சிந்தனை செய்வோம்

பக்கங்கள்

  • பகுத்தறிவு உலகு

சனி, 9 ஜூலை, 2022

பானகல் அரசர் - சமூகநீதிக்கான வரலாற்று நாயகர்



   July 09, 2022 • Viduthalai

1866ஆம் ஆண்டு, ஜூலை 9 - பெரியார் மண்ணான தமிழ் நாட்டில் அவர் தோன்றிய நாள். ஞாயிறு மலர் வாசக அன்பர்களின் கைகளில் தவழும் இன்றைய நாள் ஜூலை 9 (2022) அந்த வரலாற்று நாயகர் பிறந்த நாள் என்பது வியப்புக்குரிய சிறப்பல்லவா? நான்கே வார்த்தைகளில் - ‘ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர்‘ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா தனது நூல் ஒன்றில் பானகல் அரசரைப் போற்றிப் புகழ்ந்து உள்ளார். ஒன்று சொன்னாலும், நன்று சொன்னார் ஆசிரியர்.

மாணவப் பருவம்:

பானகல் அரசர் 9.7.1866ஆம் நாளன்று காளஹஸ்தியில் பிறந்தார். அவருடைய மூதாதையர்கள் பானகல்லு என்னும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் “பானகல் அரசர்” என்று அழைக்கப் பட்டார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் பானகல்லு. பானகல் அரசரின் இயற்பெயர் ராமராய நிங்கார் என்பதே ஆகும். சென்னை தியாகராய நகரில் உள்ள பானகல் பூங்கா இவரது பெயரா லேயே விளங்கி வருகிறது. இளம் வயதி லேயே வீட்டில் தெலுங்கையும் சமஸ் கிருதத்தையும் கற்றுக் கொண்டவர் தனது 17ஆவது வயதில் தான் ஆங்கிலத்தைக் கற்கத் தொடங்கினார். சென்னை திரு வல்லிக்கேணியில் உள்ள இந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தவர், மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1892ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

பொது வாழ்வும் சமூகப் பணிகளும்:

கல்லூரி வாழ்க்கைக் காலத்திலேயே பொது மக்களுக்குச் சேவை செய்யும் ஆர்வம் ஏற்பட்டது அவருக்கு. முற் போக்கு இயக்கங்கள் பலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். படிப்பு முடிந்ததுமே சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். சென்னை பல்கலைக் கழகத்தில் முக்கியமான நிர்வாகப் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. கல்வி சார்ந்த பல சீர்திருத்தங்கள் அவரால் ஏற் பட்டன. அவருடைய ஆலோசனைக ளுக்கு பல்கலைக்கழகம் மதிப்பளித்தது.

இந்தியாவின் ஒன்றிய நாடாளு மன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக நீடித்தார். திராவிடர் சங்கத்தில் இணைந்தார். பார்ப்பனரல்லா தார் இயக்கத்திலும் பணியாற்றினார்.அவருடைய  தகுதியாலும் திறமையாலும் முன்னேறி பல பிரமுகர்களின் நன் மதிப்பைப் பெற்றார். அவரது ஒழுக்கமும், கண்ணியமும், நன்னடத்தையும் பலரை யும் கவர்ந்தன. முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரும்பாடு பட்டார். நலி வுற்ற மக்களின் நல்வாழ்வுக்காக அர சாங்கம் தனியாக சில சிறப்புத் துறைகளை அமைக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார்.

அஞ்சாநெஞ்சத்துடன் போராட்டங்கள்:

டாக்டர் டி.எம்.நாயரும் சர்.பி.தியாக ராய செட்டியாரும் 1917ஆம் ஆண்டு துவக்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்து டன் இணைந்து அரும் பணியாற்றினார். இதனால் பல அவமானங்களையும் இன் னல்களையும் அவர் அனுபவிக்க நேர்ந் தது. ஆனால் சற்றும் சோர்வடையாமல், மனம் தளராமல், ஓர் உண்மையான ஜனநாயக பாதுகாவலராகவே இயங்கி பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் “ராஜா சாஹேப்” என்று வாஞ்சையுடன் அழைக் கப்பட்ட பானகல் அரசர் ராமராய நிங்கார். சமத்துவமும் சமூகநீதியும் அவருடைய உயிர்மூச்சாக இருந்தது? எதிர்ப்புகளைக் கண்டு துவண்டுப் போய்விடவில்லை அவர்.

மாண்ட்ஃபோர்டு சீர்திருத்த விதி முறைகளின்படி பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடுகள் கிடைக்கப் போராடி னார். (S.I.L.F.) என்னும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயற்குழு உறுப் பினராகி பார்ப்பனரல்லாதார் இயக்கத் திற்காக பல நற்செயல்கள் புரிந்தவர் அவர். 1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த முதல் பார்ப்பனரல்லாதார் மாநாட் டிற்கு தலைமை வகிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

பானகல் அரசர் ஆட்சியும் தந்தை பெரியாரும்

பானகல் அரசரின் ஆட்சித் தலைமையைப் போற்றிப் புகழ்ந்து தந்தை பெரியார் கூறியவை, அரசரின் மறைவையொட்டி ‘குடிஅரசு’ வார இதழில் தலையங்கமாக பிரசுரிக்கப்பட்டது. அரசியல் தலைமைக்கே இலக்கணமாக அவர் திகழ்ந்தார் என்பதை உருக்கமான அந்த தலையங்கத்தை இன்று படித்தாலும் புரிந்து கொள்ளலாம்.

பானகல் அரசர் சென்னை அரசாங்கத்தை மட்டுமின்றி தேவைப்பட்ட போதெல்லாம் இந்திய அரசாங்கத்தையும் பார்லிமெண்டையும் கூட மிரட்டி நடுங்க வைத்து வந்திருக்கிறார். பெண்கள் தேர்தல்களில் வாக்களிக்கக்கூடாது என்று இருந்த தடையை ஓர் அரசு ஆணை மூலம் நீக்கியவர் அவர். இதன் மூலம் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெண்கள் 1921ஆம் ஆண்டு முதல் பெற்றார்கள். எல்லா சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் உத்தியோகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிகளில் இடம் பெற்று படிக்க வாய்ப்பளிக்கும் திட்டம் பானகல் அரசரின் முயற்சியால் தயாரிக்கப்பட்டது. இதன் பலனாகத் தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஓரளவுக்காவது இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

வளர்ச்சியும் ஏற்றமும்:

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் S.I.L.F. ‘நீதிக்கட்சி’  (Justice Party) என்று அழைக்கப்பட்டது. பானகல் அரசரின் கட்சிப் பணிகள் தியாகராயரை மிகவும் கவர்ந்தன. 1919 ஆம் ஆண்டு தேர்தலில் பார்ப்பனரல்லாதார் பெருமளவில் வெற்றி பெற்று, திவான் பகதூர் சுப்பராயலு தலைமையில் முதல் அமைச்சரவை அமைந்தது. அவருடைய மறைவுக்குப் பின் பானகல் அரசர் 

முதல் அமைச்சரானார். அவரை ó Premier of Madras Presidency என்று அழைத்தார்கள். 1925ஆம் ஆண்டு தியாகராயர் மறைவைத் தொடர்ந்து பானகல் அரசர் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதே சமயம், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தி லும முன்னணித் தலைவராக விளங் கினார்.

குறிப்பிடத்தக்க சாதனைகள்:

1918ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் திவான் பகதூர் பட்டம் அளித்து மாநில அரசு அவரை கவுரவித்தது. 1922ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் ‘ராஜா’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டு “பானகல் ராஜா” ஆனார். 1926ஆம் ஆண்டு K.C.I.E.  என்னும் உயர்ந்த பதவி அளிக் கப்பட்டது.

‘ராஜா சாஹேப்‘ சீர்படுத்தாத துறை ஏதுமில்லை என்றால் மிகையாகாது. தனது ஒவ்வொரு செயலிலும் தன் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவர் அவர். அவரது தொடர் முயற்சிகளால் கிராமங்களில் மருத்துவ வசதி பெருகியது. சுகாதாரத் துறை வியக்கத்தக்க வளர்ச்சி கண்டது. கிராமங்களில் மருத்துவர்களை ஆர்வமுடன் பணிபுரியச் செய்ய அவர் களுக்கு ஊக்கத் தொகை கிடைக்க வழி வகுத்தார். தகவல் தொடர்பு வசதிகளும் போதுமான அளவு தண்ணீரும் இல்லாத ஊரகப் பகுதிகளில் அவை தடையின்றி கிடைக்க பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்.

ஆதி திராவிடர்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர் பானகல் அரசர். அவரு டைய முயற்சியால் பல சலுகைகள் பெற்ற அந்த வகுப்பினரின் வாரிசுகள் இன்றும் அவருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். இந்து அறநிலையச் சட்டம் அவருடைய மிகப்பெரிய சாதனை. இதன் மூலம் முறை கேடுகளும் லஞ்ச லாவண்யங்களும் வேறு பல ஊழல்களும் அடியோடு அழிந்தன.

குறையாத செல்வாக்கு:

1926ஆம் ஆண்டு தேர்தலில் பார்ப் பனரல்லாதார் கட்சி தோல்வியுற்றது. ஆனால் பானகல் அரசரின் செல்வாக்கு குறையவில்லை. புகழும் மங்காமல் இருந்தது. துவண்டு விடாமல் போராடி அக்கட்சிக்கு மீண்டும் உயிரூட்டியவர் பானகல் அரசர். எல்லோருக்கும் இனிய நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசக ராக விளங்கிய மாமனிதர் 1928ஆம் ஆண்டு, டிசம்பர் 16ஆம் நாளன்று மறைந்தார். இனிவரும் தலைமுறைகள் யாவும் அவருடைய உன்னதமான, கொள்கைகளைப் பின்பற்றி அவரைப் போலவே வீழ்ந்தாலும் உடைந்துப் போகாமல் நிமிர்ந்து நின்று சமத்துவத் திற்காகவும் சமூகநீதிக்காகவும் போராடப் போது உறுதி.

பானகல் அரசரின் தலைமையிலான நீதிக்கட்சியால் தாழ்த்தப்பட்டோரின் இழிவான பெயர்கள் நீக்கப்பட்டன. ‘பஞ்சமர்’ என்ற பெயர் நீக்கப்பட்டு ‘ஆதி திராவிடர்’ என்ற பெயர் மாற்றம் அவரு டைய தீவிர முயற்சியால் ஏற்பட்டது. 1922ஆம் ஆண்டு இந்த மாற்றம் அரசு ஆணை மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

பானகல் அரசர் காலத்தில் நீதிக்கட்சி ஆட்சியின்  சாதனைகள் - சிறப்புப் பணிகள்

1. துப்புரவுப் பணியாளர் வகுப்பிற்கு உதவ கூட்டுறவுச் சங்கங்கள்.

2. தாழ்த்தப்பட்டோருக்கு பொதுத் துறையில் உரிய இடங்கள்.

3. நலிந்த சமூகத்தினருக்கு பணி உயர்வு மற்றும் உயர் பதவி நியமனங்கள், வீட்டு மனைகள், சாலை வசதிகள், குடியிருப்புகள், புதிய பள்ளிகள், அவர்களுடைய நலனுக்காகப் பணி புரிய லேபர் கமிஷனர் (தனி அலுவலர்) நியமனம்.

4. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் ஜாதி வாரி கணக்கெடுப்பு.

5. குறவர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள்.

6. ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள், கடன் வசதிகள், விவசாய நில ஒதுக்கீடு.

7. மீனவர் நலனுக்கென தனி அலுவலர் நியமனம்.

8. பி அண்ட் சி மில் - பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள்.

9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.

10. இரவுப் பள்ளிகள் / கிராமங்களில் புதிய பள்ளிகள்.

மேற்கண்ட எல்லா சாதனைகளிலும் பானகல் அரசருக்கு பங்கு உண்டு. அவரோடு மற்றவர்கள் ஒருங்கிணைந்து பாடுபட்டார்கள் அவற்றுக்காக.

காலம் முழுவதும் அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்த பானகல் அரசரை இன்றைய ‘விடுதலை’ ஞாயிறு சிறப்பு மலர் மூலம் நினைவு கூர்வது நம் எல்லோருக்கும் பெருமை.

மருத்துவ சேர்க்கையில் சமஸ்கிருதமா?

பானகல் அரசரின் காலத்தில் தான் கல்வித் துறையிலும் சமூகத் துறையிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட் டன. ஒரு மாணவன் மருத்துவக் கல்லூரி யில் சேர விரும்பினால் அவனுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற முறை அப்போது நடைமுறையில் இருந்தது. சமஸ்கிருதத்தில் புலமை பெற் றிருந்த பானகல் அரசரே இந்த முறையை உடைத்தெறிந்தார். மருத்துவத் துறை யிலிருந்து ஆங்கிலேயர்களின் ஆதிக் கத்தை அகற்றினார். முதன் முதலாக சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை அமைத்த பெருமையும் பானகல் அரசரையே சாரும். அண்ணா மலை பல்கலைக்கழகம் உருவானதிலும் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பானகல் அரசர் மற்றும் பல பிரமுகர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் 1929-1930ஆம் கல்வியாண்டில் அண்ணா மலை பல்கலைக்கழகம் தோன்றியது. 

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும் பானகல் அரசரின் பல சாத னைகளுள் ஒன்றாகும். கோவில்களின் சொத்தை சூறையாடி வந்த சுயநலக் காரர்களின் கொட்டம் இதன் மூலம் அடங்கியது. பானகல் அரசர் காலத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கியமான நிகழ்வு தாழ்த் தப்பட்ட மக்கள் எல்லாத் தெருக்களிலும் பொது இடங்களிலும் செல்லலாம் என்று அறிவித்த அரசாணை.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:34 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பானகல் அரசர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

படம் செருகல்

படம் செருகல்
ஓபரா-அமெரிக்க நாத்திகர்
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்
    முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மு...
  • நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்
    வ நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! - தஸ்லிமா நஸ்ரீன் ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்...
  • பொன்மொழி
    தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த்  தோல்வியுறுவான்.   - நெப்போலியன் சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க...
  • ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
    எத்தர்களை  முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் ...
  • வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2
    டாக்டர் துரை.சந்திரசேகரன் (வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாய...
  • மறைந்த அயோத்திதாசர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
    May 20, 2021  • Viduthalai   ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக...
  • புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
    பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்.... (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ...
  • பாதர் எனக்கு ஒரு டவுட்?
    😇😇🤔 *மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?* *பாதர் : கேளு மகனே* *மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்...
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங்
      விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயக வாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக்...
  • பார்ப்பன வெறி பிடித்த பாரதியார்...
    மகா க(காவி)வி பாரதியார்..❓ பார்ப்பன வெறி பிடித்த பாரதியார்... அகண்ட பாரதம் ஆரியநாடு! நால்வர்ணம் நாட்டுநலன்! பசுவதை தெய்வக்குற்றம்! இந்தி பொத...

லேபிள்கள்

  • .சிங்காரவேலர்
  • 'இந்திய வரலாறு
  • அக்ரகாரம்
  • அகவிலைப்படி
  • அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
  • அண்ணல் அம்பேத்கர்
  • அண்ணா
  • அந்தணர்
  • அந்தணர் என்போர்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமர்நாத்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்யப்பன்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அவரங்கசீப்
  • அழகிரி
  • அழிப்பு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுக்கரசு
  • அன்பழகன்
  • அனுபவம்
  • அனுமதி மறுப்பு
  • ஆ.இராசா
  • ஆ.ராசா
  • ஆக்கிரமிப்பு
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசீவகம்
  • ஆட்ரி ட்ருஷ்கே
  • ஆத்மா மறுப்பு
  • ஆதிக்கம்
  • ஆய்வு
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்.
  • ஆரிய பூமி
  • ஆரியம்
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர்கள்
  • ஆன்மீகம்
  • இ.மு. சுப்ரமணியம்
  • இணைப்பு மொழி
  • இந்தி
  • இந்தியா
  • இந்தியா ?
  • இந்தியாவா ?
  • இந்தியாவா?
  • இந்து
  • இந்து மதம்
  • இந்துத்துவா
  • இந்துமத கொடுமை
  • இந்துமதம்
  • இந்துவெறி
  • இயக்கங்கள்
  • இயக்கம்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இராசராசன்
  • இராமச்சந்திரனார்
  • இராமலிங்க அடிகள்
  • இராமன்
  • இராமன் பட எரிப்பு
  • இராமாமிருதம்
  • இராமாயண காலம்
  • இராமாயணம்
  • இராமானுஜர்
  • இராவணன்
  • இழப்பு
  • இறுதிவுரை
  • இனம்
  • உண்மை பாடல்
  • உணவு
  • உபநிடதம்
  • உபி
  • உமா மகேஸ்வரன்
  • உமாமகேசுவரனார்
  • உயிர்ப்பலி
  • உயிரிழப்பு
  • உரிமை
  • உரைகள்
  • ஊர்
  • எதிர்வினை
  • எம் பி
  • எரிப்பு
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓபரா
  • ஓமந்தூர் பி. ராமசாமி
  • க.அன்பழகன்
  • கட்சி
  • கட்டைவிரல்
  • கடவுள்
  • கடவுள் சிலை
  • கடவுள் மறுப்பு
  • கடை
  • கருப்புச் சட்டை
  • கருப்புச்சட்டை
  • கரோனா
  • கல்வி
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிதைகள்
  • கழகம்
  • களப்பிரர்
  • கற்பனை
  • கா.சு. பிள்ளை
  • காட்டுவாசி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • கார்த்திகை தீபம்
  • கால்டுவெல்
  • காவிரி
  • கான்சிராம்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கீழ்ப்பாக்கம்
  • கு.வெ.கி.ஆசான்
  • குங்குமம்
  • குடகு
  • குடியரசு இதழ்
  • குண்டுவெடிப்பு
  • குணம்
  • குமுதம்
  • குருக்கள்
  • குழந்தை
  • கேரளா
  • கேள்வி
  • கேள்வி பதில்
  • கேள்விகள்
  • கேள்வியும் பதிலும்
  • கைகள்
  • கைலி
  • கைவல்யம்
  • கொடுமை
  • கொலை
  • கோட்சே
  • கோயில்
  • கோயில்கள்
  • கோல்வால்கர்
  • கோழை
  • சங்கராச்சாரி
  • சட்டம்
  • சதி
  • சந்திராயன்
  • சபரிமலை
  • சமணம்
  • சமதர்மம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி விருது
  • சர்.சி.பி. அறிவுரை
  • சரத் யாதவ்
  • சரஸ்வதி நாகரிகம்
  • சரியா
  • சவர்க்கார்
  • சாகு மகராஜ்
  • சாகு மகாராஜ்
  • சாதி
  • சாதிகள்
  • சாதிகொடுமை
  • சாமி கைவல்யம்
  • சாலினி
  • சாவித்திரி பூலே
  • சாவு
  • சி.நடேசனார்
  • சிக்கல்
  • சிங்காரவேலர்
  • சித்தர்கள்
  • சித்திரவதை
  • சித்திரை
  • சிதம்பரம்
  • சிந்தனை
  • சிந்து
  • சிந்து – சரஸ்வதி
  • சிலை
  • சிவராஜ்
  • சிவன்
  • சின்னகுத்தூசி
  • சுடுகாட்டிலும் ஜாதி
  • சுப்பராயன்
  • சூத்திரர்கள்
  • செய்குத்தம்பி பாவலர்
  • சேரி
  • சொத்து
  • சௌந்தர பாண்டியனார்
  • டார்வின்
  • டி.ஏ.வி.நாதன்
  • தகுதி
  • தங்கம் திருட்டு
  • தம்மபதம்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்
  • தமிழ் இந்து
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் தேசியம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் வேதம்
  • தமிழறிஞர்
  • தர்மதீர்த்தர்
  • தருமாம்பாள்
  • தலைவர்கள்
  • தளபதிராஜ்
  • தற்கொலை
  • தஸ்லிமா நஸ்ரீன்
  • தாகூர்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • தானம் 
  • திப்பு சுல்தான்
  • தியாகராயர்
  • திராவிடம்
  • திராவிடர் - ஆரியர்
  • திருக்குறள்
  • திருட்டு
  • திருப்பதி
  • திருமணம்
  • திருமா
  • திருவரங்கம்
  • திருவள்ளுவர்
  • திருவாங்கூர்
  • திருவிக
  • தில்லி
  • திலகர்
  • திறமை
  • தினமணி
  • தினமணி’
  • தினமலர்
  • தீ விபத்து
  • தீங்கு
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • துரை.சந்திரசேகரன்
  • தேசியம்
  • தேவதாசி
  • தேவநேயப் பாவாணர்
  • தை
  • தொல்காப்பியம்
  • தொழிலாளர்
  • நம்பிக்கை
  • நம்பூதிரி
  • நரபலி
  • நன்னன்
  • நாகநாதன்
  • நாகரிகம்
  • நாசம்
  • நாராயண குரு
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நாஸ்திகம்
  • நீட்
  • நீதி
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நெரிசல்
  • நேயன்
  • பக்தி
  • பகத்சிங்
  • பகுத்தறிவாளர்
  • பகை
  • பட்டுக்கோட்டை அழகிரி
  • படத்திறப்பு
  • படை எடுப்பு
  • பண்டிகை
  • பண்டிதர்
  • பதவி
  • பதிப்புரிமை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பரமசிவம்
  • பரிதிமாற்கலைஞர்
  • பரிபாலனம்
  • பலி
  • பழங்குடியினர்
  • பனகல் அரசர்
  • பனகால் அரசர்
  • பாதிரியார்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பான்
  • பாரத் ?
  • பாரதம்
  • பாரதமா ?
  • பாரதமா?
  • பாரதி
  • பாரதியார்
  • பால்
  • பாலியல் வன்கொடுமை
  • பானகல் அரசர்
  • பாஜக
  • பிரசாதம்
  • பிராமணப் பெருமை
  • பிராமணர்
  • பிராமணியம்
  • பில்லி சூனியம்
  • புத்த - சமணம்
  • புத்தம்
  • புத்தர்
  • புரட்சி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புலவர் குழந்தை
  • பூசாரி
  • பூசை
  • பூணால்
  • பூணூல்
  • பூதம்
  • பெட்ரன்ட்ரஸ்ஸல்
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண் விமானி
  • பெண்கள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • பெரியார
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேய்
  • பேராசிரியர்
  • பொதுப்பணி
  • பொதுவுடமை
  • பொதுவுடைமை
  • பொப்பிலி அரசர்
  • பொன்மொழி
  • பௌத்தம்
  • மகாத்மா ஜோதி பாஃபூலே
  • மணியம்மை
  • மத வன்முறை
  • மதம்
  • மதமாற்றம்
  • மந்திரமா தந்திரமா
  • மயிலாடன்
  • மயிலை சீனி.வேங்கடசாமி!
  • மராட்டியப் புயல்கள்
  • மருத்துவ மனை
  • மறுப்பு
  • மறைமலை அடிகள்
  • மறைமலையடிகள்
  • மறைவு
  • மன்னர்கள்
  • மன்னராட்சி
  • மனு ஆட்சி
  • மனு சிலை
  • மனுதர்மம்
  • மனோன்மணியம்
  • மாணிக்க நாயக்கர்
  • மாநாடு
  • மார்க்ஸ்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மாற்று மதம்
  • மின்சாரம்
  • மின்நூல்
  • மீசை
  • மு.வ
  • முத்துராமலிங்கம்
  • முதல்வர்
  • மூடத்தனம்
  • மூடநம்பிக்கை
  • மேயர் ந.சிவராஜ்
  • மைல்கல்
  • மோகன் பகவத்
  • யுனஸ்கோ
  • ரஞ்சித்
  • ராமர் கோயில்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராஜராஜ சோழன்
  • ராஜாராம் மோகன்ராய்
  • ருத்திரன்.
  • லாலா லஜபதி
  • லெனின்
  • வ.உ .சி
  • வ.உ.சி.
  • வகுப்புரிமை
  • வந்தேறிகள்
  • வர்ணம்
  • வரலாறு
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன்முறை
  • வா உ சி
  • வாஞ்சி
  • வி.பி.சிங்
  • வித்தியாசம்
  • விபச்சாரம்
  • விபத்து
  • விருது
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீழ்ச்சி
  • வெறுப்பு
  • வேத காலம்
  • வேதம்
  • வேப்பமரம்
  • வைக்கம்
  • வைக்கம் வீரர்
  • வைகுண்டர்
  • ஜடாமுடி
  • ஜனநாயகம்
  • ஜனாதிபதி
  • ஜாதி
  • ஜாதி வெறி
  • ஜி. யு. போப்
  • ஜீவனோபாயம்
  • ஜீவா
  • ஜோதிராவ் புலே
  • ஜோதிராவ் பூலே
  • ஸ்மார்த்தர்
  • ஸ்வஸ்திகா
  • ஹிட்லர்
  • Bunch of Thoughts

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2026 (3)
    • ►  ஜனவரி (3)
  • ►  2025 (13)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (70)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (25)
    • ►  மே (12)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2023 (45)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (39)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ▼  ஜூலை (4)
      • இதுதான் கடவுள் ச(ப)க்தி! அமர்நாத் 'புனித' யாத்திரை...
      • மன்னர்கள் கட்டிய கோயில்களும், மக்களின் பொருளாதார வ...
      • மதசார் ‘சதி’ வழக்கத்துக்கு சமாதி அமைக்க வழி வகுத்தவர்
      • பானகல் அரசர் - சமூகநீதிக்கான வரலாற்று நாயகர்
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (10)
  • ►  2020 (73)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (4)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (77)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (68)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (28)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (32)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (16)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (35)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மே (7)
    • ►  பிப்ரவரி (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.