பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஏன் தாழ்ந்தோம்? - தாகூர்


மாஸ்கோவிலுள்ள புரொபசர் பீரிட்ரோ என்பவர் கவி. தாகூருக்கு கீழ்க்கண்ட தந்தியை அனுப்பினார். (ஆண்டு 1929)
ருசியாவில் கைத்தொழில், விவசாயம், விஞ்ஞான ஆராய்ச்சி ஸ்தாபனங்கள், சர்வகலாசாலைகள், பாட சாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைவதற்கு நீங்கள் என்ன காரணம் கூறு
கிறீர்கள்?
அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்குள்ள வேலைத் திட்டம் என்ன? அவைகளுக்குத் தடை யாது?
இதற்கு தாகூர் அவர்கள் அனுப்பிய தந்தி:
உங்களுடைய வெற்றிக் காரணம் தனிப்பட்ட நபர்களிடமிருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததேயாகும். நாங்கள் கீழ்நிலையில் இருப்பதற்கு எங்களுக்கு சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள பைத்தியக் காரத்தன்மைகளும் வெறிபிடித்த தன்மைகளும், கல்வியில்  முன்னேற்றம் அடையாததும்தான் காரணமாகும்.
குடிஅரசு 29.11.1931

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக