பக்கங்கள்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

மெக்கா மசூதி மீது கிரேன் சரிந்து விபத்து: சாவு எண்ணிக்கை 107 ஆக உயர்வு


மெக்கா, செப். 12_ சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது மிகப்பெரிய கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்த தில் 2 இந்தியர்கள் உட்பட 107 பேர் துடிதுடித்து பலியா கினர். 230-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 9 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண் டவர்கள் என்றும், அவர் களை பாதுகாக்கும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வ ரூப் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூர விபத்து குறித்து அங்குள்ள அதி காரி ஒருவர் கூறுகையில், மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இத னால், நேற்றிரவு (இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு) மசூதியை சுற்றி லும் ஏராளமான மிகப் பெரிய கிரேன்கள் நிறுத் தப்பட்டிருந்தன. இந்நிலை யில், வெள்ளிக்கிழமை பிற் பகல் தொழுகைக்காக ஏரா ளமானோர் வந்திருந்தனர்.
அந்த நேரம், பலத்த இடி யுடன் மழையும் வலுத்து பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் ஒரே இடத் தில் திரண்டிருந்தனர். அப் போது மூன்றாவது தளத் தில் நிறுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து மசூதியின் கூரையை உடைத்துக் கொண்டு அங் கிருந்தவர்கள் மீது விழுந் தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 107 பேர் துடிதுடித்து பலியாகினர். காயமடைந்த 238 பேர் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
விபத்துக்கு முன்னதாக கிரேன் இருக்கும் இடத் தில் மின்னல் தாக்கும் நிழற்படங்கள் சமூக ஊட கங்களில் பரவி வருகிறது. எதிர்பாராத இந்த கொடூர விபத்தால் மசூதியே ரத்த வெள்ளமாகக் காட்சியளித் தது. இந்த விபத்து குறித்து சவுதி அரசு தீவிர விசா ரணை நடத்தி வருகின்றது. அதே வேளையில், விபத் தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படை யில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், மீட்புப்பணி அதிக வேகத்தில் நடை பெற்று வருகின்றது. 
-விடுதலை,12.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக