பக்கங்கள்

மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 ஜூலை, 2023

அண்ணா எழுதிய வசனம் - ஆதாரம் எங்கே? கோயபல்ஸ்களே பதில் சொல்லுங்கள்!

கோயபல்ஸ்களே பதில் சொல்லுங்கள்!
"கீமாயணம் எழுதியது - நடத்தியது உண்மையா?" 
"அண்ணா எழுதிய வசனம் - ஆதாரம் எங்கே?"
இவ்வளவு நீட்டி முழக்கி எழுது கிறார்களே - முதலில் ஒரு கேள்வி.

‘ஹிந்து’ என்ற பெயர் வெள்ளைக்காரக் கிறிஸ்தவன் வைத்த பெயர்தானே! முதலில் இந்தப் பெயரை மாற்றுங்கள் பார்க்கலாம்.

காஞ்சி சங்கராச்சாரியாரே இதனை ஒப்புக் கொண்டுள்ளாரே!

- சந்திரசேகரேந்திர சரஸ்வதி ‘தெய்வத் தின் குரல்’ முதல் பாகம் பக்கம் 267

எப்பொழுது பெயர் மாற்ற உத்தேசம்?

ஹிந்து மதத்தைப்பற்றி உங்கள் விவேகானந்தர் என்ன சொல்கிறார்?

“ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் களுக்கு மட்டும் என்றிருந்த உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்தி யாவில் ஏற்பட்ட முஸ்லிம் ஆட்சி விடுதலை வழங்கியது. எனவேதான் அய்ந் தில் ஒரு பங்கு மக்கள் முஸ்லிம்களாயினர். வாள்தான் இந்த மத மாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல.

வாளும், நெருப்புமே இத்தனை பேரையும் மாற்றியது என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்ச நிலை யாகும்.

20 விழுக்காடிலிருந்து 50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி விடுவார்கள். நீங்கள் அவர்கள் குறைகளைக் களையவில்லை யானால் நான் மலபாரில் பார்த்ததைவிட மட்டமான ஒரு விஷயத்தை உலகில் எங்கேனும் யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த வர்கள் செல்லும் தெரு வழியே ஏழைப் பறையன் செல்ல அனுமதிக்கப்படுவ தில்லை.

ஆனால் அதே ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான ஒரு ஆங்கில கிறிஸ்துவப் பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டால், பின்னர் அவன் உயர்ஜாதியினர் செல்லும் தெரு வழியே செல்ல அனுமதிக்கப்படு கிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த உயர்ஜாதி மக்கள் அனைவரும் பயித்தியக் காரர்கள் என்றும், அவர்கள் இல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயித்தியக்கார விடுதி என்றும் தெரியவில்லையா?”

- இவ்வளவையும் சொல்பவர் திரா விடர் கழகத் தலைவரா? கருஞ்சட்டை யினரா? அமெரிக்கா வரை சென்று உங்கள் மதத்தைப் பற்றி முழங்கி வந்தாரே - சாட்சாத் அதே விவேகானந்தர் அல்லவா!

உங்களைப் போல ஆதாரம் இல்லாமல் பேசுவதோ எழுதுவதோ எங்களிடம் கிடையாது. அதுவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறீராமகிருஷ்ண தபோவனம் 1933இல் வெளியிட்டுள்ள “The Man Making Message of Vivekananda for the Usage of Students” எனும் நூலி லிருந்து தான் இதனை எடுத்துத் தருகி றோம்.

தினமலராக இருக்கட்டும் - இது எடுத் துக்காட்டியுள்ள பிரபல “மன்னிப்புப் புகழ்” ராஜாக்களாகட்டும், குருமூர்த்திகளாகட்டும், அல்லது எந்த சாஸ்திரிகளாகட்டும், சங்கர மடத்தார்களாகட்டும் மறுப்பு சொல்லட் டுமே பார்க்கலாம்.

“கீமாயணம்“ எழுதியது யார்? என்ற கேள்வி வேறு!

அதையேதான் நாங்களும் கேட்கி றோம். “கீமாயணம்“ என்று எழுதியது யார்?

இப்படியொரு பொய்யை எழுதி விட்டு - நம்மைப் பார்த்து பொய்யர் என்று சொல்லுவதுதான் பொய்யிலே புழுத்த இந்தப் புரோகிதக் கூட்டத்தின் புத்தி.

மீண்டும் கேட்கிறோம். “கீமாயணம்“ எழுதியது யார்? அப்படியொரு நூல் எங்களால் எழுதப்பட்டு இருந்தால் கொண்டு வந்து காட்டுங்கள் பார்க்கலாம் - சவால்! சவால்!!

நடிகவேள் எம்.ஆர். இராதா நடத்தியது - இராமாயணமே தவிர கீமாயணம் அல்ல.

நாடகத்தின் தொடக்கத்திலேயே பல பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப் படுவதுதான் எங்களால் நடத்தப்படும் இரா மாயண நாடகம் என்று அறிவித்து விட்டுதான் நாடகத்தைத் தொடங்குவார்.

மதுரை மீனாட்சிபற்றி அண்ணா எழுதியதுகுறித்தும் மன்னிப்பு ராஜா கூறுகிறார்; உண்மைதான் புராணங்கள்பற்றி அக்குவேர் ஆணிவேராக அலசி எடுத்தவர்தான் அண்ணா. ÔஆரியமாயைÕ எழுதி, Ôஇந்து என்று சொல்லோம். இழிவைத் தேடிக் கொள்ளோம்Õ என்று எழுதியவர்தான் அண்ணா.

ஆனால், தினமலர் எடுத்துக்காட்டும் ஆசாமி சொல்லும் அந்த வரி வசனம் எங்கே எந்த இடத்தில், எந்த நூலில் சொன் னார்? அறிவு நாணயத்தோடு எடுத்துக் காட்டட்டுமே பார்க்கலாம் - இதற்கும் ஒரு சவால்!

“அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி” என்ற வசனத்தை எங்கே எழுதினார். கையில் ஆதாரம் இருந்தால் எடுத்துக்காட்டட்டும் - இல்லையெனில் சலாம் போட்டு ஓடட்டும்!

இதில் டவுட் தனபால் தன் பங்குக்குக் கருத்துத்தானம் செய்துள்ளது.

ஹிந்துக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் எந்த கட்சித் தலைவரும் ஹிந்து மதத்திற்கு எதிராக குரல் கொடுத் திருக்க மாட்டார்களோ என்ற டவுட் வருகிறதாம்.

‘தினமலருக்கு’ இதில்கூட உறுதியில்லை - பார்த்தீர்களா? அதற்கே ‘டவுட்’ தானாம்!

ஹிந்துக்கள் எப்படி ஒன்று சேர முடியும்? பிறப்பிலேயே பேதத்தை உண்டாக்கிவிட்டு ஒருவன் கடவுள் ‘பிர்மா’ முகத்திலே பிறந்தான், இன்னொருவன் காலிலே பிறந்தான்- அதற்கும் கீழே பஞ்சமன்-அவன் தீண்டத்தகாதவன் - படிக்கக் கூடாதவன் என்பதை மதத்தில் அடிப்படை ஆதாரமாக வைத்துக் கொண்ட ஒரு மதம் எப்படி ஒன்றுபட்டு எழ முடியும்?

அடி மட்டத்துக்குப் போக வேண்டாம் சங்கராச்சாரியாரை ஜீயர் ஏற்றுக் கொள் கிறாரா?

1982இல் திருவரங்கத்தில் ரெங்கநாதர் கோயில் மொட்டைக் கோபுரம் சீர் செய்யப் பட்டது. அக்கோயில் மடத்து ஜீயரின் மேற்பார்வையில் இது நடந்தது.

அதன் குட முழுக்கு முடிந்த நிலையில் அவரைக் Ôகல்கிÕ இதழ் பேட்டி கண்டது.

கேள்வி: சைவர்கள் வைணவக் கோயிலுக்கு உதவுவதுபோல சைவ ஸ்தல பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவது இல்லை? நீங்கள் சிவன் கோயில் திருப் பணிகளுக்கு உதவி செய்வீர்களா?

ஜீயர் பதில்: நான் சிவன் கோயிலுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன்தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தால் சங்கரனுக்கும் (சிவ பெருமானுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான் தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும் அதேபோல, சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியில் தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றாருன்னும் சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தவஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர் பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர், அவரை வழிபடற நாங்களும் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாக கொண்டு வழிபட்டு, மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை  வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தர மாட்டேன்”

(‘கல்கி’ - 11.4.1982)

இவ்வளவையும் சொல்லியிருப்பவர் வைணவக் குருவான ஜீயர் - பேட்டி கண்டு வெளியிட்டதோ ‘கல்கி’ இதழ்!

தினமலரும், மன்னிப்புப் புகழ் ராஜாக்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஹிந்து மதக் கடவுள்களுக்குள்ளேயே ‘நான் பெரியவனா? நீ பெரியவனா?’ என்ற சண்டை இருக்கு.

ஹிந்து மதக் கடவுள்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை; இந்த இலட்சணத்தில் ஹிந்துக்களை ஒன்று சேர்ப்பது எப்படி?

முதலில் இதில் முடிவு கண்டபிறகு பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகச் சொல்லிக் கொள்பவர்கள் எங்களிடம் வரட்டும்.

I. ‘கீமாயணம்‘ என்று நாங்கள் யாரும் எழுதவில்லை.

II. அண்ணா எழுதியதாகச் சொல்லும் அந்த வசனத்துக்கு ஆதாரம் எங்கே?

III. ஹிந்துக் கடவுள்களுக்குள் ளேயே ஒற்றுமை இல்லை. ஹிந்துக்கள் ஒற்றுமைப்படுவது எப்போது?

முடிந்தால் கோயபல்ஸ்கள் பதில் சொல்ல முயற்சிக்கட்டும்!

-மின்சாரம்
22.07.2020, விடுதலை

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

இடி விழுந்தது எனும் பொய்க்கதை - புத்த - சமணம் அழிப்பு


 போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார்.

அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு, எங்களுடன் வாதாடி வென்ற பிறகு அல்லவா அவற்றை முடிக்க வேண்டும்?

எங்களுடன் வாதாடத் தயாரா? என்று வினா தொடுத்தனர்.

வினாவை விவேகத்துடன் சந்திக்க முடியாத திருஞான சம்பந்தனோ, ஒரு பாடல் பாடினாராம்.

"புத்தர் சமண கழுக்கையர் பொய் கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு

அத்திரமாவன அஞ்செழுத்துமே"

இந்தப் பாடலை திருஞான சம்பந்தன் பாடியதுதான் தாமதமாம்; புத்த நந்தி என்ற தலைவன்மீது இடி விழுந்ததாம்; பவுத் தர்கள் நிலை கலங்கி ஓடினராம்.

இப்படியெல்லாம் ஏராளமான கதை கட்டி பவுத்தர்களை வென்றதாக கூறு கிறார்கள்.

அவர்கள் கூற்றுப்படியே பார்த் தாலும் கூட, விவாதம் செய்து வெல்ல வக்கு இல்லாமல், வேறு கொல்லைப்புற வழிகளில் சூழ்ச்சிகள் செய்து பவுத்த நெறியாளர்களைப் பச்சைப் படுகொலை செய்து பரவசம் அடைந்திருக்கிறார்கள்.

கவிஞர் கலி.பூங்குன்றன்,

மனித வாழ்க்கைக்குத்

தேவை நாத்திகமா? ஆத்திகமா? நூலிலிருந்து.,

திங்கள், 8 பிப்ரவரி, 2021

'கப்சா'-வுக்கு அளவேயில்லையா?

• Viduthalai

மின்சாரம்

 உண்மையைச் சொல்ல வேண்டுமானால் காஞ்சி சங்க ராச்சாரியாருக்கு இந்த அற்புதம், மந்திர ஜாலம் இவற்றில் நம்பிக்கை கிடையாது என்று சொல்லப்படுவதுண்டு. அதே நேரத்தில் அவர்மீது அளவுக்கு மீறிய மரியாதையையும், மதிப்பையும் கூட்ட அவருடைய  பக்த கோடிகள் அவர்மீது அசாத்தியமான - அசாதாரணமான சக்தி கொண்டவர் என காட்ட, அவரவர்களுக்கும் தோன்றிய வகையில் ‘உதார்’ விடுவதில் போட்டிப் போட்டுக் கொண்டு திரிவார்கள்.

‘குமுதம்‘ - வரதராசன் என்ற அய்யங்கார் பார்ப்பனரின் கைக்குச் சிக்கிய நாள் முதல் (ஜெயிலுக்குப் போக வேண்டிய வரைக் காப்பாற்றியவர் முதல் அமைச்சர் கலைஞர்) ஒவ் வொரு இதழிலும் சாயிபாபாவை விஞ்சும் அளவில் அற்புதக் கை சரக்குகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.

சங்கராச்சாரியாரின் செல்வாக்கைக் கூட்டினால், அதன் பலன் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் இந்த எ(சி)த்து வேலைகளில் இறங்குவது கண்கூடு!

இந்தவார குமுதத்தில்கூட (10.2.2021) ஒரு கப்சா!

“பக்தரிடம் எள்ளுப் புண்ணாக்கு கேட்ட பரமாசார்யா!” என்பது தலைப்பு

கட்டுரை இதோ:

மகா பெரியவர் முக்கியமாகக் கடைப்பிடிக்கச் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று,

வேதம் படித்தவர்கள் சமுத்திரம் அதாவது கடல் தாண்டிச் செல்லக் கூடாது என்பது.

அப்படிச் சென்றவர்கள் மீண்டும் தன்னை தரிசிக்க வரும்போது அவர்களுக்குத் தீர்த்தம் தருவது, பிரசாதம் கொடுப்பது, அவர்கள் தரும் காணிக்கைகளை ஏற்பதில் தான் ஏற்றிருக்கும் சன்யாச தர்மத்திற்கு பங்கம் வராத முறையையே அனுசரித்தார்.

பரமாசார்யாளின் பரம பக்தரான ஒருவர், தவிர்க்க முடியாத காரணத்தால் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய சூழல் வந்தது.

வேறு வழியில்லாமல், மனதுக்குள் மகானையே நினைத்துக் கொண்டு, மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டு புறப்பட்டார் அவர்.

அங்கே சென்று தன் அலுவலகப் பணிகளைச் செய்த சமயத்திலும்கூட மனதுக்குள் ஆசார்யாளையே நினைத்துக் கொண்டார். ஒரு வழியாக சென்ற வேலை முடிந்து அவர் ஊருக்குத் திரும்பும் நாளும் வந்தது. அங்கே இருந்து புறப்படும்போதே மனதுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார் அவர்.

புறப்படும் நிமிஷத்தில் இருந்து, இங்கே வந்து சேர்ந்து மகானை தரிசிக்கும் வரை ஆகாரம் எதுவும் சாப்பிடுவதில்லை. ஆசார்யாளை தரிசித்து அவர் கேட்கும் காணிக்கையை வாங்கித் தந்த பிறகுதான் சபதத்தை முடிக்க வேண்டும். இதுதான் சாஸ்திரத்தை மீறி சமுத்திரம் தாண்டிச் சென்ற தன் செயலுக்குப் பரிகாரமாக இருக்கும் என்று தனக்குத்தானே நிபந்தனை விதித்துக் கொண்டார் அவர்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் நேராக வீட்டுக்குச் சென்று நீராடிவிட்டு உடனடியாக காஞ்சி மடத்துக்குப் புறப்பட்டார்.

மகானை தரிசிக்க நீண்ட வரிசை காத்திருந்தது. அந்த வரிசையில் அவர் சென்று நின்றபோது மதிய நேரம் நெருங்கியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாளாக சாப்பிடாத பசி மயக்கத்தோடு நின்று கொண்டிருந்த அவர், திடீரென்று தன் பெயரைச் சொல்லி யாரோ அழைக்க தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தார்.

“சார்..உங்களைத்தான் கூப்பிடறேன். அதோ பெரியவா உங்களைப் பார்த்து சைகை செய்யறார் பாருங்க!”

அணுக்கத் தொண்டர் ஒருவர் சொல்ல, மகான் இருந்த பக்கம் திரும்பினார், பக்தர். அங்கே இருந்தே பேசினார் மகான்.

“என்னைப் பார்க்கற வரைக்கும் சாப்ட மாட்டேன்னு விரதம் எடுத்துக் கொண்டிருந்தாயே.. இதோ பார்த்துட்டேன். முதல்ல அவர் கூட போய் சாப்பிட்டுட்டு வா!"

மகான் சொல்ல , அப்படியே அதிர்ந்துபோனார், பக்தர். தான் எங்கோ ஒரு வெளிநாட்டில் இருந்து மனதில் வேண்டிக் கொண்டது எப்படி மகானுக்குத் தெரிந்தது? அந்த ஆச் சரியம் விலகாமலே தொண்டரோடு சென்று, சாப்பிட்டுவிட்டு வந்தவருக்கு அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.

புன்னகை வதனத்துடன் அவரை அழைத்த மகான், “என்ன போஜனம் ஆச்சா? அடுத்தது என்ன? நான் கேட்கறதை வாங்கித் தரணும். ஆனா, ஆசாரத்தை மீறினவாகிட்டே இருந்து நான் எதுவும் எனக்குன்னு வாங்கிக்க முடியாதே.. அதனால், நீ ஒண்ணு பண்ணு . உன்னால முடிஞ்ச அளவு தையல் இலையும் எள்ளுப் புண்ணாக்கும் வாங்கிக் குடு!னு சொல்ல, அப்படியே திகைத்து திக்கு முக்காடிப் போனார் பக்தர். தன் மனதுக்குள்ளேயே இருந்து பார்த்தவர் மாதிரியல்லவா பேசுகிறார் மகான்! விழி நீர் நிரம்ப நின்றவர் மனதுக்குள், ஒரு சந்தேகம் முளைத்தது.

எல்லாம் சரி..ஆனால், தையல் இலையும் எள்ளுப் புண்ணாக்கும் அல்லவா கேட்கிறார். நாம் நினைத்தது மகானுக்குத் தரவேண்டும் என்றுதானே! இவை எப்படி அவருக்குப் பயன்படும்? பக்தர் மனதுக்குள் மட்டுமல்ல, அங்கே இருந்த பலருக்கும்கூட மகான் எதற்காக இவற்றைக் கேட்கிறார்? என்ற சந்தேகம் எழுந்தது.

அதை உணர்ந்தவர்போல மகானே சொல்லத் தொடங்கினார். “என்னடா இவர் இதையெல்லாம் கேட்கறாரேன்னு யோசிக் கறியா? எள்ளுப் புண்ணாக்கை மடத்துல இருக்கற பசுக்களுக்கு குடுப்பா. அதுகள் தர்ற பால் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு ஆகும். தையல் இலை வர்ற பக்தர்களுக்கு அன்ன தானம் செய்ய உதவும்...! அதாவது நேரடியா பலன் தராது. ஆனா உபயோக மாகும். சாஸ்திர விதியை மீறாதபடி உன் கிட்டே இப்படித்தான் வாங்கிக்க முடியும். புரிஞ்சுதா?"

புரிந்து கொண்ட பக்தர் மெய்சிலிர்க்க, நா தழுதழுக்க, விழிகள் நீர் சுரக்க மகான் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தார்.

பக்தரின் மனம் அறிந்து பரமாசார்யா நடத்திய திருவிளையாடலை நினைத்து சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும்.

‘குமுதம்‘ 10.2.2021 பக்.94-97.

இதில் ஒன்றைக் கவனிக்கத் தவறிடக் கூடாது. சமுத்திரம் தாண்டிச் சென்ற அந்தப் பக்தர் யார்? அவர் பெயர் என்ன? ஊர் என்ன? கடலைத் தாண்டி எந்த நாட்டுக்குச் சென்றார்? இது போன்ற விவரங்கள் எல்லாம் எப்பொழுதுமே இருக்காது. உண் மையாக அப்படி நடந்திருந்தால்தானே - அவர் பெயர் என்ன? ஊர் என்ன என்பதை எழுத முடியும்.

தங்கள் சமூகத்து ஆசாமி ஒருவரைத் தூக்கி நிறுத்தி, அந்த ஆசாமி மூலம் பலன் பெறும் பார்ப்பன யுக்தியைப் புரிந்து கொள்வதற்குப் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.

மாயா ஜாலங்கள் குறித்து காஞ்சி சங் கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யின் கருத்து வேறு வகையானது (பெட்டி செய்தி காண்க).

1975ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு. 1975 ஆகஸ்டு 15இல் சென்னையில் தொலைக் காட்சி தொடக்க விழா. காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பாதப் பூஜையைப் படம் எடுத்துத் தொலைக் காட்சியில் காட்டிட வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனத்தாரின் துடிப்பு! (அப்பொழுதெல்லாம் அவாள் மயம்தானே!)

படம் எடுக்க முயற்சி செய்தபோது ஆச் சாரியார் மறுத்தாராம். மீறி எடுத்தார்களாம்! விளைவு காமிராக்காரரின் கை விளங்கவில் லையாம் - இந்தச் செய்தியை வெளியிட்டது ‘தினமணி கதிர்’ என்னும் புளுகு மணியே (22.8.1975).

அது உண்மையில்லை என்று பிறகு வெளி வந்தது. இப்படித்தான் தங்கள் ஆச் சார்யாள்களைத் தலையில் தூக்கி வைத்து தல புராணங்களை எழுதிக் குவிப்பார்கள்.

அப்பொழுதே தினமணிக்கு உண்மை இதழ் வாயிலாக (1.9.1975 பக்கம் 30) சவால் விட்டோம். ஆச்சாரியாரின் மறுப்பை மீறி நாங்கள் படம் எடுக்க வருகிறோம் - எங்கள் கையை விளங்காமல் செய்யட்டுமே பார்க்கலாம் என்று சவால் விட்டோம்!

‘தினமணி கதிர்’ 45 ஆண்டுகளுக்கு முன் சங்கராச்சாரியார்பற்றி கயிறு திரித்தது. இப்பொழுது வரதராஜ அய்யங்கார் வசம், வசமாக சிக்கிய ‘குமுதத்தில்’ ஒவ்வொரு வார இதழும் சங்கராச்சாரியார் பற்றி அற்புத அதிசயங்களை அள்ளிவிட்டுக் கொண்டு உள்ளது.

இந்த வார ‘துக்ளக்‘கில் வெளி வந்த ஒன்று இதோ:

ஆர்.உமா மகேஸ்வரி: உங்களுக்கு இருந்த பார்வைக் கோளாறை, காஞ்சி பெரியவர் சரி செய்ததாகக் கேள்விப்பட் டோம். அது உண்மையா?

பத்மா சுப்ரமணியம்: சிறு வயதிலிருந்தே எனக்கு காஞ்சி மஹா பெரியவரிடம் ஒரு அபரிமிதமான பக்தி உண்டு. ஒரு முறை எனக்கு  கண்ணில்  பிரச்சினை தோன்றியது. திடீரென்று கண் சிவந்து எரிச்சல் தரும். திடீரென்று வரும்; அதுவாகவே போய் விடும். அப்படி கண் சிவக்கும்போது என்னால் எதை யுமே சரியாக பார்க்க முடியாது; படிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒன்றரை வரு டங்கள் இந்தப் பிரச்சினையுடன் நான் அவதிப்பட்டேன். எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. இந்தப் பிரச்சினை பற்றி மஹா பெரியவரிடம் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எனக்கு தோன்றவே இல்லை. ஆனால் ஒரு சமயம் நான் காஞ்சி மடத்திற்கு சென்றிருந்த சமயத்தில், எனக்கு அந்த கண் பிரச்சினை வந்துவிட்டது. அதைத் தூரத்திலிருந்தே கண்டுபிடித்த மஹா பெரியவர் என்னை அருகில் வரச் சொல்லி, என்னுடைய கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தார். சொன்னால் எவ்வளவு பேர் நம்புவார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. அதற்குப் பிறகு நான் எந்தவித சிகிச்சையும் எடுக்கவில்லை. ஆனால் என்னுடைய கண் பிரச்சினை சரியாகி விட்டது. இன் றைக்கு வரைக்கும் எந்தப் பிரச்சினை யும் இல்லை. அன்றைக்கும் சரி, இன் றைக்கும் சரி எனது கண்கண்ட தெய்வம் காஞ்சி மஹா பெரியவர்தான்.

('துக்ளக்', 10.2.2021)

சங்கராச்சாரியார் பார்த்த பார்வையி லேயே கண் பிரச்சினை தீர்ந்து விட்டதாம் - சொல்லுகிறார் பார்ப்பன அம்மையார்.

அப்படியானால் சாட்சாத் அதே சங்க ராச்சாரியார் தன் கண்ணுக்கான அறுவைச் சிகிச்சையை சங்கர நேத்ராலயாவில் செய்து கொண்டாரே! அது ஏன்? சங்கராச் சாரியார் பெயரில் (சங்கர நேத்ராலயா) கண் மருத்துவமனை ஏன்? ஏன்?

பார்ப்பனத் தன்மையிலும், சமஸ்கிருதத் திலும் தீரா வெறி கொண்ட பார்ப்பன அம் மையார் பத்மா சுப்ரமணியம் அளித்துள்ள பேட்டியும் இந்த வகையைச் சார்ந்ததே!

இந்தப் பார்ப்பன இனப் பற்று, பார்ப்பனர் அல்லாதாரிடம் இல்லையே - என் செய்வது! அவாள் மாதிரி கற்பனை செய்து தூக்கிப் பிடிக்க வேண்டாம், உள்ளதை உள்ளபடி உரைத்து நம் இன மக்களைச் சீராட்ட வேண்டாமா?

செவ்வாய், 30 ஜூன், 2020

'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்!

லாலா லஜபதி ஒரு முறை சொன்னார் தென்னாட்டுப் பிராமணர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து ‘துவேஷிகள், துவேஷிகள்!’ என்று சொல்லுவார்கள் என்ற கருத்துதான் ‘தினமலரில்’ (28.6.2020 பக்கம் 7) வெளிவந்த ஒரு கட்டுரையைப் பார்த்தவுடன் பளிச் சென்று நினைவிற்கு வருகிறது Òஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்?Ó என்பது அக்கட்டுரையின் தலைப்பு. எழுதுகோல் பிடித்தவர் எஸ். கார்த்திகேயன் - சமூக ஆர்வலராம்.
சமூக ஆர்வலர் என்ற போர்வையில் தொலைக்காட்சி களில்கூட அவ்வப்போது வந்துவந்து போவார்கள் பெரும்பாலும் பூணூல்காரர்கள்.
கட்டுரை முழுவதும் இவர் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ளார். ‘நான் ஜாதி பார்ப்பதில்லை. நான் ஜாதி பார்ப்பதில்லை -  நான் பரிசுத்தம்!’ என்பதுபோல அடிக்கடி ஒரு தடவை தன்னைப் பற்றி தன் முதுகைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்.
அவரிடம் ஒரே ஒரு கேள்வி உங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறதா? என்பதுதான்.
பூணூல் எல்லோரும் தான் போடுகிறார்கள் என்றெல் லாம் சொல்லித் தப்பிக்க வேண்டாம் - ஒரு முறை ‘சோ’ இராமசாமி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் ஒரு பே¢ட்டியில் சரியாக சிக்கி மூச்சுத் திணறினார். ‘வீட்டாரைத் திருப்திபடுத்தத்தான் சங்கடப்படுத்தாமல் இருக்கத்தான்! என்றார்.
பூணூல் கல்யாணம் நடத்தி முதுகில் அதைத் தொங்க விட்ட பிறகுதான் பிராமணன் -அதாவது துவிஜாதி - இருபிறப்பாளன் ஆகிறான்.
இது சரியா, தவறா என்பதை சங்கர மடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்!
பிராமணர்கள் மட்டுமா போடுகிறார்கள்? ஆசாரி, பத்தர் செட்டியார் கூடத்தான் போடுகிறார்கள் என்று தப்பித்து ஓட வேண்டாம். அதற்கு இந்து மத சாத்திரத்தில் இடம் உண்டா என்பதற்குப் பதில் சொல்லட்டும்.
பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசிய னுக்கு க்ஷணப்பநாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல் லியதாகப் பின்னி மூன்று வடமா மேலரைஞாண் கட்ட வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் 42).
இதில் எங்காவது சூத்திரர் பூணூல் அணியலாம் என்று கூறப்பட்டுள்ளதா?
சந்தேகமில்லாமல் இன்னொரு இடத்தில் மிகவும் வெளிப்படையாகவே மனுதர்மம் அறைந்து கூறுகிறது.
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலி யதைத் தரித்தால் அரசர் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் - 224).
இதை எடுத்துச் சொன்னால், இப்போதெல்லாம் மனுவை யாருங்க கடைப்பிடிக்கிறாங்க - நீங்கதான்  ஞாபகப்படுத்துறீங்க என்று நழுவும் Ôமீன்களைÕப் பார்க்க முடிகிறது.
‘துக்ளக்‘ இதழில் வரிந்து வரிந்து மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி ‘சோ’ இராமசாமி எழுதியதுண்டே!
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ‘'திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றுதான்” என்று காஞ்சிபுரம் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் பேசினாரே (12.8.1976).
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் திருக்குறளும், பிறவியின் அடிப்படையிலேயே வருணபேதம் கற்பிக்கும் மனுதர்மமும் ஒன்று என்று சொல்லுகிறார் இவர்களின் ஜெகத்குரு என்றால், மனுதர்மத்தை எந்த அளவுக்கு  அவர்கள் இன்றளவும் போற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாமே!
📷📷
ஏதோ அதே நேரத்தில் தப்பிப்பதற்காக தப்பிலித் தனமாகப் பேசலாமா? பதினெட்டு ஸ்மிருதிகளில் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதி களும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும், அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று என்று மனுதர்ம சாஸ்திரத்தின்  பீடிகையில் கூறப்பட்டுள்ளதே!
இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்த முடியாத நிலையில், இப்போதெல்லாம் யார் பார்க்கிறார்கள் - கடைப்பிடிக்கிறார்கள் என்று கூறுவது அசல் ஏமாற்று வேலையே!
வேண்டுமானால் ஒன்று செய்யட்டுமே! சங்கராச் சாரியார் தலைமையில் ஒரு நாளைக் குறிப்பிட்டு, மனுதர்மத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியை நடத்த முன் வரட்டுமே - வருவார்களா என்று சவால் விட்டே கேட்கின்றோம்.
மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏன் கொளுத்தினார்கள் என்பதை உணரட்டும்.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தங்கத்தினால் செய்த பூணூலைப் போட்டதுதான். திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் (5.4.2002) திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரூ.15 லட்சம் செலவில் பூணூல் (தினமணி 27.2.2014 படத்துடன் வெளியிட்டு இருந்தது) சீரங்க ரங்கநாதனுக்கோ ரூ.50 லட்சம் மதிப்பில் வைரப் பூணூல் போட்டவர்தானே ஜீயர்.
சங்கராச்சாரியார் ஒருவர் பிரதிஷ்டை செய்யப் படும் போது - அவர் அதுவரை அணிந்திருந்த பூணூலை அகற்றி விடுவார்கள் எந்தவித ஆசாபாசங்களுக்கும் ஆளாகக் கூடாது என்று; ஆனால், அதே சங்கராச்சாரியார் அவர்கள் நம்பும் கடவுள்களுக்கே பூணூல் அணிவித்து, ‘கடவுள்களும், நாங்களும் ஒரே ஜாதி!’ என்று காட்டுவதுதானே இதன் நோக்கம்? என்று தணியும் இந்த பிராமண துவேஷம்!” என்று தினமலரில் கட்டுரை எழுதும் திருவாளர் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.
பிராமணர்கள் எல்லாம் சாதுவானவர்களாம் - எந்த அடிதடிக்கும், சச்சரவுக்கும் போகாதவர்களாம். அத்தகைய பிராமணர்களைத் துவேஷிக்கிறார்கள் என்று துக்கம் தொண்டையை அடைக்க தூரிகை பிடிக்கும் இவர் என்ன எழுதுகிறார்? எந்த சொல்லைக் கையாளுகிறார்?
“ஒன்று பட்டிருந்த சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்த சில சண்டாளர்கள்தான் பிராமண துவேஷம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து, பிராமணர்களுக்கு எதிராக, பிற ஜாதியினரை தூண்டிவிட முயன்றனர்” என்று எழுதுகிறார்.
சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்தவர்கள் யார்? பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் வருணாசிரமத்தை உருவாக்கியவர்கள் யார்? இன்றுவரை ஆவணி அவிட் டம் என்ற பெயராலே நாங்கள் பிர்மாவின் முகத்திலே பிறந்த துவிஜாதி என்பதற்கான பூணூலை புதுப்பித்துக் கொள்பவர்கள் யார்?
சண்டாளர்கள் என்கிற தடித்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதிலிருந்தே இவர் போடும் நரி வேஷம் என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!
சண்டாளர் என்றால் என்ன பொருள் இந்து மதத்திலே தெரியுமா? சூத்திரன் மூலம் பிராமணன் மற்றும் இதர வருணத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பிறந்தவன் என்று பொருள்.
‘இழிந்த சூத்திரன் - உயர் வருணத்துப் பெண்ணைக் கூடிப் பிள்ளை பெற்றதை ஆத்திரத்தோடு கண்டிக்கும் அந்த சொல்லை - இந்த ஜாதி ஒழிப்பு(?) வீரர் பயன்படுத்துகிறார் என்றால் என்ன பொருள்? இவர் வேடத்தை இவரே கலைத்துக்கொண்டு விட்டாரே!
“எத்தனையோ காலத்திற்கு முன், யாராலோ நடத்தப் பட்டதாகக் கூறி, அதற்கு இப்போதைய பிராமணர்களான என்னைப் போன்றவர்களை துவேஷத்துடன் பார்க்கின்றன'' என்று எழுதுகிறார்.
📷📷
9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற Ôஅருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியிட்டு விழாவிலே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும், அந்தணர்கள்தான் குருவாக இருந்தார்கள். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் காஞ்சி பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில் என்று பேச வில்லையா? அனைத்தையும் கட்டறுத்தவர் என்பதற் காகப் பூணூலை அறுத்துக் கொண்ட சங்கராச்சாரியார் தான் ஒரு பிராமணர் என்ற அகந்தையிலிருந்து விலகவில்லையே!
கடவுளுக்கு மேலே பிராமணன் எனும் ஆரிய ஆணவம் தலைக்கேறி பேசிய காலம் - தினமலர் எழுத்தாளர் கூறும் எத்தனையோ காலத்திற்கு முன்பு தானா? நாம் வாழும் காலத்தில்தானே!
இந்து மதத்தில்கூட அனைவருக்கும் ஒரு சுடுகாடு கூடாது என்று சொன்னவரும் அதே காஞ்சி பெரியவாள்தானே (8.3.1962).
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் மகா பெரியவாள் என்று மகத்தான குரலில்-போக்கில் பேசப்படும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தானே! (நூல் - ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்)
தீண்டாமையை வலியுறுத்திய இவரை பிணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் நியாயமாக (PCR act) சிறையில் தள்ளியிருக்க வேண்டாமா?
வெகு நாட்களுக்கு முன் போக வேண்டாம் - இந்தியாவின் முதல் குடிமகனான முப்படையின் தலைவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் காப்பாளரான இந்தியக் குடியரசு தலைவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்தால், வடநாட்டில் இரண்டுகோயில்களில் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப்பட்டது மனுமந்தாதா காலத்திலா? நம் கண் முன்னாலா?
அஜ்மீர் பிர்மா கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 15.5.2018), பூரி ஜெகநாதர் கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 27.6.2018) ஒரு குடியரசுத் தலைவருக்கே இந்த அவமானம் நடந்ததே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள்தானே மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சிறீபெரும்புதூர் ஜீயர் பின்னணியில் அது நடக்கவில்லையா?
ராஜாஜியின் சிபாரிசின் பெயரில்  ஃபீஸ் வாங்காத வக்கீலாக பல்கிவாலா ஆஜராகி வாதாடவில்லையா?
வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி சூத்திரன் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி செத்து விடும், தீட்டுப்பட்டு விடும், அந்தத் தீட்டைக் கழிக்க ஆயிரம் கலசங்களைப் புதிதாக வைக்க வேண்டும், பிராமண போஜனம் நடத்த வேண்டும் என்று சொன்னவர்கள் யார் - தினமலர் எழுத்தாளரே?
உங்களுக்கு அடியாட்கள் தேவைப்படும் பொழுது இந்துக்களே ஒன்று சேர்வீர் என்பீர்! மற்ற நேரத்தில் சூத்திரன் அர்ச்சகரானால் சாமி செத்துப் போய்விடும், தீட்டுப் பட்டு விடும் என்பீர்!
காஞ்சிமடத்திலே சுப்பிரமணியசாமி சென்றால் சங்கராச்சாரி பக்கத்திலே சமமாக நாற்காலி போட்டு ஜம்மென்று உட்கார முடிகிறது. அப்துல் கலாமும், அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனும் தரையில் உட்கார வேண்டியிருந்ததே!
இவை எல்லாம் எப்பொழுதோ நடந்தது என்று சொல்லப் போகிறீர்களா திருவாளர் கார்த்திகேயன் அய்யர் அவர்களே?
ஈ.வெ.ரா. தூண்டி விட்டது ஜாதி துவேஷம் என்று குறிப்பிட் டுள்ளீர்களே -
ஈ.வெ.ரா. ஜாதியையும் உண்டாக்கவில்லை, யாரையும் தூண்டியும் விடவில்லை - ஜாதியை உண்டாக்கியது நீங்கள்; ‘இன்றும் நாங்கள் பிராமணர், பூணூல்காரர் கடவுளுக்கும் மேலே நாங்கள்!” என்று சொல்லுவது நீங்கள்.
நீங்கள் பிராமணர்கள் என்றால் நாங்கள் சூத்திரர்களா? நான்கு வருண அமைப்பில் அப்படிதானே பொருளாகும்! சூத்திரர்கள் என்றால் ஏழு வகைப்படும் -அதில் ஒன்று வேசி மக்கள் என்பதுதானே உங்களின் ஹிந்து மதம்!
இதை எதிர்த்துக் கேட்டால் துவேஷமா? உண்மையிலேயே திருடியவனை விரட்டினால் ‘திருடன் திருடன்’ என்று உண்மைத் திருடனும் சேர்ந்து கத்திக் கொண்டு ஓடித் தப்பிக்கும் தந்திரம் பெரியார் சகாப்தத்தில் நடக்காது, நடக்க விடவும் மாட்டோம் - அதற்கான ஆணித்தரமான அசல் தலைமையும் உண்டு - எஃகு பலம் படைத்த இயக்கமும் உண்டு!
உண்மையைச் சொல்லப் போனால் உங்களுக்கு ஒரு வகையில் பாதுகாப்பாக இருந்தவர்தான் பெரியார். மக்கள் மத்தியிலே தக்க பிரச்சாரத்தின்மூலம் விழிப்புணர்வை உண்டாக்கி ஜாதியை ஒழித்து பிராமணனும் இல்லை - சூத்திரனும் இல்லை, “அனைவரும் மனிதர்தான்” என்ற நிலையை உண்டாக்கத்தான் 95ஆம் வயதிலும் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன்தான் தந்தை பெரியார்! நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டீர்கள்.
உடல் எல்லாம் மூளை என்று கூறிக் கொள்ளும் ராஜாஜியே இவ்வாறு சொன்னதுண்டு!
In fact in one occasion Rajaji Proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (caravan april 1, 1978. Gandhiji’s Crusade against Casteism) முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணராக இருப்பதில்தான் பெருமைப்படுவதாகச் சொன்னார் என்றால் வேறு யாரை எதிர்ப்பார்ப்பது?
தீண்டாமை ஒழிக, ஜாதி ஒழிக என்று சங்கராச்சாரியார் சொல்லுவாரா? பார்ப்பனர் சங்கம் தீர்மானம் போடுமா?
பார்ப்பனிய ஆதிக்க நஞ்சை ஏதோ பெரியார்தான் எதிர்த்தாரா? சமூகத்தில் மாற்றம் தேவை  என்று எண்ணியவர்கள் எல்லாம் பார்ப்பனர்களை வெறுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையா?
புத்தர் முதல் சித்தர்கள் உட்பட, ஜோதி பாபூலே, நாராயண குரு, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் (ஏன் விவேகானந்தர்கூட) என்று தொடர்ச்சியாக ஏன் எதிர்த்தனர் - வெறுத்தனர் என்பதைக் கொஞ்சம் அறிவோடு சிந்திக்க வேண்டாமா? பூணூல், பூணூல் ஆணவத்தோடு அணுகினால் அவர்களின் புத்தி தினமலர், ‘துக்ளக் போல்தான் மேயப் போகும்.
காந்தியாரை மகாராட்டிரத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே எனும் சித்பவன் பார்ப்பான் சுட்டுக் கொன்றபோது, மும்பையில் அக்கிரகாரங்கள் எரிந்தன; பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர்.
பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புணர்வு கொதி நிலையில் உள்ள தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் தாக்குதலைத் தொடுத்திருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது; அதனைத் தடுத்தாட்கொண்டவர் தந்தை பெரியார் என்ற நன்றியை மறந்து விட்டு, தர்ப்பைப் புற்கள் தலைகொழுத்துத் திரிய வேண்டாம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு வேட்பாளராகக்கூட பார்ப்பனரை நிறுத்த எந்த கட்சியும் முன்வராததற்கு என்ன காரணம்? நாதியற்ற நிலையைத் தேடிக் கொண்டது யார் என்பதை திரிநூல் பத்திரிகை எண்ணிப் பார்க்கட்டும்.
இந்தக் கட்டுரையில் கூட, Ôஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்?Õ - என்று தானே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம். இந்தப் பிராமணன் எனும் தொனியும், உச்சரிப்பும், அடையாளமும், உங்களிடம் ஆணவமாக துள்ளித் திரியும்  வரையிலே, ஆவணி அவிட்டங்கள் தொடரும் வரையில், அதனை  எதிர்த்து- துவேஷமல்ல - மனித உரிமையும், சமத்துவ உணர்வும் - சமர் செய்து கொண்டுதானிருக்கும். மேலும் மேலும் உங்களின் புலம்பலும், உங்கள்மீதான வெகு மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் எரிமலையாய்க் கனன்று கொண்டுதானிருக்கும்-ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள் ஆவணி அவிட்டப் பூணூல்கார்களே!
யாரால் பாதுகாப்பு?
இதற்கு மேல் இழைக்கப்பட முடியாது என்கிற அளவுக்குக் கொடுமைகளையும், இழிவுகளையும், உரிமைப்பறிப்புகளையும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும்பாலான-மண்ணுக்கு உரிய மக்கள்மீது சுமத்திய-திணித்த உண்மையை - ஒரு மாபெரும் தலைவரால், ஒரு மாபெரும் இயக்கத் தால் புரிய வைக்கப்பட்ட நிலையில், இன்றளவும் பிராமண - சூத்திரத் தன்மையை நிலை நிறுத்து வதில் குறியாக இருக்கும் ஓர் ஆதிக்க வெறிக் கூட்டம் பாதுகாப்பாக, நிம்மதியாக, தங்கள் விகிதாச்சாரத்துக்கும் மேல் பன்மடங்கு எல்லாவற் றிலும் அனுபவிப்பவர்களாக இங்கு வாழ முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அந்தத் தலைவர் தந்தை பெரியாரும், அந்த இயக்கமும்தான் அதன் பண்பாட்டால்தான்  என்பதை உணர வேண்டிய வர்கள் உணர வேண்டும். இதைப் பலகீனமாக எடுத்துக் கொள்ளுகிறார்களா என்று தெரிய வில்லை. முடிவு அவர்கள் கையில்!
-மின்சாரம்

சனி, 13 ஜூன், 2020

ஜெயேந்திரர் கம்பி எண்ணியதும் கர்மப் பலன்தானா !


மின்சாரம்
'நீ உன் தாய் வயிற்றில் பத்து மாதம் இருந்து தானே பிறந்தாய் ஏன் கீழ் ஜாதி?'
"அது எனது கர்மபலன் சாமி!"
"பார்ப்பானும் பத்து மாதம் தாயின் வயிற்றிலிருந்து தானே பிறந்தான் - அவன் ஏன் உயர் ஜாதி - பிராமணன்?
"அது அவன் கர்ம பலன்சாமி"
"நீ ஏன் உழைத்து உருக்குலைந்து போனாய்?"
"அது என் தலை எழுத்து அய்யா! பகவான் பிண்டம் பிடித்துப் போடும் பொழுதே எங்கள் தலையில் எழுதி விட்டானே!' அதனை மாற்றி எழுதிட முடியுமா அய்யா?"
"அவன் உழைக்காமல் உப்பரிகையிலே வாழ்கிறானே - அது எப்படி?"
"அதற்குப் போன ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் - மகராசன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்"
"நீ ஏன் படிக்கவில்லை?"
"எல்லோரும் படிக்க முடியுமா? படிப்புன்னா - அதற் காகப் பிறந்தவன் பிராமணன் - அவன் பிறந்த நேரம்!"
"நீ ஏன் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓலைக் குடிசையில் வாழ்கிறாய்?"
"எல்லாம் அவன் செயல் - அதை யாரே மாற்றிட முடியும்?"
- இப்படி எதற்கெடுத்தாலும் தன் தாழ்மைக்கும், இழி நிலைக்கும் தாங்களே தர்ம - நியாயம் பேசும் விசித் திரத்தை வேறு எங்காவது கண்டதுண்டா?
பாதிக்கப்பட்டவனே அந்தப் பாதிப்புக்கான நியாயத்தைப் பதிலாகக் கூறும் பரிதாபத்திற்குரிய பஞ்சமர்களை எந்த நாடு கண்டது?
இந்தக் கீழ்ஜாதி மனப்பான்மையை எப்படி மாற் றுவது?
வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து கெட்டவனை மேலே தூக்கி விடுவது எப்படி?
உழைத்தும் உருக்குலைந்து கிடக்கும் இந்த மக்களை உன்னத நிலைக்குக் கொண்டு வருவது எப்படி?
இப்படி சிந்தித்தவர் புத்தர் - புத்தருக்குப்பின் ஆரியர் களின் முன் ஜென்மம், தலைவிதி, கர்மபலன் என்னும் சதிக் காட்டின் வேரை வெட்டிவீழ்த்தியவர்தான் வெண் தாடி வேந்தர் பெரியார்.
நீ கீழ் ஜாதியல்ல - ஜாதி என்பதற்கு அடையாளம் என்ன? அவன் உயர் ஜாதிக்காரனும் அல்ல. பிர்மா முகத்தில் அவன் பிறந்தவன் என்று சொல்லுவதெல்லாம் அசல் பித்தலாட்டம்.
பிர்மா ஆண் கடவுளா - பெண் கடவுளா? ஆண் கடவுளின் முகத்தில் ஒருவன் பிறக்க முடியுமா? இல்லை இல்லை பிர்மாவின் முகத்தில்தான் பிராமணன் பிறந்தான் என்றால் அவன் முகத்தை ஓவியமாகத் தீட்டினால் அது எப்படி இருக்கும்?
விதியை நம்பாதே. அது வீணர்களின் கூற்று. கர்ம பலன் என்பது கயவர்களின் ஏற்பாடு.
ஒரு பொழுதும் உனக்கு உரிமை உணர்ச்சி வந்து விடக் கூடாது என்பதற்காக வந்தேறிகள் செய்த வடிகட்டின பித்தலாட்டம். கர்மவினை என்பதெல்லாம் உன் உழைப்பைச் சுரண்டும் சூழ்ச்சிக் கருவி.
உன் தலையில் எழுதியவன் யார்? எந்த மொழியில் எழுதினான்? அவன் எழுதியது உண்மை என்றால், அந்த எழுத்துக்கள் இப்பொழுது எங்கே - எங்கே! என்று எண்ணற்ற கேள்விக் கணைகளை ஏவி ஏவி ஆமைகளாய் கிடந்த மக்களை அரிமாவாக ஆர்ப்பரித்து எழச் செய்ய, ஊமைகளாகக் கிடந்தவர்கள் மத்தியில் உரிமைக் கனலைத் தட்டி எழுப்பினார். அறிவார்ந்த வினா வெடி குண்டுகளை வீசி வேதியக் காட்டை எரித்துச் சாம்பலாக்கினார். வீழ்ந்துபட்ட மக்களை வேங்கைகளாய்ச் சிலிர்த்து எழச் செய்தன் விளைவு - உழைத்தவன் உரிமைச் சங்கு ஊதுகிறான். உழைப் பாளியைப் பங்காளியாக்கு என்று உரத்தக் குரலில் முழங்குகிறான்.
கல்வியைக் கொடு - கை நாட்டுப் பேர்வழிகளாக நாங்கள் இருந்தது போதும் போதும் என்று கர்ச்சனை புரிந்து பஞ்சமர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆக்கப் பட்ட இந்த மண்ணின் மக்கள் சூத்திரர்கள் ஆட்சி செய்தால் அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசு போல் அழிந்து விடும் என்னும் சாத்திரக் குப்பைகளைச் சாம்பலாக்கி -
"சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் ஆட்சி இது - இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை" என்று சட்டப் பேரவையில் சங்கநாதம் கேட்டதே!
ஆதி திராவிடர் அய்.ஏ.எஸ். ஆகி விட்டாரே! ஏன் குடியரசு தலைவராக ஆகி விட்டாரே!
குப்பன் மகன் சுப்பன் குளு குளு காரில் வந்து இறங்குகிறாரே!
பேயென்று இழித்துப் பேசப்பட்ட பெண்கள் இன்று, பேண்ட் - சூட் அணிந்து ஆணா, பெண்ணா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு ஆட்சியினைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிய நிலைக்கு வந்து விட்டார்களே!
பார்ப்பனர்களின் தனிக் குத்தகையாக்கிக் கொண்ட கோயில் கருவறைக்குள்ளும் கறுப்பர்கள் நுழைந்து அர்ச்சனை செய்யும் நிலை ஏற்பட்டு விட்டதே. அடுத்துப் பெண்களும் அர்ச்சகர்.உரிமைக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனரே!
பஞ்சகச்சம் கட்டி திறந்த பூணூல் மேனியுடன் அவிட்டுத் திரியுடன் வீதிகளில் வீறு நடைபோட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டதே! அப்படி இப்பொழுது சென்றால் கோலி விளையாடும் சிறுவன்கூடக் கேலி பேசுவானே!
ஆமாம்.. கலிகாலம் முற்றி விட்டதுஎன்ன செய்யலாம்?
பார்ப்பனர்கள் கூடிக் கூடி "குசுகுசு"வென்று பேசு கிறார்கள். மத்தியில் நம்மவர்கள் ஆட்சி வந்தாலும் இந்தப் பாழாய்ப் போன தமிழ்நாட்டில் மட்டும் நம் ஜம்பம் பலிக்கவில்லையே!
என்ன செய்யலாம்! ஒரு கை பார்ப்போம் - ஊடகங்கள் தான் நம் கைகளில் இருக்கிறதே! பத்திரிக்கை நடத்தும் 'சூத்திரவாள்கள்'கூட இன்னும் ஆன்மிகச் செய்திகளை அள்ளி விட்டுக் கொண்டு தானே இருக்கின்றனர்.
இவாளை வீழ்த்த வேண்டுமானால் மீண்டும் நம் வேதியப் புத்தியைக் காட்ட வேண்டும். விதி, கர்மபலன், பாவம், புண்ணியம், தலையெழுத்து சங்கதிகளை அவிழ்த்துக் கொட்டுவோம்!
'அடிக்க அடிக்க அம்மியும்கூட அசையத்தானே செய்யும் என்ற முடிவுக்கு' அக்கிரகாரம் வந்து விட்டதாக தெரிகிறது?
இந்தக் காலத்திலேகூட அப்படிஒரு எண்ணம் வந்து விட்டதா? நம்ப முடியவில்லையே என்று எண்ண வேண்டாம்.
திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் தான் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். 'ஆன்மிகக் கண்காட்சி' - 'விவேகானந்தர் ரத ஊர்வலம்' இன்னோ ரன்ன ஏற்பாடுகளை ஜாம்ஜாமென்று முடித்து விட்ட நிலையில் - அடுத்த கட்டத்துக்குத் தாவியி ருக்கிறார். 'சோ' குடும்பத்திடமிருந்து 'துக்ளக்'கைப் பறித்துக் கொண்ட திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் 'துக்ளக்'கை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்து விட்டார்.
இது 'துக்ளக்'கில் (10.6.2020) அவர் பெயரால் எழுதப் பட்ட கட்டுரையின் சில பகுதிகள்:
பிறவிக் குருடன், செவிடனாக மனிதன் ஏன் பிறக் கிறான்? இதற்கெல்லாம் விளக்கம் இருக்கிறது. ஹிந்து மதத்தில். மறுபிறப்பு என்கிற தத்துவத்தில் நம்பிக்கை இருந்தால்தான் இதற்கு விளக்கம் கிடைக்கும்.
றீவினைப் பயனையும், மறுபிறப்பையும் பிரிக்க முடியாது.
றீமறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல் வினைப் பயனில் நம்பிக்கை இருக்க முடியாது.
இவ்வளவையும் எழுதிவிட்டு, கடைசியில் முடிக்கும் வரிகள்தான் முக்கியம்.
"இறை நம்பிக்கையை ஒழித்து, மனிதச் சிலை களையும், நினைவகங்களையும் வழிபடும் திராவிட பகுத்தறிவு விபரீதத்தால், நம் மகான்கள் கூறிய ஆன் மிகக் கருத்துகளை நாம் மறந்து விட்டோம் - எனவே முற்பிறப்பின் நம் வினைகளில் இந்தப் பிறவிப் பயன் களை ஓர வஞ்சனைகளாகப் பார்க்கிறோம்" என்று மங்கலம் பாடி முடித்துள்ளார் திரு. குருமூர்த்தி அய்யர்வாள்!
கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே பார்த்தீர்களா?
கர்ம பலன், தலை எழுத்து என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக் களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தோம். அதன் அடிமடியில் கை வைத்து நம் தலையில் மிளகாய் அரைக்கும் அளவுக்குத் தலைகீழாகப் புரட்டியடித்தது திராவிட பகுத்தறிவு என்பதை அவர்களை அறியா மலேயே ஒப்புக் கொண்டு விட்டனரே!
அப்படிப்பட்ட தலைவர்களுக்குச் சிலைகளும், நினைவகங்களும் உருவாகி விட்டதாம். வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கதறும் கண்கொள்ளாக் காட்சி இது.
ஒரு பக்கத்தில் பெரியார் மண்ணா இது என்று கிண்டலடிப்பது, இன்னொரு பக்கத்திலே ஆம், இது பெரியார் மண்தான் என்று மனப்புழுக்கத்தோடு புலம் புவது - பலே, பலே படிப்பதற்கு ரொம்பவும் மகிழ்ச்சி யாகத்தானிருக்கிறது - மண்டியிடும் ஆரியத்தின் மண் மேட்டிலே ஒடுக்கப்பட்ட மக்களின் உப்பரிகை மாளிகை தான் எழும்!
எல்லாம் தலை எழுத்தின்படிதான் நடக்கும் என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பூணூல் பேனா பிடிக்கும் குருமூர்த்திகளுக்குச் சில கேள்விகள்.
உணர்ச்சி வயப்பட்ட யாரோ சில இளைஞர்கள் சில பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்தனர் என்ற செய்தி வந்ததே - அதுகூட தலை எழுத்தின்படிதானே நடந்தது என்று ஏற்றுக் கொள்வீர்களா? கோயில் சிலைகளின் திருட்டும்கூட தலை எழுத்தின்படிதானா? வெடிகுண்டு வீச்சுகளும்கூட சம்பந்தப்பட்டவர் போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான பரிசா?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் கம்பி எண்ணினாரே - அதுவும் கர்மபலனின் விளைவு தானா? பார்வதியிடம் ஞானப்பால் உண்ட, தேவாரம் பாடிய திருஞான சம்பந்தன் 16 வயதில் அற்பாயுசாக மாண்டானே! அதுகூட கர்மப் பலனின் விளைவா? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த 2020ஆம் ஆண்டிலும் இப்படி, விதியையும், கர்ம பலனையும் கட்டிக் கொண்டு அழுதால் - எழுத ஆரம்பித்தால் அனேகமாக அவர்களுக்கு அனர்த்த மாகத் தான் முடியும் .. ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம்!
விநாசகாலே விபரீத புத்தி!'
- விடுதலை நாளேடு,13.6.20

சனி, 14 செப்டம்பர், 2019

அட, மன(ற)ர கழன்ற மனு 'நூலாரே!'

மின்சாரம்




ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்வதில் சில பொதி சுமக்கும் மிருகங்களுக்கு ஒரு வகையான சுகமே! இந்தப் போட்டியில் முதல் பரிசு 'துக்ளக்குக்கு'த்தான். அதனால் தான் அடிக்கடி கழுதை கார்ட்டூனைப் போட்டுக் கொண்டிருக்கும்.

இவர்களின் ஜெகத் குருவின் யோக்கியதையை  - சங்கதியைக் கழுவிக் கழுவி ஊத்தியாச்சு! ஜெயேந்திரருக்காக வக்காலத்து வாங்கி, எழுத்தாளர் அனுராதா ரமணன் மீது பழி தூற்றிய நிலையில் அந்த அம்மையார் கொடுத்த சாட்டையடி குருமூர்த்திகளின் தோலை உரித்துத் தொங்கப் போட்டது. இதை எல்லாம் 'விடுதலை' எடுத்து எழுதுகிறது. அதற்கு ஒரு வரி பதில் சொல்லத் துப்பில்லை.

ஆனால் ஆத்திரத்தை மட்டும் அடக்க முடியவில்லை. அதற்காக அந்த ஆத்திரத்தை எந்த வகையிலாவது சொரிந்து தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு வாரமும் திராவிடர் கழகத் தலைவரைத் தீண்டாவிட்டால் ஆத்துலே போஜனம் கிடைக்காது போலி ருக்கு. இந்த வாரமும் (18.9.2019) எரிச்சலைக் காட்டியிருக்கு.

கேள்வி: பவள விழா நடத்திய தி.க. மாநாட்டில், வெளி யிடப்பட்ட தீர்மானங்கள் பற்றி துக்ளக் கருத்து?

பதில்: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறி, 'பிறப்பினால் எல்லோரும் ஒன்று' என்பது தன் முதன் மைக் கொள்கை என்கிறது தி.க. தீர்மானம். ஆனால், அது திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை தி.க. மறைத்திருக்கிறது. ஏன்? திருக்குறளை பெரியார், மலம் என்று கூறிவிட்டாரே. (அப்படியா எங்கே கூறினாராம்?) அடுத்தது, 'யாதும் ஊரே யாவ ரும் கேளிர்' (எல்லாம் நம் நாடு - அனைவரும் நம் உற வினர்) என்பதும் தன் கொள்கை என்கிறது தி.க. ஆனால், அது புறநானூறிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூற அதற்குத் துணிவில்லை. காரணம், அடுத்த வரியிலேயே கர்ம விதியைக் கூறுகிறது புறநானூறு. முடிவாக 'உலகமே ஒரு குடும்பம்' என்பதும் தன் கொள்கை என்கிறது தி.க. ஆனால், அது தி.க. வெறுக்கும் சம்ஸ்க்ருத (ஆரிய நூலான) மகா உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. 'ஒருவர் நம் உறவினர், மற்றவர் வேற்று மனிதர்' என்று குறுகிய மனது உள்ளவர்கள் கூறுவார்கள். பரந்த மனது உள்ளவர்கள் - உலகமே ஒரு குடும்பம் என்று கூறுவார்கள்' என்று கூறுகிற மகா உபநிஷத், நம் நாடாளுமன்றத்தில் பொதித்து வைக்கப் பட்டிருக்கிறது. இதைத்தான் தி.க. தன் கொள்கை என் கிறது. தான் கூறியது மகா உபநிஷத்தில் இருக்கிறது என்று கூறினால் தி.க.வின் மானமே போய்விடும். தி.க.வின் பவளவிழாத் தீர்மானங்க ளின் மூன்று கொள் கைகளும் திருடப்பட்ட கருத்துக்கள்.

இதுதான் 'துக்ளக்'கின் கேள்வி பதில் பகுதி.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திக பவள விழா மாநாட்டில் கூறப்பட்டதாம். இது திகவின் கொள்கையில்லை - திருக்குறளில் உள்ள கருத்து இது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தன் கொள்கை என்கிறது தி.க.

அது புறநானூற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

உலகமே தன் குடும்பம் என்பதும் தி.க. வெறுக்கும் சமஸ்கிருத மகா உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆக தி.க. சொல்லும் இந்த மூன்றுமே திருடப்பட்ட கருத்துக்கள்.

சரி... இருக்கட்டும். 'துக்ளக்' தன் கொள்கையாக - நோக்கமாக எடுத்து வைக்கும் ஒவ்வொன்றும் தன் சுயபுத்தியிலிருந்தே சொல்லுவதாக நம்ப வேண்டும்.

'துக்ளக்கும்' சரி, பார்ப்பனக் கும்பலுக்கும் சரி, ஒன்றைச் சொல்லும்பொழுது ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்டும் புத்தியே கிடையாது. மனம் போன போக்கில் உளறித் தொலைப்பதுதான் அவாளின் வழமை.

நாம் கொடுக்கும் பதிலடி ஒவ்வொன்றுமே ஆதாரம் பேசும் - அது அவாளின் ஆயுதத்தைக் கொண்டே நன்னா மொத்தி எடுக்கும். 'விடுதலை'யையும், 'துக்ளக்'கையும் படிக்கும் எவருமே இந்த உண்மையை அறிவார்கள்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை 'துக்ளக்' பின்பற்றி வருகிறதே; என்றைக்காகவது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று 'துக்ளக்' சொன்னதுண்டா?

மின்சார விளக்கை 'துக்ளக்' பயன்படுத்துகிறதே - தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சார விளக்கைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று குருமூர்த்தி எழுதிய துண்டா? ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார் என்று என்றைக்காகவது 'துக்ளக்' கும்பல் எழுதியதுண்டா?

மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலத்தின் வழியாகத்தான் காரை ஓட்டி வந்தோம் என்று எழுதியதுண்டா?

இந்த வார 'துக்ளக்'கின் அட்டைப் படத்தில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறப்பட்டுள்ளதே, அது என்ன துக்ளக்கின் சொந்த கண்டுபிடிப்பா? எங்கிருந்து வந்தது என்று குறிப்பிடாதது ஏன்?

அடேயப்பா - திருவள்ளுவர் இவ்வளவு உயர்வாக எழுதி இருக்கிறார் என்றால் - வள்ளுவரின் அப்பன் பார்ப்பான் என்று எழுதும் திமிர் பிடித்த கூட்டத்தின் அகம்பாவம் இன்னும் அடங்கவில்லை என்றால் - அது அடக்கப்பட்டே தீரும் - அந்த அளவுக்கு இளைஞர்கள் இப்பொழுது வீறு கொண்டு எழுந்துள்ளனர்.

திருவள்ளுவர் கூறியுள்ளதையும், புறநானூறில் கூறியுள்ளதையும் தன் கொள்கை என்று தி.க. கூறியுள்ளது என்பது குற்றச்சாட்டா? விமர்சனமா?

குற்றச் சாற்று என்றால் அதனை எதிர்த்து எழுதாதது ஏன்? விமர்சனம் என்றால் எந்த விமர்சனத்தையும் முன் வைக்காதது ஏன்?

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளுவரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று 'துக்ளக்' கும்பலால் கூற முடியாது.

காரணம் கீதை என்ற உலக்கை அவர்கள் மண்டையில் ஒரு போடு போடும். நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் - சதுர் வருணம் 'மயாசிருஷ்டம்‘ என்றுதானே கீதையிலே கிருஷ்ணன் கூறுகிறார். அவர்கள் எப்படி குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்? கீதைக்கு எதிரான குறளின் மீதுள்ள ஆத்தி ரத்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை யுடைய தி.க.வின் மீது காட்டுகிறார்கள் அவ்வளவு தான்!

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதையும் அவர் களால் ஏற்கவே முடியவே முடியாது.

கடலைத் தாண்டிப் போவதே தோஷம் என்று சாஸ்திரம் எழுதி வைத்திருக்கும் 'சாஸ்திராக்கள்' யாதும் ஊரே என்று சொல்ல முடியுமா?

"யாவரும் கேளிர்" என்றும் சொல்ல முடியாது. அவர்களுக்குள்ளேயே வடகலை, தென்கலை குஸ்திகள் கொஞ்சமா நஞ்சமா?

வடகலைக்காரனை தென்கலைக்காரன் கண்டால் சுவரில் முட்டிக் கொள்வானே - அதற்குப் பெயர் 'கண்டு முட்டு' - ஒருவன் இன்னொருவனைப் பற்றிக் காதில் கேட்டா லும் சுவரில் முட்டிக் கொள்வான் - அதற்குப் பெயர் “கேட்டு முட்டு‘.

இந்த யோக்கியதையில் யாவரும் கேளிர் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவாராம்?

தங்கள் கலாச்சாரத்துக்கும், சாஸ்திர சம்பிரதாயத்துக்கும் எதிராக இந்தப் புறநானூறு வரி இருப்பதால் இந்தக் கொள்கையுடைய தி.க.வின் மீது தீரா ஆத்திரம் அலை மோதுகிறது - அதன் எரிச்சல்தான் இந்தக் கேள்விப் பதில்.

திருவள்ளுவர் கூறுவதையோ, புறநானூறு கூறுவ தையோ தி.க. ஏற்றுக்கொள்கிறது என்பது எப்படித் திருட்டாகும்?

நாகையிலிருந்து அய்ம்பொன்னாலான புத்த விகாரத்தைத் திருடி சீறிரங்கத்துக் கோயிலுக்கு மதில் சுவர் எழுப்பினான் திருமங்கை ஆழ்வார் என்றால் அந்த நேரத்தில் கடவுட்டன்மையுடையவராதலால், அவர் செய்கையை யாரும் குறை கூறார் என்று திருட்டுக்கு தில்லு முல்லு வக்காலத்து வாங்கும் வருணாசிரமக் கும்பல் "ஒழுக்கம் பொதுச் சொத்து - பக்தி தனிச் சொத்து" என்ற கொள்கையுடைய திராவிடர் கழகத்தின் செயலை திருட்டு என்று கூறுவது பித்தலாட்டத் தகடுதத்தத்தைத் தான் குறிக்கும்.

பெண்களைப் பற்றி தத்துப் பித்து என்று உளறி நாலாப்பக்கங்களிலும் நையப்புடைக்கப்படுகிறார் திருவாளர் குருமூர்த்தி; இதற்கெல்லாம் மூல காரணமே இந்தப் பெரியாரும், தி.க.வும், வீரமணியும் தானே என்ற ஆத்திரம் சும்மா புரட்டிப் புரட்டி எடுக்கிறது. இந்த ஆத்திரத்தாலே மரை கழன்று போய் விட்டது போலும்!

அய்யோ பாவம் - நமது அனுதாபங்கள்!

மானத்தைப் பற்றி 'துக்ளக்' கூட்டம் பேசலாமா?


உலகமே ஒரு குடும்பம் என்கிறது மகா உப நிஷத் அதிலிருந்து தன் கொள்கைகளை திருடியிருக்கிறது தி.க. என்று எழுதுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்.

பரவாயில்லையே, மகா உப நிஷத்தை எல்லாம் படித்துவிட்டுத் தான் தி.க. எழுதுகிறது என்று ஒப்புக் கொண்டுவிட்டார் - அதுவரை பாராட்டவும் செய் யலாம். சரி, உலகமே ஒரு குடும்பம் என்று உங்கள் மகா உபநிஷத் கூறுகிறதே, அதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரே குடும்பம் என்று ஆகிவிட்ட பிறகு ஜாதி ஏன்? கோத்திரம் ஏன்? எல்லாம் ஒன்றாகிட வேண்டியது தானே! தி.க.வை மட்டம் தட்ட வேண்டுமானால் அவாளுக்கு மகா உபநிஷத் தேவைப்படுகிறது.

உபநிஷத்தைப் பற்றி கதை அளக்கிறார்கள் - இவை மூலமா? தழுவலா? இது பற்றி சுவாமி சிவானந்த சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

உபநிஷத்தை உண்டு பண்ணியவர்கள், புத்த பகவானது உயர்ந்த கொள்கைகள் அனைத்தையும், வேதமாகுமென்று, உறுதிப்படுத்துவதற்கு இந்த ஜாலத்தைக் காட்டி மக்களை மயக்குகிறார்கள்.

அல்லா உபநிஷத்து, கிறிஸ்து உபநிஷத்து என்றெல்லாம் கூட உண்டே!

உபநிஷத் சொன்னதைத்தான் தி.க. சொல்லுகிறது என்கிறதே 'துக்ளக்' - அதை நம்பினால் திகவை ஏன் எதிர்க்க வேண்டும்? ஆதரிக்க வேண்டியதுதானே!

உபநிஷத்தே திருட்டு என்கிறபோது, திருட்டைப் பற்றி ரொம்பத்தான் கவலைப்படுகிறது? இந்தக் கைபர்கள் கூட்டம். தி.க. கூறுவது உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றால் திகவின் மானமே போய்விடும் என்கிறது. மானத்தைப் பற்றியெல்லாம் மகாபாரதக் கும்பலா எழுதுவது? புத்தரிடமிருந்து திருடியது என்றால் இங்கே மானம் போவது யாருக்கு?

- விடுதலை நாளேடு, 7 .9 .19