பக்கங்கள்

ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

தகுதி, திறமை என்பதே புரட்டு!

 

உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு: தமிழர் தலைவரின் விளக்கவுரை

சென்னை, பிப்.20 தகுதி, திறமை என்பதே புரட்டு என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி   விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு

கடந்த 1.2.2022 அன்று மாலை  ‘‘உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு'' என்ற தலைப்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

“…Much has been made of merit in this case; but equal merit pre-supposes equal opportunity, and I think it goes without saying that the toiling masses are denied all those opportunities which a few literate people living in big cities enjoy. To ask the people from the villages to compete with those city people is asking a man on bicycle to compete with another on a motorcycle, which in itself is absurd. Then again, merit should also have some reference to the task to be discharged. Mr. Tyagi interrupted Dr. Deshmukh by saying that it is a fight for the illiterates. I think, however sarcastic that remark may be, he was probably right. Self-government, means a government by the people, and if the people are illiterate, a few leaders have no right to usurp all the power to themselves. This cry, this bogey of merit and fair-play is being raised by those who are in a[n] advantageous position and who stand to suffer if others also come into the picture.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

''தகுதி குறித்து பேசப்படுகிறது, அதாவது அனைவருக்கும் சமமான நிலை வரும் போது தான் தகுதி குறித்துப் பேசவேண்டும்  இங்கு பெரிய நகரங்களில்  மேல்தட்டு வர்க்கத்தில் கல் வியறிவு பெற்றவர்கள் அனுபவிக்கும் அனைத்து வாய்ப்புகளும்  உழைக்கும் மக் களுக்கு மறுக்கப் படுகின்றன. கல்வி அறிவு எளிதில் கிட்டாத மக்களை அனைத்து வசதி களும் வளங்களை யுடைய மக்களுடன் போட்டி போடச் சொல்வது, சைக்கிள் ஓட்டும் மனிதனை  மோட்டார் சைக்கிளில் செல்வாரோடு போட்டி யிடச் சொல்வது போன்றது.  முதலில் இங்கே தகுதி என்பதே விவாதத்திற்கு உள்ளானது ஆகும். 

சிலர் இது கல்விவளம் இருந்தும் படிக்காமல் இருப்பவர்களின் போராட்டம் என்று கூறுகின் றனர். அதாவது அவர்களின் ஏளன மனநிலையே ஆகும்.   மக்களாட்சி என்பது மக்களால் நடத்தப் படும் அரசாங்கம் என்று பொருள்படும், இங்கு நிர்வாகத் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன. மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்த கார ணத்தால்  சிலர் அனைத்து அதிகாரத்தையும் தங்களிடம் வைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். 

இப்போது மற்றவர்கள் தங்களின் உரிமை களைக் கேட்கும் போது அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவிகொடுத்துக்கேட்காமல் அதனை நாடகம் என்கிறனர். அவர்களால் தங்களின் உரிமை பாதிக்கப்படும் என்று நினைக் கின்றனர்.''

என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய தத்துவத்தை உண்டாக்கினர். இதுதான் புதிய கோணத்தில், இந்தத் தீர்ப்பினுடைய அருமையான பகுதி - சிறப்பு எங்கே இருக்கிறது என்று சொன்னால்,

மெரிட் என்பதும்,  ரிசர்வேஷன் என்பதும் 

ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல!

'மெரிட்' என்பதும், ரிசர்வேஷன் என்பதும், இரண்டு வெவ்வேறு அம்சங்கள், ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

இரண்டு அம்சங்கள் என்றால், இருமுனை (bizary)  என்று இருக்கக்கூடியதல்ல.

ரிசர்வேஷன் என்பது, வாய்ப்பவர்களுக்கு வாய்ப் பைக் கொடுத்தால், எல்லோரும் வருவார்கள்.

எனவே, சமத்துவம் என்று சொல்லும்பொழுது, 

Substantive Equality என்று உண்மையான சமத்துவமா?

அல்லது Formal Equality   - ஒப்புக்கான - சட்டப்படி பேசுகின்ற சமத்துவமா?

இரண்டு பேரையும் ஒன்றாக விட்டுவிட்டேன் என்று சொல்லுகின்ற சமத்துவமா? என்பதற்கு, அரசி யல் சட்ட நிர்ணய சபையிலிருந்து எடுத்து சொன்னது மட்டுமல்ல நண்பர்களே, அதைவிட மிக முக்கியமாக மற்ற தீர்ப்புகளிலிருந்தும் எடுத்துச்சொல்கிறார்.

மெஜாரிட்டி தீர்ப்பு - மைனாரிட்டி தீர்ப்பு

இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், இந்தத் தீர்ப்புகளில், மெஜாரிட்டி தீர்ப்பு - மைனாரிட்டி தீர்ப்பு என்று சொல்வார்கள்.

மைனாரிட்டித் தீர்ப்பை -Dissenting Judgment  என்று சொல்வார்கள்.

மூன்று நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்பொழுது, இரண்டு நீதிபதிகளுடைய தீர்ப்பு ஒன்றாக இருந்து, மூன்றாவது நீதிபதியினுடைய தீர்ப்பு வித்தியாசமாக இருந்தால், சில நேரங்களில், Dissenting Judgement-ட்டையே பின்னாளில் வரக்கூடியவர்கள் சரியானது என்று பட்டால்  கையாளுவார்களே தவிர, மெஜா ரிட்டி தீர்ப்பை எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

சட்ட முறையில், தீர்ப்பு எழுதுகின்ற முறையில் இது மிக சர்வ சாதாரணம்.

Justice R. Subba Rao -  

T. Devadasan vs Union of India

அப்படி வருகிறபொழுது,Justice R. Subba Rao -  T. Devadasan vs Union of Indiaஎன்ற ஒரு வழக்கில், 16(4) என்பது வேலைவாய்ப்பு, அதைப்பற்றி தெளிவூட் டுவதற்காக மிக அருமையான ஒரு செய்தியை எடுத்துச் சொல்கிறார்.

சமத்துவம் என்றால் என்ன?

இதுதானே முக்கியம். ஆகா, சம வாய்ப்பு கொடுக் கலாமே! இரண்டு பேரும் திறமை அடிப்படையில் போட்டி போடட்டும். அதிக மதிப்பெண் வாங்கிய வனுக்குக் கொடு; குறைந்த மதிப்பெண் வாங்கியவனை வெளியே தள்ளு என்றால்  என்ன அர்த்தம்?

பசியாக இருப்பவன் முக்கியமா? புளியேப்பக் காரன் முக்கியமா? என்று கேட்டால்,

இரண்டு பேரும் ஒன்றுதான் என்று, இரண்டு பேருக்கும் சம வாய்ப்பு கொடுத்தால், விருந்தில் யாருக்குப் பயன் அதிகம்?  இருப்பது கொஞ்சம்தான்.

இங்கே ஒரு உதாரணத்தை சொல்லுகிறார்.

என்ன சொல்லுகிறார் என்றால், சமத்துவம் என்றால் என்ன?

“Article 14 lays down the general rule of equality. Article 16 is an instance of the application of the general rule with special reference to opportunity of appointments under the state. It says that there shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the state. If it stood alone, all the backward communities would go to the wall in a society of uneven basic social structure; the said rule of equality would remain only a utopian conception unless a practical content was given to it. Its strict enforcement brings about the very situation it seeks to avoid. To make my point clear, take the illustration of a horse race. Two horses are set down to run a race - one is a first class race horse and the other an ordinary one. Both are made to run from the same starting point. Though theoretically they are given equal opportunity to run the race, in practice the ordinary horse is not given an equal opportunity to compete with the race horse. Indeed, that is denied to it. So a handicap may be given either in the nature of  extra weight or a start from a longer distance. 

By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one. The same difficulty had confronted the makers of the constitution at the time it was made. Centuries of calculated oppression and habitual submission reduced a considerable section of our community to a life of serfdom. It would be well nigh impossible to raise their standards if the doctrine of equal opportunity was strictly enforced in their case. They would not have any chance if they were made to enter the open field of competition without adventitious aids till such time when they could stand on their own legs. That is why the makers of the constitution introduced clause (4) in Article 16. 

The expression - nothing  in this article is a legislative device to express its intention in a most emphatic way that the power conferred thereunder is not limited in any way by the main provision but falls outside it. It has not really carved out an exception, but has preserved a power untrammelled by the other provisions of the article.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

''அரசமைப்புச்சட்டப் பிரிவு-14 அனைவருக் குமான சமமான  பொது உரிமையை வழங்கு கிறது. பிரிவு-16 என்பது மாநிலத்தின் கீழ் நிய மனம் செய்வதற்கான சிறப்புஅதிகார விதியைப் பயன்படுத்துவதற்கானது ஆகும்.

 மாநில அரசின் கீழ் உள்ள  வேலைவாய்ப்பு அல்லது நியமனம் தொடர்பானவைகளில்  அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. பிற்படுத் தப்பட்ட சமூகங்களுக்கு சமச்சீரற்ற அடிப்படை சமூகக் கட்டமைப்பில் அவர்களுக்குமான உரிமை வழங்கப்படாவிட்டால் அதனைப் பெற் றுத்தரும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும் இதில் எனது கருத்தை தெளிவுபடுத்த, குதிரைப் பந்தயத்தினைக் கூறுகிறேன். இரண்டு குதிரை களில் ஒன்று முதல் வகுப்பு பந்தயக் குதிரை, மற்றொன்று சாதாரணமானது. இரண்டும் ஒரே துவக்கக் கோட்டிலிருந்து ஓடுகின்றன

 பந்தயத்தில் ஓடுவதற்கு அவைகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், நடைமுறையில் சாதாரண குதிரைக்கு பந்தயக் குதிரையுடன் போட்டியிட சம வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. உண்மையில், அது மறுக்கப்படுகிறது.  அதாவது மாற்றுத்திறனாளிக்கு அதிகமான பளுவைக் கொடுத்து ஓடச்சொல்வது போன்றது. இவ்வாறு செய்வதன் மூலம், போட்டி கேலிக்கூத்தாக மாறிவிடும்

 அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய காலத்திலும் அதே சிரமத்தை அதை உருவாக் கியவர்களும் எதிர்கொண்டனர்.

 பல நூற்றாண்டுகளாக நிலவிய  ஒடுக்குமுறை மற்றும் பழக்கவழக்கங்களை கருத்தில் கொண் டனர்.  நமது  சமூகத்தின் கணிசமான பகுதி அடி மைத்தனமான வாழ்க்கை முறையாக இருந்தது. சம வாய்ப்புக் கோட்பாட்டை அவர்கள் அமல் படுத்தினால், அவர்களின் தரத்தை உயர்த்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும். அவர் களுக்கான எந்த அடிப்படை உதவிகளும் இல்லாமல் சமமான போட்டிக்குள் நுழையச் செய்தால் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக் காது.  அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் பிரிவு 16 இல் ஷரத்து (4) அய் அறிமுகப்படுத்தினர்."

வழக்குரைஞராக இங்கே இருப்பவர்கள், ஆங் கிலம் தெரிந்தவர்கள் அதை அப்படியே எடுத்து எழுதிக்கொண்டு, மற்றவர்களுக்கும் இதைப் பரப்ப வேண்டும்.

சமூகநீதியினுடைய தத்துவ ரீதியான 

தத்துவக் கோட்பாடு என்ன?

இப்பொழுது நாம் என்ன சொல்லிக் கொண் டிருக்கிறோமோ -  திராவிட இயக்கம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறதோ - தந்தை பெரியார் என்ன சொல்லுகிறாரோ - இன்றைக்கு நாம் எந்த சமூகநீதிக்காகப் போராடிக் கொண் டிருக்கின்றோமோ - அந்த சமூகநீதியினுடைய தத்துவ ரீதியான தத்துவக் கோட்பாடு என்ன? என்பதற்கு இந்த விளக்கங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.

இன்னொரு வழக்கில், ஜஸ்டிஸ் ஏ.எம்.ரே  அவர் கள் சொல்லும்பொழுது,

''ஒருவன் சைக்கிளில் செல்லுகிறான்; இன்னொ ருவன் மோட்டார் சைக்கிளில் செல்லுகிறான். இரு வருக்கும் சம வாய்ப்பு கொடுத்துவிட்டேன் என்று சொன்னால், மோட்டார் சைக்கிளில் செல்லுபவன் வேகமாக செல்லுவாரா? அல்லது சைக்கிளில் செல் லுபவர் வேகமாக செல்லுவாரா?'' என்று அவர்கள் தெளிவாகக் கேட்டு, இதை எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள்.

இதுவரையில் இட ஒதுக்கீடுக்கு எதிராகக் கொடுத்த தீர்ப்புகளில், என்ன தத்துவம் சொன் னார்கள்? 16(4) என்று சொல்லக்கூடிய வேலை வாய்ப்பு - அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

“Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the state.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

''அரசின் கருத்துப்படி, மாநிலத்தின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில்  போதுமான அளவு எண்ணிக்கையில் இல்லாத பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான  நியமனங்கள் அல்லது பதவிகளில் இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எந்த விதிகளும் தடுக்காது.''

விதிவிலக்கே தவிர, இது விதியினுடைய அடிப்படைக் கூறு அல்ல!

இது ஒரு விதிவிலக்கே தவிர, இது விதியினுடைய அடிப்படைக் கூறு அல்ல என்று ஒரு வியாக்கி யானத்தை இதுவரையில் செய்தார்கள். 

அதை மறுத்து இந்தத் தீர்ப்பில், இல்லை, இது விதிவிலக்கல்ல; இதுதான் மிக முக்கியமான தத்துவம் என்று ஒரு புதிய வெளிச்சத்தை நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா  ஆகியோர் கொடுத்த தீர்ப்பின் மூலமாக மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கின்றனர்.

இப்படி சொல்லும்பொழுது, மிக அற்புதமான ஒரு சொல்லை அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

Cultural Capital

Cultural Capital- சில பேருக்கு -  அப்பன் படித் திருக்கிறார்; அதனால், ஒருவருக்கு வாய்ப்பு ஏற்பட் டிருந்தால், நம்மைப் போன்று வெளிப்படையாகப் பேசாமல், நாகரிகமாக, நாசூக்காக சொல்லும்பொழுது, பண்பாட்டு அடிப்படையில் ஏற்பட்ட மூலதனம் அது. ஏகாதிகாரம் வைத்துக் கொண்டிருந்தார்கள் அல் லவா!  Cultural Capital - என்ற வார்த்தையை மிக அழகாகப் பயன்படுத்தினார்கள்.

அவர்களுக்குத் திறமை எப்படி வரும்?

A combination of the family habit  ஒருவருடைய குடும்பம் மிக வசதியான குடும்பம். சூழ்நிலை - வாய்ப்பு.

அய்.ஏ.எஸ்.சாக இருப்பவரின் பிள்ளையின் குடும்பமும், காலங்காலமாக நாங்கள்தான் படிப்போம் என்று மனுதர்மத்தில் சொல்லக்கூடிய உயர்ஜாதியைச் சேர்ந்த குடும்பமும் - படிப்பில்லாத அனிதாக்கள் குடும்பமும் எப்படி ஒன்றாக முடியும்?

அப்படி இருந்தும், நம்முடைய பிள்ளைகள் மேலே வருகிறார்கள். அப்படி வந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை.

நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பின் 30 ஆம் பக்கத்தில்,

A  combination of family habitus, community linkages and inherited skills work to the advantage of individuals belonging to certain classes, which is then classified as ‘merit’, reproducing and reaffirming social hierarchies.

இப்படி வருவதைத்தான் அவன் தகுதி என்கிறான். அந்தத் தகுதி எல்லோருக்கும் எப்படி வரும்? ஏனென் றால், காலங்காலமாக அடிமையாக்கி வைத்திருக் கிறார்கள்.

தகுதி, திறமை என்பதே புரட்டு!

சமூகத்தில் காலங்காலமாக, பாரம்பரியமாக அனு பவித்துக் கொண்டிருக்கின்ற ஏகபோகம் என்பது இதுதான்.

இப்படி சொல்லிவிட்டு, இந்தத் தகுதி அடிப் படையை நொறுக்குகிறார்.

தகுதி, திறமை என்பதே புரட்டு. பெரியார் அய்யா அவர்கள், தகுதி, திறமை, புரட்டு என்பதை வரிசை யாக, காலங்காலமாக சொல்லுவார். நம்முடைய நீதிக் கட்சித் தலைவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

ஏனென்றால், நம்மவர்கள் படிக்காமல் இருப்பதற்கு அவர்கள் சொன்ன காரணம்,  அவர்களுக்குத் தகுதி இல்லீங்க என்பதுதான்.

"தகுதி, என்னங்க தகுதி - மதிப்பெண் வாங்கி யிருக்கிறார்களே" என்று சொல்லும்பொழுது,

While Examination are necessary and convenient  method of distributing educational opportunity

வாய்ப்புகளைப் பரவலாகக் கொடுப்பதற்குத் தேர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல வாய்ப்புதான் - தேவைதான் - ஆனால்,

Mark may not always  to the best Good and  individual merit .

வெறும் மதிப்பெண்கள் அல்ல!

தனிப்பட்ட ஒருவருடைய தகுதியை, அவ ருக்குத்தான் அறிவு உண்டு என்று நிர்ணயிப்பது வெறும் மதிப்பெண்கள் அல்ல.

இந்த மதிப்பெண்களே ஒரு போலித்தனமான ஏமாற்று வேலை. தங்களுக்குத்தான் மதிப்பு இருக்கிறது  என்பதற்காகத்தான் அந்த மதிப்பெண்.

இந்த நேரத்தில் நண்பர்களே, ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வுக் குழு அமைப்பர். அதில் மூன்று பேர் இருப்பார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதி என்.சோமசுந்தரம் தலைமையில் மருத்துவக் குழு!

ஆட்சிக்கு வந்தவுடன், அந்தக் குழுவை முதல மைச்சர் அண்ணா அவர்கள் நியமித்தார்.

அந்தக் குழுத் தலைவர் யார் என்றால், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.சோமசுந்தரம் அவர்கள்தான். மற்ற இரண்டு பேர் மருத்துவர்கள்.

நிறைய பிற்படுத்தப்பட்டவர்கள், வாய்ப்பில்லாத சமுதாயத்தினருக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு இடம் கிடைத்தது.

இராஜகோபாலாச்சாரியார் தன்னுடைய பத்திரி கையான சுயராஜ்யாவில், 'டியர் ரீடர்' என்கிற பத்தியில், சோமசுந்தரம் அவர்கள் ஒரு வகுப்புவாதி. அதனால்தான், அவர்  உயர்ஜாதிக்காரர்களுக்கு வாய்ப்பில்லாமல் செய்கிறார். மற்றவர்களுக்கு அதிக மதிப்பெண் அளித்து, வாய்ப்புகளைக் கொடுக்கிறார் என்று எழுதினார்.

சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்களே, பொறுப் பற்ற முறையில் எழுதினார்.

நீதிபதி சோமசுந்தரம் அவர்கள், நேர்மையான நீதிபதி என்று பெயர் எடுத்தவர். முதலமைச்சர் ஓமந்தூரார் காலத்தில் மத்திய அரசால், இவரது பரிந்துரையால் நியமிக்கப்பட்டவர் அவர்.

(தொடரும்)

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

"இந்து" என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத்தது



இந்தியாவில் எந்த மொழியிலும் கிடையாது- காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புதல்!


காரை சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டு


காரைக்கால், டிச.26  'இந்து' என்ற சொல் வெள்ளைக் காரன் கொடுத்தது; இந்தியாவில் எந்த மொழியிலும் கிடையாது - காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புதல் என்று ஆதாரத்துடன் எடுத்துக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


19.12.2019 அன்று புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள காப்பா காலனி அருகில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழா வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


இசுலாமியர்கள் எல்லாம் யார்?


இசுலாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை கிடையாது என்கிறார்கள்; இசுலாமியர்கள் எல்லாம் யார்?


சரி, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை உண்டா? அவர்கள் எல்லாம் இந்துக்கள்தானே! இந்து என்ற வார்த்தை எங்கேயாவது இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை.


இதோ என்னுடைய கைகளில் இருப்பது அசல் மனுதர்மம். இந்த புத்தகத்தில் எங்கேயாவது இந்து மதம் என்கிற வார்த்தை இருக்கிறதா?


சங்கராச்சாரியாரின்  ''தெய்வத்தின் குரல்''


வேதங்களில் இந்து மதம் என்ற பெயர் இருக்கிறதா?


சாஸ்திரங்களில் இந்து மதம் என்று இருக்கிறதா?


இதை நான் சொல்லவில்லை; காஞ்சி சங்கராச்சாரியார் சொல்கிறார். இது என்னுடைய குரல் இல்லை, மேடையில் அமர்ந்திருப்பவர்களின் குரல் கூட கிடையாது. ''தெய்வத்தின் குரல்''.


நாங்கள் பேசினால் மனிதர்களின் குரல். இன்னுங்கேட்டால், அசுரன் குரல். ஆனால், அது ''தெய்வத்தின் குரல்'' - அதில் அவர் சொல்கிறார்,


இந்து மதம் என்ற பெயரே அந்நியன் கொடுத்தது; வெள்ளைக்காரன் வெளியில் இருக்கிறவன் நமக்குக் கொடுத்தது   அந்தப் பெயர். நமக்கு ஓரிஜினலாக இருந்த பெயர் பிராமண மதம் - சனாதன மதம் என்பதுதான்.


பிறகு என்ன, இந்து நாடு என்று பெயர் வைப்பதற்கு, சட்டம் இடம்தராதது மட்டுமல்ல, உன்னுடைய சாஸ் திரத்திலும் இடம் கிடையாது; உன்னுடைய பாரதத்திலும் இடம் கிடையாது.


அதேநேரத்தில் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள், திராவிடன் என்கிறீர்களே, வெள்ளைக்காரன், கிறித்த வர்கள் எல்லாம் வந்து இவர்களைக் கெடுத்துவிட்டார்கள்; இஸ்லாமியர்கள் ஒருபுறம் கெடுத்தார்கள்; யாரை, திராவிட இயக்கத்தவர்களை. அதனால்தான் அவர்கள் இவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.


''திராவிடமா? தமிழா?''


அதேபோன்று, கால்டுவெல் என்கிற ஒரு பாதிரியார் வந்தார், அவர் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தபொழுது, அவர்தான் திராவிடன், திராவிடன் என்று சொன்னவுடன், இவர்களும் திராவிடன் என்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.


அதைக் கேட்டுவிட்டு, நம்மாளில் 'அதிபுத்திசாலி'யாக இருக்கக்கூடிய சிலர், ''திராவிடமா? தமிழா?'' என்றார்கள். நாலணா முக்கியமா? ஒரு ரூபாய் முக்கியமா? ஒரு ரூபாய்க்கும், நாலணாவுக்கும் சண்டை என்று யாராவது சொல்வார்களா? ஒரு ரூபாய்க்குள் இருப்பதுதான் நாலணா? நாலணாவிற்கும், ஒரு ரூபாய்க்கும் போட்டியில்லை. நான்கு நாலணா சேர்ந்ததுதான் ஒரு ரூபாய். அதுவும் புதுச்சேரியில் அணா என்பது வேறு; வயதானவர்களுக்கு அது தெரியும்.


அப்படிப்பட்ட நிலையில், இந்து நாட்டை உரு வாக்குவோம் என்று நிதின்கட்காரி சொல்கிறாரே, அவருக்காக சொல்கிறோம்; அவர் தெளிவு பெறட்டும்; குழப்பமில்லாமல் மற்றவர்கள் சிந்திக்கட்டும்.


அசல் மனுதர்மம்


 


10 அத்தியாயம்; 44 ஆவது சுலோகம்!


இதோ என்னுடைய கைகளில் இருப்பது அசல் மனுதர்மம்; இந்தப் புத்தகத்தில் இந்து மதம் என்கிற வார்த்தை இருக்கிறதா? என்று கேட்டோம்.


மனுதர்மம் எவ்வளவு காலத்திற்கு முன் உண்டானது என்றால், அவர்கள் சொல்வார்கள்,  அனாதி காலம் தொட்டு, அது சொல்ல முடியாது என்றார்கள்; பிரம்மா அந்தக் காலத்தில் சொன்னார்; மற்றவர்கள் சொன் னார்கள்; இது தானாக உண்டானது என்று சொன்னார்கள்.


இந்த புத்தகத்தில்  10 ஆவது அத்தியாயத்தில், 44 ஆவது சுலோகத்தில் உள்ளதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்.


நாங்கள் எதைச் சொன்னாலும், திராவிடர் கழகத்துக் காரர்கள் ஆதாரமில்லாமல் பேசி பழக்கப்பட்டவர்கள் கிடையாது. இதற்காக வழக்கு எங்கள்மீது போட்டால், மிகவும் நல்லது. அடிக்கடி எங்களிடம் வழக்குப் போட்டிருக்கிறோம் என்று நோட்டீஸ் கொடுப்பார்கள்; அதனை நாங்கள் வரவேற்போம். ஏனென்றால், பொதுக் கூட்ட மேடையில் பேசுவதைவிட, நீதிபதிமுன் பேசி னால்தான், அது எல்லாவற்றிலும் பதிவாகும்.


அந்த அடிப்படையில் வரும்பொழுது, மனுதர்மத்தில் உள்ளதைப் படிக்கிறேன் கேளுங்கள்.


''பெண்டம், ஔண்டாரம், திராவிடம், காம்போசம், யவஞம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய் ஆகிவிட்டார்கள்.


அப்படியென்றால், இவை எல்லாம் தேசங்கள். எது? பாரதம் ஒரு தேசம்; திராவிடம் ஒரு தேசம். பாரதம் வேறு தேசம்; திராவிடம் வேறு தேசம்.


India that is Bharath - இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது; அதுதான் ஒன்றாவது விதி.


Shall be a union of State


இதுதான் ஒன்றாவது விதியின் தொடக்கமே, அரச மைப்புச் சட்டத்தில்.


பாரதம் என்ற வார்த்தையாவது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் இருக்கிறது. திராவிடம் என்கிற வார்த்தையும், பாரதம் என்கிற வார்த்தையும் மனுதர்மத்தில் இருக்கிறது. ஆனால், இந்து என்ற வார்த்தை மனுதர்மத்திலும் இல்லை; கீதையிலும் இல்லை; இராமாயணத்திலும் இல்லை; வேதத்திலும் இல்லை.


பிறகு யார் சொன்னது?


வெள்ளைக்காரன் சொன்னது - இதை யார் எடுத்துச் சொன்னது?


காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னார்; அதுவும் எந்த சங்கராச்சாரியார்? ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்து கொண்டிருந்தாரே, அந்த சங்கராச்சாரியார் அல்ல. அவருக்கும் குருநாதரான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்தான்.


''இந்து மதம் எங்கே போகிறது?''


இன்னொரு ஆதாரம் இதோ பாருங்கள். அக்னி ஹோத்திரம் இராமானுஜம் தாத்தாச்சாரியார், இவர் வைஷ்ண சம்பிரதாயத்தில் இவர்தான் தலைவர். அவர் எழுதிய ''இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூல் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அந்த புத்தகத்தில் அவர் சொல்கிறார், ''அந்நியர்கள் நமக்கு வைத்த பெயர்; நமக்கு அது சொந்த பெயர் கிடையாது'' என்று சொல்லியிருக்கிறார்.


இந்து நாடாக்குவோம் என்று சொல்வதின் அடிப்படை என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய தலைவர் கோல்வால்கர் சொல்கிறார், இந்துராஷ்டிரத்தை உரு வாக்குவோம்; இந்து நாட்டை உருவாக்குவோம்; பெரும்பான்மை நாங்கள். இஸ்லாமியர்களாக இருக்க வேண்டுமா சிறுபான்மையினராக உள்ளவர்கள்; நாங்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். இராமனைக் கடவுளாக ஏற்றுக்கொண்டால், நீங்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாகத் தொடரலாம்.


கிறித்தவர்கள், கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக்கொண்டால், கிறித்துவர்களாக நீங்கள் இந்த நாட்டில் குடியுரிமை பெற்றவர்களாகத் தொடரலாம். இல்லையானால், எங்களைப் பொறுத்தவரையில், நீங் கள் அந்நியர்கள். குடியுரிமைக்கு தகுதியில்லாதவர்கள்.


ஞானகங்கை - பஞ்ச் ஆஃப் தாட்ஸ்


இதை யார் எழுதியிருப்பது We The Nation என்று சொல்லி, அதனை புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். ஞானகங்கை என்ற பெயரில், பஞ்ச் ஆஃப் தாட்ஸ் என்று கொள்கை முழக்கமாக, கொள்கை ஏடாக.


அரசாங்கத்திற்குஎப்படி அரசமைப்புச் சட்டம் முக்கியமோ,அதேபோன்றுஆர்.எஸ்.எஸ்.அமைப் பிற்கு இருக்கின்ற ஒன்று அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்ற நூல் - இன்றைக்கு ஆட்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது; அதைத்தான் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அதுதான் இராமர் கோவில்.


சரி, இன்னொரு கேள்வி கேட்கிறேன், வித்தி யாசப்படுத்தக் கூடாது என்று சொன்னால், மத அடிப்படையில் ஏன் வேறுபாடு காட்டுகிறீர்கள். மனிதாபிமான அடிப்படையில், அகதிகளாக யார் வந்தாலும் பாருங்கள்.


ஈழத் தமிழர்களுக்குக் கிடையாதாம்?


இந்துக்கள் என்று வரும்பொழுது, அது  ஈழத் தமிழர்களுக்குக் கிடையாது. ஏன் கிடையாது என்று கேட்டால்,


தமிழ்நாட்டில் உள்ள முதலமைச்சரும், அமைச் சர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால்,


''பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?'' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோன்று


தளபதி ஸ்டாலின் கேட்கிறாரா? தி.மு.க.காரர்கள் கேட்கிறார்களா? திராவிட இயக்கத்துக்காரர்களை நாங்கள் கேட்கிறோம் - நீங்கள்  ஆட்சியில் இருக் கும்பொழுது என்ன செய்தீர்கள்? அவர்களுக்குக் குடியுரிமை கொடுத்தீர்களா? என்று கேட்கிறார்கள்.


முன்பு ஆட்சியில் இருக்கும்பொழுது என்ன செய்தீர்கள்? காங்கிரஸ் என்ன செய்தது? என்றெல்லாம் கேட்கவே கூடாது; அந்த வாதமே கூடாது. ஏனென்றால், அதற்காகத்தானே அவர்களை மாற்றிவிட்டு, உங்களைக் கொண்டு வந்து ஆட்சி யில் வைத்திருக்கிறார்கள்; பிறகு ஏன் நீங்கள் அவர் களைப்பற்றி பேசுகிறீர்கள்? இதை நான் சொல்ல வில்லை; காங்கிரஸ்காரர் கருத்திருமனே சொன்னார்.


அன்றைய தமிழக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன்!


அண்ணா முதலமைச்சராக இருக்கும்பொழுது, அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப் பொழுது அவர் சொன்னார், நாங்கள் ஆட்சியில் இருந்தபொழுது என்ன செய்தீர்கள்? என்ன செய்தீர்கள்? என்று கேட் கிறீர்களே, நாங்கள் செய்யாததால்தானே உங்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அதனை நீங்கள் செய்யவேண்டியதுதானே! நாங்கள் ஏன் செய்ய வில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? அதனால் தான் எங்களுக்கு தண்டனை கொடுத்தார்கள் மக்கள்; எங்களை வேண்டாம் என்று நினைத்தார்கள் என்று கேட்டார்.


அந்த வாதமே சரியில்லை!


அப்படி இருந்தாலும், தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும்; இந்து என்று சொல்லி மற்றவர்களை ஏன் பிரிக்கவேண்டும்; இஸ்லாமியர்களை மட்டும் ஏன் தனியாகத் தடுக்கவேண்டும்.


நாட்டை விட்டு விரட்டப்படவேண்டியவர்களாம்!


அந்த புத்தகத்தில் கோல்வால்கர் எழுதுகிறார்,


முதல் எதிரி யார் என்றால், இஸ்லாமியர்


இரண்டாவது எதிரி என்றால் கிறித்துவர்கள்


மூன்றாவது எதிரி யார் என்றால், பொதுவுடை மைக்காரர்கள், கம்யூனிஸ்டுகள்.


நான்காவது யார் என்றால், நாத்திகர்கள்.


மேற்சொன்ன நான்கு பேர்கள்தான் இந்த நாட்டை விட்டு விரட்டப்படவேண்டியவர்கள் என்று எழுதுகிறார்.


அதற்கான ஒத்திகைதானே இப்பொழுது நடை பெறும் சம்பவங்கள். இல்லை என்று அவர்கள் மறுக்க முடியுமா?


நூறு சதவிகிதத்தில்


 


37.8 சதவிகிதம் பெரும்பான்மையா?


அடுத்தபடியாக நண்பர்களே, மோடி தலைமையில் உள்ள மத்திய பா.ஜ.க. ஆட்சி எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் வாங்கியிருக்கிறது தெரியுமா?


37.8 சதவிகிதம்; நூறு சதவிகிதத்தில் 37.8 சத விகிதம் பெரும்பான்மையா? அல்லது நூறில் பாதி யாவது வாங்கியிருக்கிறீர்களா?


அதேபோன்று பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலத்தை எடுத்துக்கொண்டால், எதிர்க்கட்சியில் வெற்றி பெற்று வருபவர்களை அப்படியே மொத்த விலை பேசி வாங்கிக் கொள்கிறார்கள். மொத்தக் குத்தகை பேசுவதுபோல, மொத்த விலை. மாட்டுத்தரகர்கள் தவறாக நினைக்கக்கூடாது; அவர்கள்கூட கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டு, கைகளின் மேல் துண்டை போட்டுக்கொண்டு, விரலால் விலை பேசுவார்கள். ஆனால், இவர்கள் அதுபோன்று கூட செய்வதில்லை; வெளிப்படையாகவே மொத்தமாக விலைக்கு வாங்குகிறார்கள். மந்தையை ஓட்டிக்கொண்டு போவதுபோல, போகிறார்கள்; கூடவே, விலைக்கு வாங்கப்பட்டவர்களும் போகிறார்கள்.


ஒரே நாளில், கட்சி மாறுகிறார்கள்; அரசியல் கட்சி நண்பர்கள் தயவு செய்து தவறாக நினைக்கக்கூடாது. எங்களுக்கு ஒரு பெரிய நிம்மதி என்னவென்றால், நல்ல வேளையாக நாங்கள் பெரியாரிடம் போய்ச் சேர்ந்தோம்; தேர்தலில் நிற்கமாட்டோம்; அதனால், எங்களை யாரும் விலை பேசுவது இல்லை.


ஒரே நாளில் தூய பரிசுத்தமாக ஆகிவிட்டார்!


ஒரே நாளில் கட்சி மாறுகிறார்;  ஏற்கெனவே அவர்மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவர் கட்சி மாறியவுடன், அண்டாவில், குண்டாவில் 'கங்கா ஜலம்' வைத்திருப்பார்கள் போலிருக்கிறதே, அதனை எடுத்து அவர்மீது தெளித்தவுடன், அந்த வழக்குகள் எல்லாம் வாபஸ். தூய பரிசுத்தமாக ஆகிவிட்டார் அவர். திருவாளர் பரிசுத்தம். அடுத்த நிமிடம் அவருக்கு பகல் 1.30 மணிக்கு காவி ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்; மாலை 4.30 மணிக்கு வெளியே வந்துவிடுகிறார்.


மறுபடியும் அவர் வேறு கட்சிக்கு வந்துவிடுகிறார். இது என்ன அர்த்தம்? இவ்வளவு அசிங்கமான ஒரு சூழலை உருவாக்கி, ஜனநாயகத்தையே சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


நம்முடைய நாட்டில் இப்பொழுது


 


விலை உயர்ந்த பொருள் வெங்காயம்!


எந்தக் காலத்திலாவது வெங்காயத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார்களா? விலை உயர்ந்த பொருள் எது நம்முடைய நாட்டில் என்றால், தங்கமா? பிளாட்டினமா? இல்லை, வெங்காயம்தான்.


பெரியார்தான் சொல்வார், வெங்காயம் என்று. அய்யா ஏன் அடிக்கடி வெங்காயம் என்று சொன்னார் என்று இப்பொழுது புரிந்திருப்பார்கள்.


மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம்தான் திரும்பினேன்.


அங்கே நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ''சார் என்ன வாங்கிக் கொண்டு போகிறீர்கள்?'' என்றார்.


நான் புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறேன் என்றேன்.


ஏன் சார் நீங்கள் அதையெல்லாம் வாங்கிக் கொண்டு போகிறீர்கள்; வெங்காயத்தை வாங்கிக் கொண்டு போங்கள் என்றார்.


கஸ்டம்சில் பிடித்துக் கொள்வார்கள் என்றேன்.


அதுதானே உங்கள் நாட்டில் விலை உயர்ந்த பொருள் என்றார்.


ஏனென்றால், தங்கத்தைக் கொள்ளையடிப்பார்கள்; பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்; வெங்காயத் தைக் கொள்ளையடித்த ஒரே ஆட்சி மோடி ஆட்சியை தவிர, பா.ஜ.க. ஆட்சியை தவிர வேறு ஆட்சி உண்டா?


இன்று வெளிவந்த 'தினத்தந்தி' நாளிதழின் தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள். விலைவாசி வானுயர வந்துவிட்டது.


இன்றைக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சியில்


 


ஜி.டி.பி. 4.5 சதவிகிதம்


காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது என்று சொன்னீர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஜி.டி.பி. என்பது ஒட்டுமொத்த 8 சதவிகிதமாக இருந்தது. இன்றைக்கு 4.5 சதவிகிதமாக இருக்கிறது.


வேலையில்லாத் திண்டாட்டம் ஏராளம் இப் பொழுது. இருக்கின்ற கம்பெனிகளை மூடுகிறார்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடையாது.


ஆனால், நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், உலகம் சுற்றும் வாலிபன் போன்று, எல்லா நாடு களுக்கும் சென்று வருகிறார். இங்கே என்ன நடக் கிறது என்பதைப்பற்றி கவலைப்படாமல்.


எனவே, இவர்களுடைய ஆட்சியில், பொருளா தாரம் என்பது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது.


அதேநேரத்தில், மோசடி சாமியார்கள், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம், இங்கே இருந்து சென்று, தீவை உருவாக்கிவிட்டேன்; போட்டி நாடு - இந்து நாடு உருவாக்கி விட்டேன் என்று சொல்கிறார்.


எனவே, மத்திய அரசாங்கத்திற்குப் போட்டி நம் முடைய இயக்கத்துக்காரர்கள் அல்ல; அரசாங்கத்தைக் கவிழ்ப்பவர்கள் கிடையாது. அதேநேரத்தில், அதனை கவிழ்த்து, வேறு விதமாகப் போயிருக்கிறார்கள் நித்தியானத்தாக்களும், காவிச் சாமியார்களும்தான்.


அவர்கள் எப்படி உங்களுடைய அரசாங்கம், உள்துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றின் தய வில்லாமல் எப்படி வெளிநாட்டிற்குச் சென்றார்கள்.


நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளைத் திசை திருப்பத்தான் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்!


எப்படி நீரவ் மோடி போனார்; ஒருவர் சென்றதும், காங்கிரஸ் அரசாங்கத்தை நீங்கள் குறை சொன்னீர்கள்; இன்றைக்கு வைர வியாபாரிகளாக இருப்பவர்கள், ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளி நாட்டிற்குத் தப்பிச் செல்கிறார்களே, அதற்கு என்ன பதில்?


அதையெல்லாம் கேட்கப் போகிறார்கள் என்பதற் காகத்தான், இப்பொழுது இராமர் கோவில், குடியுரிமைப் பிரச்சினை.


விலைவாசியைப்பற்றி கவலைப்படாமல், தங்கம் விலையைபற்றி கவலைப்படாமல், அரிசி, காய்கறி விலைகளைப்பற்றி கவலைப்படாமல் இப்பொழுது நாமெல்லாம் எதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக் கிறோம்?


ஆகவே நண்பர்களே, இது திசை திருப்பல்தான்.


இந்தப் பிரச்சினையால் கலவரங்கள் ஏற்பட்டால், எல்லோரையும் பிடித்து சிறைக்குள் வைக்கிறோம். வீட்டுக் காவலில், நாட்டுக் காவலில் வைக்கிறோம். நாடே சிறைச்சாலை ஆவது என்பது ஜனநாயகமா? பாசிசமா? என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அய்யா நாராயணசாமி அவர்களுடைய தலை மையில் இருக்கிறது. அவர்கள் ஏதாவது ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மீறித்தானே நடந்திருக்கிறது.


தலையில் குட்டு வைத்த நீதிமன்றம்!


இங்கே யாருக்கு அதிகாரம் என்ற பிரச்சினையில், நீதிமன்றத்திற்குச் சென்றவுடன், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. ஆனாலும், அந்த நீதிமன்றத் தீர்ப்புகூட சரியாக அமல்படுத்தப் படவில்லை.


நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்படவில்லை;  அரச மைப்புச் சட்டம் மதிக்கப்படவில்லை; ரிசர்வ் வங்கி ஆளுநராக வந்தவர் சுதந்திரமாகக் கருத்துச் சொன்னால், அது மதிக்கப்படுவதில்லை; பொதுவானவர்கள் கருத்துச் சொன்னால், அவர்களையெல்லாம் கைது செய்யவேண்டும்; அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசத் துரோகம்  என்ற அம்பை எய்த வேண்டும் என்று சொன்னால், என்ன அர்த்தம்?


தேர்தலுக்கு முன்பே சொன்னோம்;


 


தமிழகம் விழித்துக்கொண்டது!


எனவேதான், நீங்கள் இன்றைக்கு விழிப்போடு இருக்கவேண்டும்; இதை நாங்கள் முன்பே சொன் னோம்; நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சொன்னோம்; தமிழகம் விழித்துக்கொண்டது; ஆனால், மற்ற பகுதிகள் விழித்துக் கொள்ளவில்லை. மக்களை மட்டும் குறை சொல்ல விரும்பவில்லை. கட்சிகளும் அதற்குக் காரணம்.


இங்கே ஒரு ஒற்றுமையை நாம் கட்டினோம்; இங்கே உரையாற்றிய அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டிலே ஒரு நல்ல கூட்டணியை உருவாக் கினோம்; புதுச்சேரியையும் சேர்த்தோம். அதனால், இங்கே எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. இங்கே சாயம் ஏற்ற முடியவில்லை. ஜனநாயகம் காயப்படுத்தப்படவில்லை. ஆனால், வேறு வகையில் அதனை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.


இது பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி,


 


அறிவியலை உருவாக்கிய பூமி


அதேநேரத்தில், அன்றைக்கு வடநாட்டில் உள்ள வர்களுக்குப் புரியவில்லை. இன்றைக்கு அவர்களும் புரிந்துகொண்டார்கள்.


நமக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்றால், நம்மாட்கள் தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். காரணம், இது பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி, அறிவியலை உருவாக்கிய பூமி.


ஆனால், அங்கே அப்படியில்லை. எடுத்தவுடனே கலவரங்கள்தான் நடைபெறும். வாரணாசியில் கல வரம், டில்லியில் கலவரம், உத்தரப்பிரதேசத்தில் கல வரம், மேற்கு வங்கத்தில் கலவரம், வடகிழக்கில் கலவரம், மற்ற இடங்களில் கலவரம்.


இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததினால் நடை பெறும் கலவரங்களால், வெளிநாட்டு அதிபர்கள் வருகையை ரத்து செய்திருக்கிறார்கள். வெளிநாட் டுக்காரர்கள் இதனைக் கண்டித்து தீர்மானம் போடு கிறார்கள். நம்முடைய நாட்டின் மரியாதை என்னாவது? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.


பக்தியைவிட, புத்தி மிக முக்கியம்!


எனவேதான், இங்கே வந்திருப்பவர்கள் அத்துணை பேரும் - நீங்கள் யாரும் எங்களுடைய தேசப் பக்திக்குக் களங்கம் கற்பிக்க முடியாது. எங்களுக்கு தேசம் உண்டு; எங்களுக்குப் பக்தி இருக்கிறதா? என்பது பிறகு; எங்களுக்குப் புத்தி இருக்கிறது. பக்தியைவிட, புத்தி மிக முக்கியம். புத்தி இருப்பவன்தான் பலசாலி.


கட்சிகளுக்கு என்னுடைய வேண்டுகோள் என்ன வென்றால், ஒன்றே ஒன்றுதான்.


இப்பொழுது தீப்பிடித்து எரிகிறது; அது அணைக்கப்படவேண்டும்; அந்தத் தீ காவித் தீ.


அந்தத் தீ முழுக்க முழுக்க காலிகளால் வைக்கப்பட்ட தீ. காலிகளால் வைக்கப்பட்டாலும், முதலிலே தொடங்கியது காவிகள்தான் தொடங்கினார்கள் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய அபாயம் இருக்கிறது.


எனவேதான், இந்த மக்கள் அண்ணன் தம்பிகள். இஸ்லாமியர்கள் என்றால் யார்? நம்முடைய அண்ணன் தம்பிகள்தானே! இங்கே சாயபு மரைக்காயர் சொன்னார் அல்லவா! கஞ்சி கொடுத்தோம் என்றும், பொங்கல் விழாவிற்கு அவர் வந்தார் என்றார்.


''இஸ்லாம் ஆனவர்கள் தெரு''


நான் கடலூர்காரன். அங்கே இஸ்லாமிய நண்பர்கள் ஏராளம் உண்டு. நான் படித்தது அங்கேதான். உங் களுடைய பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?


''இஸ்லாம் ஆனவர்கள் தெரு''வில் உள்ளது என்பார்கள்.


அந்த வார்த்தையை நன்றாகக் கவனியுங்கள்; இஸ்லாம் ஆனவர்கள்; இஸ்லாம் ஆனவர்கள் என்றால், என்ன பொருள்? அவர்கள் எல்லாம் அரேபியாவில் இருந்து இங்கே பொத்தென்று குதித்தவர்கள் அல்ல. இங்கேயே இருந்தவர்கள்தான்.


அவர்களை நீ எட்டி நில் என்றீர்கள் நீங்கள்; யார் கட்டிப் பிடித்தார்களோ, அங்கே போய்விட்டார்கள் அவர்கள்.


உன்னுடைய மதம் தொடக்கூடாது என்றது; அவர்களைப் படிக்கக்கூடாது என்று சொல்லியது: அவர்களை எட்டி நில் என்று சொல்லியது: சண்டாளா என்றது.


இன்னுங்கேட்டால், அதைவிட அசிங்கம், சொல் வதற்கே அசிங்கப்படவேண்டும்.


பாரத ரத்னா பட்டம் போன்று


 


நினைத்திருந்தார்கள்


மனுதர்மத்தில் எட்டாவது அத்தியாயம், பத்தாவது சுலோகத்தில் சொல்கிறார்கள்,


சூத்திரன் என்றால், தேவடியாள் மகன் என்று.


எங்களுடைய தாய்மார்கள் எல்லாம் தாசிகளா? இவ்வளவு அவமானத்தை இந்த நாடு பொறுத்துக் கொண்டிருக்கிறதே, பெரியார் என்ற மாமனிதர் தோன்றவில்லை என்றால், என்னாவாகியிருக்கும்.


இந்த சூத்திரப் பட்டத்தை, ஏதோ பாரத ரத்னா பட்டம் போன்று நினைத்திருந்தார்கள், நம்மாட்கள். இதை உணர்த்தியதே அவர்தானே.


''இவாளலெல்லாம் சூத்திராள்; நாங்கள் எல்லாம் சற்சூத்திராள்'' என்றார்கள் சிலர்.


சூத்திராள்; சற்சூத்திராள் என்றால்


 


என்ன பொருள்?


உடனே பெரியாருக்குக் கோபம் வந்து, ''அட முட்டாள் பயலே, சூத்திரன் என்றாலே, தாசிப் பிள்ளை கள் என்று சொல்கிறார்கள்; நீ அதனை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவாள் எல்லாம் சூத்திராள்; நாங்கள் எல்லாம் சற்சூத்திராள் என்று ஒருபடி மேலே என்று சொன்னால், நீ அசல் 'தேவடியாள் மகன்' என்று அல்லவா சேர்க்கவேண்டும் என்று சொல்வார்.


அந்த வார்த்தையை நான் சொல்ல மாட்டேன்; பெரியார் சொல்வார், அவருக்கு வயசு இருந்தது.


இந்த இழிவை, பிறவி இழிவை ஒழித்தவர் தந்தை பெரியார்.


என்னுடைய தாய் விதவையானால், முன்னால் வராதே என்று சொன்ன மதம்தான் இந்து மதம்.


இன்றைக்கு இந்த இயக்கத்தினால், பார்ப்பனர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள். பார்ப்பனப் பெண்கள் உள்பட அத்தனை பெண்களுக்கும் விடுதலை கொடுத் தது இந்த இயக்கம்தான்.


இந்த இயக்கம் யாருக்கும் விரோதமானதல்ல; யாரையும் வேற்றுமைப்படுத்தக் கூடிய இயக்கமல்ல.


இன்றைக்கு ஒரு மொட்டைப் பாப்பாத்தியையாவது பார்க்க முடியுமா?


ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அக்கிர காரத்திற்குச் சென்றால், மொட்டைப் பாப்பாத்தி அம்மா என்று இருப்பார்கள். வெள்ளை சீலை கட்டிக்கொண்டு, மொட்டை அடித்துக்கொண்டு, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு இருப்பார்கள்.


இன்றைக்கு ஒரே ஒரு மொட்டைப் பாப்பாத்தியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கலாம். நம்மாட்கள், நம் முடைய பெண்கள் வேண்டுமானால், அப்படி வேடம் போட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் அப்படியில்லை. திருந்திவிட்டார்கள், பாராட்ட வேண்டும், வரவேற்கிறோம்.


திராவிடர் இயக்கம் செய்த


 


அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி


எப்படி அந்தத் தைரியம் வந்தது? திராவிடர் இயக்கம் செய்த அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி.


பெண்ணுரிமை, பெண்கள் ஆண்களைப் போல படிக்கவேண்டும். வித்தியாசம் இருக்கக் கூடாது. கீழ்ஜாதி - மேல்ஜாதி என்ற பேதம் இருக்கக்கூடாது.


எங்களுக்கு மதம் பிடிக்காது; மனிதர்களுக்கு மதம் பிடிக்கக் கூடாது.


மதவெறியை மாய்ப்போம் -


மனிதநேயத்தைக் காப்போம் -


ஜாதியை ஒழிப்போம் -


சமத்துவத்தை உருவாக்குவோம் -


சாமியார்கள் இல்லாத நாடு -


ஜனநாயகம் தழைக்கும் நாடு என்பதைப் புரிந்துகொண்டு, பகுத்தறிவோடு இருங்கள்.


சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழாவில்


 


சூளுரை எடுப்போம்!


அதைத்தான் சி.மு.சிவம் விரும்பினார் -


அவருடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் அதையே சூளுரையாக எடுப்போம் என்று கூறி,


மழையையும் பொருட்படுத்தாமல், மழையும் போட்டியிட்டது; நாங்களும் போட்டியிட்டோம். நாம் வென்றோம், மழை தோற்றது. இதுதான் எதிர் காலத்திலும் நடக்கும்.


எனவே, மத்திய அரசு எங்களோடு போட்டி போட்டால், நீங்கள் தோற்பீர்கள். நாங்கள் வெற்றி பெறு வோம் என்பதற்கு இந்தக் கூட்டமே அடையாளம் என்று சொல்லி, மக்கள் எங்களோடுதான் இருப்பார்கள். மழை என்றால், ஓடிவிடக் கூடிய கூட்டமல்ல, இந்தக் கூட்டம்.


பெரியாரின் தொண்டர்கள் - லட்சியத்திற்கு விலை கொடுக்கும் தொண்டர்கள்!


அதேபோன்று, அச்சுறுத்தல் என்றால், கலைந்து விடக் கூடிய கூட்டமல்ல.


அடக்குமுறை என்றால், கலைந்து ஓடிவிடக் கூடிய கூட்டமல்ல; அதனை நெஞ்சிலே சந்திக்கக்கூடிய, ஏந்தக் கூடிய பெரியாரின் தொண்டர்கள். லட்சியத்திற்கு விலை கொடுக்கும் தொண்டர்கள் என்பதைக் கூறி,


சிறப்பாக இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த அத்தனை தோழர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.


நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வளர்க சி.மு. சிவம் அவர்களுடைய புகழ்!!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.


இந்து மதம் என்பது உண்டா? -1


காணொலியில் தமிழர் தலைவர் இந்து மதம் என்பது உண்டா?


* கலி. பூங்குன்றன்


இந்துத்துவா என்னும் தொடர் சொற்பொழிவை நேற்று மாலை 6.30 மணிக்குக் (6.7.2020) காணொலி மூலம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடங்கினார்.



இந்துத்துவா, இந்து மதம் பற்றி பல நூல்களை எடுத்த எடுப்பில் அறிமுகப்படுத்தி வைத்தார் 'ஹிந்துத்வா' (Hindutva) எனும் தலைப்பில் ஜோதிர் மாயி ஷர்மா அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல்.


இன்னொரு நூல் பேராசிரியர் பத்திரிகையாளர் பிரஜ் ரஞ்சன் அவர்களால் ஆங்கிலத்தில் (De Brahmanising History: Dominance and Resistance in Indian Society) எழுதப்பட்ட நூல் - க. பூரணச்சந்திரன் அவர் களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது (வரலாற்றில் பிராமண நீக்கம்). மூன்றாவது நூல் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்டு உயிர்மைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.


நான்காவது நூல் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.  இறையன் அவர்களால் எழுதப்பட்ட "இல்லாத இந்து மதம்" என்ற நூல்: இது திராவிடர் கழக (இயக்க) வெளியீடாகும்.


இந்துமதம் இந்து மதம் என்று சொல்லுகிறார்களே - அப்படியொரு பெயர் இந்துமத ஆதாரங்களில் உண்டா என்ற வெடிக்குண்டுக் கேள்வியைத் தூக்கிப் போட்டார்.


ஆரிய மதம், பிராமண மதம், சனாதன மதம் என்ற வழங்கப்பட்டு வந்திருக்கிறதே தவிர  ஹிந்து மதம் என்று எங்கேயும் காணோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைக்கு இந்த இந்து மதவாதிகள், சங்பரிவார்கள் எதிரிகளாக நிறுத்தும், கிறித்தவர்கள்தான் - வெள்ளைக்காரர்கள்தான் இந்து மதம் என்ற பெயரைக் கொடுத்தவர்கள் ஆவார்கள்.


இதனை பார்ப்பனர் மஹா பெரியவாள் என்று போற்றும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார்.


"நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக் காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ஹிந்துப் பெயரை வைத்திருக்கா விட்டால், ஒவ்வொரு ஊரிலும், சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருகபக்தர், பிள்ளையார், உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போதைக்கு ஹிந்து சமூகம் என்ற பொதுப் பெயரில் சொல்லப்பட்டும் சமுதாயத்தை இப்படிஏழெட்டாக தனித்தனி மதம் என்று பிரித்து விட்டால், அதற்கப்புறம் ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போன்ற மதஸ்தவர்கள் தான் அதிகத் தொகையாக இருப்பார்கள். அதாவது இப்போது தேசத்தில் இரண்டு பகுதிகளில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பது போல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாகிஸ்தானாகியிருக்கும். எத்தனைக் கிருத்திருமங்கள் செய்து, பாகிஸ்தானைப் பிரித்த வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு 'ஹிந்து' என்ற பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும்படியான நன்மையையே செய்திருக்கிறான்" என்று சீனியர் சங்கராச்சாரியார் சொன்னதுண்டே ஒப்புக் கொண்டதும் உண்டே! (ஆதாரம்: 'தெய்வத்தில் குரல்' முதல் பாகம் பக்கம் 267, 268)


இத்தகைய ஆதாரங்களை எடுத்து வைத்த தலைவர் ஆசிரியர் அவர்கள் 'ஹிந்து' என்ற சொல்லுக்கு உயர்நீதிமன்றம் என்ன சொன்னது என்பதையும் ஆதாரத்துடன் கூறினார்.


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் பி.வி.ராஜமன்னார் கூறியதுதான் அது.


"When I speak of Hinduism, I am actually conscious of the vague connotation of that word. Hinduism is not a religion in the sense in which  we understand it is not India in origin, nor was it ever used by the Hindus as the same name of their religion. But the word has come to stay"


(Michael vs Venkatesan case - MLJ 239/1952)


"இந்து மதம் என்று குறிப்பிடுகையில், அச்சொல் எவ்வளவு தோராயமானதொரு நிலையைக் குறிக்கிறது என்பதை நான் அறிவேன். நாம் அறிந்த வகையில் அது ஒரு மதம் என்றே சொல்ல முடியாது. இந்துக்கள் என்பவர்கள் இந்தச் சொல்லையே அம்மதத்தினைக் குறிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. என்றாலும் அச்சொல் நடைமுறைக்கு வந்து விட்டது" என்று  ஒரு நீதிபதியே குறிப்பிட்டுச் சொன்னார் என்றால் இதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.


அதோடு இன்னொரு முக்கிய தகவலையும் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.


1893ஆம் ஆண்டு விவேகானந்தர் அமெரிக்கா சென்றார் - சிகாகோ நகரில் இந்து மதத்தைப்பற்றி சும்மா பிளந்து தள்ளினார் என்று நீட்டி முழங்குகிறார்களே - அதன் உண்மைத் தன்மை என்ன? அங்கு நடைபெற்றது "இந்துமதம்" என்ற பெயரில் நடைபெற்ற மாநாடுதானா?


அங்குப் பேசப்பட்ட மதங்கள் பற்றிய பெயர்களின் பட்டியல் என்ன கூறுகிறது?


(1) Buddhism (பவுத்தம்)


(2) Shintoism (ஷிந்தோயிசம் ஜப்பான்)


(3) Brahminism (பிராமணியம்)


(4) Judaism (யூதம்)


(5) Christianity (கிறித்துவம்)


(6) Mohammedanism (இஸ்லாம்)


இந்தப் பட்டியலில் பிராமண மதம் - பிராமணீசம் என்று கூறப்பட்டுள்ளதே தவிர ஹிந்து மதம் என்று குறிப்பிடப்பட வில்லையே!  இதற்கு என்ன பதில்?


அடுக்கடுக்கான வினாக்களையும், தரவுகளையும் எடுத்துரைத்தார் கழகத் தலைவர்.


இதற்கிடையே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் என்ற பெயரில் சில சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.


தயானந்த சரஸ்வதி, அரவிந்தர், விவேகானந்தர்,  போன்ற சீர்திருத்தக்காரர்கள் என்றெல்லாம் பேசப்படு பவர்கள் உண்மையில் அவர்கள்  செய்தவை சமூக சீர்திருத்தம் அல்ல - இந்து சமய சீர்திருத்தங்களே!


இவர்களின் நோக்கமெல்லாம் இந்து மதத்தை  சர்ச்சைகளிலிருந்து காப்பாற்றுவதே!


எடுத்துக்காட்டாக தயானந்த சரஸ்வதியை எடுத்துக் கொண்டால் அவதாரங்கள் உண்மையல்ல என்றார், புரோகிதர்களை ஏற்கவில்லை. பார்ப்பனர்களைக் கேலி செய்திருக்கிறார், மதச் சின்னங்கள் அணிவதை நையாண்டி செய்திருக்கிறார்.


அதே நேரத்தில் வருணாசிரமம், சனாதனம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்.


எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி   சமஸ்கிருதம் எனகிறார். வேதத்தில் இல்லாத விஞ்ஞானம் வேறு எங்கும் இல்லை என்கிறார்.இது ஏமாற்று வேலை யல்லாமல் சீர்திருத்தம் என்று கருத முடியுமா? குஜராத் பார்ப்பனரான  இவர் 59 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்.


வங்காளத்தைச் சேர்ந்தவர் அரவிந்தர். வெளிநாடு எல்லாம் சென்று படித்தவர் தான் - சனாதனத்துக்கு எதிரான பிரிட்டனை எதிர்க்க வேண்டும் என்று கூறி இந்தியாவுக்குள் இருந்தால் கைது செய்யப்படலாம் என்பதற்காக பிரஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பாண்டிச்சேரிக்குச் சென்று ஆசிரமம் அமைத்தவர். சீர்திருத்தம் பேசினாலும் இந்து மத அடிப்படை வாதியாகவே வாழந்தவர்.


இந்து மதத்திலும் சீர்திருத்தத்திற்கு இடம் உண்டு என்று சொல்லி, அதே நேரத்தில் இந்து மதத்தின் ஆணிவேரான சனாதனத்தையும் வருணதர்மத்தையும் காப்பாற்றக் கூடிய ஏமாற்றுக்காரர்கள் இவர்கள் என்று படம் பிடித்துக் காட்டினார் தமிழர் தலைவர்.


இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்று பேச ஆரம்பித்துள்ளனர்.


இதற்கு ஆரம்பப் புள்ளி வைத்தார் வி.டி. சாவர்க்கர். இதைப்பற்றி எல்லாம் தொடர்ந்து பேசுவோம் என்று கூறி முதல்நாள் சொற்பொழிவை நிறைவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர்.

புதன், 10 மார்ச், 2021

கி. வீரமணிக்கு "ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது"


வியாழன், 2 ஜூலை, 2020

"ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறாரா கணக்கப்பிள்ள" மின்சாரம்




‘தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிற நிலைதான் உள்ளது’ என்கிறாரே வீரமணி’ என்று யாரோ ஒருவர் கேட்டதாகக் கூறும் ஒரு கேள்விக்கு ‘துக்ளக்‘ ஏட்டில் (10.6.2020) திருவாளர் குருமூர்த்தி அய்யர் பதில் கூற முயற்சி செய்துள்ளார்.
கி. வீரமணி கூறுவது உண்மையானால், ஈ.வெ.ரா. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதுவும் இன்றுதான் பெரியார் மண் ஆகியிருக்கிறது தமிழைப் புறக்கணித்தால் தான் தமிழர்கள் மானம், பகுத்தறிவு ஆகியவை உள்ளவர்களாக ஆக முடியும் என்று தொடர்ந்து அடித்துக் கூறி வந்திருக்கிறார் ஈ.வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய ஈ.வெ.ரா.வின் அந்த உயர்ந்த கருத்துக்களை வீரமணி படிக்கவில்லை என்பது நிச்சயம்’ - என்று எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள். ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறார் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை.
ஆமாம் பெரியாரைப் பற்றி குருமூர்த்திதான் அதிகம் படித்தவர் - பெரியார் பேச்சுக்களையும் எழுத்து களையும் அப்படியே கரைத்துக் குடித்தவர், பாவம் வீரமணிக்குப் பெரியாரைப் பற்றி என்ன தெரியும் - நம்புங்கள்!
எவ்வளவு தின’வெட்டு’ இருந்தால் இந்தத் திரிநூல் களுக்கு இப்படியெல்லாம் எழுதத் ÔதுணிவுÕ வரும்?
திராவிடர் கழகத் தலைவர் ஒன்றைச் சொல்லி யுள்ளார் என்று குறிப்பிட்டால், அதை எங்கே சொன் னார், எப்பொழுது சொன்னார் என்று கூறும் குறைந்த பட்ச அறிவு நாணயம் இருக்க வேண்டாமா?
அதே போல, பெரியார் சொன்னார் என்று ஒன்றை சொன்னால் எப்பொழுது சொன்னார்? எங்கே சொன் னார்? என்று கூறும் அடிப்படை யோக்கியத்தன்மை இருக்க வேண்டாமா?
இந்தப் பார்ப்பனர்தான் இப்படியெல்லாம் எழுது வதை - சொல்லுவதைப் பார்க்கும் பொழுது, சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள் கூறும் எடுத்துக் காட்டுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
கும்பகோணத்தில் பார்ப்பான் குட்டையில் விழுந் தான் என்ற கதையாக அல்லவோ இருக்கிறது. இதோ சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள்:
“ஒரு நாள் உபய வேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து குளப்படிக்கட்டில் வழுக்கி விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்க, தன் பணியாளிடம் பின்வருமாறு சொல்லியனுப்பினார் ஒரு நிலக்கிழார்.
“திருக்குடந்தை திருலோக தாத்தாச்சாரி, திருத்தங்கல் திருநின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்கத் திருக்கோவிலுக்குவந்து திருக்கோவில் வளாகத்தில் இருக்கக்கூடிய திருப்படிக்கட்டுகளில் இறங்கி திருத் துழாய் பிடுங்கிறச்சே, திருக்குளத்துப் பாசிகள் வழுக்கி திருக்குளத்தில் விழுந்து திருக்காலில் ஹீன மடைந்தார்னு போய்ச் சொல்லிடு” என்றார்.
கும்பகோணத்து நிலக்கிழாருக்கும் இப்படி கூறும் குருமூர்த்திகளுக்கும் என்ன தொடர்போ!
தமிழைப் பற்றி தந்தை பெரியார் என்ன சொன்னார் எந்தப் பொருளில் சொன்னார் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அதைப் பார்ப்பனர்கள் சொல்லத் தேவையில்லை.
தமிழை நீஷப்பாஷை என்றும், நீஷப் பாஷையை பூஜை வேளையில் ‘பெரியவாள்’ (காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) பேச மாட்டாள் என்ற நிலையில் உள்ளவர்கள் தந்தை பெரியார் தமிழைப் பற்றிச் சொன்னதுபற்றிப் பேசிட அருகதை யற்றவர்களே (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - ‘உண்மை’ 1,15-12-1980)
‘தீக்குறளைச் சென்றோதோம்‘ என்ற ஆண்டாளின் பாடலுக்குத் தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று சொன்ன ஓர் ஆசாமியை லோகக் குரு என்று கூறிக் கூத்தாடும் குருமூர்த்தி கூட்டம் எந்த முகத்தைக் கொண்டு தந்தை பெரியாரை விமர்சிக்கக் கிளம்பி யிருக்கிறது?
ஆண்டாள் கூறிய ‘குறளை’ என்ற சொல்லுக்கு கோள் சொல்லுதல் என்னும் பொருள்கூடத் தெரி யாதவாள் எல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்தவாளா!
அவருக்கா தெரியாது? அண்டத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுவார்களேயானால், அவர் ஒரு Ôவிஷமி’ என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று பொருள்.
திரு என்ற அழகிய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்து வதற்கு ‘தமிழ்த் தாத்தா’ என்று கூறப்படும் உ.வே. சாமிநாதய்யர், இரா. இராகவ அய்யங்கார்கள் உமிழ்ந்த வெறுப்புணர்ச்சி ஒன்று போதாதா? (முனைவர் சாரதா நம்பி ஆரூரான் எழுதிய “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்ÕÕ) .
கரூர் அருகே திருமலை முத்தீஸ்வரர் கோயில் குட முழுக்கு தமிழில் நடந்ததால் (9.9.2002) அதனைக் கண்டித்தவர்தானே காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி (இந்தியா டுடே 2.10.2002).
திருக்குறள் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு என்று சொன்னவரும் சாட்சாத் இந்த ஜெயேந்திரர்தான் (‘தினத்தந்தி’ 15.4.2004)
கேள்வி: எல்லா உள்ளாட்சி அலுவலகங்களிலும் இனி ‘தமிழ் வாழ்க! என்ற நியான் விளக்குகள் வைக்கப் படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன?
பதில்: இதனால்தான் தமிழ் வளரும் என்றால், அதைவிட தமிழுக்குக் கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்கல்ல. நியான் விளக்குக் காண்டிராக்ட் எடுப்பவர் வாழ; அது வழி செய்யும் அது போதுமே! (‘துக்ளக்‘ 19.5.2010 பக்கம் 25)
தமிழ்மீது ‘துக்ளக்‘கின் வயிற்றெரிச்சல் இதுதான்.
இந்த யோக்கியதை உள்ள பார்ப்பனர்கள் தந்தை பெரியார் தமிழைப் பழித்து விட்டார்; கேவலமாகக் கூறி விட்டார் என்று பரப்புரை செய்வது - தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி எரிமலையைத் தூங்காமல் விழிக்கச் செய்து விட்டுச் சென்று விட்டாரே என்ற ஆத்திரத்தில் அலை மோதலும் - மொத்துதலும்தான்
தமிழ்மீது தந்தை பெரியாருக்கு வெறுப்பா - அல்லது புராணச் சகதியிலிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கறையா?
தந்தை பெரியார் உருவாக்கிய குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை போன்றவற்றின் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே தந்தை பெரியார் தமிழ்மீது அக்கறை கொண்டவர் என்பதற்கு
தமிழ்பற்றி தந்தை பெரியார் கருத்தென்ன?
“முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” (குடிஅரசு 26.1.1936).
“தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தை பல முறை சொல் லியிருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி- ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்கு வெறுப்பில்லை” (விடுதலை 1.12.1970).
தமிழ்மீதான தந்தை பெரியாரின் பார்வை இதுதான்! தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் அவரே! அதைத்தான் இப்பொழுது ‘துக்ளக்‘ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகளும் கடைப்பிடித்தே தீர வேண்டிய கட்டாயம் - அரசே சட்டரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள நிலை.
தமிழில் பெயர் சூட்டுதல் என்ற புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவர் அவர்தானே! ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர - தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்ட முடியுமா?
தமிழர் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழிலே நடத்தும் நிலையை நிறுவியவர் தந்தை பெரியார்தானே!
இந்த நிலையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிற நிலைதான் உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளதாகவும், தமிழைப் பற்றி பெரியார் சொன்னதையெல்லாம் வீரமணி படிக்கவில்லை என்றும் குடுமி குருமூர்த்தி உளறிக் கொட்டியிருக்கிறார்.
தந்தை பெரியாரைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் எந்த அளவு படித்திருக்கிறார்- அறிந்து இருக்கிறார் - தந்தை பெரியாரிடம் பாடம் படித்திருக் கிறார் என்பதற்கு பார்ப்பனக் குருமூர்த்திகளின் சான்று பத்திரம் தேவையில்லை. இதை உலகம் அறியும்.
கடைசியாக ஒன்று: தந்தை பெரியார் பற்றி யாரோ அனாமதேயங்கள் எழுதுவதையெல்லாம் போட்டு நிரப்பும் குப்பைத் தொட்டியாக ‘துக்ளக்‘ ‘அவதாரம்‘ எடுத்திருக்கிறது.
அனாமதேயங்களுக்குப் பரிவட்டம் கட்டி தந்தை பெரியாரைப் பற்றித் தூற்றச் செய்யலாம் - அதற்கு மலிவாகவும் தமிழர்களில் ஆட்களும் கிடைப்பார்கள்.
நாங்கள் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காஞ்சி மடத்திலேயே வளர்ந்து முக்கியப் பொறுப்புகளிலும் அமர்ந்து Ôஅவனன்றி ஓரணுவும் அசையாதுÕ என்று சொல்லும் அளவுக்கு அனைத்திலும் அத்துப்படியானவர் சங்கரராமன் (அவர்தான் வரதராஜ பெருமாள் முன்னிலையில் பட்டப் பகலில் கொல்லப் பட்டார். இந்த வழக்கில்தான் ‘லோகக் குரு’ காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி 61 நாள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார்).
அந்த சங்கரராமன் சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் வண்டி வண்டியாக ‘ஜெகத்குரு ஜெயேந்திரரின் வண்டவாளங்களை எழுதித் தள்ளினாரே - அவற்றை எல்லாம் மக்கள் மத்தியில் கொட்ட வேண்டுமா? (ஊரே நாறிப் போய் விடும்) எப்படி வசதி? குருமூர்த்திகள் Ôகுஸ்திÕக்கு வருவார்களா? எங்கே பார்ப்போம்!

புதன், 22 ஜனவரி, 2020

சாக்ரடீசுக்கொரு பிளாட்டோ... பெரியாருக்கொரு வீரமணி!



1951-52 ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப் பட்ட மக்களின் வகுப்புவாரி உரிமைகள் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டன. அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவரது அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவு கொடுத்தனர். அதனால் 1951 இல் நேரு காலத்தில் ஏற்பட்டதுதான் இந்திய அரச மைப்பின் முதல் சட்டத் திருத்தம். இருந் தாலும் இன்னும் நிறைவேற வேண்டிய கோரிக்கைகள் பல இருந்தன. சமூகநீதி என்பது இடஒதுக்கீடு மட்டும் அல்ல. இன்னும் பல உரிமைகள் இந்தச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே.

அனைவரும் சம உரிமை பெறுவது - ஆண்களும் பெண்களும் சமமான உரிமை பெறுவதுதான் சமூக நீதியாகும். அந்த நிலையை இன்னும் இந்தச் சமுதாயம் அடையவில்லை.

உழைக்கின்ற மக்களை ஜாதியின் பெய ரால், மதத்தின் பெயரால் கேவலப்படுத்தி அவர்களைக் கொடுமைப்படுத்தினர். இக் கொடுமைகளை ஒழிக்க தந்தை பெரியார், பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர், ஜோதிபாபூலே, சாகுமகராஜ், நாராயணகுரு போன்ற தலைவர்கள் சமூக சீர்திருத்தத் திற்காகப் போராடினார்கள்.

“மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும் சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண் டும்; உலகுயிர் அனைத்தும் ஒன்றென்னும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள், ஜாதிச் சண்டைகள் மறைய வேண்டும்.” ('குடிஅரசு', 09.04.1933).

சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தின் ஒருபடி தான் இடஒதுக்கீடு. அந்தப் படியை அடைவதற்கே எத்தனைப் போராட் டங்கள்! தம் இறுதிக் காலம் வரை உழைத்த தலைவர் பெரியாருக்குப் பிறகு சமூகநீதிக் கான குரலை உரத்து எழுப்பி யவர் திரா விடர் கழகத் தலைவர் வீரமணி. மண்டல் குழு பரிந்துரையை வெளிக் கொண்டுவர போராட்டங்கள், அதனை அமல்படுத்த பிரச்சாரம், போராட்டம், மாநாடு என தொடர்ந்து களம் கண்டவர். இடஒதுக்கீட் டுக்கு எதிராக பொருளாதார அளவு கோலைக் கொண்டுவந்து குறுக்கு சால் போட முனைந்தவர்களின் முதுகெ லும்பை முறித்த மதி நுட்பம். தமிழகத்தில் மட்டு மல்லாது இந்தியாவெங்கும் சிதறி யிருந்த சமூகநீதி உணர்வாளர்களை பெரி யார் என்னும் பெருங்குடையின் கீழ்க் கொணர்ந்து, நாடு தழுவிய சமூகநீதிப் போராட்டத்தைக் கட்டியெழுப்பிய வினைத் திட்பம். எந்த வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசை விட்டு வெளியில் வந்தாரோ, அதே உரிமையை 69 விழுக் காடாக உயர்த்தி, அதே காங்கிரஸ் மத்தி யில் ஆட்சியில் அமர்ந்திருந்த போதே, முதல்வர், பிரதமர், குடியரசுத தலைவர் என மூன்று பொறுப்புகளிலும் வீற்றிருந்த பார்ப்பனர்களைக் கொண்டே நிறைவேற் றிக் காட்டிய ஆற்றல். சமூகநீதிக்கு இவரே அத்தாட்சி என சட்டப் புத்தகம் படித்தவர் முதல் சட்டப் புத்தகம் சமைப்பவர் வரை தெளியும் வகையில் சமூகநீதிக்காக நுணு கிப்படர்ந்த அருமருந்து. பெரியார் காலத் திலிருந்த இடஒதுக்கீட்டு உரிமையை இரட் டிப்பாக்கிய இமாலயச் சாதனை. எங்கேனும் சமூகநீதிக்கு ஆபத்து வந்தால், சரியாய்க் கண்டறிந்து ஆபத்தை அகற்றிட உதவும் ஈரோட் டுக் கண்ணாடி.

இப்படி தந்தை பெரியார் தம் இயக்கத் தால், தமிழர் தலைவர் கி.வீரமணியின் உழைப்பால் பலன்பெற்ற கோடிக்கணக் கான மக்களில், நன்றிப்பெருக்குடைய பெருமக்களால், பெரியாரை உலகமயமாக் கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பெரியார் பன்னாட்டமைப்பு.

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது

”தந்தை பெரியாரின் கருத்துகளை உல கம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண் டும்” என்ற நோக்கத்தால் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 13.11.1994இல் பெரியார் பன் னாட்டமைப்பு (PERIYAR INTERNATIONAL) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் பொறுப்பாளர்களாக அமெ ரிக்கா வாழ் தமிழர்களான டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் இலக்குவன் தமிழ் ஆகியோர் இருந்து பணிகளைச் செய்தனர்.

தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமூகநீதி மய்யத்தின் தலைவர் திரு.சந்திரஜித் யாதவ் மற்றும் அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரக அலுவலரான சின்காவும் கலந்து கொண் டனர்.

இதன் முதன்மைப் பணிகளுள் ஒன்றாக, சமூகநீதிக்காக உழைப்பவர்க்ளுக்கும், பெரியாரியலைப் பரப்புவோருக்கும் சிறப்பு செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” அளிக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.

முதன்முதலில் பெரியார் பன்னாட்ட மைப்பினர் சமூகநீதியை நிலைநாட்ட தன் ஆட்சியை இழந்த மேனாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) அவர்க ளுக்கு வழங்க முடிவு செய்து (24.12.1996) அன்று சென்னை பெரியார் திடலில் “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” அளிக்கும் விழாவை நடத்தினர். மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் உடல் நலிவு காரணமாக வர இயலாவிட்டாலும் அவரது கட்சியின் பிரதி நிதியான தமிழக ஜனதா தள முன்னணி வீரர் திரு.கா.ஜெகவீர பாண்டியன் அத னைப் பெற்றுக் கொண்டார்.

முதல் விருதைப் பெறும் மாமனிதரான மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள், “மண்ணுக் குள் புதைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரையைச் சட்டரீதி யாக அமல்படுத்திக் காட்டியவர் திரு. வி.பி.சிங் அவர்கள். அதற்காக ஆட்சியை யும் இழந்தவர்! “சமூகநீதிக்காக எத்தனை நாற்காலிகளையும் இழக்கத்தயார்” என்று குரல் கொடுத்த இலட்சியவீரராக அவர் காட்சி அளித்தார்.

இரண்டாவதாக, விருதுபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு.சீதாராம் கேசரி அவர்கள் “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” பெற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய உரையில், இணையற்ற தலைவராகிய பெரி யாரைப் பின்பற்றுவோரிடமிருந்து சமூக நீதிக்கான விருதினைப் பெற்றுள்ள இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் பெரு மிதமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாகும். குறிப்பாக மகிழ்ச்சி அடைவது எதற்காக என்றால், பெரியாரின் மிகச் சிறந்த சீடரும் என்னுடைய நெடுநாளைய நண்பருமாகிய திரு.வீரமணி பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது என்பதற்காகத் தான் என்றார்.

இதே போன்று, பல்வேறு மாநிலத்திலும், பல்வேறு நாடுகளிலும் சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது வரை வழங்கப்பட்ட விருது பெற்றவர்களின் பட்டியலைப் பாருங்கள்.

தொகுப்பு: நூலகர் கி.கோவிந்தன்

- விடுதலை ஞாயிறு மலர் 30 11 19