பக்கங்கள்

புதன், 19 ஏப்ரல், 2017

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்!

அம்பேத்கரைப்பற்றி தெரிந்துகொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டுமானால், அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்தை தழுவினார் என்பது மட்டுமல்ல, அதில் அவர் எடுத்துக்கொண்ட 22 உறுதி மொழிகள் இருக்கிறது பாருங்கள், அதனை அவரே தயாரித்தார்.

அம்பேத்கர், அக்டோபர் 15, 1956 அன்று நாக்பூரில் பவுத்த சமயத்தைத் தழுவியபோது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள்.

1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.

2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.

3. கணபதி, ‘கவுரி’ மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.

4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.

5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.

6. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.

7. புத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறமாட்டேன்.

8. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.

9. மானுட சமத்துவத்தை நம்புவேன்.

10. சமத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.

11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.

12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்

13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.

14. பொய் பேச மாட்டேன்.

15. களவு செய்ய மாட்டேன்.

16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.

17. மது அருந்த மாட்டேன்.

18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.

19. மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத கேடு கெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பவுத்தத்தை தழுவிக் கொள்கிறேன்.

20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.

21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.

22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.

என்று உறுதி மொழி எடுத்தார்.

இதுதான் மறைக்கப்பட்ட பவுத்தத்திற்குப் புத்தொளியை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் சேர்ந்தபோது கொடுத்திருக்கிறார்.

-விடுதலை,19.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக