜனசபை கூட்டம் குறித்த செய்தியை ‘குடிஅரசு’ வெளியிட்டுள்ளது. வி.பி.எஸ். மணியர், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் பங்கெடுத்த கூட்டம் இது. டாக்டர் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசனுக்கு ஆதரவான கூட்டம் இது. இதை தனது கூட்டமாக பெரியார் நினைத்து செய்தி வெளியிட்டுள்ளார்.

1928இல் சென்னையில் ஆதிதிராவிடர் மகாநாடு நடைபெற்றது. இதனை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை, ‘சர்க்கார் தாசர்களின் மாநாடு’ என்றும், ‘சுயநலக்காரர்கள் மாநாடு’ என்றும், ‘30 பேர்தான் கலந்து-கொண்டார்கள்’ என்றும் எழுதியது. இதை மிகக் கடுமையாகக் கண்டித்து எழுதியவர் பெரியார்-தான். இந்த நாட்டில் ஆதிதிராவிடர்-கள் என்ற சமுதாயம் இருப்பதாகவே மறைத்து சூழ்ச்சி செய்து வந்தவர்கள், ஆதிதிராவிடர்கள் மாநாடு நடத்துகிறார்கள் என்றதும் அதையும் கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஏற்பட்டு 42 வருடங்களாகியும், சீர்திருத்தம் ஏற்பட்டு 20 வருடங்களாகியும் ஏழு கோடி ஆதிதிராவிடர்களில் ஏதாவது ஓர் ஆதிதிராவிடர் ஸ்டேட் கவுன்சில் முதல் கிராமப் பஞ்சாயத்து வரையில் ஏதாவதொன்றில் பொதுப் பிரதிநிதியாக சர்க்கார் தயவில்லாமல் உட்கார இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்று கேட்கிறோம். (‘குடிஅரசு’ 22.1.1928)

இந்த மாநாட்டில் 500 பேர் கலந்து கொண்டதாகவும் ‘சுதேசமித்திரன்’ செய்தியை ‘குடிஅரசு’ மறுத்துள்ளது. ஆளுநரின் நிர்வாக சபையில் ஸ்ரீமான்களான பி.என்.சர்மாவுக்கும், சி.பி.ராமசாமி அய்யருக்கும் கொடுத்திருக்கும் உத்தியோகங்களை ஸ்ரீமான்களான எம்.சி.ராஜாவுக்கும் ஆர்.வீரய்யனுக்கும் கொடுத்தால் பார்க்க மாட்டார்களா? (‘குடிஅரசு’ 22.11.1925) என்று கேட்டது பெரியாரின் ‘குடிஅரசு’.

சைமன் கமிஷனில் யாரை நியமிக்கலாம் என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தபோது பெரியார் என்ன எழுதினார் என்றால்…

சைமன் கமிஷனில் கருப்பு மூஞ்சி ஆசாமி ஒருவரைப் போடுவதாக வெள்ளைக்காரன் சம்மதிப்பதாகவே வைத்துக்கொள்வோம். கருப்பு மூஞ்சியில் யாரைப் போடச் சம்மதிப்பது? எங்கள் சகஜாநந்தா சாமியையாவது, எம்.சி.ராஜாவையாவது, ஆர்.வீரய்யனையாவது போடச் சம்மதிப்பார்களா? ஒருகாலும் போட சம்மதிக்க மாட்டார்கள். (‘குடிஅரசு’ 29.11.1928)

இப்படி இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சகஜானந்தா, ஆர்.வீரய்யன் ஆகிய தலைவர்களை தனக்கு இணையாக, பல இடங்களில் தன்னைவிட உயர்த்தி எழுதியும் பேசியும் வந்தவர் பெரியார். இணைந்து செயல்பட்டவர் பெரியார். இதனுடைய உச்சமாகத்தான் இவர்கள் அனைவருமே ஒரே மேடையில் நிற்கும் மகத்தான நிகழ்வு 1939ஆம் ஆண்டு நடந்தது. வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய அந்த நிகழ்வு 8.10.1939ஆம் நாள் சென்னையில் நடந்தது.

தொடரும்…