பக்கங்கள்

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?

*அவர்கள் யார்?*
*அவர்களின் பணி என்ன?*
*RSS-க்கும், BJP -க்கும் என்ன தொடர்பு?*

*முழவதும் படிக்கவும், பின்னர் Share செய்யவும்*

1.ஆர் எஸ் எஸ் என்பது –
*ராஸ்டிரிய சேவை சங்கம்* –
இது ஆரிய, பார்ப்பன இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் *கோல்வால்க்கரால் 1912 ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்*,

2.இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் *ஒரு பயங்கரவாத அமைப்பு.*

3,இதுதான்
*கோட்சே மூலம் காந்தியை சுட்டுக்கொன்றது* 
இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்புதான் ..

5. இதன் நோக்கம் தொடர்ந்து *பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பதும்* மற்றவர்கள்
அடிமையாக ,
*தீண்டத் தகாதவர்களாக இருக்கவேண்டும்*இதுவே இந்த அமைப்பின் குறிக்கோள் .

6. இது உலகின் மிகப் பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7.இந்த அமைப்பில் ராணுவத் தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினர்கள் இருப்பார்கள்.
பெரும்பாலும் “பார்ப்பனர்கள் பல
அதிகாரத்தில் இருப்பார்கள்.

8.இந்த அமைப்பில் அடியாளாக “ஆதிக்க சாதி
இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட –
தலித் மக்களுக்கு எதிராகவும் ,
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் ,
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்.

9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கைக் கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட “கதாபாத்திரங்களை , உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள் ,-

*ராமன் என்பவன் ஒரு*
*கதையின் கதாபாத்திரம்* -அதை
உண்மைக் கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , *பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய்ச்சொல்லி* , முட்டாள் இந்துக்களை ,
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பி ,
*பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து* , இந்த நாட்டில் “பயங்கரவாதத்தை
‘விதைத்தனர்.

11. விநாயகர் ஊர்வலம் என்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை ,
*இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு*
*வந்து விநாயகர் சிலைவைத்து மத நல்லிணக்கத்தைச் சிதைத்தனர்* –
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கப்படுகிறது ..

12, இவர்கள் அரை டவுசர் போட்டு, கையில் தடியுடன், பொது
சாலையில் *இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்.*
இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட
“காவல் துறை ” முழு பாதுகாப்பு
கொடுக்கும்.

13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ,
ஆயுதப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் ,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளைக்
கொடுப்பார்கள்.

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள்
கிடைக்கும்.

15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய –
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது “பெரிய குற்றவியல் அல்லது
நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது
என்பது யதார்த்தமான உண்மை.

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதைக் கண்டு கொள்ளாது .

17. சமஸ்கிருதம் -இந்தி இவை
இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.
பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
“மாட்டு கறி உண்பதை தடை
செய்வார்கள்.

18. அதிகமான “அம்மண-சாமியார்கள் –
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் “
ரிஷிகள் அமைப்பு என ” ரவுடிகளாக
பயன்படுத்திக் கொள்வார்கள்.

19. இவர்களின் *மூடநம்பிக்கை கருத்துக்களை எதிர்க்கும்*-
*அறிவுஜீவிகள் ,* *எழுத்தாளர்கள் ,*
*கம்யூனிஸ்ட்கள் ,* *பகுத்தறிவாளர்கள் ,*
*பெரியாரிஸ்ட்கள்,*
*அம்பேத்கரிஸ்ட்கள்* *ஆகியோர்களைத் தாக்கி கலவரம் செய்வார்கள்*
பல நேரங்களில்
கொலையும் செய்வார்கள்
இப்படி பல
அறிஞர்களைக் கொலை செய்திருக்கின்றனர்.

20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் –அவை
*”விஷ்வ ஹிந்து பரிசத்,*
*பஜ்ரங் தல் ,*
*ஹிந்து முன்னணி,*
*ஹிந்துஸ்தான் விராத் ,*
*நிர்மான் சபா ,*
*ஹிந்து சபா ,*
*அகில பாரத்*
*வித்யார்த்தி*
*பவன் என்ற மாணவர் அமைப்பு,*
*சேவாதல் மாநில சுயாட்சிகொண்ட* *“சிவா சேனா,*
*ரன்பீர் சேனா* *(பிகாரில் நிலபிரபுக்கள் படை)*

தமிழகத்தில் அரசியல் கட்சியாக *இந்து மகா சபை, *இந்து மக்கள் கட்சி.*

-மத்தியில் அரசியல் கட்சியாக - *BJP*
*பாரதிய ஜனதா பார்ட்டி.*

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் – இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக்
கொள்ளாது, மரியாதையையும் செய்யாது.

22. இவர்களின் தலைமை பீடம் “(RSS )
நாக்பூரில் உள்ளது.
சென்ற ஆண்டுவரை
தேசியக் கொடி ஏற்றப் படவே இல்லை.

23. இவர்களின் அமைப்பு ” சமூக நீதிக்கு
- இடஒதுகீட்டுக்கு எதிரானது .

24. இவர்களது அமைப்பு ” சமத்துவத்தை
“எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு

25- உரிமை — ஜனநாயகம் அதற்கான
போராட்டம் -இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது –
அந்த தருணத்தில் -ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது -ஆங்காங்கே
உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை
செய்து கொண்டிருக்கிறது .

26. இந்தியாவில் இதுவரை 10,000 -க்கும்
மேற்பட்ட கலவரங்களைத் தூண்டி,
லட்சக்கனக்கான மக்களைக் காவு வாங்கி உள்ளது.

26. உயர் சாதி – கீழ் சாதி – தீண்டாமை
என்பவை – மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாகக்
கொண்டவை.

27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும் “
இவர்கள்தான் “தலைமை பொறுப்பை
கைப்பற்றி கொண்டுள்ளனர் ( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
*“யுவராஜ் கூட* *RSS* *அமைப்பின் முக்கிய பிரமுகர்* என்பது
குறிபிடத்தக்கது).

28. இந்தியாவில் உள்ள *அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள்,*
*RSS*
*ஆதரவாளர்கலால்தான் நடத்தப்படுகிறது.*
காரணம் அனைத்து துறைகளிலும் இவர்கள் ஊடுருவி விட்டனர்.

எகா:- *தந்தி டிவி செய்தியாளர் ரங்கராஜ்பாண்டே*

29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின்
முக்கிய முடிவுகளை
தீர்மானிக்கிறது . *பாஜக கட்சியின் தற்போது நரேந்திர மோடி,* *அமீத்ஷா ,* *ராஜ்நாத் சிங், 1947* *ஆண்டிற்கு முன்பின் சர்தார் வல்லபாய் படேல்,* *சர்வர்க்கார்,* *வாஜ்பாய், எல்.கே.அத்வானி,* *சுப்பிரமணியசாமி போன்ற எல்லோரும்*
*RSS அடிப்படை கோர் உறுப்பினர்கள்.*

தமிழகத்தில் *நிர்மலா சீத்தாராமன்,* *வானதி சீனிவாசன்,* *எச்.ராஜா,* *இல.கணேசன்,* *பொன்.ராதாகிருஷ்ணன்,* *தமிழிசை போன்றோர்கள் RSS -ல் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் தான்.*

30 .இவர்களின் ஆலோசனையின்படியே
“இந்திய உளவுத்துறைகளான ” ரா “
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..
ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன -அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்……….>

31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது -பெண்கள் படிக்கக்கூடாது - வேலைக்கு போகக்கூடாது –
பெண்ணின் வேலை -பிள்ளை பெற்று
வீட்டில் இருந்து பரமரிக்கவேண்டியதுதான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம் –

32.வெள்ளையர்களுக்கு எதிராக போராட திராணி இல்லாமல்,
*இந்த தேசத்தின் சுதந்திர தியாகிகளை காட்டிக்கொடுத்தவர்கள் இந்த RSS.*

*இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை*

33.கோவில்களில் “பார்ப்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பனர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால் தீட்டு என்ற கொள்கையை  அமல்
படுத்தியதும் இந்தஆர் எஸ் எஸ். தான்.

34.இந்தியாவில் இது போன்ற எந்த அமைப்பையும் மத்திய அரசு தடைசெய்தது இல்லை, ஆனால் *RSSயை மூன்றுமுறை தடைசெய்தார்கள்
*1) காந்தியார் கொலை,*
*2) பாபர் மசூதியை இடித்த போதும் தடைவிதித்தனர்.*

*இந்த தேசத்துரோகிகள் RSS & BJP பற்றி இன்னும் நிறைய இருக்கிறது..*

*உலகத் தமிழர்களே எச்சரிக்கை!*
*இந்திய தேசியவாதிகளே எச்சரிக்கை!!*

*மண்ணின் மைந்தர்களே நாம் அனைவரும் "தமிழர்கள்"* என்னும் ஒருமைப்பாட்டிற்குள் நின்று
*இவர்களைக் கட்டாயம் விரட்டியடிக்க வேண்டும்.*
💪💪💪✊✊✊👊👊👊

பகிரியிலிருந்து..
(வாட்ஸ்சப்)

#GoBackModi

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

கோட்சேயும் - குருமூர்த்தியும்!

கேள்வி: மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேயின் இந்தியா வேண்டுமா? என்று மக்களைப் பார்த்து கேட்கிறாரே ராஹூல் காந்தி?


பதில்: கோட்சேவின் இந்தியா வேண்டுமா?' என்று கூறியது ஹிந்து மகாசபை. அது இருந்த இடம் தெரியவில்லை என்பது ராஹூல் காந்திக்குத் தெரியவில்லை. எனவே, கோட்சே இந்தியா வேண்டும்' என்று கேட்பதற்கு யாரும் இல்லை என்பதும் அவருக்குத் தெரியவில்லை.


- துக்ளக்', 3.4.2019,

பக்கம் 26

சங் பரிவார்கள் பச் சோந்தி போல உருமாறிக் கொள்ளக் கூடியவைதான் - எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை கள்தான்.

பல பெயர்களை வைத்து நான் அது அல்ல - அது நானல்ல! என்று கூறும் சூழ்ச்சிக்காரர்கள் இப்படித்தான் பல நாக்குகளில் பேசுவார்கள்.

கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன்தான் என்பதற்கு வெகு தூரம் செல்லவேண்டாம் - கோட்சேயின் சகோதரனும், காந்தியார் கொலையில் ஆயுள் தண்டனை பெற்றவனுமான கோபால் கோட்சே ஒப்புக் கொண்ட உண்மை. துக்ளக்' குக்குத் தொப்புள் கொடி உற வான தினமலரி'லிருந்தே எடுத்துக்காட்டலாமே!

நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே சமீ பத்தில் ஹைதராபாத்தில் பேட் டியளித்தபோது, ஆர்.எஸ்.எஸ். தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டன் என்றால் தன் வாழ்நாள் முழுவதும் அதில் முழு மூச்சாக இருக்கவேண்டும். இதற்கு எனது அண்ணன் நாதுராம் கோட்சேவை  உதார ணமாகக் கூறலாம் என்று கூறியுள்ளார் (தினமலர்', 11.2.1988, திருச்சி பதிப்பு).

'தினமலர்' கூறிவிட்டதால் திரிநூல் குருமூர்த்தி அய்யர்வாள் சப்தநாடியும் அடங்கி ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் ரூ.2989 கோடி செலவில் வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியுள்ளாரே பிரதமர் மோடி. - அந்த வல்ல பாய் படேல் ஜனசங்கத் தலை வரான டாக்டர் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து மகாசபை இவ்விரு அமைப்புகளின் நடவடிக்கைகள் காரணமாகத்தான் காந்தியார் கொலை என்ற துயரமான நிகழ்ச்சி நடந்தது என்று எழுதி யுள்ளாரே!

'துக்ளக்'கின் பதில் என்ன?

கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரர் என்று இந்தியா டுடே' ஏட்டின் முதன்மை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அருண்பூரி, பிரபு சாவ்லா, மோகினி புல்வா ஆகியோர்மீது வழக்குத் தொடுக் கப்பட்டது.

இதுகுறித்து டில்லி உயர்நீதி மன்ற நீதிபதி மகேஷ்குரோவர் கூறிய தீர்ப்பு முக்கியமானது. கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எழுதியது குற்றமல்ல என்று தீர்ப்பில் கூறியுள்ளாரே!

‘‘Reference to Godse has RSS member can't be termed defamatory'' (The Hindu, 25.5.2007, Page 15).

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா குருமூர்த்தி குருக் களுக்கு?

- மயிலாடன்

- விடுதலை  நாளேடு, 2.4.2019

வியாழன், 4 ஏப்ரல், 2019

இப்படியும் கூட...



கடைக்காரர் இல்லாமலே லாபகரமாக ஒரு கடை கேரளாவில் இயங்கிவருகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மக்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடையில், இதுவரை திருட்டு நடந்ததில்லை.

கன்னூரின் ஆழிக்கோடை ஒட்டிய கிராமம் வங்குலத்துவாயல். இங்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இந்தக் கடை இயங்கிவருகிறது. ஜனசக்தி அறக்கட்டளை என்னும் என்ஜிஓ இந்தக் கடையை நிர் வகித்து வருகிறது.

இதுகுறித்துப் பேசுகிறார் அந்த அமைப் பைச் சேர்ந்த சுகுணன். ''முதலில் அந்த இடத் தில் கிராமத்து மக்களுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு தன்னார் வலர்கள் மூலம் வயதானவர்களுக்கும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் மருந்து வாங்கிக் கொடுக்கும் இடமாகப் பயன்படுத்தினோம். ஒவ்வொருவருக்கும் மருந்து வாங்க சுமார் 1000 ரூபாய் தேவைப்பட்டது. அவர்களில் சிலர் வித்தியாசமான, அழகிய வடிவங்களில் சோப், பவுடர்களை உருவாக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆனால் அவற்றை விற் பனை செய்யத் தோதான இடம் இல்லை.

உடனே ஒரு யோசனை உருவானது. எங்களின் இடத்தில் இந்தக் கடையைத் தொடங்கினோம். இந்தக் கிராமத்தில் உள்ள அனைவரையும் எங்களுக்குத் தெரியும். அவர்களைப் பரிபூரணமாக நம்பினோம். கடைக்காரர் ஒருவரை நியமிப்பது குறித்து யோசிக்கவே இல்லை. சதானந்தன் என்னும் காய்கறி வியாபாரி தினந்தோறும் தனது கடையைத் திறக்கும்போது திறந்து, மாலையில் மூடிவிடுவார்.

இப்போது சக்கர நாற்காலியில் இருப் போர் மற்றும் நடக்க முடியாத 5 பேர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்கிறோம். கல்ஃபில் பணியாற்றி முதுகு ஒடிந்து நாடு திரும்பிய கலீல், பிறந் ததில் இருந்தே நடக்க முடியாமல் இருக் கும் சுபைதா, சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை நகர்த்தும் சுகுமாரன், கால்பந்து விளையாட்டில் காயம் பட்ட வினோத் மற்றும் ஸ்ரேயா இல்லத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆகியோர் பொருட்களை உருவாக்குகின்றனர்.

சோப்புகள், சலவை பொடிகள், சட்டை, மெழுகுவர்த்திகள், தேங்காய் ஓடு ஸ்பூன் கள் மற்றும் பேனாக்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறோம்.

ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 1000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது சராசரியாக ரூ.750-க்கு வியாபாரம் நடக்கிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை பணத்தை எடுத்துவருவோம். இதுவரை பணம் திருடு போனதில்லை. கணக்கு இடித்ததில்லை. சொல்லப்போனால் 5 ரூபாயோ, 10 ரூபாயோ அதிகமாகத்தான் கிடைத்திருக்கிறது'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் சுகுணன்.

-  விடுதலை ஞாயிறு மலர், 23.3.19

புதன், 3 ஏப்ரல், 2019

அம்பேத்கரின் கேள்வி!



1918-வாக்கில் திலகர் பேசுகிறார்:

இப்போது எல்லோரும் சட்டசபைக்குப் போக வேண்டு மென்று முயற்சி செய்கிறார்கள். எதற்காக செருப்புத்தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்குக் கடை வைத்திருப்பவனும் (The Cobblers, the oil mongers and petty-traders) சட்டசபைக்குப் போக வேண்டு மென்று முயற்சி செய்கிறார்கள்? யார், யார் எதெதற்குப் போகவேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?'' என்று பேசியிருக்கிறார்.

இதை மிகவும் கடுமையாகக் கண்டித்து, காங்கிரஸ் காரர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்களுக்கும் மனிதாபி, மானத்திற்கும், தாழ்த்தப்பட்டவர்களுடைய உரிமைக்கும் என்ன சம்பந்தம்?'' என்று தான் பாபாசாகேப் அம்பேத்கார் அவர்கள் தமது புத்தகத்திலே கேள்விக்கணை தொடுத்திருக்கின்றார்.

“WHAT GHANDHI AND CONGRESS HAVE DONE TO UNTOUCHABLES?”

- விடுதலை ஞாயிறு மலர், 23. 3 .2019

லாலா லஜபதி கூறுகிறார்



"எந்த ஜன சமுகத்தில் நாளதுவரை யாராவது ஒருவரு டைய கடவுள் பக்தியைத் தெரிவிப்பதற்கு நெற்றியில் நாமம் முதலிய குறிகள் நீண்டோ வட்ட வடிவமாகவோ இருக்க வேண்டியது அவசியம் என்று கருதப்படுகிறதோ அந்த ஜன சமுகத்தில் அரசியல் சுதந்திரத்தை பரவச் செய்வது ஒருக்காலும் முடியாத காரியம். மத சம்பந்தமாகவோ, ராஜிய சம்பந்தமாகவோ, சமுக சம்பந்தமாகவோ மற்றும் வேறு சம்பந்தமானாலும் சுதந்திர பிரச்சாரம் செய்ய முற்பட்டால் அதில் முதலாவதாக மனித சுதந்திரம் கொஞ்சமாவது வெளிப்பட வேண்டும்.

எந்த மதத்தில் பகுத்தறிவோடு யோசனை செய்யும் மனோபாவத்திற்கு இடம் சற்றேனும் இல்லையோ அதில் ராஜிய சுதந்திர நோக்கத்தைப் புகுத்தல் அசாத்தியம். இல்லாவிட்டாலும் நிச்சயமாக சுலபத்தில் சாத்தியமாகக்கூடிய காரிய மல்ல என்றே கூறுவேன்.

- லாலா லஜபதிராய் (திராவிட நாடு, 17.10.1948

- விடுதலை ஞாயிறு மலர், 23. 3 .2019

என்னை மாற்றிய நூல்

"காஞ்சி சங்கராச்சாரி யார்?"




என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை  ஏற்படுத்தியவன் என் நண்பன் கா.திருமாவளவன். திருச்சியில் இருந்து அவனுடைய தந்தையார் காளிமுத்து பணி மாறுதல் காரணமாக கோவில்பட்டி வந்த போது திருமாவளவனின் நட்பு ஏற்பட்டது. நான் படித்து வந்த இலக்குமி ஆலை மேனிலைப் பள்ளியில் அவனும் வந்து சேர்ந்தான். எட்டாம் வகுப்பில் பள்ளித் தோழர்கள் ஆனோம். இன்றும் தொடர்கிறது அந்த நட்பு. திராவிட இயக்கத்தின் குடும் பத்தை சேர்ந்தவன்.

அவன் தனது வீட்டில் இருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து வந்தான். ஒன்று, கடவுளர் கதைகள் என்ற நூல். இன் னொன்று, சங்கராச்சாரியார் யார்?

என்கின்ற நூல்.



முதலில் சொன்ன நூல். 'சாமி' என்பவரால் எழுதப்பட்டது. புராண ஆபாசங்களை புட்டுப் புட்டு வைக்கும் நூல். அந்த வயதில் அந்நூல் அதிக ஈர்ப்புக்குரியதாக இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட சங்கராச் சாரியார் யார்? என்கிற புத்தகம்தான் திரும் பத் திரும்ப படிக்கத் தூண்டியது. ஆரியக் கொடுக்கின் கூர்மையை, வன்மத்தை என் சிந்தனைக்கு முதலில் உணர்த்திய முழு முதல் நூல் இது.

இந்நூல் வெளிவந்த 1983ஆம் ஆண்டு களில், சங்கராச்சாரியார் இப்போது இறந்த காலத்தில் பட்ட அவமானங்களைப்பட வில்லை. 1983களில் சங்கர்ராமன் கொலை நடக்கவில்லை. கொலை என்பது காஞ்சிபுரம் ரோட்டில் நடந்திருந்தாலும் பரவாயில்லை. வரதராஜ பெருமாள் கோவில் உள்ளேயே நடந்தது. அனுராதா ரமணனின் பேட்டிகள் அந்தக் காலத்தில் வெளிவரவில்லை. யாரோ ஒரு பெண் சொல்லி இருந்தால், சொல்லிக் கொடுத்து சொல்லி இருப்பாள் என்று உதாசீனப்படுத்தப்பட்டு இருப்பார். சொன்னது அனுராதா ரமணன். நாடறிந்த கதாசிரியர். சங்கராச்சாரியாரை முன்னர் பூஜித்தவர். பின்னர் தூற்றியவர். தூற்றியதற்கான காரணம், ஆபாசங்களின் உச்சம். எது பூஜையறையில் இருக்க வேண்டியதோ, அது பள்ளியறைக்கு ஆசைப்பட்ட காட்சிகள் அவை. இது போன்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காத 1983களிலேயே சங்கராச்சாரியார் யார்? என்று பேசி, இரண் டாயிரமாவது ஆண்டிலேயே உணர்த்தி யவர் திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர், அன்றைய பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள்.

இந்த புத்தகத்தின் பாணியே வித்தியா சமானது. காஞ்சி சங்கராச்சாரியார்? என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் பத்து நாட்கள் பேசியதை பத்திரி கையாளர் சின்னக்குத்தூசி அவர்கள் கட்டுரையாக எதிரொலி நாளிதழில் எழுதினார். அதன் தொகுப்பு தான் இந்நூல். சங்கராச்சாரியார் யார்? என்பது முக்கியத் தலைப்பாகவும், தமிழர் தளபதி வீரமணி தொடர் உரை எதிரொலியில் சின்னக்குத்தூசி கட்டுரைத் தொகுப்பு என்பது துணைத் தலைப்பாகவும் இருக்கும்.

காஞ்சி சங்கராச்சாரி யார்? என்கிற கோபக் கேள்வி எழ என்ன காரணம்?

அதற்கு சில வாரங்களுக்கு முன்னால் காஞ்சி ஜெயேந்திரரை பத்திரிகையாளர் கள் சின்னக்குத்தூசியும், ஞாநியும் சந்தித்து ஒரு பேட்டி எடுத்தார்கள். அதில் ஜெயேந் திரர் இப்படி குறிப்பிட்டார்.

கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங் கள்; என்னைப் பற்றி எது வேண்டுமா னாலும் சொல்லட்டும். நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுப்படுத்திப் பேச வேண்டும். நான் வழிபடும் ஆண்டவனி டத்திலேதான் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டேன். அதன் படியே அவரும் படுத்துவிட்டார் என்கிறார் ஜெயேந்திரர். இப்படி ஜெயேந்திரர் சொன்னது 1983இல். ஜெயேந்திரர் மறைந்த பிறகு 2018இல் தான் கலைஞர் மறைந்தார் என்பது வரலாறு.

நான் வழிபடும் ஆண்டவனிடத்திலே தான் அவருக்குத் தண்டனை அளிக்கும்படி, முறையிட்டேன். அதன்படியே அவரும் படுத்துவிட்டார் என்பது என்னே ஜீவ காருண்யம்! அன்பைப் போதிக்கும் மடத் தலைவர் சொல்லும் வார்த்தைகளா இவை?

உடல்நலக்குறைவு என்பது எல் லோருக்கும் ஏற்படும். அது ஒன்றும் பெரிய சங்கதி அல்ல. சங்கராச்சாரியார்கள் இதற்கு விதி விலக்கா? தைரியம் இருந்தால் சொல்லட்டும் (பக். 7) என்று கேட்டார் வீரமணி. அத்தோடு இன்னொன்றையும் கேட்டார். இந்த சங்கர மடம் உருவாக்கப் பட்டு யார் யார் மடாதிபதிகளாக இருந்தார் கள் என்று வரிசைப்படுத்தினார் வீரமணி. சந்திரசேகரர்-மி, (1814-1851), சந்திரசேகரர் மிமி (1851-1891) சந்திரசேகரர் மிமிமி. அதன் பிறகு வந்தவர் மகாதேவர். இவர் 7 நாட்கள்தான் சங்கராச்சாரியராக இருந்தார். 7 நாளில் இறந்துவிட்டார். இதைச் சொல்லிவிட்டு வீரமணி கேட்டார்.

கலைஞர் உடல் நலம் கெட வேண்டி னேன் என்று இன்று சங்கராச்சாரியார் சொல்கிறாரே, அந்த சங்கராச்சாரியார் வாதப்படி இந்த நான்காவது மகாதேவர் பதவியேற்ற ஏழாவது நாளிலேயே இறந் தாரே. அவர் இறக்குமாறு அடுத்து வந்த சங்கராச்சாரியார் வேண்டினாரா? (பக். 9)

என்று கேட்டார். இந்த வரிசையில் வீரமணி வைத்த மிக முக்கியமான ஆதாரக் கேள்வி.

இன்று சங்கர மடம், சங்கர மடம் என் கிறார்களே இந்த, சங்கரமடம் ஆதிசங்கர ரால் உருவாக்கப்பட்டதல்ல என்பதற்கான ஆதாரங்களை வீரமணி வெளியிட்டார்.

ஆதிசங்கரர் 4 மடங்களைத் தான் உண் டாக்கினார். 5ஆவது மடமாக இவர்களே காஞ்சி மடத்தை உண்டாக்கிக் கொண்டு ஆதிசங்கரர் பெயரால் வரலாற்றுத் திரிபு செய்து வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக அனைத்திந்திய சங்கர பகவத்பாத சிஷ்யர் கள் எழுதிய நூலையே வீரமணி ஆதார மாகக் காட்டினார். புத்தகத்தின் பெயர் தஷிணாம் நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா? என்பதாகும்.

32 வயதுக்குள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்த ஆதிசங்கரர், நான்கு திசை களிலும் நான்கு பீடங்களை உருவாக் கினார். கிழக்கில் ஜெகன்னாத் பூரியிலும், தென் திசையில் சிருங்கேரியிலும், மேற்கு திசையில் துவாரகையிலும், வடக்கில் பத்ரி நாத்திலும் பீடங்களை உருவாக்கினார். இந்த நான்கு ஆம்னாய பீடங்களில் பரம்பரையாக வருபவர்களுக்கு மட்டுமே 'ஜெகத் குரு' என்ற பட்டம் உண்டு என்கிறது தஷிணாம்நாய பீடம் புத்தகம். இதற்கு ஆதாரமான நீதி மன்றத் தீர்ப்புகளையும் வீரமணி குறிப் பிட்டார். 19.11.1936 அன்று பாட்னா நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நான்கு மடங்கள் மட்டுமே ஆதிசங்கரர் உருவாக்கியது, 5 ஆவது மடமாக சொல்லப்படும் கும்பகோணம் (காஞ்சி) மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப் பட்டதல்ல என்கிறது இந்தத் தீர்ப்பு.

நாங்களும் சங்கரமடம்தான் என்பதை நிரூபிப்பதற்காக தங்களுக்குத் தாங்களே எழுதிக் கொண்ட வரலாற்று நூல்களை வரிசையாக வீரமணி அம்பலப்படுத்தி இருப்பார். காஞ்சி காமகோடி பீடாதிபதியின் மடம் என்பது கும்பகோணம் மடமே தவிர, சங்கரமடம் அல்ல என்பதை வீரமணி சொல்லி இருப்பார்.

ஜாதியைக் காப்பாற்ற சங்கராச்சாரியார்கள் எடுத்த முயற்சிகள் என்று சொல்லப்படும் வரலாற்றுக் குறிப்புகள் அதிர்ச்சிக்குரியவை. அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராக முடியாத அளவுக்கு அரசியல் சட்டத்தையே உருவாக்கிய சங்கராச்சாரியார் என்ற கட்டுரை (பக். 63) முக்கியமானது.

சுதந்திர இந்தியாவில் மதத்துக்கு பாது காப்பு, இருக்குமா என்று பயந்துள்ளார் சந் திரசேகரர். எனவே, பாராளுமன்ற தூதுக் குழுவினருக்கு அனைவரையும் தந்தி அடிக்கச் சொன்னார். இந்து நாளிதழ் அலுவலகத்துக்கு வந்த பாராளுமன்ற குழுவைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைக்க தாத்தாச்சாரியார் என்பவரை அனுப்புகிறார். 'மதம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று' என்று சந்திரசேகரர் சொல்லி அனுப்பியதாக தாத்தாச்சாரியார் சொல்கிறார். அதன்பிறகு கிரிப்ஸ் தூதுக் குழுவிலும் இதனை வலியுறுத்துகிறார். 'சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. உங்கள் தலைவர்கள் தான் உருவாக்கப் போகிறார்கள். அவர்களைப் பாருங்கள்' என்கிறார் கிரிப்ஸ். உடனே சங்கராச்சாரி யாரின் தூதர்கள், படேலை சந்திக்கிறார் கள். அவரிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.

உடனே, 'அகில இந்திய மடாதிபதிகள் மாநாடு கூட்டுகிறார்கள். அம்பியில் தங்கி யிருந்த சந்திரசேகரர், மூத்த வழக்குரை ஞர்களை அங்கு வரவைத்து ஆலோ சனை தருகிறார். இவர்கள் அம்பேத் கரையும் சந்திக்கிறார்கள். ஒரு மதம் அல்லது மதப்பிரிவு எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்பது சட்டத்தில் சேர்க்கப்படுகிறது. இதன்படிதான் 1970களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்துக்கு தடைபோடப்பட்டது. இன்று சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல் லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை சட்டத்துக்கு விரோதம் - என்று சிலர் சொல்வதற்கு காரணமும் இதுதான். அந்தளவுக்கு மதத்தை, மவுடீகத்தைக் காக்க அரசியலமைப்புச் சட்டம் வரை சென்றவர் களுடைய வரலாற்றை வரிசைப்படுத்தி இருப்பார் வீரமணி.

இந்தப் புத்தகத்தை படித்த காலத்தில், படித்த இளம் வயதில் அதிக கோபத்தை ஏற்படுத்தியது தமிழ்மொழி மீதான அவர்களின் வன்மம்தான். மொழிப் பற்று தான், இனப்பற்றை நோக்கி இழுத்துச் சென்றது என் அளவில்.

"தமிழ்மொழி தாய்மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி, தமிழர் களுக்கு" என்று சொன்னார் ஜெயேந்திரர். இதைத் தான் கலைஞர் அவர்கள் விமர்சித் தார். இந்த விமர்சனம் தான் ஜெயேந்திரரை கோபப்படுத்தியது. 'ஆண்டவனிடம் வேண் டினேன், கருணாநிதி படுத்துட்டார்' என்று பேட்டி அளித்தது அதன் பிறகு தான்.

தமிழ்மொழி தாய்மொழி - சமஸ்கிருதம் தந்தை மொழி என்பதைப் போன்ற அபத் தம் வேறொன்றும் இருக்க முடியாது. இதைக் குறிப்பிட்ட வீரமணி அவர்கள், இராமலிங்க வள்ளலாருக்கும், காஞ்சி சந்திரசேகரருக் கும் நடந்த உரையாடல் ஒன்றைக் குறிப் பிடுவார். சென்னையில் ஒருமுறை சந்திர சேகரரை இராமலிங்க வள்ளலார் சந்தித் திருக்கிறார். அப்போது, "சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி" என்று சந்திரசேகரர் கூற அதனை வள்ளலார் மறுத்துள்ளார். இதுபற்றி எழுதி இருக்கும் ஊரனடிகள், "ஆரிய அரசன் பிரகத்த னுக்கு தமிழ் அறிவுறுத்துவான் வேண்டிக் கபிலர் - குறிஞ்சிப் பாட்டைப் பாடியதனை நிகர்ப்ப, ஆரியம் மட்டுமே நன்குணர்ந்த ஆசாரியராகிய சங்கராச்சாரியாருக்கு தென் மொழிக் கடலும், வடமொழிக் கடலும் நிலை கண்டுணர்ந்த முற்றறிவினராகிய வள்ளல் பெருமானார் தமிழ் என்னும் சொல்லுக்கு ஓர் உரையும் அப்போதே செய்து சங்கராச் சாரியாருக்கு தமிழின் செவ்வியை செவியறி வுறுத்தி அருளினார் என்று குறிப்பிடுகிறார். இதன் பிறகும் தமிழை நீஷபாஷை என்று அந்தக் கூட்டம் கூறிக் கொண்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுக் கிறது. தமிழில் வழிபாடு செய்வதை நிரா கரிக்கிறது. தமிழ்ப் பக்தி இலக்கியங்களை புறந்தள்ளுகிறது.

இப்படியெல்லாம் ஏன் அவர்கள் இருக் கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அன்று முதல் இன்றுவரை இருக்கும் தலை யாய நூல்களில் ஒன்று 'சங்கராச்சாரியார் யார்?' யார் என்று நாம் கேட்டால், யார் என் பதைப் புரிந்து கொண்டோம் என்பது பொருள்!

(புதிய புத்தகம் பேசுது, மார்ச் 2019)

- விடுதலை ஞாயிறு மலர் 23 .3.2019