#கார்த்திகை_தீப_வரலாறு
கார்த்திகை தீபமென வழங்கும் 
கார்த்துல 
தீபம் மெய்யும் - இந்து திரிபமும்.                       
இந்தியாவில் மானிடர்களால் 
போற்றப்பட்டு கொண்டாடி வரும் 
அனைத்து இந்து பண்டிகைகளும் 
இந்து மதத்தின் பண்டிகைகளா.?
என்று நாம்  கேள்வி எழுப்பினால்...
திருப்தியான பதில் இந்து மதத்தில் இல்லை மாறாக இந்து பண்டிகைகள் அனைத்திற்கும் இந்தியாவில் இரண்டு  வரலாறுகள் உண்டு
1  இந்து மதம் கூறுவது 
புராணம் கதைகள் அதாவது பொய் புரளிகள் நிறைந்த ஆதாரம்மற்ற வரலாற்று கதைகள்.
2  இந்த பண்டிகைகளுக்கு 
பௌத்த கூறும் 
வாய்மை நிறைந்த வரலாற்று ஆதாரங்கள்.
அந்த வரிசைகளில்  கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீபம் உண்மை வரலாறு
இந்த வரலாற்றை 
ஆக்கிரமித்துக் கொண்ட 
இந்து மதத்தின் திருட்டு புத்தியையும் 
அதை பற்றி தமிழ் இலக்கியங்களில் 
கூறும் ஆதாங்களுடன்  பார்ப்போம்.
முதலில் கார்த்துல தீபம் 
என்பதின் பொருள் அறிவோம்.
கார் என்றால் இருள், 
துலள் என்றால் விளக்குதல்,
 தீபம் என்றால் வெளிச்சம், 
அதாவது 
 "இருள் விலகி 
வெளிச்சம் பெருவதே இதன் அர்த்தம்" 
மக்கள் இருளை கண்டு அச்சமும் 
மூட நம்பிக்கையும், 
கொண்டுயிருந்த வேலையில்...
இதில் இருந்து மக்கள் வௌியேற,
வெளிச்சம் தேவையாய் இருந்த 
நிலையில் நெடுங்காலங்களுக்கு முன் 
மலாடபுரம் என்ற ஊரில் இருந்த 
பௌத்த சங்கத்தை சேர்ந்த அறிஞர்கள் மக்களுக்குப் 
பயன் தரக் கூடிய 
பல ஆய்வுகளைச் செய்து வந்தர்கள்.
அந்த  வரிசையில் மருந்துகளும் கண்டுபிடித்து 
மக்கள் பயன்பாட்டிற்க்கு அளித்தார்கள்.
அவ்வாறான பணியில் 
பேராமணக்கு - (கொட்டைமுத்து) 
என்னும் விதையிலிருந்தும்,
சிற்றாமணக்கு விதையிலிருந்தும் எண்ணெய் வடித்து எடுத்து
அதை மருந்துகளுடன் கலந்து
உபயோகித்து அதன் 
நற்பலன்களை அறிந்திருந்தார்கள்                   
அப்போது 
பெரிய பிரச்சனையாக இருந்தது இரவின் இருளைப் போக்க அது பெரிதும் 
உதவும் என 
பௌத்த அறிஞர்கள் நம்பினார்கள். 
ஏனெனில் இருட்டில் விளக்கை 
ஏற்றும் பழக்கம் அப்போது இல்லை. 
மாறாக இருளை போக்க  காய்ந்த மரத்தினை வெட்டி அதைக் தீயிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தைத்தான் மக்கள் பயன்படுத்த முடியும்,
ஆனால் அதிலும் பிரச்சனை இருந்தது.
வெளிச்சமும் நீண்ட நேரம் கிடைக்காது,
நெருப்பு அவிந்துப் போவதால் உண்டாகும் புகை மூச்சு திணறலும்,
பல நோய்களையும் உருவாக்கும்.
இருப்பினும் விறகின் வெளிச்சப்பயன்ழகள் குறைவுதான்.
அந்த கையறு நிலையில்தான் 
ஆமணக்கு விதைகளில் கிடைத்த நெய் பெரிய வரமாக அமைந்தது.
பௌத்த சங்கத்தோரான அறிஞர்கள் 
 கண்டறிந்த ஆமணக்கு நெய்யில் 
தீபத்தை ஏற்றி சோதனை செய்தார்கள்.
அப்போது 
பிரகாசமான குளிர்ந்த ஒளி கிடைத்தது.
சிறிய 
இடத்திலிருந்து பெரிய ஒளி  கிடைத்தது 
பௌத்த 
அறிஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, 
தமது கண்டுபிடிப்பை மக்களுக்கு பயன்படுத்த  பௌத்த அறிஞர்கள்  முனைந்தார்கள்.
ஆனால் 
மக்கள் உடனே இதனை  
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்...
முதலில் மன்னனின் 
இசைவைப் பெற விரும்பினார்கள்.
ஆனந்தித்து என்னும் தேசத்தை ஆண்டு வந்த அரசனிடம் புத்த சங்க அறிஞர்கள் 
இக் கண்டுபிடிப்பை  காண்பித்தார்கள்.
அரசரும் வீடுகளில் இக்கண்டு பிடிப்பை பயண்படுத்த உடனே இசையவில்லை.
ஏனெனில் 
நெருப்பினால் உண்டாகும் புகை பலவிதமான நோய்களை உருவாக்கும் என்பது மட்டுமல்ல...
நெருப்பினால் பலவித பிரச்சனைகள் உண்டாகலாம் என்று மன்னன் அச்சப்பட்டான். 
அதனால் அந்த ஆமணக்கு எண்ணெய்யை சோதிக்க மன்னன் விரும்பினான்.  
அதன்படி ச
யாருக்கும் தீங்கு நேராவண்ணம், 
தனது வசிப்புகளுக்கு அருகில் உள்ள அண்ணாந்து குன்றின் 
( தற்போதைய அண்ணாமலை ) 
உச்சியில் ஒரு பள்ளத்தை வெட்டச் செய்து 
நிறைய ஆமணக்கு நெய்யை தயாரிக்கச் செய்து அதை குன்றின் உச்சிக்கு கொண்டுபோய் வெட்டிய பள்ளத்தில் ஊற்றி,
பருத்தியால் 
திரித்த திரிவுடன்  கொளுத்தச்  செய்தது 
அந்த ஒளியின் புகையால் மலைபகுதி முழுவதும் 
ஆடு,மாடு,விலங்களுக்கு எந்தவிதமான தீங்கும் விளையாதைத் கண்டு 
அனைவருக் வெளிச்சம் கிடைக்குமென 
மக்களின் நம்பிக்கையை உணர்ந்த மன்னர் அனைத்து வீடுகளிலும் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி 
தீபம் ஏற்றிக் கொள்ளவும்,பேராமணக்கையும் சித்தாமணக்கையும் வீடுகள்  தேசமெங்கும் அதிகமாக விளைவிக்க ஆனையிட்டார்.
அதன்படி முதல் மூன்று நாட்கள் மக்கள் தீபத்தை வீட்டுக்கு வெளியே வைத்து விக சோதித்துக் கொண்டனர்.
அதனால் 
தீங்கேதும் விளையாததைக் கண்ட பின்னரே வீட்டுக்குள் ஆமணக்கு நெய்யாலான தீபத்தை  கொண்டு சென்றனர். 
அது முதற்கொண்டு அனைவரும் வீட்டிலேயே  ஆமணக்காலான தீபத்தை  வைத்துக் கொள்ளும் வழக்கம் வந்தது.
அப்படி 
பௌத்த பிக்குகள் 
கண்டு பிடித்த அந்த ஆமணக்கு 
நெய்களால் சோதிக்கப்பட்ட இடம்தான் 
அண்ணாந்து மலை என்ற 
திருவண்ணா மலையாக மறுவியது என்பதைச் 
சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது.
புத்தசங்க அறிஞர்கள் இக் கண்டு பிடிப்பை சோதித்த காலம் முன் பனிக் காலமாகும்.
அதனால் மழைக் காலம் முடிந்து 
முன் பனித் தொடங்கும் காலத்தின் 
முதல் பௌர்ணமியில் 
அவர்கள் தமது சோதனையைச் செய்தனர். 
பௌத்தர்களின் 
கண்டு பிடிப்புகளான பௌத்த நெறி 
பௌத்த சங்கம் பல நாடுகளில் பரவுவது போல இந்த கண்டுபிடிப்பும் பரவியது. 
சீனப் பயணிகள் இதைப்பற்றி குறிப்பை எழுதியுள்ளனர். அவர்கள் நாட்டிலும் ஆமணக்கு நெய்யை அறிமுகப்படுத்தினர்.
அவர்களும் அந் நாளைக் 
கொண்டாடி வருகின்றனர் என்றும்
அயோத்திதாச பண்டிதரும்,
தமிழ் இலக்கியங்களும் குறிப்பிடுகிறது.
நாளடைவில் 
பௌத்தம் வீழ்ச்சிவுற்ற காலங்களில்  
இந்துமதம் இந்த கண்டுப் பிடிப்பை தனக்கானதாக ஆக்கிரமத்தது.
இதற்க்காக 
ஒரு ஆதாரமற்ற 
பொய்யான வரலாற்றையும் 
திரித்து கூறிக் கொண்டிருக்கிறது.
அதாவது சிவபெருமான் தான் முதற் கடவுள் எனவும் 
அவரை சோதி பிழம்பாக பார்வையிட 
பிரம்மணும்,விஷ்ணுவும்,
வழிவகுக்க ஆலயங்களின் முன் 
வாழை மரம் நட்டு 
பனையோலை அதனை சுற்றி அடைத்து
"சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு 
சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து 
சிவபெருமானே சோதிப்பிழம்பாகத் 
தோன்றி காட்சியளிக்கிறார் 
என  நினைவு கூர்ந்து வழிபடுவேண்டுமாம். 
பிறகு வீடுகளில் தீபம் ஏற்றவேண்டுமாம்,
பழங்காலங்களில் ஆமணக்கு தீபம் சோதணைக்கு மூன்று நாட்கள் வீடுகளில் வாசல்களில் வைத்ததையும்
குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் 
என மூன்றாக திரித்து விட்டு விட்டார்கள்.
என 
நம்பகமற்ற கதைகளை வரலாறாக இந்து மதம் கூறுவது இம்ம தத்தின் 
யோக்கிதையை வெளிப் படுத்துகிறது.
எனவே மெய்யை மெய்யாகவும் 
பொய்யை பொய்யாகவும் கூறுவோம்.
ஆதார நூல்:-
#பதார்த்த_சிந்தாமணி
#பெருந்திரட்டு_பாசமட்சி
#பின்கலை_நிகண்டு
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக