பக்கங்கள்

வியாழன், 9 ஜூலை, 2020

பனகல் அரசர்

பனகல் அரசர் பிறந்த நாள்
தோற்றம்: 09.07.1866 மறைவு: 16.12.1928
 
பனகல் அரசரின் உண்மையான பெயர் பி.ராமராய நிங்கார். இவரின் பூர்வீகம் ஆந்திரப்பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பனகல்லு என்னும் ஊராகும். இருந்தாலும் இவருடைய பெயர் ராஜா ஆஃப் பனகல். இவர் 1866 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவர் 1892ஆம் ஆண்டு மாநில கல்லூரியில் பி.ஏ., (வேதியல்) பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் மற்றும் தெலுங்கில் எம்.ஏ., பட்டம் பெற்றார்.
பம்மல் சம்பந்த முதலியார் இவரது நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நல்ல படிப்பாளி, அறிவாளி, வசதி நிறைந்த ஜமீன்தார், செல்வாக்கு நிறைந்தவர், ஜஸ்டீஸ் பிரமுகர்களில் ஒருவர். இவர் கல்வி, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் அநேக சீரமைப்புகளைச் செய்தார். டிசம்பர் 1920 முதல் ஜூலை 1921 வரை மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியின் சார்பாக அமைச்சராக இருந்தார். ஜூலை 1921 முதல் செப்டம்பர் 1921 வரை பனகல் அரசர் மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்தார்.
இவர் ஆட்சியில் அமலுக்கு வந்த முக்கியமான சட்டத்திற்கு ஹிந்து ரிலீஜியஸ் எண்டோன்மெண்ட் ஆக்ட் என்று பெயர். இவர் கீழ்ப்பாக்கத்தில் காலேஜ் ஆஃப் இந்தியன் மெடிசன் என்ற  வைத்தியமுறைக் கல்லூரி அமைக்க உறுதுணையாக இருந்தார். இவர் நாட்டுக்குச் செய்த பணிகளைக் கவுரவிக்கும் முறையில் பிரிட்டிஷ் அரசு இவருக்கு கே.ஸி.அய்.இ. (ரி.சி.மி.ணி) நைட் கம்பானியன் ஆஃப் இண்டியன் எம்ஃபயர் என்ற விருதை அளித்தது. இவர் டிசம்பர் 16, 1928 இல் இயற்கை எய்தினார்.

சனி, 4 ஜூலை, 2020

அரங்கநாதனும் - கைலியும்!

கேள்வி: லுங்கி (கைலி, சாரம்) கட்டிக் கொண்டு கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு தேவையா?

பதில்:தேவைதான். கோவில் ஒன்றும் கண் காட்சிக் கூடமில்லை. அது புனிதமான வழிபாட்டுக்குரிய இடம்.

'விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ் 14.6.2019, பக்கம் 36

விஜயபாரதத்துக்கு' அவர்கள் நம்புகிற கடவுள்கள்பற்றியோ, கோவில்களின் நடைமுறை கள்பற்றியோ கூட ஒன்றும் தெரியாது போலிருக்கிறது.

அந்த ஏட்டுக்கு நாம் பதில் சொல்லுவது பொருத்தமாக இருக்காது. அவர்களின் வகையறாவைச் சேர்ந்த கல்கி'யின் மூலம் பதில் சொன்னால்தான் சரிபட்டு வரும்.

12.9.1982 கல்கி'யில் பின்கண்ட செய்தி வெளி யாகி உள்ளது.

"ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் அர்ஜுன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் சன்னதி ஒன்று இருக்கிறது.

அமாவாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் துலுக்க நாச்சியாருக்காக உற்சவமூர்த்தி ஸ்ரீரங்க நாதருக்கு திருமஞ்சனம் செய்து, கைலி கட்டி அலங்கரிக்கிறார்கள்.''

மறுபடியும் சொல்லுகி றோம் - மீண்டும் அடித்துச் சொல்லுகிறோம்!

இதனை வெளியிட்டு இருப்பது சாட்சாத் கல்கி' இதழே! கருப்புச் சட்டை யோடு கல்கி'யையும் இணைத்துக் கதை கட்ட முடியாது அல்லவா!

இப்பொழுது சொல் லுங்கள். இவர்களில் காத்தல் கடவுளான மகாவிஷ்ணுவான ஸ்ரீரங்கம் அரங்கநாதனுக்கு அமா வாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரத்தில் கைலி கட்டி அழகு பார்க்கலாமாம்.

அதற்கு அவாளின் ஆக மத்தில் எல்லாம் அனுமதி உண்டு.

ஆனால், அரங்கநாத னின் பக்தர்கள், அந்த அரங்கநாதனைத் தரிசிக்கக் கைலி கட்டிக்கொண்டு போகக்கூடாதாம். இது என்ன இரட்டை அளவுகோல்?

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் துலுக்க நாச்சியார் எங்கு வந்தார்? இதில் மதம் மாறியது அரங்கநாதரா? துலுக்க நாச்சியாரா? விஜயபாரத'ங்களுக்கே வெளிச்சம்!

- மயிலாடன்
- 4.7.19

வியாழன், 2 ஜூலை, 2020

"ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறாரா கணக்கப்பிள்ள" மின்சாரம்




‘தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிற நிலைதான் உள்ளது’ என்கிறாரே வீரமணி’ என்று யாரோ ஒருவர் கேட்டதாகக் கூறும் ஒரு கேள்விக்கு ‘துக்ளக்‘ ஏட்டில் (10.6.2020) திருவாளர் குருமூர்த்தி அய்யர் பதில் கூற முயற்சி செய்துள்ளார்.
கி. வீரமணி கூறுவது உண்மையானால், ஈ.வெ.ரா. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதுவும் இன்றுதான் பெரியார் மண் ஆகியிருக்கிறது தமிழைப் புறக்கணித்தால் தான் தமிழர்கள் மானம், பகுத்தறிவு ஆகியவை உள்ளவர்களாக ஆக முடியும் என்று தொடர்ந்து அடித்துக் கூறி வந்திருக்கிறார் ஈ.வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய ஈ.வெ.ரா.வின் அந்த உயர்ந்த கருத்துக்களை வீரமணி படிக்கவில்லை என்பது நிச்சயம்’ - என்று எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள். ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறார் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை.
ஆமாம் பெரியாரைப் பற்றி குருமூர்த்திதான் அதிகம் படித்தவர் - பெரியார் பேச்சுக்களையும் எழுத்து களையும் அப்படியே கரைத்துக் குடித்தவர், பாவம் வீரமணிக்குப் பெரியாரைப் பற்றி என்ன தெரியும் - நம்புங்கள்!
எவ்வளவு தின’வெட்டு’ இருந்தால் இந்தத் திரிநூல் களுக்கு இப்படியெல்லாம் எழுதத் ÔதுணிவுÕ வரும்?
திராவிடர் கழகத் தலைவர் ஒன்றைச் சொல்லி யுள்ளார் என்று குறிப்பிட்டால், அதை எங்கே சொன் னார், எப்பொழுது சொன்னார் என்று கூறும் குறைந்த பட்ச அறிவு நாணயம் இருக்க வேண்டாமா?
அதே போல, பெரியார் சொன்னார் என்று ஒன்றை சொன்னால் எப்பொழுது சொன்னார்? எங்கே சொன் னார்? என்று கூறும் அடிப்படை யோக்கியத்தன்மை இருக்க வேண்டாமா?
இந்தப் பார்ப்பனர்தான் இப்படியெல்லாம் எழுது வதை - சொல்லுவதைப் பார்க்கும் பொழுது, சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள் கூறும் எடுத்துக் காட்டுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
கும்பகோணத்தில் பார்ப்பான் குட்டையில் விழுந் தான் என்ற கதையாக அல்லவோ இருக்கிறது. இதோ சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள்:
“ஒரு நாள் உபய வேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து குளப்படிக்கட்டில் வழுக்கி விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்க, தன் பணியாளிடம் பின்வருமாறு சொல்லியனுப்பினார் ஒரு நிலக்கிழார்.
“திருக்குடந்தை திருலோக தாத்தாச்சாரி, திருத்தங்கல் திருநின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்கத் திருக்கோவிலுக்குவந்து திருக்கோவில் வளாகத்தில் இருக்கக்கூடிய திருப்படிக்கட்டுகளில் இறங்கி திருத் துழாய் பிடுங்கிறச்சே, திருக்குளத்துப் பாசிகள் வழுக்கி திருக்குளத்தில் விழுந்து திருக்காலில் ஹீன மடைந்தார்னு போய்ச் சொல்லிடு” என்றார்.
கும்பகோணத்து நிலக்கிழாருக்கும் இப்படி கூறும் குருமூர்த்திகளுக்கும் என்ன தொடர்போ!
தமிழைப் பற்றி தந்தை பெரியார் என்ன சொன்னார் எந்தப் பொருளில் சொன்னார் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அதைப் பார்ப்பனர்கள் சொல்லத் தேவையில்லை.
தமிழை நீஷப்பாஷை என்றும், நீஷப் பாஷையை பூஜை வேளையில் ‘பெரியவாள்’ (காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) பேச மாட்டாள் என்ற நிலையில் உள்ளவர்கள் தந்தை பெரியார் தமிழைப் பற்றிச் சொன்னதுபற்றிப் பேசிட அருகதை யற்றவர்களே (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - ‘உண்மை’ 1,15-12-1980)
‘தீக்குறளைச் சென்றோதோம்‘ என்ற ஆண்டாளின் பாடலுக்குத் தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று சொன்ன ஓர் ஆசாமியை லோகக் குரு என்று கூறிக் கூத்தாடும் குருமூர்த்தி கூட்டம் எந்த முகத்தைக் கொண்டு தந்தை பெரியாரை விமர்சிக்கக் கிளம்பி யிருக்கிறது?
ஆண்டாள் கூறிய ‘குறளை’ என்ற சொல்லுக்கு கோள் சொல்லுதல் என்னும் பொருள்கூடத் தெரி யாதவாள் எல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்தவாளா!
அவருக்கா தெரியாது? அண்டத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுவார்களேயானால், அவர் ஒரு Ôவிஷமி’ என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று பொருள்.
திரு என்ற அழகிய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்து வதற்கு ‘தமிழ்த் தாத்தா’ என்று கூறப்படும் உ.வே. சாமிநாதய்யர், இரா. இராகவ அய்யங்கார்கள் உமிழ்ந்த வெறுப்புணர்ச்சி ஒன்று போதாதா? (முனைவர் சாரதா நம்பி ஆரூரான் எழுதிய “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்ÕÕ) .
கரூர் அருகே திருமலை முத்தீஸ்வரர் கோயில் குட முழுக்கு தமிழில் நடந்ததால் (9.9.2002) அதனைக் கண்டித்தவர்தானே காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி (இந்தியா டுடே 2.10.2002).
திருக்குறள் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு என்று சொன்னவரும் சாட்சாத் இந்த ஜெயேந்திரர்தான் (‘தினத்தந்தி’ 15.4.2004)
கேள்வி: எல்லா உள்ளாட்சி அலுவலகங்களிலும் இனி ‘தமிழ் வாழ்க! என்ற நியான் விளக்குகள் வைக்கப் படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன?
பதில்: இதனால்தான் தமிழ் வளரும் என்றால், அதைவிட தமிழுக்குக் கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்கல்ல. நியான் விளக்குக் காண்டிராக்ட் எடுப்பவர் வாழ; அது வழி செய்யும் அது போதுமே! (‘துக்ளக்‘ 19.5.2010 பக்கம் 25)
தமிழ்மீது ‘துக்ளக்‘கின் வயிற்றெரிச்சல் இதுதான்.
இந்த யோக்கியதை உள்ள பார்ப்பனர்கள் தந்தை பெரியார் தமிழைப் பழித்து விட்டார்; கேவலமாகக் கூறி விட்டார் என்று பரப்புரை செய்வது - தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி எரிமலையைத் தூங்காமல் விழிக்கச் செய்து விட்டுச் சென்று விட்டாரே என்ற ஆத்திரத்தில் அலை மோதலும் - மொத்துதலும்தான்
தமிழ்மீது தந்தை பெரியாருக்கு வெறுப்பா - அல்லது புராணச் சகதியிலிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கறையா?
தந்தை பெரியார் உருவாக்கிய குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை போன்றவற்றின் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே தந்தை பெரியார் தமிழ்மீது அக்கறை கொண்டவர் என்பதற்கு
தமிழ்பற்றி தந்தை பெரியார் கருத்தென்ன?
“முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” (குடிஅரசு 26.1.1936).
“தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தை பல முறை சொல் லியிருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி- ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்கு வெறுப்பில்லை” (விடுதலை 1.12.1970).
தமிழ்மீதான தந்தை பெரியாரின் பார்வை இதுதான்! தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் அவரே! அதைத்தான் இப்பொழுது ‘துக்ளக்‘ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகளும் கடைப்பிடித்தே தீர வேண்டிய கட்டாயம் - அரசே சட்டரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள நிலை.
தமிழில் பெயர் சூட்டுதல் என்ற புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவர் அவர்தானே! ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர - தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்ட முடியுமா?
தமிழர் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழிலே நடத்தும் நிலையை நிறுவியவர் தந்தை பெரியார்தானே!
இந்த நிலையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிற நிலைதான் உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளதாகவும், தமிழைப் பற்றி பெரியார் சொன்னதையெல்லாம் வீரமணி படிக்கவில்லை என்றும் குடுமி குருமூர்த்தி உளறிக் கொட்டியிருக்கிறார்.
தந்தை பெரியாரைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் எந்த அளவு படித்திருக்கிறார்- அறிந்து இருக்கிறார் - தந்தை பெரியாரிடம் பாடம் படித்திருக் கிறார் என்பதற்கு பார்ப்பனக் குருமூர்த்திகளின் சான்று பத்திரம் தேவையில்லை. இதை உலகம் அறியும்.
கடைசியாக ஒன்று: தந்தை பெரியார் பற்றி யாரோ அனாமதேயங்கள் எழுதுவதையெல்லாம் போட்டு நிரப்பும் குப்பைத் தொட்டியாக ‘துக்ளக்‘ ‘அவதாரம்‘ எடுத்திருக்கிறது.
அனாமதேயங்களுக்குப் பரிவட்டம் கட்டி தந்தை பெரியாரைப் பற்றித் தூற்றச் செய்யலாம் - அதற்கு மலிவாகவும் தமிழர்களில் ஆட்களும் கிடைப்பார்கள்.
நாங்கள் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காஞ்சி மடத்திலேயே வளர்ந்து முக்கியப் பொறுப்புகளிலும் அமர்ந்து Ôஅவனன்றி ஓரணுவும் அசையாதுÕ என்று சொல்லும் அளவுக்கு அனைத்திலும் அத்துப்படியானவர் சங்கரராமன் (அவர்தான் வரதராஜ பெருமாள் முன்னிலையில் பட்டப் பகலில் கொல்லப் பட்டார். இந்த வழக்கில்தான் ‘லோகக் குரு’ காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி 61 நாள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார்).
அந்த சங்கரராமன் சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் வண்டி வண்டியாக ‘ஜெகத்குரு ஜெயேந்திரரின் வண்டவாளங்களை எழுதித் தள்ளினாரே - அவற்றை எல்லாம் மக்கள் மத்தியில் கொட்ட வேண்டுமா? (ஊரே நாறிப் போய் விடும்) எப்படி வசதி? குருமூர்த்திகள் Ôகுஸ்திÕக்கு வருவார்களா? எங்கே பார்ப்போம்!

இராசராச_சோழனின் பொற்கால ஆட்சி !



பரவலாக வரலாற்றை நன்கறிந்தவர்கள் ராசராச சோழனை தெலுங்கன் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொல்டி என்பதே இதனுடைய ஆழமான அர்த்தமுறை. ராசராச சோழன் எப்படி தெலுங்கன் என்பதனை நாம் இந்த கட்டுரையின் கடைசி வரிகளில் பார்ப்போம். எல்லா மாமன்னர்கள் போலவும் தமிழ் மன்னர் என்று சொல்லப்படும் சத்திரிய குல வம்சத்தை சார்ந்த ராசராச'னும் பல பொண்டாட்டிகள் மற்றும் வைப்பாட்டியுடன் உடன் அந்தபுரத்தின் பிடியில் சிக்கியிருந்தார் என்பது தனிக்கதை . பின்னென்னா ? மன்னர் எனறால் அந்தபுரம் இல்லாமலையா இருக்கும் ? வரலாற்றை நோண்டி பார்க்கும்போது பல மன்னர்களின் வாழ்கை அந்நபுரத்திலே கழிந்துதான் போயிருக்கிறு. இங்கு வைப்பாட்டியை பற்றி பேசினால் பல கூமுட்டை தமிழ்த்தேசியவாதிகள் கலைஞர் ஏன் மூன்று பொண்டாட்டி கட்டினார் என்று கேள்வி எழுப்புவார்கள். குறிப்பாக இந்த கேள்வியை எந்த தமிழ்த்தேசியவாதிகள் கேட்பார்கள் என்றால் ? ஈழத்தில் பிணத்தை வைத்து இங்கு அரசியல் செய்யும் சாமான் என்கிற டோபர் ஆமைக்கறிகாரனும் அவருடைய ஆளுமையின்கீழ் வரும் விசிலடித்தான் குஞ்சிகளான அவனுடைய தம்பிமார்களும்தான் இதுபோல ஒவ்வாத அதாவது பொருந்தாக கேள்வியை கேட்டு பையத்தியகாரன்கள் போல கூவிக்கிட்டு இருப்பானுங்க. இவீங்களுக்கு பொண்டாட்டிக்கும் வைப்பாட்டிக்கும் அர்த்தம் தெரியாத ஒருவகையான அழுகிபோன கூமுட்டைகள்.
சரி நாம , ராசராச சோழன் மேட்டருக்கு வருவோம் !
ஆமாம் ராசராச சோழனை பற்றி பேசினால் வழக்குவேற போடுவானுங்கனு வெளியில அரக்கபறக்க பேசிக்கிறானுங்க ? சரி , அவனுங்க நம்ம மீது வழக்காவது போடட்டும் இல்ல வேற எதாவது கூட போடட்டும் . நாம மறைக்கப்பட்ட ராசராச சோழனின் வரலாற்றுக்கு வருவோம் .
ஆமா ராசராசனை பார்ப்பனீய அடிமைனு வேற இங்கே பேசிக்கிறானுங்களோ ?
அடா ஆமா'பா , நீங்க நினைக்கிற மாதிரி மாமன்னர் ரசாராச சோழன் ஆரிய பாரப்பனீயனி்ன் அடிமைதான் . ராசராசன் மட்டுமா பார்ப்பனீயத்தின் அடிமை ? இல்லையில்லை ! ஏறதாழ இந்தியாவை ஆண்ட குறுநில மன்னர்கள் முதல் சிற்றரசர்கள்வரை ஆரிய பார்ப்பனீயத்தின் ஒருவகையான அடிமைகள்தான் .
ஆமா ரஞ்சித் சொன்ன மாதிரி பறையர்களின் நிலத்தை ராசராச சோழன் புடுங்கி கைபர் , போலான் , கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க பரதேசியாக இந்தியாவில் ஊடுருவிய ஆரிய பார்ப்பனீயத்துக்கு கொடுத்தரா ? ஆமா ! ராசராச சோழன் இந்த மண்ணின் பூர்வகுடிகளான ஆதிக்குடிகளான பறையர்களின் நிலங்களை புடுங்கிதான் பார்ப்பனீயத்துக்கு கொடுத்தார் என்று ராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் நமக்கு சாட்சியாக இருக்கிறன. மற்றும் இதற்கான ஆராய்ச்சி தரவுகளும் நம்மிடம் உள்ளன.
அப்படி , ராசராச சோழன் பறையர்களின் நிலங்களை பிடிங்கி பார்ப்பனர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் ? யாருடைய நிலத்தை ராசராச சோழன் பார்ப்பனர்களுக்கு கொடுத்தான் ! பொதுவாகவே பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்க இந்தியாவில் ஊடுருவினார்கள் என்று நமக்கு வரலாற்று சான்றுழ்கள் உள்ளன . அப்படி இருக்கையில் பார்ப்பனர்களுக்கு எப்படி இங்கு நிலம் வந்தது ? சிலர் சொல்லுவார்கள் பார்ப்பனர்கள் உழைத்து நிலங்களை வாங்கினார்கள் என்று . பார்ப்பனர்கள் கோயிலில் மணியாட்டித்தான் பழக்கப்பட்டவர்கள் , இவர்கள் எப்படி உழைத்து நிலங்களை வாங்கி இருப்பார்கள் ?
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வரியும் கிடையாது ! தேவதானம் , இறையிலி , அகரங்கள் , அக்ரகாரங்கள் , சதுர்வேதி மங்கலங்கள் , தனிக் கிராமங்கள் என்று Tatal free Allowance'க 250 ஊர்கள் ராசராச சோழன் பார்ப்பனீயத்துக்கு தானமாகவே கொடுத்துள்ளார். இவ்ஊர்களில் எதாவது குற்றம் நிகழ்ந்தாலும் பார்ப்பனீய காவலன் ராசராச சோழனின் அதிகாரிகள் உள்நுழைய மாட்டார்கள். அது மட்டுமா ? லட்சகணக்கானா ஏக்கர் விவாசய நிலங்களையும் ராசராச சோழன் தானமாக பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளான்.
பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் யாருடைய நிலம் என்று இங்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது , இதற்கான விடயம்தான் பா.ரஞ்சித் சொன்ன விடயம் .
ராசராசன் ஆட்சிக்காலத்தில் 11 வகையான வரிகள் விதிக்கப்பட்டன . இதில் ஆச்சிரியமான ஒரு விஷயம் என்னவெனறால் இதில் 11 வகையான வரிகளில் பார்ப்பனர்கள் ஒருவரியை கூட கட்டவேண்டிய அவசியமில்லை என்பதே நாம் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் .
ராசராசன் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகள் விபரங்கள் இங்கு பார்ப்போம் .
📎 வட்டி நாழி = கழணிக்குத் தண்ணீர் பாய்ச்சிய நேரத்துக்கு வரி
📎 கண்ணாலக் காணம் = பொதுமக்கள் திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி
📎 வண்ணாரப பாறை = துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி
📎 மீன் பாட்டம் = மீனவர் செலுத்திய வரி
📎 குசக காணம் = மண்பாண்டக் குயவர்கள் செலுத்திய வரி
📎 தறி இறை = தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி
📎 ஆட்டு இறை = ஆடு வளர்ப்பவர்கள் செலுத்திய வரி
📎 நல்லெரு இறை = எருது பசு வளர்ப்போர் செலுத்திய வரி
📎 ஓடக் கூலி = ஓடம் செலுத்துவோர் செலுத்திய வரி
📎 ஈழம் பூட்சி = பனைக் கள் இறக்குவோர் செலுத்திய வரி
ராசராச சோழன் ஆட்சிகாலத்தில் மக்கள் இத்தனை வகையான வரிகளை கட்டி நொந்துபோனார்கள் . ராசராச சோழனின் ஆட்சிக்காலத்தை பொற்கால ஆட்சி என்று சொல்லுவார்கள் . ஆமா அவை உண்மைதான் ராசராச சோழனின் ஆட்சி பொற்கால ஆட்சிதான் . இதில் ஒருசின்ன திருத்தம் இது ஒட்டுமொத்த மக்களுக்கான பொற்கால ஆட்சி கிடையாது . மாறாக பஞ்சம் பிழைக்கவந்த ஆரிய பார்ப்பனர்க்கனா பொற்கால ஆட்சி .
சோழ நாட்டு மக்கள் , வரி கொடா இயக்கம் நடத்தியது கூட உண்டு! அதை ஆடுதுறையில் இருக்கும் கல்வெட்டு பேசுகிறது. பிராமணர் முதலிய சதுர்வேதி மங்கல நிலச் சொந்தக்காரர்கள் , இடங்கை 96 வகைச் சாதியினருக்கு இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகள் கூறுகிறது. வரிச் சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் , ஆவணி ஊரில் நமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன . இவ்வளவு கொடுமையான வரிகளை கட்டமுடியாமல் பல மக்கள் கோயிலின் கோபுர உச்சியில் ஏறி தற்கொலை செய்துக் கொண்ட வரலாறும் உண்டு . ஒருவர் ஆட்சியில் மக்கள் வரியை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளுவதுதான் பொற்கால ஆட்சியா ?
உங்க சொந்த நிலத்தில் பாட்டியும் , தாத்தாவும் , அம்மாவும் , அப்பாவும் கழணியில் வேர்க்க விறுவிறுக்க உழைச்சிக் கொட்ட , நேரே வந்து 11 வகயைான வரியை ராசராச சோழ அரசாங்கம் புடுங்கும் . ஆனா பிராமண மானியமாகத் தரப்பட்ட இலவச அரசு நிலத்தில் , தாங்கள் உழைக்காது , உங்களை வைத்தே உழவு செய்து , காசும் பார்த்த பார்ப்பனீயர்கள் , வரி என்று சல்லி காசு கொடுக்க மாட்டார்கள் . இவர்களும் வரியை கொடுக்க மாட்டார்கள் அவர்களும் இவர்களிடம் வரியை கேட்கமாட்டார்கள். இதற்காகதான் ராசராச சோழனின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் பார்ப்பனீய மனுதரும ஆட்சி என்று சொல்லுகிறார்கள் .
ராசரசா சோழன் செய்த கொடுமைகள் என்னென்னா ❓
📎 தமிழக கோயில்களை முழுவதும் பிராமண மயமாய் ஆக்கியது
📎 தேவரடியாள் என்ற இறைப்பாலியல் தொழிலை கட்டாய நிறுவனமாக்கி வரிவு செய்தது
📎 தமிழ் மொழியைச் சிதைத்து அரசு ஆவணங்களைக் கிரந்த மயமாய் ஆக்கிக் குவித்தது
📎 சதுர்வேதி மங்கலம் / தேவதானம்/ அக்ரஹார இலவசங்கள் ! பொதுமக்கள் தலையில் வரி ஏற்றம்
📎 வரி கொடுக்காத ஏழை உழவர்களை "சிவத் துரோகி" என்ற சூழ முத்திரை குத்தி அடிமை ஆக்குதல்
📎 பறைச் சேரி / பறைச் சுடுகாடுகள் உருவாக்கம் செய்தது .
சோழ நாட்டின் வயல்களில் பெரும்பகுதி பெரிய கோவிலுடன் இணைக்கப்பட்டு இருந்தது . மக்களிடம் இருந்து விளைச்சலில் 6இல் 1 பங்கு கோயிலுக்கு வரியாக வசூலிக்கப்பட்டன . கோயில் பண்டாரத்தில் இருந்து கடன் கொடுக்கப்பட்டு 12% வட்டி [கந்து மீட்டர் வட்டி] வசூலிப்பட்டது. வரியும் கட்டி , வட்டியும் கட்டி நொடித்துப்போன மக்கள் வெற்றுக்குடிகள் எனும் கோயில் அடிமைகளாக ஆக்கப்பட்டன. பார்ப்பனர்களும் கடன் வழங்கப்படும் ஆனா அவர்களிடம் வட்டி வசூலிக்கப்பட மாட்டார்கள் .
பாரந்தகச் சோழனின் மகளான அனுபமாவை , கொடும்பாளூர் முத்தரையார் மணந்தார் . அதே கொடும்பாளூர்க் குடும்பத்துப் பெண் பூதி ஆதிச்ச பிடாரியை பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தான். ஒரு கட்டத்தில் சோழ குலமே தெலுங்கு ஆனது. _ஷ#ராசராச_சோழனின்_பொற்கால_ஆட்சி
பரவலாக வரலாற்றை நன்கறிந்தவர்கள் ராசராச சோழனை தெலுங்கன் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொல்டி என்பதே இதனுடைய ஆழமான அர்த்தமுறை. ராசராச சோழன் எப்படி தெலுங்கன் என்பதனை நாம் இந்த கட்டுரையின் கடைசி வரிகளில் பார்ப்போம். எல்லா மாமன்னர்கள் போலவும் தமிழ் மன்னர் என்று சொல்லப்படும் சத்திரிய குல வம்சத்தை சார்ந்த ராசராச'னும் பல பொண்டாட்டிகள் மற்றும் வைப்பாட்டியுடன் உடன் அந்தபுரத்தின் பிடியில் சிக்கியிருந்தார் என்பது தனிக்கதை . பின்னென்னா ? மன்னர் எனறால் அந்தபுரம் இல்லாமலையா இருக்கும் ? வரலாற்றை நோண்டி பார்க்கும்போது பல மன்னர்களின் வாழ்கை அந்நபுரத்திலே கழிந்துதான் போயிருக்கிறு. இங்கு வைப்பாட்டியை பற்றி பேசினால் பல கூமுட்டை தமிழ்த்தேசியவாதிகள் கலைஞர் ஏன் மூன்று பொண்டாட்டி கட்டினார் என்று கேள்வி எழுப்புவார்கள். குறிப்பாக இந்த கேள்வியை எந்த தமிழ்த்தேசியவாதிகள் கேட்பார்கள் என்றால் ? ஈழத்தில் பிணத்தை வைத்து இங்கு அரசியல் செய்யும் சாமான் என்கிற டோபர் ஆமைக்கறிகாரனும் அவருடைய ஆளுமையின்கீழ் வரும் விசிலடித்தான் குஞ்சிகளான அவனுடைய தம்பிமார்களும்தான் இதுபோல ஒவ்வாத அதாவது பொருந்தாக கேள்வியை கேட்டு பையத்தியகாரன்கள் போல கூவிக்கிட்டு இருப்பானுங்க. இவீங்களுக்கு பொண்டாட்டிக்கும் வைப்பாட்டிக்கும் அர்த்தம் தெரியாத ஒருவகையான அழுகிபோன கூமுட்டைகள்.
சரி நாம , ராசராச சோழன் மேட்டருக்கு வருவோம் !
ஆமாம் ராசராச சோழனை பற்றி பேசினால் வழக்குவேற போடுவானுங்கனு வெளியில அரக்கபறக்க பேசிக்கிறானுங்க ? சரி , அவனுங்க நம்ம மீது வழக்காவது போடட்டும் இல்ல வேற எதாவது கூட போடட்டும் . நாம மறைக்கப்பட்ட ராசராச சோழனின் வரலாற்றுக்கு வருவோம் .
ஆமா ராசராசனை பார்ப்பனீய அடிமைனு வேற இங்கே பேசிக்கிறானுங்களோ ?
அடா ஆமா'பா , நீங்க நினைக்கிற மாதிரி மாமன்னர் ரசாராச சோழன் ஆரிய பாரப்பனீயனி்ன் அடிமைதான் . ராசராசன் மட்டுமா பார்ப்பனீயத்தின் அடிமை ? இல்லையில்லை ! ஏறதாழ இந்தியாவை ஆண்ட குறுநில மன்னர்கள் முதல் சிற்றரசர்கள்வரை ஆரிய பார்ப்பனீயத்தின் ஒருவகையான அடிமைகள்தான் .
ஆமா ரஞ்சித் சொன்ன மாதிரி பறையர்களின் நிலத்தை ராசராச சோழன் புடுங்கி கைபர் , போலான் , கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க பரதேசியாக இந்தியாவில் ஊடுருவிய ஆரிய பார்ப்பனீயத்துக்கு கொடுத்தரா ? ஆமா ! ராசராச சோழன் இந்த மண்ணின் பூர்வகுடிகளான ஆதிக்குடிகளான பறையர்களின் நிலங்களை புடுங்கிதான் பார்ப்பனீயத்துக்கு கொடுத்தார் என்று ராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் நமக்கு சாட்சியாக இருக்கிறன. மற்றும் இதற்கான ஆராய்ச்சி தரவுகளும் நம்மிடம் உள்ளன.
அப்படி , ராசராச சோழன் பறையர்களின் நிலங்களை பிடிங்கி பார்ப்பனர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் ? யாருடைய நிலத்தை ராசராச சோழன் பார்ப்பனர்களுக்கு கொடுத்தான் ! பொதுவாகவே பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்க இந்தியாவில் ஊடுருவினார்கள் என்று நமக்கு வரலாற்று சான்றுழ்கள் உள்ளன . அப்படி இருக்கையில் பார்ப்பனர்களுக்கு எப்படி இங்கு நிலம் வந்தது ? சிலர் சொல்லுவார்கள் பார்ப்பனர்கள் உழைத்து நிலங்களை வாங்கினார்கள் என்று . பார்ப்பனர்கள் கோயிலில் மணியாட்டித்தான் பழக்கப்பட்டவர்கள் , இவர்கள் எப்படி உழைத்து நிலங்களை வாங்கி இருப்பார்கள் ?
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வரியும் கிடையாது ! தேவதானம் , இறையிலி , அகரங்கள் , அக்ரகாரங்கள் , சதுர்வேதி மங்கலங்கள் , தனிக் கிராமங்கள் என்று Tatal free Allowance'க 250 ஊர்கள் ராசராச சோழன் பார்ப்பனீயத்துக்கு தானமாகவே கொடுத்துள்ளார். இவ்ஊர்களில் எதாவது குற்றம் நிகழ்ந்தாலும் பார்ப்பனீய காவலன் ராசராச சோழனின் அதிகாரிகள் உள்நுழைய மாட்டார்கள். அது மட்டுமா ? லட்சகணக்கானா ஏக்கர் விவாசய நிலங்களையும் ராசராச சோழன் தானமாக பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளான்.
பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் யாருடைய நிலம் என்று இங்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது , இதற்கான விடயம்தான் பா.ரஞ்சித் சொன்ன விடயம் .
ராசராசன் ஆட்சிக்காலத்தில் 11 வகையான வரிகள் விதிக்கப்பட்டன . இதில் ஆச்சிரியமான ஒரு விஷயம் என்னவெனறால் இதில் 11 வகையான வரிகளில் பார்ப்பனர்கள் ஒருவரியை கூட கட்டவேண்டிய அவசியமில்லை என்பதே நாம் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் .
ராசராசன் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகள் விபரங்கள் இங்கு பார்ப்போம் .
📎 வட்டி நாழி = கழணிக்குத் தண்ணீர் பாய்ச்சிய நேரத்துக்கு வரி
📎 கண்ணாலக் காணம் = பொதுமக்கள் திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி
📎 வண்ணாரப பாறை = துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி
📎 மீன் பாட்டம் = மீனவர் செலுத்திய வரி
📎 குசக காணம் = மண்பாண்டக் குயவர்கள் செலுத்திய வரி
📎 தறி இறை = தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி
📎 ஆட்டு இறை = ஆடு வளர்ப்பவர்கள் செலுத்திய வரி
📎 நல்லெரு இறை = எருது பசு வளர்ப்போர் செலுத்திய வரி
📎 ஓடக் கூலி = ஓடம் செலுத்துவோர் செலுத்திய வரி
📎 ஈழம் பூட்சி = பனைக் கள் இறக்குவோர் செலுத்திய வரி
ராசராச சோழன் ஆட்சிகாலத்தில் மக்கள் இத்தனை வகையான வரிகளை கட்டி நொந்துபோனார்கள் . ராசராச சோழனின் ஆட்சிக்காலத்தை பொற்கால ஆட்சி என்று சொல்லுவார்கள் . ஆமா அவை உண்மைதான் ராசராச சோழனின் ஆட்சி பொற்கால ஆட்சிதான் . இதில் ஒருசின்ன திருத்தம் இது ஒட்டுமொத்த மக்களுக்கான பொற்கால ஆட்சி கிடையாது . மாறாக பஞ்சம் பிழைக்கவந்த ஆரிய பார்ப்பனர்க்கனா பொற்கால ஆட்சி .
சோழ நாட்டு மக்கள் , வரி கொடா இயக்கம் நடத்தியது கூட உண்டு! அதை ஆடுதுறையில் இருக்கும் கல்வெட்டு பேசுகிறது. பிராமணர் முதலிய சதுர்வேதி மங்கல நிலச் சொந்தக்காரர்கள் , இடங்கை 96 வகைச் சாதியினருக்கு இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகள் கூறுகிறது. வரிச் சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் , ஆவணி ஊரில் நமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன . இவ்வளவு கொடுமையான வரிகளை கட்டமுடியாமல் பல மக்கள் கோயிலின் கோபுர உச்சியில் ஏறி தற்கொலை செய்துக் கொண்ட வரலாறும் உண்டு . ஒருவர் ஆட்சியில் மக்கள் வரியை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளுவதுதான் பொற்கால ஆட்சியா ?
உங்க சொந்த நிலத்தில் பாட்டியும் , தாத்தாவும் , அம்மாவும் , அப்பாவும் கழணியில் வேர்க்க விறுவிறுக்க உழைச்சிக் கொட்ட , நேரே வந்து 11 வகயைான வரியை ராசராச சோழ அரசாங்கம் புடுங்கும் . ஆனா பிராமண மானியமாகத் தரப்பட்ட இலவச அரசு நிலத்தில் , தாங்கள் உழைக்காது , உங்களை வைத்தே உழவு செய்து , காசும் பார்த்த பார்ப்பனீயர்கள் , வரி என்று சல்லி காசு கொடுக்க மாட்டார்கள் . இவர்களும் வரியை கொடுக்க மாட்டார்கள் அவர்களும் இவர்களிடம் வரியை கேட்கமாட்டார்கள். இதற்காகதான் ராசராச சோழனின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் பார்ப்பனீய மனுதரும ஆட்சி என்று சொல்லுகிறார்கள் .
ராசரசா சோழன் செய்த கொடுமைகள் என்னென்னா ❓
📎 தமிழக கோயில்களை முழுவதும் பிராமண மயமாய் ஆக்கியது
📎 தேவரடியாள் என்ற இறைப்பாலியல் தொழிலை கட்டாய நிறுவனமாக்கி வரிவு செய்தது
📎 தமிழ் மொழியைச் சிதைத்து அரசு ஆவணங்களைக் கிரந்த மயமாய் ஆக்கிக் குவித்தது
📎 சதுர்வேதி மங்கலம் / தேவதானம்/ அக்ரஹார இலவசங்கள் ! பொதுமக்கள் தலையில் வரி ஏற்றம்
📎 வரி கொடுக்காத ஏழை உழவர்களை "சிவத் துரோகி" என்ற சூழ முத்திரை குத்தி அடிமை ஆக்குதல்
📎 பறைச் சேரி / பறைச் சுடுகாடுகள் உருவாக்கம் செய்தது .
சோழ நாட்டின் வயல்களில் பெரும்பகுதி பெரிய கோவிலுடன் இணைக்கப்பட்டு இருந்தது . மக்களிடம் இருந்து விளைச்சலில் 6இல் 1 பங்கு கோயிலுக்கு வரியாக வசூலிக்கப்பட்டன . கோயில் பண்டாரத்தில் இருந்து கடன் கொடுக்கப்பட்டு 12% வட்டி [கந்து மீட்டர் வட்டி] வசூலிப்பட்டது. வரியும் கட்டி , வட்டியும் கட்டி நொடித்துப்போன மக்கள் வெற்றுக்குடிகள் எனும் கோயில் அடிமைகளாக ஆக்கப்பட்டன. பார்ப்பனர்களும் கடன் வழங்கப்படும் ஆனா அவர்களிடம் வட்டி வசூலிக்கப்பட மாட்டார்கள் .
பாரந்தகச் சோழனின் மகளான அனுபமாவை , கொடும்பாளூர் முத்தரையார் மணந்தார் . அதே கொடும்பாளூர்க் குடும்பத்துப் பெண் பூதி ஆதிச்ச பிடாரியை பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தான். ஒரு கட்டத்தில் சோழ குலமே தெலுங்கு ஆனது. -ஶ்ரீதர், முகநூல் பதிவு,15.6.20

புதன், 1 ஜூலை, 2020

அக்கிரகாரம் தோன்றியது எப்படி!


‘தமிழ்த் தாத்தா' என்று கூறப்படும் உ.வே.சாமிநாதய் யர் தனது சுயசரிதையில் தன் சொந்த ஊரான உத்தமதான புரம் எப்படி உண்டாயிற்று என்ற விவரத்தை எழுதியுள் ளார்.

‘‘சற்றேறக் குறைய இரு நூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தங்களுடைய பரிவாரங்களு டன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். ஆங்காங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடை யில் தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்தில் உள்ள பாபநாசத்துக்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம் போல உணவு முடித்துக் கொண்ட பிறகு, தாம்பூலம் போட்டுக்கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்தி ருந்தார்.

தம்முடன் வந்தவர்களோடு பேசிக் கொண்டு, பொழுது போக்குகையில், பேச்சுக்கி டையே அன்று ஏகாதசியென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசி யன்று ஒருவேளை மாத்திரம் உணவு கொள்ளும் விரதம் உள்ளவர். விரதத் தினத்தன்று தாம்பூலம் தரித்துக் கொள்ளும் வழக்கமும் இல்லை. அப்படி யிருக்க, அவர் ஏகாதசி என்று தெரியாமல் அன்று தாம்பூலத் தைத் தரித்துக் கொண்டார். எதிர்பாராதபடி விரதத்திற்குப் பங்கம் நேர்ந்ததைப்பற்றி வருந்திய அரசர், அதற்கு என்ன பரிகாரம் செய்யலா மென்று சில பெரியோர்களைக் கேட்டார். அப்பெரியோர்கள், ‘‘ஓர் அக்ரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேத வித்துகளாகிய அந்தணர் களுக்கு கல் வீடுகளோடு, பூமியையும் தானம் செய்தால், இந்தத் தோஷம் நீங்கும்'' என்றார்கள்.

‘‘இதுதானா பிரமாதம்? அப்படியே செய்துவிடுவோம். இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்'' என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்ரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, வேதாத்தியயனம் செய்ய 48 பிராமணர்களை அருகிலும், தூரத்திலும் உள்ள ஊர்களிலி ருந்து வருவித்து, வீடுகளையும், நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால், அவ்வூர் ‘‘உத்தமதானபுரம்'' என்னும் பெயரால் வழங்கலா யிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதானபுரத் தில் வைதீக ஒழுக்கம் பிறழா மல் வாழ்ந்து வந்தார்கள். இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழக்காமல் தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசம் தாலுகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது'' என்று  உ.வே.சாமிநாதய்யர் எழுதி யுள்ளார்.

ஒரு முட்டாள் அரசனின் மதக் கிறுக்குத்தனத்திற்கு - மத போதைக்கு இலாபப் பரிசு யாருக்கு அமைகிறது என்பது தான் முக்கியமாகக் கவனிக் கத்தக்கது.

வாளெடுத்துப் போர் புரிந்து எதிரிகளின் தலை சாய்த்து வாகை சூடும் மன் னர்கள், தர்ப்பைப் புல் முன் னாலே தலைசாய்ந்த நிலை யைத்தானே தந்தை பெரியார், நம் மக்களுக்குப் பாடம் போல் சொல்லிக் கொடுத்தார். இன் றளவும் திராவிடர் கழகம் அத னைத்தானே செய்து கொண்டு இருக்கிறது.

அக்ரகாரங்கள் எப்படித் தோன்றின என்பது இப் பொழுது புரிகிறதா?

- மயிலாடன்

திப்புசுல்தான் செய்த கொடுமையால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டதாய் இந்து வெறியர்கள் கூறுவது உண்மையா?

அபாண்டமாய் பொய்பரப்பியவர்களின் பித்தலாட்டம் அம்பலம்.

ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர், 'இந்திய வரலாறு' என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அது கல்லூரி பாடப் புத்தகமாகவும் இருந்தது. "திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்ற முயன்றதால், அதை எதிர்த்து 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர்'' என்று அந்நூலில் எழுதப் பட்டிருந்தது.

திப்புசுல்தான் ஆட்சி பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த, காந்தி தர்ஷன் சமிதியின் தலைவர் B.N. பாண்டே என்பவர், அந்நூலின் ஆசிரியர் ஹரிபிரசாத்துக்கு உடனே ஒரு கடிதம் எழுதி, மேற்கண்ட செய்திக்கு ஆதாரம் என்ன என்று கேட்டார்.

"மைசூர் கெசட்டரில் இருந்து எடுத்தேன்" என்று ஹரி பிரசாத் பதில் எழுத, திரு. B.N. பாண்டே அவர்கள் உடனே மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்குக் கடிதம் எழுதி இச்செய்தி உண்மையா? மைசூர் கெசட்டரில் உள்ளதா என்று கேட்டார்.

"3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட எந்தத் தகவலும் மைசூர் கெசட்டரில் இல்லை ...' என்று பதில் வந்தது.

இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் காலங் காலமாய் இட்டுக் கட்டும் கதைகள்தான் கண்ணியம் மிக்க முகலாய மன்னர்களை மதவெறியர்களாய் கொடுங்கோலர்களாய் காட்டின.

500 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள், அடக்குமுறையில் மற்ற மதத்தாரை இஸ்லாமியர்களாக மாற்ற முயற்சி செய்திருந்தால், இந்தியாவே இஸ்லாமிய நாடாக ஆகியிருக்கும் என்பதை ஓரளவு சிந்திக் கின்றவர்களால்கூட உணர முடியும். ஆனால், அபாண்டமான பொய்களைச் சொல்லி, மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்த, ஹரிபிரசாத் போன்ற எத்தர்கள் காலங்காலமாய் வரலாற்று ஆசிரியர் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு சதி செய்து வருகின்றனர்.

உண்மையில் திப்புசுல்தான் இந்துக்களையும், இந்துக்களின் கோயில்களையும் மிகவும் மதித்ததோடு, ஏராளமாய் உதவியும் உள்ளார். 156 இந்து ஆலயங்களை திப்பு சுல்தான் நேரடியாகப் பராமரித்து வந்தார். அவற்றை யெல்லாம் உள்ளே நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். திப்பு சுல்தானின் பிரதம மந்திரி பூர்ணியா ஒரு பிராமணர். அவரது படைத்தளபதி கிருஷ்ணராவ் ஒரு பிராமணர். மராட்டிய இந்து மன்னரால் படித்து நொறுக்கப்பட்ட சிருங்கேரி மடத்தைச் செப்பனிட்டதோடு, அம்மன்னனால் கொள்ளையடித்து எடுத்துச் செல்லப்பட்ட, சிருங்கேரி மடத்து சாரதாதேவி சிலைக்குப் பதிலாய் புதிய சிலையை அமைத்துக் கொடுத்தார் திப்பு சுல்தான்.
- மஞ்சை வசந்தன்