பக்கங்கள்

சனி, 28 மார்ச், 2020

மோடியின் இந்தி உரை வெறும் விளம்பரமா?

அவர்கள் கட்சி  சாமியார் முதல்வரே மதிக்கவில்லையே!

கரோனா வைரஸ் தொற்றும் உக்கிரம் குறித்து பிரதமர் மோடி, இந்தியில் அரைமணி நேரத்திற்கு  உரையாற்றினார். ‘‘அனைவரிடம் காலில் விழாத குறையாக வேண்டுகிறேன். தயவு செய்து யாருமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்;  வீட்டிற்கு வெளியே ‘லட்சுமண ரேகை போட்டுக்கொள்ளுங்கள்'' என்று என்ன என்னவோ கூறினார். கூடவே மூடநம்பிக்கை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கெஞ்சிக் கெட்டுக்கொண்டு இருந்தார். ஆனால், இன்று (25.3.2020) காலை  உத்தரப்பிரதேச சாமியார் முதல்வர்  புதிய  ராமர் கோவில்கட்டுவதால்,  ராமர் சிலையை தற்காலிக கோவிலில் உள்ள வெள்ளி சிம்மாசனத்தில் வைக்கும் நிகழ்வில் பிசியாக இருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவருடன் அதிகாரிகள் 20 பேர், சாமியார்கள் 300 பேர்வரை பொதுமக்கள் என மொத்தம் 8000 ஆயிரம் பேர்வரை ஒன்று கூடியிருக்கிறார்கள்.

- விடுதலை நாளேடு 25 3 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக