பக்கங்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

கன்னிகாதானம்போல் புத்திர தானம் உண்டா?

தஸ்லிமா நஸ்ரீன் எழுப்பியுள்ள பகுத்தறிவுக் கேள்வி




எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவரு டைய எழுத்தின் காரணமாக இசுலாமிய அடிப்படைவாதிகளால் தண்டனைவிதிக் கப்பட்டவர். வங்கதேசத்திலிருந்து வெளி யேறி, அடைக்கலமாக இந்தியாவில் வசித்து வருபவர்.

அவர் எந்த மத அடிப்படைவாதத்தை யும் ஏற்காமல், சுதந்திரமாக தன்னுடைய கருத்தை வெளியிட்டுவருபவர். அவரு டைய டிவிட்டர் பக்கத்தில் இந்துமதத்தி லுள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தந்தை தன் மகளை மணமகனுக்கு பரிசுப்பொருளை அளிப்பதைப்போல் அளிப்பது கன்னிகாதானம் என்று உள்ளது. பரிசாக அளிக்கப்படுகின்ற ஒரு பொருளாக ஒரு பெண்ணை எப்படி கருத முடியும்? கன்னியாதானம் போல், புத்திரதானம் என்று எந்த சடங்கும் இருக்கிறதா? இல்லையே.

மனித சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும். திருமணம் என்பது வயதுக்கு வந்த மனிதர்களில் இருவரை, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இணைப்பது என்று பொருள் ஆகும்.

-  விடுதலை ஞாயிறு மலர், 5.1.19

மதநம்பிக்கை என்று சும்மா இருந்திருந்தால் இந்த மாற்றங்கள் வந்திருக்குமா?



பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளு த்திக் கொல்லுவது இந்துமத நம்பிக்கை என விட்டிருந்தால், உடன்கட்டை தடுப்புச்சட்டம் வந்திருக்குமா?

குழந்தைத் திருமணம் இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், பால்ய விவாக தடுப்புச் சட்டம் வந்திருக்குமா?

வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்னும் உரிமை கிடைத்திருக்குமா?

கணவன் இறந்தால், மனைவிக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்காரவைப்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா?

மொட்டைப் பார்ப்பனத்தி என்ற நிலை தான் மாறியிருக்குமா?

பெண்களுக்குப் பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா?

பார்ப்பனர் அல்லாதோர் படிக்கக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், நாட்டின் பெரும்பான்மை யான மக்கள் படித்திருக்க முடியுமா?

சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத் தக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்துப் பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம் வந்திருக்குமா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெ தற்கு என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், பெண் கல்வி சாத்தியப் பட்டிருக்குமா?

திருமணம் முடிந்த பெண், முதல் நாள் பார்ப்பன நம்பூதிரியுடன்தான் முதலிரவைக் கழிக்க வேண்டும் என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த இழி பழக்கம் மறைந்திருக்குமா?

ஒரே மத அமைப்பு என்று சொல்லிக் கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தீண்டாமைத் தடை சட்டம் வந்திருக்குமா?

ஒரே மத அமைப்பு என்று சொல்லிக் கொண்டு,  எங்கள் கோவிலினுள் நுழை யாதே என்று  மக்களின்  ஒரு பிரிவினரைத் தடுப்பது  இந்து மத நம்பிக்கை என விட் டிருந்தால், அனைத்து ஜாதிக்கும் ஆலய நுழைவுசாத்தியப்பட்டிருக்குமா?

பார்ப்பனர்கள் கடல்தாண்டி போகக் கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால்,இன்றைய நிலையில் லட்ச கணக்கான  பார்ப்பனர்கள் வெளிநாடு களில் வசிக்க, வேலைசெய்ய முடியுமா?

உலகம் தட்டையானது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், உலகம் உருண்டையானது என்பது நிரூபிக்கப் பட்டிருக்குமா?

பூமியைத்தான் சூரியன் சந்திரன் போன்றவை சுற்றிவருகின்றன என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அறிவியல் வளர்ந்திருக்குமா?

ராகு - கேது என்ற பாம்புகள் சூரியனை யும் சந்திரனையும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், வான்வெளி அறிவு வளர்ந்திருக்குமா?

பிரார்த்தனைசெய்தால் குணமாகும் என்பது இந்து மத நம்பிக்கை என விட் டிருந்தால், மருத்துவ அறிவியல் வளர்ந் திருக்குமா?

தமிழ் நீசபாஷை, தமிழில் கடவுளை வழிபடக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தமிழ் அர்ச் சனை என்னும் சட்டம் வந்திருக்குமா?

அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய அய்யப்பன் இன்று மின்சார விளக்கில் ஜொலிக்கிறான், இப்போது எங்கு போனது 'ஆகம விதி'?

48 நாள் விரதமிருந்த உங்களது கன்னிச் சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி, அன்று மாலையே சாராயக்கடைக்கு மலையேறும் போது எங்கே போனது 'உங்க ஆகம விதி?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோஷத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ. களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 'ஆகம விதி' ?

இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு செல் போன்களை அனுமதிக்கிறது ?



இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் "ஆகம விதி" மதநம்பிக்கை பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் மதவாதி கள் இன்றும் பெண்களை தங்களின் அடி மைகளாக வைத்திருக்க முயன்றுகொண்டு இருக்கின்றனர் என்றுதானே பொருள். அதற்குச் சில பெண்களும் பெண் அரசியல் தலைவர்களும் அரசியல் லாபத்திற்காகத் துணை போகின்றனர் என்பதும் கவலைக் குரியதே, இருப்பினும் அவர்களின் போலி மதச்சாயமும் வெளித்துவிட்டது, பெண்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.

மதப்பயம் காட்டி அடக்கிவைக்க இது பழைய காலம் இல்லையப்பா, நாங்கள் தாடிக்காரர் பேத்தி, அடக்கி வைத்த காலம் போச்சு என்று பெண்கள் பாடும் காலம் வந்தாச்சு.

- க.அன்புமதி - அருள்மதி

-  விடுதலை ஞாயிறு மலர், 5.1.19

வியாழன், 24 ஜனவரி, 2019

இந்து மதத்தின் புதிர்கள்

பேராசிரியர் மு.நாகநாதன்




பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறிகளை நடைமுறைப் படுத்துவதற்கும் பெரும் தடையாக உள்ளது என்பதற்குத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளார்.

புதிர் 22இல் (Riddle-22) -இவரின் கருத்துகள், கடந்த 4 1/2 ஆண்டு மதவாத பாஜக ஆட்சியில் நடந்த மானுட கொடுமைகளால் நூற்றுக்கு நூறு, மெய்ப்பொருளானது.

அண்ணல் அம்பேத்கர்:

"நல்ல அரசு என்றால் நல்ல சட்டங்களும், நல்ல நிர்வாகமும் தேவை. இது தான் நல்ல அரசின் சாரம் ஆகும். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கீழ் நிலையில் இருக்கும் மக்களும் பெரும்பான்மையான மக்களும் பயன் பெறாத வகையில் ஆளும் அதிகாரத் தைத் தங்களின் வகுப்பு நலனுக்காக வைத்திருக்கும் போது நல்ல அரசாகத் தற்போது இருக்கமுடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

(Good Government means good laws and good administration. This is the essence of good Government. Nothing else can be.
Now there cannot be good Government
in this sense, if those who are invested with ruling power seek the advantage of their own class instead of the advantage of the whole people or those who are downtrodden--)
(Riddles in Hinduism- Dr.Babasahep Ambedkar--
Writings And Speeches vol 4-page 282) fraternity.


பிரெஞ்சுப் புரட்சியின் போது வலியுறுத்தப்பட்ட சகோதரத்துவம் தான் ஜனநாயகத்தின் வேர்.

சமத்துவம் என்ற சொல் அதன் முழுமையான உட்பட்ட பொருளை எடுத்துக்காட்டவில்லை. அதனால்தான் சரியாக மைத்திரி -( சமத்துவத்தின் முழு பொருளில்)- என்று புத்தர் குறிப்பிட்டுள் ளார்.இன்றும் இலங்கையில் மைத்திரி பாலா என்ற பெயரை சூட்டுகின்றனர்.

(What French Revolutionisits called fraternity.The word fraternity is not an adequate expression. The proper term is what the Buddha called, Maitree. Page 283)

இலங்கையிலும் இந்தியாவைப் போன்றே மைத்திரி ஏட்டளவில் தான் உள்ளது. நாட்டளவில் இல்லை.

அம்பேத்கர் மேலும் விளக்குகிறார்.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் வளரவில்லை. இதற்கான பதில் எளியது.

இந்து மதம் சகோதரத்துவத்தைக் கற்பிக்கவில்லை.

அதற்குப் பதிலாக சமூகத்தை ஜாதி வர்ணங்கள் அடிப்படையில் பிளவைக் கற்பிக்கிறது.

வகுப்பு உணர்வைத் தனியாக நிலைப் பெறச் செய்கிறது.

இத்தகைய அமைப்பில் ஜனநாயகத்திற்கு இடம் இல்லை.

இந்து சமூக அமைப்பு விபத்தின் காரணமாக ஜனநாயகத்தை இழக்கவில்லை.

ஜனநாயகம் இருக்கக் கூடாது என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

(Why did democracy not grow in India?
The answer is simple .
The Hindu religion does not teach fraternity.
Instead it teaches division of society into classes or varnas and the maintenance of separate class consciousness.
In such a system where is the room for democracy.
The Hindu social system is undemocratic
not by accident. It is designed to be undemocratic.
(page- 285)


இன்று மோடி அரசில் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்தில், மய்ய வங்கியில், மத்திய புலனாய்வு துறையில் செய்யப்படும் குறுக்கீடுகள், இட ஒதுக்கீடு கொள்கையில் உயர் வகுப்பினருக்கு அவசரமாக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளைத் திணிப்பதில் காண்பிக்கும் அவசரம் எல்லாம் யாருக்காக?

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது நாட்டுத் துரோக வழக்கைப் பதிவு செய்தது எதற்காக?

சமத்துவம் ஜனநாயகம் என்பது எல்லாம் உயர் வகுப்பு, உயர் வர்க்க நலன்களுக்காக என்பதைத் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உணர்ந்து களம் அமைத்தனர். போராடினர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் புனிதமானது.

அதன் அடிப்படைக் கட்டமைப்பை (Basic Structure) பாதுகாக்கவேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர்.

இவர்கள் யார்?

இந்து சனாதனம் தான் இந்திய சமூகத்தின் கட்டமைப்பு என்பவர்கள்.

இந்து சனாதனம் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாகவும் செயல்படுகிறது.

ஜனநாயகம் ஒரு சிலரின் கையில் தான் உள்ளது என்பதை 24 இந்து மதப் புதிர்களில் அறிவோடு சான்றுகளோடு அறிஞர் அம்பேத்கர் மெய்ப்பித்துள்ளார்.

இதனால் தான் பெரியார் 1957 ஆம் ஆண்டிலேயே சனாதனத்தைக் காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தனது 80ஆம் அகவையில் தீயிட்டார். சிறை தண்டனையும் பெற்றார்.

அறிஞர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் செய்த புரட்சியைப் படித்து ஆய்ந்து, தெளிந்து இளைஞர்கள் களமாட வேண்டும்.

- விடுதலை நாளேடு, 24.1.19

சனி, 5 ஜனவரி, 2019

கட்சிகள் என்றால் என்ன?

கேள்வி: கட்சிகள் என்றால் என்ன?


விடை: நல்ல லட்சியங்களைச் சொல்லி; ஜனங்களை ஏமாற்றி; தங்கள் வசம் செய்து; சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிர கட்சி, தேசியக் கட்சி முதலிய பல கட்சிகள்.

கேள்வி: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?

விடை: சேராது!

கேள்வி: ஏன்?

விடை: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக் கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

- விடுதலை நாளேடு, 5.1.19

யார் சமதர்மவாதி

பொன்மொழிகள்


ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங் களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.

- தந்தை பெரியார் பொன்மொழி

- விடுதலை நாளேடு, 5.1.19