பக்கங்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பகுத்தறிவு வினாக்கள்


#உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

#நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

#குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

#எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

#எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

#ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

#அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

#அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

#முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

#ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

#மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

#நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

#எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

#அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

#அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

#பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

#சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

# தட்டுங்கள்! திறக்கப்படும்!!! என்றால் எதற்காக சாத்தி வைத்தீர்கள்..??? தட்டினால் தான் திறக்கும் என்று சொல்லும் கடவுள் நல்லவனா, கெட்டவனா...???

#தேடுங்கள்! தரப்படும்!!! என்றால் கண் இல்லாதவன் எப்படி தேடுவான்...??? முதலில் யார் அதை ஒளித்து வைத்தது...??? ஒளித்துவைத்தவன் பதுக்கல்காரன் தானே...???

#கேளுங்கள்! கிடைக்கும்!!! என்றால் ஊமை எப்படி கேட்பான்...??? கேட்டால் தான் கிடைக்கும் என்று சொல்லும் கடவுளை நான் ஏன் வணங்கவேண்டும்...???

#வாதை உன் கூடாரத்தை அணுகாது!!! என்றால் நான் என் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அணுகிவிடுமா...??? என் கூடாரத்தை மட்டும் அணுகாமல் இருப்பதற்கு பதிலாக மொத்த உலகத்தையும் அணுகாமல் இருந்தால் நல்லது தானே...??? அப்படி என்றால் இதை சொல்லும் கடவுளுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லையோ...???

#ஆண்டவர் உன்னைப் பிடித்துள்ள பிசாசுகளை விரட்டுவார்!!! என்றால் பிசாசு என்னைப் பிடிக்கின்ற போது ஏன் தடுக்கவில்லை...??? பிசாசுகளை உருவாக்கிவிட்டு அதை என்னை போன்றவர்களைப் பிடிக்கவும் செய்துவிட்டு ஏன் விரட்டவேண்டும்...??? அதற்குப் பதிலாக பிசாசுகளைப் படைக்காமலேயே இருந்திருக்கலாமே...???

#நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49). இது இயேசு அவர்கள் சொன்னதாக விவிலிய நூல் குறிக்கிறது. தன்னால் சுயமாய்ப் பேசத் தெரியாதவனை ஏன் நான் பின்பற்றவேண்டும்...??? தன்னால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத ஒருவனை இறைத்தூதனாக அவனது பிதா அனுப்பினார் என்றால் அந்த பிதா எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பான்...???
# சாமிக்கு அலகு குத்தி நிவர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஏன் எந்த எலும்பும் இல்லாத கன்னத்தின் பகுதியில் குத்துகின்றனர்...??? கொஞ்சம் பின்னே தள்ளி காதுக்கு கீழே குத்திக்கொள்ளலாமே...??? அப்படி குத்தினால் உயிர் போய்விடும் என்று தெரிந்துதானே செய்வதில்லை...??? கன்னத்தில் அலகு குத்துவதுபோல் கழுத்திலும் குத்திக்கொள்ள துணிச்சலுண்டா...???

# இந்த அலகு குத்திக்கொள்வதைப் பரப்பியதே ஆரியப் பார்ப்பன நாய்கள் தான்... இதுவரை கடவுளை வைத்து பிழைப்பு நடத்தும் எந்த பார்ப்பனாவது அலகு குத்திக்கொண்டு ஆடியதுண்டா...???

# தீ மிதிக்கும் திருவிழாவில் எரிந்த நெருப்புத்துண்டுகளில் நடந்து போகும் பக்தர்கள் நெருப்பில் காய்ச்சிய கம்பிகளை வைத்தால் மிதித்து நடப்பார்களா...??? நெருப்பை மூட்டியதும் எரிகின்ற நெருப்பில் நடந்து செல்வார்களா...??? முடியாது! ஏன்..? இதை அறிவியல் தெளிவாக விளக்குகின்றது. விறகடுப்பில் இருந்து விழும் நெருப்புத்துண்டுகளை கையாலேயே எடுத்து உள்ளே போட முடியும். ஆனால், அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தின் மூடியைத் தொடக்கூட முடியாது. துணியை வைத்து தான் எடுக்க முடியும். நெருப்புத்துண்டை சுற்றி உருவாகிக்கொண்டிருக்கும் நீறு வெப்பத்தைக் கடத்தாது. அதனால் அதை துரிதமாக எடுத்து உள்ளே போட்டுவிட முடிகிறது. நெருப்பால் உருவாகும் வெப்பத்தை பாத்திரம் எளிதாக கடத்துகிறது. அதனால் அதை தொட்டால் சுட்டுவிடுகிறது.

# தீயில் தன் உடலை வருத்துவதுதான் நிவர்த்திக்கடன் என்றால் மிகச்சிறப்பாக தீக்குளிக்கலாமே...??? இல்லையென்றால், குறைந்தபட்சம் நெருப்பில் சுட்ட கம்பிகளை தரையில் கிடத்தி அவைகளின்மீது நடந்து நிவர்த்திக்கடனைச் செலுத்தலாமே...??? இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் இல்லையா...??? காட்டுமிராண்டித்தனம் இல்லையா...??? எந்த பார்ப்பனனாவது தீ மிதித்து நிவர்த்திக்கடன் செலுத்திக் கண்டதுண்டா...??? குறைந்தபட்சம் மொட்டையாவது அடித்ததுண்டா...???

# உலகத்தைக் கடவுள் தான் படைச்சார் என்று சொல்லுவார்கள்! அப்படியென்றால் அந்த கடவுளை யார் படைத்தார் என்று கேட்டால் கடவுளை யாரும் படைக்க முடியாது. கடவுள் தானக தோன்றியவர் என்று சொல்வார்கள். கடவுள் தானக தோன்றுவார் என்றால் உலகமும் தானாக தோன்றாதா...???

# பிள்ளையாருக்கு இந்த நாடு முழுதும் பால் ஊற்றி வழிபடுகிறீர்களே! எந்த ஒரு இடத்திலயாவது ஒரு பசித்த பச்சிளங்குழந்தைக்கு ஒரு பிள்ளையாராவது((அது தான் நிறைய பிள்ளையார்கள் உண்டே! அந்த பிள்ளையார் இந்த பிள்ளையார் என்று))பால் கொடுத்ததுண்டா...???

# ஒரு இந்து, இயேசு கிறித்துவையும் அல்லாவையும் நம்புவதில்லை! ஒரு கிறித்தவர், இந்துக்கடவுள்களையும் அல்லாவையும் நம்புவதில்லை! ஒரு முகமதியர், இந்துக்கடவுள்களையும் இயேசு கிறித்துவையும் நம்புவதில்லை! ஒரு நாத்திகர் இவற்றில் எவற்றையும் நம்புவதில்லை!!!

# கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்றால் உலகின் ஒருபகுதி நல்ல வளமாகவும் மறு ஒருபகுதி பாலைவனமாகவும் இருப்பது ஏன்...??? எல்லாம் சேர்ந்ததுதான் உலகம் என்று சொல்வார்களானால், பாலைவனத்தில் ஏன் உயிர்களைப் படைத்து வாட்டியெடுக்க வேண்டும்...???

# உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கடவுள்தான் படைத்தார், படைக்கின்றார், படைப்பார் என்றால் குருடன், செவிடன், முடவன், அரவாணி, பிச்சைக்காரன், விலைமாதுக்கள் என்று ஏன் படைக்கவேண்டும்...???

# கடவுளை வணங்கினால் பாவங்களை மன்னிப்பார் என்றால் நான் பாவம் செய்யும்போது தடுக்காமல் செய்யவிட்டுவிட்டு ஏன் மன்னிப்பு கேட்க வைத்து மன்னிக்க வேண்டும்...???

# மதுக்கடைக்கு உந்துருளியில் செல்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு தடுக்காமல் அவர்கள் மது அருந்திவிட்டு வரும்போது அவர்களிடம் தண்டம் கேட்கும் காவல்துறையைவிடவும் கேடுகெட்டவரா கடவுள்...???

# மனிதனைப் படைத்த கடவுள் பாவம் செய்யும் மனநிலையை அவன் சிந்தனையில் ஏன் செலுத்தவேண்டும்...???

# செய்த பாவத்திற்கு உண்டான தண்டனை என்றால் பிறக்கும்போதே ஒரு குழந்தை என்ன பாவம் செய்தது...??? அதை ஏன் கண்பார்வை இல்லாமலோ, கேட்கும் திறம் இல்லாமலோ, கை கால்கள் இல்லாமலோ படைக்க வேண்டும்...???

# கடவுளின்றி இந்த உலகில் அணுவளவும் அசையாது என்றால் செய்த பாவத்திற்கு முதல் கரணியம் கடவுள் தானே...???

# முதல் குற்றவாளிக்கு என்ன தண்டனை...??? யார் கொடுப்பது...???

# உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கடவுள் தான் படைத்தார் என்றால் எந்த ஆடும் மாடும் புலியும் சிங்கமும் கரடியும் தக்காளியும் மிளகாயும் ஏன் கடவுளை வணங்குவதேயில்லை...??? மனிதன் மட்டும் ஏன் விழுந்து விழுந்து வணங்குகிறான்...??? ஏன் என்றால் ஒரு சாரார் எந்த வேலையும் செய்யாமல் கடவுள் பெயரால் ஏமாற்றி வாழவே இந்த புளுகு மூட்டைகளை எல்லாம் உங்கள் சிந்தையில் செலுத்திவிட்டனர்...!!!

# கடவுளை மறுப்பது என்பது பகுத்தறிவே கிடையாது! அது முட்டாள்தனத்தை, மூடத்தனத்தை மறுக்கும் முயற்சி மட்டுமே!
-கட்செவி, தாம்பரம் மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக