சிந்தனை செய்வோம்

பக்கங்கள்

  • பகுத்தறிவு உலகு
பதிலடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிலடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 ஜூலை, 2023

அண்ணா எழுதிய வசனம் - ஆதாரம் எங்கே? கோயபல்ஸ்களே பதில் சொல்லுங்கள்!


கோயபல்ஸ்களே பதில் சொல்லுங்கள்!
"கீமாயணம் எழுதியது - நடத்தியது உண்மையா?" 
"அண்ணா எழுதிய வசனம் - ஆதாரம் எங்கே?"
இவ்வளவு நீட்டி முழக்கி எழுது கிறார்களே - முதலில் ஒரு கேள்வி.

‘ஹிந்து’ என்ற பெயர் வெள்ளைக்காரக் கிறிஸ்தவன் வைத்த பெயர்தானே! முதலில் இந்தப் பெயரை மாற்றுங்கள் பார்க்கலாம்.

காஞ்சி சங்கராச்சாரியாரே இதனை ஒப்புக் கொண்டுள்ளாரே!

- சந்திரசேகரேந்திர சரஸ்வதி ‘தெய்வத் தின் குரல்’ முதல் பாகம் பக்கம் 267

எப்பொழுது பெயர் மாற்ற உத்தேசம்?

ஹிந்து மதத்தைப்பற்றி உங்கள் விவேகானந்தர் என்ன சொல்கிறார்?

“ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் களுக்கு மட்டும் என்றிருந்த உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்தி யாவில் ஏற்பட்ட முஸ்லிம் ஆட்சி விடுதலை வழங்கியது. எனவேதான் அய்ந் தில் ஒரு பங்கு மக்கள் முஸ்லிம்களாயினர். வாள்தான் இந்த மத மாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல.

வாளும், நெருப்புமே இத்தனை பேரையும் மாற்றியது என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்ச நிலை யாகும்.

20 விழுக்காடிலிருந்து 50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி விடுவார்கள். நீங்கள் அவர்கள் குறைகளைக் களையவில்லை யானால் நான் மலபாரில் பார்த்ததைவிட மட்டமான ஒரு விஷயத்தை உலகில் எங்கேனும் யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த வர்கள் செல்லும் தெரு வழியே ஏழைப் பறையன் செல்ல அனுமதிக்கப்படுவ தில்லை.

ஆனால் அதே ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான ஒரு ஆங்கில கிறிஸ்துவப் பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டால், பின்னர் அவன் உயர்ஜாதியினர் செல்லும் தெரு வழியே செல்ல அனுமதிக்கப்படு கிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த உயர்ஜாதி மக்கள் அனைவரும் பயித்தியக் காரர்கள் என்றும், அவர்கள் இல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயித்தியக்கார விடுதி என்றும் தெரியவில்லையா?”

- இவ்வளவையும் சொல்பவர் திரா விடர் கழகத் தலைவரா? கருஞ்சட்டை யினரா? அமெரிக்கா வரை சென்று உங்கள் மதத்தைப் பற்றி முழங்கி வந்தாரே - சாட்சாத் அதே விவேகானந்தர் அல்லவா!

உங்களைப் போல ஆதாரம் இல்லாமல் பேசுவதோ எழுதுவதோ எங்களிடம் கிடையாது. அதுவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறீராமகிருஷ்ண தபோவனம் 1933இல் வெளியிட்டுள்ள “The Man Making Message of Vivekananda for the Usage of Students” எனும் நூலி லிருந்து தான் இதனை எடுத்துத் தருகி றோம்.

தினமலராக இருக்கட்டும் - இது எடுத் துக்காட்டியுள்ள பிரபல “மன்னிப்புப் புகழ்” ராஜாக்களாகட்டும், குருமூர்த்திகளாகட்டும், அல்லது எந்த சாஸ்திரிகளாகட்டும், சங்கர மடத்தார்களாகட்டும் மறுப்பு சொல்லட் டுமே பார்க்கலாம்.

“கீமாயணம்“ எழுதியது யார்? என்ற கேள்வி வேறு!

அதையேதான் நாங்களும் கேட்கி றோம். “கீமாயணம்“ என்று எழுதியது யார்?

இப்படியொரு பொய்யை எழுதி விட்டு - நம்மைப் பார்த்து பொய்யர் என்று சொல்லுவதுதான் பொய்யிலே புழுத்த இந்தப் புரோகிதக் கூட்டத்தின் புத்தி.

மீண்டும் கேட்கிறோம். “கீமாயணம்“ எழுதியது யார்? அப்படியொரு நூல் எங்களால் எழுதப்பட்டு இருந்தால் கொண்டு வந்து காட்டுங்கள் பார்க்கலாம் - சவால்! சவால்!!

நடிகவேள் எம்.ஆர். இராதா நடத்தியது - இராமாயணமே தவிர கீமாயணம் அல்ல.

நாடகத்தின் தொடக்கத்திலேயே பல பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப் படுவதுதான் எங்களால் நடத்தப்படும் இரா மாயண நாடகம் என்று அறிவித்து விட்டுதான் நாடகத்தைத் தொடங்குவார்.

மதுரை மீனாட்சிபற்றி அண்ணா எழுதியதுகுறித்தும் மன்னிப்பு ராஜா கூறுகிறார்; உண்மைதான் புராணங்கள்பற்றி அக்குவேர் ஆணிவேராக அலசி எடுத்தவர்தான் அண்ணா. ÔஆரியமாயைÕ எழுதி, Ôஇந்து என்று சொல்லோம். இழிவைத் தேடிக் கொள்ளோம்Õ என்று எழுதியவர்தான் அண்ணா.

ஆனால், தினமலர் எடுத்துக்காட்டும் ஆசாமி சொல்லும் அந்த வரி வசனம் எங்கே எந்த இடத்தில், எந்த நூலில் சொன் னார்? அறிவு நாணயத்தோடு எடுத்துக் காட்டட்டுமே பார்க்கலாம் - இதற்கும் ஒரு சவால்!

“அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி” என்ற வசனத்தை எங்கே எழுதினார். கையில் ஆதாரம் இருந்தால் எடுத்துக்காட்டட்டும் - இல்லையெனில் சலாம் போட்டு ஓடட்டும்!

இதில் டவுட் தனபால் தன் பங்குக்குக் கருத்துத்தானம் செய்துள்ளது.

ஹிந்துக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் எந்த கட்சித் தலைவரும் ஹிந்து மதத்திற்கு எதிராக குரல் கொடுத் திருக்க மாட்டார்களோ என்ற டவுட் வருகிறதாம்.

‘தினமலருக்கு’ இதில்கூட உறுதியில்லை - பார்த்தீர்களா? அதற்கே ‘டவுட்’ தானாம்!

ஹிந்துக்கள் எப்படி ஒன்று சேர முடியும்? பிறப்பிலேயே பேதத்தை உண்டாக்கிவிட்டு ஒருவன் கடவுள் ‘பிர்மா’ முகத்திலே பிறந்தான், இன்னொருவன் காலிலே பிறந்தான்- அதற்கும் கீழே பஞ்சமன்-அவன் தீண்டத்தகாதவன் - படிக்கக் கூடாதவன் என்பதை மதத்தில் அடிப்படை ஆதாரமாக வைத்துக் கொண்ட ஒரு மதம் எப்படி ஒன்றுபட்டு எழ முடியும்?

அடி மட்டத்துக்குப் போக வேண்டாம் சங்கராச்சாரியாரை ஜீயர் ஏற்றுக் கொள் கிறாரா?

1982இல் திருவரங்கத்தில் ரெங்கநாதர் கோயில் மொட்டைக் கோபுரம் சீர் செய்யப் பட்டது. அக்கோயில் மடத்து ஜீயரின் மேற்பார்வையில் இது நடந்தது.

அதன் குட முழுக்கு முடிந்த நிலையில் அவரைக் Ôகல்கிÕ இதழ் பேட்டி கண்டது.

கேள்வி: சைவர்கள் வைணவக் கோயிலுக்கு உதவுவதுபோல சைவ ஸ்தல பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவது இல்லை? நீங்கள் சிவன் கோயில் திருப் பணிகளுக்கு உதவி செய்வீர்களா?

ஜீயர் பதில்: நான் சிவன் கோயிலுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன்தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தால் சங்கரனுக்கும் (சிவ பெருமானுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான் தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும் அதேபோல, சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியில் தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றாருன்னும் சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தவஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர் பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர், அவரை வழிபடற நாங்களும் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாக கொண்டு வழிபட்டு, மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை  வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தர மாட்டேன்”

(‘கல்கி’ - 11.4.1982)

இவ்வளவையும் சொல்லியிருப்பவர் வைணவக் குருவான ஜீயர் - பேட்டி கண்டு வெளியிட்டதோ ‘கல்கி’ இதழ்!

தினமலரும், மன்னிப்புப் புகழ் ராஜாக்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஹிந்து மதக் கடவுள்களுக்குள்ளேயே ‘நான் பெரியவனா? நீ பெரியவனா?’ என்ற சண்டை இருக்கு.

ஹிந்து மதக் கடவுள்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை; இந்த இலட்சணத்தில் ஹிந்துக்களை ஒன்று சேர்ப்பது எப்படி?

முதலில் இதில் முடிவு கண்டபிறகு பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகச் சொல்லிக் கொள்பவர்கள் எங்களிடம் வரட்டும்.

I. ‘கீமாயணம்‘ என்று நாங்கள் யாரும் எழுதவில்லை.

II. அண்ணா எழுதியதாகச் சொல்லும் அந்த வசனத்துக்கு ஆதாரம் எங்கே?

III. ஹிந்துக் கடவுள்களுக்குள் ளேயே ஒற்றுமை இல்லை. ஹிந்துக்கள் ஒற்றுமைப்படுவது எப்போது?

முடிந்தால் கோயபல்ஸ்கள் பதில் சொல்ல முயற்சிக்கட்டும்!

-மின்சாரம்
22.07.2020, விடுதலை
இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:13 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அண்ணா, இராமாயணம், பதிலடி, மின்சாரம்

புதன், 1 மார்ச், 2023

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

 பதிலடிப் பக்கம்

       December 31, 2022 • Viduthalai

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களைக் கொண்ட அமைப்பான இந்திய வரலாற்றுப் பேரவையின் 81-ஆம் மாநாடு சென்னை கிறித்தவக் கல்லூரியில் கடந்த டிச. 27 அன்று தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், “ வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மை யான வகையில் அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது.

அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது. 

இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்.  கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும். இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி என்பது மிக மிக முக்கியமானது! 

1994-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். ‘மதச்சார்பின்மை என்பது, நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையாகும். அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது.

பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலை களைத் தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளைக் கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்' - என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 

"நாங்கள் பழைமைவாதிகள் அல்ல"

இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள்.

இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி மக்களை மய்யப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு! இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது! நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக் கொண்டவர்கள்தான். ஆனால் பழைமைவாதிகள் அல்ல!  அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்” என்று முதலமைச்சர் தாம்பரத்தில் ஆற்றிய நெருப்பு உரை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி வரை பற்றி எரிகிறது.

மதச்சார்பற்ற சமத்துவ சமூகமாக இருந்த இந்த நாட்டில் ஒரு சிலரால் வேற்றுமைகள் உருவாக்கப் பட்டன என்று அவர் பேசியது யாரைப் பற்றி என்று எல்லோருக்கும் தெரியுமல்லவா? எப்போதும் எல்லாவற்றிற்கும் தாண்டிக் குதிக்கும் பா.ஜ.க.வின் பார்ப்பனச் சிண்டுகள், இதில் தாங்கள் தலையிட்டால், ‘எங்க தோப்பனார் பூஜை ரூமில் இல்லை’ என்கிற கதையாக மாட்டிக் கொள்வோமே என்று யோசித்து, எச்சரிக்கையாக ஒரு சூத்திர அம்பினை எய்திருக் கிறார்கள்.

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டி ருக்கிறார், அதில், வழக்கமான ஆர்.எஸ்.எஸ்.சின் புரட்டுகளையே மீண்டும் உருட்டியிருக்கிறார்.

திராவிடம் என்பது கட்டுக்கதையாம்! ஆங்கிலே யர்கள் கட்டிவிட்டதாம்! இனவாதமாம்! சொல்கிறார் வானதி சீனிவாசன்!

திராவிடம் என்பது இனவாதமல்ல; இழிவுகள், ஒடுக்குமுறைகள் கொடுமைகளிலிருந்து காத்துநிற்கும் இன விழிப்புணர்வு! ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பரந்த நோக்கம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற மாந்தநேயம்.

ஹிந்துத்துவா என்பது தான் மதவாதம் - மதவெறி! பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் சனாதனத்தைப் பாதுகாக்க முன்னிறுத்தப்படும் ஏவல் விலங்கு!

வெள்ளைக்காரனா காரணம்

திராவிடம் என்பது ஏதோ வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆதாரத்துடன் பல முறை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தப் பொய்யை அம்பலப்படுத்தி யிருக்கிறார். 

மநுதர்மம் என்ன வெள்ளைக்காரன் எழுதியதா?

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சுவி, நடன், கரணன், கஸன், திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத் திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையைய டைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத் தியாயம் 10; ஸ்லோகம் 44)

திராவிடர்

திராவிடன் என்றால் யார் - திராவிடம் என்றால் என்ன என்று எழுதுகிறதே மநுதர்மம். 

‘அய்ம்பத்தாறு தேசங்களுள் ஒன்று’ என்றும், ’தமிழ்’ என்றும் திராவிடத்திற்குப் பொருள் சொல்கிறதே தமிழ்ப் பேரகராதி!

18 தேசங்களுள் ஒன்றாகத் திராவிடம் பற்றிச் சொல்கிறதே 9-ஆம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு!

8-ஆம் நூற்றாண்டின் குமரில பட்டர் சொல் கிறாரே!

12-ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டில் வரும் ”திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம்” என்ற வரிகளில் வரும் திராவிடம் என்பது என்ன?

தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியனைத் திராவிடன் (திரமிட) என்று குறிப்பிடும் சமஸ்கிருதப் பகுதியும், அதற்கு பாண்டிய தமிழாபரணன் என்று குறிப்பிடும் தமிழ்ப் பகுதியும் சொல்கிறதே!

வால்மீகி இராமாயணம், மகாபாரதம், பாகவதம், மச்சபுராணம் என்று இவர்களின் இதிகாச, புராணங்கள் எல்லாம் திராவிடம் என்று குறிப்பிடுகின்றனவே! பவுத்த, சமண இலக்கியங்கள், சீன, பிராக்ருத, பாலி மொழிப் பதிவுகள் எல்லாம் திராவிட என்ற சொல் லைத் தமிழர்கள்- திராவிடர்கள் என்ற நோக்கில் பயன்படுத்தியுள்ளனவே!

வெள்ளைக்காரர்கள் வருகைக்கு முன் தென் னாட்டை, தமிழ்நாட்டைக் குறிக்க திராவிடம் என்ற சொல் திராவிட என்றோ, த்ரமிட என்றோ பயன் படுத்தப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் அம்மையார்? 

ஆர்.எஸ்.எஸ். அச்செடுத்துக் கொடுத்த அரதப் பழசான அவதூறுக் குப்பைகளின் ஜெராக்ஸ் நகலைக் கையில் வைத்துக் கொண்டு இப்படியே காலம் தள்ளாமல், அறிவார்ந்த செய்திகளை அருள்கூர்ந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவ்வளவு ஏன்? “நானும் ஒரு பச்சைத் திராவிடன் தான்!” என்று கச்சை கட்டினாரே, அதே பா.ஜ.க.வில் இருக்கும் இன்னொரு சூத்திரத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். ஒரு முறை அவரிடமும் கேட்டுப் பார்க்கலாமே! 

பா.ஜ.க.வில் சூத்திரத் தலைமைகள் உருவாவணதற்கே தமிழ்நாட்டில் உள்ள  திராவிட இன உணர்வு தானே காரணம். ராதா ராஜன்கள் இருந்த இடத்தில் வானதி சீனிவாசன்கள் வந்து சேரவே திராவிட இயக்கம் இல்லா விட்டால் சாத்தியப்பட்டிருக்குமா? ஹெச்.ராஜாக்களும், திருப்பதி நாராயணன்களும், கே.டி.ராகவன்களும் தமிழ் நாட்டின் பாஜக தலைவராக முடியாமல், பெயரளவுக்கேனும் சூத்திரத் தமிழர்களை, தமிழச்சிகளை முன்னிறுத்துகிறதே பா.ஜ.க! 

திராவிட இன உணர்வின் பலன் மற்றவர்களை விட, புகைச்சல் பார்ப்பனர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பார்ப்பனரல்லா தாருக்குத் தெரியாதா என்ன?

திராவிடம் என்ற சொல்லுக்கு இத்தனைப் பெரிய வரலாறு உண்டு. ஆனால் இந்து மதம் என்ற பெயர் யார் வைத்தது? 'வெள்ளைக்காரன் வந்து கொடுத்த பெயர் தான் இந்து' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் தனது 'தெய்வத்தின் குரலில்' ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தெரியுமா அம்மையாருக்கு?

இன்னொன்று. 

தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றத்தின் விருது வழங்கப்படவில்லை என்ற வடிகட்டிய பொய்யை வாரிக் கொட்டியிருக்கிறார் அம்மையார்.

யுனெஸ்கோ விருது

1970-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்த கல்வி ஆண்டில்,  சென்னையில் யுனெஸ்கோ மன்றம் (Unesco Mandram) தந்தை பெரியார் உள்ளிட்ட பலரையும் அழைத்துப் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்ததே! அந்த அமைப்பு யுனெஸ்கோவால் உல கெங்கும் தொடங்கப்பட்ட யுனெஸ்கோ மன்றங்களுள் ஒன்றல்லவா? அந்த விழாவில் பங்கேற்று விருது வழங்கியவர் அன்றைய ஒன்றிய அமைச் சரும், கல்வியாளரும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான டாக்டர் திரிகுணசென் அல்லவா? உடன் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் பேராசிரியர் ஷேர் சிங் யார்? இவர்கள் திராவிட இயக்கத்தவரா? 

அன்றைய முதலமைச்சர் கலைஞர், சட்டப் பேரவைத் தலைவர் சி.பி.சிற்றரசு ஆகியோரைக் கூட, அவர்கள் அந்தப் பொறுப்பின் அடிப்படையில் நிகழ்ச்சியில் பங் கேற்றிருந்தாலும் திராவிட இயக்கத் தவர் என்று சொல்லி விடலாம். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் பங்கேற் றிருக்கிறாரே! அரசு விழா அல்லாத ஒன்றிலா ஒன்றிய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்? யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பே இல்லை என்று சொல்லப் போகிறார்களா? உலகம் முழுவதும் யுனெஸ்கோ கிளப் என்று உருவாக்கி நெறிப்படுத்தி வருகிறதே யுனெஸ்கோ நிறுவனம், அதை மறுக்கப் போகிறார்களா?

பெரியாருக்கு வழங்கப்பட்ட விருது, விருது வழங்கிய ஒளிப்படம், பத்திரிகைச் செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக இருக்கின்றன. அவ் வளவு ஏன்? விருது வழங்கப்பட்டபோது உடனிருந்த பலரும் கூட உயிருடன் இருக்கும் இந்த நிலையிலேயே 50 ஆண்டுகளுக்கு முன், இதே சென்னையில் நடந்த வரலாற்றையே மறுத்துப் பொய்யுரைக்கும் இந்தக் கூட்டம், திராவிட இயக்கத்தைப் பார்த்து கட்டுக்கதை என்று கூறுவதா?

விருதுகளால் அளக்கப்பட முடிந்த ஆளுமையா தந்தை பெரியார்?

சிந்திக்கட்டும்

திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்வதன் மூலம் அது உண்மையாகாவிட்டாலும், மக்கள் மனதில் ஒரு சந்தேகத்தையாவது விதைத்துவிடுங்கள் என்று விவாதக் களத்திற்குச் செல்கையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையை இங்கேயும் பின்பற்றிப் பார்க்கலாம் என்று நினைக் கிறாரா அம்மையார் வானதி?

கொஞ்சமேனும் கூர்மையாகப் பேசுவார் என்று பார்த்தால், அழி வழக்குகளைத் தூக்கி வந்து கொண்டிருக் கிறார் வழக்குரைஞர், பாவம்! 

பெண்களையும், சூத்திரர்களையும் இழிவாகப் பேசும் பகவத் கீதை, பெண்களைக் கல்வி கற்கக் கூடாது என்று தடுத்த ஹிந்து மதம், பிரதிலோமம்-அநுலோமம் என்று ஜாதி மறுப்புத் திருமணத்தை இழிவுபடுத்தும் மநுதர்மம் இவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு. வழக்குரைஞ ராகவும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவராகவும், தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் அம்மையார் வானதி சீனிவாசன் அவர்கள், மிச்சமிருக்கும் ஹிந்து மதக் குப்பை களையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டுச் சிந்திக்கட்டும்!

திருத்தப்பட்ட இந்திய வரலாறு கற்பிக்கப்படுமாம் - ஒன்றிய கல்வி அமைச்சர்

"‘கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் - அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது - அதனை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதா யம் அதை ஏற்றுக் கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்.’ என்ற முதலமைச்சரின் இந்த வரிகளோடு, அப்படியே நான் உடன்படுகி றேன்” என்கிறார்  வானதி சீனிவாசன். உடன்பட்டுத் தானே ஆக வேண்டும். வரலாற்றுத் திரிபு செய்வ தென்று தீர்மானித்துத் தானே இந்துத்துவவாதிகள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

நம் முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைநகரில் உரையாற்றிய அதே நாளில் (டிசம்பர் 27) பீகார் மாநிலம் சசாரா மாவட்டம் ஜமுஹார் நகரில் உள்ள கோபால் நாராயணன் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் அங்கமாக ஆக்கப்பட்டுவிட்ட ஒன்றிய அரசின் நிறுவனமான இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ICHR), ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரிஜினல் அங்கமான அகில பாரதிய இதிகாஸ் சங்கலன் யோஜனாவுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன பேசியிருக்கிறார்?

“Students across the country will be taught the "corrected" version of Indian history under the National Education Policy (NEP) from Vasant Panchami on January 26” 

“தேசிய கல்விக் கொள்கையின் கீழ் “திருத்தப்பட்ட” இந்திய வரலாறு நாடு முழுக்க உள்ள மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும்” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 

(எப்போதிலிருந்தாம்? ஜனவரி 26 - வசந்த பஞ்சமி அன்றிலிருந்தாம்! வடநாட்டில் அன்று தான் சரஸ்வதி பூஜையாம்! ஜனவரி 26  என்றால் இந்தியக் குடியரசு நாளாயிற்றே, அதெல்லாம் நினைவிருக்குமா ஹிந்துத்துவக் கல்வி அமைச் சருக்கு? அட, 'பாவப்பட்ட' இந்தியக் குடியரசே!)

எதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார் என்பது அன்றைக்கே அம்பலமாகிவிட்டதா, இல்லையா? 

இன்று நேற்றா? இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன் வாஜ்பேயி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே இத்தகைய வரலாற்றுத் திரிபுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்களே! இதை எதிர்த்து நிற்கக் கூடிய அமைப்பான இந்திய வரலாற்றுப் பேரவை யின் (Indian history Congress) மாநாட்டில் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசினால், எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்களே என்று அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தானே இருக்கும்!

கண்ணாடியைப் பார்த்து முதலமைச்சர் பேசியிருப்பார் என்கிறார் வானதி அம்மையார்! டிரான்ஸ்பரண்ட் கண்ணாடிகளில் ஓடும் எழுத்துகளைப் பார்த்துப் பேசும் பிரதமர் மோடி என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?

கண்ணாடி என்றதும் நினைவுக்கு வருகிறது. ‘கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கொண்டு கல்லெறியாதீர்கள்!’ என்பார்கள் வழக்கமாக! நீங்கள் பா.ஜ.க.வுக்குள் இருந்தபடியே இன்னும் கொஞ்சம் பெரிய கற்களைத் தூக்கி எறியுங்கள் - அப்போதுதான் சீக்கிரம் உடையும்! ம்ம்.. ஆகட்டும்!

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார் 

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:27 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திராவிடம், பதிலடி, யுனஸ்கோ, விருது

வியாழன், 9 ஜூன், 2022

அசல் பிராமணனா - டூப்ளிக்கேட் பிராமணனா?



   April 30, 2022 • Viduthalai

மின்சாரம்

கேள்வி: தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு தமிழிலேயே வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழக முதல்வர் எந்தச் செய்தியும் கூறவில்லையே ஏன்?

பதில்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியா? ‘நீட்’ மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பவில்லை என்ற துக்கத்தால் ஆளுநரின் தமிழ்ப் புத்தாண்டு விருந்துக்கும் ஸ்டாலின் செல்லவில்லை. அந்த வேதனையில் புத்தாண்டையே, ‘நீட்’ துக்க நாள் என்று அறிவிக்காமல் இருந்தாரே என்று மகிழ்ச்சி அடையுங்கள்.

துக்ளக் - 4.5.2022

ஆம்பளைக்கும் ஆம்பளைக்கும் பிறந்த (கிருஷ்ணன் - நாரதன்) பிள்ளைகள் தமிழ் ஆண்டுகள் என்று தமிழைச் கொச்சைப் படுத்துபவர்கள் செய்யும் கிண்டலையும் கேலியையும் பாருங்கள்.

கேள்வி: அயோத்தியா மண்டபத்தைக் கைப்பற்ற அறநிலையத்துறை ஏன் துடிக்கிறது?

பதில்: அயோத்தியா மண்டபம் என்பது அதன் பெயர். போதாதென்று அது பிராமணர்கள் குழுமி பஜனை, பிரார்த்தனை செய்யும் இடமும் கூட, திமுக அரசு அதைக் கைக் கொள்ளத் துடிக்க வேறு என்ன காரணம் வேண்டும்?

- துக்ளக் 4.5.2022

ஆக பிராமணர்கள் மட்டும் கூத்தடிக்கும் மண்டபம் - மற்றவர்களுக்கு அங்கு இடம் கிடையாது - இன்னும் அந்த பூணூல் ஆணவம் எப்படி எல்லாம் கொக்கரிக்கிறது பார்த்தீர்களா?

கேள்வி: ஹிந்து மதத்தின் கோட்பாடுகளைக் கழகம் சீண்டுவதை, வழக்கமாகக் கொண்டுள்ளது என்பது புதிது இல்லையே?

பதில்: புதியது இல்லைதான். அது தெரிந்தும்  நாங்கள் ஹிந்து எதிர்ப்பாளர்கள் இல்லை என்று நடுத்தெருவில் சத்தியம் செய்ததை நம்பி ஹிந்துக்கள், தி.மு.க.வுக்கு வாக்களித்ததுதான் ஆச்சரியம். அப்போது தி.மு.க.வின் டி.என்.ஏ.வில் ஹிந்து எதிர்ப்பு ஊறியிருக்கிறது என்று நாம் கூறியிருந்தோம். அது செவிடன் காதில் ஊதிய சங்கானது.

- துக்ளக் 4.5.2022

அப்படியா? பிராமணர்களே! பூணூலைப் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள், என்று ஆச்சாரியார் (ராஜாஜி) சொன்னாரே ஏன்?

கேள்வி: ‘ராமர் பிறக்காமல் இருந் திருந்தால் பா.ஜ.க. எந்தப் பிரச்னையை எழுப்பி ஓட்டு வாங்கியிருக்கும்‘ என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டிருக்கிறாரே?

பதில்: அன்றைய த்ரேதா யுக ராமரை விடுங்கள். இன்றைய கலியுகத்தில் பால் தாக்கரே பிறக்கவில்லை என்றால் சிவசேனா என்ற ஒன்று 

இருக்காது. “ராமர் பிறக்காமல் இருந்திருந்தால்” என்று பா.ஜ.க.வைக் கேட்க ஒரு உத்தவ் தாக்கரேயே பிறந்திருக்க மாட்டார்.

- துக்ளக் 4.5.2022

ராமனா, எந்த ராமன்? புத்திர காமேஷ்டி யாகத்தில் பிறந்தானே அந்த ராமனா?

தசரதன் நடத்திய யாகத்தில் அவன் மனைவிகளில் ஒருத்தியாகிய கவுசலை என்பவள் குதிரையை ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று அந்தச் செத்தக் குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் கட்டிப்படுத்துக் கொண்டிருந்தாள். (பால காண்டம், 14ஆவது சருக்கம்)

தசரதனின் மனைவிமார்களான கவுசலை, சுமத்திரை, கைகேயி ஆகியவர்களை யாகப் புரோகிதர் களாகிய ஹோதா,  அத்வர்யா, உச்சாதா ஆகிய ருத்விக்களுக்குத் தசரதன் தட்சணையாகக் கொடுத்தான். இந்தப் புரோகிதன் மூலம் இந்தப் பெண்களைக் கைப்பற்றி கூடித் திரிந்து அனுபவித்து விட்டுப் பிறகு அதற்காகக் கூலியோ, கிரயமோ தசரதனிடம் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள்.  (இராமாயணம், பாலகாண்டம் - 14ஆவது சருக்கம்)

அதன் பிறகே தசரதனின் மனைவிகள் கர்ப்பவதிகளாகக் காணப்படுகிறார்கள்.... ஓ இப்படிப் பிறந்த ராமனுக்கா ‘துக்ளக்‘  வக்காலத்து வாங்குகிறது?

கேள்வி: திராவிடக் கழகங்கள் பிராமணர்களைக் குறி வைத்து தாக்குவது ஏன்?

பதில்: பிராமணர்கள் இல்லை என்றால் திராவிடமும் கிடையாது,  திராவிடக் கழகங்களும் இருக்காது.  அவர்கள் என்றென்றும் பிராமணர் களிடம் நன்றியுடன் இருக்க வேண்டும்

- துக்ளக் - 4.5.2022

நீ ஏன் பிராமணன்? நீ பிராமணன் என்றால் நாங்கள் சூத்திரர்கள் அல்லவா? சூத்திரன்  என்றால் வேசி மக்கள் என்பதுதானே  உங்களின் மனுதர்மம் (மனுதர்மம், அத்தியாயம் 8, சுலோகம் 415)

உண்மைதான். பிராமணன் என்ற நிலை இல்லை என்றால் சகமனிதனை மதிக்கும் மனிதனாக மாறி விட்டால் திராவிடர் கழகங்களுக்கு வேலை இல்லைதான். இதை உங்களின் லட்சுமிபுரம் யுவர் சங்கப் பார்ப்பனர் கூட்டத்திலேயே தந்தை பெரியார் நேருக்கு நேர் பேசினாரே. 

குருமூர்த்தியாரே, குருமூர்த்தி யாரே, உங்கள் குருநாதர் திருவாளர் சோ ஆனந்த விகடன் பேட்டியில் (1.2.2012) “நான் பிராமணன் - அதுவும் இன்றைய பிராமணன் தான். அசல் பிராமணன் இல்லை.” என்று கூறியுள்ளரே. குரு நாதரே அசல் பிராமணர் இல்லை என்றால்  - குருமூர்த்தி டூப்ளிக்கேட் தானே.

‘சூத்திரன்’ என்று இப்பொழுது சொல்லிப்பாரு பார்க்கலாம். திராவிடர் கழகங்களின் அருமையும், அவசியமும் இந்த இடத்தில்தானே இருக்கிறது.

(துக்ளக், 4.5.2022, 
கேள்வி - பதில்களுக்குப் 
பதிலடி இவை)


 
இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:46 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: துக்ளக், பதிலடி

புதன், 3 மார்ச், 2021

ஒற்றைப் பத்தி : ‘அறிவு நாணயம்'


February 06, 2021 • Viduthalai

வீராதி வீரர் என்றும், சூராதி சூரர் என்றும், எதையும் ,எவரையும் விமர்சிக்கும் எழுத்தர் என்றும் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி 'துக்ளக்' ஆண்டு விழாவில் (எல்லோருக்கும் அனுமதி கிடையாது. கை தட்டும் - ஜால்ராக்களுக்கு மட்டுமே அனுமதி - தஞ்சையில் வெட்ட வெளி மைதானத்தில் ஆண்டு விழா நடத்தி பட்ட அவமானம் போதாதா?) பேசியவை வாராவாரம் துக்ளக்கில்' வந்து கொண்டுள்ளன. இவ்வாரம் (10.2.2021, பக்கம் 11) வெளிவந்துள்ள பேச்சில் இடம் பெற்றிருப்பது என்ன?

"நீதிபதிகளாக வரவிரும்பி விண்ணப்பம் போடுபவர்களில் பலர், அரசியல்வாதிகளின் தயவையும் சிபாரிசையும் நாடி வருகிறர்கள்" (கை தட்டல்) என்று குருமூர்த்திவாள் பேசியதாக வெளிவந்துள்ளது.

அப்படியென்றால் இந்தப் பேச்சுக்காகத்தான் மன்னிப்பு வாங்கினாரா? உண்மையில் அவர் பேசியது என்ன?

"உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்கள் ஆட்சியிலிருக்கும் கட்சிக்காரர்களின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்களே!" என்று தானே பேசினார்.

அந்தப் பேச்சு பிரச்சினையான நிலையில் 'ஆம், நான் தான் அப்படிப் பேசினேன்' என்று அறிவு நாணயத்தோடு (மற்றவர்களைப் பார்த்து 'ஆண்மை'யிருக்கிறதா என்று கேட்டவராயிற்றே!) ஒப்புக் கொள்ளும் திராணியில்லாமல் மன்னிப்புக் கேட்ட மானமற்றதுகள் - வீராதி வீரர்கள் போல பேசலாமா, எழுதலாமா?

ஏற்கெனவே வாய் கொழுப்பில் பேசிவிட்டு பின் மன்னிப்புக் கேட்டு ஜகா வாங்கிய ராஜாக்கள் உண்டு.

பேசியது ஒன்று - 'துக்ளக்'கில் வெளிவந்தது வேறு ஒன்று. இதுதான் 'துக்ளக்'கின் நேர்மைக்கு அடையாளமா?

இதில் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால் 'அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டதைக் கூட துக்ளக்கில்' வெளியிடும் யோக்கியதை இல்லை என்பது தான்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு பார்ப்பன நீதிபதிகளைப் பார்த்து 'பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு!' என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே - இந்தத் தர்ப்பைகள் எங்கே?

- மயிலாடன்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:26 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அறிவு, துக்ளக், பதிலடி

வியாழன், 2 ஜூலை, 2020

"ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறாரா கணக்கப்பிள்ள" மின்சாரம்



கலி. பூங்குன்றன்

18 ஜூன் 2020


‘தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிற நிலைதான் உள்ளது’ என்கிறாரே வீரமணி’ என்று யாரோ ஒருவர் கேட்டதாகக் கூறும் ஒரு கேள்விக்கு ‘துக்ளக்‘ ஏட்டில் (10.6.2020) திருவாளர் குருமூர்த்தி அய்யர் பதில் கூற முயற்சி செய்துள்ளார்.
கி. வீரமணி கூறுவது உண்மையானால், ஈ.வெ.ரா. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதுவும் இன்றுதான் பெரியார் மண் ஆகியிருக்கிறது தமிழைப் புறக்கணித்தால் தான் தமிழர்கள் மானம், பகுத்தறிவு ஆகியவை உள்ளவர்களாக ஆக முடியும் என்று தொடர்ந்து அடித்துக் கூறி வந்திருக்கிறார் ஈ.வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய ஈ.வெ.ரா.வின் அந்த உயர்ந்த கருத்துக்களை வீரமணி படிக்கவில்லை என்பது நிச்சயம்’ - என்று எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள். ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறார் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை.
ஆமாம் பெரியாரைப் பற்றி குருமூர்த்திதான் அதிகம் படித்தவர் - பெரியார் பேச்சுக்களையும் எழுத்து களையும் அப்படியே கரைத்துக் குடித்தவர், பாவம் வீரமணிக்குப் பெரியாரைப் பற்றி என்ன தெரியும் - நம்புங்கள்!
எவ்வளவு தின’வெட்டு’ இருந்தால் இந்தத் திரிநூல் களுக்கு இப்படியெல்லாம் எழுதத் ÔதுணிவுÕ வரும்?
திராவிடர் கழகத் தலைவர் ஒன்றைச் சொல்லி யுள்ளார் என்று குறிப்பிட்டால், அதை எங்கே சொன் னார், எப்பொழுது சொன்னார் என்று கூறும் குறைந்த பட்ச அறிவு நாணயம் இருக்க வேண்டாமா?
அதே போல, பெரியார் சொன்னார் என்று ஒன்றை சொன்னால் எப்பொழுது சொன்னார்? எங்கே சொன் னார்? என்று கூறும் அடிப்படை யோக்கியத்தன்மை இருக்க வேண்டாமா?
இந்தப் பார்ப்பனர்தான் இப்படியெல்லாம் எழுது வதை - சொல்லுவதைப் பார்க்கும் பொழுது, சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள் கூறும் எடுத்துக் காட்டுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
கும்பகோணத்தில் பார்ப்பான் குட்டையில் விழுந் தான் என்ற கதையாக அல்லவோ இருக்கிறது. இதோ சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள்:
“ஒரு நாள் உபய வேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து குளப்படிக்கட்டில் வழுக்கி விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்க, தன் பணியாளிடம் பின்வருமாறு சொல்லியனுப்பினார் ஒரு நிலக்கிழார்.
“திருக்குடந்தை திருலோக தாத்தாச்சாரி, திருத்தங்கல் திருநின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்கத் திருக்கோவிலுக்குவந்து திருக்கோவில் வளாகத்தில் இருக்கக்கூடிய திருப்படிக்கட்டுகளில் இறங்கி திருத் துழாய் பிடுங்கிறச்சே, திருக்குளத்துப் பாசிகள் வழுக்கி திருக்குளத்தில் விழுந்து திருக்காலில் ஹீன மடைந்தார்னு போய்ச் சொல்லிடு” என்றார்.
கும்பகோணத்து நிலக்கிழாருக்கும் இப்படி கூறும் குருமூர்த்திகளுக்கும் என்ன தொடர்போ!
தமிழைப் பற்றி தந்தை பெரியார் என்ன சொன்னார் எந்தப் பொருளில் சொன்னார் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அதைப் பார்ப்பனர்கள் சொல்லத் தேவையில்லை.
தமிழை நீஷப்பாஷை என்றும், நீஷப் பாஷையை பூஜை வேளையில் ‘பெரியவாள்’ (காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) பேச மாட்டாள் என்ற நிலையில் உள்ளவர்கள் தந்தை பெரியார் தமிழைப் பற்றிச் சொன்னதுபற்றிப் பேசிட அருகதை யற்றவர்களே (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - ‘உண்மை’ 1,15-12-1980)
‘தீக்குறளைச் சென்றோதோம்‘ என்ற ஆண்டாளின் பாடலுக்குத் தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று சொன்ன ஓர் ஆசாமியை லோகக் குரு என்று கூறிக் கூத்தாடும் குருமூர்த்தி கூட்டம் எந்த முகத்தைக் கொண்டு தந்தை பெரியாரை விமர்சிக்கக் கிளம்பி யிருக்கிறது?
ஆண்டாள் கூறிய ‘குறளை’ என்ற சொல்லுக்கு கோள் சொல்லுதல் என்னும் பொருள்கூடத் தெரி யாதவாள் எல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்தவாளா!
அவருக்கா தெரியாது? அண்டத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுவார்களேயானால், அவர் ஒரு Ôவிஷமி’ என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று பொருள்.
திரு என்ற அழகிய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்து வதற்கு ‘தமிழ்த் தாத்தா’ என்று கூறப்படும் உ.வே. சாமிநாதய்யர், இரா. இராகவ அய்யங்கார்கள் உமிழ்ந்த வெறுப்புணர்ச்சி ஒன்று போதாதா? (முனைவர் சாரதா நம்பி ஆரூரான் எழுதிய “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்ÕÕ) .
கரூர் அருகே திருமலை முத்தீஸ்வரர் கோயில் குட முழுக்கு தமிழில் நடந்ததால் (9.9.2002) அதனைக் கண்டித்தவர்தானே காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி (இந்தியா டுடே 2.10.2002).
திருக்குறள் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு என்று சொன்னவரும் சாட்சாத் இந்த ஜெயேந்திரர்தான் (‘தினத்தந்தி’ 15.4.2004)
கேள்வி: எல்லா உள்ளாட்சி அலுவலகங்களிலும் இனி ‘தமிழ் வாழ்க! என்ற நியான் விளக்குகள் வைக்கப் படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன?
பதில்: இதனால்தான் தமிழ் வளரும் என்றால், அதைவிட தமிழுக்குக் கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்கல்ல. நியான் விளக்குக் காண்டிராக்ட் எடுப்பவர் வாழ; அது வழி செய்யும் அது போதுமே! (‘துக்ளக்‘ 19.5.2010 பக்கம் 25)
தமிழ்மீது ‘துக்ளக்‘கின் வயிற்றெரிச்சல் இதுதான்.
இந்த யோக்கியதை உள்ள பார்ப்பனர்கள் தந்தை பெரியார் தமிழைப் பழித்து விட்டார்; கேவலமாகக் கூறி விட்டார் என்று பரப்புரை செய்வது - தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி எரிமலையைத் தூங்காமல் விழிக்கச் செய்து விட்டுச் சென்று விட்டாரே என்ற ஆத்திரத்தில் அலை மோதலும் - மொத்துதலும்தான்
தமிழ்மீது தந்தை பெரியாருக்கு வெறுப்பா - அல்லது புராணச் சகதியிலிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கறையா?
தந்தை பெரியார் உருவாக்கிய குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை போன்றவற்றின் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே தந்தை பெரியார் தமிழ்மீது அக்கறை கொண்டவர் என்பதற்கு
தமிழ்பற்றி தந்தை பெரியார் கருத்தென்ன?
“முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” (குடிஅரசு 26.1.1936).
“தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தை பல முறை சொல் லியிருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி- ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்கு வெறுப்பில்லை” (விடுதலை 1.12.1970).
தமிழ்மீதான தந்தை பெரியாரின் பார்வை இதுதான்! தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் அவரே! அதைத்தான் இப்பொழுது ‘துக்ளக்‘ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகளும் கடைப்பிடித்தே தீர வேண்டிய கட்டாயம் - அரசே சட்டரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள நிலை.
தமிழில் பெயர் சூட்டுதல் என்ற புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவர் அவர்தானே! ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர - தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்ட முடியுமா?
தமிழர் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழிலே நடத்தும் நிலையை நிறுவியவர் தந்தை பெரியார்தானே!
இந்த நிலையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிற நிலைதான் உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளதாகவும், தமிழைப் பற்றி பெரியார் சொன்னதையெல்லாம் வீரமணி படிக்கவில்லை என்றும் குடுமி குருமூர்த்தி உளறிக் கொட்டியிருக்கிறார்.
தந்தை பெரியாரைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் எந்த அளவு படித்திருக்கிறார்- அறிந்து இருக்கிறார் - தந்தை பெரியாரிடம் பாடம் படித்திருக் கிறார் என்பதற்கு பார்ப்பனக் குருமூர்த்திகளின் சான்று பத்திரம் தேவையில்லை. இதை உலகம் அறியும்.
கடைசியாக ஒன்று: தந்தை பெரியார் பற்றி யாரோ அனாமதேயங்கள் எழுதுவதையெல்லாம் போட்டு நிரப்பும் குப்பைத் தொட்டியாக ‘துக்ளக்‘ ‘அவதாரம்‘ எடுத்திருக்கிறது.
அனாமதேயங்களுக்குப் பரிவட்டம் கட்டி தந்தை பெரியாரைப் பற்றித் தூற்றச் செய்யலாம் - அதற்கு மலிவாகவும் தமிழர்களில் ஆட்களும் கிடைப்பார்கள்.
நாங்கள் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காஞ்சி மடத்திலேயே வளர்ந்து முக்கியப் பொறுப்புகளிலும் அமர்ந்து Ôஅவனன்றி ஓரணுவும் அசையாதுÕ என்று சொல்லும் அளவுக்கு அனைத்திலும் அத்துப்படியானவர் சங்கரராமன் (அவர்தான் வரதராஜ பெருமாள் முன்னிலையில் பட்டப் பகலில் கொல்லப் பட்டார். இந்த வழக்கில்தான் ‘லோகக் குரு’ காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி 61 நாள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார்).
அந்த சங்கரராமன் சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் வண்டி வண்டியாக ‘ஜெகத்குரு ஜெயேந்திரரின் வண்டவாளங்களை எழுதித் தள்ளினாரே - அவற்றை எல்லாம் மக்கள் மத்தியில் கொட்ட வேண்டுமா? (ஊரே நாறிப் போய் விடும்) எப்படி வசதி? குருமூர்த்திகள் Ôகுஸ்திÕக்கு வருவார்களா? எங்கே பார்ப்போம்!
இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:42 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், தினமலர், பதிலடி

செவ்வாய், 30 ஜூன், 2020

'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்!

லாலா லஜபதி ஒரு முறை சொன்னார் தென்னாட்டுப் பிராமணர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து ‘துவேஷிகள், துவேஷிகள்!’ என்று சொல்லுவார்கள் என்ற கருத்துதான் ‘தினமலரில்’ (28.6.2020 பக்கம் 7) வெளிவந்த ஒரு கட்டுரையைப் பார்த்தவுடன் பளிச் சென்று நினைவிற்கு வருகிறது Òஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்?Ó என்பது அக்கட்டுரையின் தலைப்பு. எழுதுகோல் பிடித்தவர் எஸ். கார்த்திகேயன் - சமூக ஆர்வலராம்.
சமூக ஆர்வலர் என்ற போர்வையில் தொலைக்காட்சி களில்கூட அவ்வப்போது வந்துவந்து போவார்கள் பெரும்பாலும் பூணூல்காரர்கள்.
கட்டுரை முழுவதும் இவர் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ளார். ‘நான் ஜாதி பார்ப்பதில்லை. நான் ஜாதி பார்ப்பதில்லை -  நான் பரிசுத்தம்!’ என்பதுபோல அடிக்கடி ஒரு தடவை தன்னைப் பற்றி தன் முதுகைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்.
அவரிடம் ஒரே ஒரு கேள்வி உங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறதா? என்பதுதான்.
பூணூல் எல்லோரும் தான் போடுகிறார்கள் என்றெல் லாம் சொல்லித் தப்பிக்க வேண்டாம் - ஒரு முறை ‘சோ’ இராமசாமி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் ஒரு பே¢ட்டியில் சரியாக சிக்கி மூச்சுத் திணறினார். ‘வீட்டாரைத் திருப்திபடுத்தத்தான் சங்கடப்படுத்தாமல் இருக்கத்தான்! என்றார்.
பூணூல் கல்யாணம் நடத்தி முதுகில் அதைத் தொங்க விட்ட பிறகுதான் பிராமணன் -அதாவது துவிஜாதி - இருபிறப்பாளன் ஆகிறான்.
இது சரியா, தவறா என்பதை சங்கர மடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்!
பிராமணர்கள் மட்டுமா போடுகிறார்கள்? ஆசாரி, பத்தர் செட்டியார் கூடத்தான் போடுகிறார்கள் என்று தப்பித்து ஓட வேண்டாம். அதற்கு இந்து மத சாத்திரத்தில் இடம் உண்டா என்பதற்குப் பதில் சொல்லட்டும்.
பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசிய னுக்கு க்ஷணப்பநாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல் லியதாகப் பின்னி மூன்று வடமா மேலரைஞாண் கட்ட வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் 42).
இதில் எங்காவது சூத்திரர் பூணூல் அணியலாம் என்று கூறப்பட்டுள்ளதா?
சந்தேகமில்லாமல் இன்னொரு இடத்தில் மிகவும் வெளிப்படையாகவே மனுதர்மம் அறைந்து கூறுகிறது.
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலி யதைத் தரித்தால் அரசர் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் - 224).
இதை எடுத்துச் சொன்னால், இப்போதெல்லாம் மனுவை யாருங்க கடைப்பிடிக்கிறாங்க - நீங்கதான்  ஞாபகப்படுத்துறீங்க என்று நழுவும் Ôமீன்களைÕப் பார்க்க முடிகிறது.
‘துக்ளக்‘ இதழில் வரிந்து வரிந்து மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி ‘சோ’ இராமசாமி எழுதியதுண்டே!
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ‘'திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றுதான்” என்று காஞ்சிபுரம் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் பேசினாரே (12.8.1976).
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் திருக்குறளும், பிறவியின் அடிப்படையிலேயே வருணபேதம் கற்பிக்கும் மனுதர்மமும் ஒன்று என்று சொல்லுகிறார் இவர்களின் ஜெகத்குரு என்றால், மனுதர்மத்தை எந்த அளவுக்கு  அவர்கள் இன்றளவும் போற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாமே!
📷📷
ஏதோ அதே நேரத்தில் தப்பிப்பதற்காக தப்பிலித் தனமாகப் பேசலாமா? பதினெட்டு ஸ்மிருதிகளில் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதி களும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும், அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று என்று மனுதர்ம சாஸ்திரத்தின்  பீடிகையில் கூறப்பட்டுள்ளதே!
இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்த முடியாத நிலையில், இப்போதெல்லாம் யார் பார்க்கிறார்கள் - கடைப்பிடிக்கிறார்கள் என்று கூறுவது அசல் ஏமாற்று வேலையே!
வேண்டுமானால் ஒன்று செய்யட்டுமே! சங்கராச் சாரியார் தலைமையில் ஒரு நாளைக் குறிப்பிட்டு, மனுதர்மத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியை நடத்த முன் வரட்டுமே - வருவார்களா என்று சவால் விட்டே கேட்கின்றோம்.
மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏன் கொளுத்தினார்கள் என்பதை உணரட்டும்.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தங்கத்தினால் செய்த பூணூலைப் போட்டதுதான். திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் (5.4.2002) திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரூ.15 லட்சம் செலவில் பூணூல் (தினமணி 27.2.2014 படத்துடன் வெளியிட்டு இருந்தது) சீரங்க ரங்கநாதனுக்கோ ரூ.50 லட்சம் மதிப்பில் வைரப் பூணூல் போட்டவர்தானே ஜீயர்.
சங்கராச்சாரியார் ஒருவர் பிரதிஷ்டை செய்யப் படும் போது - அவர் அதுவரை அணிந்திருந்த பூணூலை அகற்றி விடுவார்கள் எந்தவித ஆசாபாசங்களுக்கும் ஆளாகக் கூடாது என்று; ஆனால், அதே சங்கராச்சாரியார் அவர்கள் நம்பும் கடவுள்களுக்கே பூணூல் அணிவித்து, ‘கடவுள்களும், நாங்களும் ஒரே ஜாதி!’ என்று காட்டுவதுதானே இதன் நோக்கம்? என்று தணியும் இந்த பிராமண துவேஷம்!” என்று தினமலரில் கட்டுரை எழுதும் திருவாளர் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.
பிராமணர்கள் எல்லாம் சாதுவானவர்களாம் - எந்த அடிதடிக்கும், சச்சரவுக்கும் போகாதவர்களாம். அத்தகைய பிராமணர்களைத் துவேஷிக்கிறார்கள் என்று துக்கம் தொண்டையை அடைக்க தூரிகை பிடிக்கும் இவர் என்ன எழுதுகிறார்? எந்த சொல்லைக் கையாளுகிறார்?
“ஒன்று பட்டிருந்த சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்த சில சண்டாளர்கள்தான் பிராமண துவேஷம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து, பிராமணர்களுக்கு எதிராக, பிற ஜாதியினரை தூண்டிவிட முயன்றனர்” என்று எழுதுகிறார்.
சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்தவர்கள் யார்? பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் வருணாசிரமத்தை உருவாக்கியவர்கள் யார்? இன்றுவரை ஆவணி அவிட் டம் என்ற பெயராலே நாங்கள் பிர்மாவின் முகத்திலே பிறந்த துவிஜாதி என்பதற்கான பூணூலை புதுப்பித்துக் கொள்பவர்கள் யார்?
சண்டாளர்கள் என்கிற தடித்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதிலிருந்தே இவர் போடும் நரி வேஷம் என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!
சண்டாளர் என்றால் என்ன பொருள் இந்து மதத்திலே தெரியுமா? சூத்திரன் மூலம் பிராமணன் மற்றும் இதர வருணத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பிறந்தவன் என்று பொருள்.
‘இழிந்த சூத்திரன் - உயர் வருணத்துப் பெண்ணைக் கூடிப் பிள்ளை பெற்றதை ஆத்திரத்தோடு கண்டிக்கும் அந்த சொல்லை - இந்த ஜாதி ஒழிப்பு(?) வீரர் பயன்படுத்துகிறார் என்றால் என்ன பொருள்? இவர் வேடத்தை இவரே கலைத்துக்கொண்டு விட்டாரே!
“எத்தனையோ காலத்திற்கு முன், யாராலோ நடத்தப் பட்டதாகக் கூறி, அதற்கு இப்போதைய பிராமணர்களான என்னைப் போன்றவர்களை துவேஷத்துடன் பார்க்கின்றன'' என்று எழுதுகிறார்.
📷📷
9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற Ôஅருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியிட்டு விழாவிலே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும், அந்தணர்கள்தான் குருவாக இருந்தார்கள். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் காஞ்சி பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில் என்று பேச வில்லையா? அனைத்தையும் கட்டறுத்தவர் என்பதற் காகப் பூணூலை அறுத்துக் கொண்ட சங்கராச்சாரியார் தான் ஒரு பிராமணர் என்ற அகந்தையிலிருந்து விலகவில்லையே!
கடவுளுக்கு மேலே பிராமணன் எனும் ஆரிய ஆணவம் தலைக்கேறி பேசிய காலம் - தினமலர் எழுத்தாளர் கூறும் எத்தனையோ காலத்திற்கு முன்பு தானா? நாம் வாழும் காலத்தில்தானே!
இந்து மதத்தில்கூட அனைவருக்கும் ஒரு சுடுகாடு கூடாது என்று சொன்னவரும் அதே காஞ்சி பெரியவாள்தானே (8.3.1962).
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் மகா பெரியவாள் என்று மகத்தான குரலில்-போக்கில் பேசப்படும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தானே! (நூல் - ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்)
தீண்டாமையை வலியுறுத்திய இவரை பிணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் நியாயமாக (PCR act) சிறையில் தள்ளியிருக்க வேண்டாமா?
வெகு நாட்களுக்கு முன் போக வேண்டாம் - இந்தியாவின் முதல் குடிமகனான முப்படையின் தலைவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் காப்பாளரான இந்தியக் குடியரசு தலைவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்தால், வடநாட்டில் இரண்டுகோயில்களில் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப்பட்டது மனுமந்தாதா காலத்திலா? நம் கண் முன்னாலா?
அஜ்மீர் பிர்மா கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 15.5.2018), பூரி ஜெகநாதர் கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 27.6.2018) ஒரு குடியரசுத் தலைவருக்கே இந்த அவமானம் நடந்ததே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள்தானே மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சிறீபெரும்புதூர் ஜீயர் பின்னணியில் அது நடக்கவில்லையா?
ராஜாஜியின் சிபாரிசின் பெயரில்  ஃபீஸ் வாங்காத வக்கீலாக பல்கிவாலா ஆஜராகி வாதாடவில்லையா?
வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி சூத்திரன் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி செத்து விடும், தீட்டுப்பட்டு விடும், அந்தத் தீட்டைக் கழிக்க ஆயிரம் கலசங்களைப் புதிதாக வைக்க வேண்டும், பிராமண போஜனம் நடத்த வேண்டும் என்று சொன்னவர்கள் யார் - தினமலர் எழுத்தாளரே?
உங்களுக்கு அடியாட்கள் தேவைப்படும் பொழுது இந்துக்களே ஒன்று சேர்வீர் என்பீர்! மற்ற நேரத்தில் சூத்திரன் அர்ச்சகரானால் சாமி செத்துப் போய்விடும், தீட்டுப் பட்டு விடும் என்பீர்!
காஞ்சிமடத்திலே சுப்பிரமணியசாமி சென்றால் சங்கராச்சாரி பக்கத்திலே சமமாக நாற்காலி போட்டு ஜம்மென்று உட்கார முடிகிறது. அப்துல் கலாமும், அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனும் தரையில் உட்கார வேண்டியிருந்ததே!
இவை எல்லாம் எப்பொழுதோ நடந்தது என்று சொல்லப் போகிறீர்களா திருவாளர் கார்த்திகேயன் அய்யர் அவர்களே?
ஈ.வெ.ரா. தூண்டி விட்டது ஜாதி துவேஷம் என்று குறிப்பிட் டுள்ளீர்களே -
ஈ.வெ.ரா. ஜாதியையும் உண்டாக்கவில்லை, யாரையும் தூண்டியும் விடவில்லை - ஜாதியை உண்டாக்கியது நீங்கள்; ‘இன்றும் நாங்கள் பிராமணர், பூணூல்காரர் கடவுளுக்கும் மேலே நாங்கள்!” என்று சொல்லுவது நீங்கள்.
நீங்கள் பிராமணர்கள் என்றால் நாங்கள் சூத்திரர்களா? நான்கு வருண அமைப்பில் அப்படிதானே பொருளாகும்! சூத்திரர்கள் என்றால் ஏழு வகைப்படும் -அதில் ஒன்று வேசி மக்கள் என்பதுதானே உங்களின் ஹிந்து மதம்!
இதை எதிர்த்துக் கேட்டால் துவேஷமா? உண்மையிலேயே திருடியவனை விரட்டினால் ‘திருடன் திருடன்’ என்று உண்மைத் திருடனும் சேர்ந்து கத்திக் கொண்டு ஓடித் தப்பிக்கும் தந்திரம் பெரியார் சகாப்தத்தில் நடக்காது, நடக்க விடவும் மாட்டோம் - அதற்கான ஆணித்தரமான அசல் தலைமையும் உண்டு - எஃகு பலம் படைத்த இயக்கமும் உண்டு!
உண்மையைச் சொல்லப் போனால் உங்களுக்கு ஒரு வகையில் பாதுகாப்பாக இருந்தவர்தான் பெரியார். மக்கள் மத்தியிலே தக்க பிரச்சாரத்தின்மூலம் விழிப்புணர்வை உண்டாக்கி ஜாதியை ஒழித்து பிராமணனும் இல்லை - சூத்திரனும் இல்லை, “அனைவரும் மனிதர்தான்” என்ற நிலையை உண்டாக்கத்தான் 95ஆம் வயதிலும் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன்தான் தந்தை பெரியார்! நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டீர்கள்.
உடல் எல்லாம் மூளை என்று கூறிக் கொள்ளும் ராஜாஜியே இவ்வாறு சொன்னதுண்டு!
In fact in one occasion Rajaji Proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (caravan april 1, 1978. Gandhiji’s Crusade against Casteism) முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணராக இருப்பதில்தான் பெருமைப்படுவதாகச் சொன்னார் என்றால் வேறு யாரை எதிர்ப்பார்ப்பது?
தீண்டாமை ஒழிக, ஜாதி ஒழிக என்று சங்கராச்சாரியார் சொல்லுவாரா? பார்ப்பனர் சங்கம் தீர்மானம் போடுமா?
பார்ப்பனிய ஆதிக்க நஞ்சை ஏதோ பெரியார்தான் எதிர்த்தாரா? சமூகத்தில் மாற்றம் தேவை  என்று எண்ணியவர்கள் எல்லாம் பார்ப்பனர்களை வெறுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையா?
புத்தர் முதல் சித்தர்கள் உட்பட, ஜோதி பாபூலே, நாராயண குரு, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் (ஏன் விவேகானந்தர்கூட) என்று தொடர்ச்சியாக ஏன் எதிர்த்தனர் - வெறுத்தனர் என்பதைக் கொஞ்சம் அறிவோடு சிந்திக்க வேண்டாமா? பூணூல், பூணூல் ஆணவத்தோடு அணுகினால் அவர்களின் புத்தி தினமலர், ‘துக்ளக் போல்தான் மேயப் போகும்.
காந்தியாரை மகாராட்டிரத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே எனும் சித்பவன் பார்ப்பான் சுட்டுக் கொன்றபோது, மும்பையில் அக்கிரகாரங்கள் எரிந்தன; பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர்.
பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புணர்வு கொதி நிலையில் உள்ள தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் தாக்குதலைத் தொடுத்திருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது; அதனைத் தடுத்தாட்கொண்டவர் தந்தை பெரியார் என்ற நன்றியை மறந்து விட்டு, தர்ப்பைப் புற்கள் தலைகொழுத்துத் திரிய வேண்டாம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு வேட்பாளராகக்கூட பார்ப்பனரை நிறுத்த எந்த கட்சியும் முன்வராததற்கு என்ன காரணம்? நாதியற்ற நிலையைத் தேடிக் கொண்டது யார் என்பதை திரிநூல் பத்திரிகை எண்ணிப் பார்க்கட்டும்.
இந்தக் கட்டுரையில் கூட, Ôஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்?Õ - என்று தானே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம். இந்தப் பிராமணன் எனும் தொனியும், உச்சரிப்பும், அடையாளமும், உங்களிடம் ஆணவமாக துள்ளித் திரியும்  வரையிலே, ஆவணி அவிட்டங்கள் தொடரும் வரையில், அதனை  எதிர்த்து- துவேஷமல்ல - மனித உரிமையும், சமத்துவ உணர்வும் - சமர் செய்து கொண்டுதானிருக்கும். மேலும் மேலும் உங்களின் புலம்பலும், உங்கள்மீதான வெகு மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் எரிமலையாய்க் கனன்று கொண்டுதானிருக்கும்-ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள் ஆவணி அவிட்டப் பூணூல்கார்களே!
யாரால் பாதுகாப்பு?
இதற்கு மேல் இழைக்கப்பட முடியாது என்கிற அளவுக்குக் கொடுமைகளையும், இழிவுகளையும், உரிமைப்பறிப்புகளையும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும்பாலான-மண்ணுக்கு உரிய மக்கள்மீது சுமத்திய-திணித்த உண்மையை - ஒரு மாபெரும் தலைவரால், ஒரு மாபெரும் இயக்கத் தால் புரிய வைக்கப்பட்ட நிலையில், இன்றளவும் பிராமண - சூத்திரத் தன்மையை நிலை நிறுத்து வதில் குறியாக இருக்கும் ஓர் ஆதிக்க வெறிக் கூட்டம் பாதுகாப்பாக, நிம்மதியாக, தங்கள் விகிதாச்சாரத்துக்கும் மேல் பன்மடங்கு எல்லாவற் றிலும் அனுபவிப்பவர்களாக இங்கு வாழ முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அந்தத் தலைவர் தந்தை பெரியாரும், அந்த இயக்கமும்தான் அதன் பண்பாட்டால்தான்  என்பதை உணர வேண்டிய வர்கள் உணர வேண்டும். இதைப் பலகீனமாக எடுத்துக் கொள்ளுகிறார்களா என்று தெரிய வில்லை. முடிவு அவர்கள் கையில்!
-மின்சாரம்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:53 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தினமலர், பதிலடி, மின்சாரம்

சனி, 13 ஜூன், 2020

ஜெயேந்திரர் கம்பி எண்ணியதும் கர்மப் பலன்தானா !


மின்சாரம்
'நீ உன் தாய் வயிற்றில் பத்து மாதம் இருந்து தானே பிறந்தாய் ஏன் கீழ் ஜாதி?'
"அது எனது கர்மபலன் சாமி!"
"பார்ப்பானும் பத்து மாதம் தாயின் வயிற்றிலிருந்து தானே பிறந்தான் - அவன் ஏன் உயர் ஜாதி - பிராமணன்?
"அது அவன் கர்ம பலன்சாமி"
"நீ ஏன் உழைத்து உருக்குலைந்து போனாய்?"
"அது என் தலை எழுத்து அய்யா! பகவான் பிண்டம் பிடித்துப் போடும் பொழுதே எங்கள் தலையில் எழுதி விட்டானே!' அதனை மாற்றி எழுதிட முடியுமா அய்யா?"
"அவன் உழைக்காமல் உப்பரிகையிலே வாழ்கிறானே - அது எப்படி?"
"அதற்குப் போன ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் - மகராசன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்"
"நீ ஏன் படிக்கவில்லை?"
"எல்லோரும் படிக்க முடியுமா? படிப்புன்னா - அதற் காகப் பிறந்தவன் பிராமணன் - அவன் பிறந்த நேரம்!"
"நீ ஏன் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓலைக் குடிசையில் வாழ்கிறாய்?"
"எல்லாம் அவன் செயல் - அதை யாரே மாற்றிட முடியும்?"
- இப்படி எதற்கெடுத்தாலும் தன் தாழ்மைக்கும், இழி நிலைக்கும் தாங்களே தர்ம - நியாயம் பேசும் விசித் திரத்தை வேறு எங்காவது கண்டதுண்டா?
பாதிக்கப்பட்டவனே அந்தப் பாதிப்புக்கான நியாயத்தைப் பதிலாகக் கூறும் பரிதாபத்திற்குரிய பஞ்சமர்களை எந்த நாடு கண்டது?
இந்தக் கீழ்ஜாதி மனப்பான்மையை எப்படி மாற் றுவது?
வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து கெட்டவனை மேலே தூக்கி விடுவது எப்படி?
உழைத்தும் உருக்குலைந்து கிடக்கும் இந்த மக்களை உன்னத நிலைக்குக் கொண்டு வருவது எப்படி?
இப்படி சிந்தித்தவர் புத்தர் - புத்தருக்குப்பின் ஆரியர் களின் முன் ஜென்மம், தலைவிதி, கர்மபலன் என்னும் சதிக் காட்டின் வேரை வெட்டிவீழ்த்தியவர்தான் வெண் தாடி வேந்தர் பெரியார்.
நீ கீழ் ஜாதியல்ல - ஜாதி என்பதற்கு அடையாளம் என்ன? அவன் உயர் ஜாதிக்காரனும் அல்ல. பிர்மா முகத்தில் அவன் பிறந்தவன் என்று சொல்லுவதெல்லாம் அசல் பித்தலாட்டம்.
பிர்மா ஆண் கடவுளா - பெண் கடவுளா? ஆண் கடவுளின் முகத்தில் ஒருவன் பிறக்க முடியுமா? இல்லை இல்லை பிர்மாவின் முகத்தில்தான் பிராமணன் பிறந்தான் என்றால் அவன் முகத்தை ஓவியமாகத் தீட்டினால் அது எப்படி இருக்கும்?
விதியை நம்பாதே. அது வீணர்களின் கூற்று. கர்ம பலன் என்பது கயவர்களின் ஏற்பாடு.
ஒரு பொழுதும் உனக்கு உரிமை உணர்ச்சி வந்து விடக் கூடாது என்பதற்காக வந்தேறிகள் செய்த வடிகட்டின பித்தலாட்டம். கர்மவினை என்பதெல்லாம் உன் உழைப்பைச் சுரண்டும் சூழ்ச்சிக் கருவி.
உன் தலையில் எழுதியவன் யார்? எந்த மொழியில் எழுதினான்? அவன் எழுதியது உண்மை என்றால், அந்த எழுத்துக்கள் இப்பொழுது எங்கே - எங்கே! என்று எண்ணற்ற கேள்விக் கணைகளை ஏவி ஏவி ஆமைகளாய் கிடந்த மக்களை அரிமாவாக ஆர்ப்பரித்து எழச் செய்ய, ஊமைகளாகக் கிடந்தவர்கள் மத்தியில் உரிமைக் கனலைத் தட்டி எழுப்பினார். அறிவார்ந்த வினா வெடி குண்டுகளை வீசி வேதியக் காட்டை எரித்துச் சாம்பலாக்கினார். வீழ்ந்துபட்ட மக்களை வேங்கைகளாய்ச் சிலிர்த்து எழச் செய்தன் விளைவு - உழைத்தவன் உரிமைச் சங்கு ஊதுகிறான். உழைப் பாளியைப் பங்காளியாக்கு என்று உரத்தக் குரலில் முழங்குகிறான்.
கல்வியைக் கொடு - கை நாட்டுப் பேர்வழிகளாக நாங்கள் இருந்தது போதும் போதும் என்று கர்ச்சனை புரிந்து பஞ்சமர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆக்கப் பட்ட இந்த மண்ணின் மக்கள் சூத்திரர்கள் ஆட்சி செய்தால் அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசு போல் அழிந்து விடும் என்னும் சாத்திரக் குப்பைகளைச் சாம்பலாக்கி -
"சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் ஆட்சி இது - இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை" என்று சட்டப் பேரவையில் சங்கநாதம் கேட்டதே!
ஆதி திராவிடர் அய்.ஏ.எஸ். ஆகி விட்டாரே! ஏன் குடியரசு தலைவராக ஆகி விட்டாரே!
குப்பன் மகன் சுப்பன் குளு குளு காரில் வந்து இறங்குகிறாரே!
பேயென்று இழித்துப் பேசப்பட்ட பெண்கள் இன்று, பேண்ட் - சூட் அணிந்து ஆணா, பெண்ணா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு ஆட்சியினைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிய நிலைக்கு வந்து விட்டார்களே!
பார்ப்பனர்களின் தனிக் குத்தகையாக்கிக் கொண்ட கோயில் கருவறைக்குள்ளும் கறுப்பர்கள் நுழைந்து அர்ச்சனை செய்யும் நிலை ஏற்பட்டு விட்டதே. அடுத்துப் பெண்களும் அர்ச்சகர்.உரிமைக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனரே!
பஞ்சகச்சம் கட்டி திறந்த பூணூல் மேனியுடன் அவிட்டுத் திரியுடன் வீதிகளில் வீறு நடைபோட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டதே! அப்படி இப்பொழுது சென்றால் கோலி விளையாடும் சிறுவன்கூடக் கேலி பேசுவானே!
ஆமாம்.. கலிகாலம் முற்றி விட்டதுஎன்ன செய்யலாம்?
பார்ப்பனர்கள் கூடிக் கூடி "குசுகுசு"வென்று பேசு கிறார்கள். மத்தியில் நம்மவர்கள் ஆட்சி வந்தாலும் இந்தப் பாழாய்ப் போன தமிழ்நாட்டில் மட்டும் நம் ஜம்பம் பலிக்கவில்லையே!
என்ன செய்யலாம்! ஒரு கை பார்ப்போம் - ஊடகங்கள் தான் நம் கைகளில் இருக்கிறதே! பத்திரிக்கை நடத்தும் 'சூத்திரவாள்கள்'கூட இன்னும் ஆன்மிகச் செய்திகளை அள்ளி விட்டுக் கொண்டு தானே இருக்கின்றனர்.
இவாளை வீழ்த்த வேண்டுமானால் மீண்டும் நம் வேதியப் புத்தியைக் காட்ட வேண்டும். விதி, கர்மபலன், பாவம், புண்ணியம், தலையெழுத்து சங்கதிகளை அவிழ்த்துக் கொட்டுவோம்!
'அடிக்க அடிக்க அம்மியும்கூட அசையத்தானே செய்யும் என்ற முடிவுக்கு' அக்கிரகாரம் வந்து விட்டதாக தெரிகிறது?
இந்தக் காலத்திலேகூட அப்படிஒரு எண்ணம் வந்து விட்டதா? நம்ப முடியவில்லையே என்று எண்ண வேண்டாம்.
திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் தான் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். 'ஆன்மிகக் கண்காட்சி' - 'விவேகானந்தர் ரத ஊர்வலம்' இன்னோ ரன்ன ஏற்பாடுகளை ஜாம்ஜாமென்று முடித்து விட்ட நிலையில் - அடுத்த கட்டத்துக்குத் தாவியி ருக்கிறார். 'சோ' குடும்பத்திடமிருந்து 'துக்ளக்'கைப் பறித்துக் கொண்ட திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் 'துக்ளக்'கை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்து விட்டார்.
இது 'துக்ளக்'கில் (10.6.2020) அவர் பெயரால் எழுதப் பட்ட கட்டுரையின் சில பகுதிகள்:
பிறவிக் குருடன், செவிடனாக மனிதன் ஏன் பிறக் கிறான்? இதற்கெல்லாம் விளக்கம் இருக்கிறது. ஹிந்து மதத்தில். மறுபிறப்பு என்கிற தத்துவத்தில் நம்பிக்கை இருந்தால்தான் இதற்கு விளக்கம் கிடைக்கும்.
றீவினைப் பயனையும், மறுபிறப்பையும் பிரிக்க முடியாது.
றீமறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல் வினைப் பயனில் நம்பிக்கை இருக்க முடியாது.
இவ்வளவையும் எழுதிவிட்டு, கடைசியில் முடிக்கும் வரிகள்தான் முக்கியம்.
"இறை நம்பிக்கையை ஒழித்து, மனிதச் சிலை களையும், நினைவகங்களையும் வழிபடும் திராவிட பகுத்தறிவு விபரீதத்தால், நம் மகான்கள் கூறிய ஆன் மிகக் கருத்துகளை நாம் மறந்து விட்டோம் - எனவே முற்பிறப்பின் நம் வினைகளில் இந்தப் பிறவிப் பயன் களை ஓர வஞ்சனைகளாகப் பார்க்கிறோம்" என்று மங்கலம் பாடி முடித்துள்ளார் திரு. குருமூர்த்தி அய்யர்வாள்!
கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே பார்த்தீர்களா?
கர்ம பலன், தலை எழுத்து என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக் களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தோம். அதன் அடிமடியில் கை வைத்து நம் தலையில் மிளகாய் அரைக்கும் அளவுக்குத் தலைகீழாகப் புரட்டியடித்தது திராவிட பகுத்தறிவு என்பதை அவர்களை அறியா மலேயே ஒப்புக் கொண்டு விட்டனரே!
அப்படிப்பட்ட தலைவர்களுக்குச் சிலைகளும், நினைவகங்களும் உருவாகி விட்டதாம். வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கதறும் கண்கொள்ளாக் காட்சி இது.
ஒரு பக்கத்தில் பெரியார் மண்ணா இது என்று கிண்டலடிப்பது, இன்னொரு பக்கத்திலே ஆம், இது பெரியார் மண்தான் என்று மனப்புழுக்கத்தோடு புலம் புவது - பலே, பலே படிப்பதற்கு ரொம்பவும் மகிழ்ச்சி யாகத்தானிருக்கிறது - மண்டியிடும் ஆரியத்தின் மண் மேட்டிலே ஒடுக்கப்பட்ட மக்களின் உப்பரிகை மாளிகை தான் எழும்!
எல்லாம் தலை எழுத்தின்படிதான் நடக்கும் என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பூணூல் பேனா பிடிக்கும் குருமூர்த்திகளுக்குச் சில கேள்விகள்.
உணர்ச்சி வயப்பட்ட யாரோ சில இளைஞர்கள் சில பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்தனர் என்ற செய்தி வந்ததே - அதுகூட தலை எழுத்தின்படிதானே நடந்தது என்று ஏற்றுக் கொள்வீர்களா? கோயில் சிலைகளின் திருட்டும்கூட தலை எழுத்தின்படிதானா? வெடிகுண்டு வீச்சுகளும்கூட சம்பந்தப்பட்டவர் போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான பரிசா?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் கம்பி எண்ணினாரே - அதுவும் கர்மபலனின் விளைவு தானா? பார்வதியிடம் ஞானப்பால் உண்ட, தேவாரம் பாடிய திருஞான சம்பந்தன் 16 வயதில் அற்பாயுசாக மாண்டானே! அதுகூட கர்மப் பலனின் விளைவா? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த 2020ஆம் ஆண்டிலும் இப்படி, விதியையும், கர்ம பலனையும் கட்டிக் கொண்டு அழுதால் - எழுத ஆரம்பித்தால் அனேகமாக அவர்களுக்கு அனர்த்த மாகத் தான் முடியும் .. ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம்!
விநாசகாலே விபரீத புத்தி!'
- விடுதலை நாளேடு,13.6.20
இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:48 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சங்கராச்சாரி, துக்ளக், பதிலடி, மின்சாரம்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

படம் செருகல்

படம் செருகல்
ஓபரா-அமெரிக்க நாத்திகர்
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்
    முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மு...
  • நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்
    வ நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! - தஸ்லிமா நஸ்ரீன் ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்...
  • பொன்மொழி
    தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த்  தோல்வியுறுவான்.   - நெப்போலியன் சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க...
  • ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
    எத்தர்களை  முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் ...
  • மறைந்த அயோத்திதாசர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
    May 20, 2021  • Viduthalai   ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக...
  • பாதர் எனக்கு ஒரு டவுட்?
    😇😇🤔 *மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?* *பாதர் : கேளு மகனே* *மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்...
  • வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2
    டாக்டர் துரை.சந்திரசேகரன் (வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாய...
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங்
      விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயக வாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக்...
  • புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
    பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்.... (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ...
  • கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
    ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! -ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்க...

லேபிள்கள்

  • .சிங்காரவேலர்
  • அக்ரகாரம்
  • அகவிலைப்படி
  • அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
  • அண்ணல் அம்பேத்கர்
  • அண்ணா
  • அந்தணர்
  • அந்தணர் என்போர்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமர்நாத்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்யப்பன்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அழகிரி
  • அழிப்பு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுக்கரசு
  • அன்பழகன்
  • அனுபவம்
  • அனுமதி மறுப்பு
  • ஆ.இராசா
  • ஆ.ராசா
  • ஆக்கிரமிப்பு
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசீவகம்
  • ஆத்மா மறுப்பு
  • ஆதிக்கம்
  • ஆய்வு
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்.
  • ஆரிய பூமி
  • ஆரியம்
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர்கள்
  • ஆன்மீகம்
  • இ.மு. சுப்ரமணியம்
  • இணைப்பு மொழி
  • இந்தி
  • இந்தியா
  • இந்தியா ?
  • இந்தியாவா ?
  • இந்தியாவா?
  • இந்து
  • இந்து மதம்
  • இந்துத்துவா
  • இந்துமத கொடுமை
  • இந்துமதம்
  • இந்துவெறி
  • இயக்கங்கள்
  • இயக்கம்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இராசராசன்
  • இராமச்சந்திரனார்
  • இராமலிங்க அடிகள்
  • இராமன்
  • இராமன் பட எரிப்பு
  • இராமாமிருதம்
  • இராமாயண காலம்
  • இராமாயணம்
  • இராமானுஜர்
  • இராவணன்
  • இழப்பு
  • இறுதிவுரை
  • இனம்
  • உணவு
  • உபநிடதம்
  • உபி
  • உமா மகேஸ்வரன்
  • உமாமகேசுவரனார்
  • உயிர்ப்பலி
  • உயிரிழப்பு
  • உரிமை
  • உரைகள்
  • ஊர்
  • எதிர்வினை
  • எம் பி
  • எரிப்பு
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓபரா
  • ஓமந்தூர் பி. ராமசாமி
  • க.அன்பழகன்
  • கட்சி
  • கட்டைவிரல்
  • கடவுள்
  • கடவுள் சிலை
  • கடவுள் மறுப்பு
  • கடை
  • கருப்புச் சட்டை
  • கருப்புச்சட்டை
  • கரோனா
  • கல்வி
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிதைகள்
  • கழகம்
  • களப்பிரர்
  • கற்பனை
  • கா.சு. பிள்ளை
  • காட்டுவாசி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • கார்த்திகை தீபம்
  • கால்டுவெல்
  • காவிரி
  • கான்சிராம்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கீழ்ப்பாக்கம்
  • கு.வெ.கி.ஆசான்
  • குங்குமம்
  • குடகு
  • குடியரசு இதழ்
  • குண்டுவெடிப்பு
  • குணம்
  • குமுதம்
  • குருக்கள்
  • குழந்தை
  • கேரளா
  • கேள்வி
  • கேள்வி பதில்
  • கேள்விகள்
  • கேள்வியும் பதிலும்
  • கைகள்
  • கைலி
  • கைவல்யம்
  • கொடுமை
  • கொலை
  • கோட்சே
  • கோயில்
  • கோயில்கள்
  • கோல்வால்கர்
  • கோழை
  • சங்கராச்சாரி
  • சட்டம்
  • சதி
  • சந்திராயன்
  • சபரிமலை
  • சமணம்
  • சமதர்மம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி விருது
  • சர்.சி.பி. அறிவுரை
  • சரத் யாதவ்
  • சரஸ்வதி நாகரிகம்
  • சரியா
  • சவர்க்கார்
  • சாகு மகராஜ்
  • சாகு மகாராஜ்
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாமி கைவல்யம்
  • சாலினி
  • சாவித்திரி பூலே
  • சாவு
  • சி.நடேசனார்
  • சிக்கல்
  • சிங்காரவேலர்
  • சித்தர்கள்
  • சித்திரவதை
  • சித்திரை
  • சிதம்பரம்
  • சிந்தனை
  • சிந்து
  • சிந்து – சரஸ்வதி
  • சிலை
  • சிவராஜ்
  • சிவன்
  • சின்னகுத்தூசி
  • சுடுகாட்டிலும் ஜாதி
  • சுப்பராயன்
  • சூத்திரர்கள்
  • செய்குத்தம்பி பாவலர்
  • சேரி
  • சொத்து
  • சௌந்தர பாண்டியனார்
  • டார்வின்
  • டி.ஏ.வி.நாதன்
  • தகுதி
  • தம்மபதம்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்
  • தமிழ் இந்து
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் தேசியம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் வேதம்
  • தமிழறிஞர்
  • தர்மதீர்த்தர்
  • தருமாம்பாள்
  • தலைவர்கள்
  • தளபதிராஜ்
  • தற்கொலை
  • தஸ்லிமா நஸ்ரீன்
  • தாகூர்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • தானம் 
  • திப்பு சுல்தான்
  • தியாகராயர்
  • திராவிடம்
  • திராவிடர் - ஆரியர்
  • திருக்குறள்
  • திருட்டு
  • திருப்பதி
  • திருமணம்
  • திருமா
  • திருவரங்கம்
  • திருவள்ளுவர்
  • திருவாங்கூர்
  • திருவிக
  • தில்லி
  • திலகர்
  • திறமை
  • தினமணி
  • தினமலர்
  • தீ விபத்து
  • தீங்கு
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • துரை.சந்திரசேகரன்
  • தேசியம்
  • தேவதாசி
  • தேவநேயப் பாவாணர்
  • தை
  • தொல்காப்பியம்
  • தொழிலாளர்
  • நம்பிக்கை
  • நம்பூதிரி
  • நரபலி
  • நன்னன்
  • நாகநாதன்
  • நாகரிகம்
  • நாசம்
  • நாராயண குரு
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நாஸ்திகம்
  • நீட்
  • நீதி
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நெரிசல்
  • நேயன்
  • பக்தி
  • பகத்சிங்
  • பகுத்தறிவாளர்
  • பகை
  • பட்டுக்கோட்டை அழகிரி
  • படத்திறப்பு
  • படை எடுப்பு
  • பண்டிகை
  • பண்டிதர்
  • பதவி
  • பதிப்புரிமை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பரமசிவம்
  • பரிதிமாற்கலைஞர்
  • பரிபாலனம்
  • பலி
  • பழங்குடியினர்
  • பனகல் அரசர்
  • பனகால் அரசர்
  • பாதிரியார்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பான்
  • பாரத் ?
  • பாரதம்
  • பாரதமா ?
  • பாரதமா?
  • பாரதி
  • பாரதியார்
  • பால்
  • பாலியல் வன்கொடுமை
  • பானகல் அரசர்
  • பாஜக
  • பிரசாதம்
  • பிராமணப் பெருமை
  • பிராமணர்
  • பிராமணியம்
  • பில்லி சூனியம்
  • புத்த - சமணம்
  • புத்தம்
  • புத்தர்
  • புரட்சி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புலவர் குழந்தை
  • பூசாரி
  • பூசை
  • பூணால்
  • பூணூல்
  • பூதம்
  • பெட்ரன்ட்ரஸ்ஸல்
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண் விமானி
  • பெண்கள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • பெரியார
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேய்
  • பேராசிரியர்
  • பொதுப்பணி
  • பொதுவுடமை
  • பொதுவுடைமை
  • பொப்பிலி அரசர்
  • பொன்மொழி
  • பௌத்தம்
  • மகாத்மா ஜோதி பாஃபூலே
  • மணியம்மை
  • மத வன்முறை
  • மதம்
  • மதமாற்றம்
  • மந்திரமா தந்திரமா
  • மயிலாடன்
  • மயிலை சீனி.வேங்கடசாமி!
  • மருத்துவ மனை
  • மறுப்பு
  • மறைமலை அடிகள்
  • மறைமலையடிகள்
  • மறைவு
  • மன்னர்கள்
  • மன்னராட்சி
  • மனு ஆட்சி
  • மனுதர்மம்
  • மனோன்மணியம்
  • மாணிக்க நாயக்கர்
  • மாநாடு
  • மார்க்ஸ்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மாற்று மதம்
  • மின்சாரம்
  • மின்நூல்
  • மீசை
  • மு.வ
  • முத்துராமலிங்கம்
  • முதல்வர்
  • மூடத்தனம்
  • மூடநம்பிக்கை
  • மேயர் ந.சிவராஜ்
  • மைல்கல்
  • மோகன் பகவத்
  • யுனஸ்கோ
  • ரஞ்சித்
  • ராமர் கோயில்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராஜராஜ சோழன்
  • ராஜாராம் மோகன்ராய்
  • ருத்திரன்.
  • லாலா லஜபதி
  • லெனின்
  • வ.உ .சி
  • வ.உ.சி.
  • வகுப்புரிமை
  • வந்தேறிகள்
  • வர்ணம்
  • வரலாறு
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன்முறை
  • வா உ சி
  • வாஞ்சி
  • வி.பி.சிங்
  • வித்தியாசம்
  • விபச்சாரம்
  • விபத்து
  • விருது
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீழ்ச்சி
  • வெறுப்பு
  • வேத காலம்
  • வேதம்
  • வேப்பமரம்
  • வைக்கம்
  • வைக்கம் வீரர்
  • வைகுண்டர்
  • ஜடாமுடி
  • ஜனநாயகம்
  • ஜனாதிபதி
  • ஜாதி
  • ஜாதி வெறி
  • ஜி. யு. போப்
  • ஜீவனோபாயம்
  • ஜீவா
  • ஜோதிராவ் புலே
  • ஜோதிராவ் பூலே
  • ஸ்மார்த்தர்
  • ஸ்வஸ்திகா
  • ஹிட்லர்
  • Bunch of Thoughts

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (7)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • இந்தியா ? பாரத் ? ஒரு வரலாற்றுப் பார்வை- பேரா.இரவி...
    • ►  ஜூலை (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (70)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (25)
    • ►  மே (12)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2023 (45)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2022 (39)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (10)
  • ►  2020 (73)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (4)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (77)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (68)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (28)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (32)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (16)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (35)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மே (7)
    • ►  பிப்ரவரி (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.