பக்கங்கள்

திங்கள், 6 டிசம்பர், 2021

மதமாற்றத்தை எதிர்த்த பாரதி!எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (88)


ஞாயிறு, 28 நவம்பர், 2021

மகாத்மா' ஜோதிராவ் புலே


உலகமே மகாத்மா என்றால் காந்தி என்று பேசிக்கொண்டு இருந்த நேரம்; இந்தியாவில் 1954ஆம் ஆண்டு  மராட்டிய மாநி லத்தில் மகாத்மா புலே என்ற மராட்டி திரைப்படம்  வெளியானது.

அப்படத்தின் அறிமுகக் காட்சியில் மராட்டி மற்றும் ஆங்கிலத்தில் இப்படி எழுதப் பட்டிருக்கும்.  "இந்திய மண்ணில் வேறு எங்குமில்லாத ஜாதியம், ஒடுக்குமுறையாக, சுரண்டல் முறையாக, அடிமைத்தனமாக மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. பார்ப்பனீய ஆதிக்கத் தின் நால்வருணப் பேதத்தின் உச்சபட்சக் கொடுமைகளை அனுபவித்த மாநிலம் மராட்டிய மாநிலமாகும்.  அங்கே ஆதிக்க ஜாதியினரால் சூத்திரர்கள். ஆதி சூத்திரர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு கொடுமைகளுக்கு ஆளானார்கள். கொடுமைகளுக்கு எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட மக்களினம்-மகர். மாங் ஜாதியினர் வீதிகளில் பகலில் நடக்க முடியாது; நடக்கவும் கூடாது. ஏனெனில் அவர்களின் நிழல் பார்ப்பனர் களுக்குத் தீட்டாகும். பார்ப்பன பேஷ்வாக்கள் ஆட்சியில் பார்ப்பனீய ஆதிக்கம் மிக வலிமையுடன் வேரூன்றியிருந்தது. மராட்டியத்தில் பிறந்த மகாத்மா புலேவின் கதை" என்று அத் திரைப்படத்தில் கூறப்பட்டிருக்கும்.

1848இல் புனாவில் ஒரு 'சூத்திர' வகுப்பைச் சேர்ந்த படித்த இளைஞன், தன்னுடைய பார்ப்பன நண்பனின் திருமண மாப்பிள்ளை வரவேற்பில் கலந்து கொண்டான். அப்பொழுது அவ்விளைஞன் மாலி இனத்தைச் சார்ந்த சூத்திரன் என்று பார்ப்பனர்கள் கண்டு கொண்டனர். அவர்கள் கடுஞ் சீற்றத்துடன் அவனைப் பார்த்து 'ஏய் மாலியே-சூத்திரனே, எங்க ளுடன் சரிசமமாக நடந்து வர உனக்கு எவ்வளவு துணிச்சல்? ஜாதிக்கட்டுப்பாடுகளை மறந்து விட்டாயா? ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டால், நீ மேலானவன் ஆகிவிட முடியுமா? பிரிட்டிஷ் காரர்கள் உன்னைப் போன்ற சூத்திரர்களை மனம்போன போக் கில் நடக்கவிடுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட் டோம்! மரியாதையாக ஓடிவிடு' என்று கூறி அவமானப் படுத்தி, ஊர்வலத்திலிருந்து துரத்தி விட்டனர்.

அவ்விளைஞன் இச்சம்ப வத்தைக் குறித்து ஆத்திரமுடன் தன் நண்பர்களிடம் விவரித்தான். நண்பர்கள், 'நாம் சூத்திரர்கள், பிராமணர்களோடு சமமாக எப்படி நடந்து வர முடியும்? உனது நல்லகாலம் உன்னை அடித்து உதைக் காமல் விட்டுவிட்டனர்! பேஷ்வா ஆட்சிக்காலமாக இருந் திருந்தால், உன்னைக் கலகக்காரன் என்று முத்திரை குத்திக் கடுமை யாகத் தண்டித்திருப்பார்கள், நல்லவேளை, பிரிட்டிஷ் ஆட்சி நடைபெறுகிறது! தப்பித்தாய் தண்டனையிலிருந்து!' என்று கூறி, நண்பர்கள் அவனை சமாதானப் படுத்த முயன்றார்கள். ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை.

பின் தன் தந்தையிடமும் கூறி வருந்தினான். 'பார்ப்பனர்களை விரோதித்துக் கொள்ளாதே! அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையிலுள்ளவர்கள். அவர்கள் என்ன வேண்டு மானாலும் செய்ய வல்லவர்கள். ஆட்சியதிகாரம் அவர்கள் கையில். எனவே அவர் களை அனுசரித்துப் போய்விடு' என்று தந்தையும் அறிவுரை புகன்றார். மகன் எரிமலையாக மாறினான்.

அவமானமடைந்த அந்த இளைஞன் தான், சனாதன-பார்ப்பனீய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய  சமூகப் போராளியான மகாத்மா ஜோதி ராவ் புலே.

அவரின் மறைவு நாள் (1890) இன்று.

- மயிலாடன்
28.11.19

வெள்ளி, 5 நவம்பர், 2021

சும்மா இருந்தால் மாற்றம் வந்திருக்குமா?

விருப்பு, வெறுப்பு இல்லாமல் சிந்தித்து பாருங்கள்...be unbiased ,impartial etc

பெண்களை 
#உடன்கட்டை ஏற்றி 
கொளுத்திக்  கொல்வது
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா ?

#பால்யவயதில்_திருமணம் 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
பால்ய விவாக 
தடுப்பு சட்டம் 
வந்திருக்குமா ?

#வர்ணாசிரம_சாதி_ஏற்றத்தாழ்வுகள் 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைவரும் 
சட்டதின் முன் சமம் 
என்னும் உரிமை கிடைத்திருக்குமா??

கணவன் இறந்தால், 
மனைவிக்கு 
#மொட்டை_அடித்து, 
முக்காடு போட்டு, 
மூலையில் 
உட்க்காரவைப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா ?

பெண்களுக்கு 
பொட்டுகட்டி 
கோவில் 
#தேவதாசியாக்குவது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா ?

பார்ப்பனர் 
அல்லாதோர்
#படிக்கக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
நாட்டின் 
பெரும்பான்மையான 
மக்கள் படித்திருக்க
முடியுமா??

சில பிரிவு பெண்கள் 
#மேலாடை_உடுத்தக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைத்து 
பெண்களுக்கும் 
மேலாடை அணிய 
உரிமையுண்டு 
என்ற சட்டம் 
வந்திருக்குமா ?

#அடுப்பூதும்_பெண்களுக்கு_படிப்பெதற்கு 
என்பது
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
பெண் கல்வி சாத்தியப்பட்டிருக்குமா ?

திருமணம் 
முடிந்த பெண், 
முதல் நாள் 
#பார்ப்பன_நம்பூதிரியுடன்தான்_முதலிரவு கொள்ளவேண்டும் 
என்பது 

இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால்,
இந்த இழி பழக்கம்
மறைந்திருக்குமா??      

ஒரே மத அமைப்பு 
என்று சொல்லிக்கொண்டு, 
ஒரு பிரிவின் மீது 
#தீண்டாமை 
கடைபிடிப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தீண்டாமை தடை சட்டம்
வந்திருக்குமா ?

ஒரே மத அமைப்பு 
என்று சொல்லிக்கொண்டு,
எங்கள் 
#கோவிலினுள்_நுழையாதே என்று மக்களின் ஒரு பிரிவினரை
தடுப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைத்து சாதிக்கும் 
ஆலய நுழைவு
சாத்தியப்பட்டிருக்குமா ?

#பார்ப்பனர்கள்_கடல்தாண்டி_போகக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
இன்றைய நிலையில்
லட்சகணக்கான 
பார்ப்பனர்கள் 
வெளிநாடுகளில் 
வசிக்க, 
வேலைசெய்ய 
முடியுமா ?

#உலகம்_தட்டையானது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
உலகம் 
உருண்டையானது 
என்பது 
நிருபிக்கப்பட்டிருக்குமா ?

#பூமியைத்தான்_சூரியன்_சந்திரன் 
போன்றவை 
#சுற்றிவருகின்றன 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அறிவியல் 
வளர்ந்திருக்குமா ?

#ராகுகேது 
என்ற #பாம்புகள் 
சூரியனையும் 
சந்திரனையும் 
விழுகுவதால்தான் 
#கிரகணங்கள் 
உருவாகின்றன 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
வான்வெளி அறிவு
வளர்ந்திருக்குமா ?

#பிராத்தனைசெய்தால்_குணமாகும் 
என்பது 
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால், 
மருத்துவ அறிவியல்
வளர்ந்திருக்குமா ?

#தமிழ்_நீசபாஷை, 
தமிழில் கடவுளை 
வழிபடக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தமிழ் அர்ச்சனை 
என்னும் சட்டம் 
நடைமுறைக்கு 
வந்திருக்குமா ?

யார் சொல்லியிருந்தாலும் எதைச் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும், அதை நம்பாதே !
உன் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிவு பெறு என்று
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தைப் பெரியார்  கூறியதால் தான் மேலே  உள்ள அனைத்தும் சாத்தியமானது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது.

அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய அய்யப்பன் இன்று LED விளக்கில் ஜொலிக்கிறான், இப்போது எங்கு போனது உங்கள் 'ஆகம விதி' ?

48 நாள் விரதமிருந்த உங்களது Vargin சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி , அன்று மாலையே Tasmac மலையேறும் போது எங்கேடா  போனது 'உங்க ஆகம விதி' ?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோஷத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 
'ஆகம விதி' ?

இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு Android phone களை அனுமதிக்கிறது ?

இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் உங்களது
"ஆகம விதி"
பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் ஒன்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது....

உங்களது அய்யப்பனுக்கு பெண்கள் ஏற்புடையவர்கள் அல்லவெனில் 
எங்களது தமிழ்ச் சமூகத்திற்கே அய்யப்பன் தேவையே இல்லை!

Rangasamy Rajaraman
-கட்செவி வழியாக

செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஒரு தெய்வத்துக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட கைகள் இருக்க முடியுமா?

 

தேவதத் பட்நாயக்

[கி.முநூறாம் ஆண்டைச் சேர்ந்த நான்கு கைகள் கொண்ட ஒரு இந்து கடவுள் விஷ்ணுவின் தெய்வச் சிலை மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மல்ஹார் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது]

1800 ஆண்டுகளுக்கு முன்னர் வார்க்கப்பட்ட குஷான் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்து நாணயங் களில்நிறைய கொம்புகளைக் கையில் வைத்திருக்கும் ஒரு பெண்ணின் உருவத்தை நம்மால் காண இயலும்ரோமாயர்களின் பெண்தெய்வம் ஃபார்சுனாவுடனும் (Fortuna), கிரேக்கர்களின் பெண் தெய்வம் டைச் சுடனும் (Tyche),  மத்திய ஆசியாவைச் சேர்ந்த அர்டாச்ஷோவுடனும் (Ardochshoபுத்த மதத்தைச் சார்ந்த ஹரிதியுடனும்  (Haritiஇந்து மத பெண் கடவுள் லட்சுமி என்ற இந்த பெண் உருவம் அடை யாளம் காணப்படுவதை நாம் பார்க்கலாம்தொடக்க கால புத்த ஸ்தூபங்களிலும்பதக்கங்களிலும் லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்இன்றைய இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் காணப்படும் உருவத்தைப் போலவேதாமரை மலர்கள் நிரம்பியிருக்கும் ஒரு குளத்தில்யானைகளால் சூழப்பட்டு,  ஏராளமான நகைகளால் அலங்கரிக்கப்பட்ட  லட்சுமி நின்று கொண்டு இருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளதுஆனால் இவற்றுக்கிடையே மிகமிக முக்கியமானதொரு வேறுபாடு உள்ளது.  லட்சுமியின்  பழைய சித்திரத்தில் இரண்டு கைகளைக் கொண்டவராகத்தான் அவர் காட்டப்பட்டுள்ளாரே யன்றிஇன்றைய உருவங்களில் இருப்பது போல  நான்கு கைகளைக் கொண்டவராகக் காட்டப்பட வில்லை.

1,700 ஆண்டுகளுக்கு முன்னர் குப்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்மக்களிடையே புத்த மதத்தின் செல்வாக்கும் புகழும் பின்னுக்கு தள்ளப்பட்டபோது,   புராணங்களின் மூலம் தங்களுக்கு ஒரு மாற்று விளக்கத்தை அளிக்கும் வேதகால வழியை மறு படியும் நடை முறைப்படுத்தியபோதுதான் இரண்டு கைகள் கொண்ட லட்சுமியின் உருவம் நான்கு கைகள் கொண்ட லட்சுமியாக உருவ மாற்றம் பெற்றதுஇந்த மாற்றம் குஷான் வம்ச அரசர்களின் ஆட்சிக் காலத் தொடக்கத்திலேயே தொடங்கியது.  இந்து கலையி னால் நம்பத் தகுந்ததொரு வழியில் ஏற்பட்ட திருப்பம்நான்கு கைகள் கொண்ட இத்தகைய தெய்வங்களின் எழுச்சியினைக் குறிப்பதாக அமைந்தது.

இரண்டுக்கும் மேற்பட்ட

கைகள் இருக்கவில்லை

இந்தியாவில் முதன் முதலாகக் கலை என்பது ஹரப்பாவில் இருந்து தோன்றியதுதான்இங்குதவம் செய்யும் மனிதர்களின் உருவங்கள் அல்லது புலியிடமிருந்து தப்பி ஓடும் மனிதர்களின் உருவங்கள்அல்லது எருதுகளின் மீது தாவி ஏறும் மனிதர்களின் உருவங்கள்ஊர்வலமாகப் பெண்கள் செல்லும் உருவங்கள்அல்லது வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கூறி முடிக்கும் மனிதர்களின் உருவங்கள் ஆகிய வற்றை நாம் பார்க்கலாம்இந்த உருவங்களில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இரண்டு கைகள் மட்டும்தான் இருந்தனஹரப்பாவின் காலத்துக்குப் பிறகு 2,000 ஆண்டுகள் கழிந்த பிறகுகுறிப்பிடத் தக்க அளவில் நாம் காந்தாரக் கலையையும் மதுரா கலையையும் உருவாக்கிப் பின்பற்றி வந்துள்ளோம்பெரும்பாலும் அவற்றில் உள்ளவைபுத்தரின் வாழ்க்கை வரலாற்றில் இருக்கும் கதைகளைக் கூறுவதாகவோ அல்லது ஜடகா கதைகளில் இருந்து உற்சாகம் பெற்ற நாடோடிக் கதைகளாகவோ இருப்ப வையாகும்மதுரை கலையில் ஒரு புத்தகத்தைக் தனது கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் சரஸ்வதியின்  தொடக்க கால உருவத்தை ஒரு ஜைனர் கோயில் இடத்தில் இருந்து பார்க்க முடிகிறதுஅவருக்கும் இரண்டு கைகள் மட்டுமே இருக்கின்றனகுதிரைகளின் சிறகுகள்தலைகள் மற்றும் உடல்கள் கொண்ட விண்ணிலிருந்து வந்தது போன்ற உயிரினங்களை இங்கு நாம் காண முடிகிறதுஇவை கிரேக்க மற்றும் பெர்சியன் கலை களின் செல்வாக்கினை  பெற்றிருந்தது என்பது தெளி வாகத் தெரிகிறதுஆனால் நான்கு கைகள் கொண்ட எந்த உயிரினத்தையும் அங்கு நம்மால் காண இயலவில்லை.

இந்து கடவுள்களின் தொடக்க கால உருவங்கள் நாணயங்கள் மீது காணப்படுகிறதுகி.மு.200  ஆம் நுற்றாண்டை சேர்ந்த இந்தியகிரேக்க நாணயங்களில் சக்கரத்தை ஏந்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் படங்கள் காணப்படுகின்றனஅவருக்கும் இரண்டு கைகள்தான் உள்ளனகி.பி.200 ஆம்   ஆண்டில் அதாவது 2ஆம் நூற்றாண்டில் குஷான் வம்ச அரசர் களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் திரிசூலம் ஏந்திய சிவனின் உருவம் ஒன்று காணப்படுகிறதுஅதன் பல உருவங்களில் அவருக்கு நான்கு கைகள்  இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளதுஆனால்ஆந்திரப் பிரதேசத்தில் குடிமல்லம் என்ற இடத்தில் கிடைத்த கி.மு. 300 ஆம் ஆண்டைச் சேர்ந்த காலத்திய மிகப் பழைய சிவலிங்க உருவத்துக்கு இரண்டு கைகள்தான் உள்ளனஒரு எருமையைக் கொல்வது போன்றகுஷான் வம்ச அரசர்கள் காலத்தைச் சேர்ந்த தொடக்க கால துர்காவின் உருவத்தை நம்மால் காண முடிகிறதுஅந்த துர்கா உருவத்திற்கும் பல கைகள் உள்ளனதென்மேற்கு சீனாவில்  இருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்த குஷான் வம்சத்தினருக்கு எந்த ஒரு மதத்தின் சார்பும் இருக்கவில்லைஅதனால்தான் அவர்களது சாம்ராஜ்யத்தின் மேற்கத்திய எல்லை ஓரத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள்  கிரேக்கரோமானியசைதின்ய செல்வாக்கு பெற்றவையாகவும்,   அவர்களது சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லை ஓரத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள்  புத்த மதம்மற்றும் இந்து மதங்களின் செல்வாக்கு பெற்றவையாகவும் இருந்தனகுப்தர் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத் தில் இருந்த புத்த மத செல்வாக்கும் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறையத் தொடங்கியது.

மத்திய பிரதேச மாநில மல்ஹார் என்ற இடத்தில் இருந்து கிடைத்தநான்கு கைகள் கொண்ட விஷ்ணு  உருவம் ஒன்றுகி.மு. 100 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தமிகமிகப் பழைய இந்து  தெய்வ உருவ வரைக் கலை என்று காட்டுகிறதுகுப்தர் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த தியோகர் இந்து கோயில் ஒன்றில் இது வெகு வெளிப்படையாகத் தெரிவதாக இருந்தது.  நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவைகருட வாகனத்தில் பறந்து செல்வது போலவும்பாம்புப் படுக்கையில் படுத்திருப்பது போலவும்,  ஒரு ஆசிரியராகவும்மூன்று வடிவங்களிலும் நாம் காணலாம்அவர் படுத்திருக்கும்போது லட்சுமி அவரது கால் பக்கம் உட்கார்ந்து இருப்பதாகக் காணப் படுகிறதுஆனால்லட்சுமிக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன.

தெய்வ வடிவங்களுக்கு இவ்வாறு பல கைகளும்பிற்காலத்தில் பல தலைகளும்  முளைக்கச் செய்த காரணத்தால்,  சராசரி மனித உயிர்களில் இருந்து இயற்கைக்கு மாறான உயிரினங்கள் வேறுபடுத்திக் காட்டப்பட்டனபுத்த மதக் கலையில்பிரம்மாவும்இந்திரனும் புத்தரை வணங்குவது போலவே பெரும்பாலும் காட்டப்பட்டுள்ளதுஅவர்கள்  ஒரு சாதாரண அரசராகவோ அல்லது பூசாரியாகவோ இருக்கக்கூடும் என்பதை அறிந்து கொள்வது ஒருவரால் எவ்வாறு முடியும்பிரம்மாவின் தெய்வீக அந்தஸ்தையும்இந்து மத வேர்களைப் பற்றியும் உறுதி செய்வது போல பிரம்மா நான்கு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார்தொடக்க கால ஜைனக் கலையில்,  தீர்த்தங்கர ரிஷபதேவர் நான்கு திசைகளையும் எதிர்கொள்வது போன்ற நான்கு உருவங்களை நாம் காண்கிறோம்ஆனால்இந்து கலையிலோ,  சிவனின் தலையை நான்கு பக்கங்களிலும் காட்டும் சதுர்முக லிங்கத்தை நாம் காண்கிறோம்ஜைனக் கலையில்,  நான்கு கைகள் கொண்ட யக்சர்களையும் யட்சிணிகளையும் நாம் காணலாம்ஆனால்தீர்த்தங்கரருக்கு எப்போதுமே இயற்கைக்கு மாறானஇயற்கைக்கு மீறிய வடிவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லைஅவரது கணுக்கால்கள் வழக்கத்தை விட சற்று பெரிதாக முழங்கால் வரை இருந்தனஅதுவே அவரது சிறப்புக்கான அடை யாளம்.

தெய்வச் சிலைகள் எவையும்

இங்கு இருக்கவில்லை

பல கைகள்தலைகள்கால்கள் கொண்ட ஒரு கடவுள் என்ற கருத்து முதன் முதலாக வேத இலக்கியத்தில் காணப்படுகிறதுமேலும் அது பகவத் கீதையிலும் விவரிக்கப்பட்டுள்ளதுஅதில் கிருஷ்ணர் தனது பேருருவை எடுத்து,  தனது வடிவை விரிபுடுத்திக் கொண்டும்தனது தலைகள்கைகள்கால்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவி நிற்கிறார்வேதகால பூசாரிகள் தங்கள் கடவுள்களை மனக் கண்ணினால் கண்டனரே அன்றிதங்கள் தெய்வங்களை கல் அல்லது உலோகத்தில் சிலைகளாக ஆக்கிக் கொள்ளவில்லைஉள்ளூர் பழங்குடி மக்கள் அவர்களது கடவுள்களுக்கு வடிவம் அளித்தனர்என்றாலும்பாறைகள்மரங்கள்ஆறுகள்உணவு மற்றும் தண்ணீரால் நிரப்பப்பட்ட  சட்டிகள்கூடைகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் தெய்வங்களை அடையாளம் கண்டு வணங்கினர்மனிதர்களின் உடல் அமைப்பும் தன்மையும் கொண்ட கடவுள்கள் மனித வடிவில் வந்தது (அவதாரம் எடுத்தது)  வெகு காலத்துக்குப் பின்னர் நேர்ந்ததுபலதலைகள்கைகள் கொண்ட கடவுள்களின் உருவங்கள் வந்தது அதற்கும் வெகு காலத்துக்கு பின்னர் நேர்ந்ததுமாயோன்சீயோன்பெருமாள் போன்ற கடவுள்களைப் பற்றி ,  அவர்களது உடல் நிறம்அமைப்புஅவர்களது வாழ் விடம்அவர்களது பதாகைகள்புனித விலங்குகள் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளனஎன்றாலும்பல கைகள்  இருந்ததைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் அவற்றில் இல்லை.

பல தலைகளும்கைகளும் கொண்ட இயல்புக்கு மாறான உயிரினங்களைப் பற்றிய கருத்து முதலில் மஹா யானாவாலும் பின்னர் தந்திரிக் பள்ளிகளாலும் புத்தமத கலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால்இந்த வடிவம்நிர்வாண நிலையை இன்ன மும் அடையாத போதிசத்துவருடன் தொடர்பு படுத்தப்பட்டதுதுன்பற்றுக் கொண்டிருக்கும்  பிரபஞ்சத்தின் பல உயிர்களுக்கு உதவுவதற்காக பல தலைகளையும்கைகளையும் அவர் முளைக்கச் செய்தார்புத்தரைப் போல நிர்வாண நிலையை அவர் அடைந்துவிட்டால்அவர் மிகப் பெரிய வடிவத்தைப் பெறக்கூடும்என்றாலும் அவர் இரண்டு கைகளை மட்டுமே வைத்திருந்தார்.

சரஸ்வதி என்று அடையாளப்படுத்தப்பட்ட பெண் தெய்வம் சாரதாவை வழிபடுவதை ஆதி சங்கராச்சாரியாஏறக்குறைய 12 நூற்றாண்டுகளுக்கு முன்பு  உருவாக்கி நிலைப்படுத்தியதாகக் கூறப்படு கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தப் பெண்ணின் அடையாளங்கள்அவர் நான்கு கைகள் கொண்டவர் என்று காட்டுகிறதுஇந்த மர்மத்தை எவ்வாறு நாம் முடிவுக்குக் கொண்டு வரமுடியும்சங்கரரின் செல்வாக்கினால் இந்துவாக ஆன புத்தமத பெண் தெய்வமா அவர்பிரசன்ன புத்தா அல்லது ரகசிய புத்தர் என்று அவரது எதிர்ப்பாளர்களால் விவரிக்கப்படுபவர் சங்கரர்இந்திய மண்ணில் இருந்து புத்த மதத்தையே மறையச் செய்வதில் ஒரு மிக முக்கியமான பங்களிப்பை சங்கரர் அளித்துள்ளார்எதையுமே நிச்சயமாக எப்போதுமே நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

ஆனால்நாம் இன்று அறிந்திருப்பதெல்லாம்,  லட்சுமி முதல் கணேசர்  மற்றும் சரஸ்வதி வரையிலான கடவுள்கள் எல்லாம் எப்போதுமே நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர்ராமர் அல்லது கிருஷ்ணர் போன்ற  மனித வடிவில் அவதாரங்கள் எடுத்த போது அவர்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே இருந்தனகிறித்துவக் கலையில் தெய்வத்தின் தலையைச் சுற்றி எழுந்த ஒளிவட்டத்தின் வேலையை இந்து கலையில் நான்கு கைகள் செய்கின்றனஅதாவது,  யார் தெய்வீகமானவர்யார் இயல்புக்கு மேலானவர்இயற்கைக்கு மாறானவர்,  மற்றும் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பதை பார்ப்பவர்களிடையே விரைவில் நிலைநாட்டும் வேலையே அது.

நன்றி: 'தி இந்து' 10-10-2021

தமிழில் : ..பாலகிருட்டிணன்