சிந்தனை செய்வோம்

பக்கங்கள்

  • பகுத்தறிவு உலகு
பானகல் அரசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பானகல் அரசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூலை, 2024

மகா மகா சாணக்கியர் என்று பார்ப்பனர்களால் கூறப்பட்ட பானகல் அரசர் (9.7.1866)

 


விடுதலைஞாயிறு மலர்
Published July 13, 2024

-முனைவர் க.அன்பழகன் கிராம பிச்சார குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்

மனித இனம் தோற்றம் கண்டபின் தொடக்கத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில், குடும்பம் தோன்றியபின் குடும்பத் தலைவர், அதன்பின் பல குடும்பங்கள் இணைந்த தொகுப்பிற்கு ஒரு தலைவர், அதனைத் தொடர்ந்து ஒரு பகுதியில் வாழும் மக்களின் தலைவர், தொடர்ந்து குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் இனக்குழுவின் தலைவர், பிறகு பெருநிலப்பரப்பின் தலைவர் – அவரே மன்னர் அல்லது அரசர் என்றும், அவரது ஆட்சி மன்னராட்சி என்றும் இருந்து – இற்றை நாளில் மக்களே தங்களை ஆளும் மக்களாட்சி வரை ஆட்சிகள் வளர்ந்து வந்துள்ளன.

அரசர்கள் காலம் முடியாட்சியாக விளங்கிய காலத்தில் அனைத்தும் அரசனுக்குச் சொந்தமானது. அரசர்கள் அவ்வளவு பெருமையும் உரிமையும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.

இச்சிறப்பிற்குரிய அரச குடும்பத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள பானகல்லு கிராமத்திற்குரிய அரச குடும்பத்தில் பிறந்தவர்தான் பானகல் அரசர். இவரது பெயர் பி. இராமராய நிங்கர் என்பதாகும்.

பானகல் அரசரின் மூதாதையர்கள் பானகல்லு என்ற கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து காளாஸ்திரியில் குடியேறியபின், காளாஸ்திரியில் தான் பானகல் அரசர் பிறந்தார்.

இவர் தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்தார். சமஸ்கிருதத்தில் நன்கு புலமை பெற்றிருந்தார்.

இவர் பிறந்த நாள் 9.7.1866. இவர் பின்னாளில் சென்னை இராஜதானியின் பிரதம அமைச்சராக (Premier of Madras Presidency) பொறுப்பேற்று புரட்சிகரமான சாதனைகளை நிகழ்த்தி சரித்திரம் படைத்தார். சாகாச் சரித்திரம் ஆனார்.
அரச குடும்பத்தில் பிறந்து, அடிமைகளாய் – உரிமை இழந்தவர்களாய் – நாடோடி ஆரிய இனத்தின் சுரண்டல் கொடுமையைச் சுகமாக ஏற்றிருந்த திராவிடர் இன மக்களுக்கு உரிமை இரத்தத்தை உடலில் செலுத்தி, உணர்ச்சியூட்டி அவர்களை உயர்த்திய உத்தமர்.

பானகல் அரசரின் ஆட்சிச் சிறப்பை- ஆளுமை நெருப்பை- அதனால் விளைந்த திராவிடர் செழிப்பைக் கண்டோம்.
டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய முப்பெரும் மேதைகள் – திராவிடர் இனத்தை வாழ்விக்க வழிகண்ட வரலாற்று நாயகர்கள் – இணைந்து உருவாக்கிய அமைப்புதான் – 1916இல் உருவான தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இதன் சிறப்புப் பெயர் நீதிக்கட்சி. இந்த அமைப்பு ‘ஜஸ்டிஸ்’ என்னும் பெயரில் பத்திரிகை ஒன்று நடத்தியதால் நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களான திராவிடர் இன மக்கள் கல்வி மற்றும் அரசு உத்தியோகங்களில் உரிய விகிதாச்சார அளவில் சட்டப்படியான வாய்ப்பைப் பெறப் பாடுபடுவது என்ப தேயாகும்.
நீதிக்கட்சி தொடங்கு வதற்கு அடித்தளமிட்ட முதல் சிறப்புக் கூட்டம் 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் அன்று சென்னை வேப்பேரி எத்திராஜுலு (முதலியார்) இல்லத்தில் நடைபெற்றது.

நீதிக்கட்சியின் கொள்கை விளக்க அறிக்கை பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்க அறிக்கை” (The Non-Brahmin Manifesto December – 1916) என்ற பெயரில், புதியதோர் வரலாற்றை திராவிடர் இனத்து மக்களுக்கு வழங்கிடும் புகழ்மிக்க புரட்சிகர அறிக்கையாக வெளியானது.

மாண்டேகு – செம்ஸ்போர்டு வழங்கிய இரட்டை ஆட்சித் திட்டத்தின் கீழ் நீதிக்கட்சி 1920ஆம் ஆண்டு தேர்தலை முதன்முதல் சந்தித்து – வெற்றியும் பெற்று சென்னை இராஜதானியில் திராவிடர் ஆட்சியை நிறுவியது.

நீதிக்கட்சியின் தந்தை என்ற பெருமைக்குரிய சர்.பிட்டி தியாகராயர் அவர்களை ஆங்கிலேயக் கவர்னர் லார்டு வெல்லிங்டன் முதலமைச்சராகப் பொறுப்பேற்க அழைத்தார். தான் முதலமைச்சராக விரும்பவில்லை என அறிவித்து கடலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் திரு.ஏ. சுப்பராயலு (ரெட்டியார்) அவர்களை முதலமைச்சராக்கினார்.

இந்திய அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்திட்ட- மக்கள் பணியே மகத்தான பணி என்று வாழ்ந்திட்ட வணக்கத்திற்குரிய முதல் மனிதர் சர்.பிட்டி தியாகராயர் ஆவார்.

அந்த வரிசையில் இரண்டாமவராக ஏன், இறுதி மனிதர் என்றே கருதிடும் ஆங்கிலேய கவர்னரால் இரண்டு முறை (வெவ்வேறு காலகட்டங்களில்) சென்னை ராஜதானிக்கு முதல்வர் பொறுப்பேற்க (Premier) அழைத்தும் பதவியைவிட மானமுள்ள சமுதாயமாக திரா விடர் சமுதாயத்தை மாற்றும் தொண்டு என்ற மாபெரும் பணி என்று வாழ்ந்து காட்டிய புதிய வரலாற்றுக்குப் புகழ் சேர்த்த தந்தை பெரியார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்ற திரு.ஏ. சுப்பராயலு (ரெட்டியார்) அவர்கள் ஆட்சி பெறுப்பேற்ற சில மாதங்களில் உடல் நலம் குன்றிய நிலையில் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் திரு.பி. இராமராய நிங்கர் எனும் பெயர் கொண்ட பானகல் அரசர் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1921 முதல் 1926 வரை முதலமைச்சராக இருந்த பானகல் அரசர் நீதிக்கட்சியின் கொள்கை வழிநின்று ஆற்றிய தொண்டுகள் ஏராளம். அவற்றில் சில இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

நீதிக்கட்சியின் சாதனைகள்

பார்ப்பனரல்லாதார் என்பவர்கள் யார் என்பதற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி – வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வருவதற்கான அடிப்படையை உருவாக்கினார்.

பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமையில்லை என்றிருந்த தடையை அரசாணை எண்.108 சட்டம் (legislative) (நாள்: 10.05.1921) மூலம் நீக்கி பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினார்.

1921 ஆகஸ்ட் 16ஆம் நாள் எல்லாச் சமூகத்திற்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தார்.

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக் குழு ஒன்று அமைத்து அதன் மூலம் அனைத்து சமூக மாணவர்களும் கல்லூரிப் படிப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசாணை எண்: 636 சட்டம் (கல்வி) நாள்: 20.8.1922 மூலம் உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக பார்ப்பனர் இனத்து மாணவர்களே படித்திடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை பார்ப்பனரல்லாதார்க்கு 60% பார்ப்பனர்களுக்கு 40% என வரையறை செய்து அரசாணை எண்.1880 சட்டம் (கல்வி) (நாள்: 20.05.1922) ஒன்றைப் பிறப்பித்தார். பார்ப்பன ஏகபோகக் கொள்ளைக்கு முடிவு கட்டினார்.

அரசாணை எண்: 817 சட்டம்(பொது) (நாள்: 25.03.1922) மூலம் பஞ்சமர் – பறையர் என்று தொல் திராவிடர் குடியினரை அழைக்கும் – எழுதும் நிலைக்கு முடிவுகட்டி, தமிழில் “ஆதிதிராவிடர்” என்றும் தெலுங்கில் “ஆதி தெலுங்கர்” என்றும் அழைத்திட – எழுதிட ஆணையிட்டார்.

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பட்டியலை அனுப்பும்போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்று அரசாணை எண்: 205 சட்டம் (கல்வி) (நாள்: 11.12.1924) ஒன்றைப் பிறப்பித்தார்.

முதன்முதல் சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை நிறுவிய பெருமைக்குரியவர் பானகல் அரசரே ஆவார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக பானகல் அரசர் காலத்திலே தான் அடிப்படைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் பானகல் அரசர் ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. அரசாணை எண்: 29 சட்டம் (legislative) (நாள்: 27.01.1925)

அரசு அலுவல்களுக்கு அந்தந்த துறையினரே நியமனங்கள் செய்து வந்தனர். பெரும்பாலும் உயர் ஜாதியினரே இருந்த நிலையில் அவர்களுக்கே வாய்ப்பு கிடைத்தது. பனகல் அரசர் ஆட்சிக்கு வந்தவுடன் நியமனங்களை ஒருமுகப்படுத்த (Staff Selection Board) “அலுவலர் தேர்வு வாரியம்” அமைத்தார். இதுவே இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பணியாளர் தேர்வு வாரியம் ஆகும். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும் முன்னோடி அமைப்பு இது. வகுப்புரிமை ஆணை அமலுக்கு வந்த பின் இதன் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு 1929ஆம் ஆண்டைய சென்னை சர்வீஸ் கமிஷன் சட்டம் ஏற்பட்டது. மேன்மைமிகு இந்திய கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்தார். அரசு ஆணை எண் 484 சட்டம் (லெஜிஸ்லேடிவ்) (18.10.1929) இதைக் குறிப்பிடுகிறது.

பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப் பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன ஜாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25 நிதி உதவிகள் (ஸ்காலர் ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற ஜாதியினரிடமிருந்து பாதுகாப்பு – அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை, இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டது.

மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப் பட்டார்.

கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக்கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமை யாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

பி அண்டு சி மில்லின் வேலை நிறுத்தத்தின் விளை வுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப் பட்டன.
தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற – மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறைச் செலவுகளை ஏற்றல். சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.

மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

பானகல் அரசர் நிறைவேற்றிய மேற்கண்ட சட்டங்கள்தான் தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது என்பதோடு – இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமை ஏற்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆணிவேருமாகும் என்றால் அது மிகையாகாது.

நீதிக்கட்சியின் சார்பில் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு கோவை ஜில்லா மாநாடாக- ஒப்பனைக்காரத் தெரு நாடக மேடையில் 1917 ஆகஸ்ட் 19ஆம் நாள் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் அன்றைய நாளில் இம்பீரியல் கவுன்சில் மெம்பராக இருந்திட்ட திரு.பானகல் அரசர் ஆவார். இந்த மாநாட்டில் அவரது எழுச்சி உரை திராவிடர் இனத்து மக்களின் சமூகநீதிச் சாசனமாகும்.

பானகல் அரசரின் மறைவு 1928 டிசம்பர் 15 அன்று திடீர் உடல்நலக் குறைவால் நிகழ்ந்தது. சென்னை தியாகராயர் நகரில் பானகல் அரசருக்குச் சிலை வைத்து – பானகல் பூங்காவும் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பானகல் அரசர் காலமானபின் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தியின் தலைப்பு

“மறைந்தார் நம் அருமைத் தலைவர்!
எனினும் மனமுடைந்து போகாதீர்!”

பெரியார் தனது இரங்கல் செய்தியில் ஒரு இடத்தில் குறிப்பிடும்போது,
“நாயர் பெருமான் அவர்களும் இதே மாதிரி நெருக்கடியான சமயத்தில் தேசம் விட்டுத் தேசம் போய் உயிர் துறந்தார்.
தியாகராய வள்ளலும் இதேபோல் இறந்தார்.

பானகல் வீரரும் அவர்களைப் பின்பற்றி நடந்தார். ஆனால் நாயர் பெருமான் காலமானவுடன் மக்கள் கண்ணிலும் மனதிலும் தியாகராய வள்ளல் தோன்றினார். அதுபோலவே தியாராய வள்ளல் மறைந்தவுடன் நமது பானகல் வீரர் தோன்றினார். பானகல் வீரர் மறைந்த பிறகு யாரும் தோன்றக் காணோம். அவர் மறைந்த பிறகு சந்றேறக் குறைவாக இரவும் பகலுமாக 192 மணி நேரம் – லட்சக்கணக்கானவர்கள் காலஞ்சென்ற தலைவரைப்போல் ஒரு தலைவரைத் தேடித்தேடி களைத்தாய்விட்டது. இன்னமும் ஒருவரும் புலப்படவில்லை. இது ஒன்றே நம் பானகல் வீரர், ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது.”

தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி குறிப்பிட்டுள்ள திலிருந்து பானகல் அரசர் – பானகல் வீரர் வாழ்வும் தொண்டும் நம்மினத்திற்கு எந்த அளவிற்குப் பயன் தந்தது என்பதும், அவரது மறைவும் இழப்பும் யாரும் நிரப்ப முடியாத இடமென்பதும் அறிந்திடும் நிலையில் அப்பெரும் வரலாற்று நாயகர் பானகல் அரசர் பிறந்த நாளில் (9.7.1866) சமூகநீதி

நிலைக்க – திராவிடம் வெல்ல சூளுரைப்போம்!

வாழ்க பானகல் அரசர்!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:23 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அன்பழகன், பானகல் அரசர்

சனி, 9 ஜூலை, 2022

பானகல் அரசர் - சமூகநீதிக்கான வரலாற்று நாயகர்



   July 09, 2022 • Viduthalai

1866ஆம் ஆண்டு, ஜூலை 9 - பெரியார் மண்ணான தமிழ் நாட்டில் அவர் தோன்றிய நாள். ஞாயிறு மலர் வாசக அன்பர்களின் கைகளில் தவழும் இன்றைய நாள் ஜூலை 9 (2022) அந்த வரலாற்று நாயகர் பிறந்த நாள் என்பது வியப்புக்குரிய சிறப்பல்லவா? நான்கே வார்த்தைகளில் - ‘ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர்‘ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா தனது நூல் ஒன்றில் பானகல் அரசரைப் போற்றிப் புகழ்ந்து உள்ளார். ஒன்று சொன்னாலும், நன்று சொன்னார் ஆசிரியர்.

மாணவப் பருவம்:

பானகல் அரசர் 9.7.1866ஆம் நாளன்று காளஹஸ்தியில் பிறந்தார். அவருடைய மூதாதையர்கள் பானகல்லு என்னும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் “பானகல் அரசர்” என்று அழைக்கப் பட்டார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் பானகல்லு. பானகல் அரசரின் இயற்பெயர் ராமராய நிங்கார் என்பதே ஆகும். சென்னை தியாகராய நகரில் உள்ள பானகல் பூங்கா இவரது பெயரா லேயே விளங்கி வருகிறது. இளம் வயதி லேயே வீட்டில் தெலுங்கையும் சமஸ் கிருதத்தையும் கற்றுக் கொண்டவர் தனது 17ஆவது வயதில் தான் ஆங்கிலத்தைக் கற்கத் தொடங்கினார். சென்னை திரு வல்லிக்கேணியில் உள்ள இந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தவர், மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1892ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

பொது வாழ்வும் சமூகப் பணிகளும்:

கல்லூரி வாழ்க்கைக் காலத்திலேயே பொது மக்களுக்குச் சேவை செய்யும் ஆர்வம் ஏற்பட்டது அவருக்கு. முற் போக்கு இயக்கங்கள் பலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். படிப்பு முடிந்ததுமே சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். சென்னை பல்கலைக் கழகத்தில் முக்கியமான நிர்வாகப் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. கல்வி சார்ந்த பல சீர்திருத்தங்கள் அவரால் ஏற் பட்டன. அவருடைய ஆலோசனைக ளுக்கு பல்கலைக்கழகம் மதிப்பளித்தது.

இந்தியாவின் ஒன்றிய நாடாளு மன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக நீடித்தார். திராவிடர் சங்கத்தில் இணைந்தார். பார்ப்பனரல்லா தார் இயக்கத்திலும் பணியாற்றினார்.அவருடைய  தகுதியாலும் திறமையாலும் முன்னேறி பல பிரமுகர்களின் நன் மதிப்பைப் பெற்றார். அவரது ஒழுக்கமும், கண்ணியமும், நன்னடத்தையும் பலரை யும் கவர்ந்தன. முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரும்பாடு பட்டார். நலி வுற்ற மக்களின் நல்வாழ்வுக்காக அர சாங்கம் தனியாக சில சிறப்புத் துறைகளை அமைக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார்.

அஞ்சாநெஞ்சத்துடன் போராட்டங்கள்:

டாக்டர் டி.எம்.நாயரும் சர்.பி.தியாக ராய செட்டியாரும் 1917ஆம் ஆண்டு துவக்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்து டன் இணைந்து அரும் பணியாற்றினார். இதனால் பல அவமானங்களையும் இன் னல்களையும் அவர் அனுபவிக்க நேர்ந் தது. ஆனால் சற்றும் சோர்வடையாமல், மனம் தளராமல், ஓர் உண்மையான ஜனநாயக பாதுகாவலராகவே இயங்கி பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் “ராஜா சாஹேப்” என்று வாஞ்சையுடன் அழைக் கப்பட்ட பானகல் அரசர் ராமராய நிங்கார். சமத்துவமும் சமூகநீதியும் அவருடைய உயிர்மூச்சாக இருந்தது? எதிர்ப்புகளைக் கண்டு துவண்டுப் போய்விடவில்லை அவர்.

மாண்ட்ஃபோர்டு சீர்திருத்த விதி முறைகளின்படி பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடுகள் கிடைக்கப் போராடி னார். (S.I.L.F.) என்னும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயற்குழு உறுப் பினராகி பார்ப்பனரல்லாதார் இயக்கத் திற்காக பல நற்செயல்கள் புரிந்தவர் அவர். 1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த முதல் பார்ப்பனரல்லாதார் மாநாட் டிற்கு தலைமை வகிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

பானகல் அரசர் ஆட்சியும் தந்தை பெரியாரும்

பானகல் அரசரின் ஆட்சித் தலைமையைப் போற்றிப் புகழ்ந்து தந்தை பெரியார் கூறியவை, அரசரின் மறைவையொட்டி ‘குடிஅரசு’ வார இதழில் தலையங்கமாக பிரசுரிக்கப்பட்டது. அரசியல் தலைமைக்கே இலக்கணமாக அவர் திகழ்ந்தார் என்பதை உருக்கமான அந்த தலையங்கத்தை இன்று படித்தாலும் புரிந்து கொள்ளலாம்.

பானகல் அரசர் சென்னை அரசாங்கத்தை மட்டுமின்றி தேவைப்பட்ட போதெல்லாம் இந்திய அரசாங்கத்தையும் பார்லிமெண்டையும் கூட மிரட்டி நடுங்க வைத்து வந்திருக்கிறார். பெண்கள் தேர்தல்களில் வாக்களிக்கக்கூடாது என்று இருந்த தடையை ஓர் அரசு ஆணை மூலம் நீக்கியவர் அவர். இதன் மூலம் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெண்கள் 1921ஆம் ஆண்டு முதல் பெற்றார்கள். எல்லா சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் உத்தியோகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிகளில் இடம் பெற்று படிக்க வாய்ப்பளிக்கும் திட்டம் பானகல் அரசரின் முயற்சியால் தயாரிக்கப்பட்டது. இதன் பலனாகத் தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஓரளவுக்காவது இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

வளர்ச்சியும் ஏற்றமும்:

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் S.I.L.F. ‘நீதிக்கட்சி’  (Justice Party) என்று அழைக்கப்பட்டது. பானகல் அரசரின் கட்சிப் பணிகள் தியாகராயரை மிகவும் கவர்ந்தன. 1919 ஆம் ஆண்டு தேர்தலில் பார்ப்பனரல்லாதார் பெருமளவில் வெற்றி பெற்று, திவான் பகதூர் சுப்பராயலு தலைமையில் முதல் அமைச்சரவை அமைந்தது. அவருடைய மறைவுக்குப் பின் பானகல் அரசர் 

முதல் அமைச்சரானார். அவரை ó Premier of Madras Presidency என்று அழைத்தார்கள். 1925ஆம் ஆண்டு தியாகராயர் மறைவைத் தொடர்ந்து பானகல் அரசர் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதே சமயம், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தி லும முன்னணித் தலைவராக விளங் கினார்.

குறிப்பிடத்தக்க சாதனைகள்:

1918ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் திவான் பகதூர் பட்டம் அளித்து மாநில அரசு அவரை கவுரவித்தது. 1922ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் ‘ராஜா’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டு “பானகல் ராஜா” ஆனார். 1926ஆம் ஆண்டு K.C.I.E.  என்னும் உயர்ந்த பதவி அளிக் கப்பட்டது.

‘ராஜா சாஹேப்‘ சீர்படுத்தாத துறை ஏதுமில்லை என்றால் மிகையாகாது. தனது ஒவ்வொரு செயலிலும் தன் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவர் அவர். அவரது தொடர் முயற்சிகளால் கிராமங்களில் மருத்துவ வசதி பெருகியது. சுகாதாரத் துறை வியக்கத்தக்க வளர்ச்சி கண்டது. கிராமங்களில் மருத்துவர்களை ஆர்வமுடன் பணிபுரியச் செய்ய அவர் களுக்கு ஊக்கத் தொகை கிடைக்க வழி வகுத்தார். தகவல் தொடர்பு வசதிகளும் போதுமான அளவு தண்ணீரும் இல்லாத ஊரகப் பகுதிகளில் அவை தடையின்றி கிடைக்க பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்.

ஆதி திராவிடர்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர் பானகல் அரசர். அவரு டைய முயற்சியால் பல சலுகைகள் பெற்ற அந்த வகுப்பினரின் வாரிசுகள் இன்றும் அவருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். இந்து அறநிலையச் சட்டம் அவருடைய மிகப்பெரிய சாதனை. இதன் மூலம் முறை கேடுகளும் லஞ்ச லாவண்யங்களும் வேறு பல ஊழல்களும் அடியோடு அழிந்தன.

குறையாத செல்வாக்கு:

1926ஆம் ஆண்டு தேர்தலில் பார்ப் பனரல்லாதார் கட்சி தோல்வியுற்றது. ஆனால் பானகல் அரசரின் செல்வாக்கு குறையவில்லை. புகழும் மங்காமல் இருந்தது. துவண்டு விடாமல் போராடி அக்கட்சிக்கு மீண்டும் உயிரூட்டியவர் பானகல் அரசர். எல்லோருக்கும் இனிய நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசக ராக விளங்கிய மாமனிதர் 1928ஆம் ஆண்டு, டிசம்பர் 16ஆம் நாளன்று மறைந்தார். இனிவரும் தலைமுறைகள் யாவும் அவருடைய உன்னதமான, கொள்கைகளைப் பின்பற்றி அவரைப் போலவே வீழ்ந்தாலும் உடைந்துப் போகாமல் நிமிர்ந்து நின்று சமத்துவத் திற்காகவும் சமூகநீதிக்காகவும் போராடப் போது உறுதி.

பானகல் அரசரின் தலைமையிலான நீதிக்கட்சியால் தாழ்த்தப்பட்டோரின் இழிவான பெயர்கள் நீக்கப்பட்டன. ‘பஞ்சமர்’ என்ற பெயர் நீக்கப்பட்டு ‘ஆதி திராவிடர்’ என்ற பெயர் மாற்றம் அவரு டைய தீவிர முயற்சியால் ஏற்பட்டது. 1922ஆம் ஆண்டு இந்த மாற்றம் அரசு ஆணை மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

பானகல் அரசர் காலத்தில் நீதிக்கட்சி ஆட்சியின்  சாதனைகள் - சிறப்புப் பணிகள்

1. துப்புரவுப் பணியாளர் வகுப்பிற்கு உதவ கூட்டுறவுச் சங்கங்கள்.

2. தாழ்த்தப்பட்டோருக்கு பொதுத் துறையில் உரிய இடங்கள்.

3. நலிந்த சமூகத்தினருக்கு பணி உயர்வு மற்றும் உயர் பதவி நியமனங்கள், வீட்டு மனைகள், சாலை வசதிகள், குடியிருப்புகள், புதிய பள்ளிகள், அவர்களுடைய நலனுக்காகப் பணி புரிய லேபர் கமிஷனர் (தனி அலுவலர்) நியமனம்.

4. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் ஜாதி வாரி கணக்கெடுப்பு.

5. குறவர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள்.

6. ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள், கடன் வசதிகள், விவசாய நில ஒதுக்கீடு.

7. மீனவர் நலனுக்கென தனி அலுவலர் நியமனம்.

8. பி அண்ட் சி மில் - பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள்.

9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.

10. இரவுப் பள்ளிகள் / கிராமங்களில் புதிய பள்ளிகள்.

மேற்கண்ட எல்லா சாதனைகளிலும் பானகல் அரசருக்கு பங்கு உண்டு. அவரோடு மற்றவர்கள் ஒருங்கிணைந்து பாடுபட்டார்கள் அவற்றுக்காக.

காலம் முழுவதும் அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்த பானகல் அரசரை இன்றைய ‘விடுதலை’ ஞாயிறு சிறப்பு மலர் மூலம் நினைவு கூர்வது நம் எல்லோருக்கும் பெருமை.

மருத்துவ சேர்க்கையில் சமஸ்கிருதமா?

பானகல் அரசரின் காலத்தில் தான் கல்வித் துறையிலும் சமூகத் துறையிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட் டன. ஒரு மாணவன் மருத்துவக் கல்லூரி யில் சேர விரும்பினால் அவனுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற முறை அப்போது நடைமுறையில் இருந்தது. சமஸ்கிருதத்தில் புலமை பெற் றிருந்த பானகல் அரசரே இந்த முறையை உடைத்தெறிந்தார். மருத்துவத் துறை யிலிருந்து ஆங்கிலேயர்களின் ஆதிக் கத்தை அகற்றினார். முதன் முதலாக சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை அமைத்த பெருமையும் பானகல் அரசரையே சாரும். அண்ணா மலை பல்கலைக்கழகம் உருவானதிலும் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பானகல் அரசர் மற்றும் பல பிரமுகர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் 1929-1930ஆம் கல்வியாண்டில் அண்ணா மலை பல்கலைக்கழகம் தோன்றியது. 

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும் பானகல் அரசரின் பல சாத னைகளுள் ஒன்றாகும். கோவில்களின் சொத்தை சூறையாடி வந்த சுயநலக் காரர்களின் கொட்டம் இதன் மூலம் அடங்கியது. பானகல் அரசர் காலத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கியமான நிகழ்வு தாழ்த் தப்பட்ட மக்கள் எல்லாத் தெருக்களிலும் பொது இடங்களிலும் செல்லலாம் என்று அறிவித்த அரசாணை.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:34 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பானகல் அரசர்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

படம் செருகல்

படம் செருகல்
ஓபரா-அமெரிக்க நாத்திகர்
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்
    முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மு...
  • நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்
    வ நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! - தஸ்லிமா நஸ்ரீன் ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்...
  • பொன்மொழி
    தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த்  தோல்வியுறுவான்.   - நெப்போலியன் சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க...
  • ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
    எத்தர்களை  முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் ...
  • மறைந்த அயோத்திதாசர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
    May 20, 2021  • Viduthalai   ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக...
  • பாதர் எனக்கு ஒரு டவுட்?
    😇😇🤔 *மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?* *பாதர் : கேளு மகனே* *மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்...
  • வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2
    டாக்டர் துரை.சந்திரசேகரன் (வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாய...
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங்
      விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயக வாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக்...
  • புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
    பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்.... (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ...
  • கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
    ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! -ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்க...

லேபிள்கள்

  • .சிங்காரவேலர்
  • அக்ரகாரம்
  • அகவிலைப்படி
  • அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
  • அண்ணல் அம்பேத்கர்
  • அண்ணா
  • அந்தணர்
  • அந்தணர் என்போர்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமர்நாத்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்யப்பன்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அழகிரி
  • அழிப்பு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுக்கரசு
  • அன்பழகன்
  • அனுபவம்
  • அனுமதி மறுப்பு
  • ஆ.இராசா
  • ஆ.ராசா
  • ஆக்கிரமிப்பு
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசீவகம்
  • ஆத்மா மறுப்பு
  • ஆதிக்கம்
  • ஆய்வு
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்.
  • ஆரிய பூமி
  • ஆரியம்
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர்கள்
  • ஆன்மீகம்
  • இ.மு. சுப்ரமணியம்
  • இணைப்பு மொழி
  • இந்தி
  • இந்தியா
  • இந்தியா ?
  • இந்தியாவா ?
  • இந்தியாவா?
  • இந்து
  • இந்து மதம்
  • இந்துத்துவா
  • இந்துமத கொடுமை
  • இந்துமதம்
  • இந்துவெறி
  • இயக்கங்கள்
  • இயக்கம்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இராசராசன்
  • இராமச்சந்திரனார்
  • இராமலிங்க அடிகள்
  • இராமன்
  • இராமன் பட எரிப்பு
  • இராமாமிருதம்
  • இராமாயண காலம்
  • இராமாயணம்
  • இராமானுஜர்
  • இராவணன்
  • இழப்பு
  • இறுதிவுரை
  • இனம்
  • உணவு
  • உபநிடதம்
  • உபி
  • உமா மகேஸ்வரன்
  • உமாமகேசுவரனார்
  • உயிர்ப்பலி
  • உயிரிழப்பு
  • உரிமை
  • உரைகள்
  • ஊர்
  • எதிர்வினை
  • எம் பி
  • எரிப்பு
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓபரா
  • ஓமந்தூர் பி. ராமசாமி
  • க.அன்பழகன்
  • கட்சி
  • கட்டைவிரல்
  • கடவுள்
  • கடவுள் சிலை
  • கடவுள் மறுப்பு
  • கடை
  • கருப்புச் சட்டை
  • கருப்புச்சட்டை
  • கரோனா
  • கல்வி
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிதைகள்
  • கழகம்
  • களப்பிரர்
  • கற்பனை
  • கா.சு. பிள்ளை
  • காட்டுவாசி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • கார்த்திகை தீபம்
  • கால்டுவெல்
  • காவிரி
  • கான்சிராம்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கீழ்ப்பாக்கம்
  • கு.வெ.கி.ஆசான்
  • குங்குமம்
  • குடகு
  • குடியரசு இதழ்
  • குண்டுவெடிப்பு
  • குணம்
  • குமுதம்
  • குருக்கள்
  • குழந்தை
  • கேரளா
  • கேள்வி
  • கேள்வி பதில்
  • கேள்விகள்
  • கேள்வியும் பதிலும்
  • கைகள்
  • கைலி
  • கைவல்யம்
  • கொடுமை
  • கொலை
  • கோட்சே
  • கோயில்
  • கோயில்கள்
  • கோல்வால்கர்
  • கோழை
  • சங்கராச்சாரி
  • சட்டம்
  • சதி
  • சந்திராயன்
  • சபரிமலை
  • சமணம்
  • சமதர்மம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி விருது
  • சர்.சி.பி. அறிவுரை
  • சரத் யாதவ்
  • சரஸ்வதி நாகரிகம்
  • சரியா
  • சவர்க்கார்
  • சாகு மகராஜ்
  • சாகு மகாராஜ்
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாமி கைவல்யம்
  • சாலினி
  • சாவித்திரி பூலே
  • சாவு
  • சி.நடேசனார்
  • சிக்கல்
  • சிங்காரவேலர்
  • சித்தர்கள்
  • சித்திரவதை
  • சித்திரை
  • சிதம்பரம்
  • சிந்தனை
  • சிந்து
  • சிந்து – சரஸ்வதி
  • சிலை
  • சிவராஜ்
  • சிவன்
  • சின்னகுத்தூசி
  • சுடுகாட்டிலும் ஜாதி
  • சுப்பராயன்
  • சூத்திரர்கள்
  • செய்குத்தம்பி பாவலர்
  • சேரி
  • சொத்து
  • சௌந்தர பாண்டியனார்
  • டார்வின்
  • டி.ஏ.வி.நாதன்
  • தகுதி
  • தம்மபதம்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்
  • தமிழ் இந்து
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் தேசியம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் வேதம்
  • தமிழறிஞர்
  • தர்மதீர்த்தர்
  • தருமாம்பாள்
  • தலைவர்கள்
  • தளபதிராஜ்
  • தற்கொலை
  • தஸ்லிமா நஸ்ரீன்
  • தாகூர்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • தானம் 
  • திப்பு சுல்தான்
  • தியாகராயர்
  • திராவிடம்
  • திராவிடர் - ஆரியர்
  • திருக்குறள்
  • திருட்டு
  • திருப்பதி
  • திருமணம்
  • திருமா
  • திருவரங்கம்
  • திருவள்ளுவர்
  • திருவாங்கூர்
  • திருவிக
  • தில்லி
  • திலகர்
  • திறமை
  • தினமணி
  • தினமலர்
  • தீ விபத்து
  • தீங்கு
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • துரை.சந்திரசேகரன்
  • தேசியம்
  • தேவதாசி
  • தேவநேயப் பாவாணர்
  • தை
  • தொல்காப்பியம்
  • தொழிலாளர்
  • நம்பிக்கை
  • நம்பூதிரி
  • நரபலி
  • நன்னன்
  • நாகநாதன்
  • நாகரிகம்
  • நாசம்
  • நாராயண குரு
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நாஸ்திகம்
  • நீட்
  • நீதி
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நெரிசல்
  • நேயன்
  • பக்தி
  • பகத்சிங்
  • பகுத்தறிவாளர்
  • பகை
  • பட்டுக்கோட்டை அழகிரி
  • படத்திறப்பு
  • படை எடுப்பு
  • பண்டிகை
  • பண்டிதர்
  • பதவி
  • பதிப்புரிமை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பரமசிவம்
  • பரிதிமாற்கலைஞர்
  • பரிபாலனம்
  • பலி
  • பழங்குடியினர்
  • பனகல் அரசர்
  • பனகால் அரசர்
  • பாதிரியார்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பான்
  • பாரத் ?
  • பாரதம்
  • பாரதமா ?
  • பாரதமா?
  • பாரதி
  • பாரதியார்
  • பால்
  • பாலியல் வன்கொடுமை
  • பானகல் அரசர்
  • பாஜக
  • பிரசாதம்
  • பிராமணப் பெருமை
  • பிராமணர்
  • பிராமணியம்
  • பில்லி சூனியம்
  • புத்த - சமணம்
  • புத்தம்
  • புத்தர்
  • புரட்சி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புலவர் குழந்தை
  • பூசாரி
  • பூசை
  • பூணால்
  • பூணூல்
  • பூதம்
  • பெட்ரன்ட்ரஸ்ஸல்
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண் விமானி
  • பெண்கள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • பெரியார
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேய்
  • பேராசிரியர்
  • பொதுப்பணி
  • பொதுவுடமை
  • பொதுவுடைமை
  • பொப்பிலி அரசர்
  • பொன்மொழி
  • பௌத்தம்
  • மகாத்மா ஜோதி பாஃபூலே
  • மணியம்மை
  • மத வன்முறை
  • மதம்
  • மதமாற்றம்
  • மந்திரமா தந்திரமா
  • மயிலாடன்
  • மயிலை சீனி.வேங்கடசாமி!
  • மருத்துவ மனை
  • மறுப்பு
  • மறைமலை அடிகள்
  • மறைமலையடிகள்
  • மறைவு
  • மன்னர்கள்
  • மன்னராட்சி
  • மனு ஆட்சி
  • மனுதர்மம்
  • மனோன்மணியம்
  • மாணிக்க நாயக்கர்
  • மாநாடு
  • மார்க்ஸ்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மாற்று மதம்
  • மின்சாரம்
  • மின்நூல்
  • மீசை
  • மு.வ
  • முத்துராமலிங்கம்
  • முதல்வர்
  • மூடத்தனம்
  • மூடநம்பிக்கை
  • மேயர் ந.சிவராஜ்
  • மைல்கல்
  • மோகன் பகவத்
  • யுனஸ்கோ
  • ரஞ்சித்
  • ராமர் கோயில்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராஜராஜ சோழன்
  • ராஜாராம் மோகன்ராய்
  • ருத்திரன்.
  • லாலா லஜபதி
  • லெனின்
  • வ.உ .சி
  • வ.உ.சி.
  • வகுப்புரிமை
  • வந்தேறிகள்
  • வர்ணம்
  • வரலாறு
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன்முறை
  • வா உ சி
  • வாஞ்சி
  • வி.பி.சிங்
  • வித்தியாசம்
  • விபச்சாரம்
  • விபத்து
  • விருது
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீழ்ச்சி
  • வெறுப்பு
  • வேத காலம்
  • வேதம்
  • வேப்பமரம்
  • வைக்கம்
  • வைக்கம் வீரர்
  • வைகுண்டர்
  • ஜடாமுடி
  • ஜனநாயகம்
  • ஜனாதிபதி
  • ஜாதி
  • ஜாதி வெறி
  • ஜி. யு. போப்
  • ஜீவனோபாயம்
  • ஜீவா
  • ஜோதிராவ் புலே
  • ஜோதிராவ் பூலே
  • ஸ்மார்த்தர்
  • ஸ்வஸ்திகா
  • ஹிட்லர்
  • Bunch of Thoughts

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (7)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • இந்தியா ? பாரத் ? ஒரு வரலாற்றுப் பார்வை- பேரா.இரவி...
    • ►  ஜூலை (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (70)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (25)
    • ►  மே (12)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2023 (45)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2022 (39)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (10)
  • ►  2020 (73)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (4)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (77)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (68)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (28)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (32)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (16)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (35)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மே (7)
    • ►  பிப்ரவரி (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.