பக்கங்கள்

தியாகராயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியாகராயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் (27.4.1852 - 28.4.1925) தியாகராயர் பற்றி தலைவர்கள்

 

19


தியாகராயர் எப்போதும் தன்னிச்சையான குணமுடையவர். எவருடைய விருப்பு வெறுப்புகளையும் பொருட்படுத்தாது தமக்குப் பட்ட கருத்துக்களைத் தைரியத்துடன் கூறுபவர் 

21

- டாக்டர் சி. நடேசனார்.

('இந்து' நாளிதழ் -29.4.1925-  பக்கம் 4, தியாகராயர் மறைவு குறித்த இரங்கற் பேச்சு.) 

***

20
“தியாகராயர் ஒரு பெரிய மனிதர். நம் தலைமுறையில் வாழ்ந்து வரும் பெரிய மனிதர்களிலெல்லாம் பெரிய மனிதர். இன்றைய நவீன இந்தியாவில் வாழும் மனிதர்களையெல்லாம் இவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தியாகராயரே அவர்களையெல்லாம் விடப் பெரிய மனிதராக விளங்குகின்றார். முதலாவதாக அவர் தம்மிடம் அண்டிக்கிடந்த பெரும்புகழை அறியாதிருந்தார். இரண்டாவதாக அவர் தம்மை எவரும் பெரிய மனிதர் என்று நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறிதும் கொண்டிராமல் இருந்தார். சாதாரண ஒழுக்கமுடைய குடிமகனாகவே பணியாற்றி வந்தார். அவர் ஒருபோதும் கர்வமோ ஆணவமோ கொண்டதில்லை. 

- பனகல் அரசர் 

தியாகராயர் மறைந்த போது ஆற்றிய இரங்கல் உரை. 

‘இந்து' நாளிதழ் 29.4.1925) 

***

22

 “தியாகராயருடன் பல ஆண்டுகளாக மிக நெருங்கிப் பழகியவன் யான். அவரைப் போன்ற ஒரு உண்மை நண்பரையோ அல்லது உறுதுணையாளரையோ இதுவரை நான் கொண்டிருந்ததில்லை” 

- ராஜா சர். அண்ணாமலை செட்டியார் 

(தென்னிந்திய வர்த்தகக் கழகம் வெள்ளிவிழா மலர்)

***

23
“1921ஆம் ஆண்டு பொல்லாத ஆண்டு! தொழிலாளர் கதவடைப்பு! வேலை நிறுத்தம்! ஆறுமாத வேலை நிறுத்தம்! லார்டு வில்லிங்டன் நீலகிரியினின்றும் புறப்பட்டார். சென்னை என்ன பேசிற்று ? தொழிலாளர் தலைவர்களை நாடு கடத்த லார்டு வில்லிங்டன் வந்திருக்கிறார் என்று பேசிற்று.நாடு கடத்தல் செயலில் நடந்ததா? இல்லை. ஏன்? தியாகராயர் தலையீடு. ‘மலையாளக் குழப்பம் - ஒத்துழையாமை இவைகளிடையே நாடு கடத்தல் நிகழ்ந்தால் சென்னை என்ன ஆகும்? மாகாணம் என்ன ஆகும்? மந்திரிமார் பதவியினின்றும் விலகுதல் நேரினும் நேரும்‘ என்று செட்டியார் எடுத்துரைத்தாரென்றும், அதனால் லார்டு வில்லிங்டன் மனமாற்றமடைந்து நாடு கடத்தலை எச்சரிக்கை யளவில் நிறுத்தினாரென்றும் சொல்லப்பட்டன. இவைகளை எனக்குத் தெரிவித்தவர் டாக்டர் நடேச முதலியார், தியாகராய செட்டியாரைக் கண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டேன். ‘நீர் நல்லவர். உமது கட்சி வேகமுடையது. வேகம் அந்தரங்கத்தை வெளியிடவும் தூண்டும். ஆதலின் அந்தரங்க சம்பாஷணையை வெளியிடுதல் நல்லதன்று’ என்று கூறினார். ‘144 பலருக்கு வழங்கப்படுகிறது; எனக்கு வழங்கப்படுவதில்லை.காரணம் ‘நாடு கடத்தும் நாட்டம் என்று சொல்லப்பட்டது. அந்நாட்டத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். நீங்கள் எனக்கு நன்மை செய்யவில்லை! என்றேன். ‘நாடு கடத்தலால் உமது வாழ்வே தொலையும்; உமது எதிர்கால வாழ்க்கையைக் கருதியே யான் தடை செய்தேன்’ என்று செட்டியார் அன்று உரைத்தது எனக்கு மகிழ்ச்சியூட்டவில்லை.” 

(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள். பக்கம். 446)

சனி, 15 ஏப்ரல், 2023

அண்ணாவின் பார்வையில் வெள்ளுடை வேந்தர் (27.4.1852 – 28.4.1925)

 

வரலாற்றுச் சுவடு : அண்ணாவின் பார்வையில் வெள்ளுடை வேந்தர் (27.4.1852 – 28.4.1925)

ஏப்ரல் 16-31,2022

தலைப்பாகையுடன் கூடிய வெள்ளுடை, சட்டைப் பையில் தங்கச் சங்கிலியுடன் கூடிய பாக்கெட் கடிகாரம், அதில் ஒரு பேனா, மூக்குக் கண்ணாடி, நெடிய தோற்றம், கம்பீரமான பார்வை இவற்றின் ஒட்டு மொத்தமான வடிவம்தான் வெள்ளுடை வேந்தர் திராவிடப் பெருந்தகை பிட்டி தியாகராயர். அவரின் 170ஆம் பிறந்தநாள் இந்நாள் (1852).

1882இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக உள்ளே நுழைந்த தியாகராயர் 1925 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து பணிபுரிந்த சாதனையாளர் அவர். மாநகர சபையில் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர்தான். மூன்றுமுறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டவரும் அவரே! சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்கு வித்திட்ட வித்தகரும் அவரே! தன்னைத் தேடி வந்த முதல் அமைச்சர் பதவியை வேண்டாம் என்று கூறி கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியாரை முதல் அமைச்சராகும்படிச் செய்தார்.

இவரைப் பற்றி அண்ணா கூறுகிறார்:

“சர் தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்-களுக்குத் தலைமை பூண்டு, அவர்களின் தன்னுணர்-விற்கு வழி கோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப் பாடுபட்டு, சமுதாயத் துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற உழைத்தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்-தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டு-மென்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.

அவர் காலத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கின்றது. அவர் அன்று பறக்கவிட்ட சமு-தாயப் புரட்சிக் கொடியின்கீழ் நின்றுதான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம்’’ என்று குறிப்பிட்டார் அறிஞர் அண்ணா.

1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றபோது அண்ணா அவர்கள்,

“நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகின்ற நேரத்தில்,

சர். தியாகராயர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்க வேண்டும்.

மகானே! நீங்கள்தான் தமிழர் சமுதாயத்திற்கு முதன்முதல் அறிவூட்டினீர்கள். வாழும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களது வழிவந்த நாங்கள் நீங்கள் பட்ட தொல்லைகளைவிட அதிகமாக அவதிப்பட்-டோம். நீங்களாவது செல்வச் சீமான்; நாங்கள், பஞ்சைப் பராரிகள்! ஆனால், சீமான்கள் உங்களை மதிக்க மறந்தார்கள்; ஏழைகளாகிய நாங்கள் உங்களை மறக்கவில்லை என்று வீரவணக்-கம் செய்துவிட்டு உள்ளே நுழைந்து கடமையாற்ற வேண்டுகிறேன்’’ என்றார்.ஸீ