பக்கங்கள்

வெள்ளி, 2 மார்ச், 2018

புரட்டி பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!


பார்ப்பனீய சீழில் புழுத்த பரிதாபத்துக்கு உரியவர்களே!

புரட்டி பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!

கொலையே புரியும் கொடிய  இந்துத்துவம்!

ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவில் ஏற்றி

கொன்ற இந்துத்துவம்!

கொத்து  கொத்தாய் பவுத்தர்களை,

ஒழித்த இந்துத்துவம்!

விரட்டி அடித்து, குகைகளில், சித்தர்களை

புதைத்த இந்துத்துவம்!

பிரமாண்டமாய் கோவில் கட்ட அப்பாவிக் கூலிகளை

பலி கொடுத்த இந்துத்துவம்!

விதவை பெண்களை உடன் கட்டை ஏற்றி

எரித்த இந்துத்துவம்!

நம் இன ராவணனை வஞ்சகமாய் கொன்ற இந்துத்துவம்!

நம் இன சம்பூகனை தந்திரமாய் அழித்த இந்துத்துவம்!

நம் இன நரகாசுரனை  நயவஞ்சகமாய் ,

கொன்ற இந்துத்துவம்!

நம் இன மாவலியை மண்ணோடு

புதைத்த இந்துத்துவம்!

நம் இன நந்தனாரை உயிரோடு, தீயிலே

இறக்கிய இந்துத்துவம்!

நம் இன வள்ளலாரை தீ வைத்து

கொன்ற இந்துத்துவம்!

நம் இன வாலியினை அம்பெய்தி அழித்த இந்துத்துவம்!

கோட்சேவை வைத்து  காந்தியாரைக் கொன்ற இந்துத்துவம்!

காமராஜரை உயிரோடு எரிக்க முயன்ற இந்துத்துவம்!

ஆயிரம் ஆயிரமாய் விவசாயிகளை

தற்கொலைக்கு தூண்டிய இந்துத்துவம்!

குஜராத்திலே மனித வேட்டையாடி

மலை மலையாய் மக்களை குவித்த  இந்துத்துவம்!

ரோஹித் வேமூலாக்களை, சரவணன்களை,

முத்துக் குமார்களை மறைமுகமாய்,

கொலை செய்த இந்துத்துவம்!

நரேந்திர தபோல்கரை, கோவிந்த் பன்சாரேக்களை,

கல்புர்கிகளை, கவுரி லங்கேஷ்களை,

கொன்ற இந்துத்துவம்!

வியாபம் ஊழலை மறைக்க,

உயிர்களை மர்மமாய் கொன்ற இந்துத்துவம்!

நீட்டு கயிறால் அனிதாவை, இறுக்கி

கொன்றதும்  இந்துத்துவம்!

புரட்டிப் பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!

கொலையே புரியும் கொடிய  இந்துத்துவம்!

- தகடூர் தமிழ்ச்செல்வி

- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக