பக்கங்கள்

சனி, 1 ஏப்ரல், 2017

வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்




முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பாக முதன்முதலில் வருண அமைப்பை எதிர்த்து பகுத்தறிவுச் சிந்தனை அடிப்படையில் குரல் கொடுத் தவர் கவுதம புத்தர் (கி.மு.500) ஆவார். அவரைத் தொடர்ந்து மகாவீரர் திருவள்ளு வர் (கி.மு.31) அதேபோன்று 900 ஆண்டு களுக்கு முன் வைதீக மத ஆச்சாரங் களையும் தீண்டாமைக் கொடுமைகளை யும் கண்டித்தவர் ஆதிசங்கரரும், இராமா னுஜரும். தொடர்ந்து கபிலர், திருமூலர், அசோகர் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகளா வர்.
அந்த வரிசையில் 19ஆம் நூற்றாண்டில் வருண அமைப்பை எதிர்த்தும் மனித நேயத்தை வலியுறுத்தியும் சமத்துவ - சமதர்ம - பொது உடமை - சீரதிருத்தக் கருத்துகளையும் மூடநம்பிக்கைக்கு எதி ரான பகுத்தறிவுச் சிந்தனை கருத்துகளை யும் தமது படைப்புகளால் முன்வைத்த முன்னோடி தத்துவஞானி வள்ளலார் இராமலிங்கர் (1816-1874) என்பதனை இவ் ஆய்வுக் கட்டுரையில் காண்போம்.
சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி வள்ளலார்
வள்ளலார் தம் படைப்புகளாக 6000-க் கும் மேற்பட்ட அருட்பா பாடல்களையும் கீர்த்தனைகளையும் கன்னித்தமிழில் அரசியல் - சமூகம் - பொருளாதாரம் - கலை இலக்கியம் - பண்பாடு  - மருத்துவம் - சமயம் - மதம் - சமரசம் - தேசியம் - பக்தி,  முக்தி, சித்தி என அனைத்து துறைகளோடு சமூக சீரதிருத்த  பகுத்தறிவுச் சிந்தனை களையும் உள்ளடக்கிய சமரச சுத்த சன்மார்க்க கொள்கைகளாகப் பாடியுள் ளார். அந்த வகையில் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தையான பெரியார் அவர்களுக்கு முன்னோடியாக வள்ள லாரை அவரது படைப்புகளிலிருந்து ஒப் பிடலாம்.
வள்ளலார் தாம் வாழ்ந்த 50 ஆண்டு களில் முதல் 40ஆண்டுகள் வழிபாட்டுத் துதிப் பாடல்களையே பாடினார். இறுதி 10ஆண்டுகளில் தமது சிந்தனைகளில் பகுத்தறிவு தெளிவு பெற்று சமூக சீர் திருத்தத் திருப்புமுனை ஏற்பட்டு உருவ மற்ற வழிபாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்து மனிதநேயத்தை போதித் தார். மேலும் ஜாதி சமயப் பூசல்களையும், மத வேறுபாடுகளையும் கடுமையாகச் சாடினார். மூடநம்பிக்கைகளைக் கண்டித் தார் சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்தார். அதன் வெளிப்பாடே ஆறாம் திருமுறை யில் காணும் அரும்பொருளாக, சமூக சீர்திருத்தக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
நால்வருணம் ஆசிரமம் ஆனநம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மெய்வருணம் தோல்வருணம் கண்டறிவா ரிலைநீ
விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே
(திருவருட்பா பாடல்:4174)
மனிதநேய-பகுத்தறிவுச் சிந்தனையின் திறவுகோல் வள்ளலார்
இதுமாதிரியான புரட்சிக் கருத்துகள் இடம்பெற்றிருந்த வள்ளலாரின் படைப்பு களைக் கண்ணுற்ற தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கக் கருத்து களுக்கு வித்தானது அருட்பா எனக்கூறி ஆறாம் திருமுறையிலிருந்து 100 பாடல் களைத் திரட்டி 1935இல் தமது குடிஅரசுப் பதிப்பகத்தின் 3 ஆவது வெளியீடாக ‘இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு’ எனும் பெயரில் புலவர் சாமி.சிதம்பரனார் மூலம் தொகுத்து வெளியிட்டார். அதிலி ருந்து வள்ளார் படைப்பின் ஆறாம் திருமுறைகளில் காணும் சமூக சீர்திருத்த - பகுத்தறிவுக் கருத்துகளடங்கிய பாடல் களை திராவிட இயக்க மரபு வரித்துக் கொண்டது எனலாம்.
உள்ளம் உருகும் உன்னதப் பாடல் களையும் கல்லையும் கனிந்துருகச் செய் யும் கருணைமிகு பாடல்களையும் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டும் மனிதநேயப் பாடல்களையும் திருஅருட்பா எனும் படைப்பால் வள்ளலார் இயற்றியுள் ளதோடு தமிழக மக்களின் மூளையில் இடப்பட்டிருந்த மூடநம்பிக்கை எனும் விலங்கினை தம் பகுத்தறிவுச் சிந்தனை யெனும் திறவுகோலால் திறந்திட்ட பெரு மானாவார்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
(திருவருட்பா பாடல்:3471)
என்று சொன்ன தலைசிறந்த மனித நேயச் சிந்தனை கொண்ட ஆன்மீகவாதி அருட்பிரகாச வள்ளலாரைத் தவிர வேறு ஒருவரை இவ்வுலகில் காண்பது அரி தாகும். புத்தருக்குப் பிறகும் பெரியாருக்கு முன்பாகவும் இடைப்பட்ட காலத்தில் வள்ளலார் இங்கு வாய்த்தது தமிழ் சமூகத் திற்கு மட்டுமல்லாது தமிழ் மொழிக்கும் புதுவை உள்ளிட்ட தமிழ் நாட்டிற்கும் பெருமை என்றே கொள்ளலாம். அவர் நம் மக்களைப் பார்த்து கூவி அழைக்கும் பாங்கினை நோக்குங்கால்:
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
(திருவருட்பா பாடல்:5564)
இவ்வாறாக பக்திமார்க்கத்திலிருந் தோருக்கும் தம் பகுத்தறிவு சிந்தனைக் கருத்துகளால் பாலமிட்டவர் வள்ளலார் ஆவர். எனவே வள்ளலாரை பகுத்தறிவுச் சிந்தனையின் திறவுகோல் என்றே எடுத் துக்கொள்ளலாம். அதேபோன்று வள்ள லாரை ஒரு ஆன்மீகவாதியாக எடுத்துக் கொண்டாலும் அவரது தளத்திலிருந்து புரட்சிக் கருத்துகளை துணிந்து சொன்ன முன்னோடி முதல் புரட்சியாளராகவும் வள்ளலாரைக் கொள்ளலாம். உதாரணமாக:
கலைஉணர்த்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக.
(திருவருட்பா பாடல்:3768)
என்றதும், மேலும்:
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கம் எல்லாம் குழிகொட்டி மண்மூடிப்போக
(திருவருட்பா பாடல்:4654)
மற்றொரு இடத்தில்:
“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி!”
(திருவருட்பா பாடல்:4075)
மேலும்:
“மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார்”
(திருவருட்பா பாடல்: 4728)
வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறையும் - பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையும் ஒப்பீடு
வள்ளலாரின் திருவருட்பாவில் ஆறு திருமுறைகளையும் அலசி ஆராயந்ததில் ஆறாம் திருமுறையின் முன்பகுதியான பூர்வஞான சிதம்பரப் பகுதி இடைப் பகுதியான உத்தரஞான சிதம்பரப் பகுதி அதேபோன்று முடிந்த பகுதியான சித்தி வளாகப் பகுதி ஆகியவை முழுக்க முழுக்க பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை களையும் அறிவியல் சிந்தனைகளையுமே வெளிப்படுத்துவதாக இயற்றப்பட்டுள்ளது.
பெரியார் அவர்கள் மக்களிடையே கூறிவந்த ஜாதி மதம் வேதம் சாஸ்திரம் புராணம் இதிகாசம் முதலியவைகளைப் பற்றிய ஒவ்வொரு கருத்தையும் வள்ளலார் இராமலிங்கரும் வாய்ப்பு கிடைக்குமிடங் களிலெல்லாம் குறிப்பிடத்தவறவில்லை.
தீண்டாமை எப்படி வந்தது என்றால் மதத்தால் வந்தது என்கின்றனர்; மதத்தால் ஏன் வந்தது என்று கேட்டால் அது சாஸ்திரப்படி என்கிறார்கள்; இந்த சாஸ் திரம் எப்படி வந்தது என்றால் அது ஆண் டவனின் ஆணை என்கிறார்கள்! அப்படி யானால், தீண்டாமையை நிலைக் கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதர வளிக்கும் சாஸ்திரத்தையும், அதை ஏற் படுத்திய கடவுளையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்றார் பெரியார்.
(‘விடுதலை’, 19.04.1950)
சமத்துவத்திற்காகவும். தீண்டாமைப் பிணி போக்கும் மருத்துவராகவும் நோய் நாடி நோய் முதல்நாடி சீரதிருத்தம் செய் தார் பெரியார். மேலும் கோயிலில் தாழ்த் தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது அவர்களே புஜை செய்யவேண் டும், தட்சணைக் காசுகளை அவர்களே அடையவேண்டும். அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போடவேண்டுமென்று கிளர்ச்சி செய்யத் தான் போகின்றேன் என்றார் பெரியார்!...
(‘விடுதலை’, 22.08.1948)
வள்ளலார் நெறியில் மக்கள் வாழ்ந் தால் மனிதநேயம் மலரும்; அன்பு செழிக் கும்; ஒழுக்கம் உயர்ந்தோங்கும்; பண்பு மலர்ந்தோங்கும்; தீமைகள் யாவும் அழிந்து நன்மை மலரும். சமயவாதிகள் உன் தெய் வம் என் தெய்வம் எனப் பூசலிடுவதை வள்ளலார் அறியாமை என்கிறார்:
“பேருற்ற உலகிலுள்ள சமயமத நெறியெல்லாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்பிள்ளை விளையாட்டு”
(திருவருட்பா பாடல்: 3677)
என்பதிலிருந்து தர்மத்தை தவிர சமய மும் இல்லை - தெய்வமும் இல்லை என்ப தாக அறியமுடிகிறது. எல்லா உயிர்களை யும் தமது உயிர்போல் நினைத்து சம உரிமை வழங்குபவர்தான் மனிதனாவான. எங்கும் வேறுபாடு பிளவு மக்களிடம் ஒற்றுமை இல்லை. சைவம்-வைணவம் இப்படித்தான் போனது பார்ப்பனர் - பறையர் என இப்படித்தான் பிரியக் காரணமானது.
எளிமையான ஆரவாரமில்லா வழி பாடுதான் சன்மார்க்க வழிபாடு என்கிறார் வள்ளலார். ஆனால் இன்றைய வழிபாட்டு முறையோ தேர்த்திருவிழா புனித நீராடல் பூப்பல்லக்குத் திருவிழா, குடமுழுக்கு, பங்குனி உத்திரம், பால் காவடி எனும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
முனைவர் த.ஜெயக்குமார்
உதவிப் பேராசிரியர்
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்,
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்
(தொடரும்)
25.2.2017 விடுதலை ஞா.ம.


25.2.2017 அன்று வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி...
(இதில் எங்கு வள்ளலார் கூறிய எளிமை உள்ளது. சன்மார்க்க வழிபாடு என்பது எளிமையைச் சார்ந்து உள்ளது. ஆனால் இன்று எல்லாவற்றிலும் உயர்வு - தாழ்வு ஏற்றம் - இறக்கம் என வேறுபாடுகள் நிறைய தெரிகின்றன. உதாரணத்திற்கு வள்ளலாரின் அருட்பாக்களிலிருந்து:
“உயர்வு தாழ்வு கொள்ளுதல் கூடாது
ஒத்தாரும் உலர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்”                  
(திருவருட்பா பாடல்:4082)
அதேபோன்று “சாதியும் மதமும் சமயமும் பொய்என”                
(திருவருட்பா பாடல்:4615)
“மதம்எனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்”                 
(திருவருட்பா பாடல்:5799)
“சாதி சமயங்களிலே விதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே”                
(திருவருட்பா பாடல்:5805)
சாதியும் சமயமும் இன்று மனிதனை ஆட்டிப் படைக்கிறது. சாதிகள் இன்று பலருக்கு பிடிக்காத சொல்லாக உள் ளது. அதுபோல சமயமும் இன்று புதை குழிக்குள் தள்ளப்பட்டுவிட்டது. சாதி யிலும் சமயத்திலும் மாட்டிக்கொண்ட மனிதன் உண்மையிலேயே அவதிக் குள்ளாகிறான். அதனையே பெரியார் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடு கிறார் அதாவது:
“இன்றைக்கு ஜாதிபேதம் காட்டுவதற்கு கோயில் கரப்பக்கிருகம் ஒன்றுதான் இருக் கிறது. மற்ற இடங்களில் ஒழிந்ததுபோல இங்கும் ஒழிந்தாக வேண்டும். வேறு எந்த மதத்திலும் இதுபோன்ற தடை இல்லை. சாமி இருக்கிறதோ! இல்லையோ வெங் காயம்! அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. மனிதனுக்கு மனிதன் ஜாதிபேதம்  இருக்கக்கூடாது என்பதுதான் எனது கொள்கை” எனப் பிரகடனப்படுத்தினார் பெரியார்.
(‘விடுதலை’, 16.11.1969)
மதம் இன்று வரை வெறியை ஊட்ட, வெறுப்பை ஊட்ட பயன்பட்டு வந்திருக் கிறதே ஒழிய, யாரையும் சீர்திருத்தப் பயன் படவில்லையே! எனவே முதலில் மத வெறியை ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார்.                                                          
(‘விடுதலை’, 11.03.1948)
மனித முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை சடங்குகளும் சம்பிரதாயங் களும் என்கிறார் வள்ளலார். பழைமை மூட நம்பிக்கைகளை உதறித் தள்ளி அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சிந்தனை வழியில் முன்னேற வள்ளலாரின் நெறி உந்து சக்தியாக இருந்தன.
மனித சமுதாயம் மகிழ்ச்சியால் நிலைக்கவேண்டுமானால், “நாம் எல் லோரும் ஓர் குலம் -  எல்லோரும் ஓர் இனம்” என்ற ஒற்றுமை வரவேண்டும் என் கிறார் வள்ளலார். ஒழுக்கம் நம்மிடையே இல்லாததால் ஒன்றுபட்ட வாழ்வு இல்லை என்பதும் அவரது கூற்றாகும். அதையே பெரியார் அவர்கள்:
“ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது”
(‘விடுதலை’, 21.02.1948)
“ஒழுக்கம் என்பது ஒரு மனிதன் தன் னிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றானோ எதிர்ப்பார்க் கின்றானோ அப்படியே இவன் மற்றவர் களிடமும் நடந்து கொள்வதுதான்” என்றார் பெரியார்.
(‘விடுதலை’, 26.09.1956)
வள்ளலார் நெறியும் - பெரியார் நெறியும் ஒத்த சிந்தனைகள் கொண்டவையே!
இவ்வாறு பல சீரதிருத்த சிந்தனைகளை ஒத்த கருத்துகளில் வலியுறுத்தியுள்ள தந்தை பெரியார் அவர்களைப்போலவே, வள்ளலாரும் நம்மிடையே வாழ்ந்தும், அவரின் எண்ணங்கள் - எழுத்துகள் நம் மிடையே மலர்ந்தும் நாம் இன்னும் வேறு பட்டே வாழ்கிறோம். ஜாதி. சமயம் போன் றவை நம்மை பிரிக்கின்றன. வள்ளலாரின் படைப்புகளை புதுப்பித்து வள்ளலார் கூறிய பகுத்தறிவு - சமதர்ம - மனிதநேய நெறிகளைப் பரப்பி வாழ்ந்தாலன்றி தமிழர்களுக்கு விடிவில்லை. வள்ளலாரின் அறிவார்ந்த பகுத்தறிவுக்கொத்த எதிர் காலச் சிந்தனைகள் இன்றைக்கும் எண் ணிப்பார்க்கத் தக்கதாகவும் சிந்திக்கத்தக் கதாகவும் உள்ளன.
மனித நேயத்திற்குத் தடையாக உள்ள ஜாதி  மதம் - சமயம் - குலம் - கோத்திரம் - சாஸ்திரம் முதலியவற்றை அழித்தொழிக்க பாடுபட்ட தமிழக முதல் சீர்திருத்தவாதி வள்ளலார் என்பதும், மேலும் அவரது குறிப் பிட்ட சில கருத்துகள் பெரியாரின் நெறி யோடு ஒன்றிய வள்ளலாரின் நெறிகளா கும் என்பதும் புலனாகிறது.
பிறவி பேதத்தை சாடி சீர்திருத்தம் செய் ததோடல்லாமல் ஒழிக்கவும் முயன்றவர் பெரியார். அதேபோன்று வள்ளலார் நெறி களை ஒத்த சிந்தனைகளைக் கொண்டே மனித சமூகக் கேடுகள் நீங்கி பேதங்கள் களைந்து சமத்துவம் பெற்றிட பெரியார் நெறியும் வலியுறுத்துகிறது. ஜாதி  மதம் ஆகியவற்றை கட்டிக் காப்பது கடவுள் என்ற கற்பனைத் தன்மை என்றால் அந்தக் கடவுளை ஒழிப்பதுதான் சமத்துவத்திற்கு வழிவகுக்கும்!
அதேபோன்று சுரண்டலுக்கு வழிவகுக் கும் மூடநம்பிக்கைகள் - கோயில் திரு விழா, பிரார்த்தனை,  ஜோதிட மோசடி களையும் அறவே விட்டொழிக்க வேண் டும் என்றார் தந்தை பெரியார்.                                                                             
(‘குடிஅரசு’, 11.08.1929)
சமூக சீரதிருத்தத்தின் முன்னோடி வள்ளலார்
சைவத்தையும் ஆரியத்தையும் எதிர்த் தவர் வள்ளலார். வள்ளலார் கடவுள் மறுப் பாளர் அல்லர். ஆனால் கடவுள் மறுப் பாளரான பெரியாரே அங்கீகரித்து வள்ள லாரின் ஆறாம் திருமுறையைப் பரப்பி னார். வள்ளலார் தீவிர சைவ சமயப் பற் றாளராக இருந்ததால் முதல் 5 திருமுறை களும் சிவனைத் துதிப்பதாக இருந்தது. 1860 களுக்குப் பிறகு, வள்ளலாரின் சிந்தனைப் போக்கில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. ‘அன்பே கடவுள், உடம்பே கோயில்’ என்ற திருமூலரின் வழி வள்ளலாரின் சிந்தனை கள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.
சமயங்கள், வேதங்கள், சடங்குகள், சாதி ஆகியவற்றை கடுமையான கேள்வி களுக்கு உட்படுத்துகிறார் வள்ளலார். சைவ சமயப்பற்றோடு இருந்த வள்ளலார் சுற்றித் தெளிவுபெற்றபின் சமயம் கடந்த சன் மார்க்க நெறிக்கு மாறியதாக 22.10.1873இல் குறிப்பிடுகிறார். தனது சமயத்தை அருள் நெறி என்கிறார். முன்பு மொழிக்காக சங்கம் இருந்தது. புத்தரின் பவுத்த சங்கத்திற்கு பின், சமயத்திற்காக முதன்முதலில் சங்கம் அமைத்தவர் வள்ளலார். 1865இல் ‘சமரச சுத்த சன்மார்க்கத்தை’ அமைத்தார்.
சமய ஞானிகள் மடங்களையே நிறுவி னார். ஆனால் வள்ளலார் சங்கம் நிறுவி னார். அதுவும் மடம் என்றால் ஆண் துறவி களுக்கானது என்பதனை மாற்றி ஆண்-பெண் இருவருக்குமான மடமாக நிறுவி னார் வள்ளலார். உருவ வழிபாட்டை விலக்கினார். காவிக்கு மாற்றாக வெள்ளை ஆடை அணிந்தார். சைவ சமய சன்மார்க் கத்தை சுத்த சன்மார்க்கமாக மாற்றினார். சிறு தெய்வ வழிபாட்டையும் உயிர் பலியிடு தலையும் ஏற்றுக்கொள்ளாதவர். சமரச சன் மாரக்க நெறி என்பதனை பக்திக்கு மட்டு மன்றி தொண்டு நெறியாக உருவாக்கினார்.
கோவிலை சபை என்றார் ஒளியே வழிபாட்டிற்கு உரியது என்றார். தீபமல்ல ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒளிரவேண் டிய ஜோதி என்றார் வள்ளலார். ஜோதி வழிபாட்டை புகுத்தினார். 1870 களில் துணிந்து வேதம், ஆகமம், புராணம், இதி காசம் முதலியவற்றை ஜாலம் (பொய்) என மறுத்தார். தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத காலகட் டத்தில் அவர்களையும் சேர்த்து சகல மதத்தவர்களும் ஒன்றுகூடி வழிபடக்கூடிய சத்திய ஞானசபையை அமைத்தார்.
பெண் கல்விக்கு ஊக்கமளித்து ஆன்ம ஞானக் கல்வி தருவது கட்டாயம் என்றார். கடவுள் என்பது அன்பே என்றார் புராணங் களை கற்பனை என்றார். மதத்தின் மூடநம்பிக்கைகளை மறுத்தார். தெய்வ வழிபாட்டு முறையினையும் பகுத்தறிவு அடிப்படையில் மாற்றினார். மேலும் ஆண் பெண் சமத்துவத்தை போதித்தார். கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்கவேண் டாம் என்று கூறினார். தமிழ் தொன்மை யானது அதிலிருந்துதான் உலக மொழிகள் கிளைத்தன என்றார்.
வள்ளலாரிடம் காணும் சீர்திருத்தவாதிக்கான தனித்தன்மைகள்
வள்ளலார் ஒரு அருட்கவிஞர் - அருள் ஞானி-நூலாசிரியர் - உரையாசிரியர் -  போத காசிரியர் - ஞானாசிரியர் - பதிப்பாசிரியர் -  பத்திரிகையாசிரியர் - சித்த மருத்துவர் - சீர் திருத்தவாதி என சகலதுறை வல்லுநராக விளங்கினார்.
தமிழகத்தின் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர்; முதன் முதலில் முதியோர் கல் வியை ஏற்படுத்தியவர்; முதல் கல்வெட் டாராய்ச்சியாளர்; முதன் முதலில் மும் மொழி பாடசாலை (தமிழ்-வடமொழி-ஆங்கிலம்) நிறுவியவர்.
தமது கொள்கைக்கெனத் தனி மார்க் கத்தைக் கண்டவர்!
தனது மார்க்கத்திற்கென்று-ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர்!
தனது மார்க்கத்திற்கென்று  ஒரு தனிக்கொடி கண்டவர்!
தனது மார்க்கத்திற்கென்று  ஒரு தனி மந்திரம் கண்டவர்!
தனது மாரக்கத்திற்கென்று  ஒரு தனி சபையைக் கட்டியவர்!
மேலும் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்! என்பதுவே
வள்ளலாரின் - சமரச சுத்த சன்மார்க்க நெறி! எனலாம்.
முடிவுரை
வள்ளலார்தான் முதன்முதலாக முதி யோர் கல்வியை ஏற்படுத்திய கல்வியா ளராவார். ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளைக் கண்டித்த முதல் பொது உடமைவாதியும் வள்ளலாரே! பாகுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் என்பது அவரவர் பாவ புண்ணியம் தலைவிதி என்ற மதவாதிகளின் வாதங்களை மறுத்த புரட்சியாளர் வள்ளலார். இந்துக்களில் மேல் ஜாதிக்காரர்கள்  மட்டுமே கோயில் களில் நுழைய அனுமதித்த அந்தக் காலத் தில், எல்லா ஜாதி சமய மதத்தினரும் ஒன்றுகூடி வழிபாடு செய்யவே சத்திய ஞானசபை ஏற்படுத்திய தமிழக முதல் சமதர்மவாதியும் வள்ளலாரே எனலாம்.
சங்கராச்சாரி ஒருமுறை வள்ளலாரை சந்தித்தபோது சமஸ்கிருதம் மாத்ரு பாஷை (அதாவது தாய்மொழி) எனக் குறிப்பிட்டார். உடனே வள்ளலார் தமிழ் பித்ரு பாஷை (அதாவது தந்தை மொழி) என ஆணித் தரமாக பதிலளித்து வாயடைத்தார். எனவே வள்ளலார் ஒரு தலைசிறந்த மொழி அறி ஞரும் ஆவர். அதேபோன்று 1872இல் அந்நியர் ஆட்சியால் ஜாதி இடுக்கண் களை நீக்கும் சட்டம் கொண்டுவந்து ஜாதி மறுப்புத் திருமணங்கள் செல்லுபடியாகச் செய்ததும் வள்ளலாரின் பிரச்சாரத்தால் தான் என அறிய முடிகிறது.
எனவே வள்ளலார் அவர்கள்  பகுத் தறிவு - சீர்திருத்த சிந்தனை உள்ளிட்ட பன்முகச் சிந்தனையாளர் என்பதனை அவரது படைப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. வள்ளலாரின் தொண்டு நெறி அமைதிக்கான அருமருந்தாகும். வள்ள லாரின் பாக்களை மட்டும் மதித்துப் போற்றாமல் அவரது பகுத்தறிவு சீர்திருத்த புரட்சி நெறியினையும் ஏற்று பரப்புவோம்.
முதன்மைச் சான்று மூலம்
1. ஊரன் அடிகள், இராமலிங்க அடி களார் அருளிய திருஅருட்பா ஆறாம் திருமுறை, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 1989.
2.ஆ.பாலகிருஷ்ணாபிள்ளை,  திரு அருட்பா பாகம்-2 & 4 சாரதா பதிப்பகம், சென்னை-7, 2006.
3. பொன்மொழிகள், பெரியாரும் இராம லிங்கரும், பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவன வெளியீடு சென்னை-7, 2007.
துணை நின்ற நூல்கள்
1. டாக்டர் எஸ்.குலசேகரன், வள்ளல் பெருமான், சிறப்புமிகு சிந்தனைகள், பாலமுரளி வெளியீடு, வேலூர், 2007.
2. திருவேங்கடம், சாதி எதிரப்பு மொழி கள், கொள்கை முழக்கம், மலேசியா, 1981.
3.ஆ.பெரியார் அருட்திரு வள்ளல் பெருமான் புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை, 2016.
-விடுதலை ஞா.ம.’, 04.03.17

வியாழன், 23 பிப்ரவரி, 2017

நிகழ்கால நடப்புகளும் - நமது நிலைப்பாடும்!


கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின் (5.12.2016) தமிழ் நாட்டின் அரசியல் அரங்கிலும், ஆட்சி மன்றத்திலும் பல்வேறு வகைகளிலும் வேக வேகமாகக் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

குறிப்பாக ஜெயலலிதா என்ற பார்ப்பன அம்மையார் மறைந்த நிலையில், மறுபடியும் முதலமைச்சர் என்ற ஆட்சி அதிகார பீடத்தில் அமர்வதற்கு இன் னொரு பார்ப்பனர் அமைய வாய்ப்பற்றுப் போன நிலையில், பார்ப்பன சக்திகள், பார்ப்பன ஊடகங்கள் அ.இ.அ.தி.மு.க.வில் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டன. ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு விளம்பரத் தோள்களைக் கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்றன. பாரதீய ஜனதா என்ற பார்ப்பனக் கட்சியோ, திராவிட இயக்கங்களுக்குத் தாங்கள்தான் மாற்று என்று கரிசனம் காட்டத் தொடங்கிற்று. அ.இ.அ.தி.மு.க. - பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்று என்று மத்திய அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு கசிந்துருகிக் கருத்தும் தெரிவித்தார்.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வாயிலாக (‘விடுதலை’, 8.12.2016) அ.இ.அ.தி.மு.க.வினருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுவித்தார்.

‘‘அ.தி.மு.க. சகோதரர்களே, எச்சரிக்கை! சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம் - அளவற்ற ஆதரவு தருவதுபோல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். அக்கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மற வாதீர்!’’ என்று திராவிடர் இயக்க உணர்வோடு எச்சரித்தார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆட்சி என்பது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இயக்கக் கட்சிகளிடம்தான் கடந்த 1967 முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. இதில் ஒன்றை பலகீனப்படுத்தி, அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பி.ஜே.பி. கருதித்தான் தன் சித்து வேலையையும் நடத்தியது. பி.ஜே.பி.க்கு அதற்கான சக்தி தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், அ.இ.அ.தி.மு.க.வுக்குள் ஒரு பிளவை ஏற் படுத்தி, ஒன்றைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு மறைமுக ஆட்சியை நடத்தலாம் என்பதுதான் பி.ஜே.பி.யின் திட்டம். இந்த நிலையை கழகத் தலைவர் வெளிப்படுத்தினார்.

அதன்பிறகு 27.12.2016 அன்று மற்றொரு அறிக்கையினையும் கழகத் தலைவர் வெளியிட்டார்.

‘‘தமிழ்நாட்டில் ஏதோ ‘சூன்யம்‘ ஏற்பட்டு விட்ட தாகவும், அதை நிரப்பத் தங்களால்தான் முடியும்; அதற் காகவே புது ‘அவதாரம்‘ எடுத்துள்ளவர்கள் போலும் நித்தம் நித்தம் சிலர் உளறுவதும், அதை ஏதோ பிர கடனம் போல ஆசைக் கனவுகளை பகலிலே கண்டு அறிவித்து மகிழுவதுமாக உள்ளனர்’’ என்று கூறியதுடன்,

தந்தை பெரியார் சொல்லும் ஒரு கருத்தினையும் நினைவூட்டினார். ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. அரசியல் பெயரில், போர்வைக்குள் நடைபெற்றவை அத் தனையும் ஆரிய - திராவிட இனப்போராட்டமே!’’ என்று தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு பொருத்தமாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது அவ்வறிக்கையில்.

‘‘(அந்தக் கனவுகளை) அப்பட்டமாக ஆரிய ஏடுகளும், மக்கள் ஆதரவைப் பெற்று இந்தப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத நிலையில் குறுக்கு வழி அரசியலில், லாட்டரியில் பரிசு விழாதா என்று கனவு காணும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கட்சிகளும் தலையிடுகின்றன - பிரச்சினையாக்க முயலுகின்றன’’ என்றும் இரண்டாவது அறிக்கையிலும் முக்கியமாக வலியுறுத்தியுள்ளார்.

தொடக்கம் முதல் இன்றுவரை பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசுகளின் திரைமறைவு நடவடிக்கையை அடையாளப்படுத்தி, எச்சரிக்கை எச்சரிக்கை என்று வலியுறுத்தி வந்துள்ளார் ஆசிரியர்.

தொடக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்த கருத்துகளை மேலோட்டமாகப் பார்த்தவர் கள்கூட, பிறகு அதனை வழிமொழிகிற வகையில் கருத்துகளை வெளியிட ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை. போகப் போகப் புரியும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கழகத் தலைவர். அதுதான் இப்பொழுது நடந்தும் வருகிறது!

இந்தப் பிரச்சினையில் தி.மு.க.மீது எந்தவித உரசலோ, விமர்சனமோ வைக்கவில்லை - திரா விடர் கழகத் தலைவர். இன்னும் சொல்லப்போனால், இந்தக் காலகட்டத்தில் தி.மு.க. நடந்துகொண்டுவரும் - மேற்கொள்ளும் அணுகுமுறையை மிகவும் உயர்வாகப் பாராட்டி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 27 ஆம் தேதி அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது.

‘‘தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க. மிகுந்த முதிர்ச்சியுடன் - குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல் கண்ணியத்துடன் அரசி யல் நடத்துவது - பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி என்ற முறையில் உரிய அளவு - தன் கருத்துகளை வெளியிட்டு வருகிறது.

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை

இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்

வானகம் கையுறினும் வேண்டாம் விழுமியோர்

மானம் மழுங்கா வரின் (நாலடியார்)

என்ற பழைய பாட்டு நியதிப்படி -

இடப்பக்கம் வேட்டையில் வீழ்ந்தால் புலி அதனை உண்ணாதாம்; வலப்பக்கம் வீழ்ந்தால்தான் உண்ணும் என்பது எப்படியோ - வேட்டையில் கூட ஒரு நியதி உண்டு.

குறுக்கு வழியில் எந்த முயற்சியும் தேவை என்று எண்ணாத திண்மைதான் உண்மையான ஜனநாயகவாதிகள் என்பதை உலகுக்கு அவர் களை அடையாளம் காட்டும்.

ஆக்கபூர்வ எதிர்க்கட்சி பணியை அந்த இயக் கம் - தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது.’’ (‘விடுதலை’, 27.12.2016)

உண்மை நிலை இவ்வாறு இருக்க - தி.மு.க.வுக்கு இதில் என்ன பிரச்சினை? என்ன சங்கடம்?

பெரியார் மண்ணில் திராவிட இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக் கூடாது என்பதில் தி.மு.க.வுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாதே - இருக்கவும் கூடாதே!

இன்னும் சொல்லப்போனால் தி.மு.க.வே கூட இந்தக் கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தால், அதன் திராவிட இயக்க உணர்வுக்காக  பொதுத் தளத்தில் அது சிறப்பாகவே உயர்ந்திருக்கும்.

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு, ஆளுநர் எப்படியெல்லாம் நடந்து வருகின்றனர் - அதைப்பற்றிய கருத்துகளைக் கூற தி.மு.க. ஏன் தயங்கவேண்டும்?

அப்படியொரு கருத்தை முன்வைக்க முன்வரா விட்டாலும், தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவர் அந்தக் கருத்தை வலியுறுத்தியது கண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால், நடந்தது என்ன? திராவிடர் கழகத்தைச் சங்கடப்படுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கழகத்தால் விலக்கப்பட்ட சிலரை அழைத்துக் கூட்டம் நடத்தியதை நினைக்கும்பொழுது இப்பொழுதுகூட ‘‘சிரிப்புதான்’’ வருகிறது!

இது என்ன சிறு குழந்தை விளையாட்டு!

எவ்வளவோ நிலைக்கு உயர வேண்டியவர்கள் இப்படி ஒரு சிந்தனைக்கும், செயலுக்கும் ஆளாகி விட்டார்களே என்ற வருத்தம் - அவர்மீது கொண்ட அக்கறையின் காரணமாகவே திராவிடர் கழகத் தலைவருக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை.

கடந்த 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடை பெற்ற அமளி - துமளிகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் சட்டம் அறிந்தவர் என்ற முறையில் தம் கருத்தினைத் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக்குள் சபாநாயகரின் முடிவுதான் இறுதியானது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே! எந்த முறையில் வாக்கெடுப்பு என்பது எல்லாம் அவரின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பது பலமுறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு, அமைச்சர்களாக இருந்தவர்களுக்குத் தெரியாததா?

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதில்லை - தேர்தல்மூலம்தான் அதனை ஈடேற்ற விருப்பம் என்பதில் தி.மு.க.வுக்கு தெளிவு இருக்கும்பொழுது தேவையில்லாமல் தி.முக.. இதில் அதீதமாக ஏன் நடந்துகொள்ளவேண்டும்? அதனால் தி.மு.க.வுக்கு என்ன லாபம்? லாபமில்லாததோடு மட்டுமல்லாமல், வீணான கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டது தானே மிச்சம்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டல்லவா - சம்பந்தப் பட்டவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) இருந்தனர்!

பொதுவானவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை அலட்சியப்படுத்திவிட முடியாதே! நாமாகத் தேடிக்கொண்ட வீண் பழி இது!

வடநாட்டு தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் தி.மு.க.வைப்பற்றித் தூற்றித் தூற்றி செய்திகளையும், கருத்துகளையும் வெளியிடும் நிலைக்கு நாம் ஏன் ஆளாகவேண்டும்?

இதற்குமுன் சட்டமன்றத்தில் பலமுறை அமளிகள் நடந்ததுண்டு. குறிப்பாக 1988 இல் இந்த முறை அதற்கு நேர்மாறானது என்ற அடிப்படையில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டும் தலைமைப் பண்பைப்பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார் (‘விடுதலை’, 18.2.2017).

1988 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜானகி அணிக்கும், ஜெயலலிதா அணிக்கும் பலப்பரீட்சை நடந்தபோது கலைஞர் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அந்தப் பொருளில்தான் திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் இப்பொழுது சுட்டிக்காட்டியிருந்தார்.

இப்பொழுது தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைவர் எப்படி அறிக்கை வெளியிட்டுள்ளாரோ - அதே முறையில்தான் அன்றைக்கும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். சபாநாயகருக்குரிய உரிமை குறித்தும் தெளிவுபடுத்தி இருந்தார் (‘விடுதலை’, 8.1.1988).

செய்தியாளர்கள் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பாராட்டத்தகுந்ததுதானா?

செய்தியாளர்: நீங்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், திராவிட கட்சிகளுக்கு தாய் கட்சியாக உள்ள தி.க.வின் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைவர் கலைஞர் வழி நடத்தாததே சட்டசபையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று தெரிவித்து இருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல, தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுபற்றி நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை (‘முரசொலி’, 21.2.2017, பக்கம் 4).

திராவிடர் கழகத் தலைவர் வைத்த குற்றச்சாட்டு சரியானதல்ல என்ற சொல்லி, அதற்கான காரணத்தையும் விளக்குவதுதான் சரியான விமர்சன முறை. அப்படி செய்திருந்தால், அதன்மூலம் திராவிடர் கழகத் தலைவரின் மதிப்பு எப்படி குறைந்து போகும்?

நாங்கள் மதிக்கும் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் -  நாங்கள் மதிக்கும் ஒரு மூத்த தலைவர் - நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை என்றால் என்ன பொருள்?

பதில் கருத்தைச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக திராவிடர் கழகத் தலைவரின் மதிப்புக் குறையப் போவதில்லை. மாறாக மதிப்புக் குறையும் என்றால், மதிப்பில்லா முறையில் வார்த்தைகளை கருத்துகளைக் கையாள நேரிடும் என்பதுதானே அதன் பொருள்.

மாறுபட்ட கருத்தைச் சொன்னால், அதனை ஏற்கும் பக்குவம் உள்ளவர்தான் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுபோன்ற மூத்த தலைவர் அய்யா வீரமணி.

ஆனால், அவர் சொன்ன பதிலில்தான் சுற்றி வளைத்து, திராவிடர் கழகத் தலைவரை அவமதிக்கும் பொருள் பொதிந்திருக்கிறது என்பது வருத்தமான ஒன்றாகும்.

திராவிடர் கழகம் ஒரு சமுதாய புரட்சி இயக்கம் - தி.மு.க. தேர்தலில் போட்டியிடும் அரசியல் அமைப்பு. இந்த நிலையில், ஒரு சில நேரங்களில் கருத்து மாறுபாடு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததுதான்!

இதற்கு முன்பும் பல நேரங்களில் நிகழ்ந்ததுண்டு. விமர்சனங்கள் கடுமையாகக்கூட இருந்திருக்கின்றன. அதேநேரத்தில், மதிப்பைக் குறைக்கும் பேச்சுக்கே, வார்த்தைக்கே இடமில்லை.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுகூட தொழிற்கல்லூரிகளுக்கு மனு போடும் தகுதி மார்க்கை 50 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாக உயர்த்தியபோது, அதனைக் கண்டித்து ‘விடுதலை’யில் தலையங்கம் தீட்டினார் ஆசிரியர் கி.வீரமணி.

அதனை ஏற்றுக்கொண்டு, ஏற்கெனவே விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தும், அவற்றையெல்லாம் அழித்து விட்டு, புது விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன என்பது எதைக் காட்டுகிறது?

தவறு என்று சுட்டிக்காட்டுவது தாய்க்கழகத்தின் கடமையல்லவா! அண்ணாவை ஏற்போர் இதனையும் ஏற்க வேண்டாமா?

‘‘வீரமணி எங்கு இருந்தாலும் பெரியார் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார்.’’ (‘குமுதம்‘ இதழ் பேட்டி, 3.12.1998).

‘‘பா.ஜ.க.வை ஆதரித்தால்கூட வீரமணி எங்களை மன்னித்து விடுவார். ஏனெனில், ஏற்கெனவே அவர் அ.தி.மு.க.வை மன்னித்திருக்கிறார்.’’ (‘முரசொலி’, 14.4.1998, முதற்பக்கம்).

இப்படிப் பேட்டி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள்தான்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்மீது பற்றும், அவர்தம் எதிர்காலத்தைப்பற்றிய நல் விருப்பமும் கொண்டவர் திராவிடர் கழகத் தலைவர் என்பது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலினை நான் முன்மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று, ‘‘கலைஞர் அறிவிப்பு - காலச் சிலாசாசனம்!’’ என்று அறிக்கை கொடுத்து உச்சி மோந்தவர் திராவிடர் கழகத் தலைவர் (‘விடுதலை’, 8.1.2013).

இப்படி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியதற்காக - அவரின் சகோதரரால்  ‘‘அரசியல் விபச்சாரம் செய்கிறார் வீரமணி’’ என்ற அசிங்கமான கூடா விமர்சனத்துக்கு ஆளானவர்தான் அய்யா வீரமணி. அதற்கு எதிர்வினையாக எந்த ஒரு சொல்லையும் சொல்லவில்லை தமிழர் தலைவர் - அது அவருடைய பெருந்தன்மை.

அதெல்லாம் தெரிந்திருந்துமா ஆசிரியர் அவர்களின்மீது ஆத்திரமும், அவமதிக்கும் மறைமுக சொல்லாடல்களும்?

முகநூலிலும், வாட்ஸ் அப்-களிலும் அசிங்க அசிங்கமாக மலத்தைத் தோய்த்து பதிவு செய்பவர்கள் யார்? யார்? அவர்கள் ‘‘உறவு முறையில்’’  - யார் யாருக்குச் சொந்தம் - எத்தகையவர்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?

தி.மு.க. என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி, பகுத்தறிவுக் கொள்கைகளைப்பற்றி எல்லாம் நாராசமான நடையில் எழுதப்படுவதெல்லாம் தி.மு.க. தலைமைக்குத் தெரியாதா?

இழிவுகளையும், வசவுகளையும் சந்தித்து சந்தித்து, அவற்றை எருவாக்கி வளர்ந்ததுதான் திராவிடர் இயக்கம்!  தந்தை பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் அவை எல்லாம் சந்தனமாலைகளே! தோழர்கள் கோபத்தோடு தலைவரிடம் இவற்றைக் கூறும்போதுகூட, ‘‘பந்தை அடியுங்கள் - காலை அடிக்கவேண்டாம்‘’ என்ற அறவுரை அறிவுரையைத்தான் கூறுகிறார் தமிழர் தலைவர்.

இப்பொழுதுகூட எங்கள் நிலை என்ன தெரியுமா? அ.தி.மு.க.வா - பி.ஜே.பி.யா? என்று கேட்டால், அ.தி.மு.க.தான்; தி.மு.க.வா - அ.தி.மு.க.வா? என்று கேட்டால், எங்கள் ஆதரவும், அரவணைப்பும் தி.மு.க.வுக்குத்தான்!  திராவிடர் கழகம் - கிளைக் கழகமல்ல: தாய்க்கழகம்!

தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வலிமை வாய்ந்த தி.மு.க. தவறான அணுகுமுறைத் தடத்தில் கால் வைத்து தேவையில்லாத கெட்ட பெயரை விலைக்கு வாங்குகிறதே - இதுவரை சம்பாதித்து வைத்துள்ள மக்களின் நல்லபிப்பிராயத்தை இழக்கிறதே என்ற வலியின் அடிப்படையில்தான் தாய்க்கழகம் ‘தவிப்பு’ உணர்வோடு ‘கடிந்து’ கொள்கிறது. இதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டாமா?

இன்னொன்றும் முக்கியம் - திராவிர் கழகம் தனித்தன்மையான சமூகப் புரட்சி இயக்கம்! தனது கருத்தைத் தனித்தன்மையோடு கூறும் தகைமை கொண்டது.

‘குடிஅரசு’ முதல் இதழ் தலையங்கத்தில் (2.5.1925) தந்தை பெரியார் குறிப்பிட்டார்களே,

‘‘நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு’’ என்ற கருத்துதான் எங்களின் என்றென்றுமான நிலைப்பாடு! ஆறுவது சினம்!

-விடுதலை,22.2.17