பக்கங்கள்

ஞாயிறு, 25 ஜூலை, 2021

மாங்கு மகராச்சிய துக்க விடயங்கள் (ஆங்கிலத்தில்: சாவித்திரி பூலே மாணவி - முக்தா சால்வே!) தமிழில்: பேரா.க.கணேசன்


முக்தா சால்வே - சாவித்திரி பூலேயின் மாணவி

வணக்கம்மிக முக்கியமான கட்டுரைசுதந்திரமான கற்றல் செயல்பாடு எத்தகைய சிந்தனையாளரை உருவாக்கும் என்பதற்கு முக்தா சால்வே சிறந்த எடுத்துக்காட்டு.

இவரின் ஆசிரியர் சாவித்திரிபா பூலேஅவர்களின்  கற்றல்கற்பித்தல் செயல்பாடுஇவை அனைத்தும் இன்றைய கல்வி யியல் விவாதத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் என்று நம்புகிறேன்.

குழந்தைப் பருவத்தில் இவ்வளவு வீரியத்துடன் எழுதி உள்ள இவர்,

பின்னர் என்ன ஆனார்?

இவரின் மற்ற படைப்புகள் என்ன ஆயின?

விடை தேட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்ற நம்பிக்கை உடன் இதைப் பகிர்கிறேன்.

பேராசிரியர் சச்சின் கருட் யின் கட்டுரையை ஆங்கிலத்தில் மூத்த கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அனுப்பி வைத்தார்இதை மொழி ஆக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தார்.

உடனடியாக பேராசிரியர் .கணேசன் கட்டுரையை தமிழில் பெயர்த்து அனுப்பி வைத்தார்.

உடன் இதை பரவலாக நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று முனைவர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் பணித்தார்.

இது தனி நபராக சாத்தியம் இல்லைஅனைவருடனும் பகிர்கிறேன்.

உழைக்கும் வர்க்கத்திடம் மிகுந்த நம்பிக்கையுடன்,

-பிரின்ஸ் கஜேந்திர பாபு

மிருகத்தைவிட கீழாக நடத்தப்பட்டு தீண்டாமையின் வலியிலும்வேதனையிலும் வாழ்ந்து வருகின்ற மகர்மாங்கு மக்களில் பிறந்த என்னைப் போன்ற தீண்டத்தகாத பெண்ணின் இதயத்தை கடவுள் நிரப்பியுள்ளார்அனைத்து உயிரினங்களையும் படைத்தவர் என் இதயத்தில் இடம் பெற்றிருப்பதால்அந்த வலிமையோடு இந்தக் கட்டுரையை எழுதத் துணிகிறேன்.

மாங்குகளையும்மகர்களையும் படைத்த அதே கடவுள்தான் - “பிராமணர்களையும் படைத்துள்ளார்அவர்தான் எனக்கு எழுதும் வல்லமையை அளித்துள்ளார்எனது உழைப்பை அவர் ஆசீர்வதிப்பதோடு அதற்கான மகிழ்ச்சி நிறைந்த பலனைக் கொடுப்பார்.

வேதங்களின் அடிப்படையில் நாம் மறுக்க முயற்சி செய்தால்தங்களை உயர்ந்த பிறவிகளாகக் கருதிக் கொள்ளும் மேலாதிக்க பிராமணர்கள் வேதங்கள் தங்களுக்கு கட்டுப்பட்டது என்றும் அவர்களுக்கே உரித்தான சொத்து என்றும் வாதிடுகிறார்கள்இப்போது வெளிப்படையாகவே சொல்வதானால் வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்றால்அவைகள் நம்மைப் போன்ற தீண்டாதாருக்கு இல்லை என்பது பளிச்செனத் தெரிகிறது.

வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டும் தானென்றால்நமக்கு எந்த நூலும் இல்லையென்பது வெளிப்படையான உண்மைநாம் எந்த நூலையும் எந்த மதத்தையும் நாம் பெற்றிருக்கவில்லை என்பது திறந்தவெளி உண்மையாக ஆகிறதுநமக்கென்று எந்த மறைநூலோ எந்த மதமோ இல்லை என்பதே உண்மை.

வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டும் என்றால்அந்த வேதங்களின்படி நாம் அந்த வேதக் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆக மாட்டோம்அவர்களின் வேதநூல்களை கண்ணால் பார்த்துவிட்டாலே பிராமணர்களின் குற்றச்சாட்டுப்படி

(மனுஸ்மிருதி சட்டப்படிநாம் கடுமையான பாவம்செய்தவர்கள் என்றால்நாம் அவற்றைப் பின்பற்றுவது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டமன்றோ?

முஸ்லிம்கள் தங்கள் குரானின்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள்ஆங்கிலேயர்கள் பைபிளை பின்பற்றுகிறார்கள்பிராமணர்கள் தங்களின் சொந்த வேதங்களைக் கொண்டுள்ளனர்அவர்களெல்லாம் அவரவருக்கென்று வைத்திருக்கும் அவை நல்லதோ அல்லது கெட்டதோ மதநூலைப் பின்பற்றுகிறார்கள்.

எந்த மதமும் இல்லாத எங்களைவிட அவர்கள் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.. கடவுளே எங்களுக்கான மதம் எதுவென்று சொல்வாயாக!

கற்றுக் கொடு  மதமே!, உனது உண்மையான மதம் எதுவென்று சொன்னால் அதன்படி நாங்கள் நடக்க ஏதுவாக இருக்கும்ஒரு மதம் முன்னுரிமை கொண்ட ஒரு சிலருக்கு (பிராமணர்களுக்குமுன்னுரிமையையும் பிற அனைத்து சாராருக்கும் மறுக்கப்பட்டால் அது பூமியிலிருந்தே அழிந்தொழிந்து போகட்டும்இது போன்ற பாரபட்சத்தை அதிகப்படுத்தும் மதத்தைப் பற்றி பெருமை கொள்ள இது ஒருபோதும் நம் எண்ணத்தில் நுழையக் கூடாது.

மாங்குகளையும் மகர்களையும் எங்கள் சொந்த நிலங்களிலிருந்து விரட்டி விட்டுபெரிய அளவு கட்டடங்களை கட்டுவதற்கு அந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்அது மட்டுமல்லாமல் அவர்கள் மாங்குகள் மற்றும் மகர்களுக்குசிவப்பு ஈயத்துடன் கலந்த எண்ணெயைக் குடிக்க கொடுத்து இந்த மக்களை அவர்களின் கட்டடங்களின் அடியில் புதைத்து விடுவார்கள்ஏழை மக்களின் தலைமுறையே இல்லாமல் துடைத்தெறிவார்கள்.

பிராமணர்கள் எங்களை வர்ணாஸ்ரம அடுக்கில் மிகவும் கீழ்நிலையில் தாழ்த்தி வைத்தனர்பசுமாட்டுக்கும் எருதுகளுக்கும் கீழே அவர்கள் எங்களைக் கருதினர்.

பாஜிராவ் பேஷவா ஆட்சிக் காலத்தில் அவர்கள் எங்களை கழுதைகளுக்கும் கீழே கருத வில்லையா? “ நீங்கள் ஒரு நொண்டிக் கழுதையை அடித்து விட்டீர்கள்” என்று சொல்லி ஒடுக்கப்பட்டோருக்கு எஜமான் பதிலடி கொடுத்தான்ஆனால் மகர்களையும் மாங்கு களையும் பாதையில் வீசுவதை மறுப்பதற்கு (தடுப்பதற்குயார் முன் வந்தார்கள்பாஜிராவின் ஆட்சியில் மாங்குகளும் மகர்களும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு முன் கடந்து போக நேர்ந்துவிட்டால், (விளையாட்டுக் கூடம் தீட்டுப்பட்டதென்றுஅவர்களின் தலையை வெட்டி மைதானத்தில் வாள்களை மட்டையாகவும்வெட்டப்பட்ட தலையை பந்தாகவும் அடித்து விளையாடினார்கள்அவர்களின் (பிராமணர்களின்வாசல் கதவுகளைக் கடக்க நேரும்போது கூட கடுமையாகத் தண்டிக்கப்பட்டு கொடுமைகளைச் சந்திக்கும்போது , கல்வி பெறுவது , கற்றுக்கொள்ள விடுதலை பெறுவது என்ற கேள்விக்கு இடமிருக்கிறதாமாங்கு மகர்களில் எவராவது ஒருவர் எப்படியாவது எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொள்கிறார்கள் என்று பாஜிராவின் கவனத்திற்குச் செல்லும்போது. “அவர்கள் கல்வி பெறுவதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்மாங்குமகர்கள் கல்வி பெற்றுவிட்டால் பிராமணர்களின் வேலையைப் பறிப்பதாகும்”  என்று கூறினார்.

இந்தத் தீண்டத்தகாதவர்கள்பிராமணர் தமது அலுவலக அதிகாரப் பணிகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுசவரக் கத்தி களைக் கொண்டு விதவைகளின் தலைகளை மொட்டையடிக்கச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?” என்று கேட்டார்இந்தத் தீண்டாமைப் பாகுபாட்டு கண்ணோட்டத்தோடு அவர்களைத் தண்டிப்பார்.

இரண்டாவதாக பிராமணர்கள் எங்களைக் கல்வி கற்பதிலிருந்து தடுப்பதில் திருப்திப்பட்டுக் கொண்டார்களா?  இல்லவே இல்லைபாஜிராவ் காசிக்குச் சென்று அங்கு கேவலமான முறையில் மரணம் அடைந்தார்ஆனால் இங்கு மகர்கள் மாங்குகளைவிட குறைவான தீண்டத்தகாதவர்கள்மகர்கள் மாங்குகளின் நிறுவனங்களைத் தவிர்த்தனர்மகர்கள் பிராமணிய குணாதிசயங்கள் சிலவற்றைக் கொண்டிருந்தனர்அவர்கள் தங்களை மாங்குகளைவிட உயர்வானவர்களாகக் கருதுகின்றனர்அவர்கள் மாங்குகளின் நிழலால்கூட மாசு படுவதாக எண்ணுகின்றனர். (மகர்கள் மாங்குகள் இருசாராரும்தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதை எண்ணி நாம் வேதனைப் படும்போது  மகர்கள் தங்களை மேலானவர்களாகக் காட்டிக் கொள்ள புனிதமான(புனிதமென்று பிராமணர்கள்)சொல்லக்கூடியஉடைகளை உடுத்திக் கொண்டு இங்குமங்கும் அலைகின்ற அவர்கள் கல்நெஞ்சம் கொண்ட பிராமணர்கள்நம்மீது இரக்கத்தின் ஒரு உற்சாகத்தைக் கூட உணர்கிறார்களா?

நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்றே எங்களுக்கு (வயல் வெளிகளில்வேலையாரும் வேலை கொடுப்பதில்லைவருமானமும் கிடைப்பதில்லைவறுமையின்பிடியில் வேதனையோடு உழல் கின்றோம்.

கற்ற பண்டிதர்களேஉங்கள் சுயநல சாமியாரை மடக்கிஉங்கள் வெற்று அறிவின் தந்திரத்தை  நிறுத்திவிட்டுநான் சொல்வதைக் கேளுங்கள்நமது பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது தலைக்கு மேல் கூரை கூட இல்லாமல் மழையிலும் குளிரிலும் எப்படி வேதனைப் படுகிறார்கள்உங்களின் சொந்த அனுபவத்திலிருந்தாவது புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

பிரசவத்தின்போது  ஏதாவது நோய் வந்தால் , மருத்துவம் மற்றும் மருந்துச் செலவுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?  அப்படிப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் அளவுக்கு மனிதராக இருந்த எந்த மருத்துவரும் உங்களிடையே இருந்தாரா?

 பிராமணக் குழந்தைகள் மாங்கு மகர் குழந்தைகள் மீது கற்களை வீசி காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் ஒருபோதும் புகார் அளிக்கத் துணிய மாட்டார்கள்காரணம்பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் இருக்கும் பழைய உணவை வாங்க வேண்டிய கெட்டவாய்ப்பான நிலைமையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதால்அவர்கள் அமைதியாகப் பாதிக்கப் படுகிறார்கள்.

அய்யோகடவுளே இது என்ன வேதனைஇந்த அநீதியைப் பற்றி மேலும் எழுதினால் கண்ணீர்தான் பெருக்கெடுக்கிறதுஇத்தகைய ஒடுக்குமுறையின் காரணமாக இரக்கமுள்ள கடவுளும் இந்த நற்பண்புள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை எங்களுக்கு வழங்கியுள்ளார்இந்த அரசாங்கத்தின் கீழ் எவ்வாறு தணிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

முன்னதாக கோகலேஅபேட்திரிம்காஜிஅந்தாலாகாலேபெஹ்ரே போன்றவர்கள் (அனைவரும் பிராமண ஒட்டுப் பெயர் களைக் கொண்டவர்கள்அவர்களின் வீடுகளில் எலிகளைக் கொல்வதற்குக்கூட தைரியம் இல்லாதவர்கள்எங்களைத் துன்புறுத்தினார்கள்எந்தக் காரணமும் இல்லாமல் கர்ப்பிணிப் பெண்களைக் கூட காப்பாற்றவில்லைஇப்போது அது நிறுத்தப்பட்டிருக்கிறதுபூனாவில் பேஷ்வா ஆட்சியின்போது மகர்களும் மாங்குகளும் துன்புறுத்தப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் வழக்கமான செயல்பாடாக இருந்ததுஇப்போது அதுவும் கூட நிறுத்தப்பட்டிருக்கிறதுஇப்போது கோட்டைகளின் மற்றும் மாளிகைகளின் அடித்தளத்திற்காக மனித தியாகம் நிறுத்தப்பட்டிருக்கிறதுஇப்போது நம்மை எவரும் உயிரோடு புதைப்பதில்லை.

இப்போது நமது மக்கள்தொகை எண்ணிக்கையில் அதிகரித் துள்ளதுமுன்னதாக மகரோ அல்லது மாங்கோ மிக அழகான உடையணிந்தாலோஇந்த வகை துணிகளை பிராமணர்கள் மட்டுமே உடுத்த முடியும் என வாதிடுவார்கள்மாங்கு மகர்கள் நல்ல துணிகளை அணிந்திருப்பதைப் பார்த்தால் அதை அவர்கள் திருடி விட்டார்கள் என்று அவர்கள்மீது குற்றும் சுமத்தினார்கள்தீண்டத்தகாதவர்கள் உடம்பைச் சுற்றி துணி அணிந்திருந்தால்அவர்கள் மதப் புனிதம் கெட்டுவிட்டதாகக் கருதி அவர்களை மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் அளவு அவர்களின்(பிராமணர்களின்மதம் கூட ஆபத்தானதுஆனால் பிரிட்டிஷாரின் ஆட்சியில் கையில் பணம் வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் விருப்பப்பட்ட துணிகளை வாங்கி உடுத்திக் கொள்ளலாம்.

முன்னதாகஉயர் ஜாதியினருக்கு எதிரான எந்தவொரு தவறான செயலுக்கும்  குற்றமிழைத்த தீண்டத்தகாதவர்களின் தலையை துண்டிக்க வேண்டும்இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளதுஅதிகப்படியான வரி மற்றும் சுரண்டல் வரி நிறுத்தப்பட்டிருக்கிறதுசில இடங்களில் தீண்டாமை நடைமுறை நிறுத்தப்பட்டிருக்கிறதுவிளையாட்டு மைதானங்களில் கொலை செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டிருக்கிறதுஇப்போது மக்கள் கூடும் இடமான சந்தைகளுக்கும் கூட செல்ல முடிகிறதுஒருசார்பற்ற பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இதுபோல் பல விஷயங்கள் நடந்துள்ளனஇவற்றை நான் எழுதும்போதுநான் மேலே குறிப்பிட்டதைப் போல எங்களை அழுக்கு போல நடத்திக் கொண்டிருந்த பிராமணர்கள்நம்முடைய வேதனைகளிலிருந்து நம்மை விடுவிக்க விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  எல்லா பிராமணர்களும் இல்லைசாத்தானின் செல்வாக்கு செலுத்தப்பட்டவர்கள் முன்பு போலவே நம்மை வெறுப்பதை தொடர்கிறார்கள்எங்களை விடுவிக்க முயற்சி செய்யும் பிராமணர்களை அவர்கள் குறிவைக்கிறார்கள்சில உன்னத மனிதர்கள் மகர்களுக்கும் மாங்குகளுக்கும் கருணையுள்ள பிரிட்டிஷ் அரசின் துணையோடு பள்ளிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

       மகர்களேமாங்குகளே!  நீங்கள் ஏழை மற்றும் வறுமை நோய்வாய்ப்பட்டவர்கள்அறிவு மருந்து ஒன்றே உங்களின் வறுமை மற்றும் அடிமை நோயை குணமாக்கும்அந்த அறிவு மருந்தே அறியாமையிலிருந்தும் மூடநம்பிக்கையிலிருந்தும் உங்களை விடுவிக்கும்நீங்கள் நீதிமான்களாகவும்தார்மீக உரிமை பெற்றவர் களாகவும் ஆவீர்கள்இது சுரண்டலை தடுத்து நிறுத்தும்மிருகங் களைப் போல நடத்திய மக்கள் இனி அப்படி நடத்தத் துணிய மாட்டார்கள்ஆகவே நீங்கள் தயவு செய்து கடின உழைப்பை செலுத்துங்கள்படியுங்கள்கடின உழைப்போடு படித்து நல்ல மனிதர்களாகுங்கள்ஆனால் என்னால் இதை நிரூபிக்க முடியாதுஉதராரணமாக  என்னதான் நல்ல கல்வியைப் பெற்றவர்கள் கூட சில நேரங்களில் மிகத் தீய செயல்பாடுகளில் ஈடுபட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள்.

இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரி பூலேயின் மாணவி  14 வயது முக்தா சால்வே மராத்தியில் எழுதிய கட்டுரை. 1855இல்(166 ஆண்டுகளுக்கு முன்சாவித்திரிபூலேஜோதிராவ்பூலே ஆகிய இருவரும் “த்யானோதயா” என்ற மராத்தி இதழில் வெளியிட்டபடைப்பை 2008இல் பிரஜ்ரஞ்சன்பாமணிபமிளாசர்தார் இருவரும் ஆங்கிலத்தில்  A forgotten  Liberator: The life and struggle of Savithiri Phule என்று தொகுக்கப்பட்ட நூலில்இடம் பெற்றது. Source: FORWARD PRESS/ Dated February 15, 2020


வியாழன், 22 ஜூலை, 2021

முக்தா சால்வே முதல் தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணியக் குரல்

 

ஜோதிபா பூலேயும் சாவித்திரி பூலேயும் 1848இல் இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கு பள்ளிக் கூடத்தை  மகாராட்டிரா மாநிலத்தில் புதவார் பேத்தில் பேடேவாடா எனுமிடத்தில் ஆரம்பித்தார்கள்அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கும் கல்வி கொடுக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் போது புரட்சிகரமான மாணவர்களையும் சேர்த்தே உருவாக்கினார்கள்.

1852இல் வெட்டல்பேத்  எனும் ஊரில் மூன்றாவது பெண்களுக்கான பள்ளியை  துவக்கினார்கள்.  முக்தா சால்வே 14 வயது சிறுமிஅந்தப் பள்ளியில் படித்தவர்புரட்சிகரமான எண்ணங்களையும் பெற்றார்இதுவே நவீன இந்தியாவில் பெண் விடுதலையின் ஆரம்பம் எனலாம்.

இப்போது முக்தா சால்வே எழுதிய ஒரு கட்டுரை கிடைத்திருக்கிறதுஅப்பெண்ணின் பிற படைப்புகள் கிடைக்கவில்லைகிடைத்த ஒரு கட்டுரையே அப்பெண்ணின் புரட்சிகரமான சிந்தனையை அறிந்து கொள்ளப் போதுமானது.

இந்தக் கட்டுரை இந்தியாவின் ஜாதி-ஆணாதிக்கப் பிரச்சினையை முதன் முதலாக வெளிக்காட்டுகிறதுபெண் விடுதலையோடும்,  ஜாதியோடும் மிகவும் அக்கறை கொள்கிறது.

அந்த வகையில் அவரின் இக்கட்டுரை நவீன இந்திய வரலாற்றில் முதல் தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணிய படைப்பிலக்கியம் என மதிக்கப் படுகிறது.

ஜோதிராவ் பூலேயும் சாவித்திரிபூலேயும்  கல்விப் பணியோடு மட்டும்  தங்களை சுருக்கிக் கொள்ளவில்லைமனித நேய சமூகம் படைக்கவும் போராடினார்கள்ஜாதியம் மற்றும் பாலினப் பாகுபாட்டுக்கு எதிராக போராடிய அதே வேளையில் விவசாயிகள்கலைஞர்கள்,  சூத்திரர்கள்தாழ்ந்த ஜாதிகள் தீண்டத்தகாதார்கள் (ஆதி சூத்திரர்கள்இவர்களின் அறிவொளிக்காகவும் அதிகார மய்யப்படுத்துதலுக்கும் பாடுபட்டார்கள்இந்த செயல்தன்மைகள் ஜோதிராவ் பூலேயின் பேச்சுகள்எழுத்துகள் , நடவடிக்கைகள் ஆகியவை மூலம் வெளிப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.

 மாங்கு இனத்தின் மாணவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்ததன் பலனாகமாங்கு மகர் பற்றிய கட்டுரையை ஒரு 14 வயது  மாணவி எழுதியது குறிப்படத்தகுந்தது ஆகும்.

இக்கட்டுரையின் முதல்பாகம் 15-2-1855ஆம் ஆண்டிலும்இரண்டாம் பாகம் மார்ச் 1955இல் "ஞானோதயம்” எனும் சஞ்சிகையிலும் வெளிப்பட்டனபின்னர் வெளிவந்த இதழ்களில் அந்த கட்டுரையின் மீது விமர்சனமாக இரண்டு கடிதங்கள் வெளியிடப்பட்டனகட்டுரையின் சில பகுதிகள்  என்.வி.ஜோஷியின் “புனே நகரத்தின் விளக்கம்” எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்டது.;; "ஞானோதயம்” இதழின் ஆசிரியர் குழு அதனை அச்சிடும்போதுஅக்கட்டுரையில் ஜோதிராவ் பூலேயின் பள்ளியில் மூன்று ஆண்டுகள் மட்டும் பயின்ற 14 வயது மாணவியான முக்தா சால்வே பற்றி குறிப்பிட்டிருந்தது.

அவரின் பெற்றோரின் துயரம் நிறைந்த வாழ்க்கையைக் கூர்மையாகக் கவனித்த பிறகு எந்தவிதமான அச்சமுமின்றி அக்கட்டுரையை எழுதினார்முக்தா சால்வேயின் தந்தையார் தீண்டத்தகாதோரின் துயரங்களை விரிவாகக் கூறினார். "ஞானோதயம்”  இதழ் அவரின் கட்டுரையை வெளியிட்டது.

ஜோதிபா பூலேயின் எழுத்துகளுக்கு முன் வெளியிடப்பட்டதுதான் இக்கட்டுரையின் முக்கியத்துவம் ஆகும்ஜோதிபா பூலேயின்  உற்சாகமிக்க தூண்டுதலால்தான்அப்பெண்ணின் முதிர்ச்சியை அக்கட்டுரை வெளிப்படுத்தியதுஜோதிராவ் பூலேயின் பணி சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வை நோக்கி இருந்ததால் அப்பெண்ணுக்கு கிடைத்த பயிற்சியால் புரட்சிகரமான தாக்கத்தை அக்கட்டுரை வெளிக்காட்டுகிறதுமூன்று ஆண்டுகள் மட்டும் படித்த அப்பெண்ணின் கல்வி வளர்ச்சி அதிசயிக்கத்தக்கது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வியும் அறிவும் மறுக்கப்பட்டுஆயிரக்கணக்கான ஆண்டு களாக பிராமணிய சமூகத்தால் சுரண்டப்பட்டும் இருந்த சமூகத்திலிருந்து அப்பெண் வந்தார்ஆனால் அவர் தனித்துவமான சிந்தனை ஆற்றலோடு மிக வேகமாகத் தனது கற்கும் திறனை வளர்த்துக் கொள்கிறார்அவள் சிறு வயதிலேயே கிடைத்த குறைந்த கல்வியில் சமூகத்தைப் பற்றியும்சுய மனசாட்சி அறிவையும் பெறுகிறார்இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக இது அழைக்கப்படுகிறதுஆனால் பிராமணிய கலாச்சாரத்தின் செல்வாக்கால் ஆய்வாளர்கள் முக்தா சால்வேயின் பங்களிப்பை புறந்தள்ளி விட்டனர்.

கிராம வாழ்க்கை முறையின் கொடுந்துயரமான வாழ்க்கையை மேற்கொண்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும்அச்சமூகத்தின் அடித்தட்டு பெண்கள் புறக்கணிக்கப்பட்டதையும் அப்பெண் உற்று நோக்கினார்.

முக்தா சால்வே மகாராட்டிராவில் அடித்தட்டு  தீண்டத்தகாதோர் ஜாதியைச் சேர்ந்தவராக இருந்ததால்  ஊருக்கு வெளியே  வாழ வேண்டி இருந்ததுநாங்கள் இந்து பிராமணிய மதத்திற்கு வெளியே ஒதுக்கி வைக்கபட்டவர்கள் என்று குறிப்பிடுகிறார்.

இந்து பிராமணிய மதமானது தீண்டத்தகா தோரின் மதம் அல்ல என்பதையும் நிறுவ விரும் பினார்தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்ணின் துயரமான வாழ்க்கைஉயர்ஜாதிப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து வித்தியாசமானது மட்டு மல்லஅச்சுறுத்துவதாகவும் இருந்ததுஜாதி ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள் என்பதை அவரின் கட்டுரை காட்டுகிறதுதுயரங் களும் சுரண்டலும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி இல்லை என்பதையும் சொல்ல விரும்புகிறார்.

முக்தா சால்வேயின் பங்களிப்பு நவீன இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட சமூக பெண் களின் குரலாக விளங்குகிறது.  பிரதிபலிப்புத் தன்மை வாய்ந்ததாகவும்சிந்தனையைத் தூண்டிவிடுவதுமான எழுத்தை தாராபாய் ஷிண்டேபண்டிட் ரமாபாய் ஆகியோரின் பங்களிப்புக்கு முன்பாகவே முக்தா சால்வே தனது ஆற்றல் நிறைந்த அறிவு  பூர்வமான எழுத்தை தொடங்கி விட்டார்தாழ்த்தப்பட்ட சமூக இலக்கியம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணியம் ஆகியவை சார்ந்த எழுச்சிமிக்க சிந்தனை ஒரு பள்ளி மாணவியான முக்தா சால்வே போன்றோரால் தூண்டிவிடப் பட்டிருக்கிறது.

ஆனால்  பிற்காலத்தில் முக்தா சால்வேக்கு என்ன நிகழ்ந்ததுஎன்ற கேள்வி மனதில் எழுகிறதுஅவர் எங்கு சென்றார்?  மேலும் அவர் இலக்கியப் படைப்புகளை வெளியிட்டாராஅப்படிப் படைத்திருந்தால் எங்கே அவரின் இலக்கியம்அவர் படைப்புகளை வெளியிடாமல் போயிருந்தால் அதற்கான காரணங்கள் எவைஇன்று அவரின் ஒரேயொரு கட்டுரைக்காக மட்டும் நினைக்கப்படுகிறார்ஜாதிய ஆணாதிக்கத்தின் சோகமான நிலை இதுதான்.

ஆங்கிலத்தில்:  பேரா.சச்சின் கருட்,

வரலாற்றுத் துறைகே.பி.ப்பி.கல்லூரி இஸ்லாம்பூர் மகாராட்டிரா

தமிழில்பேரா. கணேசன் குமரி