சிந்தனை செய்வோம்

பக்கங்கள்

  • பகுத்தறிவு உலகு

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பழங்குடியினர் காட்டுவாசிகளா? இழிவு படுத்தும் பா.ஜ.க.!

 

       November 26, 2022 • Viduthalai

பாணன்

பழங்குடியின சமூகங்களை ஆதிவாசிகளுக்குப் பதிலாக ‘வனவாசி’ என்று  மோடி மற்றும் பா.ஜ.க குறிப்பிடுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ள நிலையில், அந்த வார்த்தைகளுக்கு வித்தியாசம் என்ன, அவற்றின் பயன்பாட்டின் வரலாறு என்ன? என்பதைக் காண்போம்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 21.11.2022 அன்று பழங்குடியின சமூகத்திற்காக பா.ஜ.க. மற்றும் அதன் சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘வனவாசி’ என்ற சொல்லை, காங்கிரசால் பயன்படுத்தப்படும் ‘ஆதிவாசி’ என்ற சொல்லுடன் வேறுபடுத்தி கேள்வி எழுப்பினார்.

“பா.ஜ.க.,வினர் உங்களை ஆதிவாசி என்று அழைப்பதில்லை. அவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள்? வனவாசி (காட்டுவாசி)  என்கின்றனர். நீங்கள் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் காட்டில் வாழ்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள், அதாவது நீங்கள் நகரங்களில் வாழ வேண்டும், உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வேண்டும், விமானத்தில் பறக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்ப மாட்டார்கள்,” என்று பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா தொகுதியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி கூறினார்

பழங்குடியினரை விவரிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் பட்டியல் பழங்குடியினர் அல்லது “அனுசுசித் ஜன்ஜாதி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பல பழங்குடியினர் தங்களை ‘மூல்நிவாசி/ஆதிவாசி’ என்று குறிப்பிடுகின்றனர், அதாவது ‘முதல் குடிமக்கள்’. இது பொது சொற்பொழிவுகளில், ஆவணங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

காட்டுவாசிகள் என்று பொருள்படும் ‘வனவாசி’ என்பது சங் பரிவாரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த சங் பரிவார் அமைப்புகள் பழங்குடியினர் பகுதிகளில் “கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க” பரவலாக செயல்படுகிறது. ஓரங்கட்டப்பட்ட பழங்குடி சமூகம் வர்ணாஸ்ரம கட்டமைப்பிற்கு வெளியே உள்ளவர்களாக கருதப்படுவதால், அவர்களை காட்டுவாசிகள் என்றே கூறிவந்தனர்

பழங்குடி சமூகங்களின் மாறிவரும் கலாச்சாரம் மற்றும் ஹிந்து மதத்திலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களையும் உள்ளே இழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களுள் முக்கியமானவரான ராமகாந்த் கேசவ் தேஷ்பாண்டே, எம்.எஸ். கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, டிசம்பர் 26, 1952 அன்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்தை (ABVKA) நிறுவினார்.

பழங்குடியினரின் ‘ஹிந்துமயமாக்கலில்’ சங் பரிவார் முதன்மை கவனம் செலுத்தியது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது அவசியம் என்று கூறியும், அவர்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக்கூறி ஏமாற்றியது.  ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் எப்போதும் பா.ஜ.க.,வுக்கு தேர்தல் வெற்றிகளைப் பெற உதவியது.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்த இந்திய துணைக்கண்டத்திற்கு குடிபெயர்ந்தனர் என்ற ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை, ஆர்.எஸ்.எஸ்.எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. 

பல ஆண்டுகளாக பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிய சங் பரிவார் தலைவரும், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஹர்ஷ் சவுகான், வனவாசி என்ற சொல் 1952 இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நிறுவப்பட்டது என்கிறார்

காட்டுவாசி என்பது பெருமைக்குரிய வார்த்தையாம்

“காடுகளில் வசிப்பவர்கள் பாரம்பரியமாக வனவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராமாயணத்தில் கூட, காடுகளில் வாழும் சமூகங்களை அடையாளம் காண இந்தக் குறிப்பு உள்ளது. வனவாசி என்ற பதம் காட்டுவாசிகளைப் பற்றிய சரியான கருத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இது பெருமைக்குரிய வார்த்தையாகும்” என்று ஹர்ஷ் சவுஹான்  கூறினார்.

“ஆதிவாசிகள் என்ற சொல் 1930களில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. ஆதிவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் இந்தியாவின் சூழலில் அது தவறு. அமெரிக்காவில் பழங்குடியினர் என்ற சொல் பழங்குடியினருக்கு அவர்களின் அடையாளத்தைப் பெற பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால், வனவாசி எளிமையான வார்த்தை - அவர்கள் வனவாசிகள் என்பதை உணர்த்துகிறது” என்று ஹர்ஷ் சவுகான் விளக்கினார்.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்களின் போது, ​​ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா, “ஆதிவாசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வலியுறுத்தினார், மேலும் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது “பஞ்சாதி” ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜெய்பால் சிங் முண்டா பின்னர் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பழங்குடியின பிரதிநிதியாக ஆனார்.

“பல கமிட்டிகள் செய்த எந்த மொழிபெயர்ப்பிலும் ‘ஆதிவாசி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. இது எப்படி நடந்தது? ஏன் என்று கேட்கிறேன், அது செய்யப்படவில்லை. ‘ஆதிவாசி’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படவில்லை, ‘பஞ்சாதி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ஏன்? நமது பழங்குடியினரில் பெரும்பாலானோர் காடுகளில் வாழ்வதில்லை. பட்டியல் பழங்குடியினரின் மொழி பெயர்ப்பு வார்த்தை ‘ஆதிவாசி’யாக இருக்க வேண்டும் என்று உங்கள் மொழிபெயர்ப்புக் குழுவுக்கு நீங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதிவாசி என்ற சொல்லுக்கு அருள் உண்டு. பஞ்சாதி என்ற இந்த பழைய தவறான அடைமொழி ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை, ஏனெனில் சமீப காலம் வரை அது ஒரு நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் குறிக்கிறது, ”என்று ஜெய்பால் சிங் முண்டா கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மிகவும் கவனமாக மீனவர்களையும் வனவாசி என்ற பட்டியலில் சேர்க்க ரகசிய திட்டம் தீட்டி வருகிறது. அதாவது 4 வருண அமைப்பிற்கு வெளியே இருப்பவர்கள் அனைவருமே மனிதர்களோடு வாழத்தகுதி அற்றவர்கள் என்ற பார்வையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொண்டுள்ளது., 

காரணம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் இவர்களுக்கு தொண்டூழியம் செய்ய சூத்திரர், ஆனால் தற்போது பார்ப்பனர் மற்றும் சூத்திரர்கள்(பார்ப்பனர் அல்லாதோர்) மட்டுமே என்று அவர்களே கூறுகின்றனர். இதற்கான கலியுகத்தில் நீதி கேட்டுப்போகும், பிராமணன் போஜனத்திற்கு உத்தியோகம் பார்ப்பான், சூத்திரன் தனது தருமத்திற்கான காரியத்தைச்செய்யமாட்டான் என்று உபநிடதம் கூறுவதாக பஜனைக்கோஷ்டி பார்ப்பனர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். 

 இப்போது சூத்திரர்கள் அல்லாத பழங்குடியினரை சேர்த்தால் வர்ணாஸ்ரம முறையில் குழப்பம் ஏற்படும் ஆகையால் அவர்களை மக்கள் வாழாத பகுதி(காடு)களில் வசிப்பவர்கள் காட்டுவாசிகள்(வனவாசி) என்று அழைக்கின்றனார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவு

ஒடிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் கிழக்கு மற்றும் மலைப்பகுதி மாவட்டங்கள், கிழக்கு மகாராட்டிரா போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறமல் இருக்கவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்கவும் `வன்வாசி கல்யாண்’ என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெரும் நிதியை ஒதுக்கி பழங்குடியின கிராமம் கிராமாக சென்று கிளைகளை திறந்துள்ளது. 

ஒருபுறம் இவர்களை வன்வாசி என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் வனங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று வருகிறது. குஜராத்தில் மூன்று ஆண்டுகள் பெண் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் சிங்கங்கள் வாழும் கிர்காடுகளின் 250 ஏக்கர் நிலத்தை தனது மகளின் நிறுவனத்திற்கு சொற்ப விலைக்கு விற்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார். அவரது மகளோ சுரங்க முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய்களுக்கு நிலத்தை விற்றுவிட்டார். இந்த பிரச்சினை பெரிதாகி அவர் பதவி விலக நேரிட்டது. அந்த நிலங்கள் விற்கும் போது அந்த நிலங்களில் வழ்ந்த பழங்குடியினரின் நிலங்களும் சுரங்க முதலாளிகளின் வசமாகின. 

இன்றுவரை அந்தப்பழங்குடியினர் வாழ்வாதாரமின்றி மூதாதையார்கள் வாழ்ந்த நிலத்தில் அடிமைகளைப்போல் சுரங்க முதலாளிகளின் தயவில் வாழ்ந்து வரும் பெரும் அவலம் நீடிக்கிறது. 

பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொறுத்தவரை இன்றும் பழங்குடியினர் காட்டுவாசிகள் அதனால் தான் அவர்களை மோடி முதல் மோகன் பாகவத் வரை வன்வாசி(காட்டுவாசி) என்று அழைத்துவருகின்றனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:29 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: காட்டுவாசி, பழங்குடியினர், பாஜக

வியாழன், 16 பிப்ரவரி, 2023

சுப்ரீம் கம்யூனிட்டியும், ஆகார ஸுத்தமும்”! சற்சூத்திரர்களுக்குப் ‘பாடம்’ நடத்திய பார்ப்பனர்கள்



  February 12, 2023 • Viduthalai

அண்மையில்  இரண்டு காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வந்தன. இரண்டுமே கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் பேசப்பட்டவை. (ஏற்கெனவே இந்த மாநாட்டில் ரங்கராஜ் என்ற மேனாள் தொலைக்காட்சி செய்தியாளர் பேசிய உரையில்தான் கலைஞரை ஜாதிய வன்மத்தோடு பேசியிருந்தார். அது கடும் கண்டனத்திற்குள்ளானது)

தற்போது வந்த காட்சிப் பதிவுகளில் ஒன்று சொறி விட் நடிகர் ஒருவர் பேசியது. ஒன்றிரண்டு திரைப்படங்களில் 'தலை'யை மட்டும் காட்டியவர் போலும். ஒரு பார்ப்பனர், தகுதியே இல்லாவிட் டாலும் எப்படி இன்னொரு பார்ப் பனரைத் தூக்கி விடுகிறார் என்பதற்கு அந்த உரையிலேயே சான்றும் தருகிறார்.

“க்ரியேட்டிவிட்டிக்கு பிரம்மனைச் சொல் வாங்க... இங்கே தி பெஸ்ட் பிரைன்ஸ் (மூளை) இன் தி வேர்ல்டு இருக்கு... பிராமண், பிரம்மன் பெரிய ட்ஃபரன்ஸ் இல்லைன்னு நான் நினைக்கிறேன். கிரியேட்டிவிட்டிக்குப் பேர் போன இந்த பிராமின் கம்யூனிட்டி இஸ் தி சுப்ரீம் கம்யூனிட்டி இன் த வேர்ல்டு. அந்த சுப்ரீம் கம்யூனிட்டிக்குள்ள கம்மி யூனிட்டி இருந்திடக் கூடாது” என்று பேசிய துண்டுக் காணொலி ஒன்று வெளியானது. “அது சரி உங்க வாயி... உங்க உருட்டு”ன்னு விட்டுவிட்டுப் போயிட்டாலும், அதென்ன சுப்ரீம் கம்யூனிட்டி இன் த வேர்ல்டு... இதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கில்லையா? "கிக்ஷீஹ்ணீஸீ க்ஷீணீநீமீ வீs tலீமீ suஜீக்ஷீமீனீமீ க்ஷீணீநீமீ வீஸீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ" - அப்படின்னு ஹிட்லர் பேசுனது தான். ஆரிய இனம் தான் உலகின் உச்ச இனம் என்பது இவர்களின் மாயை. இருப்பதிலேயே பெஸ்ட் கிரியேட்டிவிட்டி மூளை எல்லாம் அவாள் மண்டைக்குள் தான் ஒளிந்துகிடக்கிறதாம். சோஷியல் மீடியாக்களெல்லாம் அந்த மொட்டைத் தலையிலேயே தாளம் போட்டுக் கொண்டிருக்க,  இதுக்கு ஒரு சில மயக்கமுற்ற பார்ப்பனரல்லா தாரிடமிருந்து, “ஆமா... ஆமா...” என்று குரல்கள் வேறு வந்தன- “என்ன இருந்தாலும் கலைத் துறையில் அவர்களின் சாதனை இருக்கிறதே...” என்று!

“‘இருக்கிறதே’ன்னு சொல்லப்படாதுங்க... இருந்த தே”-ன்னு சொல்லுங்க. ஏன்னா, அடுத்த வங்களை நுழைய விடாமல் தடுத்துக்கிட்டிருந்த வரைக்கும் தான் பார்ப்பன ஆதிக்கம் எல்லா துறையிலும் இருந்தது. இப்போதும் ஆதிக்கம் இருக்கும் துறைகளெல்லாம் யாரையும் வர விடாமல் செய்யப்படும் லாபிகளால் தான். என்றைக்கு பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்த்து அனைவருக்கும் வாய்ப்பு என்ற நிலை உருவாகத் தொடங்கியதோ, அன்றைக்கே பார்ப்பன ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் பல்லிளிக்கத் தொடங் கிடுச்சுங்காணும்.

இசை என்றால் அவாள் தான், நடனம் என்றால் அவாள் தான், நடிப்பு என்றால் அவாள் தான், படிப்பு என்றால் அவாள் தான் என்று எங்கெல்லாம் ஆதிக்கம் இருந்ததோ, அங்கெல்லாம் பார்ப்பனரல் லாதார் நுழைந் ததும் அவ்வளவு நாளும் “இதுதான் இசை, இவ்ளோ தான் நடனம், நாங்க நடிக்கிறதுதான் நடிப்பு, நாங்க சொல் றதுதான் படிப்பு” என்ற ஏமாற்று எல்லைகளையெல்லாம் தகர்த்தெறிந்து உலகப் புகழ் பெறும் சாதனையாளர்களைக் கண்டாகி விட்டது. அதற்குப் பிறகு அந்தந்த துறைகளில் பார்ப்பன ரல்லாத சாதனையாளர்களிடம் மோத முடியாமல் முண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? அந்த சொறி விட் நடிகர் போன்றவர்களால் சம காலத்தில் உச்சம் தொட்ட கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக் போன்றவர்களைத் தொடவே முடியவில்லையே! வடிவேலு என்ற கலைஞனின் உடல்மொழியும், உரையாடல் வெளிப்பாடும், மண்ணின் மணமும் இவாளுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. கேட்டால் கிரியேட்டிவிட்டியில் உயர்ந்தவாளாம்!

இன்னொரு காணொலி! அதே மாநாட்டில் ஒரு பார்ப்பனப் பிரசங்கி பேசியிருக்கிறார். அவாளின் ஜாதி ஆணவமும், தீண்டாமை மனோபாவமும் எப்படி இருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது அந்த உரை.

“தூத்துக்குடிக்கு உபந்யாசத்துக்குப் போயிருந்தேன்.

ஒரு நாடார் பையன் வந்தான். ‘அடுத்த ஜென்மம் நான் பிராமணனாப் பொறக்கணும்’னான்.

‘வேண்டாம்... வேண்டாம் நீ நாடாராவே பிற’ன்னேன்.

‘ஏன்’ அப்படின்னான். 

‘பிராமணனாப் பொறந்தா கஷ்டம்டா! ஆசா ரத்தை கடைப்பிடிக்கணும். நிறைய பிரச்சினை. நீ நாடாராவே இரு.’

‘இல்ல சாமி, நாங்க பாவம் பண்றோமே..’

‘நீ பாவம் பண்ணாலும், உனக்கு அருகதை இருக்கு. நீ குடிக்கலாம், கொள்ளையடிக்கலாம், கூத்தியாளோடு இருக்கலாம், சீட்டாடலாம்...’

‘இதெல்லாம் பாவம் இல்லையா?’

‘பாவம் தான்.’

‘இந்தப் பாவத்தை எப்படி போக்குறது?

‘மாதம் மாதம் அமாவாசை வருதோ இல் லையோ, நூறு ரூபாவும் ஒன்பது கெஜ வேஷ்டியும் வாங்கி வெச்சுக்கோ, என்னை மாதிரி பிராமணாள் யாராவது ஒருத்தர் இருப்பா, அவர்கிட்ட கொடுத்து நமஸ்காரம் பண்ணு. சகல பாபமும் அவனுக்குப் போயிடும்.’

உடனே அவன் கேட்டான். ‘சாமி அப்புறம் அந்த பாவத்தை நீங்க எப்படி போக்கிப்பேள்?’னான்

‘அதப்பத்தி நீ கவலப்படாதே’

‘இல்ல சாமி, நான் தெரிஞ்சுக்கிறேன்’னு

‘நாங்க பிரம்ம யக்ஞம்னு ஒன்னு பண்றோம். அதப் பண்ணியாச்சுன்னா... எங்களுக்கு சகல பாவமும் போய்டும்’னேன்.

உடனே அவன் சொன்னான். ‘அந்த பிரம்ம யக்ஞ்யத்தை நான் பண்ணலாமா?’

‘நீ பண்ணப்பிடாது. நீ பாவம் தான் பண்ணனும்.’

இதுக்கு மேல ஏதாவது விளக்கம் வேணுமா? நாடார்வாள் முடிஞ்சதோ, அடுத்து ஒரு கவுண் டர்வாள்.

‘இப்போ என்னை தங்க வச்சிருக்கிறவர் ஒரு கவுண்டர் தான். அவா ஆத்திலயும் சாப்பிட மாட்டேன். அவா ஆத்தில தான் தங்கறேன், ஆனா சாப்பாடு மட்டும் நம்மளவா ஆத்திலிருந்து வருது...!’ என்றவர், பேச்சின் தொடக்கத்திலேயே ஒன்று சொன்னார்.

“எனக்கு போன் வந்திண்டே இருக்கு.நீங்க பி.ஜே.பி.கிட்ட சொல்லுங்கோ... இந்த அரிஜன் அப்பாய்ண்ட்மெண்ட்டுக்குன்னா. நாங்க சொல் லிண்டு தான் இருக்கோம். நீ ஆகமத்தைப் படின்னேன் நான்”

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆவதற்கு எதிராக யாரிடம் காய் நகர்த்துகிறார்கள். யார் அவர்களுக்குச் சார்பாக இருக்கிறார்கள் என்று பி.ஜே.பி.யின் உண்மை முகத்தைக் காட்டிவிட்டார் திருச்சி கல்யாணராமன் என்ற அந்தப் பார்ப்பனர்.

இந்தப் பேச்சு பரவியதும் இவரின் இன்னொரு பேச்சிலிருந்தும் ஒரு காணொலித் துணுக்கு வந்தது.

இன்னொரு உபந்யாசம். “ஒரு முறை அரிமளம் போறேன். செட்டியார் ஊருக்கு! சாப்பாட்டுக்கு பிரா மணன் இருக்கானான்னு, ஏற்பாடு பண்ணிட்டுத் தான் ஒத்துக்கிறது. அப்படி இல்லன்னா, ஆத்துக்காரி கூட வர்றா... நாங்க சமைச்சுக்கிறோம். ... ஆகார ஸுத்தம் முக்கியம்!”

தீண்டாமை என்பது யாருக்கோ உள்ள பிரச்சினை என்று கருதிக் கொண்டிருக்கும், ஸூத்திர ஜாதியாரைத் தான் ‘ஷாத்து ஷாத்து’ என்று சாத்தியிருக்கிறார் கல்யாணராமன். தொடக் கூடாத, புழங்கக்கூடாத ஜாதி என்று ஒடுக்கப்பட்ட மக்களையும், உயர்ஜாதி என்றும் தங்களையும் கருதிக் கொண்டிருப்போரைத் தான், ‘சுத்தம் இல் லாதவர்கள், பாவம் செய்யப் பிறந்த வர்கள்’என்று பட்டியலிடுகிறார். இதற்கிடையில் நாடார் சமூகத்திலிருந்து எதிர்ப்புக் குரல் வந்ததும், நான் அந்தப் பொருளில் சொல்லவில்லை என்று அந்தக் கருத்துக்கு மட்டும் மன்னிப்பு கேட்டு ஒரு காணொலி வெளியிட்டாராம் திரு.கல்யாணராமன். 

கல்யாணராமன் என்ற தனிநபர் மட்டும் அல்ல; அவர் பேசிய இந்த ஒரு பேச்சு மட்டுமல்ல;  அவரை இப்படி பேசச் செய்ததும், அவாளை இப்படி கருதச் செய்ததும் ஹிந்து மதமும், வர்ணாசிரம - சநாதன தர்மமும், பார்ப்பன ஆதிக்கமும் தான்.

ஜாதி இருக்கும் வரை, ஹிந்து மதம் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும், மற்றவர்கள் அனை வரையும் இழிவாகக் கருதும் மனநிலையும் இருந்தே தீரும். அதை ஒழிக்காமல் வீராப்பு பேசுவதெல்லாம் வெற்றுக் கூச்சலே! எனக்குக் கீழ் ஒருவன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே, எனக்கு மேல் ஒருவன் இருக்கலாம் என்ற எண் ணத்தையும் உருவாக்குகிறது. இதை பிறப்பிலேயே உறுதிப்படுத்தும் கேவலம் ஒழிக்கப்படும்வரை எதுவும் மாறாது. அவாள் மாநாட்டுப் பேச்சுகள் ஒட்டு மொத்த பார்ப்பன சமூகத்தின் உள்ளத்து வெளிப்பாடு. அவாள்லாம் அப்படி இல்லை இப்போ என்று பேஷிக் கொண்டிருக்கும் பாதந்தாங்கிகளுக்கும், ‘பிராமணன்னா இப்படித் தான் இருக்கணும்’ என்று ஆச்சாரத்தைக் கொஞ்சம் அவசரத்துக்காக விட்டொதுங்கும் பிராமணாளுக் கும் சொல்லியிருக்கிறார். 

அந்தப் பெரியவா பேச்சை 'ப்ராப்தி' இருந்தால் கேளுங்கோ... புத்தி இருந்தால் திருந்துங்கோ?

- சமா.இளவரசன்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:34 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சூத்திரர்கள், தீண்டாமை, பார்ப்பனர்கள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

படம் செருகல்

படம் செருகல்
ஓபரா-அமெரிக்க நாத்திகர்
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்
    முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மு...
  • நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்
    வ நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! - தஸ்லிமா நஸ்ரீன் ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்...
  • பொன்மொழி
    தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த்  தோல்வியுறுவான்.   - நெப்போலியன் சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க...
  • ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
    எத்தர்களை  முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் ...
  • மறைந்த அயோத்திதாசர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
    May 20, 2021  • Viduthalai   ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக...
  • பாதர் எனக்கு ஒரு டவுட்?
    😇😇🤔 *மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?* *பாதர் : கேளு மகனே* *மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்...
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங்
      விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயக வாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக்...
  • வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2
    டாக்டர் துரை.சந்திரசேகரன் (வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாய...
  • புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
    பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்.... (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ...
  • கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
    ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! -ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்க...

லேபிள்கள்

  • .சிங்காரவேலர்
  • அக்ரகாரம்
  • அகவிலைப்படி
  • அண்ணல் அம்பேத்கர்
  • அண்ணா
  • அந்தணர்
  • அந்தணர் என்போர்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமர்நாத்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்யப்பன்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அழகிரி
  • அழிப்பு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுக்கரசு
  • அன்பழகன்
  • அனுபவம்
  • அனுமதி மறுப்பு
  • ஆ.இராசா
  • ஆ.ராசா
  • ஆக்கிரமிப்பு
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசீவகம்
  • ஆத்மா மறுப்பு
  • ஆதிக்கம்
  • ஆய்வு
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்.
  • ஆரிய பூமி
  • ஆரியம்
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர்கள்
  • ஆன்மீகம்
  • இ.மு. சுப்ரமணியம்
  • இணைப்பு மொழி
  • இந்தி
  • இந்தியா
  • இந்தியாவா ?
  • இந்தியாவா?
  • இந்து
  • இந்து மதம்
  • இந்துத்துவா
  • இந்துமத கொடுமை
  • இந்துமதம்
  • இந்துவெறி
  • இயக்கங்கள்
  • இயக்கம்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இராசராசன்
  • இராமச்சந்திரனார்
  • இராமலிங்க அடிகள்
  • இராமன்
  • இராமன் பட எரிப்பு
  • இராமாமிருதம்
  • இராமாயண காலம்
  • இராமாயணம்
  • இராமானுஜர்
  • இராவணன்
  • இழப்பு
  • இறுதிவுரை
  • இனம்
  • உணவு
  • உபநிடதம்
  • உபி
  • உமா மகேஸ்வரன்
  • உமாமகேசுவரனார்
  • உயிர்ப்பலி
  • உயிரிழப்பு
  • உரிமை
  • உரைகள்
  • ஊர்
  • எதிர்வினை
  • எம் பி
  • எரிப்பு
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓபரா
  • ஓமந்தூர் பி. ராமசாமி
  • க.அன்பழகன்
  • கட்சி
  • கட்டைவிரல்
  • கடவுள்
  • கடவுள் சிலை
  • கடவுள் மறுப்பு
  • கடை
  • கருப்புச் சட்டை
  • கருப்புச்சட்டை
  • கரோனா
  • கல்வி
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிதைகள்
  • கழகம்
  • களப்பிரர்
  • கற்பனை
  • கா.சு. பிள்ளை
  • காட்டுவாசி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • கார்த்திகை தீபம்
  • கால்டுவெல்
  • காவிரி
  • கான்சிராம்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கீழ்ப்பாக்கம்
  • கு.வெ.கி.ஆசான்
  • குங்குமம்
  • குடகு
  • குடியரசு இதழ்
  • குண்டுவெடிப்பு
  • குணம்
  • குமுதம்
  • குருக்கள்
  • குழந்தை
  • கேரளா
  • கேள்வி
  • கேள்வி பதில்
  • கேள்விகள்
  • கேள்வியும் பதிலும்
  • கைகள்
  • கைலி
  • கைவல்யம்
  • கொடுமை
  • கொலை
  • கோட்சே
  • கோயில்
  • கோயில்கள்
  • கோல்வால்கர்
  • கோழை
  • சங்கராச்சாரி
  • சட்டம்
  • சதி
  • சந்திராயன்
  • சபரிமலை
  • சமணம்
  • சமதர்மம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி விருது
  • சர்.சி.பி. அறிவுரை
  • சரத் யாதவ்
  • சரஸ்வதி நாகரிகம்
  • சரியா
  • சவர்க்கார்
  • சாகு மகராஜ்
  • சாகு மகாராஜ்
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாமி கைவல்யம்
  • சாலினி
  • சாவித்திரி பூலே
  • சாவு
  • சி.நடேசனார்
  • சிக்கல்
  • சிங்காரவேலர்
  • சித்தர்கள்
  • சித்திரவதை
  • சித்திரை
  • சிதம்பரம்
  • சிந்தனை
  • சிந்து
  • சிந்து – சரஸ்வதி
  • சிலை
  • சிவராஜ்
  • சிவன்
  • சின்னகுத்தூசி
  • சுடுகாட்டிலும் ஜாதி
  • சுப்பராயன்
  • சூத்திரர்கள்
  • செய்குத்தம்பி பாவலர்
  • சேரி
  • சொத்து
  • சௌந்தர பாண்டியனார்
  • டார்வின்
  • டி.ஏ.வி.நாதன்
  • தகுதி
  • தம்மபதம்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்
  • தமிழ் இந்து
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் தேசியம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் வேதம்
  • தமிழறிஞர்
  • தர்மதீர்த்தர்
  • தருமாம்பாள்
  • தலைவர்கள்
  • தளபதிராஜ்
  • தற்கொலை
  • தஸ்லிமா நஸ்ரீன்
  • தாகூர்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • தானம் 
  • திப்பு சுல்தான்
  • தியாகராயர்
  • திராவிடம்
  • திராவிடர் - ஆரியர்
  • திருக்குறள்
  • திருட்டு
  • திருப்பதி
  • திருமணம்
  • திருமா
  • திருவரங்கம்
  • திருவள்ளுவர்
  • திருவாங்கூர்
  • திருவிக
  • தில்லி
  • திலகர்
  • திறமை
  • தினமணி
  • தினமலர்
  • தீ விபத்து
  • தீங்கு
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • துரை.சந்திரசேகரன்
  • தேசியம்
  • தேவதாசி
  • தேவநேயப் பாவாணர்
  • தை
  • தொல்காப்பியம்
  • தொழிலாளர்
  • நம்பிக்கை
  • நம்பூதிரி
  • நரபலி
  • நன்னன்
  • நாகநாதன்
  • நாகரிகம்
  • நாசம்
  • நாராயண குரு
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நாஸ்திகம்
  • நீட்
  • நீதி
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நெரிசல்
  • நேயன்
  • பக்தி
  • பகத்சிங்
  • பகுத்தறிவாளர்
  • பகை
  • பட்டுக்கோட்டை அழகிரி
  • படத்திறப்பு
  • படை எடுப்பு
  • பண்டிகை
  • பண்டிதர்
  • பதவி
  • பதிப்புரிமை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பரமசிவம்
  • பரிதிமாற்கலைஞர்
  • பரிபாலனம்
  • பலி
  • பழங்குடியினர்
  • பனகல் அரசர்
  • பனகால் அரசர்
  • பாதிரியார்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பான்
  • பாரதம்
  • பாரதமா ?
  • பாரதமா?
  • பாரதி
  • பாரதியார்
  • பால்
  • பாலியல் வன்கொடுமை
  • பானகல் அரசர்
  • பாஜக
  • பிரசாதம்
  • பிராமணப் பெருமை
  • பிராமணர்
  • பிராமணியம்
  • பில்லி சூனியம்
  • புத்த - சமணம்
  • புத்தம்
  • புத்தர்
  • புரட்சி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புலவர் குழந்தை
  • பூசாரி
  • பூசை
  • பூணால்
  • பூணூல்
  • பூதம்
  • பெட்ரன்ட்ரஸ்ஸல்
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண் விமானி
  • பெண்கள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • பெரியார
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேய்
  • பேராசிரியர்
  • பொதுப்பணி
  • பொதுவுடமை
  • பொதுவுடைமை
  • பொப்பிலி அரசர்
  • பொன்மொழி
  • பௌத்தம்
  • மகாத்மா ஜோதி பாஃபூலே
  • மணியம்மை
  • மத வன்முறை
  • மதம்
  • மதமாற்றம்
  • மந்திரமா தந்திரமா
  • மயிலாடன்
  • மயிலை சீனி.வேங்கடசாமி!
  • மருத்துவ மனை
  • மறுப்பு
  • மறைமலை அடிகள்
  • மறைமலையடிகள்
  • மறைவு
  • மன்னர்கள்
  • மன்னராட்சி
  • மனு ஆட்சி
  • மனுதர்மம்
  • மனோன்மணியம்
  • மாணிக்க நாயக்கர்
  • மாநாடு
  • மார்க்ஸ்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மாற்று மதம்
  • மின்சாரம்
  • மின்நூல்
  • மீசை
  • மு.வ
  • முத்துராமலிங்கம்
  • முதல்வர்
  • மூடத்தனம்
  • மூடநம்பிக்கை
  • மேயர் ந.சிவராஜ்
  • மைல்கல்
  • மோகன் பகவத்
  • யுனஸ்கோ
  • ரஞ்சித்
  • ராமர் கோயில்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராஜராஜ சோழன்
  • ராஜாராம் மோகன்ராய்
  • ருத்திரன்.
  • லாலா லஜபதி
  • லெனின்
  • வ.உ .சி
  • வ.உ.சி.
  • வகுப்புரிமை
  • வந்தேறிகள்
  • வர்ணம்
  • வரலாறு
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன்முறை
  • வா உ சி
  • வாஞ்சி
  • வி.பி.சிங்
  • வித்தியாசம்
  • விபச்சாரம்
  • விபத்து
  • விருது
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீழ்ச்சி
  • வெறுப்பு
  • வேத காலம்
  • வேதம்
  • வேப்பமரம்
  • வைக்கம்
  • வைக்கம் வீரர்
  • வைகுண்டர்
  • ஜடாமுடி
  • ஜனநாயகம்
  • ஜனாதிபதி
  • ஜாதி
  • ஜாதி வெறி
  • ஜி. யு. போப்
  • ஜீவனோபாயம்
  • ஜீவா
  • ஜோதிராவ் புலே
  • ஜோதிராவ் பூலே
  • ஸ்மார்த்தர்
  • ஸ்வஸ்திகா
  • ஹிட்லர்
  • Bunch of Thoughts

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (70)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (25)
    • ►  மே (12)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ▼  2023 (45)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (2)
    • ▼  பிப்ரவரி (2)
      • பழங்குடியினர் காட்டுவாசிகளா? இழிவு படுத்தும் பா.ஜ.க.!
      • சுப்ரீம் கம்யூனிட்டியும், ஆகார ஸுத்தமும்”! சற்சூத்...
  • ►  2022 (39)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (10)
  • ►  2020 (73)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (4)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (77)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (68)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (28)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (32)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (16)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (35)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மே (7)
    • ►  பிப்ரவரி (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.