பக்கங்கள்

ஜோதிராவ் பூலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிராவ் பூலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மே, 2024

இன்று பிறந்த நாள் (11.4.1827 – 28.11.1890) இந்தியாவின் மூத்த சமூகப் புரட்சியாளர் ஜோதிராவ் பூலே



விடுதலை நாளேடு
Published April 11, 2024

“கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது;
அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழுகியது;
நல்லொழுக்கக் குறைவால், முன்னேற்றம் நின்று போனது;
முன்னேற்றம் நின்றுபோனதால், செல்வம் மறைந்தது;
செல்வக்குறைவினால், சூத்திரர்கள் அழிந்தனர்;
கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும்
ஊற்றெடுக்கின்றன”

– ஜோதி ராவ் பூலே

“Without education, wisdom was lost;
without wisdom, morals were lost;
without morals, development was lost;
without development, wealth was lost;
without wealth, the Shudras were ruined;
so much has happened through lack of education.”

– Jyotirao Phule

இந்தியாவில் கல்வி கற்க வாய்ப்பு இருந்தாலும் சமூகத்தில் படிக்க முடியாது. அப்படியிருந்த சூழலை மாற்றியமைக்க பல ஒப்பற்ற தலைவர்கள் போராடினார்கள். அதில் முதன்மையான தலைவராக ஜோதிராவ் பூலே அவர்களைச் சொல்லலாம். ஏப்ரல் 11 அவரின் பிறந்த நாள்.

ஏதோ ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு நபரிடம் “உங் களை யார் படிக்க வைத்தது” என்று கேட்டால், “என் பெற்றோர்” என்று பதில் வரும் அதைப் பின்னோக்கி! பின் னோக்கி! கேட்டுக் கொண்டே போனால் அந்தந்த குடும்பத் திற்குக் கிடைத்த வாய்ப்பைப் பொறுத்து ஒரு புள்ளிக்கு மேல் பதில் இல்லாமல் நின்று விடும். ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இங்கு நிலவி வந்த கல்வி முறை, வேதக்கல்வி, திண்ணைக்கல்வி முறைகள் என்று ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தினருக்கு மட்டுமே வழங்கி வந்தது.

ஜோதி ராவ் பூலே 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாள் கோவிந்த்ராவ், சிம்பாய் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். ‘சுடர் ஒளி’ என்ற பொருளில் ஜோதி என இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. அந்த சுடர் ஒளிதான் ஒடுக்குமுறை என்னும் இருளினை எதிர்த்து, மாந்தர் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை நீக்கி, அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சும்

கல்வியை அனைத்து மக்களுக்கும் பொதுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பரப்பியது.
இந்திய சமூகத்தில் குரு சிஷ்யன் முறை என்னும் குலக் கல்வி முறையே கல்வியாக இருந்தது. தச்சனின் மகன் தச்சனாக இருக்க வேண்டும் என அக்காலத்தின் நடை முறையைப் போலவே, தோட்டக்காரனின் மகனான ஜோதி ராவ் பூலே பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தோட்டக் காரனாகவே வருவான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோதி ராவ் பூலே மற்றவர்களின் வழியைப் பின்பற்றுபவரல்ல; அவரே ஒரு வழிகாட்டியானார்.மக்களின் நல்வாழ்வும், அவர் களுக்கு ஊழியம் புரியவேண்டுமென்ற உணர்வும் அவரது சிந்தனையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

கல்வி கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண் டிருந்தார். தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றார்; தன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். ஸ்காட்டிஸ் பிரிட்டிஷ் மிஷன் நடத்தி வந்த பள்ளியிலும், புத்வர் அரசுப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். ஜோதி ராவ் பூலே இளமையில் சிவாஜி, ஜார்ஜ் வாசிங்டன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தார். அவர்களின் துணிச்சல், நாட்டுப் பற்று, உயர்ந்த குறிக்கோள் இவரது மனதில் பதிந்தது. தாய் நாட்டின் விடுதலைக்கு அவர்களைப் போலவே ஈடுபடத் தூண்டியது. மேலும், தாமஸ் பெயினின் படைப்பான ‘மனித உரிமைகள்’- என்ற புத்தகம் ஜோதி ராவ் பூலேயின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறியாமையில் உழன்று கிடந்த சக குடிமக்களை முன்னேற்றத் துடித்தார். காலம் கடந்துபோன மூட நம்பிக்கைகளுக்கு, அடிமைகளாக இருந்து வந்த அவர்களை எழுச்சிக் கொள்ளத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

அவர் போராட்டத்தை தொடங்கிய காலகட்டம் என்பது பெண் கல்வி என்பது நெருப்பாற்றில் நீந்துவது போல. ஆதிக்க சமூகத்துக்கு மட்டுமே கல்வி என்றாலும் அதிலும் ஆண்களுக்கு மட்டுமே அந்த உரிமை. பெண்களுக்கு கிடையாது என்ற நிலை. ஆனால் அக்கல்வி முறையும் மூட நம்பிக்கையும் பிற்போக்குத் தனங்களையும் உயர்த்திப் பிடிக்கும் கல்வி முறையாகவே இருந்தது. பெண் கல்வியைப் பொறுத்த வரையில் 2000 ஆண்டு வரலாறு என்று எடுத்துப் பேசினால் மிகையாகத் தெரிந்தால், 18ஆம் நூற்றாண்டை எடுத்துக் கொண்டாலே அது பெண் பிள்ளை நரபலிகள், உடன்கட்டை ஏறுதல், இளம் வயதில் விதவை என்ற நிலையே இருந்தது.

1832ஆம் ஆண்டு ஆங்கில கல்வி முறை வந்தது. அதிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 400 பேர் கொண்ட கிராமத்தில் 18 ஆண்கள் கல்வி கற்றனர் என்று புள்ளி விவரம் சொன்னது. அதிலும் ஒருவர்கூட பெண்கள் கிடையாது. இந்து குலக்கல்வியின் தாக்கமும் , இஸ்லாமிய மதராசக்களின் தாக்கமும் ஆங்கில கல்வி முறை வந்த பின்னரும் பெண் களை இரும்புச் சங்கிலி போட்டு வீட்டில் அடைத்தது. ஆனால் அந்த அடிமை சங்கிலியை தனது மனைவிக்குக் கல்வி போதித்து – உடைத்தெறிந்தார் ஜோதிராவ் பூலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆனார் `சாவித்திரிபாய் பூலே”.

தான் பெற்ற கல்வியின் பயன் அது எதற்குப் பயன்படுகிறது என்பதைப் பொறுத்துத் தான் இருக்கிறது. அதை இந்த இணையர் உணர்ந்து பள்ளிக்கூடங்களைத் தொடங்கினர். ஆனால், இந்த சமூகம் அவர் ஆசிரியை பணியை நிம்மதி யாகச் செய்துவிட அனுமதிக்கவில்லை. அவர் காலைப் பொழுதில் பள்ளிக்கு நடந்து வருகையில் சாணியை, அழுகிய முட்டையை, மனித மலத்தைக் கரைத்து ஊற்றியது. அதற்காக ஒரு மாற்றுச் சேலையை எப்போதும் வைத்திருந்தார். பள்ளி வந்தவுடன் அதை மாற்றி தனது பணியைத் தினமும் தொடர்ந்து கொண்டு இருந்தார்.இந்த எல்லா சூழ்நிலைகளிலும் உற்ற துணையாக நின்றவர் மகாத்மா பூலே.

நெருப்பாற்றைச் சற்றே நீந்திக் கடந்தவர்கள் 200 பள்ளிகளைத் திறந்தனர். `balhatya pratibandhak எனக் கைவிடப்பட்ட பெண்களுக்காக இல்லம் ஒன்றையும் நடத் தினார். பெண் சிசுக்கொலைக்கு எதிராக இல்லம் தொடங்கி அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள் .1882ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்து களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, `ஸ்திரீ புருஷ் துலானா’ என்பதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே தலைவர் ஜோதி ராவ் பூலே ஆவார்.

ஆதிக்க ஜாதி ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காகவும், இளம் வயதில் வயதானவர்களுக்கு மணமுடிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்காகவும் தனியாக பள்ளியைத் தொடங்கினார். ஏட்டுக்கல்வியை தாண்டி கைவினைப் பொருட்கள், ஓவியம், தையல் என்று பன்முகத் திறமைகளை கற்றுத்தந்தார். இதைப் பொறுத்து கொள்ள முடியாமல் பல பொய் வழக்குகள் அவர் மேல் தொடரப்பட்டது. அதை தன் மனைவி சாவித்திரி பாய் பூலேயோடு இணைந்து வென்றெடுத்தார்.

“எல்லோரும் சமம்” என்ற அண்ணல் அம்பேத்கருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினார். ஒரு பெண்ணாக இன்று பொறியாளராகவோ , மருத்துவராகவோ, ஏதோ ஒரு துறை யில் படித்து முன்னுக்கு வந்த பெண்ணாக நீங்கள் இருக் கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் ஜோதிராவ் பூலே . பஞ்மர்களுக்கும் கீழானவள் பெண் என்னும் நிலை இருந்த காலகட்டத்தில் அதற்கு எதிராக போராடி கல்வி பயின்று, பள்ளி தொடங்கி, தனது வாழ்நாளயே அர்ப்பணித்த ஜோதிராவ் பூலே – இருளை விலக்கி அறிவாயுதம் ஏந்த வைத்த பேரொளி!

வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஜோதிராவ் பூலே : இந்தியாவின் முதல் மகாத்மா

திங்கள், 25 மே, 2020

ஜோதிராவ் பூலே (1827-1890)

 - 
May 24, 2020 • Viduthalai • மற்றவை

1848 இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது இருபத்தோரு வயதான ஜோதிராவ் பூலே ஒரு பிராமண நண்பனின் திருமண ஊர்வலத்தில் பங்கேற்கத் துணிந்ததற்கு அவர் அவமானப்படுத்தப்பட்டார். புலே யின் ஜாதியை அறிந்து எரிச்சலுக்கு உள்ளான பிராமணர்கள் சிலர், அவ ரைத் திட்டினார்கள். கண்ணீரோடு பூலே வீட்டுக்குத் திரும்பினார். நடந்ததைத் தந்தைக்குச் சொன்னார். அவர் ‘இதை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது' என்று சொல்லி மகனை சமாதானப்படுத்தினார். ‘‘நம்மைப் போன்ற கீழான சூத்திரர்கள் எப்படி பிராமணர்களுக்குச் சமமாக முடியும்? உன்னை நன்றாக அடிப்ப தற்குப் பதிலாக, ஏதோ விரட்டி அனுப்பி விட்டார்களே, அதுவே அவர்களின் கருணையைக் காட்ட வில்லையா?'' கீழான பிறப்பு உள்ள வர்களுக்கு இப்படி அவமரியாதை இழைக்கப்பட்ட பல சம்பவங்களை புலேயினுடைய தந்தை மகனுக்குக் கூறினார்.
இப்படிப்பட்ட தவறுகளுக்கு பிராமணர் அல்லாதவர்கள் யானை யின் காலின் கீழே இடறச் செய்து அவமானப்படுத்தப்படுவதைத் தானே பார்த்ததாகவும் கூறினார்.
ஆனால், பூலே அவருடைய தந்தையைப்போல் இல்லை. பூலே கிறித்துவப் பள்ளியில் படித்தவர். அப்போதே அவர் மனிதனின் உரிமைகள் என்ற தாமஸ் பெயனின் நூலைப் படித்திருந்தார். ஃபிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்காவின் ஜன நாயகப் போரும் அவருடைய மன தில் பதிந்து போயிருந்தன. தனது சொந்த அவமதிப்பு தந்தையின் பரிதாபகரமான எதிர்வினை ஆகிய வற்றால் சமூக அடிமைத்தனத்தின் பயங்கர பிரம்மாண்டத்தை அவரால் உணர முடிந்தது. சோர்வும், கோபமும் மிஞ்ச அந்தக் கணத்தில் அவர் அடிமைப்பட்டவர்களுக்காகப் போராடவும், மீட்கவும் உறுதி கொண் டார். இந்திய சமூகத்தின் மோசமான எதிரி ஜாதி அடிமைத்தனம் என்று உணர்ந்து கொண்டார்.
உண்மை தேச பக்தி என்பது இந்த அடிமைத்தனத்தின் விலங்கு களை உடைப்பதில் இருக்கிறது.
பேஷ்வா அதிகாரத்தின் வீழ்ச்சி பிரிட்டீஷ் ஆட்சியின் நுழைவு ஒருபுறம் இருப்பினும், சமூகம் என் னவோ பிராமணச் சக்திகளின் ஆதிக்கத்தில்தான் இருந்தது. மதத் தின் தலைமைக்கு கல்வியின் மீதி ருந்த ஒற்றை ஆதிக்கமும் பிராமணர் களை இத்தகைய ஆதிக்கத்தை நிறுவ உதவி செய்தன.
பிராமண அரசியல் - சமூக உற வுகளுக்குள் வாழ்ந்த தலித் வெகு மக்கள், உயர்ஜாதி நலன்களை பொதுவான நலன்கள் என்று தவறாக எடுத்துக் கொண்டனர். மக்களின் மனங்களில் ஒரு புரட்சிக்கான கலாச் சார அடிப்படையை உருவாக்குவது தமக்கு முன்னுள்ள ஒரு சவால் என்பதைப் பூலே புரிந்துகொண்டார் - அதன் வாயிலாகத்தான் பொருளி யல், கருத்தியல் மாற்றத்தை உருவாக்க முடியும். அதனால் பார்ப்பனீயத்தின் மீதான அவரது தாக்குதல், இதுவரை ஜாதி வேறுபடுத்தலுக்கு எதிராக நடந்த முயற்சிகளைவிட வேறாக அமைந்தது.
1873 இல் சத்ய சோதக் சமாஜத்தை நிறுவினார். கல்வி மறுக்கப்பட்ட மக் களுக்குக் கல்வியின் உரிமை, பெண் கள் விடுதலை, விதவை மறுமணம், ஜோசிய நம்பிக்கை எதிர்ப்பு, பார்ப் பனப் புரோகிதரை அழைக்காமை என்ற தடத்தில் அவர் அமைப்பு பயணித்தது.
தந்தை பெரியார், பூலே போன்ற வர்கள் எத்தகைய நேர்க்கோட்டில் பயணிக்கிறார்கள் பார்த்தீர்களா?
பூலேபற்றி அண்ணல் அம் பேத்கர் இதோ கூறுகிறார்:
‘‘மற்றவர்கள் எங்கு விருப்பமோ அங்கு போகட்டும்; நாம் ஜோதிபா பூலேவின் பாதையைப் பின்பற்று வோம். நம்முடன் மார்க்சை எடுத்துச் செல்லலாம்; விட்டுவிடலாம். ஆனால், உறுதியாக, ஜோதிபாபூலே வின் தத்துவத்தைக் கைவிடமாட் டோம்.
- அண்ணல் அம்பேத்கர்.
(ஆதாரம்: ‘‘வரலாற்றில் பிராமண நீக்கம்'' - ப்ரஜ் ரஞ்சன் மணி தமிழில் க.பூரணச்சந்திரன்.)
 - மயிலாடன்

புதன், 4 செப்டம்பர், 2019

ஜோதிராவ்_பூலே - சாவித்திரிபூலேஅம்மையார்

#ஜோதிராவ்_பூலே

#சாவித்திரிபூலேஅம்மையார் :

“பள்ளிக்கூடத்திற்குச் செல்கையில் நாம் பள்ளிக்கூடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள் என் மீது கற்கள், சாணி மற்றும் சேற்றை வீசுகிறார்கள். சேலை பாழாகி விடுகிறது. அந்த சேலையோடு மாணவிகள் முன்னால் சென்று நிற்பதற்கு ஒருமாதிரியாக இருக்கிறது” என்று தனது கணவருக்கு கடிதம் எழுதுகிறார். பதில் கடிதம் வருகிறது. “காலையில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பழைய சேலையைக் கட்டிக்கொள். பள்ளிக்குச் சென்றவுடன் நல்ல சேலையைக் கட்டிக்கொண்டுவிடு. மாலையில் மீண்டும் பழைய சேலையையே கட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்” இப்படிப் பதில் எழுதுகிறார் கணவர்.

             கடிதம் எழுதியவர் நாட்டின் #முதல்பெண்_ஆசிரியை_சாவித்திரிபாய் பூலே. பதில் எழுதியவர் அவரது கணவர்  #ஜோதிராவ்பூலே. ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காததால் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவரை நடுரோட்டில் வைத்து அறைகிறார் சாவித்திரி. அதற்குப்பிறகு தான் கற்களை எறிவதும், சாணியை வீசுவதும் அடங்கியது. ஒரு பெண் கல்வி கற்றால், அவரது கணவர் உண்ணும் உணவு புழுக்களாக மாறிவிடும் என்று பயமுறுத்தி வந்த காலக்கட்டத்தில்  தனது மனைவியை கல்வி கற்க வைத்ததோடு, ஆசிரியைக்கான பயிற்சியும் பெற வைத்திருக்கிறார் மகாத்மா ஜோதிராவ் பூலே. இருவரும் இணைந்து பெண்களுக்காக தனியாக ஒரு #பள்ளிக்கூடத்தை 1848-ஆம் ஆண்டில் திறக்கிறார்கள். ஆசிரியைப் பணியைத்தானே ஏற்றுக் கொள்கிறார் சாவித்திரி. அப்போதுதான் அவருக்கு மேற்கண்ட அனுபவம் ஏற்பட்டது. சாவித்திரியோடு இணைந்து ஆசிரியைப் பணியை மேற்கொள்கிறார் #பாத்திமாஷேக் என்கிற இஸ்லாமியப் பெண். #இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலேதான்.

             #கணவருக்குத்_துணையாக...! பள்ளிக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடங்கவில்லை. பூலேயின் தந்தை கோவிந்தராவை நிர்ப்பந்திக்கிறார்கள். அவரும், எதிர்ப்புக்குள்ளாகும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறுமாறு பூலேயிடம் சொல்கிறார். அந்தச் சிரமமான நிலையில், எதிர்ப்புகளைத் தாண்டி நாம் நமது பணிகளைத் தொடர வேண்டும் என்று கூறி கணவர் பூலேயை உற்சாகப்படுத்துகிறார் சாவித்திரி.

           மராட்டியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நய்காவ்ன் என்ற ஊரில் விவசாயக் குடும்பமொன்றில் ஜனவரி 3, 1830 அன்று சாவித்திரி பிறந்தார். அப்போதெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்படித்தான் ஒன்பது வயதிலேயே ஜோதிராவ் பூலேவுக்கு சாவித்திரியைத் திருமணம் செய்து வைத்தனர். பெண் கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் ஜோதிராவ், தனது மனைவியைப் கல்வி கற்குமாறு ஊக்குவித்தார். இது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அப்போது சாவித்திரிக்கும் இருந்த மனோபலம் ஜோதிராவின் உறுதிக்கு வலிமை சேர்த்தது.

           ஆபத்தான கட்டத்திலும் தனது உறுதியைத் தளர விடாதவராக இருந்தவர் சாவித்திரி. ஒருமுறை, அவர்கள் வீட்டிற்குள் வாடகைக் கொலைகாரர்கள் ஏறிக் குதிக்கிறார்கள். சத்தம் கேட்டு பூலேயும், சாவித்திரியும் எழுகிறார்கள். நிதானமாக வெளிச்சத்தை அதிகரிக்கும் வகையில் விளக்கை ஏற்றி வைக்கிறார் சாவித்திரி. அவரது நிதானம் ஜோதிராவ் பூலேயின் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறுதியில் கொலைகாரர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்கிறார்கள்.

            #முடிவெட்ட_மாட்டோம்...! அவர் வாழ்ந்த காலத்தில் கணவனை இழந்த பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. கணவனை இழந்து விட்டால் உலகில் கவுரமான வாழ்க்கை இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் ஏராளம். மறுமணம் என்பதை நினைத்துப் பார்த்தாலே சமூக விரோதம் என்று முத்திரை குத்தப்படும் காலமது. 1860 ஆம் ஆண்டில் விதவைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு எதிராக ஒரு வித்தியாசமான போராட்டத்தைத் தொடுக்கிறார் சாவித்திரி. விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்ற போர்க்குரலுடன் முடிதிருத்துபவர்களை அணி திரட்டுகிறார் அவர். அவருடன் பெரும் எண்ணிக்கையில் முடி திருத்துபவர்கள் அணி திரண்டதைப் பார்த்து மிரள்கிறது ஆதிக்க சக்திகள். சமூகப் பிரச்சனைகளில் உறுதியான நிலை எடுத்த சாவித்திரி, சாமான்யனின் பொருளாதார அவலத்தையும் அம்பலப்படுத்துகிறார். “கடன்“ என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், கடன் வாங்கிப் பண்டிகை கொண்டாடும் பழக்கத்தைக் கடுமையாகச் சாடுகிறார்.

            இதனால் கடன் சுமை கடுமையாக ஏறிவிடுகிறது. தனிமைப்படுத்தப்பட்டு துன்பத்தில் உழல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது இப்படித்தான் இருக்கும். இதை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு துயரத்திலேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்று எழுதுகிறார். சாவித்திரியின் கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. புரோகிதர் இல்லா திருமணம் சத்யசோதக் சமாஜ் என்ற சமூக-ஆன்மீக அமைப்பொன்றை செப்டம்பர் 24, 1873 அன்று பூலே நிறுவினார். இந்து மதத்தை சீர்திருத்துவதாகச் சொன்ன பிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகள் பிராமணியம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து பாதுகாக்கவே முயல்கின்றன என்று பூலே உறுதியாகக் கருதினார். முதல் அமைப்பு பிரம்மாவையும், இரண்டாவது பிரார்த்தனையையும் மற்றும் மூன்றாவது ஆரிய அடையாளத்தையும் முன்னிறுத்தின. பூலேயைப் பொறுத்தவரை, உண்மையில் கவனம் செலுத்தினார். இந்த அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவராக சாவித்திரி பணியாற்றினார். அந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் காலத்தில் புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்து வைக்கும் ஒரு புரட்சிகர முயற்சியில் சாவித்திரி இறங்கினார். டிசம்பர் 25, 1873 அன்று அந்தத் திருமணம் நடந்தது. சிறிய அளவில் எதிர்ப்பு அதற்கு இருந்தது. அதேபோன்ற திருமணம் ஒன்றை மீண்டும் செய்ய முயன்றபோது, புரோகிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பூலே சரியான சமயத்தில் தலையிட்டு காவல்துறையின் உதவி மூலம் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.

           அந்தக் காலகட்டத்தில் #புரோகிதர்_இல்லாமல் திருமணம் என்பது கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாததாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவனை இழந்ததால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிராமணப் பெண் ஒருவரைக் காப்பாற்றிய சாவித்திரி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைத் தானே தத்து எடுத்துக் கொள்கிறார். யஷ்வந்த் என்று பெயரிட்டு அந்தப் பையனை அவரே வளர்த்து எடுக்கிறார். கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பூலே தம்பதியினர் ஒரு இல்லத்தைத் திறந்து அவர்களைப் பாதுகாத்தனர். இதுவும் ஆதிக்க சக்திகளின் கடும் எதிர்ப்புக்குள்ளாகிறது. தங்கள் இல்லக் குழந்தைகளுக்குத் தானே தாயாக இருந்து வளர்க்கிறார் சாவித்திரி.

           #கணவரின்_உடலுக்குக்_கொள்ளி...! 1870களில் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. இந்தப் பஞ்சத்தில் ஏராளமான குழந்தைகள் அநாதைகளாகினர். அந்தக் குழந்தைகளுக்கு 52 உறைவிடப் பள்ளிகளைத் துவக்குவதில் பூலே தம்பதியினர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். குறிப்பாகப் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் சாவித்திரி பெரும் கவனம் செலுத்தினார். தனது கணவர் ஜோதிராவ் பூலே 1890ல் இறந்தபோது பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில், அவரே கணவரின் உடலுக்குத் தீ மூட்டினார். இடுகாட்டிற்குப் பெண்கள் வருவதே அபூர்வம் என்ற நிலையில், கணவரின் இறுதிச்சடங்கில் மனைவியே கொள்ளி வைத்தது மகாராஷ்டிர சமூகத்தில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது. கணவரின் மறைவுக்குப் பிறகு சத்யசோதக் சமாஜத்தின் தலைமைப் பொறுப்பை சாவித்திரியே ஏற்றுக் கொண்டார். 1893 ஆம் ஆண்டில் சாஸ்வத் என்ற இடத்தில் அந்த அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சாவித்திரி 1896 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான நிவாரணப் பணிகளை அரசே முறையாக ஏற்று நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வெற்றி கண்டார். அடுத்த ஆண்டில் பெரும் கொடிய பிளேக் நோய் புனே நகரைத் தாக்கியது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற சாவித்திரியே நேரடி நிவாரண நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது அவரையும் பிளேக் நோய் தாக்கியது. மார்ச் 10, 1897 அன்று நோயின் பாதிப்பால் சாவித்திரி மரணமடைந்தார். அவர் மறைந்து 100 ஆண்டுகள் தாண்டிய பிறகும் பெண் குழந்தைகளின் கல்வி என்பது சமூகப் பிரச்சனையாகவே #நீடிக்கிறது.
- ஆனந்குமார் முகநூல் பதிவு, 5.9.19