பக்கங்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஒரு தெய்வத்துக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட கைகள் இருக்க முடியுமா?

 

தேவதத் பட்நாயக்

[கி.முநூறாம் ஆண்டைச் சேர்ந்த நான்கு கைகள் கொண்ட ஒரு இந்து கடவுள் விஷ்ணுவின் தெய்வச் சிலை மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மல்ஹார் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது]

1800 ஆண்டுகளுக்கு முன்னர் வார்க்கப்பட்ட குஷான் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்து நாணயங் களில்நிறைய கொம்புகளைக் கையில் வைத்திருக்கும் ஒரு பெண்ணின் உருவத்தை நம்மால் காண இயலும்ரோமாயர்களின் பெண்தெய்வம் ஃபார்சுனாவுடனும் (Fortuna), கிரேக்கர்களின் பெண் தெய்வம் டைச் சுடனும் (Tyche),  மத்திய ஆசியாவைச் சேர்ந்த அர்டாச்ஷோவுடனும் (Ardochshoபுத்த மதத்தைச் சார்ந்த ஹரிதியுடனும்  (Haritiஇந்து மத பெண் கடவுள் லட்சுமி என்ற இந்த பெண் உருவம் அடை யாளம் காணப்படுவதை நாம் பார்க்கலாம்தொடக்க கால புத்த ஸ்தூபங்களிலும்பதக்கங்களிலும் லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்இன்றைய இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் காணப்படும் உருவத்தைப் போலவேதாமரை மலர்கள் நிரம்பியிருக்கும் ஒரு குளத்தில்யானைகளால் சூழப்பட்டு,  ஏராளமான நகைகளால் அலங்கரிக்கப்பட்ட  லட்சுமி நின்று கொண்டு இருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளதுஆனால் இவற்றுக்கிடையே மிகமிக முக்கியமானதொரு வேறுபாடு உள்ளது.  லட்சுமியின்  பழைய சித்திரத்தில் இரண்டு கைகளைக் கொண்டவராகத்தான் அவர் காட்டப்பட்டுள்ளாரே யன்றிஇன்றைய உருவங்களில் இருப்பது போல  நான்கு கைகளைக் கொண்டவராகக் காட்டப்பட வில்லை.

1,700 ஆண்டுகளுக்கு முன்னர் குப்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்மக்களிடையே புத்த மதத்தின் செல்வாக்கும் புகழும் பின்னுக்கு தள்ளப்பட்டபோது,   புராணங்களின் மூலம் தங்களுக்கு ஒரு மாற்று விளக்கத்தை அளிக்கும் வேதகால வழியை மறு படியும் நடை முறைப்படுத்தியபோதுதான் இரண்டு கைகள் கொண்ட லட்சுமியின் உருவம் நான்கு கைகள் கொண்ட லட்சுமியாக உருவ மாற்றம் பெற்றதுஇந்த மாற்றம் குஷான் வம்ச அரசர்களின் ஆட்சிக் காலத் தொடக்கத்திலேயே தொடங்கியது.  இந்து கலையி னால் நம்பத் தகுந்ததொரு வழியில் ஏற்பட்ட திருப்பம்நான்கு கைகள் கொண்ட இத்தகைய தெய்வங்களின் எழுச்சியினைக் குறிப்பதாக அமைந்தது.

இரண்டுக்கும் மேற்பட்ட

கைகள் இருக்கவில்லை

இந்தியாவில் முதன் முதலாகக் கலை என்பது ஹரப்பாவில் இருந்து தோன்றியதுதான்இங்குதவம் செய்யும் மனிதர்களின் உருவங்கள் அல்லது புலியிடமிருந்து தப்பி ஓடும் மனிதர்களின் உருவங்கள்அல்லது எருதுகளின் மீது தாவி ஏறும் மனிதர்களின் உருவங்கள்ஊர்வலமாகப் பெண்கள் செல்லும் உருவங்கள்அல்லது வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கூறி முடிக்கும் மனிதர்களின் உருவங்கள் ஆகிய வற்றை நாம் பார்க்கலாம்இந்த உருவங்களில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இரண்டு கைகள் மட்டும்தான் இருந்தனஹரப்பாவின் காலத்துக்குப் பிறகு 2,000 ஆண்டுகள் கழிந்த பிறகுகுறிப்பிடத் தக்க அளவில் நாம் காந்தாரக் கலையையும் மதுரா கலையையும் உருவாக்கிப் பின்பற்றி வந்துள்ளோம்பெரும்பாலும் அவற்றில் உள்ளவைபுத்தரின் வாழ்க்கை வரலாற்றில் இருக்கும் கதைகளைக் கூறுவதாகவோ அல்லது ஜடகா கதைகளில் இருந்து உற்சாகம் பெற்ற நாடோடிக் கதைகளாகவோ இருப்ப வையாகும்மதுரை கலையில் ஒரு புத்தகத்தைக் தனது கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் சரஸ்வதியின்  தொடக்க கால உருவத்தை ஒரு ஜைனர் கோயில் இடத்தில் இருந்து பார்க்க முடிகிறதுஅவருக்கும் இரண்டு கைகள் மட்டுமே இருக்கின்றனகுதிரைகளின் சிறகுகள்தலைகள் மற்றும் உடல்கள் கொண்ட விண்ணிலிருந்து வந்தது போன்ற உயிரினங்களை இங்கு நாம் காண முடிகிறதுஇவை கிரேக்க மற்றும் பெர்சியன் கலை களின் செல்வாக்கினை  பெற்றிருந்தது என்பது தெளி வாகத் தெரிகிறதுஆனால் நான்கு கைகள் கொண்ட எந்த உயிரினத்தையும் அங்கு நம்மால் காண இயலவில்லை.

இந்து கடவுள்களின் தொடக்க கால உருவங்கள் நாணயங்கள் மீது காணப்படுகிறதுகி.மு.200  ஆம் நுற்றாண்டை சேர்ந்த இந்தியகிரேக்க நாணயங்களில் சக்கரத்தை ஏந்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் படங்கள் காணப்படுகின்றனஅவருக்கும் இரண்டு கைகள்தான் உள்ளனகி.பி.200 ஆம்   ஆண்டில் அதாவது 2ஆம் நூற்றாண்டில் குஷான் வம்ச அரசர் களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் திரிசூலம் ஏந்திய சிவனின் உருவம் ஒன்று காணப்படுகிறதுஅதன் பல உருவங்களில் அவருக்கு நான்கு கைகள்  இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளதுஆனால்ஆந்திரப் பிரதேசத்தில் குடிமல்லம் என்ற இடத்தில் கிடைத்த கி.மு. 300 ஆம் ஆண்டைச் சேர்ந்த காலத்திய மிகப் பழைய சிவலிங்க உருவத்துக்கு இரண்டு கைகள்தான் உள்ளனஒரு எருமையைக் கொல்வது போன்றகுஷான் வம்ச அரசர்கள் காலத்தைச் சேர்ந்த தொடக்க கால துர்காவின் உருவத்தை நம்மால் காண முடிகிறதுஅந்த துர்கா உருவத்திற்கும் பல கைகள் உள்ளனதென்மேற்கு சீனாவில்  இருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்த குஷான் வம்சத்தினருக்கு எந்த ஒரு மதத்தின் சார்பும் இருக்கவில்லைஅதனால்தான் அவர்களது சாம்ராஜ்யத்தின் மேற்கத்திய எல்லை ஓரத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள்  கிரேக்கரோமானியசைதின்ய செல்வாக்கு பெற்றவையாகவும்,   அவர்களது சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லை ஓரத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள்  புத்த மதம்மற்றும் இந்து மதங்களின் செல்வாக்கு பெற்றவையாகவும் இருந்தனகுப்தர் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத் தில் இருந்த புத்த மத செல்வாக்கும் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறையத் தொடங்கியது.

மத்திய பிரதேச மாநில மல்ஹார் என்ற இடத்தில் இருந்து கிடைத்தநான்கு கைகள் கொண்ட விஷ்ணு  உருவம் ஒன்றுகி.மு. 100 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தமிகமிகப் பழைய இந்து  தெய்வ உருவ வரைக் கலை என்று காட்டுகிறதுகுப்தர் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த தியோகர் இந்து கோயில் ஒன்றில் இது வெகு வெளிப்படையாகத் தெரிவதாக இருந்தது.  நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவைகருட வாகனத்தில் பறந்து செல்வது போலவும்பாம்புப் படுக்கையில் படுத்திருப்பது போலவும்,  ஒரு ஆசிரியராகவும்மூன்று வடிவங்களிலும் நாம் காணலாம்அவர் படுத்திருக்கும்போது லட்சுமி அவரது கால் பக்கம் உட்கார்ந்து இருப்பதாகக் காணப் படுகிறதுஆனால்லட்சுமிக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன.

தெய்வ வடிவங்களுக்கு இவ்வாறு பல கைகளும்பிற்காலத்தில் பல தலைகளும்  முளைக்கச் செய்த காரணத்தால்,  சராசரி மனித உயிர்களில் இருந்து இயற்கைக்கு மாறான உயிரினங்கள் வேறுபடுத்திக் காட்டப்பட்டனபுத்த மதக் கலையில்பிரம்மாவும்இந்திரனும் புத்தரை வணங்குவது போலவே பெரும்பாலும் காட்டப்பட்டுள்ளதுஅவர்கள்  ஒரு சாதாரண அரசராகவோ அல்லது பூசாரியாகவோ இருக்கக்கூடும் என்பதை அறிந்து கொள்வது ஒருவரால் எவ்வாறு முடியும்பிரம்மாவின் தெய்வீக அந்தஸ்தையும்இந்து மத வேர்களைப் பற்றியும் உறுதி செய்வது போல பிரம்மா நான்கு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார்தொடக்க கால ஜைனக் கலையில்,  தீர்த்தங்கர ரிஷபதேவர் நான்கு திசைகளையும் எதிர்கொள்வது போன்ற நான்கு உருவங்களை நாம் காண்கிறோம்ஆனால்இந்து கலையிலோ,  சிவனின் தலையை நான்கு பக்கங்களிலும் காட்டும் சதுர்முக லிங்கத்தை நாம் காண்கிறோம்ஜைனக் கலையில்,  நான்கு கைகள் கொண்ட யக்சர்களையும் யட்சிணிகளையும் நாம் காணலாம்ஆனால்தீர்த்தங்கரருக்கு எப்போதுமே இயற்கைக்கு மாறானஇயற்கைக்கு மீறிய வடிவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லைஅவரது கணுக்கால்கள் வழக்கத்தை விட சற்று பெரிதாக முழங்கால் வரை இருந்தனஅதுவே அவரது சிறப்புக்கான அடை யாளம்.

தெய்வச் சிலைகள் எவையும்

இங்கு இருக்கவில்லை

பல கைகள்தலைகள்கால்கள் கொண்ட ஒரு கடவுள் என்ற கருத்து முதன் முதலாக வேத இலக்கியத்தில் காணப்படுகிறதுமேலும் அது பகவத் கீதையிலும் விவரிக்கப்பட்டுள்ளதுஅதில் கிருஷ்ணர் தனது பேருருவை எடுத்து,  தனது வடிவை விரிபுடுத்திக் கொண்டும்தனது தலைகள்கைகள்கால்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவி நிற்கிறார்வேதகால பூசாரிகள் தங்கள் கடவுள்களை மனக் கண்ணினால் கண்டனரே அன்றிதங்கள் தெய்வங்களை கல் அல்லது உலோகத்தில் சிலைகளாக ஆக்கிக் கொள்ளவில்லைஉள்ளூர் பழங்குடி மக்கள் அவர்களது கடவுள்களுக்கு வடிவம் அளித்தனர்என்றாலும்பாறைகள்மரங்கள்ஆறுகள்உணவு மற்றும் தண்ணீரால் நிரப்பப்பட்ட  சட்டிகள்கூடைகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் தெய்வங்களை அடையாளம் கண்டு வணங்கினர்மனிதர்களின் உடல் அமைப்பும் தன்மையும் கொண்ட கடவுள்கள் மனித வடிவில் வந்தது (அவதாரம் எடுத்தது)  வெகு காலத்துக்குப் பின்னர் நேர்ந்ததுபலதலைகள்கைகள் கொண்ட கடவுள்களின் உருவங்கள் வந்தது அதற்கும் வெகு காலத்துக்கு பின்னர் நேர்ந்ததுமாயோன்சீயோன்பெருமாள் போன்ற கடவுள்களைப் பற்றி ,  அவர்களது உடல் நிறம்அமைப்புஅவர்களது வாழ் விடம்அவர்களது பதாகைகள்புனித விலங்குகள் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளனஎன்றாலும்பல கைகள்  இருந்ததைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் அவற்றில் இல்லை.

பல தலைகளும்கைகளும் கொண்ட இயல்புக்கு மாறான உயிரினங்களைப் பற்றிய கருத்து முதலில் மஹா யானாவாலும் பின்னர் தந்திரிக் பள்ளிகளாலும் புத்தமத கலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால்இந்த வடிவம்நிர்வாண நிலையை இன்ன மும் அடையாத போதிசத்துவருடன் தொடர்பு படுத்தப்பட்டதுதுன்பற்றுக் கொண்டிருக்கும்  பிரபஞ்சத்தின் பல உயிர்களுக்கு உதவுவதற்காக பல தலைகளையும்கைகளையும் அவர் முளைக்கச் செய்தார்புத்தரைப் போல நிர்வாண நிலையை அவர் அடைந்துவிட்டால்அவர் மிகப் பெரிய வடிவத்தைப் பெறக்கூடும்என்றாலும் அவர் இரண்டு கைகளை மட்டுமே வைத்திருந்தார்.

சரஸ்வதி என்று அடையாளப்படுத்தப்பட்ட பெண் தெய்வம் சாரதாவை வழிபடுவதை ஆதி சங்கராச்சாரியாஏறக்குறைய 12 நூற்றாண்டுகளுக்கு முன்பு  உருவாக்கி நிலைப்படுத்தியதாகக் கூறப்படு கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தப் பெண்ணின் அடையாளங்கள்அவர் நான்கு கைகள் கொண்டவர் என்று காட்டுகிறதுஇந்த மர்மத்தை எவ்வாறு நாம் முடிவுக்குக் கொண்டு வரமுடியும்சங்கரரின் செல்வாக்கினால் இந்துவாக ஆன புத்தமத பெண் தெய்வமா அவர்பிரசன்ன புத்தா அல்லது ரகசிய புத்தர் என்று அவரது எதிர்ப்பாளர்களால் விவரிக்கப்படுபவர் சங்கரர்இந்திய மண்ணில் இருந்து புத்த மதத்தையே மறையச் செய்வதில் ஒரு மிக முக்கியமான பங்களிப்பை சங்கரர் அளித்துள்ளார்எதையுமே நிச்சயமாக எப்போதுமே நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

ஆனால்நாம் இன்று அறிந்திருப்பதெல்லாம்,  லட்சுமி முதல் கணேசர்  மற்றும் சரஸ்வதி வரையிலான கடவுள்கள் எல்லாம் எப்போதுமே நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர்ராமர் அல்லது கிருஷ்ணர் போன்ற  மனித வடிவில் அவதாரங்கள் எடுத்த போது அவர்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே இருந்தனகிறித்துவக் கலையில் தெய்வத்தின் தலையைச் சுற்றி எழுந்த ஒளிவட்டத்தின் வேலையை இந்து கலையில் நான்கு கைகள் செய்கின்றனஅதாவது,  யார் தெய்வீகமானவர்யார் இயல்புக்கு மேலானவர்இயற்கைக்கு மாறானவர்,  மற்றும் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பதை பார்ப்பவர்களிடையே விரைவில் நிலைநாட்டும் வேலையே அது.

நன்றி: 'தி இந்து' 10-10-2021

தமிழில் : ..பாலகிருட்டிணன்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

“நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில்...


1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது

2) அதுதான் என்னை சூத்திரன் என்றது

3) அதுதான் என்னை வேசிமகன் என்றது

4) அதுதான் என் தாயை வேசி என்றது

5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது

6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது

7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது

8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது

9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது

10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது

11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது

12) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது

13) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது

14) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது

15) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது

16) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது

17) அதுதான் நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது

18) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது

19) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது

20) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது

21) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது

22) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது

23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது

24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது

25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது

26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது

27) அதுதான் என் பாட்டனை முடி வளர்க்காதே என்றது

28) அதுதான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது

29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது

30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது

31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது

32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது

33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது

34) அதுதான் அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப்போக்கியது

35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது

36) அதுதான் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது

37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது

38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது

39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது

40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது

41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது

42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது

43) அதுதான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது

44) அதுதான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது

45) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது

46) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது

47) அதுதான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது

48) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது

49) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது

50) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது

51) அதுதான் சூத்திரன் ஆளும் நாடு சேற்றில் மூழ்கிய  பசுப்போல அழிந்துவிடும் என்றது

52) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது

53) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது

54) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது

55) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது

56) அதுதான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது

57) அதுதான் என்னை பார்ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது.

58) அதுதான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்குபார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடித்தால் போதும் என்றது.

59) அதுதான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது

60) அதுதான் பெண்களை ஆணின் உடைமை என்றது

61) அதுதான் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றது

62) அதுதான் ஆணுக்குப் பெண் அடிமை என்றது

63) அதுதான் பெண்களைப் படிக்காதே என்றது

64) அதுதான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது

65) அதுதான் பெண்ணை விதவை என்று ஆக்கி கொடுமைப்படுத்தியது

66) அதுதான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது

67) அதுதான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது

68) அதுதான் வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றது

69) அதுதான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது

70) அதுதான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது

71) அதுதான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது

72) அதுதான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது

73) அதுதான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது

74) அதுதான் பறையனும் பிணமும் ஒன்று என்றது

75) அதுதான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது

76) அதுதான் பிணத்தைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது

77) அதுதான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது

78) அதுதான் ஜாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது

79) அதுதான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது

80) அதுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது

81) அதுதான் ஜாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது

82) அதுதான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது

83) அதுதான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது

84) அதுதான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது

85) அதுதான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது

86) அதுதான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக்கொள்ளலாம் என்றது

87) அதுதான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கல்யாணம்கருமாதிதிதிதெவசம்கோயில் திருவிழாதேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது

88) அதுதான் ஜாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது

89) அதுதான் ஜாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது

90) அதுதான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது

91) அதுதான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது

92) அதுதான் பார்ப்பானே தெய்வம் என்கிறது

93) அதுதான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது

94) அதுதான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது

95) அதுதான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது

96) அதுதான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது

97) அதுதான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது

98) அதுதான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது

99) அதுதான் நாட்டை சூத்திரன் ஆண்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்ததுஇவை அனைத்திற்கும் மனுதர்மத்திலும் இதிகாச புராணங்களிலும் ஆதாரம் உள்ளதுஅந்த இந்து மதத்தை நாம் எதிர்க்க இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்க நாம் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.”

இப்படிக்கு,

மானமுள்ள சுயமரியாதைக்காரன்,

இரா.குணசேகரன்உரத்தநாடு.