பக்கங்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2019

பக்தியால் விளைந்த காட்டுவிலங்காண்டித்தனம்!

கோயில் வாசலிலேயே பூசாரி உள்பட மூவர் கொல்லப்பட்ட அவலம்- நரபலியா?




திருமலை, ஜூலை 19 ஆந்திராவில் கோயில் வாசலில் பூசாரி உள்பட 3 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். மேலும் சிவலிங் கத்துக்கு ரத்தத்தால் அபிசேகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவின் கதிரி அடுத்த கோரிகோட்டா கிராமத்தில் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு அர்ச்சகராக ஓய்வு பெற்ற ஆசிரியரான சிவராம் ரெட்டி(70) பூஜைகளை செய்து வந்தார். இவருக்கு அவரது அக்கா கம லம்மா(75) உதவியாக இருந்து வந்தார். சிவராம் ரெட்டி சிவன் கோயிலை புதுப்பிக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.

இதில் மூலவர் சன்னதி அமைந்துள்ள பகுதியில் சுவர்கள் எழுப்பப்பட்டு கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழி லாளர்கள் சிலரும் சிவராம் ரெட்டிக்கு உதவி செய்து வந்தனர். மேலும் பெங்களூரில் வசித்து வந்த சிவராம்ரெட்டியின் உறவின ரான சத்திய லட்சுமியும்(68) இப் பணியில் ஈடுபடுவதற்காக கடந்த சில நாள்களாக கோரிகோட்டா விலேயே தங்கி வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் காலை கோயில் வழியாக சென்ற பொது மக்கள் அர்ச் சகர் சிவராம் ரெட்டி, அவ ரது அக்கா கமலம்மா, உறவினர் சத்தியலட்சுமி ஆகிய 3 பேரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சிய டைந்தனர்.

மேலும் கோயில் முழு வதிலும் சிவலிங்கத்திற்கும் ரத்தத் தால் அபிசேகம் செய்து, புற்று மீதும் ரத்தத்தை தெளித்தது தெரியவந்தது. தகவல் அறிந்த அனந்தபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சத்தியயேசு பாபு மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மோப்ப நாயைக் கொண்டு சோதனை நடத்தினர்.

புதையலா?


இதில் கடந்த சில ஆண் டுகளாக சிவன் கோயிலில் புதையல் இருப்ப தாக ஒரு தகவல் பரவி இருந்தது. பெங்களூரில் வசித்து வரும் சத்திய லட்சுமி மூலம் சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக வந்த தகவலை தெரிந்துகொண்ட பெங்களூரை சேர்ந்த சிலர் இங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிவராம் ரெட்டி, கமலம்மா, சத்தியலட்சுமி ஆகிய 3 பேரையும் முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? என்பதும் தெரிய வில்லை.

நரபலியா?


3 பேரையும் கொலை செய்து ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபி ஷேகம் செய்ததால் புதையல் எடுக்க நரபலிக்காக கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதுகுறித்து அனந்தபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களி டையே பெரும் பீதியையும் அதிர்ச் சியையும் ஏற்படுத்தியது. கொலை யாளிகளை பிடிக்க காவல்துறையின் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 19. 7 .19

திங்கள், 15 ஜூலை, 2019

ராஜஸ்தான் மாநிலம் பிரம்மா கோவிலுக்குள் குடியரசுத் தலைவருக்கு அனுமதி இல்லை- பூசாரிக்கு அடி உதை




குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண் டார். அப்போது அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் என்ற இடத்திலுள்ள பிரம்மா கோவிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது கோவில் பூசாரிகள் அவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, ஆகையால் அவர் கோவிலுக்கு வெளியில் உள்ள படியில் அமர்ந்து வழிபாடு செய்தார். இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் பரவி யது. இதை பல சமூக ஆர்வலர்கள் கண் டித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட் டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவரை நுழைய விடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும் பத்துடன் வழிபாடு செய்தார்.

இந்தநிலையில்குடியரசுத்தலைவர் அலுவலக ம்வெளியிட்டுள்ள அறிக்கை யில் குடியரசுத்தலைவரின் மனைவிக்கு மூட்டுவலிபாதிப்பு இருக்கிற காரணத்தால் கோவிலுக்கு உள்ளே நுழைய முடிய வில்லை, ஆகவே அவரும் குடியரசுத் தலைவரும் அவரது மகளும் கோவில் முகப்பில் அமர்ந்து வழிபாடு செய்தனர் என்று விளக்க அறிக்கை வெளியிட்டி ருந்தது,

உண்மைக் காரணம் என்ன?

இது தொடர்பாக அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுமார் 50--க்கும் மேற்பட்ட படிகளைக் கொண்ட கோவிலில் எல்லா படிகளையும் கடந்து கோவில் கருவறை வரை சென்ற குடியரசுத் தலைவரின் மனைவிக்கு மூட்டு வலி காரணம் என்று சொல்வது மிகவும் அபத்த மானதாகும், இந்தியாவில் இன்றளவும் குடியரசுத்தலைவர் என்றாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் என்றால் தீண்டத் தகாத வர்களுக்கான மனுநீதி சட்டமே அவர் களுக்கும் உண்டு என்று கூறியிருந்தார்.

இந்தக் கோவிலில் தொடர்ந்து இதே நிலைதான்! மேலும் இக்கோவிலில் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனு மதிக்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் அரசிடமும் கோவில் நிர்வாகத்தினரி டமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. 2012- ஆம் ஆண்டு இக் கோவிலுக்கு அருகில் உள்ள மற்றொரு கோவிலில் பள்ளி செல்லும் தலித் மாணவர்கள் கோவிலுக்கு வழிபடச் சென்றதை தடுத்து அவர்களை விரட்டிய  நிகழ்வு பெரும் விவாதத்திற்குள்ளானது. இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை மறைக்கும் விதமாக குடியரசுத் தலைவர் அலுவலகமே விளக்கம் அளித்து அந்த  நிகழ்வின் உண்மைத் தன்மையை மறைத்துள்ளது.

- விடுதலை ஞாயிறு மலர்,13.7.19

இசுலாமியப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை - சவர்க்கரின் ஆதரவு



முத்து.செல்வன், பெங்களூரு


வினாயக் தாமோதர் சவர்க்கர் தன் இறுதிக் காலத்தில் எழுதிய Six Glorious Epochs of Hindu History  (இந்திய வரலாற்றில் சிறப்புவாய்ந்த  ஆறு காலகட்டங்கள்) என்னும் நூலில்,, இசுலா மியப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தவேண்டியதன் தேவையை நியா யப்படுத்தியுள்ளார். அத்தகைய வாய்ப்பு கள் கிடைத்தபோது அவற்றைத் தவறவிட் டமை கழிவிரக்கமோ, சால்போ, அறம் சார்ந்ததோ அல்ல; மாறாகக் கோழைத்தனம் என்று கூறுகிறார். (அத்.7)

இந்த நூலில், இந்த அத்தியாயத்தில் அளவு கடந்து  இசுலாமியர்கள் மீது வெறுப் புணர்வைத் தூண்டுகிறார்.

· இந்துப் பெருமை குலைவதற்குக் காரணமாக இருந்த இசுலாமியப் பேய்கள் (தீய சக்திகள்) தண்டிக்கப்பட வேண்டிய வர்கள் என்பதும்..

· இந்து தேசத்தை உருவாக்கும் முயற்சியில், அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை இந்துத்துவத்திலிருந்து பிரிக்க வேண்டுமென்பதும்

· ”இந்துப் பெண்கள் பெற்ற துன் பங்களுக்கு இசுலாமியப் பெண்கள் அதே முறையில் பழிவாங்கப்பட வேண்டும்” என்பதும்

· மதப்பொறுதி (மதச் சகிப்புத்தன்மை) ஒரு நற்செய்கை என்று இந்துக்கள் நம்பி யமை தற்கொலைக்கொப்பாகும் என்பதும்

· இந்துக்கள் அத்தகைய நற்செயல் கொள்கைகளைக் கைவிட்டுப் புதிய இந்து தர்மத்தை அரசியல் நலன் கருதிக் கைக் கொள்ள வேண்டுமென்பதும்.

· இசுலாமியருடன் போரிட்டு வென்ற இந்து மன்னர்கள் இசுலாமியப்பெண்கள் பால் காட்டிய அனுதாப அணுகுமுறை தவறென்பதும் சவர்க்கரின் கொள்கை களாக இருந்தன -

இதற்கு எடுத்துக்காட்டாக,

· ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே நிகழ்ந்த இனக்குழுப் போராட்டங்களில் வெற்றி பெறும் இனத்தவர் தோற்கடிக்கப் பட்ட இனத்தவரின் பெண்களைக் கவர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்; இல்லாதவிடத்து அவர்களைக் கொன்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்றும்  நாக மக்களும் அத்தகையமுறை யிலேயே செயற்பட்டனர் என்றும் அவர் களைப் பொறுத்தமட்டில், எதிரியின் பக்கத்தில் ஒரு பெண்ணின் சாவு அய்ந்து ஆண்களின் சாவுக்குச் சமம் என்றும்  கூறி ஞாயப்படுத்துகிறார்.

· இந்துப் பெண்கள் இசுலாமியரால் தொல்லைகட்கு ஆளாக்கப்பட்டபோது இசுலாமியப் பெண்களும் உடந்தையாக இருந்தமையால் அவர்களையும் நம்மு டைய எதிரிகளாகவே கருத வேண்டும் என்று கூறி,

· மேற் சொன்னவாறு இந்து மன்னர்கள் தோற்ற இசுலாமியர்களின் பெண்கள்பால் கழிவிரக்கம் காட்டாதிருந்திருந்தால் என்ன வாகியிருக்கும் என்று கேள்வி கேட்கிறார்.

· இசுலாமியர்களால் தொல்லைகளுக்கு ஆட்பட்டு இறந்த இந்துப் பெண்களை எண்ணிப் பாருங்கள் என்றும் அதற்காக இசுலாமியப் பெண்கள் அந்த முறையி லேயே பழிவாங்கப்பட வேண்டும் என் கிறார்.

· ஒரு தீச்செயல்  இன்னொரு தீச் செயலால்தான் முறியடிக்கப்பட வேண்டும். நியாய, தருமங்களைப் புறந்தள்ள வேண் டும் என்றும் பாலியல் வன்புணர்வு  என்பது நமக்குக் கிடைத்துள்ள ஓர் அரசியல் ஆயு தம் என்பதை உணர வேண்டும் என்கிறார்.

· கடந்த காலங்களில் இந்துக்கள் இசுலாமியப் பெண்கள் பால் தற்கொலைக்கு ஒப்பான கழிவிரக்கமும் பரிவும் கொண்டு இரக்கம் காட்டி அவர்களை விட்டுவிட்ட தாக, சவர்க்கர் குற்றம் சாட்டுகிறார், (பத்தி 452) . அதற்கு எடுத்துக்காட்டாக, போரில் வெற்றி பெற்ற மன்னன் சிவாஜி கல்யாண் பகுதியின் இசுலாமிய  ஆளுநரின் மரு மகளை எந்தத் தொல்லைக்கும் ஆட் படுத்தாமல் விட்டுவிட்டதையும்,  பேஷ்வா சின்னாஜி ஆப்தே, பாசேன் பகுதியின்  போர்த்துகீசிய ஆளுநர் மனைவியைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.(பத்தி 450)

· இசுலாமியரின் அடக்குமுறையில் இந்துப் பெண்கள் தொல்லைகட்கு ஆளா னதைப் போலவே, இந்து வெற்றியாளர் களும் இசுலாமியப் பெண்களை அதே  முறையில் தொல்லைகட்கு ஆளாக்கிட வேண்டும் என்று சவர்க்கர் வாதிடுகிறார்.

· இந்துக்கள் வெற்றி பெறும்போது, இந்துப் பெண்கள்  அனுபவித்த துயரநிலை இசுலாமியப் பெண்களுக்கும் நிகழும் என்னும்  நிலை வருமாயின் வருங்காலத்தில் இசுலாமியர்கள் இந்துப் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தலில் இறங்க மாட்டார் கள்.(451) என்கிறார் சவர்க்கர்.

· தொடக்கத்திலேயே இந்துக்கள் இந்தமுறையில் இசுலாமியப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், இன்று இந்துப் பெண்களின் நிலை மிக உயர்வாக இருந்திருக்கும் என்கிறார் சவர்க்கர் (455).

· இசுலாமியர் இந்தியாவிற்குள் நுழை யும் போதே ஆங்காங்கே போர்க்களங்களில் வெற்றி கண்ட இந்துக்கள், இசுலாமியப் பெண்களை இந்த முறையில்  தண்டித் திருந்தாலும் அவர்களைக் கட்டாய மதமாற் றத்திற்கு உள்ளாக்கியிருந்தாலும்  அவர் களை வசப்படுத்தியிருந்தாலும் இசுலாமி யர்கள் இந்துப் பெண்களிடம் தகாத முறை யில் நடந்துகொள்வதைத் தவிர்த்திருப் பார்கள் (455) என்கிறார்.

· மதச்சகிப்புத்தன்மை என்னும் முட்டாள்தனமான எண்ணத்தை இந்துத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும்போதே திணித்து விட்டதன் பயனை இப்போது அனுபவிக் கிறார்கள் என்று வருந்துகிறார் சவர்க்கர்.

பயன்பட்ட நூல்: வினாயக் தாமோதர் சவர்க்கர் Six Glorious Epochs of Hindu History

அத்தியாயம் 7

· இவருடைய படம் நாடாளுமன்றத்தின் மய்ய அரங்கத்தை அலங்கரிக்கிறது என் பது குறிப்பிடத்தக்கது.

·  இவரைத்தான் மோடி,

”நாம் வீர் சவர்க்கரை வணங்கிப் போற்றுவோம்.

வீர் சவர்க்கர் துணிவு, நாட்டுப்பற்று,  வலிமைவாய்ந்த இந்தியா என்னும் நோக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார்.

இந்திய நாட்டுருவாக்கத்தில் ஈடுபடும் வகையில் பலரை ஊக்குவித்துள்ளார்”

என்று சவர்க்கரின் பிறந்தநாள் (28, மே 2019) செய்தியாகப் புகழ்ந்துரைத்துள்ளார்.

· இப்போது கீழ்க்காணும் செய்திக்கு வருவோம்

” நாட்டில் இசுலாமியர் பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. பத்து இந்து சகோதரர்கள் ஒன்று சேர்ந்து, இசுலாமியத் தாய்மார்களையும் சகோதரிகளையும் நடுத்தெருவிற்கு இழுத்து வந்து கூட்டு வன்புணர்வு செய்து கொன்று அவர்களைக் கடைத்தெரு போன்ற பொது இடங்களில் மக்கள் பார்வையில் படும் வகையில் தூக்கிலிட வேண்டும்.

இந்தியாவைக் காப்பாற்ற வேறு வழி யில்லாததால் இசுலாமியத் தாய்மார்கள், சகோதரிகளை மானபங்கம் செய்வது ஒன்றுதான் வழி.”

- இதுதான் அவளுடைய இந்திப் பதிவில் கண்டுள்ள வாசகத்தின் தமிழாக் கம்.

இந்தச் செய்தி வெளியுலகில் பரவிய உடனே, சுனிதா சிங் அவர் வகித்த பதவி யிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்  என்று மகிள மோர்ச்சாவின் தலைவர் ரகத்கர் கூறி முடித்துக் கொண்டார்.

ஒரு பெண் தான் பகைவர்களாகக் கருதும் ஓர் இனத்தின் தாய்மார்களையும் சகோதரிகளையும் பாலியல் கூட்டு வன் புணர்வு செய்யத் தன் இன ஆண்களைத் தூண்டுகிறாள் என்றால், இவர்கள் ஆட்சி யில் வருங்கால இந்தியா விலங்காண்டி களின் இந்தியாவாக மாறும் என்பது திண் ணம்.

படு மட்டமான, வெறித்தனமான தூண்டுதலுக்குத் தீர்வு வெறும் பதவி நீக்கம்தான் போலும்.  இந்தப் பெண் மீது இதுவரையில் சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பாசிச சங்கி களின் முறையற்ற அராஜக அரசியலில் அதை நாம் எதிர்பார்க்கவும் முடியாது.

இத்தகைய வெறித்தனத்தின் ஊற்றுக் கண்ணாகத் திகழும் கோல்வால்க்கரும் சவர்க்கரும் செருமனியின் இட்லரின் நாசிசத்தையும் இத்தாலியின் முசோலியின் பாசிசத்தையும் முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு இந்துக்கள்  செயற்பட வேண்டும் என்று தூண்டினர்.

”அவர்களுடைய (இசுலாமியர்) பகை மையும் கொலைவெறியும் முடிவுக்கு வந்து விட்டதா? அவர்கள் பாகிஸ்தான் பிரிவி னைக்குப் பிறகு இவற்றைக் கைவிட்டுத் திடுமென்று நாட்டுப் பற்றாளர்களாக மாறி விட்டார்கள்  என்று நம்புவது தற்கொலைக்கு ஒப்பானது - கோல்வாக்கர்.

”செருமானியர்கள்  இன்று உலகெங்கும் பேசப்படுகிறார்கள். செருமானியர் இனத் தின் (ஆரியம்?) தூய்மையையும் பண்பாட் டையும் காத்திட,  நாட்டிலிருந்து  யூதர்களை அறவே துடைத்தெறியும் முனைப்பில் ஈடுபட்டு உலகை அதிர்ச்சிக்கு ஆளாக் கினர். இதன் மூலம், அடிப்படையில் மாறுபட்ட இனங்களும் பண்பாடுகளும் ஒரே மண்ணில் ஒன்றிணைந்து வாழ இயலாதென்பதை எடுத்துக் காட்டியுள்ளன. அதுவே இந்துஸ்தானத்தில் உள்ள நமக்குப் நல்ல பாடம் ஆகும்” என்று கோல்வாக்கர் செர்மனியின் இட்லரை எடுத்துக் காட்டி, இந்தியாவில் இசுலாமியர்களும் இந்துக் களும் ஒன்றிணைந்து வாழ முடியாது என்று வெறுப்புணர்வைத் தூண்டினார். (M.S.Golwalkar, We or Our Nationhood Defined)



இட்லரின் நாசிசம் நமக்கு உகந்த ஊடச்சத்து என்றார் சவர்க்கர்.

”இட்லர் ஒரு நாசி என்பதால் ஒரு தீய சக்தி என்றோ மனித வடிவிலான பேய் என்றோ கருதுவதில் பொருளில்லை. நாசிச, பாசிசப் பாதைகளைத் தேர்ந்தெடுத்ததால் தான் செர்மனியும் இத்தாலியும் வலிமை வாய்ந்த நாடுகளாக உருவெடுத்தன. அந்த இரண்டு ‘இசம்களும்’  நமக்கு மிகவும்  உகந்த ஊட்டச் சத்துகள் - சவர்க்கர் (1940 இல் மதுரையில் நடைபெற்ற இந்து மகா சபையின் 22 ஆவது அமர்வில் ஆற்றிய தலைமை உரையில் ஒரு பகுதி)

இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பெற்றுத் திகழும் பாசிச சங்கிகள் சவர்க்கரும் கோல்வால்க்கரும் எட்கேவரும் காட்டிய வழியில் செல்லத் துடிக்கிறார்கள் என்பதை அவர்களுடைய கூற்றுகளும் செயல்களும் மெய்ப்பிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரம் வெற்றி மிதப்பில் செய்ய வேண்டுவனவாகக் கொண்டுள்ள கொடிய வேலைத்திட்டங் களுள் ஒன்றாக, சவர்க்கரின் எண்ணங் களுக்கு வடிவம் கொடுக்க முனைந்தால் நாடு என்னவாகும். சிந்திப்பீர்.

- விடுதலை ஞாயிறு மலர், 13 .7 .19

சில செய்திகளும் சிந்தனைகளும் இந்து மதத்தின் யோக்கியதை இதுதான்!



மின்சாரம்


கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந் திருப்பவர் என்று சொல்லிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை. அந்தக் கடவு ளுக்குக் கோயில் ஏன் - மனைவி ஏன் - வைப்பாட்டி ஏன் - குழந்தைக் குட்டிகள் ஏன் - உருவமேயற்ற கடவுளுக்குப் பெண்டாட்டி யும், வைப்பாட்டியும் எப்படி வரும் - எங்கிருந்து குதித்தது என்று நியாயமான அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டால் அடேயப்பா! என்னமாய் கோபம் கொப் பளிக்கிறது, உடலெல்லாம் வியர்க்கிறது, கண்கள் எல்லாம் கோபமேறி குதிக்கிறது.

இன்னொரு கூத்தைக் கேளுங்கள்! கேளுங்கள்!! எல்லார்க்கும் கடவுள் என்று சொல்லிக் கொண்டு, அந்தக் கடவுளை சிலையாக்கிக் கோயில் கட்டி அதற்குள் கர்ப்பக்கிரகம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்குள் பூட்டி வைக்கும் போக்கிரித் தனத்தை என்னவென்று சொல்லுவது?

மேலும் ஒரு குட்டிச் செய்தியைக் கேளுங்கய்யா, கேளுங்கய்யா... அந்தக் கடவுளுக்கும் மதச் சாயம்! இன்னொரு மதக்காரன் எங்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சண்டியர்த்தனம் செய்வ தில் கில்லாடி இந்த இந்து மதக்காரர்கள்தான். அப்படியென்றால் கடவுள் உலகக் கடவுள் இல்லையா? எல்லா மக்களுக்கும் கடவுள் இல்லையா? இதெல்லாம் லோக்கல் கடவுள் தானா என்று கேட்காமல் இருக்க முடியுமா? அதையும் கேட்டால் “இந்தக் கருப்புச் சட்டைக்காரனுக்கு இதுதான் வேலை” என்று பற்களை நரநரவென்று கடிக்கிறார் கள்.

கேடுகெட்டதனத்தையும், கோளாறு களையும் செய்வதெல்லாம் அவர்கள் - கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.

இப்பொழுது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களை வடக்கே இரண்டு கோயில்களில் பிடரியைப் பிடித்துத் தள்ளாத குறைதான்.

குடியரசுத் தலைவர் என்றால் சாதாரணமா? முப்படைகளுக்கும் தலைவர் அவர்தான். அதெல்லாம் அங்கே - இங்கே நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று சவுண்டிகள் திமிர் முறிக்கிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்ன சொல்ல?

சரி - அதிலாவது ஓர் ஒழுங்கு முறை இருக்கிறதா?

இவற்றையெல்லாம் விட இன்னும் ஒரு வேடிக்கையைக் கேளுங்கள்! கேளுங்கள்!! வேடிக்கை என்று சொல்லக் கூடாது - கொடுமை, மகா மகா கொடுமை!

சொந்த மதத்துக்காரர்களைக் கூட கோயிலுக்குள் விடாத மதம் பிடித்த மனி தர்கள் இந்து மதத்தில்தான் இருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடிமகன் - முப்படைகளுக்கும் தலைவராக இருக் கக்கூடிய குடியரசுத் தலைவரைக்கூடக் கோயிலுக்குள் விடமாட்டார்கள்.

வெள்ளைக்காரக் கவர்னர் மவுண்ட் பேட்டன் 'பூரி' ஜெகந்நாத் கோயிலுக்குள் “தாட்-பூட்” என்று கோட்டு-டை அணிந்து சென்றால் அவருக்குச் சிகப்புக் கம்பள விரிப்பு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உரு வாக்கிய உலக மேதை அண்ணல் அம் பேத்கரும் தான் மவுண்ட்பேட்டனோடு சென்றார்.

என்ன ஆச்சர்யம் தெரியுமா? மவுண்ட் பேட்டனுக்கு அனுமதி, அண்ணல் அம் பேத்கருக்குத் தடை!

ஏன், அம்பேத்கர் இந்து இல்லையா? அது தெரியாதா உங்களுக்கு... இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் யார் தெரியுமா? அவர்ணஸ்தர்கள் - நான்கு வருணங்களுக் குள் வராதவர்களாம். அதனால்தான் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் ஏதோ அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மற்ற நேரங்களில் மட்டும் இந்துக்களே ஒன்று சேருங்கள்! என்று தாழ்த்தப்பட்ட வர்களையும் சேர்த்து அழைப்பார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களாகி விடுவார்கள்.

பூரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் அனுமதிக்கப்படாததை பெரும் பிரச்சினையாக்கி திராவிடர் கழகம் கண் டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியதுண்டு. இந்த நிலையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி.

குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரம் 28.6.2018  அன்று பூரிமாவட்ட ஆட்சியாள ருக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில் “பூரிஜெகந்நாத் கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி மற்றும் மகளை கோயிலுக்குள் விடாமல் முக்கிய வாயிலில் இருந்த அர்ச்சகர்கள் அவரைத் தள்ளி விட்டார்கள் என்றும், தடுமாறி விழுந்த குடியரசுத்தலைவரை அவரது மனைவி மற்றும் மகள் தூக்கிவிட்டார்கள் என்றும், கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து அவரைத் தள்ளிவிட்டு அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தரவேண்டும்“ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது,

29.6.2018 அன்று அனைத்து ஊடகங்களிலும் இந்தச்செய்தி வந்திருந் தது, இதற்கு நேரடியாக யாரும் பதில் கூறவில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் யாரோ ஒருவர்  வங்கமொழிப் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி யிருந்தார். “அதில் குடியரசுத்தலைவரை தள்ளிவிட்டது, அவரை கோயிலுக்குள் விடாமல் அவமதித்தது தொடர்பாக எதுவும் குறிப்பிடாமல் இந்துக் கோயில் களில் இந்துக்கள் அல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நுழைய அனு மதிப்பது புனிதத்தைக் கெடுத்துவிடும் என்று கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்டவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் புனிதம் பாதுகாக்கப்பட்டது என்றும் எழுதி இதுதான் இந்துமதத்தின் சிறப்பு! ஆகையால் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துதமதம் அதன் செழுமை மாறாமல் உள்ளது” என்று எழுதியிருந்தார்.



இதையே ஆர்.எஸ்.எஸ். மூத்த உறுப் பினர் ராஜேஷ் சின்கா (பாஜக மாநிலங் களவை உறுப்பினர்)  மேற்கோள்காட்டி  “யாராக இருந்தாலும் அவர்களுக்காக கோயிலில் அனுமதி கொடுக்க அது ஒன்றும் பொழுதுபோக்குத் தலமல்ல - புனிதத்தலம்! இந்துக்களுக்கு மட்டுமே உரித்தான சில இடங்களில் நுழையும் அனுமதி பிறருக்கு எந்த விதத்திலும் கொடுக்கப்படாது, அது எவ்வளவு பெரிய அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் சரி” என்று கூறியிருந்தார்.



குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்து என்று அனைவரும் நினைத்திருந் தார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ அவர் இந்து அல்ல என்று மறைமுகமாக ராகேஷ் சின்கா மூலம் கூறிவிட்டது,

பூரி ஜெகந்நாத் ரதயாத்திரை 4.7.2019-லிருந்து துவங்கியுள்ளது, இந்த யாத்திரை யின் துவக்கவிழாவில் குஜராத்தைச் சேர்ந்த முதல்வர் விஜய் ரூபானி, அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி கலந்து கொண் டார்கள்.



கலந்துகொள்வது குறித்து பிரச்சினை இல்லை. ஆனால் விஜய் ரூபானி, மற்றும் அமித்ஷா இருவருமே இந்துக்கள் இல்லை. இவர்கள் பார்சி மற்றும் ஜெயின் மதத்த வர்கள்

இந்திராகாந்தி பார்சி மதத்தவரை திருமணம் செய்தார், அவர் காஷ்மீரப் பார்ப்பனர். சோனியா காந்தி பிறப்பால் கிறிஸ்தவரானாலும், ராஜீவ் காந்தியை திருமணம் செய்த காரணத்தால் அவர் இந்துவே.  இருப்பினும் அவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை. ராம்நாத் கோவிந் இந்துதான், ஆனால் அவர் பட்டியல் இனத்தவராகையால் அனுமதி மறுக்கப்பட்டார்

ஆனால் பிற மதத்தவர்களான அமித்ஷா, விஜய் ரூபானி இருவருமே கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

பாஜக தலைவர் அமித்ஷா கடவுளை விட மிகவும் சக்திவாய்ந்தவராகிவிட்டார் போலும்,

ரதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு ஊடகவியலாளர் களிடம் பேசிய அமித்ஷா ”இங்கிருந்து ஜெகந்நாத் ரதம் புறப்பட்டது, அதே போல் இங்கிருந்து நாங்களும் புறப்படுகிறோம், அது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா முழு வதும் வெற்றியைப் பெற்ற பிறகு எங்கள் பயணம் முடியும்” என்று கூறியுள்ளார்.   தென்னிந்தியா அமித்ஷா பரிவாரங்களை வரவேற்கத் தயாராகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டாலும் பூரி கோயிலுக்குள் அனுமதியில்லை. ஆனால் பார்சி மதத்தைச் சேர்ந்த அமித்ஷாவுக்கு சாங்கோபாங்கோமாக பெருத்த வரவேற்பு. ஏனிப்படி? இவருக்கு மட்டும் ஆகமம் ஒடுங்கி குனிந்து வரவேற்பு கொடுத்தது எப்படி? ஆமாம் உள்துறை அமைச்சரா யிற்றே - அவரிடம் சேட்டை செய்தால் விளைவு வேறு விதமாக ஆகிவிடாதா?

இந்திரா காந்திக்கும், சோனியா காந்திக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு.

நேபாள நாட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் எதிர்ப்பு


சோனியா கோயிலுக்குள் நுழையத் தடை




நேபாள தலைநகரான காட்மாண்டு வில் அண்மையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சார்க் கூட்டம் நடந்தது. அப்போது நேபாளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதி கோவிலுக்குச் சென்று தரி சனம் நடத்த ராஜீவ்காந்தியும், சோனியா வும் விரும்பினார்கள். பிரதமரின் அதி காரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய முயற்சி செய்யும் போது, பசுபதிகோவிலின் பார்ப்பன அர்ச்சகர்கள், சோனியாகாந் தியை கோயிலுக்குள் அனுமதிக்க முடி யாது; காரணம், அவர் இந்து அல்ல என்று கூறிவிட்டார்கள். சோனியா பிறப்பால் இந்து அல்ல என்றாலும், அவர் ஒரு ‘இந்து’வாகத் தான் வாழ்ந்து கொண்டிருக் கிறார் என்று அதிகாரிகள் கூறினார்கள். அதை பார்ப்பன அர்ச்சகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு, நேபாள மன்னரின் முக்கிய அதிகாரிகளின் சிபாரி சையும், இந்திய அதிகாரிகள் பயன்படுத் திப் பார்த்தனர். அப்போதும் ஒன்றும் முடியவில்லை.

“இந்திராகாந்தியே - அவர் ஒரு பார்சி என்பதால், இந்தியாவில் உள்ள ஒரு கோயிலுக்குள் அனுமதி மறுத்தார்கள். (இந்திராவின் கணவர் பிரோஸ் காந்தி ஒரு பார்சிக்காரர்) நேபாள மன்னர் பிரேந் திரா ஒரு முறை தென்னாட்டுக் கோயிலுக் குள் சென்று வழிபட விரும்பியபோது, சட்டை இல்லாமல் தான் உள்ளே வர வேண்டும் என்று அர்ச்சகர்கள் கூறி விட்டார்கள். ஆனால் நேபாள சம்பிர தாயப்படி, மன்னர்கள் சட்டை இல்லாமல்  தரிசனம் செய்யக்கூடாது. எனவே மன் னர் அந்தக் கோயிலுக்குள் செல் லாமலே திரும்பிவிட்டார்’’ என்று நேபாள பார்ப் பன அர்ச்சகர்கள் இந்திய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்கள். ‘ராஜீவ் காந்தி வேண்டுமானால் வரட்டும்; சோனியாவை அனுமதிக்க முடியாது’ என்று அர்ச்சகப் பார்ப்பனர்கள் உறுதியாக தெரிவித்ததைத் தொடர்ந்து, ராஜீவ்காந்திக்கு கோபம் வந்து விட்டது. 'எனது மனைவியை அனு மதிக்கவில்லையானால், நானும் அந்தக் கோயிலுக்கு வர முடியாது’ என்று கூறி விட்டார். இதைக் கேட்ட நேபாள நாட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் ‘ராஜீவைக் கூட நாங்கள் எப்படி கோயிலுக்குள் அழைக்க முடியும்? அவரும் இந்து அல்லவே; பார்சிதானே?’ என்று கூறி விட்டார்கள்.

- 'இண்டியன் அப்சர்வர்', நவ 8, 1987

உலகப் பவுத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஒருமுறை கேரளா வந்தார். அப்பொழுது எல்லா மதக்கோயில்களுக்கும் செல்ல அவர் விரும்பினார்.

செயின்ட் ஜோசப் கத்தீட்ரல் சர்ச் ஆர்வ முடன் வரவேற்றது. சாதாரணமாக அல்ல, சிகப்புக் கம்பள வரவேற்பு. பாளையம் மசூ தியில் தொழுவதற்கு இமாம் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டதுடன் காலை விருந்துக்கும் அழைப்புக் கொடுத்தனர்.

எல்லாம் சரிதான், திருவனந்தபுரம் தேவஸ்தானம் என்ன செய்தது?

தேவஸ்தானம் என்றால் சாதாரணமா? இந்துக்கடவுளை மேய்க்கும் மேலாண் மைக்காரர்கள் அல்லவா அவர்கள்.

தலாய்லாமா தம் சம்பிரதாய உடை களை எல்லாம் களைந்து, செருப்புகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எங்கள் இந்துக் கோயிலில் அனுமதி கிடையாது - கிடையாது என்று கறாராகவே மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துச் சொல்லி விட்டனர் தேவஸ்தான அதிகாரிகளாம் 'பெருமான்'கள்.

என்ன காரணமாம்? அவர்கள் இந்து மதத்தை ஏற்காதவர்களாம்.

மதம் மனிதர்களைப் பிளக்கிறது - அதுவும் இந்து மதம் இதன் உச்சம்! கடவு ளும் தன் பங்குக்கு பிரிவினையைத்தான் ஏற்படுத்துகிறது.

இதன் பொருள் என்ன? மனித குலம் ஒன்றாக பகை யொழிந்து சகோதரத்துவம் பேண வேண்டுமானால் இந்தப் பாழாய்ப் போன கடவுளும், மதமும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் - ஆம், ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

கடவுளை மற!

மனிதனை நினை!

- தந்தை பெரியார்

- விடுதலை ஞாயிறு மலர், 13.7.19