பக்கங்கள்

பௌத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பௌத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஜூன், 2024

பவுத்தத்தின் வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார்


2023 அக்டோபர் 16-31, 2023 உண்மை Unmai

– தஞ்சை பெ. மருதவாணன்

சனாதன தர்மத்தை நிலைநாட்ட கொலை பாதகம் உட்பட எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பது ஆரிய தர்மத்தின் கொள்கை. கொலை நூலாகிய பகவத்கீதையின் கருத்தும் இதுவே. இக்கொலை பாதகத்தை ஆதரித்துக் காஞ்சிப் பெரியவாள் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய இருளுரை வருமாறு:-

“தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது எப்படி இருந்தாலும் பண்ணவேண்டும். இம்சை என்று பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம்
பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா? அப்படிப் பசு ஹோமம் பண்ணுவதிலே தப்பே இல்லை. பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான
23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப்பெரிய அசுவமேதத்துக்குக் கூட 100 குதிரைகள் தான் சொல்லியிருக்கிறது”. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி ‘யக்ஞம்’ என்னும் தலைப்பில் இதுபற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது).

(விடுதலை 20.5.2023 பக்கம் 2 தலையங்கம்)

இந்த ஆரிய தர்மத்துக்கு ஏற்பவே பவுத்த எதிர்ப்பும் படுகொலைகளும் புஷ்யமித்திரனால் மூர்க்கமாக அரங்கேற்றப்பட்டன. அவை ஒரு தேசியக் கடமையாக சாவர்க்கரின் பார்வையில் எதிரொலித்ததும் அதன் அடிப்படையிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

பவுத்தத்தின் வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார்

மகாகவி என்றும், தேசியக்கவி என்றும் புகழப்படும் சுப்பிரமணிய பாரதியார் எந்த அளவுக்குப் பவுத்தத்தின் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் தமிழாக்கம் செய்துள்ள பகவத்கீதை உரைநூலின் முன்னுரையில் காணமுடிகிறது.

(வெளியீடு சென்னை பூம்புகார் பதிப்பகம், நான்காம் பதிப்பு – 1994)

1. தன்னுடைய முன்னுரையில் பாரதியார் “மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளி விட்டது” என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார்.

2. “(யாகத்தில்) கொலைகளைச் செய்தல் மோட்சத்துக்கு வழியென்ற போலி வைதீகரைப் பழி சூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும் அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்திவிட்டார்கள்” என்று கவலைப்படும் பாரதியார் யாகத்தில் உயிர்ப்பலி என்பது சாஸ்திர சம்மதத்தை உடையது என்பதை வசதியாக மறைத்துவிட்டார்.

3. “புத்த மதத்தை வென்று இந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார்” என்று கூறி புத்தமத வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார் அதை நிறைவேற்ற அவதரித்த ஆதிசங்கரரைப் புகழ்ந்து தனது பவுத்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.

4. “தம்மாலே (அதாவது ஆதிசங்கரரால்) வெட்டுண்ட புத்தமதம் என்ற விருட்சத்தின் கிளைகள் பலவற்றை இந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார்” என்று புத்த மதக் கொள்கைகளைக் களவாடிக் கொண்டதை வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்ளும் பாரதியார் அதற்காகப் புத்தமதத்துக்கு நன்றி பாராட்டு
வதற்கு மாறாகப் புத்தமத ஒழிப்புக்கு ஆதிசங்கரர் ஆற்றிய துரோகச் செயலைப் பாராட்டி மகிழ்கிறார்.

5. “பத்தினியைத் துறந்தவர்கள் மேலோர் என்று வைத்து அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை வைத்து உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக்கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞானநெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசம் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு. அதை நல்லவேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது” என்று கூறுகிறார். இல்லறத்தைத் துறந்த துறவிகளே மேலோர் என்றும், ஏனையோர் கீழோர் என்றும் புத்தர் கூறாததை மனச்சான்றுக்குப் புறம்பாகவோ அல்லது அறியாமையாலோ கூறும் இவர், உலகமே போற்றும் மனித நேயமிக்க அறநெறியான புத்தநெறியை மனித நாகரிகத்துக்கு எதிரானது என்று கூறித் தனது ஆரிய விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறார். பாரதியாருக்குப் பவுத்தம் கசக்கிறது. வருணபேதம் காட்டும் அநாகரிக ஆரிய வேதங்கள் இனிக்கின்றன. ஆதிசங்கரரைப் போற்றும் இவர் புத்தரைக் குற்றம் சொல்கிறார்.

6. “புத்தமதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பி விட்டது” என்று புத்தர் கருத்துக்கு மாறான ஒரு கொள்கையை அவர் பின்பற்றியதாகப் பாரதியார் கூறுவது அவரது புரிதலின்மையையே புலப்படுத்துகிறது.

புத்தரின் மீதும் பவுத்தத்தின் மீதும் இந்த அளவுக்கு வெறுப்பை உமிழும் பாரதியார்

‘‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரதநாடு பழம்பெரும் நாடே’’
என்று எப்படி எழுதினார் என்ற அய்யம் எழக் கூடும். “பார்ப்பனியம் பலநிறம் காட்டும்” என்பதைப் புரிந்து கொண்டால் இந்த அய்யம் எழாது. அறிஞர் அண்ணாவின் “ஆரிய மாயை” எனும் நூலில் காணும், பார்ப்பனியத்தின் இரண்டகத் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பாடலில் வரும் “பேசநா இரண்டுடையாய் போற்றி” எனும் வரிகளை நினைத்துக்கொண்டால் இந்த அய்யம் எழாது.

பலநிறம் காட்டும் பார்ப்பனியம்

1. பலநிறம் காட்டும் பார்ப்பனியத்தின் தந்திர வித்தைகளையும் வஞ்சக சூழ்ச்சிகளையும் கீழறுக்கும் செயல்பாடுகளையும் கண்டறிய வேண்டுமானால் பெரியாரியம் என்னும் கண்ணாடியை அணிந்து கொண்டால் அவை பளிச்சென்று தெரியும்; விளக்கமாகப் புரியும்.

2. பவுத்தத்தின் வீழ்ச்சியைப் பாடமாகக் கொண்டு முன் எச்சரிக்கையுடன், பாழ் செய்யும் உட்பகையான பார்ப்பனியத்தின் ஊடுருவலை முற்றிலுமாகத் தவிர்த்து விலக்கி முன்னறிவுடன் செயல்படும் ஒரே அமைப்பு பெரியாரியக்கமே என்பது மறுக்க முடியாத உண்மையிலும் உண்மை.

3. எடுத்துக்காட்டாக, பார்ப்பனியத்தைப் புரிந்து கொள்ள, பெரியார் நமக்குக் கற்பித்த பாடங்களுள், ஒன்றை அறிந்து கொள்வோம்.
அ. நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு தேர்தலில் இரு வேறு பார்ப்பனர்கள் வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர். ஒருவர் லவுகீகப் பார்ப்பனர். அவர் எல்லாரோடும் வேறுபாடு காட்டாமல் நெருங்கிப் பழகக்கூடியவர். நம் தோளின் மேல் கை போட்டுக்கொண்டு உறவாடுபவர். கறிவிருந்துகளில் கலந்துகொண்டு உண்ணும் மாமிசப் பிரியர். முற்போக்குக் கொள்கையாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர். மற்றொருவரோ வைதீகப் பார்ப்பனர். ஆச்சார அனுஷ்டானங்களோடு நாமம் போட்டுக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு அய்தீகவாதியாக வலம் வருபவர். இவர்கள் இருவரில் யாருக்கு வாக்களிப்பது என்று தந்தை பெரியாரை அணுகிக் கேட்டபோது அவர் பளிச்சென்று இப்படிக் கூறினார். “நாமம் போட்ட அந்த வைதீகப் பார்ப்பனருக்கே வாக்களியுங்கள்!’’ திடுக்கிட்ட தோழர்கள் பெரியாரைப் பார்த்து “என்ன அய்யா இப்படிக் கூறுகிறீர்கள்? எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. தங்கள் முடிவுக்கான காரணத்தை எங்களுக்கு விளக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என்று கேட்டார்கள்.

பெரியார் அத்தோழர்களைப் பார்த்து இவ்வாறு விடையளித்தார்: “வைதீகப் பார்ப்பான் கையில் இருப்பது என்ன ஆயுதம் என்பது பளிச்சென்று தெரிகிறது. அந்த ஆபத்தைச் சமாளிக்க முடியும். ஆனால் லவுகீகப் பார்ப்பான் கைகளில் (அதாவது முற்போக்கு முகமூடி அணிந்த பார்ப்பான் கைகளில்) இருப்பது என்ன ஆயுதம் என்று நமக்குத் தெரியாது. இவனைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல. (அதாவது இவன் தக்க சமயம் பார்த்து எந்த நேரத்திலும் கீழறுக்கும் வேலையைச் செய்வான் என்பது கருத்து)”

ஆ) தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதற்கிணங்க பார்ப்பனியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பெரியார் அவர்களை வழிமொழிவதுபோல அதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“I will believe on orthodox Brahmin
But not heterodox Brahmin”

(சென்னையில் நடந்த ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் கருத்து. விடுதலை 7.12.2018, பக்கம் 4)
தந்தை பெரியார் அறிவுறுத்திய இந்த வழிகாட்டு நெறியின் உட்பொருள் என்ன?

முற்போக்கு அமைப்புகளுக்கு விடுக்கும் முன்னறிவிப்பு என்ன? என்பதைப் பார்ப்போம்:-

தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் இயங்கும் முற்போக்குக் கொள்கை உடைய கட்சிகள் இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவை பார்ப்பனியத்தை அடையாளம் புரிந்துகொண்டு அதன் ஊடுருவலுக்கும் ஆதிக்கத்துக்கும் இடம் கொடாமல் இருக்கும் வரையில் அவை கீழறுக்கும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள இயலும். இன்றேல் அதன் கீழறுக்கும் தந்திர வலையில் சிக்கிச் சிதறுண்டு போவதைத் தவிர்ப்பது என்பது முயற்கொம்பே.

(நிறைவு)


பிராமணியமும் பவுத்தத்தின் வீழ்ச்சியும்

கட்டுரை – 

2023 கட்டுரைகள் செப்டம்பர் 16-30, உண்மை Unmai
-தஞ்சை பெ.மருதவாணன்
ஆரியத்தின் எதிர்ப்புரட்சியாக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பல துணைக் காரணங்கள் இருந்த போதிலும் முதன்மையான காரணம் சனாதன பிராமணியத்தின் சூழ்ச்சியே என்பது வரலாறு கூறும் உண்மை.
1.பவுத்தத்தை வீழ்த்துவதற்குப் பிராமணியம் கடைப்பிடித்த செயல்பாடுகளில் ஒன்றாக அணைத்தழிக்கும் சூழ்ச்சியை விளக்கும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமெரிக்கப் பேராசிரியர் ஜோஷி என்பவர் எழுதிய ‘புத்தரை உற்றுப் பார்க்கிறேன்’ என்ற நூலிலிருந்து கீழ்க்கண்ட
வழிமுறைகளை எடுத்துக்காட்டுகிறார்.  அதன்படி, ஆரியம் பின்பற்றிய மூன்று வகையான தந்திரங்கள் வருமாறு:
1. Appreciate முதலில் பாராட்டு
2. Accept ஏற்றுக் கொள்வது போல் காட்டிக்கொள்.
3 Annihilate அழித்துவிடு.(‘விடுதலை’ 15.8.2019 பக்கம் 4)
2) பவுத்தத்தின் வீழ்ச்சி பற்றி “யாதும் ஊரே’’ எனும் திங்கள் இதழ் (மே மாதம் 2006) வெளியிட்ட புத்தரின் 2550ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு மலரில் (பக்கங்கள் 10 _ -11) காணப்படும் கருத்துகள் பின்வருமாறு:-
2550 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரின் நெறியும் தந்தை பெரியாரின் கொள்கைகளும் ஒன்றுதான்.  “பிறப்பொக்கும்” என்பதுதான்.  ஆனால், பார்ப்பனர்களைப் புத்தர் தன் நெறியில் சேர்த்துக் கொண்டதனால் புத்தநெறி உருவ வழிபாட்டுக்கும் சடங்குகளுக்கும் வழிவிட வேண்டியதாயிற்று.  நாகார்ச்சுனர் போன்ற புத்த நெறியில் சேர்ந்த பார்ப்பனர்கள் புத்தரையே சிலை வடிவில் உருவமைத்து வழிபடச் செய்தனர்.  சடங்குகள், மூடநம்பிக்கைகள் இடம் பெற்றன.  புத்தர் விஷ்ணு அவதாரமாக்கப்பட்டார்.  இறுதியில் நடந்ததென்ன? புத்த நெறி, தான் பிறந்த இந்தியாவிலிருந்தே துரத்தப்பட்டது………… குமுகாயத் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி, இந்த நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள எல்லாவகையான வீழ்ச்சிகளுக்கும் பார்ப்பனர்கள்தான் அடிப்படைக் காரணமாக இருந்து வந்துள்ளனர்.  பார்ப்பனியத்தின் நச்சுப்பற்களால் கடிபட்டுச் சிதறுண்டு போகாத துறைகளே இல்லை.
பவுத்தத்தில் சாமி இல்லை. சடங்கு இல்லை.  ஜாதி இல்லை.  மந்திரம் இல்லை.  பூசை இல்லை.  பிரார்த்தனை இல்லை.  எல்லாவற்றுக்கும் மேலாகத் தனி உடைமைச் சுரண்டல் இல்லை.  இவற்றில் எதுவொன்றிருப்பதும் பவுத்தம் இல்லை.  பவுத்தத்தில் அன்பு உண்டு.  அறிவு உண்டு.  சமத்துவம் உண்டு.  ஒழுக்கம் உண்டு.  இரக்கம் உண்டு.  வீரம் உண்டு.  விவேகம் உண்டு.  இவற்றில் எதுவொன்று இல்லாததும் பவுத்தம் இல்லை. இத்தகைய சிறப்புக்குரிய புத்த நெறியின் அழிவுக்குப் பார்ப்பனர்களின் ஊடுருவலே முக்கிய காரணம் ஆகும்.  எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர்களைத் தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்.  (அதுமட்டுமல்ல) பார்ப்பன தாசர்களையும் அவர் எதிர்த்தார்.
3) பவுத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான பார்ப்பனிய ஊடுருவலைப் பற்றிப் பேராசிரியர் அ-. மார்க்ஸ் அவர்கள் எழுதிய ‘புத்தம் சரணம்’ என்ற தனது நூலில் (பக்கங்கள் 88_ 89) குறிப்பிட்டுள்ளவற்றுள் முதன்மையான பகுதிகள் பின்வருமாறு:
அ) புத்த சங்கத்தில் சேருபவர்களுக்கு ஜாதி அடையாளத்தைத் துறக்க வேண்டும் என்கிற கட்டாயம் விதிக்கப்படாததும் இங்கே சிந்திக்கத்தக்கது.  சமூகத்தில் நிலவும் ஜாதிக்கொடுமைகளுக்கு எதிராகச் சாக்கிய முனி தீவிரமான நிலைப்பாடுகளை மேற்கொள்ளாததையே இது காட்டுகிறது.  ஒருவேளை லட்சுமி நரசு கூறுவதுபோல அன்றைய சமூகச் சூழலில் அதற்கொரு தேவையில்லாதிருந்திருக்கலாம்.  எனினும், சுனிதரின் வாக்குமூலத்தைப் படிக்கும்போது அப்படி எளிதாகச் சொல்லிவிடவும் இயலவில்லை. தோன்றும் போதே இந்திய ஜாதியத்துடன் ஒரு சிறிதளவு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பவுத்தத்திற்கு இருந்ததாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஆ) இதன் விளைவாகவே பெரிய அளவில் பார்ப்பனர்கள் புத்த சங்கத்தில் எவ்விதத் தடையுமின்றிச் சேர முடிந்தது.  கோதமரின் முதற் சீடர்களான பஞ்சவர்க்கத்துப் பிக்குகள் எனப்படும் ராமன், துவஜன், லக்கணன் மந்தி, கோண்டஞ்ஞன் (கவுண்டில்யன்) போஜன், ஸூயாமன், ஸூதத்தன் ஆகிய எண்மரும் ஆறங்கத்தோடு மறை பயின்ற அந்தணர்களே.  உருவேலவனத்திற்குப் பெருமான் வந்தபோது சடைமுடியர்களான காஸ்யப சகோதரர்கள் மறைவிதிப்படி தீ வளர்த்துத் தவம் செய்து வந்தனர். அவர்களுள் மூத்தவரான உருவேல காஸ்யபவனுக்கு மட்டும் அய்ந்நூறு சீடர்கள் இருந்தனர். அனைவரும் புத்தருக்குச் சீடர்களானார்கள். தொடர்ந்து புத்தர் செல்லுமிடமெல்லாம் அவரால் ஈர்க்கப்பட்டோ வெல்லப்பட்டோ பார்ப்பனர்கள் பெரிய அளவில் புத்த சீடர்கள் ஆனார்கள்.
இ) உருவேலாவிலிருந்து ராஜ கிருஹத்துக்குப் பெருமான் எழுந்தருளியபோது பன்னிரண்டு பார்ப்பன ரிஷிகளுடனும் பெருங்குடிமக்களுடனும் சூழ இருந்த மன்னன் பிம்பிசாரனும் புத்த போதனைகளைக் கேட்டுப் புத்தரின் சீடரானார்.  சூழ இருந்தவர்களும் மன்னரைப் பின்பற்றினர்.  இங்குதான் சஞ்சையனின் மாணவர்களும் பார்ப்பனர்களுமான சாரிபுத்தரும் மொக் கல்லானரும் புகழ்மிக்க புத்த சீடர்களாயினர்.
4) கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் பரமேஸ்வரமேனன் என்பதை இயற்பெயராகக் கொண்டவருமான தவத்திரு தர்ம தீர்த்த அடிகளார் (1893 – 1978) அவர்கள் நாராயண குரு வழிவந்தவர்  வழக்கறிஞரும் கூட. இவரைத் தந்தை பெரியார் அவர்கள் தனது வடநாட்டுப் பயணத்தின் போது 1941ஆம் ஆண்டில் லாகூரில் சந்தித்து உரையாடினார் என்று க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய திராவிட இயக்கம்  நீதிக்கட்சி வரலாறு 1916 –  1944 (இரண்டாம் பாகம்) எனும் நூலின் (பக்கம் 531) வாயிலாகத் தெரியவருகிறது.  தவத்திரு தர்ம தீர்த்த அடிகளார் எழுதிய இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு (History of Hindu Imperialism) எனும் நூலில் (சாளரம் பதிப்பகம் வெளியீடு,
சென்னை_91. 2009ஆம் ஆண்டு பதிப்பு) பிராமணியம், புத்தமதத்தை எவ்வாறு அழித்தது என்பது குறித்து காணப்படும் முதன்மையான கருத்துகள் பின்வருமாறு:-_
அ) புத்தரின் ஆரம்ப காலத்திலிருந்தே பிராமணர்கள் புத்த மடங்களில் சேர்ந்து கொண்டிருந்தனர்.  யாகம் போன்ற சடங்குகள் கைவிடப்பட்ட நிலையில் பிராமணர்களுடைய வருவாய் தடைப்பட்டது. அடியார்கள் ஏராளமான சொத்தும் பணமும் செலவிட்டுப் புத்த பிட்சுகளுக்காக அமைத்த ஆஸ்ரமங்களில் சுகமாக வாழும் நோக்கத்துடன் பிராமணர்களும்
போய் புகுந்து கொண்டனர். அங்கும் அவர்கள் தங்களுடைய பாண்டித்தியம், சாமர்த்தியம் போன்றவற்றால் தலைவர்களாகி சிறிது காலம் ஆஸ்ரமங்களை வலுப்படுத்த உதவினர். பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகார மய்யங்களை எல்லாம் பிராமணர்கள் கைப்பற்றியதைப் போல அசோகரின் காலத்தில் புத்த சங்கங்களில் முக்கியமான பதவிகளையும் பிராமணர்கள் கைப்பற்றினர்.  (பக்கம் 102)
ஆ) புத்த பிட்சுகளாக மாறிய பிறகும் ஜாதி மனப்பான்மையைக் கைவிடாமல் தாங்கள்பிராமணர்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டு அடிக்கடி கூட்டத்திலிருந்து விலகி நின்றனர்.
(தொடரும்)

சனி, 8 ஜூலை, 2023

மயிலை சீனி.வேங்கடசாமி!



பார்ப்பன ஆதிக்கத்தால் பவுத்தமும், சமணமும் தமி ழகத்தில் அழித்தொழிக்கப் பட்ட வரலாற்றைச் சான்று களோடு நமக்குத் தந்த தமி ழறிஞர் திரு.மயிலை சீனி. வேங்கடசாமி, 1980 இல் இன் றைய தேதியில் மறைந்தார்.

கழுகுமலை புடைப்புச் சிற்பம், திருப்பரங்குன்றம் கழுவேற்று மரம் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாத புரம் என எங்கும் பரவிக் கிடந்த சமண அடையாளங் களையும், அரிட்டா பட்டி (மதுரை), கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பல தென்மாவட்டங்களில் பவுத் தமும் பரவிக்கிடந்ததையும், இந்த இரண்டு மதங்களும் மக்களிடையே அதிகம் பர வியிருந்த போதும், பவுத்த, சமண சமயத்தினரிடையே மோதல்கள் நடந்ததாக வர லாற்றில் எங்கும் பதிய வில்லை என்றும், சிலப்பதி காரத்தில் பவுத்தம் மற்றும் சமணம் இரண்டுமே கலந்து தான் இலக்கியம் படைக்கப் பட்டது என்றும் பல தமிழறி ஞர்கள் அறிந்திருந்த போதி லும், அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை யோடு, எட்டாயிரம் சம ணர்கள் கழுவேற்றப்பட்டது கட்டுக்கதை என்று கூறிக் கொண்டு, திருஞானசம்பந்தர் எழுதிய பதிகங்களுக்குத் தவறான பொருள் கூறி வந்த வர்களுக்கு எதிரான மதுரை, கப்பலூர், யானைமலை உள் ளிட்ட பகுதிகளில் சமணர் கழுவேற்றம் நடந்த வரலாற் றுச் சான்றுகளை தனது நூல் வாயிலாக எடுத்துரைத்த பிறகுதான் பலருக்கு சம ணர்களின் கழுவேற்றம் குறித்த உண்மை தெரிய வந்தது.

இவர் எழுதிய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்'' என்ற நூல் இதுநாள் வரை களப் பிரர்கள் ஆட்சியில் தமிழ கத்தின் இருண்ட காலம் என்று கூறிவந்த புரட்டைத் துடைத்துப் போட்டது. களப்பிரர்கள் ஆட்சியின் போதுதான், அய்ம்பெருங் காப்பியம், திருக்குறள், நன் னெறி போன்ற அனைத்து வாழ்வியல் மற்றும் பல வணிகம் மற்றும் கப்பற் கட் டும் கலை தொடர்பான நூல் கள் அதிகம் எழுதப்பட்டன. இந்த வணிகம் மற்றும் கப் பல்கட்டும் கலை தொடர் பான நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு விட் டன. இவற்றை தக்க சான்று களோடு தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ‘இந்தியன் எக்ஸ் பிரஸ்' 2000-ஆம் ஆண்டு களில் ‘இந்தியா  மில்லியன் 2000' என்ற நூலில் குறிப்பிட் டுள்ளது.

இவரின் அரிய ஆய்வை நாம் நினைவு கூர்வோம்!

- மயிலாடன்
விடுதலை நாளேடு, 8.720