பக்கங்கள்

புதன், 3 ஏப்ரல், 2019

லாலா லஜபதி கூறுகிறார்



"எந்த ஜன சமுகத்தில் நாளதுவரை யாராவது ஒருவரு டைய கடவுள் பக்தியைத் தெரிவிப்பதற்கு நெற்றியில் நாமம் முதலிய குறிகள் நீண்டோ வட்ட வடிவமாகவோ இருக்க வேண்டியது அவசியம் என்று கருதப்படுகிறதோ அந்த ஜன சமுகத்தில் அரசியல் சுதந்திரத்தை பரவச் செய்வது ஒருக்காலும் முடியாத காரியம். மத சம்பந்தமாகவோ, ராஜிய சம்பந்தமாகவோ, சமுக சம்பந்தமாகவோ மற்றும் வேறு சம்பந்தமானாலும் சுதந்திர பிரச்சாரம் செய்ய முற்பட்டால் அதில் முதலாவதாக மனித சுதந்திரம் கொஞ்சமாவது வெளிப்பட வேண்டும்.

எந்த மதத்தில் பகுத்தறிவோடு யோசனை செய்யும் மனோபாவத்திற்கு இடம் சற்றேனும் இல்லையோ அதில் ராஜிய சுதந்திர நோக்கத்தைப் புகுத்தல் அசாத்தியம். இல்லாவிட்டாலும் நிச்சயமாக சுலபத்தில் சாத்தியமாகக்கூடிய காரிய மல்ல என்றே கூறுவேன்.

- லாலா லஜபதிராய் (திராவிட நாடு, 17.10.1948

- விடுதலை ஞாயிறு மலர், 23. 3 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக