பக்கங்கள்

வியாழன், 1 டிசம்பர், 2016

ஜாதி பற்றி சுபாஷ் சந்திரபோஸ்


ஜாதியை ஒழிப்பதில் நான் அதிக தீவிர நம்பிக்கை யுடையவன். அது சம்பந்தமாக என்னாலான பிரசாரமும் செய்து வருகிறேன். சமத்துவம், நியாயம் என்ற கொள்கை களையே அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப்படும் புதிய சமூகம், சுதந்திர இந்தியாவுக்கு அறிகுறியாகும்.
சிலர் தீண்டாமையை மாத்திரம் வெறுக்கிறார்களே ஒழிய, சமபந்தி போஜனத்தையும், கலப்பு மணத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அத்தகைய மனோபாவம் நான் கொண்ட வனல்ல. நாம் எல்லோரும் ஒன்று என்றால்  மனிதனுக்கு மனிதன் எவ்வித வேற்றுமையும் இருக்கலாகாது.
எந்த காரணத்தைக் கொண்டு இந்த ஜாதி உண்டாக்கப் பட்டதோ, அது சுதந்திர இந்தியாவுக்கு பொருந்தியதல்ல. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் கல்வி கற்கவும், சண்டைசெய்வதில் பழகவும், சுதந்திரமாகத் தன்னுடைய ஜீவனோபாயத்தைச் சம்பாதிக்கவும் வேண்டிய வசதிகள் இருக்க வேண்டுமென்று நவீன இந்தியா எதிர்பார்க்கிறது.
ஆகையால் எல்லா வகையிலும் ஜாதியை ஒழிக்க வேண்டியது உடனே கவனிக்கப்பட வேண்டிய தாகும். அந்த வகையில் லாகூர் ஜட்பட்டோரக் மண்டலமும், அதுபோன்ற வேறுபல சங்கங்களும் செய்து வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். அவர்களது முயற்சி வெற்றிபெறுமென்றும், சுதந்திர இந்தியாவுக்கு ஒரு புதிய சமூகத்தையும், ஜாதியையம் கொடுத்துதவுவார்களென்றும் நம்புகிறேன்.
(26.10.1930இல் கல்கத்தாவில் திரு.சுபாஷ்சந்திரபோஸ் கூறிய அபிப்பிராயம்)


பார்ப்பனர் சதி
புத்தருடைய காலத்தில் இந்தியாவில் பழைய வைதீக சமயம் பிரபலமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே அதில் புரை ஏற்பட்டு அது தன் உயர் நிலைமை மாறி வீழ்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. அதில் பிராமணக் குருமார்கள் பலவிதமான சடங்குகளையும், பூஜைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.
பூஜைகள் அதிகமானால் குருக்கள் மாருக்குக் கொண்டாட்டம் தானே! ஜாதிக்கட்டுப்பாடு மிகவும் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. குருக்கள்மார் சாதாரண ஜனங்களை மந்திரம், தந்திரம், மாயம், உச்சாடனம் என்று மிரட்டித் தம் வசப்படுத்திக் கொண்டு க்ஷத்திரிய அரசர்களைக் கூட எதிர்க்க ஆரம்பித்தார்கள்.
இவ்வாறாக பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் போட்டி வளர்ந்து கொண்டு வந்தது. பழைய வைதீக சமயத்தில் வந்து புகுந்துவிட்ட குற்றங்களையும் குருமாரின் கொடுமையையும் புத்தர் அஞ்சாது தாக்கினார்.
- நேரு, உலக சரித்திரம், பக்கம் 93.
-விடுதலை,15.5.15

செவ்வாய், 29 நவம்பர், 2016

தினமும் செய்ய வேண்டியவை

_*Life with mobile*_
தினமும் செய்ய வேண்டியவை
1)  சோகத்தை ~ *Delete* செய்யுங்க
2)  சந்தோஷத்தை ~  *save*  செய்யுங்க
3)  சொந்தங்களை~ *recharge* செய்யுங்க
4)  நட்புகளை ~  *Download* செய்யுங்க
5)  எதிரிகளை ~  *Erase* செய்யுங்க
6)   உண்மையை ~  *Broadcast* செய்யுங்க
7)  துக்கத்தை ~  *switch off* செய்யுங்க
8)  வேதனையை ~  *Not reachable* செய்யுங்க
9)  பாசத்தை ~  *In coming* செய்யுங்க
10)  வெறுப்பை ~  *out going* செய்யுங்க
11)   சிரிப்பை ~ *In box* ல் வெய்யுங்க
12)  அழுகையை ~ *out box* ல் வெய்யுங்க
13)  கோபத்தை ~  *Hold* செய்யுங்க
14)  இன்முகத்தை ~  *send* செய்யுங்க
15)  உதவியை ~  *ok* செய்யுங்க
16)  இதயத்தை ~  *vibrate* செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் *Ring tone* சந்தோஷமாக ஒலிக்கும்
*Have a relaxing day everyday*        💐 *Ğöøď* *MöŔñìÑğ* *Ťö* *Æłľ*  😎

ஞாயிறு, 27 நவம்பர், 2016

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்


பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத்கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாகத்தினை  விளைவித்தது !
திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண் டென்று நிலைநாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத்தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.
மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் மகாத் அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.
புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில பாராளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !
- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.     மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.
- தந்தை பெரியார்

மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.
- தந்தை பெரியார்
-விடுதலை,
-விடுதலை,26.6.15

செவ்வாய், 22 நவம்பர், 2016

அண்ணா பதில் சொல்கிறார்


(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)
கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?
பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.
ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.
ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.
சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.
பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.
அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.
இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!
-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947
-விடுதலை,5.6.15

மதத்தில் இடமில்லை அறிவுக்கு


பொதுவாக, மதம் சில கொள்கை களை எடுத்துக்கூறி இதுதான் உண்மை, இதைத்தான் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் பலாத்காரமாக கட்டாயப்படுத்தியும் சாதிக்க ஆரம் பித்தது.
மதத்துக்கு யாவற்றையும் படித்து ஆராய்ந்து தேடித் தெரியக்கூடிய அறிவு என ஒன்று இருப்பதைப் பற்றி கவலை கிடையாது. விஞ்ஞானம் அய்யத்தோடும் தயக்கத்தோடும் பேசுகிறது.
ஏனெனில் விஞ்ஞானத்தின் தன்மையே இதுதான் உண்மை என்று எதையும் சாதிக்க இயலாது. பகுத்தறிவின் துணை கொண்டு எதையும் நன்கு சோதித்து ஆராய்ந்து பார்த்த பிறகே அது ஒன்றை முடிவு கட்ட இயலும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையுமே நான் விரும்புகிறேன் என்பதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை.
-நேரு, உலக சரித்திரம் பக்கம் 346
-விடுதலை,5.6.15

ஞாயிறு, 20 நவம்பர், 2016

மகிசா சுரன் யார்?

ஸ்மிருதிரானிக்கு அர்ப்பணம்! மகிசா சுரன் யார்?

முத்து.செல்வன்
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் தில் மாணவர்கள் சிலரால்  மகிசாசுர விழா கொண்டாடப்பட்டதற்கு, நாடா ளுமன்றத்தில் உரையாற்றிய மாந்த வளத்துறை அமைச்சர் சுமிருதி இரானி,  கண்டனம் தெரிவித்த பின்னணியில் இத்தகைய விளக்கங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. (‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நன்றி: பெங்களுரு பதிப்பு
02-_02_2016)
மகிஷா என்பது அன்றைய மகிஷவூர் பகுதியை ஆண்ட மன்னன் பெயர், அவன் புத்த சமயத்தைச் சார்ந்தவன் என்றும் மாந்த மதிப்பை உணர்ந்தவன் என்றும், சமூகநீதிக்காகப் போராடியவன் என்றும் தன் மக்கள் நலனுக்காகவே ஆட்சி புரிந்தவன் என்றும் அசோகபுரம் என்னும் பகுதியில் வாழும் மக்கள் இன்றளவும் அவனைத் தங்கள் முன் னோன் என்று போற்றி வழிபட்டு வருவதாகவும் மைசூரு மாநகர மன்ற உறுப்பினர் புருசோத்தம் கூறியுள்ளார்.
புத்த சமயத்தை சார்ந்து  மக்கள் நலனுக்காகவே ஆட்சி புரிந்த மகி சனைப் பொறுக்கமாட்டாத  பார்ப் பனர்கள் (பூசாரி வகுப்பினர்) அவனுக்கு அரக்கன் (அசுரன்) முத்திரை குத்தி அவனை மகிசாசுரன் என்று அழைத் தனர்.
மகிசவூர் (மகிஷவூர்  நம்முடைய தமிழ் இலக்கியங்களில் எருமையூர் என்றழக்கப்பட்டது) என்பதே இன்று மைசூரு ஆகும். அவனை அழிப்பதற்குப் பல வகைகளிலும் முயன்று  இறுதியில் அவனைக்  கொன்றுவிட்டு சாமுண் டேசுவரி போரிட்டுக் கொன்றதாகக் கூறிவிட்டனர்.
மகிசனுக்கு என்று தனியாகக் கோயில் ஏதுவுமில்லை என்றாலும் அவனுடைய வம்சாவளியினர் என்போர் ஆண்டுதோறும் சாமுண்டி மலைக்குச் சென்று அவனுடைய சிலையை வழி பட்டு வருகின்றனர். முன்னர்  மகாப லேசுவர் மலை என்று அழைக்கப்பட்ட மலை இன்று சாமுண்டேசுவரி மலை என்று அழைக்கப்படுகிறது..  அவனு டைய நல்லாட்சியின் காரணமாகவே இந்த நகரம் மகிசவூர் என்றழைக்கப் பட்டது என்றும் புருசோத்தம் கூறி யுள்ளார்.
மகிசன் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய நல்லாட்சியையும் புகழையும் பொறுக்க மாட்டாத பார்ப்பனரகள் (பார்ப்பனர் கள் என்று வெளிப்படையாகக் கூறாமல், பூசாரி வகுப்பினர்    என்றே     கூறு கிறது) அவனை அரக்கன் என்று அழைத்தது மட்டுமல்லாமல் அவனைச் சூழ்ச்சியால் கொன்றுவிட்டு,
மகிசாசுர மர்த்தன கதையைக் கட்டிவிட்டனர் அந்தக் கதை எந்தவித ஆதாரமும் இல்லாதது என்றும் மகிச என்னும் நூலாசிரியர் சித்தசுவாமி என்பார் கூறியுள்ளார். மேலும் இந்தப் பகுதிக்கு 1449 இல் மகிசவூர் என்று பெயரிடப் பட்டதாகவும் மகிசனுடைய சிலை மகாபலேசுவர் மலையின் முகப்பில் சிக்கதேவராயரின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதென்றும் கூறுகிறார்.
சித்த சுவாமி மண்டியாவில் உள்ள மாவட்டப் பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஆவார். கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் தலித் நல அறங்காப்பகத்தினர் மகிச விழாவைக் கொண்டாடி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மகிச விழாவை  அரசே கொண்டாட வேண்டும் என்னும் வேண்டுகோளையும் முன்வைத்தனர்.
கருநாடகத்தின் பல பகுதிகளின் மகிச வழிபாடு நடைபெறுகின்றது என்றும், அந்தப் பகுதி வேளாண்குடி மக்களின் வேளாண் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும்  எருமை மாடுகள் இன்றியமையாதவை என்பதால் அவற்றையும் மக்கள் வழிபடுகின்றனர்.
அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற மகிசனுடைய பெயரிலும் அது பொதிந்துள்ளது என்றும் இன்றும் அந்தப் பகுதி மக்கள் விழாக்காலங்களில் எருமைத்தலை உருவம் தாங்கிய தலை யணியை அணிந்து கொள்வது வழக்க மாக உள்ளது என்றும் ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக் கழகத்தில் பழங்குடி ஆய்வு மய்யத்தின் தலைவரராகவுள்ள  கே. எம். மேட்ரி கூறியுள்ளார்.
-விடுதலை ஞா.ம.5.3.16

வியாழன், 10 நவம்பர், 2016

‘‘காகித ஓடம் கடல் அலை மேலே...!''

இம்மாதம் (நவம்பர்) 8 ஆம் தேதி இரவு மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய திடீர் உரை, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு செல்லாது; நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம்.  (கிஜிவி) வங்கி வசதிகள் இயங்காது; நாளை (9.11.2016) வங்கிகள் இயங்காது. அதற்கு மறுநாள் முதல் இயங்கும்.

நாளை (10.11.2016) பழைய இந்த நோட்டுகளை, வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; நேற்றுவரை பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பழைய நோட்டுகளை - இந்த இடைக்காலத்தில் கொடுத்து செலவு செய்தால், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அறிவித்தார்!

இந்த கருப்புப் பணவேட்டையில் திமிலங்கள் சிக்குமோ என்னவோ தெரியவில்லை; நடுத்தர ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், விவசாயத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்கள் இவர்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு இந்த ‘திடீர் அறிவிப்பு’ ஒரு பெரும் ‘சோதனையாகவே’ ஆகிவிட்டது!

நேற்று கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய் சாப்பாட்டுக் கடையில் கொடுத்து, சிற்றுண்டியோ, சாப்பாடோ கூட சாப்பிட முடியாத நிலை; காரணம், கடைக்காரர்கள் வாங்க முடியாத நிலை. பணமிருந்தும் பட்டினி!

மருந்து கடைகளிலும்கூட பற்பல இடங்களில் தெளிவற்ற நிலை. சுங்கச் சாவடிகளில் ஏகப்பட்ட தகராறு. நல்வாய்ப்பாக இன்று முதல் இரண்டு நாள்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

அழுகும் பொருள் விற்பனை யாளர்களுக்கு ஏகப்பட்ட நட் டம்; காரணம் கையில் பணம் உள்ளவர்களால் - 500 ரூபாய் நோட் டினைக் கொடுத்தால் ஏற்க மறுக்கும் நிலை இருப்பதால், விற்பனையோ இல்லை. மீன் விற்காமல் கண்ணீர் கடல்தான்!

கையில், பையில் உள்ள பணத் தால் பசி தீர்க்க முடியவில்லை; சில மணிநேரத்தில் அது வெறும் ‘காகிதமாகி’ மதிப்பிழந்து விட்டது!

குறுக்கு வழிகளிலோ, லஞ்சம் பெற்று கோடியாய் குவித்தவர்கள் நிலை எப்படியோ - அவர்கள் இதற் குள்ளாக மாற்றுவழி கண்டுபிடிக் காமலா இருப்பார்கள்!

என்றாலும், சில நாள்களுக்கு முன் நாம் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனை’ கட்டுரையில் ‘பணத்தால் எதனையும் வாங்க முடியுமா?’ என்று கேட்டிருந்தோம். பதில் கிடைத்துவிட்டது பார்த்தீர்களா?

அதற்குப் பிறகு நம் மக்கள் இப்போது ‘காகித ஓடம் கடல் அலைமேலே’ என்பதுபோல, கையில் பணம் இருந்தும், வயிற்றில் பசி, மனதில் வேதனை என்பனவற்றை அனுபவித்துக் கொண்டுள்ளனர்!

மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் பட்டினி கிடக்கிறார்கள் என்றவுடன், மனித நேயம் மிகுந்த திருநெல்வேலி உணவு விடுதியாளர் ஒருவர் அத்தகையவர்களுக்கு இலவசமாக கட்டணமின்றி உணவு அளித்துக் காப்பாற்றியுள்ளார் என்ற செய்தி மனிதநேயம் வற்றிப் போகவில்லை என்பதை உலகுக்குத் துல்லியமாய் உணர்த்தியது!

இதற்கிடையில், நேற்றுமுன்தினம் 8 ஆம் தேதி விடிவிடிய நகைக் கடைகளில் இடையிலாத வியாபாரம் - தங்கம் விலை திடீர் ஏற்றம்!

அப்போது பொன் மேலும் மின் னியது; பணம் சிறுத்தது, சிணுங்கியது!

ஒரு சில மணிநேரத்தில், மக்கள் பொருளாதார ‘சூறைப்புயலில்’ சிக் கியதுபோல் உணர்ந்த நிலை!

பின்னால் ஏற்படப்போகும்  ஆரோக்கியத்துக்கு இப்போது இத்தகைய பொருளாதார ‘விக்கல்கள்’ தவிர்க்க இயலாதவை என்று பொரு ளாதார நிபுணர்கள் அலசி ஆராய்ந்து கூறினாலும், அன்றாடத் தொழில் வருவாயில் வாழும் அடிமட்ட மக்கள் - திடீர் என்று பணம் வெற்று காகிதமாய் மதிப்பிழந்து விட்டதே என்று அவலத்தில் சிக்கி அழுது கொண்டே கூறுகிறார்கள்.

எப்படியானாலும், பணத்தைச் சேர்த்துக் குவித்து, கணக்கில் காட்டாத சுறாக்களுக்கும், திமிலங்களுக்கும் சரியான வலையாய் அமைந்தால்தான் எண்ணிய இலக்கை எட்ட முடியும்!

இடையில் சிக்கி அவதியுறும் நடுத் தட்டு மக்கள் கடல்தான் எப்போதும் போல்! உ.பி.யில் நோட்டு எரிப்பாம்!

என்ன உலகம்! எனவே, குறிக் கோள் இன்றி பணம் பணம் என்று அலையாதீர்! பிறகு இப்படி பணத்திற்கு திடீர் மாரடைப்புபோல் ஏற்பட்டால், அலறாதீர் என்பதே இந்த பணத்தாக்குதல் மூலம் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகும்!

புரிந்துகொள்ளுவோமாக!
-விடுதலை,10.11.16