பக்கங்கள்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

மூடத்தனத்திற்கு முடிவு கட்டுவார்களா படித்த மூடர்கள்?

யாகத்திற்குக் கிடைத்த கை மேல் பலன் இதுதானா?
உலக அமைதிக்காக பல கோடி ரூபாய்  செலவில் நடத்தப்பட்ட யாகமாம்
திடீர் தீப்பற்றி பார்ப்பனர்கள் தலைதெறிக்க ஒட்டம்!
மூடத்தனத்திற்கு முடிவு கட்டுவார்களா படித்த மூடர்கள்?

மேடக், டிச.28-_ உலக அமைதிக்காக யாகம் நடத்துவதாகக் கூறி பல கோடி ரூபாய் செலவு செய்து தெலங்கானா முதல் அமைச்சர் சந்திர சேகர ராவால் நடத்தப் பட்ட மகா சண்டியாகத் தின் தீப்பற்றி யாக மேடை எரிந்து பந்தலிலும் பரவிட, யாகம் நடத்திய பார்ப் பனர்களும், பக்தர்களும் பதறி அடித்து ஓடிய காட்சி பரிதாபமே! படித்த தவர்கள் எவ்வளவுக் கிறுக் கர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் அடையாளமே! இதற்குப் பிறகாவது திருந்துவார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.
தெலுங்கான முதல்வர் சந்திரசேகரா ராவ் தனித் தெலுங்கான மாநிலம் உருவான பிறகு தனது ஆட்சிக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் இருக்கவும், (?) மக்களின் நலவாழ்விற்காக வும், மேடக் மாவட்டம் எர்ரவள்ளி என்ற கிராமத் தில் மகாயுதசண்டி யாகம் என்ற சடங்கை பிர மாண்ட அளவில் நடத்தி னார். இந்த யாகத்திற்காக அமைக்கப்பட்ட பந்தல் மாத்திரம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட் டது. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பார்ப் பனர்கள் யாகசாலையில் வேதம் ஓதுவதற்காக வந் திருந்தனர். இவர்களுக்கு மட்டுமே ரூ.2 கோடி கொடுக்கப்பட்டிருந்தது, யாகசாலை அமைந்த இடத்தை செம்மைப்படுத்த மற்றும் பல்வேறு அலங் கார அமைப்புகள் என்று மொத்தம் 7 கோடி செல வில் அய்ந்து நாள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த யாகத்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் முதல் 8 மாநில ஆளுநர்கள், 13 மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலை வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருந்தது. 23 ஆம் தேதி துவங்கிய இந்த யாகத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் ரோசைய்யா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலுங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பண் டாரு தத்தாத்ரேயா, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்பராமி ரெட்டி, மகா ராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தலைவர் சிவபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வைக்கோலால் வேயப்பட்ட யாகமேடை
கடைசி நாளான நேற்று யாகத்தில் இருந்து தெறித்த தீப்பொறி ஒன்று வைக்கோலால் வேயப் பட்ட யாகமேடையில் தெரித்து யாகமேடை தீப்பிடித்தது, இந்தத்தீ விரைவில் யாகப் பந்தலி லும் பற்றிக்கொண்டது. இதனை அடுத்து யாகம் செய்துகொண்டு இருந்து பார்ப்பனர்கள், அவர் களுக்குப் பாதுகாப்பாக இருந்த தெலுங்கானா காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அலறி யடித்துக்கொண்டு ஓடினர்.
இது குறித்து நீயூஸ் 7 என்ற பத்திரிகையாளர் கூறும் போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யாகத்திற்கு வந்ததை அடுத்து யாககுண்டத்தில் இருந்த பார்ப்பனர்கள் தீவிரமாக யாகம் செய் பவர்கள் போல் நடந்து கொண்டனர். மேலும் 3 நாட்களாக தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்த யாககுண்டத்தில் நேற்று அதிக அளவு நெய்யும், ஆடைகளும் போட்டு கொளுத்தப்பட்டது. மேலும் யாகத்தில் கட்டை களும் போடப்பட்டன, இதனால் ஆங்காங்கே நெருப்புப் பொறிகள் தெறித்தன. ஆரம்பத்தில் யாரும் நெருப்புப் பொறிகள் தெறிப்பதை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நண்பகலில் யாகமேடையில் நெருப் புப்பொறி பட்டு தீப்பிடிக்க ஆரம்பித்தது. தீ பிடித்து விட்டது என்று தெரிந்த வுடன் பார்ப்பனர்கள் உடனடியாக துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில்  தலைதெறிக்க ஓடினர்.  பாதுகாவலர்கள் தீயை அணைக்க முற்பட் டனர் ஆனால் தீ யாகப் பந்தலின் மேலே பிடித் திருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்யமுடிய வில்லை, இதனால் அவர் களும் வெளியே ஓடிவந்து விட்டனர், என்று கூறினார்.
உலக அமைதிக்காக என்று மழுப்பிய சந்திரசேகரராவ்
இதனை அடுத்து மேடக் மாவட்ட ஆட்சி யாளர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சந்திர சேகர ராவ் இது உலக அமைதி வேண்டி நடத்தப்பட்ட யாகம் தான், எனது சொந்த நலனுக்காக நடத் தப்பட்ட யாகமல்ல, மேலும் இந்த யாகம் 8 கோடி செலவில் நடை பெற்றதாக கூறுகின்றனர். இந்த யாகத்திற்கு என்று அரசு தரப்பில் பணம் கொடுக்கப்படவில்லை, உலக நன்மைவேண்டிய பல தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெற்ற நன்கொடைதான் என்று கூறினார்.
விவசாயிகளின் தற்கொலை
இந்த யாகத்தில் எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்பட வில்லை என்றாலும் 7 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது, மேடக் மாவட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கடுமை யான வறட்சியைச் சந்தித் துள்ளது, யாகம் நடை பெற்ற எர்ரவள்ளி என்ற கிராமத்தில் சில மாதங் களுக்கு முன்பு 2 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.  வறட்சி மற்றும் விவசாயி களின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு மாநில முதல் வரே யாகம் நடத்தியதை ஆரம்பத்தில் இருந்தே ஆந்திர மாநிலத்தில் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது, இந்த நிலையில் யாக மேடையில் தீப்பிடித் ததன் விளைவால் கோடிக் கணக்கான பணம் சாம் பலாகியுள்ளது.
குறிப்பு: இந்த யாகத் தில் 2000 புரோகிதப் பார்ப்பனர்கள் கலந்து கொண்டனர். ரூ.7 கோடி செலவிட்டதாக தெலங் கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ் கூறியுள் ளார். காசைக் கரியாக் காதே என்பார்களே - அது இதுதானோ!


யாகத்துக்காக  கோடிக்கணக்கான பணத்தை வீணடிப்பதா?
காங்கிரஸ் கண்டனம்
நகரி, டிச. 28   சந்திரசேகரராவ் நடத்தும் யாகத் துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:
சந்திரசேகரராவ் நடத்தும் சண்டி யாகத்தால் நாட்டில் எதுவும் நடந்து விடாது. கடந்த ஒரு வாரமாக அவர் பூஜையில் இருப்பதால் அரசு நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. யாகத்துக்காக ரூ.40 கோடி செலவிடப் படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த பணம் எப்படி வந்தது? யாகத்துக்கு ரூ.7 கோடிதான் செலவிடுவ தாகவும் இது அரசு பணம் அல்ல. எனது சொந்த பணம் என்றும் நன்கொடை மூலம் பணம் பெற்றதாகவும் சந்திரசேகரராவ் கூறுகிறார்.
இந்தப் பணம் அவருக்கு யார் மூலம் வந்தது என்று மக்களுக்கு விளக்க வேண்டும். யாகத்துக்காக கோடிக் கணக்கில் பணம் வீணடிக்கப்படுகிறது. இது தேவை யற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,28.12.15

கடவுள் காப்பாற்ற மாட்டார்.... நடிகர் நாசர் அதிரடி....

இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது. நடிகர் நாசர் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அரங்கில் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரித்து ஆமோதித்தினர்....... அவருக்கு பின் பேச வந்த இளையராஜா மறுக்கிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டிய பொழுது அரங்கத்தில் ஓரிருவர் தவிர அனைவரும் அமைதியாக இருந்தனர்... .இசைஞானி தான் சுருதி தப்பி பேசுகிறோம் என்பதை கடைசி வரை உணரவில்லை....
நாசர் அணிந்திருந்த கறுப்புசட்டை அனைவரை யும் கவர்ந்தது...

இளையராஜாவின் தப்புத்தாளங்கள்
இளையராஜா தனது உரையில் 'உலகை இயக்குவது  கடவுள்....எல்லாம் அவன் செயல்' என்றார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ‘அப்படியென்றால் வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியது கடவுள் செயலிற்கு விரோதமானது அல்லவா' என்று கேட்ட பொழுது அருகிலிருந்தோர் ‘கொல்' என்று சிரித்தனர்..... ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இளையராஜா மாணவர்களைப் பார்த்து மதியம் பாடல் ஒலிப்பதிவு உள்ளது.. நன்கு பாடத்தெரிந்தவர்கள் என்னுடன் வரலாம் என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு பொருந்தாமல் பேசியதனைக் கேட்க பரிதாபமாக இருந்தது...
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் (17.12.2015)
.-விடுதலை,18.12.15