பக்கங்கள்

செவ்வாய், 29 நவம்பர், 2016

தினமும் செய்ய வேண்டியவை

_*Life with mobile*_
தினமும் செய்ய வேண்டியவை
1)  சோகத்தை ~ *Delete* செய்யுங்க
2)  சந்தோஷத்தை ~  *save*  செய்யுங்க
3)  சொந்தங்களை~ *recharge* செய்யுங்க
4)  நட்புகளை ~  *Download* செய்யுங்க
5)  எதிரிகளை ~  *Erase* செய்யுங்க
6)   உண்மையை ~  *Broadcast* செய்யுங்க
7)  துக்கத்தை ~  *switch off* செய்யுங்க
8)  வேதனையை ~  *Not reachable* செய்யுங்க
9)  பாசத்தை ~  *In coming* செய்யுங்க
10)  வெறுப்பை ~  *out going* செய்யுங்க
11)   சிரிப்பை ~ *In box* ல் வெய்யுங்க
12)  அழுகையை ~ *out box* ல் வெய்யுங்க
13)  கோபத்தை ~  *Hold* செய்யுங்க
14)  இன்முகத்தை ~  *send* செய்யுங்க
15)  உதவியை ~  *ok* செய்யுங்க
16)  இதயத்தை ~  *vibrate* செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் *Ring tone* சந்தோஷமாக ஒலிக்கும்
*Have a relaxing day everyday*        💐 *Ğöøď* *MöŔñìÑğ* *Ťö* *Æłľ*  😎

ஞாயிறு, 27 நவம்பர், 2016

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்


பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத்கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாகத்தினை  விளைவித்தது !
திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண் டென்று நிலைநாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத்தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.
மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் மகாத் அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.
புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில பாராளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !
- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.     மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.
- தந்தை பெரியார்

மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.
- தந்தை பெரியார்
-விடுதலை,
-விடுதலை,26.6.15

செவ்வாய், 22 நவம்பர், 2016

அண்ணா பதில் சொல்கிறார்


(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)
கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?
பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.
ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.
ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.
சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.
பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.
அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.
இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!
-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947
-விடுதலை,5.6.15

மதத்தில் இடமில்லை அறிவுக்கு


பொதுவாக, மதம் சில கொள்கை களை எடுத்துக்கூறி இதுதான் உண்மை, இதைத்தான் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் பலாத்காரமாக கட்டாயப்படுத்தியும் சாதிக்க ஆரம் பித்தது.
மதத்துக்கு யாவற்றையும் படித்து ஆராய்ந்து தேடித் தெரியக்கூடிய அறிவு என ஒன்று இருப்பதைப் பற்றி கவலை கிடையாது. விஞ்ஞானம் அய்யத்தோடும் தயக்கத்தோடும் பேசுகிறது.
ஏனெனில் விஞ்ஞானத்தின் தன்மையே இதுதான் உண்மை என்று எதையும் சாதிக்க இயலாது. பகுத்தறிவின் துணை கொண்டு எதையும் நன்கு சோதித்து ஆராய்ந்து பார்த்த பிறகே அது ஒன்றை முடிவு கட்ட இயலும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையுமே நான் விரும்புகிறேன் என்பதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை.
-நேரு, உலக சரித்திரம் பக்கம் 346
-விடுதலை,5.6.15

ஞாயிறு, 20 நவம்பர், 2016

மகிசா சுரன் யார்?

ஸ்மிருதிரானிக்கு அர்ப்பணம்! மகிசா சுரன் யார்?

முத்து.செல்வன்
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் தில் மாணவர்கள் சிலரால்  மகிசாசுர விழா கொண்டாடப்பட்டதற்கு, நாடா ளுமன்றத்தில் உரையாற்றிய மாந்த வளத்துறை அமைச்சர் சுமிருதி இரானி,  கண்டனம் தெரிவித்த பின்னணியில் இத்தகைய விளக்கங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. (‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நன்றி: பெங்களுரு பதிப்பு
02-_02_2016)
மகிஷா என்பது அன்றைய மகிஷவூர் பகுதியை ஆண்ட மன்னன் பெயர், அவன் புத்த சமயத்தைச் சார்ந்தவன் என்றும் மாந்த மதிப்பை உணர்ந்தவன் என்றும், சமூகநீதிக்காகப் போராடியவன் என்றும் தன் மக்கள் நலனுக்காகவே ஆட்சி புரிந்தவன் என்றும் அசோகபுரம் என்னும் பகுதியில் வாழும் மக்கள் இன்றளவும் அவனைத் தங்கள் முன் னோன் என்று போற்றி வழிபட்டு வருவதாகவும் மைசூரு மாநகர மன்ற உறுப்பினர் புருசோத்தம் கூறியுள்ளார்.
புத்த சமயத்தை சார்ந்து  மக்கள் நலனுக்காகவே ஆட்சி புரிந்த மகி சனைப் பொறுக்கமாட்டாத  பார்ப் பனர்கள் (பூசாரி வகுப்பினர்) அவனுக்கு அரக்கன் (அசுரன்) முத்திரை குத்தி அவனை மகிசாசுரன் என்று அழைத் தனர்.
மகிசவூர் (மகிஷவூர்  நம்முடைய தமிழ் இலக்கியங்களில் எருமையூர் என்றழக்கப்பட்டது) என்பதே இன்று மைசூரு ஆகும். அவனை அழிப்பதற்குப் பல வகைகளிலும் முயன்று  இறுதியில் அவனைக்  கொன்றுவிட்டு சாமுண் டேசுவரி போரிட்டுக் கொன்றதாகக் கூறிவிட்டனர்.
மகிசனுக்கு என்று தனியாகக் கோயில் ஏதுவுமில்லை என்றாலும் அவனுடைய வம்சாவளியினர் என்போர் ஆண்டுதோறும் சாமுண்டி மலைக்குச் சென்று அவனுடைய சிலையை வழி பட்டு வருகின்றனர். முன்னர்  மகாப லேசுவர் மலை என்று அழைக்கப்பட்ட மலை இன்று சாமுண்டேசுவரி மலை என்று அழைக்கப்படுகிறது..  அவனு டைய நல்லாட்சியின் காரணமாகவே இந்த நகரம் மகிசவூர் என்றழைக்கப் பட்டது என்றும் புருசோத்தம் கூறி யுள்ளார்.
மகிசன் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய நல்லாட்சியையும் புகழையும் பொறுக்க மாட்டாத பார்ப்பனரகள் (பார்ப்பனர் கள் என்று வெளிப்படையாகக் கூறாமல், பூசாரி வகுப்பினர்    என்றே     கூறு கிறது) அவனை அரக்கன் என்று அழைத்தது மட்டுமல்லாமல் அவனைச் சூழ்ச்சியால் கொன்றுவிட்டு,
மகிசாசுர மர்த்தன கதையைக் கட்டிவிட்டனர் அந்தக் கதை எந்தவித ஆதாரமும் இல்லாதது என்றும் மகிச என்னும் நூலாசிரியர் சித்தசுவாமி என்பார் கூறியுள்ளார். மேலும் இந்தப் பகுதிக்கு 1449 இல் மகிசவூர் என்று பெயரிடப் பட்டதாகவும் மகிசனுடைய சிலை மகாபலேசுவர் மலையின் முகப்பில் சிக்கதேவராயரின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதென்றும் கூறுகிறார்.
சித்த சுவாமி மண்டியாவில் உள்ள மாவட்டப் பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஆவார். கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் தலித் நல அறங்காப்பகத்தினர் மகிச விழாவைக் கொண்டாடி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மகிச விழாவை  அரசே கொண்டாட வேண்டும் என்னும் வேண்டுகோளையும் முன்வைத்தனர்.
கருநாடகத்தின் பல பகுதிகளின் மகிச வழிபாடு நடைபெறுகின்றது என்றும், அந்தப் பகுதி வேளாண்குடி மக்களின் வேளாண் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும்  எருமை மாடுகள் இன்றியமையாதவை என்பதால் அவற்றையும் மக்கள் வழிபடுகின்றனர்.
அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற மகிசனுடைய பெயரிலும் அது பொதிந்துள்ளது என்றும் இன்றும் அந்தப் பகுதி மக்கள் விழாக்காலங்களில் எருமைத்தலை உருவம் தாங்கிய தலை யணியை அணிந்து கொள்வது வழக்க மாக உள்ளது என்றும் ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக் கழகத்தில் பழங்குடி ஆய்வு மய்யத்தின் தலைவரராகவுள்ள  கே. எம். மேட்ரி கூறியுள்ளார்.
-விடுதலை ஞா.ம.5.3.16

வியாழன், 10 நவம்பர், 2016

‘‘காகித ஓடம் கடல் அலை மேலே...!''

இம்மாதம் (நவம்பர்) 8 ஆம் தேதி இரவு மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய திடீர் உரை, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு செல்லாது; நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம்.  (கிஜிவி) வங்கி வசதிகள் இயங்காது; நாளை (9.11.2016) வங்கிகள் இயங்காது. அதற்கு மறுநாள் முதல் இயங்கும்.

நாளை (10.11.2016) பழைய இந்த நோட்டுகளை, வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; நேற்றுவரை பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பழைய நோட்டுகளை - இந்த இடைக்காலத்தில் கொடுத்து செலவு செய்தால், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அறிவித்தார்!

இந்த கருப்புப் பணவேட்டையில் திமிலங்கள் சிக்குமோ என்னவோ தெரியவில்லை; நடுத்தர ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், விவசாயத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்கள் இவர்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு இந்த ‘திடீர் அறிவிப்பு’ ஒரு பெரும் ‘சோதனையாகவே’ ஆகிவிட்டது!

நேற்று கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய் சாப்பாட்டுக் கடையில் கொடுத்து, சிற்றுண்டியோ, சாப்பாடோ கூட சாப்பிட முடியாத நிலை; காரணம், கடைக்காரர்கள் வாங்க முடியாத நிலை. பணமிருந்தும் பட்டினி!

மருந்து கடைகளிலும்கூட பற்பல இடங்களில் தெளிவற்ற நிலை. சுங்கச் சாவடிகளில் ஏகப்பட்ட தகராறு. நல்வாய்ப்பாக இன்று முதல் இரண்டு நாள்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

அழுகும் பொருள் விற்பனை யாளர்களுக்கு ஏகப்பட்ட நட் டம்; காரணம் கையில் பணம் உள்ளவர்களால் - 500 ரூபாய் நோட் டினைக் கொடுத்தால் ஏற்க மறுக்கும் நிலை இருப்பதால், விற்பனையோ இல்லை. மீன் விற்காமல் கண்ணீர் கடல்தான்!

கையில், பையில் உள்ள பணத் தால் பசி தீர்க்க முடியவில்லை; சில மணிநேரத்தில் அது வெறும் ‘காகிதமாகி’ மதிப்பிழந்து விட்டது!

குறுக்கு வழிகளிலோ, லஞ்சம் பெற்று கோடியாய் குவித்தவர்கள் நிலை எப்படியோ - அவர்கள் இதற் குள்ளாக மாற்றுவழி கண்டுபிடிக் காமலா இருப்பார்கள்!

என்றாலும், சில நாள்களுக்கு முன் நாம் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனை’ கட்டுரையில் ‘பணத்தால் எதனையும் வாங்க முடியுமா?’ என்று கேட்டிருந்தோம். பதில் கிடைத்துவிட்டது பார்த்தீர்களா?

அதற்குப் பிறகு நம் மக்கள் இப்போது ‘காகித ஓடம் கடல் அலைமேலே’ என்பதுபோல, கையில் பணம் இருந்தும், வயிற்றில் பசி, மனதில் வேதனை என்பனவற்றை அனுபவித்துக் கொண்டுள்ளனர்!

மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் பட்டினி கிடக்கிறார்கள் என்றவுடன், மனித நேயம் மிகுந்த திருநெல்வேலி உணவு விடுதியாளர் ஒருவர் அத்தகையவர்களுக்கு இலவசமாக கட்டணமின்றி உணவு அளித்துக் காப்பாற்றியுள்ளார் என்ற செய்தி மனிதநேயம் வற்றிப் போகவில்லை என்பதை உலகுக்குத் துல்லியமாய் உணர்த்தியது!

இதற்கிடையில், நேற்றுமுன்தினம் 8 ஆம் தேதி விடிவிடிய நகைக் கடைகளில் இடையிலாத வியாபாரம் - தங்கம் விலை திடீர் ஏற்றம்!

அப்போது பொன் மேலும் மின் னியது; பணம் சிறுத்தது, சிணுங்கியது!

ஒரு சில மணிநேரத்தில், மக்கள் பொருளாதார ‘சூறைப்புயலில்’ சிக் கியதுபோல் உணர்ந்த நிலை!

பின்னால் ஏற்படப்போகும்  ஆரோக்கியத்துக்கு இப்போது இத்தகைய பொருளாதார ‘விக்கல்கள்’ தவிர்க்க இயலாதவை என்று பொரு ளாதார நிபுணர்கள் அலசி ஆராய்ந்து கூறினாலும், அன்றாடத் தொழில் வருவாயில் வாழும் அடிமட்ட மக்கள் - திடீர் என்று பணம் வெற்று காகிதமாய் மதிப்பிழந்து விட்டதே என்று அவலத்தில் சிக்கி அழுது கொண்டே கூறுகிறார்கள்.

எப்படியானாலும், பணத்தைச் சேர்த்துக் குவித்து, கணக்கில் காட்டாத சுறாக்களுக்கும், திமிலங்களுக்கும் சரியான வலையாய் அமைந்தால்தான் எண்ணிய இலக்கை எட்ட முடியும்!

இடையில் சிக்கி அவதியுறும் நடுத் தட்டு மக்கள் கடல்தான் எப்போதும் போல்! உ.பி.யில் நோட்டு எரிப்பாம்!

என்ன உலகம்! எனவே, குறிக் கோள் இன்றி பணம் பணம் என்று அலையாதீர்! பிறகு இப்படி பணத்திற்கு திடீர் மாரடைப்புபோல் ஏற்பட்டால், அலறாதீர் என்பதே இந்த பணத்தாக்குதல் மூலம் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகும்!

புரிந்துகொள்ளுவோமாக!
-விடுதலை,10.11.16

ஆபத்துப் பாந்தவனா - ஆபத்துத் தந்தவனா?


-விடுதலை,13.6.16

புதன், 9 நவம்பர், 2016

பாதர் எனக்கு ஒரு டவுட்?

😇😇🤔
*மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?*

*பாதர் : கேளு மகனே*

*மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்படி படைத்தார் பாதர்?*

*பாதர் : நல்ல கேள்வி. சுருக்கமாக சொல்கிறேன் கேள் மகனே*

*முதல் நாள் - பகலையும், இரவையும் படைத்தார்*

*இரண்டாம் நாள் - வானத்தை படைத்தார்*

*முன்றாம் நாள் - பூமியில் புல், பூண்டு, மரம், செடிகளையும் படைத்தார்.*

*நான்காம் நாள் - பகலை ஆள பெரிய சுடரான சூரியனையும், இரவை ஆள சிறிய சுடரான சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார்*

*மண்ணாங்கட்டி : பாதர் நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க*

*பாதர் : என்னப்பா உன்னோட பிரச்சனை?*

*மண்ணாங்கட்டி : சூரியனை நான்காம் நாள் படைத்தார் என்று சொல்லுறீங்க பிறகு எப்படி சூரியன் இல்லாம முதல் நாள் பகல் வந்துச்சி?*

*பாதர் : உன்கிட்டே சாத்தான் இருக்கான். சண்டே சர்ச்சுக்கு வா. கொஞ்சம் ஜெபம் செய்தால் சரியா போயிடும்.*☠

😂😂😂😜😜

திராவிட இயக்கம் இந்து மதத்தினை மட்டும்தான் விமர்சிக்குமா ?

பேராசிரியர்.  சுபவீ :-

திராவிட இயக்கம் இந்து மதத்தினை மட்டும்தான் விமர்சிக்குமா ?

இஸ்லாம், கிறிஸ்தவத்தை விமர்சிக்காதா ?

மதங்களில் காணப்படும் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைகளுக்காக திராவிட இயக்கம் அதை எதிர்ப்பதில்லை. கடவுள் நம்பிக்கையும் , மூட நம்பிக்கையும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது.

இந்து மதத்தின் மீதான கூடுதல் தாக்கம் ஏன் என்றால், அதிலே காணப்படும் வருணாசிரம முறை. அம்முறை இந்து மதத்திற்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு குணம்.

பைபிள் படி, குரான் படி என்றுதான் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். தன் வேதத்தைப் படிக்காதே என்றும்,  கோயிலுக்குள் நுழையாதே என்றும் அவர்கள் சொல்வதில்லை !

ஆனால் கோயிலுக்குள் நுழையாதே, வேதத்தைப் படிக்காதே என்று சொன்னது இந்து மதம்தான்.

மேக்ஸ்மில்லர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத்தான்  தமிழில் மொழிபெயர்த்து எல்லோரும் படிக்கிறார்கள்.

வரும், அதிலிருந்து சாதி, சாதியிலிருந்து கிளைசாதி, அதிலிருந்து உட்சாதி என நாலாயிரத்துக்கு மேற்பட்ட பிரிவுகளை கொண்டு,  ஒவ்வொரு சாதிக்கும் கோயிலில் ஒரு எல்லையை வகுத்து பெரும்பான்மையானவர்களை கோயிலுக்குள்ளேயே அனுமதிக்காத ஒரு மதத்தை எதிர்ப்பதில் என்ன தவறு ?

மற்ற மதங்களில் பிரிவில்லையா ? என்றால்.... இருக்கிறது. இந்து மதத்திலும் சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்று ஆறு பிரிவுகள் உண்டு. இந்த பிரிவுகள் வேறு. சாதி அடுக்குகள் வேறு. நாம் எதிர்ப்பது மதப் பிரிவுகளை அல்ல. சாதி அடுக்குகளையே... !

இந்து மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்று இந்துக்கள் சொல்வார்களேயானால் திராவிட இயக்கத்தினர் இந்து மதத்தை எதிர்க்கப் போவதில்லை.
சாதிகள் பிறப்பின் அடிப்படையில் அல்ல, குணத்தின் அடிப்படையில்தான் பிரிக்கப் பட்டதாக கீதையில் கிருஷ்ணரே சொல்லிவிட்டார் என்று சொல்வீர்களேயானால்,  அதே கீதையில்தான் மனிதர்களுக்கான குணத்தை நானே படைத்தேன் என்று இருக்கிறது... மனிதனைப் படைத்து , அவனுக்கு குணத்தையும் படைத்து, குணத்தின் அடிப்படையில் இழிவையும் படைத்த இந்துக் கடவுளை நாம் ஏற்பது சரியா ?

ராமரே சத்திரியர் தானே ? கிருஷ்ணரே சூத்திரர்தானே ? என்று பதில் சொல்வீர்களேயானால் இந்த இரண்டு கதாபாத்திரத்தையும் இயக்கியவன் யார் என்று பதில் சொல்லுங்களேன்....

மத அடிப்படையில் சிறுபான்மை மக்களின் தீவிரவாதம் என்பது இந்தியாவில் எதிர்விணையாகத்தான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அதுவும் கண்டிக்கப் படவேண்டியதே.

இந்திய சமூகத்திற்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் இந்து மத தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும்...

ஆகவே திராவிட இயக்கம் இந்து மதத்தின் மீது முன்வைக்கும் விமர்சனம் நியாயமானதே....

-பேராசிரியர்.  சுபவீ!

ஞாயிறு, 6 நவம்பர், 2016

பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு சதுராடும் ஆரியம்!


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆம் அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இதில் எந்த மாநிலத் திலும் பேசப்படாத மொழி ஒன்று உண்டு என்றால், அது சமஸ்கிருதம் மட்டுமே என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
சமஸ்கிருதம் எங்கே?
இந்தி மொழி - டில்லி, உ.பி., பீகார், அரியானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார் கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.
அஸ்ஸாமி - அஸ்ஸாம் மாநிலத்திலும், அதனை ஒட்டிய வடகிழக்கு மாநிலத்திலும் பேசப்படும் மொழி
வங்க மொழி - மேற்குவங்கம், மற்றும் அஸ்ஸாமில் பேசப்படும் மொழி.
டோகிரி மற்றும் உருது ஜம்மூ-காஷ்மீரில் பேசப்படும் மொழி
குஜராத்தி - குஜராத் மற்றும் வட மகாரஷ்டிராவில் சில இடங்களில் பேசப் படும் மொழி
கன்னடம் - கருநாடகம், மராட்டிய மாநிலத்தின் சிலபகுதிகளில் பேசப்படும் மொழி
கொங்கனி - கோவா மாநிலத்தில் பேசப்படும் மொழி
காஸி - மேகாலயா மாநிலத்தில் பேசப் படும் மொழி
மலையாளம் - கேரளாவில் பேசப்படும் மொழி
மராட்டி - மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி
மணிப்பூரி - மணிப்பூர் மாநிலத்தில் பேசப்படும் மொழி
மிசோ - மிசோராம் மாநிலத்தில் பேசப் படும் மொழி
ஒரியா - ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் மொழி
பஞ்சாபி - பஞ்சாப் மற்றும் அரியா னாவில் பேசப்படும் மொழி
தமிழ்  - தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா வில் பேசப்படும் மொழி
தெலுங்கு மொழி - ஆந்திரா, தெலுங் கானா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பேசப்படும் மொழி
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வரையறுக்கப்பட்ட இந்திய மக்கள் பேசும் மொழிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் சமஸ்கிருதம் இல்லை.
இந்திய அளவில் அது பேசப்படுவ தாகக் கூறப்படும் மக்களின் எண்ணிக்கை வெறும் 14,346 ஆயிரம் மட்டுமே. அதுவும் அன்றாட வாழ்க்கையில் பேசுகிறார்கள் என்றுகூட சொல்ல முடியாது. கோவில் களில் அர்ச்சனைகளில், குடமுழுக்குகளில், கல்யாணம், கருமாதி போன்றவைகளில் மந்திரங்களாகச் சொல்லப்படும் அளவுக் குத்தான் சமஸ்கிருதம் ஏதோ இருந்து வருகிறது.
இந்த நிலையில், சமஸ்கிருதத்துக்காக மத்திய அரசு கொட்டி அழும் மக்கள் வரிப் பணமோ கொஞ்சநஞ்சமல்ல!
2014
2014 ஆம் ஆண்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக பல்கலைக்கழகங்களுக்கு ரூ.170 கோடி  ஒதுக்கீடு
சமஸ்கிருத வாரம் கொண்டாட 470 கோடி ரூபாயை 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளது
அய்.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற் காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்ப தாகவும்; இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்தார்.
2015
23.7.2015 சமஸ்கிருத மொழிவளர்ச்சிக் காக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மனிதவளத் துறை அமைச்சகம் ரூ.320 கோடி ஒதுக் கியது.
2015 ஆம் ஆண்டு ஜூலையில் பாங்காக்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டிற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பீகார் தேர்தலை ஒட்டி பீகார் மாநிலத் தில் சமஸ்கிருத்தில் சாமியார்களை விட்டு பிரச்சாரம் செய்த பாஜக, தேர்தல் விளம்ப ரங்களை சமஸ்கிருதத்திலேயே கொடுத்தது.
2016
2016 ஆம் ஆண்டு ரூ.70 கோடி ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற சமஸ்கிருத மொழி வளர்ச்சித் துறைக்கு - புதிய ஆய்வு மாணவர்களுக்குத் தேவை யான உதவிகளைச் செய்ய ஒதுக்கியுள்ளது
சமஸ்கிருத வளர்ச்சிக்கென்று வேதிக் போர்ட் என்ற ஒரு தனிப்பிரிவை உரு வாக்கும் திட்டம்.
கேரளாவில் மாணவர்கள் சேர்க்கை யில்லாமல் அய்ந்து சமஸ்கிருதப் பள்ளிகள் மூடப்பட்டன.
சமஸ்கிருத பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு
வட மாநிலங்களில் உருது ஆசிரியர் களுக்கு கட்டாய சமஸ்கிருத பயிற்சி
கேந்திரிய வித்யாலயாக்களில் மூன் றாவது மொழியாக இருந்த ஜெர்மனியைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை குடியேற்றியுள்ளார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் சமஸ்கிருத, இந்தி மொழிப் பெயர்கள்தான்.
2014ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை
மோடி அரசின் திட்டங்கள்
1. அடல் பென்சன் யோஜனா
2. பசத் ஊர்ஜா யோஜனா
3. தீன் தயாள் திவ்யாங் புனர்நிவாஜ் யோஜனா
4. கிராம் ஜோதி யோஜனா
5. கிராமின் பந்தனர் யோஜனா
6. ஜனனி சுரக்ஷா யோஜனா
7. யுவாஊர்ஜா யோஜனா
8. கிஷோர் வைக்யஞ்க் ப்ரொஷ்தன் யோஜனா
9. ப்ரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா
10. பிமா யோஜனா
11. ஜீவஜோதி யோஜனா
12. ஜனதன் யோஜனா
13. கிராம் சடக் யோஜனா
14. ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா
15. ராஷ்டிரிய சுவஸ்திக் விகாஷ் யோஜனா
16. ஷக்சம் யோஜனா
17. சம்பூர்ண கிராம் ரோஜ்கார் யோஜனா
18. ஸ்வபிமான் பாரதி
19. ஸ்வர்ண ஜெயந்தி கிராம்ஸ்வர் ஊர்ஜா யோஜனா
20. ஸ்வலாபமபன்
21.. உதிஷா யோஜனா
22..சுகன்யா சமருத்தியோஜனா
23. ப்ரதான் மந்திரி அவாஜ் யோஜனா
24. அந்தயோதா அன்ன யோஜனா
25. ப்ரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா
26. பிரதான் மந்திரி உஜவல் யோஜனா
27. ஸ்வட்ச் பாரத்
28. நயி நிவாஜ் யோஜனா.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் மேனாள் ஆணையர் கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் 13 பேர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, சமஸ்கிருத வளர்ச் சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை பத்து ஆண்டு களுக்கான திட்டங் களாம். நாட்டில் எத்தனையோ மொழிகள் இருக் கின்றன. சில அழிவின் விளிம்பில் தொற்றிக் கொண்டுள் ளன.
அந்த மொழி களை உயிர்ப் பிப்பது குறித்தோ, வளர்ப்பது குறித்தோ மத்தியில் உள்ள மோடி அரசுக்கு அக்கறையில்லை. ஏற்கெனவே செத்துச் சுண்ணாம்பாகி விட்ட சமஸ்கிருதத்தை வாழ வைக்கத் திட்டம் தீட்டுகிறார்களாம். (தேவ பாஷையின் கெதியைப் பார்த்தீர்களா).
10 ஆண்டுகளுக்கான சமஸ்கிருத மொழிவளர்ச்சிக்கு என கோபால்சாமி அய்யங்கார் குழு கொடுத்துள்ள அறிக்கையின் ஒரு துளி
சமஸ்கிருத்தை பள்ளிகளில் கற்பிக்கும் போது ஆசிரியர் சமஸ்கிருத்திலேயே பேசவேண்டும். மாணவர்களுக்கு சமஸ் கிருதத்தில் பேசி அதற்கான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும். பள்ளிக்கூடத்தில் வகுப்பறை, ஆய்வு அரங்கம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களிலும் சமஸ்கிருதம் பேசவேண்டும்
மாணவர்கள் பள்ளிகள் மட்டுமல்லாது வெளியிடங்களிலும் சமஸ்கிருதம் பேச வேண்டும். சமஸ்கிருதம் பேசுவதை கேலி செய்தால் அதற்காக கோபப்படாமல் சமஸ்கிருத்தை தொடர்ந்து பேசவேண்டும்
பொதுவிடங்களில் முக்கிய பொருள் குறித்து விவாதிக்கும் போது சமஸ்கிருதத் திலேயே பேசவேண்டும்
சிறு சிறு குறிப்புகளை சமஸ்கிருதத்தில் எழுதப் பழகவேண்டும். பொதுவிடங்களில் (வங்கி, பேருந்து, பூங்கா) சமஸ்கிருதத் திலேயே உரையாடி அதற்கான விளக்கத்தை பிற மொழியில் கூறவேண்டும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் சமஸ்கிருதத்தில் தந்து அதற்கான விளக்கத்தை பொது மொழியில் தரவேண்டும் என்கிறது அய்யங்கார் குழு.
பள்ளிக் கல்வி, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல், சமூகவியல் ஆய்வு உள்பட அனைத்துக் கல்வித் துறை களிலும் சமஸ்கிருதத்தில் பாடத் திட்டங்கள் வகுப்பது, அய்.அய்.எஸ்.இ.ஆர். (Indian Institute of Scientific Education Research) மத்தியப் பல்கலைக் கழகம், என்.அய்.டி., அய்.அய்.டி., அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்பட  சமஸ்கிருதப் பிரிவுகள் துவக்கப்பட உள்ளன. போர்க்கால வேகத்தில் பார்ப்பனீய மொழி பரப்பப்படு வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சமஸ்கிருதம், வேதக் கல்வி நிறுவனங் களை நிருவகிப்பதற்கென்றே தனி வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வேதக் கல்வி வாரியம் (Vedic Education Board) ஒன்று துவங்கப்படுகிறது. இதுகூட கோபால்சாமி அய்யங்கார் குழுவின் பரிந்துரைகளுள் ஒன்றே!
அரியானா மாநிலத்தில் உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சமஸ்கிருதப் பயிற்சி அளிக்கப்பட்டு, உருது மொழி பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்பட ஏற்பாடாகி வருகிறது.
‘‘ஆக்ராவில் 2800 துவக்கப் பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் உருதுமொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. 150 ஆசிரியர்கள் உருது மொழியைக் கற்பித்து வருகின்றனர். அந்த உருது ஆசிரியர்களுக்கு ஆக்ரா நிருவாகம் சமஸ்கிருதப் பயிற்சியை அளித்து வருகிறது.
மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு வருணங்களாகப் பிளவுபடுத்தியதும், தமிழில் ஊடுருவி தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளை  சிதைத்து உருவாக்கியதும் பார்ப்பனர்களின் சமஸ்கிருதமே - ‘‘இந்தியாவின் ஆட்சி மொழிக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே’’ என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் ‘ஞானகங்கை’யில்  (Bunch of Thoughts) குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ். எஸின் கையாளாகிய பி.ஜே.பி. மத்தியில் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளதால், சமஸ்கிருதத்தை எல்லா வகையிலும் திணிக்கப் பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு சதுராடுகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தந்தை பெரியார் கைத்தடியைக் கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்.


சான்ஸ்கிருதி
இந்துக்கள் என்போர் தம்மளவில் ஒரு தேசமாகவும், (Nation), ஜாதி(Caste) ஆகவும் மட்டுமன்றி, ஒரு பொதுவான சன்ஸ்கிருதி (Sanskitriti) பண்பாட்டிற்கு உரியவர்கள் என்றார் சாவர்க்கர். இந்துக்களின் தாய்மொழி சமஸ்கிருதம்தான் என்றார் அதே சாவர்க்கர்.
இந்த அடிப்படையில்தான் இன்றைய இந்துத்துவா பி.ஜே.பி. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மையில் இந்தியாவில் பல இனங்கள், பல பண்பாடுள்ள மக்களாகத்தான் வாழ்கிறார்கள்.
இந்து மதத்துக்குள்ளேயே பல முரண்பாடுகள், பல கலாச்சாரம் உள்ளவர்கள், பல மொழிகளைப் பேசக் கூடியவர்களாக இருப்பதை  உணர்ந்தால், சாவர்க்கரின் கூற்று பைத்தியக்காரத்தனமானது - உண்மைக்கு மாறானதே!
-விடுதலை,13.8.16

மகிஷன் ஒரு பவுத்த அரசன்

இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன் 

மைசூரு அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியா ளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுமையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலை நகரமான மைசூருவை,
புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்ட மிட்டே புதைத்தன என்கிறார் பேரா சிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும் (MAHISHASUR BRAHMANIZING A MYTH) என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே:
மைசூரு, கர்நாடகத்தின் இரண் டாவது மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. பெங்களூருவிலிருந்து 130 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. பண்டைய வரலாற்றில் அசோக அரசரின் காலத்தில் அதாவது கி.மு. 245இல் மைசூர் அல்லது மகிஷூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது புத்தமத பட்டமேற்பு விழாவுக்குப் பிறகு, மகாதேவா என்னும் பெயர் கொண்ட புத்தத்துறவியை அசோகர், புத்தமத கொள்கைகளைப் பரப்பி மக்கள் நலன்சார்ந்த அரசை நிறுவும்படி அனுப்பிவைத்தார்.
மகாதேவா, மகிஷா என பின்னர் அழைக்கப்பட்டு, மகிஷ மண்டலா எனும் ராஜ்ஜியத்தை நிறு வினார். கர்நாடகாவின் வடக்குப் பகுதி களில் அசோகரின் சில அரசாணைகள் கிடைத்துள்ளன. மகிஷனின் அரசாட் சிக்கு சான்றாக வரலாற்று நினைவுச் சின்னங்கள், காப்பக ஆவணங்கள் இந்தப் பகுதியில் கிடைத்துள்ளன.
கி.பி. 1399 ஆம் ஆண்டு மைசூரு, யது வம்சம் ஆட்சியின் கீழ் வந்தது. விஜயநகர அரசின் எதிரிகளாக யது வம்சத்தினர் இருந்தனர். மைசூரு மாகாணத்தின் வளர்ச்சியில் அவர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். மைசூரு வின் ராஜாவாக இருந்த பெட்டத காமராஜ உடையார், கி.பி. 1584ஆம் ஆண்டு சிறிய கோட்டை ஒன்றைக் கட்டினார். தனது தலைநகரமாக மைசூருவை மாற்றிய ராஜா, அதை மகிஷாசுர நகர என அழைத்தார். 17 -ஆம் நூற்றாண்டின் காப்பக ஆவணங் கள் பலவற்றில் மைசூரு, மகிஷுரு எனவே குறிப்பிடப்படுகிறது. ராஜா உடையார் தனது தலைநகரை மைசூரு விலிருந்து சிறீரங்க பட்டணாவுக்கு கி.பி. 1610-ஆம் ஆண்டில் மாற்றினார்.
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் மைசூருவின் சிறந்த ஆட்சியாளர்களாக இருந்தார்கள். ஹைதர் அலி, மைசூரு ராஜாங்கத்தை விரிவுபடுத்தினார். அவருடைய மகன் திப்பு சுல்தான், தனது சர்வதேச தொடர்புகள் மூலம் ராஜாங் கத்தை மேலும் முன்னேற்றினார். இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாருடன் அவர் எவ்வித சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போரிட்டு 1799-ஆம் ஆண்டு அவர் உயிர் துறந்தார். அவருடைய பெயர் நவீன இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. திப்பு சுல்தான் இறந்த பிறகு, மைசூரு, உடையார்களின் தலைநகராக மீண்டும் உருவானது. பிரிட்டீசார், உடையார்களை  அரி யணை ஏற்றி, தங்களுடைய கூட்டாளி களாக ஆக்கிக் கொண்டார்கள். மைசூரு சுதேசி மாகாணமாக மாறியது.
சிறுநகரமாக இருந்த மைசூரு, நவீன நகரமாக உருமாறியது 2-ஆம் கிருஷ்ண ராஜா உடையார் காலத்தில். 4-ஆம் கிருஷ்ணராஜா உடையார், புதிய கட்டு மானங்களை நிர்மாணித்து, பொரு ளாதாரா ரீதியில் விரிவுபடுத்தி மைசூ ருவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தார். அவர் ஜனநாயகவாதி, மனித நேயம் மிக்கவர், வளர்ச்சியை முன் வைத்த நிர்வாகி. 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரையிலும் உடை யார்களின் ஆட்சி இங்கே தொடர்ந்தது. அதன் பிறகு ஒருங்கிணைந்த இந்தி யாவின் அங்கமானது மைசூரு.
பவுத்தத்துக்கும், பார்ப்பனியத்துக்கும் இடையேயான மோதலின் வரலாறே இந்திய வரலாறு என அம்பேத்கர் இந்திய வரலாறு குறித்து சொல்லுவார். பார்ப்பனியம், ஜாதி அமைப்பையும் ஜாதிய ஆதிக்கத்தையும் வலியுறுத்தியது. பவுத்தம், மனிதநேயத்தை அறம் சார்ந்த ஜனநாயகத்தையும் பேசியது. ஆரியர்கள், இந்தியாவின்மீது படையெடுத்து மண்ணின் மைந்தர்களை ஜனநாயக மற்ற முறைகளில் ஒடுக்கினார்கள். அதுபோல, பவுத்த அடித்தளத்தை சிதைத்து பார்ப்பனியத்தை நடைமுறைப் படுத்தினார்கள்.
ஆரியர்களின் புரட் டுகள் மூலம் மண்ணின் மைந்தர் களான, மகிஷா போன்ற ஆட்சியா ளர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.
மைசூரு, மகிஷ மண்டலா, மகிஷாசுரநாடு, மகிஷநாடு, மகிஷபுரா என பலப் பெயர்களில் வழங்கப்பட்டது. வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட மாகாணமாக திகழ்ந்த மகிஷ மண்டலத்தில் எருமைகள் உழவுக்கும், பால் தேவைக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மைசூரு, எருமைகளின் நாடு எனப் போற்றும் வகையில் எருமையூர் (பேரா.குரு எருமையூரன் என்கிறார், அன் விகுதி மகிஷனை குறிக்கலாம்) என்று அழைக் கப்பட்டது. பவுத்த மற்றும் ஹொய்சால இலக்கியங்களில் மகிஷ மண்டலம் குறித்து ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காலகட் டத்தில் இந்த மாகாணத்தில் ஏராள மான நகரங்கள் இருந்திருக்கின்றன.
பிறப்பில் திராவிடர்களாக இருந்த நாகர்கள், தென் இந்தியாவை ஆண் டனர். பேராசிரியர் மல்லேபுரம் ஜி. வெங்கடேஷ் நாகர்களுக்கும் மகிஷ மக்களுக்கும் தொடர்பிருப்பதை கண்டறிந்திருக்கிறார். நாகர்கள் தங்களுடைய கலாச்சாரம் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து ஆரிய ஊடுரு வலைத் தடுக்க போரிட்டார்கள். மானுடவியலாளர் எம் . எம். ஹிராமத், கர்நாடகத்தில் நாகர்கள், மகிஷர்கள் என்ற இரண்டு மிகச் சிறந்த இனங்கள் இருந்ததாகச் சொல்கிறார்.
ஆரியர்கள் புராணங்கள் மூலம், பவுத்த அரசர்களை சிறுமைப்படுத்தி னார்கள். அவர்கள்விட்ட ஒரு புரட்டுதான் இந்தக் கதை: ஒரு மனிதன், எருமையுடன் உறவுகொண்டதால் பிறந்தவனே மகிஷன் என்ற கதை. வரலாற்றாசிரியர் மஞ்சப்ப ஷெட்டி (The palace of mysore - -- என்ற நூலின் ஆசிரியர்)யின் கூற்றுப்படி, மக்களைக் காப்பாற்றும் பொருட்டும், நீதியை நிலைநாட்டும் பொருட்டும் சாமுண்டி என்ற பெண்கடவுள், மகிஷனைக் கொன்றதாக பூசாரிகளே பொய்க் கதையைப் பரப்பினர் என்கிறார். மகிஷன் ஒரு அசுரன் என்பதை வேண்டுமென்றே ஊன்றினார்கள்.
சாமுண்டீஸ்வரிதான் மகிஷனைக் கொன்றாள் என்கிற இந்து புராணக் கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.  மகிஷன் உண்மையில் பவுத்த- பகுஜன் அரசன்; நீதி, சமத்துவத்தின் குறியீடு. ஒரு கையில் வாள் ஏந்தியும் மற்றொரு கையில் பாம்பொன்றை பிடித்திருப்ப தாகவும் உள்ளது மகிஷனின்  உருவம். மகிஷனின் வீரத்தை வாளும், நாகா கலாச்சாரத்தில் பவுத்தம் வலியுறுத்திய இயற்கையின் மீதான அன்பை பாம்பும் குறிக்கின்றன.
நாட்டுப்புறவியல் நிபுணர் காலே கவுடா நாகாவார், தற்போது மைசூரு என வழங்கப்படும்  மகிஷ மண்ட லத்தை மகிஷன் ஆண்டார். அவர் ஓர் உன்னதமான பவுத்த அரசராக இருந்தார். முற்போக்கான நிர்வாகி யாகவும் சமூகத்தின் எல்லா பிரிவினரின் அதிகாரத்தை நிலைநாட்டியவராகவும் இருந்தார். உண்மைகள் திரிக்கப்பட் டன. மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். இந்து புராணங் கள் மகிஷனை எதிர்மறையாகக் காட் டின. இந்த மாகாண மக்கள் தசரா விழாவை மகிஷ மண்டலத்தின் கீழ் வேறுவிதமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
பிரபல எழுத்தாளர் (கன்னட) பன்னூர் ராஜா, சாமுண்டி மலை, முன்பு மகாபலேஸ்வரம் என அழைக் கப்பட்டது. இப்போதும் இந்தக் குன்றின் மீது, மகாபலேஸ்வரா கோயில் உள்ளது. யது வம்ச ஆட்சியின் போது சாமுண்டி என இந்த மலை பெயர் மாற்றம்பெற்றது.  பூசாரிகளுடன், ஆட்சியாளர்களும் சேர்ந்துகொண்டு சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனைக் கொன்றாள் என்ற கதையைப் புனைந் தார்கள். இது ஆதாரமற்றது; கண்டிக் கத்தக்கது என்கிறார்.முற்போக்கு சிந்தனையாளரும் மகிஷ மண்டலா என்னும் நூலின் ஆசிரியருமான சித்தஸ்வாமி சொல்கிறார்: மகிஷா என்பதே மைசூரு என்பதன் வேர்ச் சொல். அசுரன் என்று எழுதிய குழுவாத எழுத்தாளர்களின் சூழ்ச்சிக்கு அவர் இரையானார். புத்தர் மற்றும் அசோகரின் கொள்கைகளை நடை முறைப்படுத்திய மகிஷா, ஓர் சிறந்த ஆட்சியாளர் என்று சொல்கிறார்.
வரலாற்றை மீட்டெடுத்தல்
மைசூரு மாகாணத்தின் மண்ணின் மைந்தர்கள், மகிஷாசன ஹப்பா (மகிஷனின் விழா) என்கிற பெயரில் இந்த நகரத்தின் வரலாற்றை மாற்றி எழுத ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்நகரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கள் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்கள் நடந்து கொண் டிருந்தபோது மகிஷனுக்கு 2015 அக்டோபர் 11,  அன்று விழா எடுத்தோம். இந்நிகழ்வு கர்நாடாக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் மூலமும் மேலும் பல முற்போக்கு அமைப்பு களின் துணையுடனும் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான சிந்தனையாளர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கர்நாடக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் தலைவரான சாந்தராஜு, மைசூரு மக்கள் தங்களுடைய  நகரத்தின் தோற்றம் குறித்து தெளிவாக அறிந்து வரலாற்றின்படி இந்த நகரத்தைத் தோற்றுவித்தவரான மகிஷனுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். விழாவின் போது மகிஷனின் சிலைமீது சரமாரி யாக கற்களை வீசினார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்கள் மகிஷனை உயர் விக்கும் வகையில் தசராவைக் கொண்டாடுவார்கள். (ஜூன் 20 பார்வர்டு பிரஸ் வெளியீடு)
யார் இந்த மகேஷ் சந்திரகுரு
இந்தியாவில் தலித் பவுத்தத்தை சேர்ந்த ஒரே இதழியல் பேராசிரியர் தான் மகேஷ் சந்தர குரு. மைசூரு பல்கலைக்கழகத்தில் 30-ஆண்டு களுக்கும் மேல் பணியாற்றி வருகிறார். கர்நாடக பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம், யூ.ஜி.சி. குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். மகிஷா சூர இயக்கத்தை நடத்தி வருகிறார்.
-விடுதலை,6.8.16

கேள்விகள் இங்கே - பதில்கள் எங்கே?மின்சாரம்



இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் இந்து மதத்தைத் தூக்கி நிறுத்த சிலர் புறப்பட்டுள்ளனர். அதில் ஆடிட் டர் குருமூர்த்தி என்பவர் முன்வந்து தோள் தட்டுகிறார். ஊடகங்கள் அவர் கள் கையில் இருப்பதால் பத்திப் பத்தியாக வெளியிடுகின்றன.
அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சார்ந்த அனைவர்களுக்கும், குருமூர்த்தி போன்றோர் தெரிவித்துவரும் தகவல் களின் அடிப்படையில் சில கேள்விகள் இதோ:
1. ஜாதியை ஒழிக்க முடியாது - இது யதார்த்தம் என்று சொல்லுவதிலிருந்து ஒன்று தெளிவாகி விட்டது. இப்பொழு தெல்லாம் ஜாதியை யார் பார்க்கிறார்கள் என்று நம்மைப் பார்த்துப் பெரிய புத்திசாலி போல கேள்வி கேட்போர் குருமூர்த்தியின் பதில் மூலம் பார்ப்பனர் களின் மனப் போக்கைப் புரிந்துகொள் ளலாம். ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் சொல்லும் அந்தக் கருத்தைத்தான் இவர்களும் சொல்லு கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!
ஜாதியை ஒழிக்க முடியாது என்று சொல்லுபவர்கள், அதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் அவர்களின் ஜாதித் தொழிலைத்தான் செய்கிறார்களா? ஆடிட்டராக குருமூர்த்திகள் வேலை பார்க்கலாமா?
பிராமணன் தொழில் பிச்சை எடுத்து உண்பதுதானே. அதனைச் செய்கிறார்களா? சாஸ்திரப்படி பிரா மணன் ஏழையாகத்தான் இருக்கவேண் டும் என்று மறைந்த சீனியர் சங்க ராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளாரே! (தெய்வத்தின் குரல், பாகம் 1, பக்கம் 163) அப்படித்தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்களா?
பார்ப்பனக் கலாச்சாரப்படி பஞ்ச கச்சம் வைத்துதான் வேஷ்டி கட்டு கிறார்களா - பெண்களும் மடிசார் கட்டுகிறார்களா? ஒரு காலத்தில் மொட்டைப் பாப்பாத்தி என்பார்களே, அந்த நிலை இப்பொழுது உண்டா? உச்சிக் குடுமி வைத்துள்ளார்களா பார்ப் பனர்கள்? பேண்ட், ஷர்ட் போடுவது தான் வைதீக வருணாசிரமத் தர்மமா?
2. தொழில் முனைவுக்கான முக்கிய மான கருவி ஜாதி என்கிறாரே - எந்தப் பொருளில் அப்படிக் கூறுகிறார்? உண்மையைச் சொல்லப் போனால் வறுமைக் கோட்டுக்கும் கீழே இருப் பவர்கள் கீழ் ஜாதி என்று பார்ப்பனீ யத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள்தானே பெரும்பாலோர்!
‘‘இந்தச் சமூகம் பொருளாதார தேக்கம் அடைந்ததற்கு மனித இனம் பல ஜாதிப் பெட்டிகளுக்குள் (The Water Tight Compartment of Castes)அடைக்கப்பட்டு தொழிலாளர் புழக்கம் (Mobility of Labour) தடைப்பட்டது ஒரு முக்கிய காரணம்’’ என்ற பிரபலப் பொருளாதாரப் பேராசிரியர் ஆர்தர் லூயிஸ், குருமூர்த்திகளைவிட பொருளா தாரத் துறையில் மேதைதானே. (A Theory of Economic Development)
படிப்பிலும், பதவியிலும், பொருளா தாரத்திலும் வளமையில் இருந்த, துணைப் பிரதமராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் காசியில் திறக்கப்பட்ட சம்பூர்னானந்து சிலையை காசிப் பல்கலைக் கழகப் பார்ப்பன மாணவர்கள் கங்கை நீரால் கழுவினார் களே, ஏன்? கீழ்ஜாதிக்காரன், உயர் ஜாதிக்காரன் சிலையைத் திறக்கலாமா என்ற கேள்வியை எழுப்பவில்லையா? ஜெகஜீவன்ராமெல்லாம் மந்திரியானால், எங்களுக்குச் செருப்பு தைப்பது யார் என்று கேட்டார்களா, இல்லையா அந்த உயர்ஜாதி மாணவர்கள்? இந்த நிலை தொடரவேண்டும் என்பதுதான் கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை களின் அடக்க முடியாத ஆசை வெறியா?
ஜாதியை ஒழிக்காமல் தீண்டா மையை எப்படி ஒழிக்க முடியும்? சொல்லட்டுமே பார்க்கலாம். ஜாதி காரணமாகத்தானே தீண்டாமை? ஜாதியை ஒழிக்க முடியாது - கூடாது என்று சொல்லுவதன்மூலம் தீண்டா மைக்குப் பராக்குப் பாடும் இந்தப் பேர்வழிகளை பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் கைது செய்யவேண்டாமா?
3. ஜாதி வித்தியாசங்களில் ஏற்ற தாழ்வுகளும் இருக்கலாம். அதை மீறி வாழத் தெரிந்தவர்தான் உயர்ந்த மனிதர் என்கிறாரே, ஆடிட்டர் குருமூர்த்தி?
இதன் பொருள் என்ன? பார்ப்பான் பார்ப்பான்தான் - பள்ளன் பள்ளன்தான். இந்த ஏற்ற தாழ்வுகளையும் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் அப்படித் தானே? இந்து ஆன்மிகம் கற்பிப்பது இதனைத்தானே? புரிந்து கொள்வீர் ஒடுக்கப்பட்ட மக்களே!
4. திராவிட இயக்கம், உயர்ஜாதி எதிர்ப்பு இயக்கம் என்கிறாரே, உண் மைதான். அவர் சொல்லுவதிலிருந்து உயர்ஜாதி என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவில்லையா?
ஒருவன் பிறக்கும்பொழுதே உயர் ஜாதி என்றும், தாழ் ஜாதி என்றும் பிறப்பிக்கப்பட்டான் என்று சொல்லு வதும், அந்த உயர் ஜாதிக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்வதுதான் கீழ்ஜாதிக்காரனின் கடமையென்றும் அமைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில், சமுதாயத்தில் உயர்ஜாதிக்காரனை  எதிர்ப்பதுதானே மனித உரிமையும், அறிவு நாணயமுமான பொதுத் தொண் டாகவும் இருக்க முடியும்?
இந்தத் தொண்டினை திராவிட இயக்கம் செய்வதாக குருமூர்த்தி தன்னை அறியாமலேயே ஒப்புக்கொண் டதற்கு நன்றி!
எல்லாவற்றிலும் ஆதிக்க நச்சு நங்கூரத்தைப் பாய்ச்சி நின்ற பிறவி முதலாளித்துவமான ஆரியத்தை அதன் ஆணிவேர் வரை சென்று தாக்கியதால் ஏற்பட்ட விளைச்சல்தானே பஞ்சமர் களுக்கும், சூத்திரர்களுக்கும், பெண் களுக்கும் இன்று கிடைத்திருக்கும் கல்வியும், உத்தியோக வாய்ப்பும், சிவில் உரிமைகளும். மறுக்க முடியுமா மனுவாதிக் கூட்டத்தால்?
கடைசிப் பூணூலும் (ஜாதி ஆதிக்க துவிஜாதியினர்) பஞ்சகச்சமும் இருக் கும்வரை திராவிட இயக்கத்தின் பீரங்கிப் பிரச்சாரமும், புயல் வேகக் கொள்கைத் ‘தாக்குதலும்’ தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
5. திராவிட இயக்கம் ஜாதி ஒழிப்பு இயக்கம் இல்லை என்கிறாரே?
‘இந்து’ பத்திரிகைக் குடும்பத்தைக் கேட்டுப் பார்க்கட்டும் - ஜாதி ஒழிப்பு வேலையில் திராவிட இயக்கம் ஈடுபட்டதா? இல்லையா? என்பதை. இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்க மாகக் கருதும் மாநிலம் தமிழ்நாடு என்றால், அதற்கு எந்த இயக்கம், எந்தத் தலைவர் காரணம்? குருமூர்த்தி பெயருக்குப் பின்னால்கூட - ஜாதி ஒட்டு ஓடி மறைந்துவிட்டதே! அதில்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் இருக் கிறதே!
பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டத்தோடு அறிமுகமானவர்கள்கூட திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக ஜாதிப் பட்டத்தைக் கத்தரித்துக் கொண் டார்களே!
6. வேதமும், விவசாயமும், செயலால் ஒன்றிணைந்தது என்று குருமூர்த்தி கூறுகிறாரே, அது சரியா?
விவசாயம்பற்றி மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?
‘‘பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதனைப் பாராட்டு வதில்லை. ஏனெனில், இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண் வெட்டி இவற்றைக் கொண்டு, பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங் களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ?’’ (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 84).
மனுதர்மம் என்றால் என்ன சாதாரணமா? மனு என்ன சொன்னாரோ அது மருந்தாம். பதினெட்டு ஸ்மிருதி களுக்குள் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு சாஸ் திரங்களும் ஒரே வாக்காய்ச் சொல்லி யிருந்தாலும், அது ஒப்புக்கொள்ளத்தக்க தன்று என்பதுதானே இந்து மதத்தின் நிலைப்பாடு!
1921 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள், பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் கும்ப கோணம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன்வந்தார்கள். ஆனால், சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர் களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று சங்கராச்சாரியார் கூறிவிட்டாரே! (‘தமிழ்நாட்டில் காந்தி’, பக்கம் - 378).
இதற்கு மேலும் வேதம் - விவசாயம் என்று உதட்டை அசைக்கத் தகுதி உண்டா இந்த அக்கிரகார ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு?
(கேள்விகள் இன்னும் உண்டு, எதிர்தரப்பிலிருந்து என்னென்ன வருகின்றன என்று பார்ப்போம்!)
குறிப்பு: ‘சோ’ உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பார்ப்பனர்கள் திருவாளர் குருமூர்த்தியை பார்ப் பன சங்கத்தின் செய்தித் தொடர் பாளராக உருவாக்கி வருவதாக ஒரு செய்தி.
-விடுதலை,6.8.16

வியாழன், 3 நவம்பர், 2016

தேசிய உணர்ச்சி


20-11-1932, குடிஅரசிலிருந்து...
தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்து வரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும் மற்றும்  அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதை தடை படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும்  மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.
தேசம் என்றால் எது? உலகப் பரப்பு அய்ந்து கண்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு  மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன.
இவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும் மாகாணத் திலும் பல மாதிரியான பிறவிகளும், பண ஜாதிகளும், பல பாஷைகளும் பல மதங்களும் பல உட்பிரிவுகளும், பல பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வக் கட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும் தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாது என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க வேண்டும் என்றும் கருதிக்  கொண்டிருப்ப தாகும். இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப் பதை நன்றாய் பார்க்கின்றோம்.
அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ் நிலை - மேல் நிலை கஷ்டப்படு கின்றவன் - கஷ்டப்படுத்துகிறவன் முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கை மீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தை பிரித்துக் கொண்டு தங்களுக்கென தனித்ததேசம் தேசியம் என்ற ஒன்றைச் சொல்லிக் கொள்ளுவது என்பது எனக்குப் புரியவில்லை.
நமது தேசம் என்று எந்த விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப் படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென் னவோ, அதிலுள்ள மனிதர்களின் நிலை என்னென்னவோ, அதுதான் மற்ற எந்த தேசம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும்,
தாழ்மைபடுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின் றார்களோ அவ்வளவு நிலையில் தான் மற்ற தேசத்தார் என்கின்ற மக்களும் இருந்து வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்த விதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கின்றோமே அந்த விதமான துயரம் கொண்ட மக்கள் அன்னிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகின்றார்கள். நம்முடைய தேசியம் என்பதிலேயே எந்தவிதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக் காரர்களாகவும்,
அரசாங்க செல்வவான்களாகவும் ஆதிக்கக்காரர் களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொது ஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கி பட்டினி போட்டு வதைத்து தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்து வாழ்ந்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ அதுபோலத்தான் அன்னிய தேசம் என்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டு பெரும் பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலைமையில் என்னக் கொள்கையைக் கொண்டு எந்த லட்சியத்தைக் கொண்டு உலகப் பரப்பில் ஒரு அளவை மாத்திரம்  பிரித்து தேசாபிமானம் காட்டு வது என்று கேட்கின்றேன்.
-விடுதலை,11.6.16