சிந்தனை செய்வோம்

பக்கங்கள்

  • பகுத்தறிவு உலகு

திங்கள், 12 டிசம்பர், 2022

பா.ஜ.க. விற்கு 101 கேள்விகள் - சு.வெங்கடேசன் எம்.பி.


பதிலடிப் பக்கம்
  December 12, 2022 • Viduthalai

பா.ஜ.க. விற்கு 101 கேள்விகள்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

சு.வெங்கடேசன் எம்.பி.


பா.ஜ.க. அனுதாபிகளாகவே இருந்தாலும்,  இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!.

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்கள் யாரிடமாவது கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?

1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத் தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே பாலியல் வன்கொடுமை புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப் படுவதும் ஏன்?

மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் ஊதியம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி நன்கொடை தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள்?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறிய வுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனைகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறையீடு செய்யப் படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட இன்று வரை மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டிய லைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில்  பாதையோரம் கடை வைத்து சுருக்குப் பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க் கத்தின் சேமிப்புப் பணங்களை, டீமானடைசேஷன், செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் ரகசியம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத் தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா? 

11. கடந்த தேர்தலில் கைப்பற்றப்பட்ட 3 கண் டெயினர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப் படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிகைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியா மல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடு களை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வர வில்லை? வந்தது  எனில் விவரமென்ன ?  எவ்வவளவு?

13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவ ரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடு களில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பயணம் இந்தியா விற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகி விடுமா?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப் பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு இழப்பை அடைந்து எப்படி? இன்று ரிலையன்சுக்கும், அதானிக்கும் விற்கப்படு வது எப்படி? அரசு விமான நிலையங்களும், துறை முகங்களும் இன்று அதானி விமான நிலையங்களும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி?

16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப் பட்டிருக்கின்றன?

17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் சுங்கக் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்கு வது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். ‘பாஸ்டேக்' என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள்?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக் கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் ரகசியம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்அய்சி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் கார ணம் என்ன? எல்அய்சியில் எந்த விதமான இழப்பு ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் ரகசியம் என்ன? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன?

21. மாநிலங்களின் ஜி.எஸ்.டி. பங்குகள் எங்கே மாயமானது? 

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜக வில் இணைந்து வருகிறார்களே ஏன்? ரவுடிகளின், பாலியல் பலாத்கார காவாலிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா? 

23  PM. Care  collection 

எவ்வளவு?  என்ன கணக்கு?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை. 

ஆனால் நம்புங்கள்..

மோடி புனிதர்,  வலுவானவர்.

பாஜக உத்தமர்களின் கட்சி!

பா.ஜ.க 8 வருட ஆட்சியில்

கீழே உள்ள தகவல்களில் ஏதாவது ஒன்று தவறாக இருந்தாலும் பிஜேபி நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு

2-மருந்து பொருள் விலை உயர்வு

3-ரயில் கட்டண விலை உயர்வு

4-சமையல் எரிவாயு விலை உயர்வு

5-புதிய வரிகள்

6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்

7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்

8-ரூ.500-1000 தடை மற்றும் வேலை இழப்புகள்

9-ரூபாயின் மதிப்பு

10- மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்

11- வெளியுறவுக் கொள்கை

12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்

13- உதய் மின்திட்டம்

14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்

15- அஞ்சல் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்

16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு

17- அருணாசலப் பிரதேச ஆட்சிக் கலைப்பு

18- ராணுவத்திற்கான உணவில் முறைகேடு

19- சீனப்பட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு

20- பலுசிஸ்தான் தலையீடு

21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்

22- ஓய்வூதிய வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்

23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்

24-ஜி.டி.பி குளறுபடி

25-புதிய வங்கி கட்டணங்கள் -ஆதார்

26-வெளிநாட்டு நேரடி முதலீடு

27-தூய்மை இந்தியா திட்டம்

28-மேக் இன் இந்தியா

29-டிஜிட்டல் இந்தியா திட்டம்

30-அணு உலை

31-புல்லட் ரயில்

31-நிலம் கையகப்படுத்தும் மசோதா

33-ஸ்மார்ட் சிட்டி

34-ஹிந்தி திணிப்பு

35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்

36-நீதிபதிகள் நியமனம் தாமதம்

37-ஜி.எஸ்.டி.

38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்

39-IT ஊழியர்கள் பணி நீக்கம் 

40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு

41-கல்புர்கி கொலை

42-ரோஹித் வெமுலா

43-ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகச் சர்ச்சைகள்

44-வருண் காந்தி - ராணுவ ரகசியங்கள்

45-ரகுராம் ராஜன் மாற்றம்

46-ஜல்லிக்கட்டு

47-உத்தராகண்ட் சீனா ஊடுருவல் 15 கி.மீ.

48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா? தொடர் ராணுவ வீரர்கள் பலி

49-ஜியோ சிம் விளம்பரம்

50-லலித் மோடி

51-வியாபம் ஊழல்

52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ரூபாய் ஊழல்

53-சுரங்க ஊழல் - மகாராட்டிரா & கருநாடகா

54-தனி விமானம் ரூ.8000 கோடியில்

55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை

56-1.5 லட்சத்தில் ஆடை

57-பாகிஸ்தானுக்கு திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்

58-பள்ளிப் பாடப் புத்தகங்களில் வரலாறு திரிப்பு

59-முக்கிய பிரச்சினைகளில் மவுனம்

60-பல்வேறு பா.ஜ.க. உறுப்பினர்களின் வெறுப் புணர்வு செயல்பாடுகள்

61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண்கள் பற்றிய கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.

62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச் சராக இருந்த போது

62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM

64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்

65-பதில் இல்லாத தகவல் அறியும் உரிமைச் சட்டம் - மோடி கல்வித் தகுதி

66-ஒன்றிய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை

67-தேச பக்தி நாடகங்கள்

68-மேகாலயா ஆளுநரின் காம லீலை

69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி

70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு

71-சமஸ்கிருதத் திணிப்பு

72-புதிய கல்விக் கொள்கை

73-பொது சிவில் சட்டம்

74-கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்

75-மாட்டுக் கறி தடை

76-மாட்டுக் கறி கொலைகள் - அக்லாக், உனா (குஜராத்)

77-சிறீசிறீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்

78-அயோத்தி ராமர் கோவில்

79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு

80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா

81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை

82-டில்லி விவசாயிகள் நிர்வாண போராட்டம்

83-அதானிக்கு மட்டும் ரூ.72,000 கோடி கடன்

84-SBI மினிமம் பேலன்ஸ் ரூ. 5000

85- சிறுபான்மையினர் விரோத போக்கு

86-மாட்டு அரசியல் 

87- சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டவர்களும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்

88-நீட் தேர்வு

89-ரேஷன் மானியம் நிறுத்தம் .

90 ஆதார் அட்டை குழறுபடிகள்-

91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது 

92 கரோனா சொதப்பல்கள் பலரை கொலை செய்தது

93 CAA - NRC - CAB 

94 68000 மார்வாடிகளுக்கு தள்ளுபடி  - மற்றவர்களுக்கு பட்டை

95 HB

96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்ணையும் உயிருடன் கொளுத்திக் கொன்றது.  

97 பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது

98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை ஆட்டையைப் போட்டது.

99 பழங்குடி மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த 84 வயது முதியவர் ஸ்டேன் சாமி என்பவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத் தது. பிணைக் கூட கொடுக்காமல் சிறையிலேயே மரணிக்க வைத்தது.

100 பிரான்சிலிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தர விட்ட பின்னும் இன்னும் இங்கே வாய்மூடி மவுனம் காப்பது.

101 ஒட்டுக் கேட்க மென்பொருள்  வாங்கிய விபரம்?

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:39 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆர் எஸ் எஸ், எம் பி, கேள்விகள்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் தலைமையில் 'கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு' செயல்முறை விளக்கம் :

 

October 26, 2022 • Viduthalai

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்பு!


சென்னை,அக்.26- கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சி  நேற்று (25.10.2022) மாலை 5.00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் மற்றும் பகுத் தறிவாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்றார். 

கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது - கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் நடைபெற்ற இந்நிகழ்வில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங் கப்பட்டது. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, கிரகண மூடநம்பிக்கைகளை முறிய டிக்கின்ற இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் பகுத் தறிவு, அறிவியல்  மனப்பான்மை பரப்பப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கழகத் துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையில்,

2022ஆம் ஆண்டிலும் கிரகண மூடநம்பிக் கையை முறியடித்திட இதுபோன்ற செயல் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. பத்திரி கைகள், தொலைக்காட்சிகள் கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை பரப்பி வருகின்றன. 

சூரியன் நட்சத்திரம், சந்திரன் துணை கிரகம், பூமி முதன்மை கிரகம் என்று உள்ள நிலையில், அவர்கள் கூறுகின்ற கிரகங்கள் பட்டியலிலேயே   பூமி இல்லை. பத்திரிகைகள் அறிவியல் உண்மையை எடுத்துரைக்காமல், உண்மைக்கு மாறான பொய்களை கட்டுக்கதைகளை கூறிவருகின்றன. கிரகண மூடநம்பிக்கையை முறியடித்திட 'விடுதலை' தவிர எந்த ஏடும் செய்திகள் வெளியிடவில்லை. 

தந்தைபெரியார் சொன்ன 3 பேய்கள், 5 நோய்களில் பத்திரிகையும் உள்ளது. தந்தை பெரியார் சொன்னது இன்றும் அப்படியே உள்ளது. ராகு கேது என்கிற பாம்புகள் சந்திரனை விழுங்குகின்றன என்கிற மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டு உள்ளன. அறிவாளிகள் நாட்டில் குறைவாகத்தான் இருப்பார்கள். அவர்கள்தான் இங்கே வந்துள்ளார்கள். கிரகண நேரத்தில் உணவை உண்டு மூடநம்பிக்கையை முறியடிப்போம் என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இதேபோன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கும் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில், இறையன்-திருமகள் பெயர்த்தியும், இசையின்பன், பசும்பொன் மகளும், பகலவனின் வாழ்விணையருமான சீர்த்தி நிறைமாத கர்ப் பிணியாக கிரகண மூடநம்பிக்கையை முறிய டிக்கும் செயல்முறை நிகழ்வில் துணிவுடன் பங்கேற்றார். அவரும் நேற்று நடைபெற்ற கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கும் செயல் முறை நிகழ்வில் கலந்துகொண்டதோடு, தன் மகன் மகிழனுடன் தானும் நலமுடன் இருப்பதை எடுத்துக்கூறினார்.

எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளி கோ.சொக்கலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த எழிலரசி ஒன்பது மாத கர்ப்பிணியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், குழந்தை பிறந்த பின்னரும் அதே மகிழ்ச்சியுடன் இருப்போம் என்றார். 

தோழர் சத்தியா பக்தி மிகுந்த குடும்பத்தில் இருந்து பகுத்தறிவுள்ள வாழ்விணையருடன் இணைந்ததால், தானும் துணிவுடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகவும், கிரகணம் குறித்து எவ்வித அச்சமும் தனக்கு இல்லை என்றும் கூறினார். கர்ப்பிணிகள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மேனாள் முதல்வர் ச.இராஜசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே..செ.கோபால், சி.வெற்றிசெல்வி, நூர்ஜகான், பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், செயலாளர் விடுதலை நகர் ஜெய ராமன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபன்னா, இளைஞரணி சோ.சுரேஷ், மாணவர் கழகம் பார்த்திபன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், கோவி.கோபால், மாணிக்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுபபாளர்கள், புதுமை இலக்கிய தென்றல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

சூரியகிரகணம் உண்மையும், கட்டுக்கதைகளும்

சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கைளை முறியடிக்கும் நிகழ்ச்சி எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அன்னை மணியம்மையார் அரங்கில், ”சூரியகிரகணம் உண்மையும், கட்டுக் கதைகளும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கத்தின் மாநில ஆலோசகர் முனைவர் கு.இரவிக்குமார் படக்காட்சிகளுடன் கடந்த 2000 ஆண்டுகளாக சூரியகிரகணம் பற்றிய உலக அறிவியல், இந்திய துணைக்கண்டத்தில் நிலவிய அறிவியல், வைதீக மதம் அதற்கு ஏற்படுத்திய முட்டுக் கட்டைகள், அதனால் ஏற்பட்ட பின்னடைவு களை மிகவும் சுவையாக, பள்ளி மாணவர் களுக்கும் புரியும்படியாக விளக்கினார். முக்கியமாக பஞ்சாங்கமாக இருந்தாலும் சரி, வைதீகமாக இருந்தாலும் சரி  'What'  என்பதற்கு பதில் சொல்லிவிடுவார்கள். அவர்கள் மட்டு மல்ல 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்கூட சொல்லிவிடுவார்கள். அதாவது, இது என்ன (What)  என்று கேட்டால், இது சூரியன், இது நிலா, இது பூமி என்று சொல்லிவிடுவார்கள். ஆனால்,, 'Why'  என்று கேட்டால், அதற்கு அறிவியலால் மட்டும்தான் சொல்ல முடியும். 

பஞ்சாங்கமோ, மதங்களோ சொல்லாது. சொல்லவும் தெரியாது. காரணம், ஏன் என்று சொல்வதற்கு நீண்ட ஆய்வு தேவை! அதை அறிவியல்தான் நமக்கு தருகிறது. 

ஆகவே நாம் அறிவியலைத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை  முனைவர் கு.இரவிக்குமார் மாணவர்களுக்கு அழுத்தம், திருத்தமாக பதிய வைத்தார். இருதரப்பிலும் நடைபெற்ற உரையாடல் மூலமாக இக்கருத்து மாணவர்களிடையே பதியவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியாக திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி மாணவர்களிடையே தனது மாணவப்பருவத்தில் நடைபெற்ற சூரியகிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகளை நகைச் சுவையாக எடுத்துரைத்தும், முனைவர் கு.இரவிக்குமார் வகுப்பு எடுத்த முறையை வாழ்த்தியும் பேசினார்.

முன்னதாக இதே அரங்கில் நடைபெற்ற மாணவர்களுக்கான சூரியகிரகணம் பற்றிய ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நினைவுப்பரிசு வழங்கி சிறப் பித்தார். இந்நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுசெயலாளர் ஆ.வெங்கடேசன், கோவி.கோபால், திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாணவர்களின் பெற்றோரும், கழகத்தோழர்களும் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.

ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

நேற்று (25.10.2022) மாலை 5.30மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிப்கை ஒழிப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமையில் நடைபெற்றது.சூரியகிரகணம் குறித்த மூடநம் பிக்கையை விளக்கியும், இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம்சார்பில் அதன் பொறுப்பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தியும்,திண்பண்டங்கள் சாப் பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர்.இந் நிகழ்ச்சியில்  மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பகுத்தறி வாளர் கழக செயலாளர் சிவந்தி அருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண் மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக்,மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன் தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

தாராபுரத்தில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

25-10-2022 மாலை 5:30மணிக்கு சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் தாராபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு மாட்டுக்கறி உணவு உண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மண்டல  இளைஞரணி செயலாளர் ஆ.முனிசுவரன்,  கழகப்  பொதுக்குழு உறுப்பினர்கள் வழக் குரைஞர் நா.சக்திவேல், ஓவியர் நா.மாயவன் மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

லால்குடி மாவட்ட கழகம் சார்பில் கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிகூட்டம் 

25.10.2022 மாலை 5மணிக்கு கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிகூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் லால்குடி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விடுதலைபுரம் இளைஞரணி தோழர்கள் கூட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்தி முடித்தனர். 

பொள்ளாச்சியில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

நேற்று (25-10-2022) மாலை  சூரிய கிரகணம்  நிகழ்வையொட்டி பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கோவை சாலையின் முன்பு மூடநம்பிக்கையை முறியடிப்போம் என்ற பகுத்தறிவு நிகழ்ச்சி அரண் சட்ட மய்யம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. மூடநம்பிக் கையை ஒழிக்கும் பணியில் வேகமாக செயலாற்றுவோம். பகுத்தறிவு பார்வையை உலகிற்கு வேகமாக பரவ செய்வோம் என்ற முழக்கத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விருத்தாசலத்தில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

சூரிய கிரகணத்தின் போது உண்ணக் கூடாது, வெளியில் வரக்கூடாது என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக  விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் 25.10.2022 அன்று மாலை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் சிற்றுண்டி உண்டு களித்து, மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவர் அ.இளங் கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட அமைப்பாளர் வை.இளவரசன், சொற்பொழிவாளர் புலவர் இராவணன், வேப்பூர் வட்டாரத் தலைவர் பி.பழனிச்சாமி, கழுதூர் ம.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மு. முகமது பசீர், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ், பாலச்சந்தர், சவரிமுத்து, இளங்கனி, வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு
 November 01, 2022 • Viduthalai

ஓசூர், நவ.1 25.10.2022 அன்று மாலை 5.30 மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப் புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்கா முடி தலைமையில் நடைபெற்றது.

சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கையை விளக்கியும் இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளிவரகூடாது, சாப்பிட கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொறுப் பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியும், திண்பண்டங்கள் சாப்பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர். இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்ன சாமி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவந்திஅருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண்மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக், மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:42 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கிரகணம்

இனவுணர்வைத் தூண்டும் குருமூர்த்திகள் (வள்ளலார், பெரியார் பாதைகள்)

 

  October 25, 2022 • Viduthalai

மின்சாரம் 

ஆடிட்டர் குருமூர்த்தி எடிட்டர் ஆகி சோ குடும்பத்திடமிருந்து 'துக்ளக்'கை கைப்பற்றி, தம் பூணூல் கோத்திரத்தை 'நிர்வாணமாகக்' காட்டிக் கொண்டு வருகிறார். தந்தை பெரியார்மீது பழிப்பு, முதலமைச்சர்மீது வெறுப்புக் கனல் வீசுவது, திராவிடத்தை இழித்துரைப்பது என்பது அவருடைய பிழைப்பாகி விட்டது.

திராவிட இயக்கத்தைச் சீண்டிப் பார்க்கிறது சிண்டு.

இவ்வார துக்ளக்கில் (26.10.2022) எழுதப்பட்ட கேள்வி- பதில்களுக்கு சாட்டை அடி இங்கே!

கேள்வி: தியாகம் செய்வது - தானம் செய்வது ஒப்பிடுக?

பதில்: தன்னிடத்தில் இருப்பதைக் கொடுப்பது - தானம், தன்னையே கொடுப்பது - தியாகம். 

நமது பதிலடி: தன்னிடத்தில் இருந்து கொடுப்பது தர்ப்பைப் புல்! தானம் என்பது சுரண்டும் புரோகிதத் தொழில்.

கேள்வி: மதச் சார்பின்மை என்பதற்கு திராவிட மாடலில் என்ன அர்த்தம்?

பதில்: ஹிந்து மதச் சார்பின்மை என்று அர்த்தம்.

நமது பதிலடி: ஹிந்து என்றால் நாங்கள் சூத்திரர்கள் -& வேசி மக்கள் என்று அர்த்தப்படுவதால் 'திராவிட மாடல்' என்பது ஹிந்து மதச் சார்பின்மை என்று பொருள்.

கேள்வி: 'வள்ளலார், பெரியார் பாதைகள் ஒரே இலக்கை நோக்கி இணையும் இரு வழிப் பாதை' என்கிறாரே வீரமணி! சரியா?

பதில்: வள்ளலார் பாதையும், ஈ.வெ.ரா. பாதையும் ஒரே இலக்கை நோக்கியது என்று கி.வீரமணி கூற இரண்டு காரணங்கள்தான் நமக்குத் தெரிகிறது. முதுமைக் காலத்தில் ஆன்மிகவாதிகளாகும் நாஸ்திகர்களைப் போல் 88 வயதில் அவருக்கும் வள்ளலார்மீது ஈடுபாடு வந்திருக்கிறது அல்லது முதுமை நோயால் (Senile)  பாதிக்கப்பட்டு இருக்கிறார் அவர்.

நமது பதிலடி: 

'நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சாரம் முதலா
நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவாரில்லை
நீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே' 

என்று இராமலிங்க வள்ளலார் பாடினார். "ஈரோடும், வடலூரும்" என்று 1930களிலேயே நூல் வந்திருப்பது எல்லாம் இந்தப் பூணூல் களுக்குத் தெரியுமா? 'குடிஅரசு' இதழிலும் வள்ளலார் பாடல்கள் வெளி வந்தது புரியுமா?

கல்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக்
காகத்தை யென் செயப் படைத்தாய்?

      -விவேக சிந்தாமணி (பாடல் & 82)

சாஸ்திரம் பார்த்துப் பிறந்தாளாம் - பின்
சாஸ்திரம் பார்த்து சமைந்தாளாம்
சாஸ்திரம் பார்க்கின்ற பார்ப்பாரப் பெண்கள்
தாலியறுப்பதேன் ஞானப் பெண்ணே

 -  ஞான வெட்டியான்

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையுடன்விட் டோடும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர்தாம் அன்றே
        - திருமந்திரம்

இன்னும் எவ்வளவோ வண்டி வண்டியா கிடக்கு!

பார்ப்பனர்கள்பற்றி தந்தை பெரியாரின் கருத்துக்களோடு ஒத்துப் போவதை வெளிப்படுத்தினால் பார்ப்பனக் குருமூர்த்திகளைப் பாடாய்ப்படுத்துதோ!

எத்தனை ஆதிக்கப் பெருமக்கள் வயது மூப்பில் நாத்திகர் ஆனார்கள் என்ற பட்டியல் வேண்டுமா 'துக்ளக்'கே!

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே, தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து வீட்டிலிருந்த ஹிந்துக் கடவுள்களையெல்லாம் வீசி எறிந்தாரே தெரியுமா குருமூர்த்தியே?

கேள்வி: ஈ.வெ.ரா. நடத்தி வந்த விடுதலை பத்திரிகையைத் தங்கத் தட்டில் வைத்த வைரம் என்று கூறலாமா?

பதில்: திருக்குறளைத் தங்கத் தட்டில் வைத்த மலம் என்று கூறிய ஈ.வெ.ரா.வின் சமூக நீதித் தட்டில் வைத்த வைரம் என்று கூறுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

நமது பதிலடி: புளுகாதே குருமூர்த்தியே  & ஆதாரத்தோடு எடுத்துக்காட்டு என்று எத்தனை முறையோ எடுத்துச் சொல்லியும் 'கந்தனுக்குப்புத்தி கவுட்டியில்' என்பது போல உளறுவது அவாளின் தனித்தன்மை. 

தமிழை நீஷப் பாஷை என்று கூறும் 'லோகக் குருக்களின்' சீடர்கள் அல்லவா - அதனால் தமிழ் என்றாலே எப்படியோ கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அற்பப்புத்தி!

"தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்டாலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை -& அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய சமஸ்கிருததத்தின் மீதுதான்."

                - அறிஞர்அண்ணா ('திராவிட நாடு' 2.11.1947)

பார்ப்பனர்களுக்குத் தமிழ் -& பிழைப்புக்கு ஒரு கருவியே! இந்த யோக்கியதை உடையவர்கள் தமிழைப் பற்றியும், திருக்குறள் குறித்தும் அபாண்டமாகப் பழி சுமத்துவது வழி வழியாக வந்த ஆரியப் புத்தியே!

'விடுதலை' சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பது குறித்து குருமூர்த்திகளின் விலாவை கூர் ஈட்டியாகக் குடைகிறது. அந்த ஆத்திரத்தில் அய்யர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

30 சதவீதப் பெண்கள்தான் பெண்மை உடையவர்கள் என்று சொன்னபோதே பெண்கள் மொத்தியிருந்தால் குருமூர்த்தி இப்படியெல்லாம் துள்ள மாட்டார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:28 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: துக்ளக், பெரியார், வள்ளலார்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

படம் செருகல்

படம் செருகல்
ஓபரா-அமெரிக்க நாத்திகர்
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்
    முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மு...
  • நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்
    வ நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! - தஸ்லிமா நஸ்ரீன் ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்...
  • பொன்மொழி
    தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த்  தோல்வியுறுவான்.   - நெப்போலியன் சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க...
  • ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
    எத்தர்களை  முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் ...
  • மறைந்த அயோத்திதாசர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
    May 20, 2021  • Viduthalai   ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக...
  • பாதர் எனக்கு ஒரு டவுட்?
    😇😇🤔 *மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?* *பாதர் : கேளு மகனே* *மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்...
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங்
      விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயக வாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக்...
  • வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2
    டாக்டர் துரை.சந்திரசேகரன் (வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாய...
  • புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
    பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்.... (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ...
  • கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
    ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! -ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்க...

லேபிள்கள்

  • .சிங்காரவேலர்
  • அக்ரகாரம்
  • அகவிலைப்படி
  • அண்ணல் அம்பேத்கர்
  • அண்ணா
  • அந்தணர்
  • அந்தணர் என்போர்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமர்நாத்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்யப்பன்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அழகிரி
  • அழிப்பு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுக்கரசு
  • அன்பழகன்
  • அனுபவம்
  • அனுமதி மறுப்பு
  • ஆ.இராசா
  • ஆ.ராசா
  • ஆக்கிரமிப்பு
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசீவகம்
  • ஆத்மா மறுப்பு
  • ஆதிக்கம்
  • ஆய்வு
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்.
  • ஆரிய பூமி
  • ஆரியம்
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர்கள்
  • ஆன்மீகம்
  • இ.மு. சுப்ரமணியம்
  • இணைப்பு மொழி
  • இந்தி
  • இந்தியா
  • இந்தியாவா ?
  • இந்தியாவா?
  • இந்து
  • இந்து மதம்
  • இந்துத்துவா
  • இந்துமத கொடுமை
  • இந்துமதம்
  • இந்துவெறி
  • இயக்கங்கள்
  • இயக்கம்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இராசராசன்
  • இராமச்சந்திரனார்
  • இராமலிங்க அடிகள்
  • இராமன்
  • இராமன் பட எரிப்பு
  • இராமாமிருதம்
  • இராமாயண காலம்
  • இராமாயணம்
  • இராமானுஜர்
  • இராவணன்
  • இழப்பு
  • இறுதிவுரை
  • இனம்
  • உணவு
  • உபநிடதம்
  • உபி
  • உமா மகேஸ்வரன்
  • உமாமகேசுவரனார்
  • உயிர்ப்பலி
  • உயிரிழப்பு
  • உரிமை
  • உரைகள்
  • ஊர்
  • எதிர்வினை
  • எம் பி
  • எரிப்பு
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓபரா
  • ஓமந்தூர் பி. ராமசாமி
  • க.அன்பழகன்
  • கட்சி
  • கட்டைவிரல்
  • கடவுள்
  • கடவுள் சிலை
  • கடவுள் மறுப்பு
  • கடை
  • கருப்புச் சட்டை
  • கருப்புச்சட்டை
  • கரோனா
  • கல்வி
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிதைகள்
  • கழகம்
  • களப்பிரர்
  • கற்பனை
  • கா.சு. பிள்ளை
  • காட்டுவாசி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • கார்த்திகை தீபம்
  • கால்டுவெல்
  • காவிரி
  • கான்சிராம்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கீழ்ப்பாக்கம்
  • கு.வெ.கி.ஆசான்
  • குங்குமம்
  • குடகு
  • குடியரசு இதழ்
  • குண்டுவெடிப்பு
  • குணம்
  • குமுதம்
  • குருக்கள்
  • குழந்தை
  • கேரளா
  • கேள்வி
  • கேள்வி பதில்
  • கேள்விகள்
  • கேள்வியும் பதிலும்
  • கைகள்
  • கைலி
  • கைவல்யம்
  • கொடுமை
  • கொலை
  • கோட்சே
  • கோயில்
  • கோயில்கள்
  • கோல்வால்கர்
  • கோழை
  • சங்கராச்சாரி
  • சட்டம்
  • சதி
  • சந்திராயன்
  • சபரிமலை
  • சமணம்
  • சமதர்மம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி விருது
  • சர்.சி.பி. அறிவுரை
  • சரத் யாதவ்
  • சரஸ்வதி நாகரிகம்
  • சரியா
  • சவர்க்கார்
  • சாகு மகராஜ்
  • சாகு மகாராஜ்
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாமி கைவல்யம்
  • சாலினி
  • சாவித்திரி பூலே
  • சாவு
  • சி.நடேசனார்
  • சிக்கல்
  • சிங்காரவேலர்
  • சித்தர்கள்
  • சித்திரவதை
  • சித்திரை
  • சிதம்பரம்
  • சிந்தனை
  • சிந்து
  • சிந்து – சரஸ்வதி
  • சிலை
  • சிவராஜ்
  • சிவன்
  • சின்னகுத்தூசி
  • சுடுகாட்டிலும் ஜாதி
  • சுப்பராயன்
  • சூத்திரர்கள்
  • செய்குத்தம்பி பாவலர்
  • சேரி
  • சொத்து
  • சௌந்தர பாண்டியனார்
  • டார்வின்
  • டி.ஏ.வி.நாதன்
  • தகுதி
  • தம்மபதம்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்
  • தமிழ் இந்து
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் தேசியம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் வேதம்
  • தமிழறிஞர்
  • தர்மதீர்த்தர்
  • தருமாம்பாள்
  • தலைவர்கள்
  • தளபதிராஜ்
  • தற்கொலை
  • தஸ்லிமா நஸ்ரீன்
  • தாகூர்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • தானம் 
  • திப்பு சுல்தான்
  • தியாகராயர்
  • திராவிடம்
  • திராவிடர் - ஆரியர்
  • திருக்குறள்
  • திருட்டு
  • திருப்பதி
  • திருமணம்
  • திருமா
  • திருவரங்கம்
  • திருவள்ளுவர்
  • திருவாங்கூர்
  • திருவிக
  • தில்லி
  • திலகர்
  • திறமை
  • தினமணி
  • தினமலர்
  • தீ விபத்து
  • தீங்கு
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • துரை.சந்திரசேகரன்
  • தேசியம்
  • தேவதாசி
  • தேவநேயப் பாவாணர்
  • தை
  • தொல்காப்பியம்
  • தொழிலாளர்
  • நம்பிக்கை
  • நம்பூதிரி
  • நரபலி
  • நன்னன்
  • நாகநாதன்
  • நாகரிகம்
  • நாசம்
  • நாராயண குரு
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நாஸ்திகம்
  • நீட்
  • நீதி
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நெரிசல்
  • நேயன்
  • பக்தி
  • பகத்சிங்
  • பகுத்தறிவாளர்
  • பகை
  • பட்டுக்கோட்டை அழகிரி
  • படத்திறப்பு
  • படை எடுப்பு
  • பண்டிகை
  • பண்டிதர்
  • பதவி
  • பதிப்புரிமை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பரமசிவம்
  • பரிதிமாற்கலைஞர்
  • பரிபாலனம்
  • பலி
  • பழங்குடியினர்
  • பனகல் அரசர்
  • பனகால் அரசர்
  • பாதிரியார்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பான்
  • பாரதம்
  • பாரதமா ?
  • பாரதமா?
  • பாரதி
  • பாரதியார்
  • பால்
  • பாலியல் வன்கொடுமை
  • பானகல் அரசர்
  • பாஜக
  • பிரசாதம்
  • பிராமணப் பெருமை
  • பிராமணர்
  • பிராமணியம்
  • பில்லி சூனியம்
  • புத்த - சமணம்
  • புத்தம்
  • புத்தர்
  • புரட்சி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புலவர் குழந்தை
  • பூசாரி
  • பூசை
  • பூணால்
  • பூணூல்
  • பூதம்
  • பெட்ரன்ட்ரஸ்ஸல்
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண் விமானி
  • பெண்கள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • பெரியார
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேய்
  • பேராசிரியர்
  • பொதுப்பணி
  • பொதுவுடமை
  • பொதுவுடைமை
  • பொப்பிலி அரசர்
  • பொன்மொழி
  • பௌத்தம்
  • மகாத்மா ஜோதி பாஃபூலே
  • மணியம்மை
  • மத வன்முறை
  • மதம்
  • மதமாற்றம்
  • மந்திரமா தந்திரமா
  • மயிலாடன்
  • மயிலை சீனி.வேங்கடசாமி!
  • மருத்துவ மனை
  • மறுப்பு
  • மறைமலை அடிகள்
  • மறைமலையடிகள்
  • மறைவு
  • மன்னர்கள்
  • மன்னராட்சி
  • மனு ஆட்சி
  • மனுதர்மம்
  • மனோன்மணியம்
  • மாணிக்க நாயக்கர்
  • மாநாடு
  • மார்க்ஸ்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மாற்று மதம்
  • மின்சாரம்
  • மின்நூல்
  • மீசை
  • மு.வ
  • முத்துராமலிங்கம்
  • முதல்வர்
  • மூடத்தனம்
  • மூடநம்பிக்கை
  • மேயர் ந.சிவராஜ்
  • மைல்கல்
  • மோகன் பகவத்
  • யுனஸ்கோ
  • ரஞ்சித்
  • ராமர் கோயில்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராஜராஜ சோழன்
  • ராஜாராம் மோகன்ராய்
  • ருத்திரன்.
  • லாலா லஜபதி
  • லெனின்
  • வ.உ .சி
  • வ.உ.சி.
  • வகுப்புரிமை
  • வந்தேறிகள்
  • வர்ணம்
  • வரலாறு
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன்முறை
  • வா உ சி
  • வாஞ்சி
  • வி.பி.சிங்
  • வித்தியாசம்
  • விபச்சாரம்
  • விபத்து
  • விருது
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீழ்ச்சி
  • வெறுப்பு
  • வேத காலம்
  • வேதம்
  • வேப்பமரம்
  • வைக்கம்
  • வைக்கம் வீரர்
  • வைகுண்டர்
  • ஜடாமுடி
  • ஜனநாயகம்
  • ஜனாதிபதி
  • ஜாதி
  • ஜாதி வெறி
  • ஜி. யு. போப்
  • ஜீவனோபாயம்
  • ஜீவா
  • ஜோதிராவ் புலே
  • ஜோதிராவ் பூலே
  • ஸ்மார்த்தர்
  • ஸ்வஸ்திகா
  • ஹிட்லர்
  • Bunch of Thoughts

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (70)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (25)
    • ►  மே (12)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2023 (45)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (39)
    • ▼  டிசம்பர் (3)
      • பா.ஜ.க. விற்கு 101 கேள்விகள் - சு.வெங்கடேசன் எம்.பி.
      • தமிழர் தலைவர் தலைமையில் 'கிரகண மூடநம்பிக்கை ஒழிப்ப...
      • இனவுணர்வைத் தூண்டும் குருமூர்த்திகள் (வள்ளலார், பெ...
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (10)
  • ►  2020 (73)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (4)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (77)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (68)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (28)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (32)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (16)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (35)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மே (7)
    • ►  பிப்ரவரி (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.