பக்கங்கள்

ஞாயிறு, 19 ஜூலை, 2015

கடவுள் சக்தி இவ்வளவுதான்


சதுரகிரி மலையில் உள்ள கோயிலுக்குச் சென்றவர்களில் 10 பேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்
சிறீவில்லிபுத்தூர், மே 18_- விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை உள்ளது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் அங்கு பக்தர் கள் சதுரகிரி மகாலிங் கத்தை தரிசனம் செய்து வருவார்கள். நேற்று விடு முறை நாளில் அமாவாசை வந்ததால் பல்வேறு பகு திகளில் இருந்தும் ஏராள மானோர் சதுரகிரி மகா லிங்கம் கோவிலக்கு வந்து இருந்தனர்.
இவர்களில் பலர் மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை நீர்வீழ்ச்சி யில் நேற்று மதியம் மகிழ்ச் சியாக குளித்துக்கொண்டி ருந்தனர். மதியம் சுமார் ஒரு மணி அளவில் திடீ ரென்று அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அங்கு குளித்துக்கொண்டு இருந் தவர்கள் அலறியடித்துக் கொண்டு அருவியின் கரைக்கு சென்று தப்பி னார்கள்.
ஆனால் மறுகரையில் உள்ள அடிவாரப் பகு திக்கு வரமுடியாமல் 200-க்கும் மேற்பட்டவர்கள் தவித்தனர். இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தாணிப்பாறை பகுதிக்கு விரைந்தனர். காட்டாற்று வெள்ளத் தில் சிக்கி தவிப்பவர்களை மீட்க அவர்கள் நட வடிக்கை மேற்கொண்ட னர்.
இவர்கள் தவிர சதுர கிரி மலை மீது பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரம் பேர் தங்கி இருப் பதும், அவர்களும் வெள் ளத்தை தாண்டி கீழே இறங்கி வரமுடியாமல் தவிப்பதும் தெரியவந்தது. வெள்ளத்தில் சிக்கியவர் களை கயிறு மூலம் மீட் புக்குழுவினர் மூலம் மீட்டனர்.
மலையில் உள்ள மரங் களில் ஏராளமானோர் மரக்கிளைகளை பிடித்து தொங்கியபடி இருப்பதாக தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் 8 குழுக்களாக பிரிந்து மலைப்பகுதிக்கு சென்று மீட்புப் பணி களை மேற்கொண்டனர்.
சதுரகிரி மலையில் உள்ள பிலாவடி கருப்ப சாமி கோவில் மற்றும் விநாயகர் கோவில் அருகே மொத்தம் 10 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரி கிறது. இதில் ஒரு இளை ஞரின் உடலை மலையில் இருந்து இறங்கி வந்தவர் கள் மீட்டு மீட்புக்குழு வினரிடம் ஒப்படைத்தனர். அவர் வத்திராயிருப்பைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 19) என்பது தெரியவந்தது. இது தவிர மேலும் 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
வேறு உடல்கள் எது வும் கிடக்கிறதா? என்று மீட்புக்குழுவினர் கண் காணித்தனர். ஆனால் உடல் எதுவும் கிடைக்க வில்லை. மீட்கப்பட்ட வர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து அரசு பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர். தகவல் கிடைத்து அமைச் சர் கே.டி.ராஜேந்திரபா லாஜி, ஆட்சியர் ராஜா ராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட் டனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் காட் டாற்று வெள்ளம் பெருக் கெடுத்து 125-க்கும் மேற் பட்டோர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக