பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

“நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில்...


1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது

2) அதுதான் என்னை சூத்திரன் என்றது

3) அதுதான் என்னை வேசிமகன் என்றது

4) அதுதான் என் தாயை வேசி என்றது

5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது

6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது

7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது

8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது

9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது

10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது

11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது

12) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது

13) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது

14) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது

15) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது

16) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது

17) அதுதான் நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது

18) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது

19) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது

20) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது

21) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது

22) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது

23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது

24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது

25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது

26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது

27) அதுதான் என் பாட்டனை முடி வளர்க்காதே என்றது

28) அதுதான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது

29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது

30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது

31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது

32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது

33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது

34) அதுதான் அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப்போக்கியது

35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது

36) அதுதான் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது

37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது

38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது

39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது

40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது

41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது

42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது

43) அதுதான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது

44) அதுதான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது

45) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது

46) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது

47) அதுதான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது

48) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது

49) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது

50) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது

51) அதுதான் சூத்திரன் ஆளும் நாடு சேற்றில் மூழ்கிய  பசுப்போல அழிந்துவிடும் என்றது

52) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது

53) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது

54) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது

55) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது

56) அதுதான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது

57) அதுதான் என்னை பார்ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது.

58) அதுதான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்குபார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடித்தால் போதும் என்றது.

59) அதுதான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது

60) அதுதான் பெண்களை ஆணின் உடைமை என்றது

61) அதுதான் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றது

62) அதுதான் ஆணுக்குப் பெண் அடிமை என்றது

63) அதுதான் பெண்களைப் படிக்காதே என்றது

64) அதுதான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது

65) அதுதான் பெண்ணை விதவை என்று ஆக்கி கொடுமைப்படுத்தியது

66) அதுதான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது

67) அதுதான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது

68) அதுதான் வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றது

69) அதுதான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது

70) அதுதான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது

71) அதுதான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது

72) அதுதான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது

73) அதுதான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது

74) அதுதான் பறையனும் பிணமும் ஒன்று என்றது

75) அதுதான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது

76) அதுதான் பிணத்தைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது

77) அதுதான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது

78) அதுதான் ஜாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது

79) அதுதான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது

80) அதுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது

81) அதுதான் ஜாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது

82) அதுதான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது

83) அதுதான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது

84) அதுதான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது

85) அதுதான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது

86) அதுதான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக்கொள்ளலாம் என்றது

87) அதுதான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கல்யாணம்கருமாதிதிதிதெவசம்கோயில் திருவிழாதேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது

88) அதுதான் ஜாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது

89) அதுதான் ஜாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது

90) அதுதான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது

91) அதுதான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது

92) அதுதான் பார்ப்பானே தெய்வம் என்கிறது

93) அதுதான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது

94) அதுதான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது

95) அதுதான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது

96) அதுதான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது

97) அதுதான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது

98) அதுதான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது

99) அதுதான் நாட்டை சூத்திரன் ஆண்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்ததுஇவை அனைத்திற்கும் மனுதர்மத்திலும் இதிகாச புராணங்களிலும் ஆதாரம் உள்ளதுஅந்த இந்து மதத்தை நாம் எதிர்க்க இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்க நாம் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.”

இப்படிக்கு,

மானமுள்ள சுயமரியாதைக்காரன்,

இரா.குணசேகரன்உரத்தநாடு.

"இந்து" என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத்தது



இந்தியாவில் எந்த மொழியிலும் கிடையாது- காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புதல்!


காரை சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டு


காரைக்கால், டிச.26  'இந்து' என்ற சொல் வெள்ளைக் காரன் கொடுத்தது; இந்தியாவில் எந்த மொழியிலும் கிடையாது - காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புதல் என்று ஆதாரத்துடன் எடுத்துக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


19.12.2019 அன்று புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள காப்பா காலனி அருகில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழா வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


இசுலாமியர்கள் எல்லாம் யார்?


இசுலாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை கிடையாது என்கிறார்கள்; இசுலாமியர்கள் எல்லாம் யார்?


சரி, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை உண்டா? அவர்கள் எல்லாம் இந்துக்கள்தானே! இந்து என்ற வார்த்தை எங்கேயாவது இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை.


இதோ என்னுடைய கைகளில் இருப்பது அசல் மனுதர்மம். இந்த புத்தகத்தில் எங்கேயாவது இந்து மதம் என்கிற வார்த்தை இருக்கிறதா?


சங்கராச்சாரியாரின்  ''தெய்வத்தின் குரல்''


வேதங்களில் இந்து மதம் என்ற பெயர் இருக்கிறதா?


சாஸ்திரங்களில் இந்து மதம் என்று இருக்கிறதா?


இதை நான் சொல்லவில்லை; காஞ்சி சங்கராச்சாரியார் சொல்கிறார். இது என்னுடைய குரல் இல்லை, மேடையில் அமர்ந்திருப்பவர்களின் குரல் கூட கிடையாது. ''தெய்வத்தின் குரல்''.


நாங்கள் பேசினால் மனிதர்களின் குரல். இன்னுங்கேட்டால், அசுரன் குரல். ஆனால், அது ''தெய்வத்தின் குரல்'' - அதில் அவர் சொல்கிறார்,


இந்து மதம் என்ற பெயரே அந்நியன் கொடுத்தது; வெள்ளைக்காரன் வெளியில் இருக்கிறவன் நமக்குக் கொடுத்தது   அந்தப் பெயர். நமக்கு ஓரிஜினலாக இருந்த பெயர் பிராமண மதம் - சனாதன மதம் என்பதுதான்.


பிறகு என்ன, இந்து நாடு என்று பெயர் வைப்பதற்கு, சட்டம் இடம்தராதது மட்டுமல்ல, உன்னுடைய சாஸ் திரத்திலும் இடம் கிடையாது; உன்னுடைய பாரதத்திலும் இடம் கிடையாது.


அதேநேரத்தில் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள், திராவிடன் என்கிறீர்களே, வெள்ளைக்காரன், கிறித்த வர்கள் எல்லாம் வந்து இவர்களைக் கெடுத்துவிட்டார்கள்; இஸ்லாமியர்கள் ஒருபுறம் கெடுத்தார்கள்; யாரை, திராவிட இயக்கத்தவர்களை. அதனால்தான் அவர்கள் இவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.


''திராவிடமா? தமிழா?''


அதேபோன்று, கால்டுவெல் என்கிற ஒரு பாதிரியார் வந்தார், அவர் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தபொழுது, அவர்தான் திராவிடன், திராவிடன் என்று சொன்னவுடன், இவர்களும் திராவிடன் என்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.


அதைக் கேட்டுவிட்டு, நம்மாளில் 'அதிபுத்திசாலி'யாக இருக்கக்கூடிய சிலர், ''திராவிடமா? தமிழா?'' என்றார்கள். நாலணா முக்கியமா? ஒரு ரூபாய் முக்கியமா? ஒரு ரூபாய்க்கும், நாலணாவுக்கும் சண்டை என்று யாராவது சொல்வார்களா? ஒரு ரூபாய்க்குள் இருப்பதுதான் நாலணா? நாலணாவிற்கும், ஒரு ரூபாய்க்கும் போட்டியில்லை. நான்கு நாலணா சேர்ந்ததுதான் ஒரு ரூபாய். அதுவும் புதுச்சேரியில் அணா என்பது வேறு; வயதானவர்களுக்கு அது தெரியும்.


அப்படிப்பட்ட நிலையில், இந்து நாட்டை உரு வாக்குவோம் என்று நிதின்கட்காரி சொல்கிறாரே, அவருக்காக சொல்கிறோம்; அவர் தெளிவு பெறட்டும்; குழப்பமில்லாமல் மற்றவர்கள் சிந்திக்கட்டும்.


அசல் மனுதர்மம்


 


10 அத்தியாயம்; 44 ஆவது சுலோகம்!


இதோ என்னுடைய கைகளில் இருப்பது அசல் மனுதர்மம்; இந்தப் புத்தகத்தில் இந்து மதம் என்கிற வார்த்தை இருக்கிறதா? என்று கேட்டோம்.


மனுதர்மம் எவ்வளவு காலத்திற்கு முன் உண்டானது என்றால், அவர்கள் சொல்வார்கள்,  அனாதி காலம் தொட்டு, அது சொல்ல முடியாது என்றார்கள்; பிரம்மா அந்தக் காலத்தில் சொன்னார்; மற்றவர்கள் சொன் னார்கள்; இது தானாக உண்டானது என்று சொன்னார்கள்.


இந்த புத்தகத்தில்  10 ஆவது அத்தியாயத்தில், 44 ஆவது சுலோகத்தில் உள்ளதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்.


நாங்கள் எதைச் சொன்னாலும், திராவிடர் கழகத்துக் காரர்கள் ஆதாரமில்லாமல் பேசி பழக்கப்பட்டவர்கள் கிடையாது. இதற்காக வழக்கு எங்கள்மீது போட்டால், மிகவும் நல்லது. அடிக்கடி எங்களிடம் வழக்குப் போட்டிருக்கிறோம் என்று நோட்டீஸ் கொடுப்பார்கள்; அதனை நாங்கள் வரவேற்போம். ஏனென்றால், பொதுக் கூட்ட மேடையில் பேசுவதைவிட, நீதிபதிமுன் பேசி னால்தான், அது எல்லாவற்றிலும் பதிவாகும்.


அந்த அடிப்படையில் வரும்பொழுது, மனுதர்மத்தில் உள்ளதைப் படிக்கிறேன் கேளுங்கள்.


''பெண்டம், ஔண்டாரம், திராவிடம், காம்போசம், யவஞம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய் ஆகிவிட்டார்கள்.


அப்படியென்றால், இவை எல்லாம் தேசங்கள். எது? பாரதம் ஒரு தேசம்; திராவிடம் ஒரு தேசம். பாரதம் வேறு தேசம்; திராவிடம் வேறு தேசம்.


India that is Bharath - இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது; அதுதான் ஒன்றாவது விதி.


Shall be a union of State


இதுதான் ஒன்றாவது விதியின் தொடக்கமே, அரச மைப்புச் சட்டத்தில்.


பாரதம் என்ற வார்த்தையாவது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் இருக்கிறது. திராவிடம் என்கிற வார்த்தையும், பாரதம் என்கிற வார்த்தையும் மனுதர்மத்தில் இருக்கிறது. ஆனால், இந்து என்ற வார்த்தை மனுதர்மத்திலும் இல்லை; கீதையிலும் இல்லை; இராமாயணத்திலும் இல்லை; வேதத்திலும் இல்லை.


பிறகு யார் சொன்னது?


வெள்ளைக்காரன் சொன்னது - இதை யார் எடுத்துச் சொன்னது?


காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னார்; அதுவும் எந்த சங்கராச்சாரியார்? ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்து கொண்டிருந்தாரே, அந்த சங்கராச்சாரியார் அல்ல. அவருக்கும் குருநாதரான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்தான்.


''இந்து மதம் எங்கே போகிறது?''


இன்னொரு ஆதாரம் இதோ பாருங்கள். அக்னி ஹோத்திரம் இராமானுஜம் தாத்தாச்சாரியார், இவர் வைஷ்ண சம்பிரதாயத்தில் இவர்தான் தலைவர். அவர் எழுதிய ''இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூல் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அந்த புத்தகத்தில் அவர் சொல்கிறார், ''அந்நியர்கள் நமக்கு வைத்த பெயர்; நமக்கு அது சொந்த பெயர் கிடையாது'' என்று சொல்லியிருக்கிறார்.


இந்து நாடாக்குவோம் என்று சொல்வதின் அடிப்படை என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய தலைவர் கோல்வால்கர் சொல்கிறார், இந்துராஷ்டிரத்தை உரு வாக்குவோம்; இந்து நாட்டை உருவாக்குவோம்; பெரும்பான்மை நாங்கள். இஸ்லாமியர்களாக இருக்க வேண்டுமா சிறுபான்மையினராக உள்ளவர்கள்; நாங்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். இராமனைக் கடவுளாக ஏற்றுக்கொண்டால், நீங்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாகத் தொடரலாம்.


கிறித்தவர்கள், கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக்கொண்டால், கிறித்துவர்களாக நீங்கள் இந்த நாட்டில் குடியுரிமை பெற்றவர்களாகத் தொடரலாம். இல்லையானால், எங்களைப் பொறுத்தவரையில், நீங் கள் அந்நியர்கள். குடியுரிமைக்கு தகுதியில்லாதவர்கள்.


ஞானகங்கை - பஞ்ச் ஆஃப் தாட்ஸ்


இதை யார் எழுதியிருப்பது We The Nation என்று சொல்லி, அதனை புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். ஞானகங்கை என்ற பெயரில், பஞ்ச் ஆஃப் தாட்ஸ் என்று கொள்கை முழக்கமாக, கொள்கை ஏடாக.


அரசாங்கத்திற்குஎப்படி அரசமைப்புச் சட்டம் முக்கியமோ,அதேபோன்றுஆர்.எஸ்.எஸ்.அமைப் பிற்கு இருக்கின்ற ஒன்று அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்ற நூல் - இன்றைக்கு ஆட்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது; அதைத்தான் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அதுதான் இராமர் கோவில்.


சரி, இன்னொரு கேள்வி கேட்கிறேன், வித்தி யாசப்படுத்தக் கூடாது என்று சொன்னால், மத அடிப்படையில் ஏன் வேறுபாடு காட்டுகிறீர்கள். மனிதாபிமான அடிப்படையில், அகதிகளாக யார் வந்தாலும் பாருங்கள்.


ஈழத் தமிழர்களுக்குக் கிடையாதாம்?


இந்துக்கள் என்று வரும்பொழுது, அது  ஈழத் தமிழர்களுக்குக் கிடையாது. ஏன் கிடையாது என்று கேட்டால்,


தமிழ்நாட்டில் உள்ள முதலமைச்சரும், அமைச் சர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால்,


''பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?'' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோன்று


தளபதி ஸ்டாலின் கேட்கிறாரா? தி.மு.க.காரர்கள் கேட்கிறார்களா? திராவிட இயக்கத்துக்காரர்களை நாங்கள் கேட்கிறோம் - நீங்கள்  ஆட்சியில் இருக் கும்பொழுது என்ன செய்தீர்கள்? அவர்களுக்குக் குடியுரிமை கொடுத்தீர்களா? என்று கேட்கிறார்கள்.


முன்பு ஆட்சியில் இருக்கும்பொழுது என்ன செய்தீர்கள்? காங்கிரஸ் என்ன செய்தது? என்றெல்லாம் கேட்கவே கூடாது; அந்த வாதமே கூடாது. ஏனென்றால், அதற்காகத்தானே அவர்களை மாற்றிவிட்டு, உங்களைக் கொண்டு வந்து ஆட்சி யில் வைத்திருக்கிறார்கள்; பிறகு ஏன் நீங்கள் அவர் களைப்பற்றி பேசுகிறீர்கள்? இதை நான் சொல்ல வில்லை; காங்கிரஸ்காரர் கருத்திருமனே சொன்னார்.


அன்றைய தமிழக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன்!


அண்ணா முதலமைச்சராக இருக்கும்பொழுது, அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப் பொழுது அவர் சொன்னார், நாங்கள் ஆட்சியில் இருந்தபொழுது என்ன செய்தீர்கள்? என்ன செய்தீர்கள்? என்று கேட் கிறீர்களே, நாங்கள் செய்யாததால்தானே உங்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அதனை நீங்கள் செய்யவேண்டியதுதானே! நாங்கள் ஏன் செய்ய வில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? அதனால் தான் எங்களுக்கு தண்டனை கொடுத்தார்கள் மக்கள்; எங்களை வேண்டாம் என்று நினைத்தார்கள் என்று கேட்டார்.


அந்த வாதமே சரியில்லை!


அப்படி இருந்தாலும், தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும்; இந்து என்று சொல்லி மற்றவர்களை ஏன் பிரிக்கவேண்டும்; இஸ்லாமியர்களை மட்டும் ஏன் தனியாகத் தடுக்கவேண்டும்.


நாட்டை விட்டு விரட்டப்படவேண்டியவர்களாம்!


அந்த புத்தகத்தில் கோல்வால்கர் எழுதுகிறார்,


முதல் எதிரி யார் என்றால், இஸ்லாமியர்


இரண்டாவது எதிரி என்றால் கிறித்துவர்கள்


மூன்றாவது எதிரி யார் என்றால், பொதுவுடை மைக்காரர்கள், கம்யூனிஸ்டுகள்.


நான்காவது யார் என்றால், நாத்திகர்கள்.


மேற்சொன்ன நான்கு பேர்கள்தான் இந்த நாட்டை விட்டு விரட்டப்படவேண்டியவர்கள் என்று எழுதுகிறார்.


அதற்கான ஒத்திகைதானே இப்பொழுது நடை பெறும் சம்பவங்கள். இல்லை என்று அவர்கள் மறுக்க முடியுமா?


நூறு சதவிகிதத்தில்


 


37.8 சதவிகிதம் பெரும்பான்மையா?


அடுத்தபடியாக நண்பர்களே, மோடி தலைமையில் உள்ள மத்திய பா.ஜ.க. ஆட்சி எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் வாங்கியிருக்கிறது தெரியுமா?


37.8 சதவிகிதம்; நூறு சதவிகிதத்தில் 37.8 சத விகிதம் பெரும்பான்மையா? அல்லது நூறில் பாதி யாவது வாங்கியிருக்கிறீர்களா?


அதேபோன்று பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலத்தை எடுத்துக்கொண்டால், எதிர்க்கட்சியில் வெற்றி பெற்று வருபவர்களை அப்படியே மொத்த விலை பேசி வாங்கிக் கொள்கிறார்கள். மொத்தக் குத்தகை பேசுவதுபோல, மொத்த விலை. மாட்டுத்தரகர்கள் தவறாக நினைக்கக்கூடாது; அவர்கள்கூட கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டு, கைகளின் மேல் துண்டை போட்டுக்கொண்டு, விரலால் விலை பேசுவார்கள். ஆனால், இவர்கள் அதுபோன்று கூட செய்வதில்லை; வெளிப்படையாகவே மொத்தமாக விலைக்கு வாங்குகிறார்கள். மந்தையை ஓட்டிக்கொண்டு போவதுபோல, போகிறார்கள்; கூடவே, விலைக்கு வாங்கப்பட்டவர்களும் போகிறார்கள்.


ஒரே நாளில், கட்சி மாறுகிறார்கள்; அரசியல் கட்சி நண்பர்கள் தயவு செய்து தவறாக நினைக்கக்கூடாது. எங்களுக்கு ஒரு பெரிய நிம்மதி என்னவென்றால், நல்ல வேளையாக நாங்கள் பெரியாரிடம் போய்ச் சேர்ந்தோம்; தேர்தலில் நிற்கமாட்டோம்; அதனால், எங்களை யாரும் விலை பேசுவது இல்லை.


ஒரே நாளில் தூய பரிசுத்தமாக ஆகிவிட்டார்!


ஒரே நாளில் கட்சி மாறுகிறார்;  ஏற்கெனவே அவர்மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவர் கட்சி மாறியவுடன், அண்டாவில், குண்டாவில் 'கங்கா ஜலம்' வைத்திருப்பார்கள் போலிருக்கிறதே, அதனை எடுத்து அவர்மீது தெளித்தவுடன், அந்த வழக்குகள் எல்லாம் வாபஸ். தூய பரிசுத்தமாக ஆகிவிட்டார் அவர். திருவாளர் பரிசுத்தம். அடுத்த நிமிடம் அவருக்கு பகல் 1.30 மணிக்கு காவி ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்; மாலை 4.30 மணிக்கு வெளியே வந்துவிடுகிறார்.


மறுபடியும் அவர் வேறு கட்சிக்கு வந்துவிடுகிறார். இது என்ன அர்த்தம்? இவ்வளவு அசிங்கமான ஒரு சூழலை உருவாக்கி, ஜனநாயகத்தையே சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


நம்முடைய நாட்டில் இப்பொழுது


 


விலை உயர்ந்த பொருள் வெங்காயம்!


எந்தக் காலத்திலாவது வெங்காயத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார்களா? விலை உயர்ந்த பொருள் எது நம்முடைய நாட்டில் என்றால், தங்கமா? பிளாட்டினமா? இல்லை, வெங்காயம்தான்.


பெரியார்தான் சொல்வார், வெங்காயம் என்று. அய்யா ஏன் அடிக்கடி வெங்காயம் என்று சொன்னார் என்று இப்பொழுது புரிந்திருப்பார்கள்.


மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம்தான் திரும்பினேன்.


அங்கே நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ''சார் என்ன வாங்கிக் கொண்டு போகிறீர்கள்?'' என்றார்.


நான் புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறேன் என்றேன்.


ஏன் சார் நீங்கள் அதையெல்லாம் வாங்கிக் கொண்டு போகிறீர்கள்; வெங்காயத்தை வாங்கிக் கொண்டு போங்கள் என்றார்.


கஸ்டம்சில் பிடித்துக் கொள்வார்கள் என்றேன்.


அதுதானே உங்கள் நாட்டில் விலை உயர்ந்த பொருள் என்றார்.


ஏனென்றால், தங்கத்தைக் கொள்ளையடிப்பார்கள்; பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்; வெங்காயத் தைக் கொள்ளையடித்த ஒரே ஆட்சி மோடி ஆட்சியை தவிர, பா.ஜ.க. ஆட்சியை தவிர வேறு ஆட்சி உண்டா?


இன்று வெளிவந்த 'தினத்தந்தி' நாளிதழின் தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள். விலைவாசி வானுயர வந்துவிட்டது.


இன்றைக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சியில்


 


ஜி.டி.பி. 4.5 சதவிகிதம்


காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது என்று சொன்னீர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஜி.டி.பி. என்பது ஒட்டுமொத்த 8 சதவிகிதமாக இருந்தது. இன்றைக்கு 4.5 சதவிகிதமாக இருக்கிறது.


வேலையில்லாத் திண்டாட்டம் ஏராளம் இப் பொழுது. இருக்கின்ற கம்பெனிகளை மூடுகிறார்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடையாது.


ஆனால், நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், உலகம் சுற்றும் வாலிபன் போன்று, எல்லா நாடு களுக்கும் சென்று வருகிறார். இங்கே என்ன நடக் கிறது என்பதைப்பற்றி கவலைப்படாமல்.


எனவே, இவர்களுடைய ஆட்சியில், பொருளா தாரம் என்பது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது.


அதேநேரத்தில், மோசடி சாமியார்கள், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம், இங்கே இருந்து சென்று, தீவை உருவாக்கிவிட்டேன்; போட்டி நாடு - இந்து நாடு உருவாக்கி விட்டேன் என்று சொல்கிறார்.


எனவே, மத்திய அரசாங்கத்திற்குப் போட்டி நம் முடைய இயக்கத்துக்காரர்கள் அல்ல; அரசாங்கத்தைக் கவிழ்ப்பவர்கள் கிடையாது. அதேநேரத்தில், அதனை கவிழ்த்து, வேறு விதமாகப் போயிருக்கிறார்கள் நித்தியானத்தாக்களும், காவிச் சாமியார்களும்தான்.


அவர்கள் எப்படி உங்களுடைய அரசாங்கம், உள்துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றின் தய வில்லாமல் எப்படி வெளிநாட்டிற்குச் சென்றார்கள்.


நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளைத் திசை திருப்பத்தான் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்!


எப்படி நீரவ் மோடி போனார்; ஒருவர் சென்றதும், காங்கிரஸ் அரசாங்கத்தை நீங்கள் குறை சொன்னீர்கள்; இன்றைக்கு வைர வியாபாரிகளாக இருப்பவர்கள், ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளி நாட்டிற்குத் தப்பிச் செல்கிறார்களே, அதற்கு என்ன பதில்?


அதையெல்லாம் கேட்கப் போகிறார்கள் என்பதற் காகத்தான், இப்பொழுது இராமர் கோவில், குடியுரிமைப் பிரச்சினை.


விலைவாசியைப்பற்றி கவலைப்படாமல், தங்கம் விலையைபற்றி கவலைப்படாமல், அரிசி, காய்கறி விலைகளைப்பற்றி கவலைப்படாமல் இப்பொழுது நாமெல்லாம் எதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக் கிறோம்?


ஆகவே நண்பர்களே, இது திசை திருப்பல்தான்.


இந்தப் பிரச்சினையால் கலவரங்கள் ஏற்பட்டால், எல்லோரையும் பிடித்து சிறைக்குள் வைக்கிறோம். வீட்டுக் காவலில், நாட்டுக் காவலில் வைக்கிறோம். நாடே சிறைச்சாலை ஆவது என்பது ஜனநாயகமா? பாசிசமா? என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அய்யா நாராயணசாமி அவர்களுடைய தலை மையில் இருக்கிறது. அவர்கள் ஏதாவது ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மீறித்தானே நடந்திருக்கிறது.


தலையில் குட்டு வைத்த நீதிமன்றம்!


இங்கே யாருக்கு அதிகாரம் என்ற பிரச்சினையில், நீதிமன்றத்திற்குச் சென்றவுடன், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. ஆனாலும், அந்த நீதிமன்றத் தீர்ப்புகூட சரியாக அமல்படுத்தப் படவில்லை.


நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்படவில்லை;  அரச மைப்புச் சட்டம் மதிக்கப்படவில்லை; ரிசர்வ் வங்கி ஆளுநராக வந்தவர் சுதந்திரமாகக் கருத்துச் சொன்னால், அது மதிக்கப்படுவதில்லை; பொதுவானவர்கள் கருத்துச் சொன்னால், அவர்களையெல்லாம் கைது செய்யவேண்டும்; அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசத் துரோகம்  என்ற அம்பை எய்த வேண்டும் என்று சொன்னால், என்ன அர்த்தம்?


தேர்தலுக்கு முன்பே சொன்னோம்;


 


தமிழகம் விழித்துக்கொண்டது!


எனவேதான், நீங்கள் இன்றைக்கு விழிப்போடு இருக்கவேண்டும்; இதை நாங்கள் முன்பே சொன் னோம்; நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சொன்னோம்; தமிழகம் விழித்துக்கொண்டது; ஆனால், மற்ற பகுதிகள் விழித்துக் கொள்ளவில்லை. மக்களை மட்டும் குறை சொல்ல விரும்பவில்லை. கட்சிகளும் அதற்குக் காரணம்.


இங்கே ஒரு ஒற்றுமையை நாம் கட்டினோம்; இங்கே உரையாற்றிய அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டிலே ஒரு நல்ல கூட்டணியை உருவாக் கினோம்; புதுச்சேரியையும் சேர்த்தோம். அதனால், இங்கே எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. இங்கே சாயம் ஏற்ற முடியவில்லை. ஜனநாயகம் காயப்படுத்தப்படவில்லை. ஆனால், வேறு வகையில் அதனை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.


இது பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி,


 


அறிவியலை உருவாக்கிய பூமி


அதேநேரத்தில், அன்றைக்கு வடநாட்டில் உள்ள வர்களுக்குப் புரியவில்லை. இன்றைக்கு அவர்களும் புரிந்துகொண்டார்கள்.


நமக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்றால், நம்மாட்கள் தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். காரணம், இது பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி, அறிவியலை உருவாக்கிய பூமி.


ஆனால், அங்கே அப்படியில்லை. எடுத்தவுடனே கலவரங்கள்தான் நடைபெறும். வாரணாசியில் கல வரம், டில்லியில் கலவரம், உத்தரப்பிரதேசத்தில் கல வரம், மேற்கு வங்கத்தில் கலவரம், வடகிழக்கில் கலவரம், மற்ற இடங்களில் கலவரம்.


இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததினால் நடை பெறும் கலவரங்களால், வெளிநாட்டு அதிபர்கள் வருகையை ரத்து செய்திருக்கிறார்கள். வெளிநாட் டுக்காரர்கள் இதனைக் கண்டித்து தீர்மானம் போடு கிறார்கள். நம்முடைய நாட்டின் மரியாதை என்னாவது? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.


பக்தியைவிட, புத்தி மிக முக்கியம்!


எனவேதான், இங்கே வந்திருப்பவர்கள் அத்துணை பேரும் - நீங்கள் யாரும் எங்களுடைய தேசப் பக்திக்குக் களங்கம் கற்பிக்க முடியாது. எங்களுக்கு தேசம் உண்டு; எங்களுக்குப் பக்தி இருக்கிறதா? என்பது பிறகு; எங்களுக்குப் புத்தி இருக்கிறது. பக்தியைவிட, புத்தி மிக முக்கியம். புத்தி இருப்பவன்தான் பலசாலி.


கட்சிகளுக்கு என்னுடைய வேண்டுகோள் என்ன வென்றால், ஒன்றே ஒன்றுதான்.


இப்பொழுது தீப்பிடித்து எரிகிறது; அது அணைக்கப்படவேண்டும்; அந்தத் தீ காவித் தீ.


அந்தத் தீ முழுக்க முழுக்க காலிகளால் வைக்கப்பட்ட தீ. காலிகளால் வைக்கப்பட்டாலும், முதலிலே தொடங்கியது காவிகள்தான் தொடங்கினார்கள் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய அபாயம் இருக்கிறது.


எனவேதான், இந்த மக்கள் அண்ணன் தம்பிகள். இஸ்லாமியர்கள் என்றால் யார்? நம்முடைய அண்ணன் தம்பிகள்தானே! இங்கே சாயபு மரைக்காயர் சொன்னார் அல்லவா! கஞ்சி கொடுத்தோம் என்றும், பொங்கல் விழாவிற்கு அவர் வந்தார் என்றார்.


''இஸ்லாம் ஆனவர்கள் தெரு''


நான் கடலூர்காரன். அங்கே இஸ்லாமிய நண்பர்கள் ஏராளம் உண்டு. நான் படித்தது அங்கேதான். உங் களுடைய பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?


''இஸ்லாம் ஆனவர்கள் தெரு''வில் உள்ளது என்பார்கள்.


அந்த வார்த்தையை நன்றாகக் கவனியுங்கள்; இஸ்லாம் ஆனவர்கள்; இஸ்லாம் ஆனவர்கள் என்றால், என்ன பொருள்? அவர்கள் எல்லாம் அரேபியாவில் இருந்து இங்கே பொத்தென்று குதித்தவர்கள் அல்ல. இங்கேயே இருந்தவர்கள்தான்.


அவர்களை நீ எட்டி நில் என்றீர்கள் நீங்கள்; யார் கட்டிப் பிடித்தார்களோ, அங்கே போய்விட்டார்கள் அவர்கள்.


உன்னுடைய மதம் தொடக்கூடாது என்றது; அவர்களைப் படிக்கக்கூடாது என்று சொல்லியது: அவர்களை எட்டி நில் என்று சொல்லியது: சண்டாளா என்றது.


இன்னுங்கேட்டால், அதைவிட அசிங்கம், சொல் வதற்கே அசிங்கப்படவேண்டும்.


பாரத ரத்னா பட்டம் போன்று


 


நினைத்திருந்தார்கள்


மனுதர்மத்தில் எட்டாவது அத்தியாயம், பத்தாவது சுலோகத்தில் சொல்கிறார்கள்,


சூத்திரன் என்றால், தேவடியாள் மகன் என்று.


எங்களுடைய தாய்மார்கள் எல்லாம் தாசிகளா? இவ்வளவு அவமானத்தை இந்த நாடு பொறுத்துக் கொண்டிருக்கிறதே, பெரியார் என்ற மாமனிதர் தோன்றவில்லை என்றால், என்னாவாகியிருக்கும்.


இந்த சூத்திரப் பட்டத்தை, ஏதோ பாரத ரத்னா பட்டம் போன்று நினைத்திருந்தார்கள், நம்மாட்கள். இதை உணர்த்தியதே அவர்தானே.


''இவாளலெல்லாம் சூத்திராள்; நாங்கள் எல்லாம் சற்சூத்திராள்'' என்றார்கள் சிலர்.


சூத்திராள்; சற்சூத்திராள் என்றால்


 


என்ன பொருள்?


உடனே பெரியாருக்குக் கோபம் வந்து, ''அட முட்டாள் பயலே, சூத்திரன் என்றாலே, தாசிப் பிள்ளை கள் என்று சொல்கிறார்கள்; நீ அதனை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவாள் எல்லாம் சூத்திராள்; நாங்கள் எல்லாம் சற்சூத்திராள் என்று ஒருபடி மேலே என்று சொன்னால், நீ அசல் 'தேவடியாள் மகன்' என்று அல்லவா சேர்க்கவேண்டும் என்று சொல்வார்.


அந்த வார்த்தையை நான் சொல்ல மாட்டேன்; பெரியார் சொல்வார், அவருக்கு வயசு இருந்தது.


இந்த இழிவை, பிறவி இழிவை ஒழித்தவர் தந்தை பெரியார்.


என்னுடைய தாய் விதவையானால், முன்னால் வராதே என்று சொன்ன மதம்தான் இந்து மதம்.


இன்றைக்கு இந்த இயக்கத்தினால், பார்ப்பனர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள். பார்ப்பனப் பெண்கள் உள்பட அத்தனை பெண்களுக்கும் விடுதலை கொடுத் தது இந்த இயக்கம்தான்.


இந்த இயக்கம் யாருக்கும் விரோதமானதல்ல; யாரையும் வேற்றுமைப்படுத்தக் கூடிய இயக்கமல்ல.


இன்றைக்கு ஒரு மொட்டைப் பாப்பாத்தியையாவது பார்க்க முடியுமா?


ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அக்கிர காரத்திற்குச் சென்றால், மொட்டைப் பாப்பாத்தி அம்மா என்று இருப்பார்கள். வெள்ளை சீலை கட்டிக்கொண்டு, மொட்டை அடித்துக்கொண்டு, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு இருப்பார்கள்.


இன்றைக்கு ஒரே ஒரு மொட்டைப் பாப்பாத்தியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கலாம். நம்மாட்கள், நம் முடைய பெண்கள் வேண்டுமானால், அப்படி வேடம் போட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் அப்படியில்லை. திருந்திவிட்டார்கள், பாராட்ட வேண்டும், வரவேற்கிறோம்.


திராவிடர் இயக்கம் செய்த


 


அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி


எப்படி அந்தத் தைரியம் வந்தது? திராவிடர் இயக்கம் செய்த அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி.


பெண்ணுரிமை, பெண்கள் ஆண்களைப் போல படிக்கவேண்டும். வித்தியாசம் இருக்கக் கூடாது. கீழ்ஜாதி - மேல்ஜாதி என்ற பேதம் இருக்கக்கூடாது.


எங்களுக்கு மதம் பிடிக்காது; மனிதர்களுக்கு மதம் பிடிக்கக் கூடாது.


மதவெறியை மாய்ப்போம் -


மனிதநேயத்தைக் காப்போம் -


ஜாதியை ஒழிப்போம் -


சமத்துவத்தை உருவாக்குவோம் -


சாமியார்கள் இல்லாத நாடு -


ஜனநாயகம் தழைக்கும் நாடு என்பதைப் புரிந்துகொண்டு, பகுத்தறிவோடு இருங்கள்.


சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழாவில்


 


சூளுரை எடுப்போம்!


அதைத்தான் சி.மு.சிவம் விரும்பினார் -


அவருடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் அதையே சூளுரையாக எடுப்போம் என்று கூறி,


மழையையும் பொருட்படுத்தாமல், மழையும் போட்டியிட்டது; நாங்களும் போட்டியிட்டோம். நாம் வென்றோம், மழை தோற்றது. இதுதான் எதிர் காலத்திலும் நடக்கும்.


எனவே, மத்திய அரசு எங்களோடு போட்டி போட்டால், நீங்கள் தோற்பீர்கள். நாங்கள் வெற்றி பெறு வோம் என்பதற்கு இந்தக் கூட்டமே அடையாளம் என்று சொல்லி, மக்கள் எங்களோடுதான் இருப்பார்கள். மழை என்றால், ஓடிவிடக் கூடிய கூட்டமல்ல, இந்தக் கூட்டம்.


பெரியாரின் தொண்டர்கள் - லட்சியத்திற்கு விலை கொடுக்கும் தொண்டர்கள்!


அதேபோன்று, அச்சுறுத்தல் என்றால், கலைந்து விடக் கூடிய கூட்டமல்ல.


அடக்குமுறை என்றால், கலைந்து ஓடிவிடக் கூடிய கூட்டமல்ல; அதனை நெஞ்சிலே சந்திக்கக்கூடிய, ஏந்தக் கூடிய பெரியாரின் தொண்டர்கள். லட்சியத்திற்கு விலை கொடுக்கும் தொண்டர்கள் என்பதைக் கூறி,


சிறப்பாக இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த அத்தனை தோழர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.


நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வளர்க சி.மு. சிவம் அவர்களுடைய புகழ்!!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.


இந்தக் கடவுளா உங்கள் கடவுள்?

 

05.06.1948 -குடிஅரசிலிருந்து..

கடவுளுக்கே இந்தக் கதியானால் அவர்கள் தம் கதி என்னவாகும் என்று அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களாஅப்புறம் ஒரு நாள் வெளியே போவார்களாஉங்கள் புருஷர்கள்வேறு மங்கையர்களைத் தேடிஅந்தச் சாமியை அடித்து வைத்தவன் நம்மவன்அந்தச் சாமிக்கு உயிர் பிச்சை கொடுக்க கும்பாபிஷேகம் நடத்த உதவியது நம்முடைய பொருள்.

அந்த சாமிக்கு அரிசிபருப்பு அழுது வருவது நாம்அப்படியிருக்க நாம் அதைத் தொடக் கூடாதென்று அந்த பார்ப்பான் கூறுகிறானென்றால் அப்படிப்பட்ட இடத்திற்கு நாம் போகலாமாஅதற்குத் தேங்காய் பழம் படைக்கிறீர்களேதுணிமணி வாங்கித் தருகிறீர்களேஅதை அந்த குழவிக் கல்லா அனுபவிக்கிறதுகுழவிக் கல்லால் சாப்பிட முடியுமாசாப்பிட்டால் ஜீரணமாகி வெளிக்குப் போகிறதாஎல்லாவற்றையும் பார்ப்பான்தானே அனுபவிக்கிறான்பாடுபட்ட பணத்தை அப்படி விரயமாக்கலாமா நீங்கள்கடவுள் என்றால் அது யோக்கியமாகஒழுக்கமாக பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டாமா?

பாடுபடும் நீங்கள் பட்டினி கிடக்கபடிக்க வசதியின்றித் தற்குறிகளாயிருக்கஏழைகளாககீழ் ஜாதி மக்களாக இருக்கபாடுபடாத பார்ப்பனத்திகள் சோம்பேறிகளாகஅய்.சி.காரர்களின் மனைவிகளாகபட்டாடை உடுத்தி மேனி மினுக்குடன் உயர் ஜாதி மக்களாக வாழ அனுமதிக்கும் கடவுளா உங்களுக்குக் கடவுள்?

இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா ?

 

'இந்துத்துவா'பற்றி காணொலியில் தமிழர் தலைவர் "இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா?"


* கலி. பூங்குன்றன்


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 'இந்துத்துவா' எனும் தொடரில் தனது இரண்டாம் நாள் சொற்பொழிவை நேற்று (7.9.2020) மாலை 6.30 மணிக்குக் காணொலி மூலம் நிகழ்த்தினார்!



இந்து மதச் சீர்திருத்த வாதிகள் போல தோற்றமளித்து, அதே நேரத்தில் இந்து மதத்தின் அடிப்படை வாதங்களான சனாதனம், வருணாசிரமத்தைக் கட்டிக் காப்பதில் கவனமாக இருந்தவர்கள் என்ற வகையில் தயானந்த சரஸ்வதி, அரவிந்தகோஷ், விவேகானந்தர், வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். என்று வரிசைப்படுத்தலாம்!


இதில் விவேகானந்தர் (இயற்பெயர் நரேந்திரன்) மிஷனரி கல்விக் கூடத்தில் படித்து ஆங்கிலத்தில் ஈர்ப்பாகப் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர் - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர்.


தொடக்கத்தில் கடவுள் உண்டா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாத Agnostic என்ற நிலையில்இருந்தார்.


பிறகு பிரம்ம சமாஜம் பக்கம் சென்றார். கடைசியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் போனார் - அவரைக்கூடத்  தொடக்கத்தில் ஒரு பைத்தியக்காரர் என்ற அளவில்தான் மதிப்பிட்டார். பிறகு எப்படியோ அவரின் சீடர் ஆனார். அதிலும்கூட அவர் தத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இராம கிருஷ்ணரோ காளிபக்தர் - இவரோ அதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.


இவர் அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற்ற மதங்களின் மாநாட்டில் ஆற்றிய உரைதான் பெரிதாகப் பேசப்படுகிறது.


அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரியான கருத்தினைக் கூறக் கூடியவர் - சீர்திருத்தக்காரர் போல சில இடங்களில் பேசுவார். ஆனாலும் இந்து மதத்தின் அடிப்படைவாதங்களை விட்டுக்கொடுக்காதவர்  அவரைப் பற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறவர் பற்றி - தந்தை பெரியாரின் கருத்து எப்படி இருக்கும்? அமெரிக்காவிலேயே அவருக்கு விழா எடுக் கிறார்களே என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது "முட்டாள்தனம் என்பது உனக்கே சொந்தமா?" என்று கேட்டார் பெரியார்.


சிகாகோவுக்கு அவர் செல்ல உதவி புரிந்தவர் இராமநாதபுரம் ராஜாதான். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு விவேகானந்தரைப் பிடிக்காது; காரணம் விவேகானந்தர் ஒரு சூத்திரர்தானே! அதனால் தான் பார்ப்பனர்கள்பற்றி சில நேரங்களில் விவேகானந்தர் கடுமையாகத் தாக்கிப் பேசியதுண்டு.


அமெரிக்க மாநாட்டில் அவர் பேசும் தலைப்பு "இந்து மதம்" என்பதுபற்றியல்ல, மாறாக 'பிராமணியம்' எனும் தலைப்பில்தான் பேசினார்.


"பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகியஇரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.


உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதைப் போதிப்பது நமது தர்மம்-


"சர்வே பவந்து சுகினஹ


சர்வே சந்து நிராமையா, சர்வே பத்ரானி


பாஷ்யந்து மாகசிஷித்துக்க


பாத்பவே, ஓம் சாந்தி,சாந்தி, சாந்தி"


எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். எல்லோரும் நோயின்றி இருக்க வேண்டும், எல்லோரும் வளத்தைக் காண வேண்டும்! யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று உபநிடதம் கூறுகிறது என்று சிகாகோ மாநாட்டில் எல்லோரும் வியக்கும்படி விவேகானந்தர் பேசினார்.


ஓரிடத்தில் இவர் பேசுவதை வைத்துக் கொண்டு இவர் இப்படிப்பட்டவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பச் சூழ்நிலையையொட்டிப் பேசக் கூடியவர்தான் இவர்.


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக இவர் ஒரு முறை தங்கி இருந்தபோது 'உங்கள் கோத்திரம் என்ன?' என்று கேட்டவர்தான் இவர்.


(திராவிடக் கோத்திரம் என்று அவர் பதிலடிகொடுத்தவர்  சுந்தரனார் என்பது சுவையானது - ஏன் ஆழமான கருத்தும்கூட!)


சங்கராச்சாரியாரை சாடியதுண்டு. சூத்திரன் சந்நியாசம் ஆகக் கூடாது என்று சங்கராச்சாரியார் சொன்னார் அல்லவா -  விவேகானந்தரும் சூத்திரர் என்பதால் சங்கராச்சாரியார்மீது கோபம்.


புத்தரையும் சங்கரரையும் அவர் ஒப்பிட்டுக் கூறும்போது - 'சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல் மிகவும் கூர்மையாய் இருந்தது. ஆனாலும் அவரிடம் அகன்ற நோக்கமில்லை. வாதத்திலே தோல்வியடைந்த புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கிய சங்கரர் எங்கே, சிறு ஆட்டுக் குட்டியின் உயிரைக் காக்க தன் உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்த புத்தர் எங்கே? என்று பேசிய இதே விவேகானந்தர்தான், புத்தரால்தான் நாட்டில் அகிம்சை உணர்வு மக்களிடம் ஏற்பட்டு சமூகம் வீழ்ச்சி அடைந்தது என்று குற்றம் சொன்னவரும் இதே விவேகானந்தர்தான்.


ஆரிய நாகரிகமே உலகில் சிறந்தது. இந்து மதத்தில் வருணதர்மம் என்பது உயர்வானது - சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்பார்.


இன்னொரு இடத்தில் இதற்கு நேர் எதிராகப் பேசுவார்.


"மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர் என்கிறார் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் ('தமிழர் மதம்'  பக்கம் 24).



விவேகானந்தர் இப்படியென்றால் விநாயக தாமோதர சாவர்க்கர் என்பவர்தான் 'இந்துத்துவா' என்ற ஒன்றை உருவாக்கியவர்.


'Hindutva'  என்ற நூலையும் இதற்காகவே எழுதியவர் - காந்தியார் கொலைக்கு மூளையாக இருந்தவர். சட்டத்தின் சந்துப் பொந்துகளில் நுழைந்து, தண்டனையிலிருந்து தப்பியவர்.


அந்தமான் சிறையில் இருந்தபோது எத்தனை முறை பிரிட்டீஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதற்குக் கணக்கு வழக்கு இல்லை - அப்படிப்பட்ட வீராதி வீராதி வீரர்தான் -  இந்த வீர சாவர்க்கார்.


இங்கிலாந்து சென்று படித்தவர். இத்தாலி சென்று மாஜினியைச் சந்தித்து வந்தவர். இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு மூலக்கரு இத்தாலிதான். ஆர்.எஸ்.எஸைத் தொடங்கிய முக்கியமானவர்களுள் ஒருவரான மூஞ்சே என்னும் பார்ப்பனர் பாசிஸ்ட் முசோலினியை நேரில் சென்று சந்தித்தவர். உங்கள் வழியில்தான் நாங்களும் செயல்படுவோம் என்று முசோலினியிடம் உறுதி அளித்து வந்தவர்!


இந்த சாவர்க்கார் இந்து மகா சபையின் தலைவராக 1938 முதல் 1943 வரை இருந்தவர். இவரைத் தொடர்ந்துதான் சியாமபிரசாத் முகர்ஜி அதன் தலைவராக இருந்தவர்.


இந்துத்துவா இந்துத் தேசியம் என்பதற்கு சாவர்க்கார் கொடுத்த விளக்கம் கவனிக்கத்தக்கது.


இப்படிச் சொன்ன ஒரு மதவெறியரைப்பற்றி என்ன பிரச்சாரம் என்றால் சாவர்க்கார் ஒரு நாத்திகர் என்பதுதான். இந்தக் கூட்டத்தின் தில்லுமுல்லுக்கு அளவேயில்லை.


இவர் கொடுத்த முக்கிய கோஷம்தான் "இந்து மதத்தை இராணுவமயமாக்கு! - இராணுவத்தை இந்துமயமாக்கு!" என்பதாகும்.


இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறு என்று வியாக் கியானம் செய்வார்கள். 'இந்து' என்பதை மய்யப்படுத்தி ஏன் குழப்பத்தைச் செய்யவேண்டும். வெவ்வேறு வகையில், மயக்கத்திற்கு இடம் அளிக்காத வகையில் சொற்களை உருவாக்க வேண்டியதுதானே - எதிலும் குழப்பம் - அதில் ஆதாயம் காண்பதே ஆரியம்.


இந்துமதம் என்பது ஒரு வாழ்க்கை நெறி என்றும் கூறுவார்கள். கேட்டால் உச்சநீதிமன்றமே அப்படிக் கூறி விட்டது என்பார்கள்.


2011ஆம் ஆண்டு மகாராட்டிரத் தேர்தலில் சிவசேனை சார்பில் போட்டியிட்ட மனோகர் ஜோஷி 'எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இந்தியாவில் முதன் முதலாக அமையும் இந்து மாநிலம் மகாராட்டிரம் தான்' என்று பேசினார்.


தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி - இந்த அடிப்படையில் மனோகர் ஜோஷியை எதிர்த்து நின்றவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.


நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறிய ஒரு வார்த்தையைக் கொண்டு இந்து மதம்என்பது ஒரு மதம் அல்ல - வாழ்க்கை நெறி என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.


அதே நீதிபதி ஜே.எஸ். வர்மா, தான் சொன்னது வேறு - அதைத் திருத்திப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறியதும் உண்டு.


கலாச்சார, மத, அரசியல் நோக்கங்களைக் கொண்ட கலவையாக இருப்பவையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியங்களாகும். இந்து (மத) தர்மத்தையும், இந்து சமஸ்கிருத கலாச்சாரத்தையும் காத்து வளர்ப்பதையும் இந்து ராஷ்டிரா என்னும் இந்து தேசத்தை உருவாக்குவதையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு இது.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் உறுப்பினரான நாதுராம் கோட்சேயினால் மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, பொதுமக்களின் பார்வைக்கேனும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது அரசியல் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று 1948 ஜனவரி மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வற்புறுத்திக் கூறினார்.


 அதன் படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டத்தில் இருந்த 'இந்து ராஷ்டிரா' என்ற சொற்றொடர் இவ்வாறுதான் நீக்கப்பட்டது. இனி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முற்றிலும் ஒரு கலாச்சார அமைப்பாகவே செயல்படும் என்றும், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாது என்றும் இந்த அமைப்பு அரசுக்கு உறுதி அளித்தது.


சாவர்க்கரால் எழுதப்பட்ட 'இந்துத்துவா' என்ற நூலில் அவரால் புதியதாக உருவாக்கப்பட்ட சொல்லாடலான 'இந்துத்துவா' என்பது, இந்து மதம் மற்றும் இந்து மக்களிடையே நிலவும் ஒட்டுறவை ஒத்த  பார்வையைத் தங்கள் நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள இயன்ற தனிச் சிறப்பு பெற்றதாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டுகொண்டது.


இந்துமதம்  - மதம்


இந்துத்துவா - மதத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டது அல்ல என்பது சாவர்க்கரின் கருத்து.


இந்து தேசம் என்ற ஒன்றால்


ஒரு பொதுவான கலாச்சாரத்தாலும்,


ஒரு பொதுவான வரலாற்றாலும்,


ஒரு பொதுவான தேசத்தாலும்,


ஒரு பொதுவான மதத்தினாலும்,


பண்பாடு இருப்பவர்கள் இந்துக்கள் ஆவர்.


"ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர்” என்பது சங்பரிவாரத்தின் முக்கிய அடிப்படை முழக்கமாக ஆகிவிட்டது.


இந்துத்துவாவின் மறைமுக செயல்திட்டம்.


(ஆதாரம்: வி.டி.சாவர்க்கரின்


இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 82)


இந்து என்பவன் யார்?


"இந்த தேசத்தை பாரத வர்ஷா என்றும், சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தை நாடு என்றும், புனித பூமி என்றும், தனது இந்து மதத்தின் தொட்டில் என்றும் எவன் ஒருவன்  கருதுகிறானோ அவனே இந்து என்பவன்.'


(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 38-39)


'சிந்து' என்ற சொல்லின் வளர்ச்சியைப் பற்றிய ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாம் இதுவரை சமஸ்கிருத மொழியையே சார்ந்திருந்தோம். ஆனால், தற்போதுள்ள வேறு எந்த ஒரு சொல்லையும்விட, 'சிந்துஸ்தான்' என்ற சொல்லினால், இந்து தேசம் பற்றிய கருத்து இன்னமும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட இயலும் என்பது தெரிய வந்த ஒரு காலகட்டத்தில், நமது தேடுதல் எனும் நூலின் முனையை நாம் கைவிட்டுவிட்டோம். இச்சொல்லினோடு ஆர்யவர்த்தா என்பதை இணைத்துப் பார்த்தால் தந்தை வழிக் குறுகிய ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருப்பதாக அது பொருள் தரும்; ஆனால், ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது கட்சி வண்ணம் பூசப்பட்டதுடன் தொடர்பு ஏதுமற்றதென விளக்கம் அளிப்பதாக சிந்துஸ்தான் என்ற சொல் அமைந்திருக்கிறது.


எடுத்துக்காட்டாக, ஆர்யவர்த்தா என்பது என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதைக்  காண்க.


நான்கு வர்ண நடைமுறை இல்லாத நாடு மிலேச்ச நாடாகும்; ஆர்யவர்த்தம் என்பது அதற்கும் வெகு தொலைவில் இருப்பதாகும்.)


 (- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 115 )


அதனால், இவற்றின் முடிவுகளைத் தொகுத்துக் காணும்போது, சிந்து முதல்  - இந்துக்களிலிருந்து கடல்கள் வரையிலான பூமியை தனது முன்னோர்களின் நிலமாக, தந்தை நிலமாக (பித்ரு) என்று எவன் ஒருவன் காண்கிறானோ, வேதகால சப்த சிந்துவில் தனது தோற்ற மூலத்தில் இருந்து வந்த இனத்தின் ரத்தத்தை எவன் பாரம்பரியமாக வரித்திருக்கிறானோ, கற்றறிந்து கொள்ள வேண்டியவைகளை  அதிகமாக எவன் கற்றறிந்து கொண்டானோ, அவனே இந்து என்று அறியப்படும் மனிதனானான். அவர்களது பொது செம்மொழியான சமஸ்கிருதத்தில் முக்கியமாக விவரிக்கப் பட்டுள்ள இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்றிருப்பதாகவும், பொதுவான வரலாறு ஒன்றின் பிரதிநிதி யாகத்தான் இருப்பதாகவும்,பொதுவான இலக்கியம், கலை, கட்டக்கலை, சட்டம், நீதிநெறி சடங்குகள் சம்பிரதாயங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், புனிதவேள்விகள் ஆகியவற்றைத் தான் பெற்றிருப்பதாகவும் எவன் ஒருவன் உரிமை கோருகிறானோ, அனைத்துக்கும் மேலாக, சிந்துஸ்தான் என்னும் இந்த பூமியை தனது புனித பூமியாக (புண்யபூ)வும், வருமுன் உரைப்போர்கள், சமயக்குருமார்கள், மடாதிபதிகள், கடவுள் மனிதர்களின் பூமியாகவும், பக்தியும், தலயாத்திரையும் மிகுந்து விளங்கும் பூமியாகவும் காண்பதாக எவன் ஒருவன் உரிமை கோருகிறானோ, அவனே இந்து எனப்படுபவன் ஆவான்.


ஒரு பொதுவான தேசம் (ராஷ்டிரா), ஒரு பொதுவான இனம் (ஜாதி), பொதுவான ஒரு கலாச்சாரம் (சமஸ்கிருதம்) ஆகியவை அனைத்தும் இந்துத்துவாவுக்கு முக்கியமாகத் தேவைப்படும் அம்சம்களாகும்.


இந்த  அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தொகுத்து சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூறுவதானால் சிந்துஸ்தான் என்பது பித்ருபூமியாக மட்டுமல்லாமல், புண்ய பூமியாகவும் எவன் ஒருவனுக்கு இருக்கிறதோ அவனே இந்து எனப்படுபவன் ஆவான்.


இந்துத்துவாவின் முதல் இரண்டு முக்கியமான தேவைகளான தேசம் மற்றும் ஜாதி என்பவை பித்ருபூமி என்ற சொல்லினால் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப் படுவதாகவும், சுட்டிக் காட்டப்படுவதாகவும் உள்ளது. மூன்றாவது முக்கியத் தேவையான சமஸ்கிருதம் (கலாச்சாரம்) என்பது புண்யபூமி என்ற சொல்லினால் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஒரு புண்ய பூமியை உருவாக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் கொண்டாட்டங்கள், புனித வேள்விகள் என்னும் சமஸ்காரங்கள் உள்ளிட்டவை அடங்கிய சமஸ்கிருத மொழி மதிப்பு மிகுந்ததாகும்.


(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 115)


சதுர்வர்ணாய விய வஸ்தாடன


யாஸ் மின்தேஷ் ஹிக நாபித் யத்தே


தாம்மிலேச்ச தேஷ்தாம்


ஜன்யதார் ஆரிய வர்த்தாஷ் பரே


The Land where the system of four varnas does not exit should be known as the mellach country arya vart lies away from it.


எந்த நாட்டில் நான்கு வருணம் இல்லையோ, அந்த நாடு மிலோச்சர்களின் நாடு என்று பொருள் -


இதுதான் சாவர்க்கார் கூறும் ஹிந்துத்துவா.


அய்ந்தாவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் - அவர் எழுதிய 'ஞான கங்கை' (Bunch of Thoughts) முக்கியமானதாகும்.


இந்து ராஷ்டிரம் இதன் கொள்கையாகும். முசுலிம்களுக்கு ஒரு பாகிஸ்தான் என்பதுபோல இந்துக்களுக்கு ஒரு நாடு இந்தியா என்பதே அவர்களின் அடிப்படை!


இந்துக்கள் அல்லாதாருக்கு இங்கு வேலையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு.


அண்மையில் கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இந்தியாவில் உள்ளவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்த வர்களானாலும் அவர்கள் இந்துக்களே என்று சொல்ல வில்லையா!


'ஞான கங்கை' நூலை எழுதிய கோல்வால்கர் இன்னொரு நூலையும் எழுதியுள்ளார்.


"We or our nationhood defined" என்பது அந்த நூலாகும். அந்த நூலில் மிக மிக வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.


"இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது.  அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்" என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் என்றால் இதற்குப் பெயர்தான் இந்துப் பாசிசம் என்பது!


இப்பொழுது ஆர்.எஸ்.எசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன? கோல்வால்கரின் நூல்களை மீண்டும் பிரசுரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறும் நிலை ஏற்பட்டு விட்டது.


(நாளை சந்திப்போம்)