பக்கங்கள்

கார்த்திகை தீபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்த்திகை தீபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 டிசம்பர், 2019

கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீபம் மெய்யும் - இந்து திரிபமும்.

#கார்த்திகை_தீப_வரலாறு

கார்த்திகை தீபமென வழங்கும் 
கார்த்துல 
தீபம் மெய்யும் - இந்து திரிபமும்.                       

இந்தியாவில் மானிடர்களால் 
போற்றப்பட்டு கொண்டாடி வரும் 

அனைத்து இந்து பண்டிகைகளும் 
இந்து மதத்தின் பண்டிகைகளா.?

என்று நாம்  கேள்வி எழுப்பினால்...

திருப்தியான பதில் இந்து மதத்தில் இல்லை மாறாக இந்து பண்டிகைகள் அனைத்திற்கும் இந்தியாவில் இரண்டு  வரலாறுகள் உண்டு

1  இந்து மதம் கூறுவது 
புராணம் கதைகள் அதாவது பொய் புரளிகள் நிறைந்த ஆதாரம்மற்ற வரலாற்று கதைகள்.

2  இந்த பண்டிகைகளுக்கு 
பௌத்த கூறும் 
வாய்மை நிறைந்த வரலாற்று ஆதாரங்கள்.

அந்த வரிசைகளில்  கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீபம் உண்மை வரலாறு

இந்த வரலாற்றை 
ஆக்கிரமித்துக் கொண்ட 
இந்து மதத்தின் திருட்டு புத்தியையும் 

அதை பற்றி தமிழ் இலக்கியங்களில் 
கூறும் ஆதாங்களுடன்  பார்ப்போம்.

முதலில் கார்த்துல தீபம் 
என்பதின் பொருள் அறிவோம்.

கார் என்றால் இருள், 

துலள் என்றால் விளக்குதல்,

 தீபம் என்றால் வெளிச்சம், 

அதாவது 

 "இருள் விலகி 
வெளிச்சம் பெருவதே இதன் அர்த்தம்" 

மக்கள் இருளை கண்டு அச்சமும் 
மூட நம்பிக்கையும், 
கொண்டுயிருந்த வேலையில்...

இதில் இருந்து மக்கள் வௌியேற,

வெளிச்சம் தேவையாய் இருந்த 
நிலையில் நெடுங்காலங்களுக்கு முன் 

மலாடபுரம் என்ற ஊரில் இருந்த 
பௌத்த சங்கத்தை சேர்ந்த அறிஞர்கள் மக்களுக்குப் 

பயன் தரக் கூடிய 
பல ஆய்வுகளைச் செய்து வந்தர்கள்.

அந்த  வரிசையில் மருந்துகளும் கண்டுபிடித்து 
மக்கள் பயன்பாட்டிற்க்கு அளித்தார்கள்.

அவ்வாறான பணியில் 
பேராமணக்கு - (கொட்டைமுத்து) 
என்னும் விதையிலிருந்தும்,

சிற்றாமணக்கு விதையிலிருந்தும் எண்ணெய் வடித்து எடுத்து

அதை மருந்துகளுடன் கலந்து
உபயோகித்து அதன் 
நற்பலன்களை அறிந்திருந்தார்கள்                   

அப்போது 
பெரிய பிரச்சனையாக இருந்தது இரவின் இருளைப் போக்க அது பெரிதும் 
உதவும் என 
பௌத்த அறிஞர்கள் நம்பினார்கள். 

ஏனெனில் இருட்டில் விளக்கை 
ஏற்றும் பழக்கம் அப்போது இல்லை. 

மாறாக இருளை போக்க  காய்ந்த மரத்தினை வெட்டி அதைக் தீயிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தைத்தான் மக்கள் பயன்படுத்த முடியும்,

ஆனால் அதிலும் பிரச்சனை இருந்தது.
வெளிச்சமும் நீண்ட நேரம் கிடைக்காது,

நெருப்பு அவிந்துப் போவதால் உண்டாகும் புகை மூச்சு திணறலும்,
பல நோய்களையும் உருவாக்கும்.

இருப்பினும் விறகின் வெளிச்சப்பயன்ழகள் குறைவுதான்.

அந்த கையறு நிலையில்தான் 

ஆமணக்கு விதைகளில் கிடைத்த நெய் பெரிய வரமாக அமைந்தது.

பௌத்த சங்கத்தோரான அறிஞர்கள் 
 கண்டறிந்த ஆமணக்கு நெய்யில் 
தீபத்தை ஏற்றி சோதனை செய்தார்கள்.

அப்போது 
பிரகாசமான குளிர்ந்த ஒளி கிடைத்தது.

சிறிய 
இடத்திலிருந்து பெரிய ஒளி  கிடைத்தது 
பௌத்த 
அறிஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, 

தமது கண்டுபிடிப்பை மக்களுக்கு பயன்படுத்த  பௌத்த அறிஞர்கள்  முனைந்தார்கள்.

ஆனால் 

மக்கள் உடனே இதனை  
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்...
 
முதலில் மன்னனின் 
இசைவைப் பெற விரும்பினார்கள்.

ஆனந்தித்து என்னும் தேசத்தை ஆண்டு வந்த அரசனிடம் புத்த சங்க அறிஞர்கள் 
இக் கண்டுபிடிப்பை  காண்பித்தார்கள்.

அரசரும் வீடுகளில் இக்கண்டு பிடிப்பை பயண்படுத்த உடனே இசையவில்லை.

ஏனெனில் 
நெருப்பினால் உண்டாகும் புகை பலவிதமான நோய்களை உருவாக்கும் என்பது மட்டுமல்ல...

நெருப்பினால் பலவித பிரச்சனைகள் உண்டாகலாம் என்று மன்னன் அச்சப்பட்டான். 

அதனால் அந்த ஆமணக்கு எண்ணெய்யை சோதிக்க மன்னன் விரும்பினான்.  

அதன்படி ச
யாருக்கும் தீங்கு நேராவண்ணம், 

தனது வசிப்புகளுக்கு அருகில் உள்ள அண்ணாந்து குன்றின் 
( தற்போதைய அண்ணாமலை ) 
உச்சியில் ஒரு பள்ளத்தை வெட்டச் செய்து 

நிறைய ஆமணக்கு நெய்யை தயாரிக்கச் செய்து அதை குன்றின் உச்சிக்கு கொண்டுபோய் வெட்டிய பள்ளத்தில் ஊற்றி,

பருத்தியால் 
திரித்த திரிவுடன்  கொளுத்தச்  செய்தது 

அந்த ஒளியின் புகையால் மலைபகுதி முழுவதும் 
ஆடு,மாடு,விலங்களுக்கு எந்தவிதமான தீங்கும் விளையாதைத் கண்டு 

அனைவருக் வெளிச்சம் கிடைக்குமென 
மக்களின் நம்பிக்கையை உணர்ந்த மன்னர் அனைத்து வீடுகளிலும் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி 

தீபம் ஏற்றிக் கொள்ளவும்,பேராமணக்கையும் சித்தாமணக்கையும் வீடுகள்  தேசமெங்கும் அதிகமாக விளைவிக்க ஆனையிட்டார்.

அதன்படி முதல் மூன்று நாட்கள் மக்கள் தீபத்தை வீட்டுக்கு வெளியே வைத்து விக சோதித்துக் கொண்டனர்.

அதனால் 
தீங்கேதும் விளையாததைக் கண்ட பின்னரே வீட்டுக்குள் ஆமணக்கு நெய்யாலான தீபத்தை  கொண்டு சென்றனர். 

அது முதற்கொண்டு அனைவரும் வீட்டிலேயே  ஆமணக்காலான தீபத்தை  வைத்துக் கொள்ளும் வழக்கம் வந்தது.

அப்படி 

பௌத்த பிக்குகள் 
கண்டு பிடித்த அந்த ஆமணக்கு 
நெய்களால் சோதிக்கப்பட்ட இடம்தான் 

அண்ணாந்து மலை என்ற 
திருவண்ணா மலையாக மறுவியது என்பதைச் 
சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது.

புத்தசங்க அறிஞர்கள் இக் கண்டு பிடிப்பை சோதித்த காலம் முன் பனிக் காலமாகும்.

அதனால் மழைக் காலம் முடிந்து 
முன் பனித் தொடங்கும் காலத்தின் 

முதல் பௌர்ணமியில் 
அவர்கள் தமது சோதனையைச் செய்தனர். 

பௌத்தர்களின் 
கண்டு பிடிப்புகளான பௌத்த நெறி 

பௌத்த சங்கம் பல நாடுகளில் பரவுவது போல இந்த கண்டுபிடிப்பும் பரவியது. 

சீனப் பயணிகள் இதைப்பற்றி குறிப்பை எழுதியுள்ளனர். அவர்கள் நாட்டிலும் ஆமணக்கு நெய்யை அறிமுகப்படுத்தினர்.

அவர்களும் அந் நாளைக் 
கொண்டாடி வருகின்றனர் என்றும்

அயோத்திதாச பண்டிதரும்,
தமிழ் இலக்கியங்களும் குறிப்பிடுகிறது.

நாளடைவில் 
பௌத்தம் வீழ்ச்சிவுற்ற காலங்களில்  

இந்துமதம் இந்த கண்டுப் பிடிப்பை தனக்கானதாக ஆக்கிரமத்தது.

இதற்க்காக 

ஒரு ஆதாரமற்ற 
பொய்யான வரலாற்றையும் 
திரித்து கூறிக் கொண்டிருக்கிறது.

அதாவது சிவபெருமான் தான் முதற் கடவுள் எனவும் 
அவரை சோதி பிழம்பாக பார்வையிட 

பிரம்மணும்,விஷ்ணுவும்,
வழிவகுக்க ஆலயங்களின் முன் 
வாழை மரம் நட்டு 
பனையோலை அதனை சுற்றி அடைத்து

"சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு 
சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து 

சிவபெருமானே சோதிப்பிழம்பாகத் 
தோன்றி காட்சியளிக்கிறார் 

என  நினைவு கூர்ந்து வழிபடுவேண்டுமாம். 
பிறகு வீடுகளில் தீபம் ஏற்றவேண்டுமாம்,

பழங்காலங்களில் ஆமணக்கு தீபம் சோதணைக்கு மூன்று நாட்கள் வீடுகளில் வாசல்களில் வைத்ததையும்

குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் 
என மூன்றாக திரித்து விட்டு விட்டார்கள்.

என 

நம்பகமற்ற கதைகளை வரலாறாக இந்து மதம் கூறுவது இம்ம தத்தின் 
யோக்கிதையை வெளிப் படுத்துகிறது.

எனவே மெய்யை மெய்யாகவும் 
பொய்யை பொய்யாகவும் கூறுவோம்.

ஆதார நூல்:-

#பதார்த்த_சிந்தாமணி
#பெருந்திரட்டு_பாசமட்சி
#பின்கலை_நிகண்டு

புதன், 21 நவம்பர், 2018

திருவண்ணாமலை தீபம்: பேராசிரியரின் பொருளாதாரப் பார்வை தீபமும் - திகைப்பும்



(1947இல் விடுதலையில் வெளியான (கார்த்திகை 7 விய ஆண்டு) 'தீபமும் திகைப்பும்' என்னும் பேராசிரியரின் திருவண்ணாமலை தீபம் பற்றிய கட்டுரை. தம்முடைய கட்டுரையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட தாழம்பூப் பிரச்சினை புராண வரலாற்றினை எடுத்துக்கூறிச் செயற்கைத் தீபம் ஏன் ஏற்றவேண்டும் என்று வினா எழுப்பி, ஒளியே முக்கியமென்றும், எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழா வெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் பல மடங்கு ஒளியைத் தரக்கூடிய மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை மக்களுடைய பொருளுக்கு அழிவில்லாமல் செய்யட்டும். உற்சவ காலங்களில் தீவட்டிக்கு பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் இது மட்டும் எப்படித் தவறாகும்? அனல் விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர் விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும்போதும், தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது என்று தீபத் திருநாள் கொண்டாடுபவர்களுக்கு மாற்றுச் சிந்தனை அளிக்கிறார். தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது. தீபத்தைப் போற்ற வேண்டாம் என்று முடிக்கிறார்.)


கார்த்திகை நெருங்கி விட்டது! வீடுகளிலெல்லாம் அகல் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி வைப்பார்கள். இரவு முழுவதுங்கூட விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றிய படி இருப்பர், செல்வர்கள் வீடுகளிலே பணியாட்களும் பிறரும். அந்நாளிலே திருவண்ணாமலையிலே தீபம். மலையுச்சியிலே பெருங்கொப்பரை, அது நிறையக் கற்பூரத்துடன் கலந்த நெய், மேலும் மேலும் நெய்யும் திரியும் கொட்டிய வண்ணம் பக்தர்களின் கூட்டம்! தமிழகத்தில் உள்ள பெருவாரியான கோவில்களிலேயும் அந்தந்தக் கடவுள்களின் பொருள் நிலைக்கேற்ற வண்ணம் கார்த்திகை கொண்டாடப்பட்டே வருகின்றது.

தீபத்திற்காக ஆயிரக்கணக்கான கிலோ மணக்கும் நெய்யும், நூற்றுக்கணக்கான (கேஸ்) பெட்டி கற்பூரமும், கட்டுக்கணக்கிலே திரி நூலும் எரிக்கப்படுகின்றன. வீடுகளிலே ஏற்றப்படும் கோடிக்கணக்கான கை விளக் குகளால் ஆயிரக்கணக்கான குடங்கள் அளவுள்ள எண்ணெய் வீணாக எரிகிறது. தீப தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால், அவர்களது போக்குவரத்துக்காக ரயிலுக்குச் செலவிடும் தொகையும், வெளியூர்களில் தங்குவதால் ஏற்படும் செலவுத் தொகையும் ஏராளம். அவர்களுக்கு ஏற்படும் பொருள் இழப்பும் ஏராளம்!

நாசப்பட்டியல்


இவ்வளவு பெருங்கூட்டமான மக்கள் ஆண்டிலே ஓரிரண்டு நாட்கள் திருவண்ணாமலையிலே வந்து குவிவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கிலே கட்டப் பட்டுள்ள சத்திரங்களும், மடங்களும், பாக்கி இருக்கும் முன்னூற்று அறுபத்து மூன்று நாட்களும் பயன்படாமல் வீணாகக் கிடப்பதால் (சில சோம்பேறிகளுக்கு உறை யுள் ஆவதைத் தவிர) அதற்காகக் செலவழிக்கப்பட்ட மூலதனம் பாழாகின்றது. இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் திரளுவதால் இலாபம் அடையும் (கொள்ளையடித்து வாழும்) கோயிற் பூனைகள், செல்வம் மிக்க செட்டியார் இனத்தாரையும், பிற தமிழரையும் தூண்டிவிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வெள்ளியிலே வாகனம், நூதனரதம், அற்புத கல்யாண மண்டபம், ஈஸ்வரனுக்குப் பொன்னிலே கவசம், அம்மனுக்கு வைர ஒட்டியாணம் புதிய கோபுரக் கும்பா பிஷேகம், வேத வியாகர்ண பாடசாலை என்பவைகளை அமைக்கச் செய்வதாலும், அவைகளின் விளம்பரத்தின் மூலம் ஏராளமான மக்களை திரளச்செய்து அந்த பெருங் கூட்டத்தால் பெருங்கொள்ளை கொண்டு கவலையின்றி வாழ்வதற்கு வழிசெய்து கொள்ளுந் தன்மையாலும், ஏற்படும் பொருள் இழப்பு ஏராளம். எவ்வகையானும் தமிழர் கோடிக் கணக்கிலே பொருளைக் கொட்டியழவும் தமிழரின் வளம் கெட்ட ழியவும் காரணமாகின்றது கார்த்திகை தீபம்.

பொருள் பாழாக்கப்படுவதைத் தவிர மக்களுக்கு ஏற்படும் தொல்லையும், தொத்து நோயும், துயரும் பெருந்துன்பமும் அளவற்றவை என்பதோடு, அவர்களுடைய அறிவு அழியுந்தன்மையே திகைப்பை விளைப்பதாம்!

இது பற்றிய புராணக்கதை யாவருக்கும் தெரிந்ததே! இதன்படி மும்மூர்த்திகள் சந்திக்கின்றனர். ஏன்? எங்கே? எப்பொழுது? யாருக்கும் தெரியாது. மும்மூர்த்திகளிலே ஒருவர் சிவன், அவரே முழுமுதற் கடவுள் என சைவ மதத்தினர் கூறுவர்! அவர் ஏன் மற்ற சாதாரணக் கடவுளரைச் சந்திக்க வேண்டும்? நமக்குத் தெரியாது! சந்திப்பது ஒப்புரிமை படைத்தவர்களிடத்திலேயே நிகழ்வது இயற்கை. முழுமுதற் கடவுளின் உயர்வை எடுத்துக்காட்ட வந்த இக்கதையில் சிவனைக்காண மற்றிருவரும் சென்ற போது இவை நிகழ்ந்ததாகவாவது கூறியிருக்கலாம். அவ்வாறும் இல்லை. சந்தித்த இடத்திலேயே யார் பெரியவன் என்ற விவாதம் ஏன் தோன்றவேண்டும்? எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தபோது பிரம்மாவும், விஷ்ணுவும், அப்-பொழுதே யார் பெரியவன் என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பியதின் விளைவா? மற்ற புராணங்களின்படி விஷ்ணுவின் மகன் பிரம்மா என்ற கதையிருக்க சந்தித்தபோது திடீரென்று சந்தேகம் பிறப்பானேன், தந்தைக்கும் மகனுக்குமே? யார் பெரியவர், என்ற விவாதம் மூர்த்திகளிடையிலே நடப்பானேன்? முக்காலத்தையும் உணரும் மூர்த்திகள் ஒருவரையொருவர் சந்திக்கப் போவதையே உணர வில்லை! சந்தித்தால் சச்சரவு ஏற்படும் என்பதை மட்டும்தான் உணரவில்லையா? அன்றி இவைகளை எதிர்பார்த்தேதான் சந்தித்தார்களா? அப்படியானால் முடிவும் அவர்கள் அறிந்ததேதானா? அதற்கு ஏன் ஒவ்வொரு புதுஉருவிலே தோன்ற வேண்டும்? நாமறியோம் என்பது மட்டுமல்ல; மும்மூர்த்திகளேகூட யாரை, எங்கே, எப்பொழுது சந்திக்கவேண்டும் என்ற நிர்ணயமில்லாமலும், ஏன் சந்திக்கவேண்டும் என்ற சிந்தனை இல்லாமலும், என்ன விளையும் என்பதை அறியாமலுமேதான் இருந்திருக்கவேண்டும்!

இது நிற்க. யார் பெரியவர் என்று பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையிலே வாதம் ஏற்பட்டதே தவிர, கதையின்படி யார் பெரியவர் என்ற முடிவு காணப்பட வில்லை. இடையிலே சிவனார் ஜோதியாகி வானளா வினார்! இருவருக்கும் பெரியவருமானார்! அவ்வளவு தான்!

பொய் மூர்த்திகள்


இது கிடக்க. ஜோதியாய் நின்ற பெருமான் அடியையும், முடியையும் காணச் சொன்ன போது எப்படிப் பேசினாரோ? அந்த முகந் தெரிந்தால் பிரம்மா - முடியைக் காண்பதும் கடினமாமோ? அசரீரியாகச் சொன்னதாக வைத்துக் கொள்வோம்! அடிமுடியைக் காண விரும்பிய இருவரும் பன்றியும் அன்னமுமாய் உருவெடுப்பானேன்? பன்றியாக பலமுறை உருவெடுத்த பழக்கத்தால் திருமால்தான் உடனே பன்றி வடிவெடுத்தார்! பிரம்மாவாவது ஏன் உயரப் பறக்கக் கூடிய கருடனாக உருவெடுக்கக் கூடாதோ? தெரியவில்லையென்றோ முடியவில்லை என்றோ கருத முடியுமா? இருந்ததென்றால் இரு மூர்த்திகளும் தங்களின் இயற்கை உருவத்தைவிட இதற்கேற்ற புது வடிவெடுத்துங்கூட காணமுடியாத காரணமென்ன? ஜோதி யென்றால் அடிமுடி இல்லாதது என்றால் - முழுமுதற் கடவுளல்லவா? எனவே அடிமுடி இல்லாத ஜோதியாகி நின்றார் என்றால் - இல்லாத அடியையும் முடியையும் காணும்படி கூறியது பொய்யல்லவா? அடி முடி இருந்ததென்றால்- இருவரும் காணாததால் காண இயலாததால்  மூர்த்திகள், படைப்பவர், காப்பவர் என்று பேசப்படுவது முழுப்பொய்யல்லவா? பின் விஷ்ணுவிற்கு மட்டும் கோயில்களேன்? பிரம்மாவைவிட எக்காரணத் தாலே விஷ்ணு கடவுளென்று கருதப்படமுடியும்?

விஷ்ணுவுக்கோ, பிரம்மாவுக்கோ கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தும் திறமையிருந்தாலும் தாங்களும் ஜோதியாகி - (தீயாகி) ஜோதியிலே கலந்து அய்க்கியமாகி அடியையோ முடியையோ மட்டுமல்ல; அடி முடி இரண்டையுமே கண்டு திரும்பி வெளிவந்திருக்கலாம். அப்படியானால் சிவன் பெருமை நிலைக்காதே என் றெண்ணிய புராணீகர், விஷ்ணுவை பன்றியாக்கி, பிரம்மாவை அன்னமாக்கி, அரன் பெருமையைத் தடுத்தாட் கொண்டார் போலும்!

தாழம்பூ பிரச்சினை


இனி பிரம்மா முடியைத் தேடச்சென்றபோது வந்த தாழம்பூ முடியிலிருந்து வந்ததென்றால், முடியிருந்த தென்றாகிறது! அப்படியானால் பிரம்மாவால் ஏன் அடையமுடியவில்லை? அவரால் அடைய முடியவில்லை யென்றால் தாழம்பூவால் மட்டும் கீழ்நோக்கி அவ்வளவு தூரம் வர முடிந்தது? தாழம்பூ தானாக வரவில்லையென்றால் - அது அசேதனம், சேதனமென்று, தானாக இயங்குவ தென்று இயற்கையின் தன்மைக் கேற்ப இயல்வது. எனவேதான் கீழே விழுந்தது என்றால் அன்னப் பறவையிடம் எப்படி பேசமுடிந்தது? பொய் சாட்சி கூறியதுதான் எப்படி ? அது கூறவில்லை, அன்னப்-பறவை அடையாளமாகக் கொண்டு வந்த தென்றால், தாழம்பூவைத் தண்டிப்பானேன்? தாழம்பூவைச் சிவனார் தண்டித்ததினின்றும் அது தலையிலே இருந்தது என்பதைச் சிவனார் ஒப்புக் கொண்டதாகத் தானே பொருள்? அப்படியானால் ஜோதியின் முடியிலே தாழம்பூவோ தாழைச் செடியோ எப்படியிருக்க முடியும்? எரிந்து சாம்ப லாய்ப் போயிருக்காதா? ஜோதியான போது இறைவன் இவைகளை நீக்கிவிட்டாரா? பிறகு தாழையின் கதி யென்ன? ஜோதியிலே கங்கை, சந்திரன் முதலானோர் தங்கி இருப்பதனால் ஒரு தாழம்பூ ஏன் விழவேண்டும்? இறைவன் தலையிலே சூட்டப்பட்டு விட்டால் பின் என்றும் அழியாது என்ற கூற்று பொய்ப்பதன்றோ? அதுவன்றி இறைவன் முடியினின்று விழும்போது தாழை பொய் சொல்லிற்றென்றால் சிவனின் மகத் துவந்தான் என்ன?

1 1/2 அடி உருவம் ஏன்




இறைவன் ஜோதியாய் நின்றதால்தான் அண்ணா மலையே தேயுஸ்தலம் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொண்டால் பின் ஏன் தீபம் ஏற்றுகின்றனர்? அரனுடைய அடிமுடிகளை அரியும் அயனுமே காணமுடியவில்லை யென்றால், அடி முடி இரண்டையுமே எவரும் காணக் கூடிய வகையிலே தீபம் அமைப்பதன் அர்த்த மென்ன? அல்லது அத்தீபத்தைத் கண்டவுடனேயே, மக்கள் இறைவனின் செந்தழல் மேனியையும் அடிமுடி காண இயலா விண்ணுயர ஓங்கிய உயர்வையும் உணர்கின்றனர் என்றால், தீப விழா நடைபெறும் அதே இடத்தில் அருணாசலேஸ்வரருக்கு ஒன்றரை அடி உயரத்தில் சிலை (விக்ரகம்) எதற்காக? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தீபம் ஒளி விட்டும் சிவனாரின் இலிங்க வடிவமும், மூர்த்தி வடிவமும், ஒரு காலைத் தூக்கியருளும் நடராசரும், பொன்முடி தரித்த சுந்தரேசுவரரும் எதைக் காட்டுகின்றன? அடிமுடியற்ற கடவுளைக் காட்ட தீபம் என்றால் தாளம் தவறாமல் அடி வைத்துச் சதிராடும் சாமிக்கும், இசை கேட்டுருகித் தலை(முடி)யசைக்கும் சாமிக்கும் சிலை எதற்காக? தீபம் கண்ட மக்களுக்கு, தீபத்தின் தத்துவம் பேசும் தொண்டர்கட்கும் விக்ரக வணக்கந்தான் எதற்-காக? அண்ணாமலை தீபத்தைக் கண்டு ஜோதி வடிவைக் கொண்டு. அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்ததை மக்கள் உணர்ந்து கொண்டால் தீபந்தான் எதற்கு? இவைகளை மக்கள் உணர்தல் எளிதோ, ஞானிகளன்றோ உணரவல்லார் எனின், தீபத்தின் பெயரால் மக்களின் பொருள் பாழாக்கப்படுவானேன்?

அகல் விளக்கிலெல்லாம், மின்மினியின் ஒளியைக் காண்பதாகக் கூறும் பக்தர்கள் அண்ணா-மலைக்கே ஆண்டு தோறும் செல்வானேன்?

அறிவுடைமையாகுமா ?


அகில உலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த முழுமுதற் கடவுள் ஜோதிவடிவினன் என்பதை உலகோருக்கு உணர்த்தவேண்டுமானால், உலகில் பகல் முழுவதும் விளங்கும் பகலவனையே அதற்கு ஒர் அடையாளமாக்கியிருக்கலாம்! அகல் விளக்குக்கு எண்ணெய்யோ, தீபத்திற்கு நெய்யுந்திரியுமோ வீணாகாது. இவை வீணாவது பற்றிக் கவலையில்லை யென்றே கருதினாலும், அரியும் அயனும் அளவிட முடியாத அரன் என்று எடுத்துக்காட்ட எழுதப்பட்ட இறைவன், அவரவர்கள் பொருள் வலிவுக்கேற்பவும், சேர்ந்த நெய், சூடம், திரி இவைகளுக்கேற்பவும் அளவிடப்படுவது அறிவுடைமையாகுமோ?

அண்ணாமலையே ஜோதிவடிவென்றும், அதற்கு அடையாளமாகவே அதன் மேல் தீபமென்றும் கூறினால், ஜோதி வடிவு ஜோதியை ஏன் இழந்தது என்பதையும், முன்பொரு காலத்தில் ஜோதியாகத்தான் இருந்த தென்றால்,அதுவே நெருப்பாக நின்று மாறிவிட்ட பிறகு எதற்காக செயற்கைத் தீபம் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!

ஒளியே முக்கியமென்றும், எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழாவெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை  மக்களுடைய பொருளுக்கு அழிவில் லாமல் செய்யப்-படும் உற்சவகாலங்களில் தீவட்டிக்குப் பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் அது மட்டும் எப்படித் தவறாகும்? அகல்விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர்விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போது தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது?

ஆனால், தீபமோ வழக்கம் போல் வந்து போகிறது! தமிழர் பொருளோ என்றைக்கும் எரிகிற நெருப்பிலே எண்ணெய்யாகிறது! தமிழர் வாழ்வோ இன்றளவும் அறியாமை இருளிலே அழிவுறுகின்றது! இந்நிலையை உணர்ந்ததாலேயே தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது! தீபத்தைப் போற்ற-வேண்டாம்! திகைப்புற்றே கலங்க வேண்டாம்!

- விடுதலை நாளேடு, 21.11.18