சனி, 8 ஜூலை, 2023
மயிலை சீனி.வேங்கடசாமி!
வியாழன், 3 டிசம்பர், 2020
சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு
புலவர் செ.ராசு
சமண சமயமும் பவுத்த சமயமும் வடஇந்தியாவில் வைதீகப் பிடியிலிருந்து மக்கட் சமூகத்தை மீட்கத் தோன்றியவை. பவுத்தத்தை விட சமணம் முற்பட்டது.
சமண சமயம் மவுரியப் பேரரசன் சந்திரகுப்தன் காலத்தில் (கி.பி.322_298) பத்திரபாகுவின் (கி.மு.327_297) சீடர் விசாகாச்சாரியார் தலைமையில் வந்த சமணர்களாலும், பவுத்த சமயம் அசோகர் (கி.மு.268_232) காலத்தில் மகேந்திரர் அவர் உதவியாளர் அரிட்டராலும் தமிழகம் புகுந்தது என்பர்.
சமணமும் பவுத்தமும் சமயப் பணியோடு அக்கறையுடன் சமூக நலப் பணிகளும் செய்ததால், தமிழ் மக்களைக் கவர்ந்தது. சமண சமயத்தில் மிகக் கடினமான கட்டுப்பாட்டுடன் பின்பற்றக்கூடிய விதிகள் இருந்தாலும், நான்கு தானங்கள் மிகவும் வற்புறுத்தப்பட்டன. அவை: 1. அன்னதானம், 2. ஔஷத தானம், 3. அபய தானம், 4. சாத்திர தானம் என்பன. சமணப் பள்ளிகளில் அன்னமும், மருந்தும் (ஔஷதம்) அளிக்கப்பட்டன. பகையால், நோயால், இயற்கைச் சீற்றத்தால் நலிவுற்றவர்களுக்கு அபய தானமாகப் பல அஞ்சினான் புகலிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவை அபயம், ரட்சை, ஆசிரயம் என்றும் பெயர் பெற்றன.
பவுத்த சமயமும், பசி, நோய் தீர்ப்பதை முதன்மையாகக் கொண்டது. பசியையும் ஒரு பிணியாகவே பவுத்தம் கூறியது. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என்று பவுத்தக் காப்பியம் மணிமேகலை கூறுகிறது.
மேற்கண்ட செயல்களால், சமணமும் பவுத்தமும் தமிழக மக்களைக் கவர்ந்தன.
தமிழகப் பவுத்த சமயப் பெரிய அறிஞர்கள் போதி தர்மர், புத்த தத்தர், தின்னாகர் போன்றவர்கள் தமிழக எல்லை கடந்து சமயப் பணி புரிந்தனர்.
மக்கள் மட்டுமல்ல பல்லவ, பாண்டிய அரசர்களும் சமண, பவுத்த சமயத்தை ஆதரிக்கத் தொடங்கினர். பல்லவ மகேந்திர வர்மன் (கி.பி.610_630) கூன் பாண்டியன் என்ற நெடுமாறன் நெடுஞ்சடையன் (கி.பி.640_680) ஆகியோர் சமணம் தழுவினர். கொங்குப் பகுதியை ஆண்ட இரட்டர், கங்கர் சமணத்துக்குப் பேராதரவு தந்தனர்.
சமயப் போர்
வைதீகக் காவலர்களான சைவர்களும், வைணவர்களும் தாங்கள் தோற்றுவித்துக் கட்டிக்காத்த வருணாசிரம தர்மமும், சாதி _ பிறப்பால் கற்பித்த ஏற்றத்தாழ்வு படிநிலையும் சமண சமயத்தின் மூலக் கொள்கையான பிறப்பொக்கும் என்ற கருத்துப் பரவலால் அழிவதைக் கண்டு பொறுக்காமல் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் பல வேறுபாடுகள் இருந்தாலும் சமண _ பவுத்த எதிர்ப்புப் போரில் சைவர்களும் வைணவர்களும் ஒன்றாக இணைந்தனர்.
மூவர் தேவாரப் பதிகங்களில் சமணக் கொள்கை எதனையும் எதிர்க்க இயலாமல் சமணர்களை இழித்துப் பேசுவதையே காணுகின்றோம்.
”கையில் உண்ணும் கையர் (கயவர்)”
”நின்று உண்ணும் கள்ளர்”
”அழிவு இல் அரம்பர் மிண்டர்”
என்பன தேவாரத் தொடர்களில் சில. ஒரு படி மேலே சென்று இறைவன் சமணப் பெண்களைக் கற்பழிக்க அருளல் வேண்டும் என்று சம்பந்தர் பாடினார்.
திருமங்கையாழ்வார் நாகப்பட்டினம் பவுத்தப் பள்ளியைக் கொள்ளையடித்த பொருளால் திருவரங்கம் கோயில் திருப்பணிகள் செய்தார்.
தொண்டரடிப் பொடியாழ்வார்
வெறுப்பொடு சமண முண்டர் விதியில் சாக்கியர்களை
தலையை அறுப்பதே சருமங் கண்டாய் அரங்கமா நகர் உளானே
என்று கொலை வெறியோடு படினார்.
தண்டியடிகள் நாயனார் சமணர்கள் அஞ்சி ஓடும்படி விரட்டி அவர்கட்குரிய பல பாழிகளையும் பள்ளிகளையும் இடித்துவிட்டுத் திருவாரூர்க் குளத்தை விரிவுபடுத்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. பல தந்திர உபாயங்கள் செய்து சமண அரசர்களைச் சைவர்களாக மாற்றினர். பல சமணப் பள்ளிகளைச் சிவலயமாக்கினர்.
தலைவெட்டிய சமண சிற்பங்கள்
சமணர்களை விரட்டியபின் பிற்காலக் கொங்கு நாட்டில் தலைவெட்ட சமணர்கள் இல்லாததால் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பிற சிலைகளையும் தலையைத் துண்டித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பருத்திப் பள்ளி, தேவண்ண கவுண்டன் கிடையூர் போன்ற ஊர்களில் தலையற்ற சமண தீர்த்தங்கர் சிலைகள் காணப்பட்டன. கொல்லிமலையிலும், தேவண்ண கவுண்டன் கிடையூரிலும் தலையைத் தேடி எடுத்து பொருத்தி வைத்துப் படம் எடுக்கப்பட்டது. பருத்திப் பள்ளியில் தலை கிடைக்கவில்லை. பருத்திப் பள்ளி கிணற்று மேட்டில் தலையற்ற தீர்த்தங்கர சிற்பம் இன்றும் காணப்படுகிறது.
விஜயமங்கலத்தில் தலையற்ற அம்பிகா சிற்பம் காணப்படுகிறது.
கொங்கு நாட்டில்
கொங்கு நாட்டைப் பொறுத்த வரையில் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சமணம் தன் செல்வாக்கை இழக்காமல் இருந்தது. அதாவது, சோழர், பாண்டியர், ஒய்சளர் ஆட்சி வரை.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மறவபாளையம் அப்பரமேயர் கோயிலின் உள்ள கொங்குச் சோழர் கல்வெட்டில் சமணர்களுக்குத் தீங்கு இழைப்பது பாவம் என்று கூறப்பட்டுள்ளது.
மறு சென்மத்துக்கும் யேழெட்டுச் சமணரைக் கொன்ற
பாவத்திலேயும் கங்கைக் கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவத்திலேயும் போகக் கடவராகவும்
என்பது கல்வெட்டுப் பகுதி.
திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீவேசுவரர் கோயிலில் உள்ள வீரபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் சிவன் கோயில் கொடையில் அங்குள்ள சமணக் கோயிலில் திருப்பணியும் பூசையும் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குறக்குத்தளி ஆளுடைய நாயனார் கோயில் தானத்தாருக்கு
இந்நாயனார் திருப்போரால் சமணசந்தி யுள்ளிட்ட
வெஞ்சனங்கட்கும் திருப்பணிக்கும் திருநாளுக்கும்
திருநாமத்துக் காணிக்கும் தந்தோம்
என்பது கல்வெட்டுப் பகுதி.
அவினாசி வட்டம் சேவூர் வாலீசுவரர் கோயில் ஆவணம் ஒன்றில் அவ்வூர்த் தலைவர் சமணக் கோயிலிலும் வழிபட்ட விபரம் கூறப்பட்டுள்ளது.
சிவத்தலம் விட்டுணுத்தலம், குமாரசமித் தலம், அமணீசுவர சுவாமித் தலம் வணங்கிக் கொண்டு வருகையில்
என்பது ஆவணப் பகுதியாகும்.
கொங்குச் சமணக் கோயில்கட்கும், கொங்கு நாட்டுச் சமணர்கட்கும் சமய அடிப்படையில் தோன்றிய விஜயநகர அரசுக் காலத்திலும், வைணவ சமயம் சார்ந்த மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் சமண கோயில் செல்வாக்கு இழந்து,இ சமணர் வெளியேற்றமும் ஏற்பட்டது.
(தொடரும்)
- உண்மை இதழ், ஜூன் .15- 30 .19
25.01.1988 அன்று ஜெயவர்த்தனா இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு ஜெயவர்த்தனாவின் கொடும்பாவி உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. தோழர்கள் சாரை சாரையாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், என் தலைமையில் பெரியார் திடலிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாகப் புறப்பட்டு ஜெயவர்த்தனாவே ஒழிக என்று முழக்கப்பட்டு கழகத் தோழர்கள் வந்தபோது, திடீரென்ற போலீசு கழகத் தோழர்கள் மீது தடியடி நடத்தியது. இதனைத் தடுக்க நான் கூட்டத்தின் நடுவில் புகுந்து தடுக்க, என் மீது அடித்து அடிபட்டு, தரையில் விழுந்து என் கால் காயம் ஏற்பட்டது. உடனே கழகத் தோழர்கள் என்னைக் காப்பாற்ற சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்பு தோழர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் திடீரென்று இப்படி நடந்துகொண்டது ஏதோ உள்நோக்கத்தோடு எங்கள் மீது தடியடி நடத்தியது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த அமைச்சர் முத்துசாமி தடியடி சம்பவத்தை முன்னிட்டு தோழர்களிடத்திலும் என்னிடத்திலும் மன்னிப்புக் கோரினார்.
இலங்கை அதிபர் ஜெயவர்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்டரல் ரயில் நிலையத்தில் ஆசிரியர் தலைமையில் மறியல் செய்யும் கழகத்தினர்.
இந்த தடியடி சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.
- உண்மை இதழ், ஜூலை, 1 -15 .2019
வியாழன், 26 மார்ச், 2020
ஆய்வுக் கட்டுரை: சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்:இந்து உளவியலின் பொதுப்போக்கு - 2
புலவர் செ.ராசு
ஆழியாறு ஆதாளியம்மன்
ஆழியாறு அருகில் சமணர் கோயில் இருந்து அழிந்துவிட்டது. கோயிலில் இருந்த சமண தீர்த்தங்கரர் சிலை மட்டும் தனியாக இருந்தது. யாரோ அதன் முகத்தைச் சிதைத்தனர். பின்னர் மார்பு, வயிற்றுப் பகுதியைச் சிறிது உடைத்தனர். பின்னர் முகப் பகுதியைப் பெண்போல் ஆக்கி மார்பில் பெண் உறுப்புக்களையும் பெரிதாக அமைத்து வர்ணம் பூசிப் பெண் உருவாக மாற்றியதுடன் அதற்கு ஆதாளியம்மன் என்று பெயரும் வைத்துவிட்டனர். அருகில் உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆதாளியம்மனுக்குத் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபடுகின்றனர். அருகில் விபூதித் தட்டும் வைத்துவிட்டனர்.
தீர்த்தங்கரர் தலைக்கு மேல் இருந்த சகல பாஷணம் சந்திர ஆதித்யம், நித்திய வினோதம் ஆகிய முக்குடைச் சின்னமும் இருபுறமும் இருக்கும் கவரி வீசும் சாமரேந்திர இயக்கர் உருவங்களும் அப்படியே உள்ளன.
பெயர் மாறிய /மாற்றிய தீர்த்தங்கரர்கள்
1. திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அய்யம்பாளையம் அருகில் ஐவர்மலை என்ற மலை உள்ளது. அது சங்க இலக்கியம் புகழும் அயிரைமலை. அங்கு வரகுணபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டின் (870) பார்கவ தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. மற்றும் 16 தீர்த்தங்கரர் சிற்பங்களும் உள்ளன. அவற்றின் கீழ் அந்த சிற்பம் யாரால் செய்விக்கப்பட்டது என்பது ஸ்ரீஅச்சணந்தி செயல், ஸ்ரீஇந்திரசேனன் செயல் என்று வட்டெழுத்தில் கல்வெட்டும் உள்ளது. அதை அறியாமலும் புரியாமலும் அவற்றின் கீழ் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், துரோணாச்சாரியார், சைந்த மகரிஷி, தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், சேரன், சோழன், பாண்டியன், கிருஷ்ணர், திருவள்ளுவர், திருதராட்டிரன் என்று மனம் போனபடி எழுதியுள்ளனர்.
2. கரூர் அருகில் உள்ள புலியூரில் சாலையோரம் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அதை அப்பகுதி மக்கள் முனி அப்புச்சி என்று கூறுகின்றனர்.
3. சேலம் மாவட்டம் மேச்சேரியிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் பொட்டனேரி என்ற ஊர் உள்ளது. பெருமாள் கோயிலுக்கு வடக்கே காட்டில் உள்ள தீர்த்தங்கரர் உருவத்தை உள்ளூர் மக்கள் சித்தர் சாமி என்று அழைக்கின்றனர்.
4. திருப்பூர் மாவட்டம் உடுமலை _ பல்லடம் வழியில் 15ஆம் கிலோ மீட்டரில் வேலாயுதன் புதூரிலிருந்து நெகமம் செல்லும் சாலையில் பெரியபட்டி உள்ளது. அங்கு சுப்பிரமணியர் கோயில் எதிரே சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. ஊர் மக்கள் அதை தருமராஜா என்று கூறுகின்றனர்.
5. ஈரோடு நகரில் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வடகீழ் மூலையில் வேலி ஓரம் சமண தீர்த்தங்கரர் சிலை இருந்தது. மக்கள் அதை மொட்டைப் பிள்ளையார் என அழைத்தனர்.
6. நாமக்கல் மாவட்டத்தில் அர்த்தநாரி பாளையம், திருச்செங்கோடு, மோகனூர் போன்ற பல இடங்களில் சமணக் குகைகள் பல உள்ளன. இவற்றைப் பஞ்ச பாண்டவர் கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர்.
தலைவெட்டி முனியப்பன்
சமண தீர்த்தங்கரர் சிலைகள் மட்டுமல்ல புத்தர் தலையும் வெட்டப்பட்டள்ளது. சேலம் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை இருந்தது. யாரோ புத்தர் தலையை உடைத்துவிட்டனர். இதை அறிந்த சிலர் புத்தர் தலையை இரும்புத் தகட்டில் பொருத்தி வைத்து ஒரு சிறு கோயில் கட்டி உள்ளே புத்தர் சிலையை வைத்துவிட்டனர். புத்தருக்கு தலைவெட்டி முனியப்பன் என்ற பெயரும் வைத்துவிட்டனர். இன்று அந்தப் பெயராலேயே புத்தர் அழைக்கப்படுகிறார்.
ஏ.டி.ஹெச்.டி’ பிரச்னைக்குத் தீர்வு காணும் குங்குமப்பூ!
ஏ.டி.ஹெச்.டி (ADHD) எனப்படும் அட்டென்ஷன் டெஃபிசி ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder) குறைபாட்டை குணப்படுத்த குங்குமப்பூவைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிற டெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
குழந்தைகள் வளரிளம் பருவத்தினர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் ஏ.டி.ஹெச்.டி, ஒரு நரம்பியல் உளவியல் குறைபாடு. இதைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்துகளுக்கு இணையாகக் குங்குமப்பூவும் அதன் அறிகுறைகளைக் கட்டுப்படுத்துவதாக இந்தப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், குங்குமப்பூவில் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தும், நினைவாற்றலை மேம்படுத்தும் குணங்கள் இருக்கின்றனவாம்.
விபூதிப் பூச்சில் தீர்த்தங்கரர்கள்:
சில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகட்கு உள்ளூர்ப் பூசாரிகள் விபூதிப் பூச்சுப் பூசியுள்ளதைக் காண்கிறோம்.
கோயம்புத்தூரில் வடக்கே கோயில்பாளையம் என்ற ஊர் உள்ளது. இலக்கியங்களில் கவசை என்றும் அரசு ஆவணங்களில் சர்க்கார் சாமக்குளம் என்றும் வழங்கப்படும் ஊர். அவ்வூரில் உள்ள ஒரு மேடையில் விநாயகருக்கு அருகில் சமண தீர்த்தங்கரர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்குப் பூசை செய்யும் உள்ளுர் அர்ச்சகரான பண்பாரம் சமண தீர்த்தங்கரர் சிலைக்கும் விபூதி பூசிப் பூசை செய்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை _திங்களூர் சாலையில் மமுட்டித் தோப்பு என்ற இடத்தில் முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் (ஆதி நாதர்) கோயில் உள்ளது. அங்குள்ள ரிஷப தேவருக்கும் விபூதிப் பூச்சுப் பூசப்பட்டுள்ளது.
இருந்து மறைந்த சமணர் சிலைகள்
சில கொங்கு வரலாற்று நூல்களின் சமணச் சிலைகள் உள்ளதாகக் குறிப்பிடும் இடங்களில் இன்று சமணச் சிலைகள் காணப்படவில்லை.
1934இல் திருச்செங்கோடு அ.முத்துசாமி கோனார் எழுதிய கொங்குநாடு என்னும் நூலில்,
தாராபுரத்துக்கு வடக்கே ஒரு பர்லாங் தூரத்தில் வயலிடையே ஒரு திட்டில் யட்சி, சந்திர பிரப தீர்த்தங்கரர் திருஉருவம் 5 அடி உயரத்தில் நல்ல வேலைப்பாடாகவும், அருகே சிலைகள் உடைந்தும் அநேக சிலைகள் புதைந்தும் உள்ளன.
என்று எழுதியுள்ளார். ஆனால், அவ்விடத்தில் அந்தச் சிலைகள் எதுவும் இல்லை.
1950ஆம் ஆண்டு கோவைக்கிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய கொங்குநாடும் சமணமும் என்ற நூலில் காங்கேயம் சந்தை மேட்டிலும், பழங்கரை கிராமத்திலும் சமணச் சிலைகள் இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால், அங்கு இன்று சமண சிலைகள் எதுவும் இல்லை.
கொங்கு நாடெங்கும் பரவலாக வாழ்ந்த சமணர்கள் இன்று ஈரோடு மாவட்டம் பூந்துறை, விசயமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களில் மட்டும் வாழ்கிறார்கள். எந்த ஆதரவும் அற்ற நிலை. ஆதரிப்பார் இன்றி வெளியேறிய கொங்குச் சமணர்களின் அடையாளம் பாலக்காடு, வைநாடு, கருநாடக கெல்லிசூர், இராமநாதபுர அனுமந்தக்குடி, பரமக்குடி பகுதியில் காணப்படுகின்றன. பலர் சமணத்தை மறந்து மொட்டை வேளாளர் என்ற பெயரில் பிற சமுதாயத்தோடு இணைந்துவிட்டனர்.
- உண்மை இதழ், 1-15.7.19
சனி, 7 செப்டம்பர், 2019
சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு
சமண சமயமும் பவுத்த சமயமும் வடஇந்தியாவில் வைதீகப் பிடியிலிருந்து மக்கட் சமூகத்தை மீட்கத் தோன்றியவை. பவுத்தத்தை விட சமணம் முற்பட்டது.
சமண சமயம் மவுரியப் பேரரசன் சந்திரகுப்தன் காலத்தில் (கி.பி.322_298) பத்திரபாகுவின் (கி.மு.327_297) சீடர் விசாகாச்சாரியார் தலைமையில் வந்த சமணர்களாலும், பவுத்த சமயம் அசோகர் (கி.மு.268_232) காலத்தில் மகேந்திரர் அவர் உதவியாளர் அரிட்டராலும் தமிழகம் புகுந்தது என்பர்.
சமணமும் பவுத்தமும் சமயப் பணியோடு அக்கறையுடன் சமூக நலப் பணிகளும் செய்ததால், தமிழ் மக்களைக் கவர்ந்தது. சமண சமயத்தில் மிகக் கடினமான கட்டுப்பாட்டுடன் பின்பற்றக்கூடிய விதிகள் இருந்தாலும், நான்கு தானங்கள் மிகவும் வற்புறுத்தப்பட்டன. அவை: 1. அன்னதானம், 2. ஔஷத தானம், 3. அபய தானம், 4. சாத்திர தானம் என்பன. சமணப் பள்ளிகளில் அன்னமும், மருந்தும் (ஔஷதம்) அளிக்கப்பட்டன. பகையால், நோயால், இயற்கைச் சீற்றத்தால் நலிவுற்றவர்களுக்கு அபய தானமாகப் பல அஞ்சினான் புகலிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவை அபயம், ரட்சை, ஆசிரயம் என்றும் பெயர் பெற்றன.
பவுத்த சமயமும், பசி, நோய் தீர்ப்பதை முதன்மையாகக் கொண்டது. பசியையும் ஒரு பிணியாகவே பவுத்தம் கூறியது. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என்று பவுத்தக் காப்பியம் மணிமேகலை கூறுகிறது.
மேற்கண்ட செயல்களால், சமணமும் பவுத்தமும் தமிழக மக்களைக் கவர்ந்தன.
தமிழகப் பவுத்த சமயப் பெரிய அறிஞர்கள் போதி தர்மர், புத்த தத்தர், தின்னாகர் போன்றவர்கள் தமிழக எல்லை கடந்து சமயப் பணி புரிந்தனர்.
மக்கள் மட்டுமல்ல பல்லவ, பாண்டிய அரசர்களும் சமண, பவுத்த சமயத்தை ஆதரிக்கத் தொடங்கினர். பல்லவ மகேந்திர வர்மன் (கி.பி.610_630) கூன் பாண்டியன் என்ற நெடுமாறன் நெடுஞ்சடையன் (கி.பி.640_680) ஆகியோர் சமணம் தழுவினர். கொங்குப் பகுதியை ஆண்ட இரட்டர், கங்கர் சமணத்துக்குப் பேராதரவு தந்தனர்.
சமயப் போர்
வைதீகக் காவலர்களான சைவர்களும், வைணவர்களும் தாங்கள் தோற்றுவித்துக் கட்டிக்காத்த வருணாசிரம தர்மமும், சாதி _ பிறப்பால் கற்பித்த ஏற்றத்தாழ்வு படிநிலையும் சமண சமயத்தின் மூலக் கொள்கையான பிறப்பொக்கும் என்ற கருத்துப் பரவலால் அழிவதைக் கண்டு பொறுக்காமல் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் பல வேறுபாடுகள் இருந்தாலும் சமண _ பவுத்த எதிர்ப்புப் போரில் சைவர்களும் வைணவர்களும் ஒன்றாக இணைந்தனர்.
மூவர் தேவாரப் பதிகங்களில் சமணக் கொள்கை எதனையும் எதிர்க்க இயலாமல் சமணர்களை இழித்துப் பேசுவதையே காணுகின்றோம்.
”கையில் உண்ணும் கையர் (கயவர்)”
”நின்று உண்ணும் கள்ளர்”
”அழிவு இல் அரம்பர் மிண்டர்”
என்பன தேவாரத் தொடர்களில் சில. ஒரு படி மேலே சென்று இறைவன் சமணப் பெண்களைக் கற்பழிக்க அருளல் வேண்டும் என்று சம்பந்தர் பாடினார்.
திருமங்கையாழ்வார் நாகப்பட்டினம் பவுத்தப் பள்ளியைக் கொள்ளையடித்த பொருளால் திருவரங்கம் கோயில் திருப்பணிகள் செய்தார்.
தொண்டரடிப் பொடியாழ்வார்
வெறுப்பொடு சமண முண்டர் விதியில் சாக்கியர்களை
தலையை அறுப்பதே சருமங் கண்டாய் அரங்கமா நகர் உளானே
என்று கொலை வெறியோடு படினார்.
தண்டியடிகள் நாயனார் சமணர்கள் அஞ்சி ஓடும்படி விரட்டி அவர்கட்குரிய பல பாழிகளையும் பள்ளிகளையும் இடித்துவிட்டுத் திருவாரூர்க் குளத்தை விரிவுபடுத்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. பல தந்திர உபாயங்கள் செய்து சமண அரசர்களைச் சைவர்களாக மாற்றினர். பல சமணப் பள்ளிகளைச் சிவலயமாக்கினர்.
தலைவெட்டிய சமண சிற்பங்கள்
சமணர்களை விரட்டியபின் பிற்காலக் கொங்கு நாட்டில் தலைவெட்ட சமணர்கள் இல்லாததால் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பிற சிலைகளையும் தலையைத் துண்டித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பருத்திப் பள்ளி, தேவண்ண கவுண்டன் கிடையூர் போன்ற ஊர்களில் தலையற்ற சமண தீர்த்தங்கர் சிலைகள் காணப்பட்டன. கொல்லிமலையிலும், தேவண்ண கவுண்டன் கிடையூரிலும் தலையைத் தேடி எடுத்து பொருத்தி வைத்துப் படம் எடுக்கப்பட்டது. பருத்திப் பள்ளியில் தலை கிடைக்கவில்லை. பருத்திப் பள்ளி கிணற்று மேட்டில் தலையற்ற தீர்த்தங்கர சிற்பம் இன்றும் காணப்படுகிறது.
விஜயமங்கலத்தில் தலையற்ற அம்பிகா சிற்பம் காணப்படுகிறது.
கொங்கு நாட்டில்
கொங்கு நாட்டைப் பொறுத்த வரையில் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சமணம் தன் செல்வாக்கை இழக்காமல் இருந்தது. அதாவது, சோழர், பாண்டியர், ஒய்சளர் ஆட்சி வரை.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மறவபாளையம் அப்பரமேயர் கோயிலின் உள்ள கொங்குச் சோழர் கல்வெட்டில் சமணர்களுக்குத் தீங்கு இழைப்பது பாவம் என்று கூறப்பட்டுள்ளது.
மறு சென்மத்துக்கும் யேழெட்டுச் சமணரைக் கொன்ற
பாவத்திலேயும் கங்கைக் கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவத்திலேயும் போகக் கடவராகவும்
என்பது கல்வெட்டுப் பகுதி.
திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீவேசுவரர் கோயிலில் உள்ள வீரபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் சிவன் கோயில் கொடையில் அங்குள்ள சமணக் கோயிலில் திருப்பணியும் பூசையும் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குறக்குத்தளி ஆளுடைய நாயனார் கோயில் தானத்தாருக்கு
இந்நாயனார் திருப்போரால் சமணசந்தி யுள்ளிட்ட
வெஞ்சனங்கட்கும் திருப்பணிக்கும் திருநாளுக்கும்
திருநாமத்துக் காணிக்கும் தந்தோம்
என்பது கல்வெட்டுப் பகுதி.
அவினாசி வட்டம் சேவூர் வாலீசுவரர் கோயில் ஆவணம் ஒன்றில் அவ்வூர்த் தலைவர் சமணக் கோயிலிலும் வழிபட்ட விபரம் கூறப்பட்டுள்ளது.
சிவத்தலம் விட்டுணுத்தலம், குமாரசமித் தலம், அமணீசுவர சுவாமித் தலம் வணங்கிக் கொண்டு வருகையில்
என்பது ஆவணப் பகுதியாகும்.
கொங்குச் சமணக் கோயில்கட்கும், கொங்கு நாட்டுச் சமணர்கட்கும் சமய அடிப்படையில் தோன்றிய விஜயநகர அரசுக் காலத்திலும், வைணவ சமயம் சார்ந்த மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் சமண கோயில் செல்வாக்கு இழந்து,இ சமணர் வெளியேற்றமும் ஏற்பட்டது.
(தொடரும்)
- உண்மை இதழ், 16-30.6.19
சனி, 24 ஆகஸ்ட், 2019
ஆய்வுக் கட்டுரை: சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்:இந்து உளவியலின் பொதுப்போக்கு
புலவர் செ.ராசு
ஆழியாறு ஆதாளியம்மன்
ஆழியாறு அருகில் சமணர் கோயில் இருந்து அழிந்துவிட்டது. கோயிலில் இருந்த சமண தீர்த்தங்கரர் சிலை மட்டும் தனியாக இருந்தது. யாரோ அதன் முகத்தைச் சிதைத்தனர். பின்னர் மார்பு, வயிற்றுப் பகுதியைச் சிறிது உடைத்தனர். பின்னர் முகப் பகுதியைப் பெண்போல் ஆக்கி மார்பில் பெண் உறுப்புக்களையும் பெரிதாக அமைத்து வர்ணம் பூசிப் பெண் உருவாக மாற்றியதுடன் அதற்கு ஆதாளியம்மன் என்று பெயரும் வைத்துவிட்டனர். அருகில் உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆதாளியம்மனுக்குத் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபடுகின்றனர். அருகில் விபூதித் தட்டும் வைத்துவிட்டனர்.
தீர்த்தங்கரர் தலைக்கு மேல் இருந்த சகல பாஷணம் சந்திர ஆதித்யம், நித்திய வினோதம் ஆகிய முக்குடைச் சின்னமும் இருபுறமும் இருக்கும் கவரி வீசும் சாமரேந்திர இயக்கர் உருவங்களும் அப்படியே உள்ளன.
பெயர் மாறிய /மாற்றிய தீர்த்தங்கரர்கள்
1. திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அய்யம்பாளையம் அருகில் ஐவர்மலை என்ற மலை உள்ளது. அது சங்க இலக்கியம் புகழும் அயிரைமலை. அங்கு வரகுணபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டின் (870) பார்கவ தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. மற்றும் 16 தீர்த்தங்கரர் சிற்பங்களும் உள்ளன. அவற்றின் கீழ் அந்த சிற்பம் யாரால் செய்விக்கப்பட்டது என்பது ஸ்ரீஅச்சணந்தி செயல், ஸ்ரீஇந்திரசேனன் செயல் என்று வட்டெழுத்தில் கல்வெட்டும் உள்ளது. அதை அறியாமலும் புரியாமலும் அவற்றின் கீழ் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், துரோணாச்சாரியார், சைந்த மகரிஷி, தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், சேரன், சோழன், பாண்டியன், கிருஷ்ணர், திருவள்ளுவர், திருதராட்டிரன் என்று மனம் போனபடி எழுதியுள்ளனர்.
2. கரூர் அருகில் உள்ள புலியூரில் சாலையோரம் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அதை அப்பகுதி மக்கள் முனி அப்புச்சி என்று கூறுகின்றனர்.
3. சேலம் மாவட்டம் மேச்சேரியிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் பொட்டனேரி என்ற ஊர் உள்ளது. பெருமாள் கோயிலுக்கு வடக்கே காட்டில் உள்ள தீர்த்தங்கரர் உருவத்தை உள்ளூர் மக்கள் சித்தர் சாமி என்று அழைக்கின்றனர்.
4. திருப்பூர் மாவட்டம் உடுமலை _ பல்லடம் வழியில் 15ஆம் கிலோ மீட்டரில் வேலாயுதன் புதூரிலிருந்து நெகமம் செல்லும் சாலையில் பெரியபட்டி உள்ளது. அங்கு சுப்பிரமணியர் கோயில் எதிரே சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. ஊர் மக்கள் அதை தருமராஜா என்று கூறுகின்றனர்.
5. ஈரோடு நகரில் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வடகீழ் மூலையில் வேலி ஓரம் சமண தீர்த்தங்கரர் சிலை இருந்தது. மக்கள் அதை மொட்டைப் பிள்ளையார் என அழைத்தனர்.
6. நாமக்கல் மாவட்டத்தில் அர்த்தநாரி பாளையம், திருச்செங்கோடு, மோகனூர் போன்ற பல இடங்களில் சமணக் குகைகள் பல உள்ளன. இவற்றைப் பஞ்ச பாண்டவர் கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர்.
தலைவெட்டி முனியப்பன்
சமண தீர்த்தங்கரர் சிலைகள் மட்டுமல்ல புத்தர் தலையும் வெட்டப்பட்டள்ளது. சேலம் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை இருந்தது. யாரோ புத்தர் தலையை உடைத்துவிட்டனர். இதை அறிந்த சிலர் புத்தர் தலையை இரும்புத் தகட்டில் பொருத்தி வைத்து ஒரு சிறு கோயில் கட்டி உள்ளே புத்தர் சிலையை வைத்துவிட்டனர். புத்தருக்கு தலைவெட்டி முனியப்பன் என்ற பெயரும் வைத்துவிட்டனர். இன்று அந்தப் பெயராலேயே புத்தர் அழைக்கப்படுகிறார்.
ஏ.டி.ஹெச்.டி’ பிரச்னைக்குத் தீர்வு காணும் குங்குமப்பூ!
ஏ.டி.ஹெச்.டி (ADHD) எனப்படும் அட்டென்ஷன் டெஃபிசி ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder) குறைபாட்டை குணப்படுத்த குங்குமப்பூவைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிற டெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
குழந்தைகள் வளரிளம் பருவத்தினர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் ஏ.டி.ஹெச்.டி, ஒரு நரம்பியல் உளவியல் குறைபாடு. இதைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்துகளுக்கு இணையாகக் குங்குமப்பூவும் அதன் அறிகுறைகளைக் கட்டுப்படுத்துவதாக இந்தப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், குங்குமப்பூவில் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தும், நினைவாற்றலை மேம்படுத்தும் குணங்கள் இருக்கின்றனவாம்.
விபூதிப் பூச்சில் தீர்த்தங்கரர்கள்:
சில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகட்கு உள்ளூர்ப் பூசாரிகள் விபூதிப் பூச்சுப் பூசியுள்ளதைக் காண்கிறோம்.
கோயம்புத்தூரில் வடக்கே கோயில்பாளையம் என்ற ஊர் உள்ளது. இலக்கியங்களில் கவசை என்றும் அரசு ஆவணங்களில் சர்க்கார் சாமக்குளம் என்றும் வழங்கப்படும் ஊர். அவ்வூரில் உள்ள ஒரு மேடையில் விநாயகருக்கு அருகில் சமண தீர்த்தங்கரர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்குப் பூசை செய்யும் உள்ளுர் அர்ச்சகரான பண்பாரம் சமண தீர்த்தங்கரர் சிலைக்கும் விபூதி பூசிப் பூசை செய்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை _திங்களூர் சாலையில் மமுட்டித் தோப்பு என்ற இடத்தில் முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் (ஆதி நாதர்) கோயில் உள்ளது. அங்குள்ள ரிஷப தேவருக்கும் விபூதிப் பூச்சுப் பூசப்பட்டுள்ளது.
இருந்து மறைந்த சமணர் சிலைகள்
சில கொங்கு வரலாற்று நூல்களின் சமணச் சிலைகள் உள்ளதாகக் குறிப்பிடும் இடங்களில் இன்று சமணச் சிலைகள் காணப்படவில்லை.
1934இல் திருச்செங்கோடு அ.முத்துசாமி கோனார் எழுதிய கொங்குநாடு என்னும் நூலில்,
தாராபுரத்துக்கு வடக்கே ஒரு பர்லாங் தூரத்தில் வயலிடையே ஒரு திட்டில் யட்சி, சந்திர பிரப தீர்த்தங்கரர் திருஉருவம் 5 அடி உயரத்தில் நல்ல வேலைப்பாடாகவும், அருகே சிலைகள் உடைந்தும் அநேக சிலைகள் புதைந்தும் உள்ளன.
என்று எழுதியுள்ளார். ஆனால், அவ்விடத்தில் அந்தச் சிலைகள் எதுவும் இல்லை.
1950ஆம் ஆண்டு கோவைக்கிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய கொங்குநாடும் சமணமும் என்ற நூலில் காங்கேயம் சந்தை மேட்டிலும், பழங்கரை கிராமத்திலும் சமணச் சிலைகள் இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால், அங்கு இன்று சமண சிலைகள் எதுவும் இல்லை.
கொங்கு நாடெங்கும் பரவலாக வாழ்ந்த சமணர்கள் இன்று ஈரோடு மாவட்டம் பூந்துறை, விசயமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களில் மட்டும் வாழ்கிறார்கள். எந்த ஆதரவும் அற்ற நிலை. ஆதரிப்பார் இன்றி வெளியேறிய கொங்குச் சமணர்களின் அடையாளம் பாலக்காடு, வைநாடு, கருநாடக கெல்லிசூர், இராமநாதபுர அனுமந்தக்குடி, பரமக்குடி பகுதியில் காணப்படுகின்றன. பலர் சமணத்தை மறந்து மொட்டை வேளாளர் என்ற பெயரில் பிற சமுதாயத்தோடு இணைந்துவிட்டனர்.
- உண்மை இதழ், 1- 15.7.19