பக்கங்கள்

பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பழங்குடியினர் காட்டுவாசிகளா? இழிவு படுத்தும் பா.ஜ.க.!

 

பாணன்

பழங்குடியின சமூகங்களை ஆதிவாசிகளுக்குப் பதிலாக ‘வனவாசி’ என்று  மோடி மற்றும் பா.ஜ.க குறிப்பிடுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ள நிலையில், அந்த வார்த்தைகளுக்கு வித்தியாசம் என்ன, அவற்றின் பயன்பாட்டின் வரலாறு என்ன? என்பதைக் காண்போம்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 21.11.2022 அன்று பழங்குடியின சமூகத்திற்காக பா.ஜ.க. மற்றும் அதன் சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘வனவாசி’ என்ற சொல்லை, காங்கிரசால் பயன்படுத்தப்படும் ‘ஆதிவாசி’ என்ற சொல்லுடன் வேறுபடுத்தி கேள்வி எழுப்பினார்.

“பா.ஜ.க.,வினர் உங்களை ஆதிவாசி என்று அழைப்பதில்லை. அவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள்? வனவாசி (காட்டுவாசி)  என்கின்றனர். நீங்கள் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் காட்டில் வாழ்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள், அதாவது நீங்கள் நகரங்களில் வாழ வேண்டும், உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வேண்டும், விமானத்தில் பறக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்ப மாட்டார்கள்,” என்று பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா தொகுதியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி கூறினார்

பழங்குடியினரை விவரிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் பட்டியல் பழங்குடியினர் அல்லது “அனுசுசித் ஜன்ஜாதி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பல பழங்குடியினர் தங்களை ‘மூல்நிவாசி/ஆதிவாசி’ என்று குறிப்பிடுகின்றனர், அதாவது ‘முதல் குடிமக்கள்’. இது பொது சொற்பொழிவுகளில், ஆவணங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

காட்டுவாசிகள் என்று பொருள்படும் ‘வனவாசி’ என்பது சங் பரிவாரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த சங் பரிவார் அமைப்புகள் பழங்குடியினர் பகுதிகளில் “கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க” பரவலாக செயல்படுகிறது. ஓரங்கட்டப்பட்ட பழங்குடி சமூகம் வர்ணாஸ்ரம கட்டமைப்பிற்கு வெளியே உள்ளவர்களாக கருதப்படுவதால், அவர்களை காட்டுவாசிகள் என்றே கூறிவந்தனர்

பழங்குடி சமூகங்களின் மாறிவரும் கலாச்சாரம் மற்றும் ஹிந்து மதத்திலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களையும் உள்ளே இழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களுள் முக்கியமானவரான ராமகாந்த் கேசவ் தேஷ்பாண்டே, எம்.எஸ். கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, டிசம்பர் 26, 1952 அன்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்தை (ABVKA) நிறுவினார்.

பழங்குடியினரின் ‘ஹிந்துமயமாக்கலில்’ சங் பரிவார் முதன்மை கவனம் செலுத்தியது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது அவசியம் என்று கூறியும், அவர்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக்கூறி ஏமாற்றியது.  ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் எப்போதும் பா.ஜ.க.,வுக்கு தேர்தல் வெற்றிகளைப் பெற உதவியது.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்த இந்திய துணைக்கண்டத்திற்கு குடிபெயர்ந்தனர் என்ற ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை, ஆர்.எஸ்.எஸ்.எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. 

பல ஆண்டுகளாக பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிய சங் பரிவார் தலைவரும், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஹர்ஷ் சவுகான், வனவாசி என்ற சொல் 1952 இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நிறுவப்பட்டது என்கிறார்

காட்டுவாசி என்பது பெருமைக்குரிய வார்த்தையாம்

“காடுகளில் வசிப்பவர்கள் பாரம்பரியமாக வனவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராமாயணத்தில் கூட, காடுகளில் வாழும் சமூகங்களை அடையாளம் காண இந்தக் குறிப்பு உள்ளது. வனவாசி என்ற பதம் காட்டுவாசிகளைப் பற்றிய சரியான கருத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இது பெருமைக்குரிய வார்த்தையாகும்” என்று ஹர்ஷ் சவுஹான்  கூறினார்.

“ஆதிவாசிகள் என்ற சொல் 1930களில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. ஆதிவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் இந்தியாவின் சூழலில் அது தவறு. அமெரிக்காவில் பழங்குடியினர் என்ற சொல் பழங்குடியினருக்கு அவர்களின் அடையாளத்தைப் பெற பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால், வனவாசி எளிமையான வார்த்தை - அவர்கள் வனவாசிகள் என்பதை உணர்த்துகிறது” என்று ஹர்ஷ் சவுகான் விளக்கினார்.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்களின் போது, ​​ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா, “ஆதிவாசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வலியுறுத்தினார், மேலும் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது “பஞ்சாதி” ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜெய்பால் சிங் முண்டா பின்னர் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பழங்குடியின பிரதிநிதியாக ஆனார்.

“பல கமிட்டிகள் செய்த எந்த மொழிபெயர்ப்பிலும் ‘ஆதிவாசி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. இது எப்படி நடந்தது? ஏன் என்று கேட்கிறேன், அது செய்யப்படவில்லை. ‘ஆதிவாசி’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படவில்லை, ‘பஞ்சாதி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ஏன்? நமது பழங்குடியினரில் பெரும்பாலானோர் காடுகளில் வாழ்வதில்லை. பட்டியல் பழங்குடியினரின் மொழி பெயர்ப்பு வார்த்தை ‘ஆதிவாசி’யாக இருக்க வேண்டும் என்று உங்கள் மொழிபெயர்ப்புக் குழுவுக்கு நீங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதிவாசி என்ற சொல்லுக்கு அருள் உண்டு. பஞ்சாதி என்ற இந்த பழைய தவறான அடைமொழி ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை, ஏனெனில் சமீப காலம் வரை அது ஒரு நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் குறிக்கிறது, ”என்று ஜெய்பால் சிங் முண்டா கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மிகவும் கவனமாக மீனவர்களையும் வனவாசி என்ற பட்டியலில் சேர்க்க ரகசிய திட்டம் தீட்டி வருகிறது. அதாவது 4 வருண அமைப்பிற்கு வெளியே இருப்பவர்கள் அனைவருமே மனிதர்களோடு வாழத்தகுதி அற்றவர்கள் என்ற பார்வையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொண்டுள்ளது., 

காரணம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் இவர்களுக்கு தொண்டூழியம் செய்ய சூத்திரர், ஆனால் தற்போது பார்ப்பனர் மற்றும் சூத்திரர்கள்(பார்ப்பனர் அல்லாதோர்) மட்டுமே என்று அவர்களே கூறுகின்றனர். இதற்கான கலியுகத்தில் நீதி கேட்டுப்போகும், பிராமணன் போஜனத்திற்கு உத்தியோகம் பார்ப்பான், சூத்திரன் தனது தருமத்திற்கான காரியத்தைச்செய்யமாட்டான் என்று உபநிடதம் கூறுவதாக பஜனைக்கோஷ்டி பார்ப்பனர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். 

 இப்போது சூத்திரர்கள் அல்லாத பழங்குடியினரை சேர்த்தால் வர்ணாஸ்ரம முறையில் குழப்பம் ஏற்படும் ஆகையால் அவர்களை மக்கள் வாழாத பகுதி(காடு)களில் வசிப்பவர்கள் காட்டுவாசிகள்(வனவாசி) என்று அழைக்கின்றனார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவு

ஒடிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் கிழக்கு மற்றும் மலைப்பகுதி மாவட்டங்கள், கிழக்கு மகாராட்டிரா போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறமல் இருக்கவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்கவும் `வன்வாசி கல்யாண்’ என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெரும் நிதியை ஒதுக்கி பழங்குடியின கிராமம் கிராமாக சென்று கிளைகளை திறந்துள்ளது. 

ஒருபுறம் இவர்களை வன்வாசி என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் வனங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று வருகிறது. குஜராத்தில் மூன்று ஆண்டுகள் பெண் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் சிங்கங்கள் வாழும் கிர்காடுகளின் 250 ஏக்கர் நிலத்தை தனது மகளின் நிறுவனத்திற்கு சொற்ப விலைக்கு விற்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார். அவரது மகளோ சுரங்க முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய்களுக்கு நிலத்தை விற்றுவிட்டார். இந்த பிரச்சினை பெரிதாகி அவர் பதவி விலக நேரிட்டது. அந்த நிலங்கள் விற்கும் போது அந்த நிலங்களில் வழ்ந்த பழங்குடியினரின் நிலங்களும் சுரங்க முதலாளிகளின் வசமாகின. 

இன்றுவரை அந்தப்பழங்குடியினர் வாழ்வாதாரமின்றி மூதாதையார்கள் வாழ்ந்த நிலத்தில் அடிமைகளைப்போல் சுரங்க முதலாளிகளின் தயவில் வாழ்ந்து வரும் பெரும் அவலம் நீடிக்கிறது. 

பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொறுத்தவரை இன்றும் பழங்குடியினர் காட்டுவாசிகள் அதனால் தான் அவர்களை மோடி முதல் மோகன் பாகவத் வரை வன்வாசி(காட்டுவாசி) என்று அழைத்துவருகின்றனர்.

புதன், 20 ஜூன், 2018

பா.ஜ.க.வினரின் பாலியல் வன்கொடுமைப் பட்டியலைப் பாரீர்!

தார்மீக ஒழுக்கம் பற்றி வாய் கிழிய பேசும் பா.ஜ.க.வினர் -  சங்பரிவார்க் கும்பலினர் பெண்களை எப்படியெல்லாம் போகப் பொருளாகக் கருதி சீரழித்துள்ள னர் என்பதற்கு ஆதாரமாக நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக் காட்டாக இங்கே சில தரப்படுகின்றன. அவர்கள் கூறும் இந்து ராஜ்ஜியம் என்பது இதுதான்!




பாஜக பிரமுகரால் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளான வழக்குரைஞர்


* அரியானா மாநிலத்தின் பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகனை காவல்துறையினர் பாலியல் புகாரில் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தின் பாஜக தலைவர் சுபாஷ் பராலா. இவரது மகன் விகாஸ் பராலா. விகாஸும் அவருடைய நண்பர் ஆசிஷ் குமார் என்பவரும் நள்ளிரவு 12 மணியளவில் பெண் ஒருவரை காரில் பின்னாலேயே துரத்திச் சென்றுள்ளனர்.

*கருநாடக பாஜக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டனர்.

*குஜராத் பாஜக அமைச்சர்கள் 2 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த போது பிடிபட்டு, பாஜகவின் கலாச் சாரத்தை நாடு முழுவதும் தெரிய வைத் தனர்.

*அருணாசலப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொலி வெளியாகி மாட்டிக் கொண்டார்.

*மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சார விடுதி நடத்திவந்தார் - இவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

*இமாச்சலப் பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா, எதிர்க்கட்சிகளின் போராட்டத் திற்குப் பிறகு பதவி விலகினார்.

*மத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி, வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

*குஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷியின் ஆபாசக் காணொலி வெளியானதை அடுத்து, கட்சிப் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தது.

*மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்த பாஜக தலைவர் ரவீந்தர பவந் தாதே-யின் காணொலி வெளியாகி, கைது செய்யப் பட்டார்.

*ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொலி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது.

*பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

*இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நந்தினி என்ற தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து, கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் சிக்கியுள்ளார்.

*ஆர்.எஸ்.எஸ். தலைவரும், மேகாலயா ஆளுநருமான சண்முக நாதன் (பாஜக நியமனம்), பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகும்படி ஆனது.

கொடூர வன்புணர்வும், கொலையும்


ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று எட்டு வயது சிறுமியான ஆசிஃபா பானு காணாமல் போனாள். எட்டு வயது ஆசிஃபா தன் வீட்டு குதிரைகளை நீர் அருந்த அழைத்துச் செல்லும் போது கடத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில் ஆறு நாட்கள் கழித்து, அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஆசிஃபாவின் உடல் ஜனவரி 17, 2018 அன்று கிடைத்தது. பிரேத பரிசோதனையில், ஆசிஃபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பாலியல் வன் கொடுமை செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, ஜனவரி 10 அன்று ஆசிஃபா பெற்றோர்கள் தங்கள் மகள் காணாமல் போனாள் என்று காவல் நிலையத்தில் புகாரளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மாறாக ஆசிஃபாவின் பெற்றோரை நீங்களே தேடுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பியுள் ளார்கள். பின்னர் பெயருக்கு ஒரு புகாரை பெற்றுக்கொண்டு பெயரளவில் ஒரு தேடுதலை நடத்தி இருக்கிறார்கள்.

ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவளது உடல் முழுவதும் மனிதப் பற்கள் கடித்ததற்கான தடயங்கள் இருந்தன. அவளை பலாத்காரம் செய்துவிட்டு அவள் மீது கற்கள் வீசி அவள் உடலை சிதைத் திருக்கிறார்கள். அவளது தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தன. ஆசிஃபாவை கோயி லுக்குள் கொண்டு சென்று பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள்.

அரசியல் தலையீடுகள் காரணமாக இந்த வழக்கு மிக மெதுவாக நடந்துவந்த நிலையில், அரசியல் தலையீடுகளைக் கடந்து காவல்துறைக் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா, அவரது உதவியாளர் நவீத் பிர்சாதா ஆகியோர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு, தற்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வழக்கில் கோவில் பூசாரி அவரது மகன், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர், மூன்று காவல்துறை அதிகாரிகள் குற்றவாளி களாக அடையாளம் காணப்பட்டு கைதுசெய் யப்பட்டுள்ளனர்

இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது, கைது செய்தவர்களை விடுதலை செய்யவேண்டும்  என்று ஜம்மு-காஷ்மீர் அரசில் கூட்டணி வகிக்கும் பாஜவின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது,  இந்த வழக்கை விசாரணை செய்யும் ஸ்வேதாம்பரி சர்மா என்ற காவல்துறை அதிகாரியிடம் நாங்கள் பிராமணர்கள் வேதத்தில் பிராமணர்கள் தவறுசெய்வது பாவமல்ல என்று குறிப்பிட்டுள்ளது. ஆகையால் எங்கள் மீதான வழக்கை திரும்ப பெறுங்கள் என்றும் குற்றவாளிகளும் அவர்களது தரப்பு பாஜக பிரமுகர்களும் மிரட்டியுள்ளனர்.

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே....


*உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப் பிரதேசமாநிலம் சாஜகான்பூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் வர்மா மகன் தன்னை வலுக்காட்டயமாக கடத்திச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தனக்கு  நீதி வேண்டும் எனவும் ஷாஜகான்பூர் ஆணையர் அலுவலகம் முன் (9.5.2018) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தப் பாதிப்பு 2012 ஆம் ஆண்டு நடந்துள்ளது. அப்போது அப்பெண்ணிற்கு 16வயது ஆகும். அந்த பெண்ணை கடத்திச் என்ற எம்.எல்.ஏ. மகன் அவரை 9 நாட்கள் சிறைவைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



பா.ஜ.க எம்.எல்.ஏ. மகனால் பாதிக்கப்பட்ட பெண்


அப்பெண்ணின் புகாரை மாநில காவல் துறையினர் பதிவு செய்யாமல் அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வரு கின்றனர். இதனால் அவரது குடும்பம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது என்றும் குற்றவாளி மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி வருகிறார்.



உ.பி. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்


*உன்னாவ் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார், மற்றும் அவரது சகோதரர் உறவினர்கள் உதவிகேட்டு வந்த 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறி புகார் கொடுத்தும் ஏற்காமல் காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை பொய்வழக்கில் கைதுசெய்து காவல் நிலையத்திலேயே அடித்துக் கொலை செய்தது. அதன் பிறகு நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகு குற்றவாளி யான சட்டமன்ற உறுப்பினர், அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப் பட்டனர். சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் உத்தரப்பிரதேச மூத்த தலைவரும் வழக்குரைஞருமான சதீஷ் சர்மா பெண் வழக்குரைஞர் ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப் பெண்ணும் லக்னோ சாலையில் போராடி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மீது இதே போன்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான தட வியல் சான்றுகள் அய்தராபாத் பரிசோதனை சாலைக்கு அனுப்பப்பட்டது, தற்போது அந்த முடிவுகள் சிபிஅய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது குல்தீப் சிங் செங்கார்தான் என்பது உறுதிசெய்யப் பட்டுள்ளது.



*மோடியின் அரசில் உரத்துறை அமைச்ச ராக இருக்கும் நிகால் சந்த் மேக்வால் எனபவர் மீது அரியானாவைச் சேர்ந்த சிறுமியை இவர் மற்றும் இவரைச்சேர்ந்த பாஜகவின் மிக முக்கிய பிரமுகர்கள் 17 மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது, சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் அரியானாவில் குறிப்பிட்ட உயர்ஜாதி சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, பாதிக்கப்பட்ட சிறுமி அந்த உயர்ஜாதியைச் சேர்ந்தவர் ஆகும்.  சிறுமியை அரியானா, ராஜஸ்தான் என இருமாநிலத் திற்கும் அழைத்துச்சென்று மயக்கமருந்து கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்முறை செய் தார்கள். குற்றவாளிகள் அனைவரையும் அந்த சிறுமி அடையாளம் காட்டிவிட்டது, ஆனால் இரண்டு மாநில காவல்துறையும் சிறுமி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தொடர்பிருப்பதால் அமைதிகாத்து வருகிறது, இரண்டு மாநிலத்திலுமே பாஜக ஆட்சியில் உள்ளது.  அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் அலைந்து திரிந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஹெத்ராம் பெனிவால் என்பவர் இறுதியில் தனது வழக்குரைஞர் நண்பர்களான இந்தர்ஜித் பிஷ்னோய் மற்றும் நவ்ரங் சவுத்ரி ஆகி யோரின் உதவியோடு வழக்கு பதிந்துள்ளார். ஜெய்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

- இத்தியாதி இத்தியாதி கேவலங்களை இந்துத்துவாதிகள் கூச்சநாச்சம் இல்லாமல் நாள்தோறும் செய்து வருகின்றனர்.

-  விடுதலை ஞாயிறு மலர், 12.5.18

வெள்ளி, 4 மே, 2018

திருந்தாது இந்த ஜென்மங்கள் மீண்டும் பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பேரணி நடத்திய பாஜகவினர்



லக்னோ, ஏப்.29 உத்தரப்பிரதேசம் உன்னாவ் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன் கொடுமை செய்ததாகக் கைது செய்யப் பட்டுஇருக்கும்பாஜகசட்டமன்றஉறுப் பினர் குல்தீப் சிங் செங்காரருக்கு ஆதர வாக பாஜகவினர், பேரணி நடத்தி இருக் கிறார்கள். பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் குடும்பத்தோடு உத்தரப்பிரதேச முதல்வரின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார். அப்போதும் எம்.எல்.ஏ. குல்தீப்மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், காவல் துறையினரும் அந்த பெண்ணின் தந்தை பாப்பு என்ற சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். இதனால் சுரேந்திர சிங் காவல் நிலையத்திலேயே மரணமடைந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங் கார் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.  இந்தநிலையில்குல்தீப்சிங்செங்கார ருக்கு ஆதரவாக உன்னாவ் மாவட்ட பாஜகவினர், பேரணி நடத்தி இருக்கிறார்கள். இந்தப் பேரணிக்கு அந்தப் பகுதியின் பாஜக உறுப்பினரும், பஞ்சாயத்து தலைவருமான அனுஜ்குமார் தலைமை வகித்து இருக்கிறார். அரசியல் பழிவாங்கும் நிகழ்விற்காக, இந்த புகார் குல்தீப் மீது போடப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஊர் மக்களை மிரட்டி, அந்த பேரணியில் நடந்து வர சொல்லி இருக்கிறார்கள். அதே போல் குல்தீப்பிற்கு ஆதரவாக கூச்சலிடவும் சொல்லியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஜனவரி மாதம்8 வயது சிறுமி கோவில் பார்ப்பனப் பூசாரி, அவரது மகன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்குஆளாக்கப்பட்டுகொல் லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தச் சென்ற போது ஜம்மு காஷ்மீர் பாஜக அமைச்சர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள், இந்து எக்தா மஞ்ச் அமைப்பின் பிரமுகர்கள் வழக்குரைஞர்கள் ஒன்று கூடி பேரணி நடத்தினர்.இந்தப் பேரணியில் வந்தே மாதரம் பாரத்மாதாகி ஜே, போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது, மேலும் பாஜக கொடியுடன் தேசியக் கொடியையும் ஏந்திச் சென்றனர். தற்போதும் அதே போல் பாஜகவினர் உன்னாவில் பேரணி நடத்தி பாரத் மாதாகி ஜே என்றும் ஜெய்சிறீராம் என்றும் முழக்கமிட்டவாறு சென்றனர்.

-  விடுதலை நாளேடு, 29.4.18