_*Life with mobile*_
தினமும் செய்ய வேண்டியவை
1) சோகத்தை ~ *Delete* செய்யுங்க
2) சந்தோஷத்தை ~ *save* செய்யுங்க
3) சொந்தங்களை~ *recharge* செய்யுங்க
4) நட்புகளை ~ *Download* செய்யுங்க
5) எதிரிகளை ~ *Erase* செய்யுங்க
6) உண்மையை ~ *Broadcast* செய்யுங்க
7) துக்கத்தை ~ *switch off* செய்யுங்க
8) வேதனையை ~ *Not reachable* செய்யுங்க
9) பாசத்தை ~ *In coming* செய்யுங்க
10) வெறுப்பை ~ *out going* செய்யுங்க
11) சிரிப்பை ~ *In box* ல் வெய்யுங்க
12) அழுகையை ~ *out box* ல் வெய்யுங்க
13) கோபத்தை ~ *Hold* செய்யுங்க
14) இன்முகத்தை ~ *send* செய்யுங்க
15) உதவியை ~ *ok* செய்யுங்க
16) இதயத்தை ~ *vibrate* செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் *Ring tone* சந்தோஷமாக ஒலிக்கும்
*Have a relaxing day everyday* 💐 *Ğöøď* *MöŔñìÑğ* *Ťö* *Æłľ* 😎
செவ்வாய், 29 நவம்பர், 2016
தினமும் செய்ய வேண்டியவை
ஞாயிறு, 27 நவம்பர், 2016
பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்
மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை.
செவ்வாய், 22 நவம்பர், 2016
அண்ணா பதில் சொல்கிறார்
மதத்தில் இடமில்லை அறிவுக்கு
ஞாயிறு, 20 நவம்பர், 2016
மகிசா சுரன் யார்?
முத்து.செல்வன்
02-_02_2016)
வியாழன், 10 நவம்பர், 2016
‘‘காகித ஓடம் கடல் அலை மேலே...!''
இம்மாதம் (நவம்பர்) 8 ஆம் தேதி இரவு மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய திடீர் உரை, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு செல்லாது; நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். (கிஜிவி) வங்கி வசதிகள் இயங்காது; நாளை (9.11.2016) வங்கிகள் இயங்காது. அதற்கு மறுநாள் முதல் இயங்கும்.
நாளை (10.11.2016) பழைய இந்த நோட்டுகளை, வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; நேற்றுவரை பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பழைய நோட்டுகளை - இந்த இடைக்காலத்தில் கொடுத்து செலவு செய்தால், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அறிவித்தார்!
இந்த கருப்புப் பணவேட்டையில் திமிலங்கள் சிக்குமோ என்னவோ தெரியவில்லை; நடுத்தர ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், விவசாயத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்கள் இவர்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு இந்த ‘திடீர் அறிவிப்பு’ ஒரு பெரும் ‘சோதனையாகவே’ ஆகிவிட்டது!
நேற்று கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய் சாப்பாட்டுக் கடையில் கொடுத்து, சிற்றுண்டியோ, சாப்பாடோ கூட சாப்பிட முடியாத நிலை; காரணம், கடைக்காரர்கள் வாங்க முடியாத நிலை. பணமிருந்தும் பட்டினி!
மருந்து கடைகளிலும்கூட பற்பல இடங்களில் தெளிவற்ற நிலை. சுங்கச் சாவடிகளில் ஏகப்பட்ட தகராறு. நல்வாய்ப்பாக இன்று முதல் இரண்டு நாள்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!
அழுகும் பொருள் விற்பனை யாளர்களுக்கு ஏகப்பட்ட நட் டம்; காரணம் கையில் பணம் உள்ளவர்களால் - 500 ரூபாய் நோட் டினைக் கொடுத்தால் ஏற்க மறுக்கும் நிலை இருப்பதால், விற்பனையோ இல்லை. மீன் விற்காமல் கண்ணீர் கடல்தான்!
கையில், பையில் உள்ள பணத் தால் பசி தீர்க்க முடியவில்லை; சில மணிநேரத்தில் அது வெறும் ‘காகிதமாகி’ மதிப்பிழந்து விட்டது!
குறுக்கு வழிகளிலோ, லஞ்சம் பெற்று கோடியாய் குவித்தவர்கள் நிலை எப்படியோ - அவர்கள் இதற் குள்ளாக மாற்றுவழி கண்டுபிடிக் காமலா இருப்பார்கள்!
என்றாலும், சில நாள்களுக்கு முன் நாம் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனை’ கட்டுரையில் ‘பணத்தால் எதனையும் வாங்க முடியுமா?’ என்று கேட்டிருந்தோம். பதில் கிடைத்துவிட்டது பார்த்தீர்களா?
அதற்குப் பிறகு நம் மக்கள் இப்போது ‘காகித ஓடம் கடல் அலைமேலே’ என்பதுபோல, கையில் பணம் இருந்தும், வயிற்றில் பசி, மனதில் வேதனை என்பனவற்றை அனுபவித்துக் கொண்டுள்ளனர்!
மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் பட்டினி கிடக்கிறார்கள் என்றவுடன், மனித நேயம் மிகுந்த திருநெல்வேலி உணவு விடுதியாளர் ஒருவர் அத்தகையவர்களுக்கு இலவசமாக கட்டணமின்றி உணவு அளித்துக் காப்பாற்றியுள்ளார் என்ற செய்தி மனிதநேயம் வற்றிப் போகவில்லை என்பதை உலகுக்குத் துல்லியமாய் உணர்த்தியது!
இதற்கிடையில், நேற்றுமுன்தினம் 8 ஆம் தேதி விடிவிடிய நகைக் கடைகளில் இடையிலாத வியாபாரம் - தங்கம் விலை திடீர் ஏற்றம்!
அப்போது பொன் மேலும் மின் னியது; பணம் சிறுத்தது, சிணுங்கியது!
ஒரு சில மணிநேரத்தில், மக்கள் பொருளாதார ‘சூறைப்புயலில்’ சிக் கியதுபோல் உணர்ந்த நிலை!
பின்னால் ஏற்படப்போகும் ஆரோக்கியத்துக்கு இப்போது இத்தகைய பொருளாதார ‘விக்கல்கள்’ தவிர்க்க இயலாதவை என்று பொரு ளாதார நிபுணர்கள் அலசி ஆராய்ந்து கூறினாலும், அன்றாடத் தொழில் வருவாயில் வாழும் அடிமட்ட மக்கள் - திடீர் என்று பணம் வெற்று காகிதமாய் மதிப்பிழந்து விட்டதே என்று அவலத்தில் சிக்கி அழுது கொண்டே கூறுகிறார்கள்.
எப்படியானாலும், பணத்தைச் சேர்த்துக் குவித்து, கணக்கில் காட்டாத சுறாக்களுக்கும், திமிலங்களுக்கும் சரியான வலையாய் அமைந்தால்தான் எண்ணிய இலக்கை எட்ட முடியும்!
இடையில் சிக்கி அவதியுறும் நடுத் தட்டு மக்கள் கடல்தான் எப்போதும் போல்! உ.பி.யில் நோட்டு எரிப்பாம்!
என்ன உலகம்! எனவே, குறிக் கோள் இன்றி பணம் பணம் என்று அலையாதீர்! பிறகு இப்படி பணத்திற்கு திடீர் மாரடைப்புபோல் ஏற்பட்டால், அலறாதீர் என்பதே இந்த பணத்தாக்குதல் மூலம் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகும்!
புரிந்துகொள்ளுவோமாக!
-விடுதலை,10.11.16
புதன், 9 நவம்பர், 2016
பாதர் எனக்கு ஒரு டவுட்?
😇😇🤔
*மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?*
*பாதர் : கேளு மகனே*
*மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்படி படைத்தார் பாதர்?*
*பாதர் : நல்ல கேள்வி. சுருக்கமாக சொல்கிறேன் கேள் மகனே*
*முதல் நாள் - பகலையும், இரவையும் படைத்தார்*
*இரண்டாம் நாள் - வானத்தை படைத்தார்*
*முன்றாம் நாள் - பூமியில் புல், பூண்டு, மரம், செடிகளையும் படைத்தார்.*
*நான்காம் நாள் - பகலை ஆள பெரிய சுடரான சூரியனையும், இரவை ஆள சிறிய சுடரான சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார்*
*மண்ணாங்கட்டி : பாதர் நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க*
*பாதர் : என்னப்பா உன்னோட பிரச்சனை?*
*மண்ணாங்கட்டி : சூரியனை நான்காம் நாள் படைத்தார் என்று சொல்லுறீங்க பிறகு எப்படி சூரியன் இல்லாம முதல் நாள் பகல் வந்துச்சி?*
*பாதர் : உன்கிட்டே சாத்தான் இருக்கான். சண்டே சர்ச்சுக்கு வா. கொஞ்சம் ஜெபம் செய்தால் சரியா போயிடும்.*☠
😂😂😂😜😜
திராவிட இயக்கம் இந்து மதத்தினை மட்டும்தான் விமர்சிக்குமா ?
பேராசிரியர். சுபவீ :-
திராவிட இயக்கம் இந்து மதத்தினை மட்டும்தான் விமர்சிக்குமா ?
இஸ்லாம், கிறிஸ்தவத்தை விமர்சிக்காதா ?
மதங்களில் காணப்படும் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைகளுக்காக திராவிட இயக்கம் அதை எதிர்ப்பதில்லை. கடவுள் நம்பிக்கையும் , மூட நம்பிக்கையும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது.
இந்து மதத்தின் மீதான கூடுதல் தாக்கம் ஏன் என்றால், அதிலே காணப்படும் வருணாசிரம முறை. அம்முறை இந்து மதத்திற்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு குணம்.
பைபிள் படி, குரான் படி என்றுதான் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். தன் வேதத்தைப் படிக்காதே என்றும், கோயிலுக்குள் நுழையாதே என்றும் அவர்கள் சொல்வதில்லை !
ஆனால் கோயிலுக்குள் நுழையாதே, வேதத்தைப் படிக்காதே என்று சொன்னது இந்து மதம்தான்.
மேக்ஸ்மில்லர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத்தான் தமிழில் மொழிபெயர்த்து எல்லோரும் படிக்கிறார்கள்.
வருணம், அதிலிருந்து சாதி, சாதியிலிருந்து கிளைசாதி, அதிலிருந்து உட்சாதி என நாலாயிரத்துக்கு மேற்பட்ட பிரிவுகளை கொண்டு, ஒவ்வொரு சாதிக்கும் கோயிலில் ஒரு எல்லையை வகுத்து பெரும்பான்மையானவர்களை கோயிலுக்குள்ளேயே அனுமதிக்காத ஒரு மதத்தை எதிர்ப்பதில் என்ன தவறு ?
மற்ற மதங்களில் பிரிவில்லையா ? என்றால்.... இருக்கிறது. இந்து மதத்திலும் சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்று ஆறு பிரிவுகள் உண்டு. இந்த பிரிவுகள் வேறு. சாதி அடுக்குகள் வேறு. நாம் எதிர்ப்பது மதப் பிரிவுகளை அல்ல. சாதி அடுக்குகளையே... !
இந்து மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்று இந்துக்கள் சொல்வார்களேயானால் திராவிட இயக்கத்தினர் இந்து மதத்தை எதிர்க்கப் போவதில்லை.
சாதிகள் பிறப்பின் அடிப்படையில் அல்ல, குணத்தின் அடிப்படையில்தான் பிரிக்கப் பட்டதாக கீதையில் கிருஷ்ணரே சொல்லிவிட்டார் என்று சொல்வீர்களேயானால், அதே கீதையில்தான் மனிதர்களுக்கான குணத்தை நானே படைத்தேன் என்று இருக்கிறது... மனிதனைப் படைத்து , அவனுக்கு குணத்தையும் படைத்து, குணத்தின் அடிப்படையில் இழிவையும் படைத்த இந்துக் கடவுளை நாம் ஏற்பது சரியா ?
ராமரே சத்திரியர் தானே ? கிருஷ்ணரே சூத்திரர்தானே ? என்று பதில் சொல்வீர்களேயானால் இந்த இரண்டு கதாபாத்திரத்தையும் இயக்கியவன் யார் என்று பதில் சொல்லுங்களேன்....
மத அடிப்படையில் சிறுபான்மை மக்களின் தீவிரவாதம் என்பது இந்தியாவில் எதிர்விணையாகத்தான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அதுவும் கண்டிக்கப் படவேண்டியதே.
இந்திய சமூகத்திற்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் இந்து மத தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும்...
ஆகவே திராவிட இயக்கம் இந்து மதத்தின் மீது முன்வைக்கும் விமர்சனம் நியாயமானதே....
-பேராசிரியர். சுபவீ!
ஞாயிறு, 6 நவம்பர், 2016
பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு சதுராடும் ஆரியம்!
வங்க மொழி - மேற்குவங்கம், மற்றும் அஸ்ஸாமில் பேசப்படும் மொழி.
சமஸ்கிருத வாரம் கொண்டாட 470 கோடி ரூபாயை 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளது
2015 ஆம் ஆண்டு ஜூலையில் பாங்காக்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டிற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பீகார் தேர்தலை ஒட்டி பீகார் மாநிலத் தில் சமஸ்கிருத்தில் சாமியார்களை விட்டு பிரச்சாரம் செய்த பாஜக, தேர்தல் விளம்ப ரங்களை சமஸ்கிருதத்திலேயே கொடுத்தது.
சமஸ்கிருத்தை பள்ளிகளில் கற்பிக்கும் போது ஆசிரியர் சமஸ்கிருத்திலேயே பேசவேண்டும். மாணவர்களுக்கு சமஸ் கிருதத்தில் பேசி அதற்கான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும். பள்ளிக்கூடத்தில் வகுப்பறை, ஆய்வு அரங்கம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களிலும் சமஸ்கிருதம் பேசவேண்டும்
சான்ஸ்கிருதி
உண்மையில் இந்தியாவில் பல இனங்கள், பல பண்பாடுள்ள மக்களாகத்தான் வாழ்கிறார்கள்.
மகிஷன் ஒரு பவுத்த அரசன்
மைசூரு அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியா ளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுமையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலை நகரமான மைசூருவை,
கேள்விகள் இங்கே - பதில்கள் எங்கே?மின்சாரம்
விவசாயம்பற்றி மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?