பக்கங்கள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

தலித் மக்கள் தண்ணீர் எடுக்க அனுமதி

கருநாடக மாநில கிராமத்தில் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி: தலித் மக்கள் தண்ணீர் எடுக்க அனுமதி
குருவங்கா, ஜூலை 21_ கருநாடகத்தின் குருவங்கா கிராமத் தில் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், கிராம பொதுக் குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கவும், கோயிலுக்குள் நுழையவும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள குருவங்கா கிராம பொதுக் குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க வும், கோயிலுக்குள் நுழை யவும் அனுமதி மறுக்கப் பட்டு வந்தனர்.
இதையடுத்து ஹாசன் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி என்.ஆர். புருஷோத்தம், மாவட்ட துணை காவல் கண்காணிப் பாளர் பீமசங்கர் எஸ். குல்ட் உள்ளிட்ட அதிகா ரிகள் குருவங்கா கிராமத் துக்கு சென்று பெரும் பான்மை வகுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குருவங் காவில் உள்ள பொதுக் குளம் அனைவருக்கும் சொந்தமானது. இந்த குளத்து நீரை தலித் மக் கள் தொடக் கூடாது என ஊர் கட்டுப்பாடு விதிப் பது சட்டப்படி குற்றம். இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையடுத்து தலித் மக்களை அழைத்து வந்து குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். இதேபோல் அங்குள்ள மஹாதேவரய்யா கோயி லுக்குள் தலித் மக்கள் நுழைந்து வழிபாடு நடத் தவும் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி என்.ஆர். புருஷோத்தம் கூறும் போது, தலித் மக்கள் தற்போது அச்சமின்றில் குளத்தில் இறங்கி தண் ணீர் எடுக்கின்றனர். இதை தடுக்க முயன்றால் அவர் கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-விடுதலை,21.7.15

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக