சிந்தனை செய்வோம்

பக்கங்கள்

  • பகுத்தறிவு உலகு

திங்கள், 12 டிசம்பர், 2022

பா.ஜ.க. விற்கு 101 கேள்விகள் - சு.வெங்கடேசன் எம்.பி.


பதிலடிப் பக்கம்
  December 12, 2022 • Viduthalai

பா.ஜ.க. விற்கு 101 கேள்விகள்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

சு.வெங்கடேசன் எம்.பி.


பா.ஜ.க. அனுதாபிகளாகவே இருந்தாலும்,  இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!.

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்கள் யாரிடமாவது கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?

1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத் தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே பாலியல் வன்கொடுமை புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப் படுவதும் ஏன்?

மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் ஊதியம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி நன்கொடை தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள்?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறிய வுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனைகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறையீடு செய்யப் படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட இன்று வரை மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டிய லைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில்  பாதையோரம் கடை வைத்து சுருக்குப் பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க் கத்தின் சேமிப்புப் பணங்களை, டீமானடைசேஷன், செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் ரகசியம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத் தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா? 

11. கடந்த தேர்தலில் கைப்பற்றப்பட்ட 3 கண் டெயினர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப் படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிகைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியா மல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடு களை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வர வில்லை? வந்தது  எனில் விவரமென்ன ?  எவ்வவளவு?

13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவ ரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடு களில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பயணம் இந்தியா விற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகி விடுமா?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப் பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு இழப்பை அடைந்து எப்படி? இன்று ரிலையன்சுக்கும், அதானிக்கும் விற்கப்படு வது எப்படி? அரசு விமான நிலையங்களும், துறை முகங்களும் இன்று அதானி விமான நிலையங்களும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி?

16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப் பட்டிருக்கின்றன?

17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் சுங்கக் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்கு வது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். ‘பாஸ்டேக்' என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள்?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக் கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் ரகசியம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்அய்சி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் கார ணம் என்ன? எல்அய்சியில் எந்த விதமான இழப்பு ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் ரகசியம் என்ன? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன?

21. மாநிலங்களின் ஜி.எஸ்.டி. பங்குகள் எங்கே மாயமானது? 

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜக வில் இணைந்து வருகிறார்களே ஏன்? ரவுடிகளின், பாலியல் பலாத்கார காவாலிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா? 

23  PM. Care  collection 

எவ்வளவு?  என்ன கணக்கு?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை. 

ஆனால் நம்புங்கள்..

மோடி புனிதர்,  வலுவானவர்.

பாஜக உத்தமர்களின் கட்சி!

பா.ஜ.க 8 வருட ஆட்சியில்

கீழே உள்ள தகவல்களில் ஏதாவது ஒன்று தவறாக இருந்தாலும் பிஜேபி நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு

2-மருந்து பொருள் விலை உயர்வு

3-ரயில் கட்டண விலை உயர்வு

4-சமையல் எரிவாயு விலை உயர்வு

5-புதிய வரிகள்

6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்

7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்

8-ரூ.500-1000 தடை மற்றும் வேலை இழப்புகள்

9-ரூபாயின் மதிப்பு

10- மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்

11- வெளியுறவுக் கொள்கை

12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்

13- உதய் மின்திட்டம்

14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்

15- அஞ்சல் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்

16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு

17- அருணாசலப் பிரதேச ஆட்சிக் கலைப்பு

18- ராணுவத்திற்கான உணவில் முறைகேடு

19- சீனப்பட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு

20- பலுசிஸ்தான் தலையீடு

21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்

22- ஓய்வூதிய வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்

23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்

24-ஜி.டி.பி குளறுபடி

25-புதிய வங்கி கட்டணங்கள் -ஆதார்

26-வெளிநாட்டு நேரடி முதலீடு

27-தூய்மை இந்தியா திட்டம்

28-மேக் இன் இந்தியா

29-டிஜிட்டல் இந்தியா திட்டம்

30-அணு உலை

31-புல்லட் ரயில்

31-நிலம் கையகப்படுத்தும் மசோதா

33-ஸ்மார்ட் சிட்டி

34-ஹிந்தி திணிப்பு

35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்

36-நீதிபதிகள் நியமனம் தாமதம்

37-ஜி.எஸ்.டி.

38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்

39-IT ஊழியர்கள் பணி நீக்கம் 

40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு

41-கல்புர்கி கொலை

42-ரோஹித் வெமுலா

43-ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகச் சர்ச்சைகள்

44-வருண் காந்தி - ராணுவ ரகசியங்கள்

45-ரகுராம் ராஜன் மாற்றம்

46-ஜல்லிக்கட்டு

47-உத்தராகண்ட் சீனா ஊடுருவல் 15 கி.மீ.

48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா? தொடர் ராணுவ வீரர்கள் பலி

49-ஜியோ சிம் விளம்பரம்

50-லலித் மோடி

51-வியாபம் ஊழல்

52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ரூபாய் ஊழல்

53-சுரங்க ஊழல் - மகாராட்டிரா & கருநாடகா

54-தனி விமானம் ரூ.8000 கோடியில்

55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை

56-1.5 லட்சத்தில் ஆடை

57-பாகிஸ்தானுக்கு திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்

58-பள்ளிப் பாடப் புத்தகங்களில் வரலாறு திரிப்பு

59-முக்கிய பிரச்சினைகளில் மவுனம்

60-பல்வேறு பா.ஜ.க. உறுப்பினர்களின் வெறுப் புணர்வு செயல்பாடுகள்

61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண்கள் பற்றிய கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.

62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச் சராக இருந்த போது

62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM

64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்

65-பதில் இல்லாத தகவல் அறியும் உரிமைச் சட்டம் - மோடி கல்வித் தகுதி

66-ஒன்றிய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை

67-தேச பக்தி நாடகங்கள்

68-மேகாலயா ஆளுநரின் காம லீலை

69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி

70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு

71-சமஸ்கிருதத் திணிப்பு

72-புதிய கல்விக் கொள்கை

73-பொது சிவில் சட்டம்

74-கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்

75-மாட்டுக் கறி தடை

76-மாட்டுக் கறி கொலைகள் - அக்லாக், உனா (குஜராத்)

77-சிறீசிறீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்

78-அயோத்தி ராமர் கோவில்

79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு

80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா

81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை

82-டில்லி விவசாயிகள் நிர்வாண போராட்டம்

83-அதானிக்கு மட்டும் ரூ.72,000 கோடி கடன்

84-SBI மினிமம் பேலன்ஸ் ரூ. 5000

85- சிறுபான்மையினர் விரோத போக்கு

86-மாட்டு அரசியல் 

87- சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டவர்களும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்

88-நீட் தேர்வு

89-ரேஷன் மானியம் நிறுத்தம் .

90 ஆதார் அட்டை குழறுபடிகள்-

91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது 

92 கரோனா சொதப்பல்கள் பலரை கொலை செய்தது

93 CAA - NRC - CAB 

94 68000 மார்வாடிகளுக்கு தள்ளுபடி  - மற்றவர்களுக்கு பட்டை

95 HB

96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்ணையும் உயிருடன் கொளுத்திக் கொன்றது.  

97 பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது

98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை ஆட்டையைப் போட்டது.

99 பழங்குடி மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த 84 வயது முதியவர் ஸ்டேன் சாமி என்பவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத் தது. பிணைக் கூட கொடுக்காமல் சிறையிலேயே மரணிக்க வைத்தது.

100 பிரான்சிலிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தர விட்ட பின்னும் இன்னும் இங்கே வாய்மூடி மவுனம் காப்பது.

101 ஒட்டுக் கேட்க மென்பொருள்  வாங்கிய விபரம்?

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:39 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆர் எஸ் எஸ், எம் பி, கேள்விகள்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் தலைமையில் 'கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு' செயல்முறை விளக்கம் :

 

October 26, 2022 • Viduthalai

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்பு!


சென்னை,அக்.26- கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சி  நேற்று (25.10.2022) மாலை 5.00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் மற்றும் பகுத் தறிவாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்றார். 

கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது - கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் நடைபெற்ற இந்நிகழ்வில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங் கப்பட்டது. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, கிரகண மூடநம்பிக்கைகளை முறிய டிக்கின்ற இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் பகுத் தறிவு, அறிவியல்  மனப்பான்மை பரப்பப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கழகத் துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையில்,

2022ஆம் ஆண்டிலும் கிரகண மூடநம்பிக் கையை முறியடித்திட இதுபோன்ற செயல் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. பத்திரி கைகள், தொலைக்காட்சிகள் கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை பரப்பி வருகின்றன. 

சூரியன் நட்சத்திரம், சந்திரன் துணை கிரகம், பூமி முதன்மை கிரகம் என்று உள்ள நிலையில், அவர்கள் கூறுகின்ற கிரகங்கள் பட்டியலிலேயே   பூமி இல்லை. பத்திரிகைகள் அறிவியல் உண்மையை எடுத்துரைக்காமல், உண்மைக்கு மாறான பொய்களை கட்டுக்கதைகளை கூறிவருகின்றன. கிரகண மூடநம்பிக்கையை முறியடித்திட 'விடுதலை' தவிர எந்த ஏடும் செய்திகள் வெளியிடவில்லை. 

தந்தைபெரியார் சொன்ன 3 பேய்கள், 5 நோய்களில் பத்திரிகையும் உள்ளது. தந்தை பெரியார் சொன்னது இன்றும் அப்படியே உள்ளது. ராகு கேது என்கிற பாம்புகள் சந்திரனை விழுங்குகின்றன என்கிற மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டு உள்ளன. அறிவாளிகள் நாட்டில் குறைவாகத்தான் இருப்பார்கள். அவர்கள்தான் இங்கே வந்துள்ளார்கள். கிரகண நேரத்தில் உணவை உண்டு மூடநம்பிக்கையை முறியடிப்போம் என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இதேபோன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கும் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில், இறையன்-திருமகள் பெயர்த்தியும், இசையின்பன், பசும்பொன் மகளும், பகலவனின் வாழ்விணையருமான சீர்த்தி நிறைமாத கர்ப் பிணியாக கிரகண மூடநம்பிக்கையை முறிய டிக்கும் செயல்முறை நிகழ்வில் துணிவுடன் பங்கேற்றார். அவரும் நேற்று நடைபெற்ற கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கும் செயல் முறை நிகழ்வில் கலந்துகொண்டதோடு, தன் மகன் மகிழனுடன் தானும் நலமுடன் இருப்பதை எடுத்துக்கூறினார்.

எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளி கோ.சொக்கலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த எழிலரசி ஒன்பது மாத கர்ப்பிணியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், குழந்தை பிறந்த பின்னரும் அதே மகிழ்ச்சியுடன் இருப்போம் என்றார். 

தோழர் சத்தியா பக்தி மிகுந்த குடும்பத்தில் இருந்து பகுத்தறிவுள்ள வாழ்விணையருடன் இணைந்ததால், தானும் துணிவுடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகவும், கிரகணம் குறித்து எவ்வித அச்சமும் தனக்கு இல்லை என்றும் கூறினார். கர்ப்பிணிகள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மேனாள் முதல்வர் ச.இராஜசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே..செ.கோபால், சி.வெற்றிசெல்வி, நூர்ஜகான், பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், செயலாளர் விடுதலை நகர் ஜெய ராமன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபன்னா, இளைஞரணி சோ.சுரேஷ், மாணவர் கழகம் பார்த்திபன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், கோவி.கோபால், மாணிக்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுபபாளர்கள், புதுமை இலக்கிய தென்றல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

சூரியகிரகணம் உண்மையும், கட்டுக்கதைகளும்

சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கைளை முறியடிக்கும் நிகழ்ச்சி எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அன்னை மணியம்மையார் அரங்கில், ”சூரியகிரகணம் உண்மையும், கட்டுக் கதைகளும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கத்தின் மாநில ஆலோசகர் முனைவர் கு.இரவிக்குமார் படக்காட்சிகளுடன் கடந்த 2000 ஆண்டுகளாக சூரியகிரகணம் பற்றிய உலக அறிவியல், இந்திய துணைக்கண்டத்தில் நிலவிய அறிவியல், வைதீக மதம் அதற்கு ஏற்படுத்திய முட்டுக் கட்டைகள், அதனால் ஏற்பட்ட பின்னடைவு களை மிகவும் சுவையாக, பள்ளி மாணவர் களுக்கும் புரியும்படியாக விளக்கினார். முக்கியமாக பஞ்சாங்கமாக இருந்தாலும் சரி, வைதீகமாக இருந்தாலும் சரி  'What'  என்பதற்கு பதில் சொல்லிவிடுவார்கள். அவர்கள் மட்டு மல்ல 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்கூட சொல்லிவிடுவார்கள். அதாவது, இது என்ன (What)  என்று கேட்டால், இது சூரியன், இது நிலா, இது பூமி என்று சொல்லிவிடுவார்கள். ஆனால்,, 'Why'  என்று கேட்டால், அதற்கு அறிவியலால் மட்டும்தான் சொல்ல முடியும். 

பஞ்சாங்கமோ, மதங்களோ சொல்லாது. சொல்லவும் தெரியாது. காரணம், ஏன் என்று சொல்வதற்கு நீண்ட ஆய்வு தேவை! அதை அறிவியல்தான் நமக்கு தருகிறது. 

ஆகவே நாம் அறிவியலைத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை  முனைவர் கு.இரவிக்குமார் மாணவர்களுக்கு அழுத்தம், திருத்தமாக பதிய வைத்தார். இருதரப்பிலும் நடைபெற்ற உரையாடல் மூலமாக இக்கருத்து மாணவர்களிடையே பதியவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியாக திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி மாணவர்களிடையே தனது மாணவப்பருவத்தில் நடைபெற்ற சூரியகிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகளை நகைச் சுவையாக எடுத்துரைத்தும், முனைவர் கு.இரவிக்குமார் வகுப்பு எடுத்த முறையை வாழ்த்தியும் பேசினார்.

முன்னதாக இதே அரங்கில் நடைபெற்ற மாணவர்களுக்கான சூரியகிரகணம் பற்றிய ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நினைவுப்பரிசு வழங்கி சிறப் பித்தார். இந்நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுசெயலாளர் ஆ.வெங்கடேசன், கோவி.கோபால், திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாணவர்களின் பெற்றோரும், கழகத்தோழர்களும் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.

ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

நேற்று (25.10.2022) மாலை 5.30மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிப்கை ஒழிப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமையில் நடைபெற்றது.சூரியகிரகணம் குறித்த மூடநம் பிக்கையை விளக்கியும், இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம்சார்பில் அதன் பொறுப்பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தியும்,திண்பண்டங்கள் சாப் பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர்.இந் நிகழ்ச்சியில்  மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பகுத்தறி வாளர் கழக செயலாளர் சிவந்தி அருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண் மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக்,மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன் தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

தாராபுரத்தில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

25-10-2022 மாலை 5:30மணிக்கு சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் தாராபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு மாட்டுக்கறி உணவு உண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மண்டல  இளைஞரணி செயலாளர் ஆ.முனிசுவரன்,  கழகப்  பொதுக்குழு உறுப்பினர்கள் வழக் குரைஞர் நா.சக்திவேல், ஓவியர் நா.மாயவன் மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

லால்குடி மாவட்ட கழகம் சார்பில் கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிகூட்டம் 

25.10.2022 மாலை 5மணிக்கு கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிகூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் லால்குடி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விடுதலைபுரம் இளைஞரணி தோழர்கள் கூட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்தி முடித்தனர். 

பொள்ளாச்சியில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

நேற்று (25-10-2022) மாலை  சூரிய கிரகணம்  நிகழ்வையொட்டி பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கோவை சாலையின் முன்பு மூடநம்பிக்கையை முறியடிப்போம் என்ற பகுத்தறிவு நிகழ்ச்சி அரண் சட்ட மய்யம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. மூடநம்பிக் கையை ஒழிக்கும் பணியில் வேகமாக செயலாற்றுவோம். பகுத்தறிவு பார்வையை உலகிற்கு வேகமாக பரவ செய்வோம் என்ற முழக்கத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விருத்தாசலத்தில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

சூரிய கிரகணத்தின் போது உண்ணக் கூடாது, வெளியில் வரக்கூடாது என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக  விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் 25.10.2022 அன்று மாலை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் சிற்றுண்டி உண்டு களித்து, மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவர் அ.இளங் கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட அமைப்பாளர் வை.இளவரசன், சொற்பொழிவாளர் புலவர் இராவணன், வேப்பூர் வட்டாரத் தலைவர் பி.பழனிச்சாமி, கழுதூர் ம.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மு. முகமது பசீர், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ், பாலச்சந்தர், சவரிமுத்து, இளங்கனி, வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு
 November 01, 2022 • Viduthalai

ஓசூர், நவ.1 25.10.2022 அன்று மாலை 5.30 மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப் புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்கா முடி தலைமையில் நடைபெற்றது.

சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கையை விளக்கியும் இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளிவரகூடாது, சாப்பிட கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொறுப் பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியும், திண்பண்டங்கள் சாப்பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர். இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்ன சாமி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவந்திஅருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண்மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக், மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:42 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கிரகணம்

இனவுணர்வைத் தூண்டும் குருமூர்த்திகள் (வள்ளலார், பெரியார் பாதைகள்)

 

  October 25, 2022 • Viduthalai

மின்சாரம் 

ஆடிட்டர் குருமூர்த்தி எடிட்டர் ஆகி சோ குடும்பத்திடமிருந்து 'துக்ளக்'கை கைப்பற்றி, தம் பூணூல் கோத்திரத்தை 'நிர்வாணமாகக்' காட்டிக் கொண்டு வருகிறார். தந்தை பெரியார்மீது பழிப்பு, முதலமைச்சர்மீது வெறுப்புக் கனல் வீசுவது, திராவிடத்தை இழித்துரைப்பது என்பது அவருடைய பிழைப்பாகி விட்டது.

திராவிட இயக்கத்தைச் சீண்டிப் பார்க்கிறது சிண்டு.

இவ்வார துக்ளக்கில் (26.10.2022) எழுதப்பட்ட கேள்வி- பதில்களுக்கு சாட்டை அடி இங்கே!

கேள்வி: தியாகம் செய்வது - தானம் செய்வது ஒப்பிடுக?

பதில்: தன்னிடத்தில் இருப்பதைக் கொடுப்பது - தானம், தன்னையே கொடுப்பது - தியாகம். 

நமது பதிலடி: தன்னிடத்தில் இருந்து கொடுப்பது தர்ப்பைப் புல்! தானம் என்பது சுரண்டும் புரோகிதத் தொழில்.

கேள்வி: மதச் சார்பின்மை என்பதற்கு திராவிட மாடலில் என்ன அர்த்தம்?

பதில்: ஹிந்து மதச் சார்பின்மை என்று அர்த்தம்.

நமது பதிலடி: ஹிந்து என்றால் நாங்கள் சூத்திரர்கள் -& வேசி மக்கள் என்று அர்த்தப்படுவதால் 'திராவிட மாடல்' என்பது ஹிந்து மதச் சார்பின்மை என்று பொருள்.

கேள்வி: 'வள்ளலார், பெரியார் பாதைகள் ஒரே இலக்கை நோக்கி இணையும் இரு வழிப் பாதை' என்கிறாரே வீரமணி! சரியா?

பதில்: வள்ளலார் பாதையும், ஈ.வெ.ரா. பாதையும் ஒரே இலக்கை நோக்கியது என்று கி.வீரமணி கூற இரண்டு காரணங்கள்தான் நமக்குத் தெரிகிறது. முதுமைக் காலத்தில் ஆன்மிகவாதிகளாகும் நாஸ்திகர்களைப் போல் 88 வயதில் அவருக்கும் வள்ளலார்மீது ஈடுபாடு வந்திருக்கிறது அல்லது முதுமை நோயால் (Senile)  பாதிக்கப்பட்டு இருக்கிறார் அவர்.

நமது பதிலடி: 

'நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சாரம் முதலா
நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவாரில்லை
நீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே' 

என்று இராமலிங்க வள்ளலார் பாடினார். "ஈரோடும், வடலூரும்" என்று 1930களிலேயே நூல் வந்திருப்பது எல்லாம் இந்தப் பூணூல் களுக்குத் தெரியுமா? 'குடிஅரசு' இதழிலும் வள்ளலார் பாடல்கள் வெளி வந்தது புரியுமா?

கல்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக்
காகத்தை யென் செயப் படைத்தாய்?

      -விவேக சிந்தாமணி (பாடல் & 82)

சாஸ்திரம் பார்த்துப் பிறந்தாளாம் - பின்
சாஸ்திரம் பார்த்து சமைந்தாளாம்
சாஸ்திரம் பார்க்கின்ற பார்ப்பாரப் பெண்கள்
தாலியறுப்பதேன் ஞானப் பெண்ணே

 -  ஞான வெட்டியான்

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையுடன்விட் டோடும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர்தாம் அன்றே
        - திருமந்திரம்

இன்னும் எவ்வளவோ வண்டி வண்டியா கிடக்கு!

பார்ப்பனர்கள்பற்றி தந்தை பெரியாரின் கருத்துக்களோடு ஒத்துப் போவதை வெளிப்படுத்தினால் பார்ப்பனக் குருமூர்த்திகளைப் பாடாய்ப்படுத்துதோ!

எத்தனை ஆதிக்கப் பெருமக்கள் வயது மூப்பில் நாத்திகர் ஆனார்கள் என்ற பட்டியல் வேண்டுமா 'துக்ளக்'கே!

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே, தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து வீட்டிலிருந்த ஹிந்துக் கடவுள்களையெல்லாம் வீசி எறிந்தாரே தெரியுமா குருமூர்த்தியே?

கேள்வி: ஈ.வெ.ரா. நடத்தி வந்த விடுதலை பத்திரிகையைத் தங்கத் தட்டில் வைத்த வைரம் என்று கூறலாமா?

பதில்: திருக்குறளைத் தங்கத் தட்டில் வைத்த மலம் என்று கூறிய ஈ.வெ.ரா.வின் சமூக நீதித் தட்டில் வைத்த வைரம் என்று கூறுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

நமது பதிலடி: புளுகாதே குருமூர்த்தியே  & ஆதாரத்தோடு எடுத்துக்காட்டு என்று எத்தனை முறையோ எடுத்துச் சொல்லியும் 'கந்தனுக்குப்புத்தி கவுட்டியில்' என்பது போல உளறுவது அவாளின் தனித்தன்மை. 

தமிழை நீஷப் பாஷை என்று கூறும் 'லோகக் குருக்களின்' சீடர்கள் அல்லவா - அதனால் தமிழ் என்றாலே எப்படியோ கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அற்பப்புத்தி!

"தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்டாலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை -& அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய சமஸ்கிருததத்தின் மீதுதான்."

                - அறிஞர்அண்ணா ('திராவிட நாடு' 2.11.1947)

பார்ப்பனர்களுக்குத் தமிழ் -& பிழைப்புக்கு ஒரு கருவியே! இந்த யோக்கியதை உடையவர்கள் தமிழைப் பற்றியும், திருக்குறள் குறித்தும் அபாண்டமாகப் பழி சுமத்துவது வழி வழியாக வந்த ஆரியப் புத்தியே!

'விடுதலை' சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பது குறித்து குருமூர்த்திகளின் விலாவை கூர் ஈட்டியாகக் குடைகிறது. அந்த ஆத்திரத்தில் அய்யர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

30 சதவீதப் பெண்கள்தான் பெண்மை உடையவர்கள் என்று சொன்னபோதே பெண்கள் மொத்தியிருந்தால் குருமூர்த்தி இப்படியெல்லாம் துள்ள மாட்டார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:28 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: துக்ளக், பெரியார், வள்ளலார்

திங்கள், 24 அக்டோபர், 2022

மதமாற்றத்தை எதிர்த்த பாரதி! (88)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (88) மதமாற்றத்தை எதிர்த்த பாரதி!

நவம்பர் 16-30,2021
November 17, 2021உண்மை

நேயன்

இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதை பாரதி வன்மையாகக் கண்டித்தார். மற்ற மதங்களை வெறுத்ததோடு, இந்துக்கள் மதம் மாறுவதையும் கண்டித்த பாரதி மதவெறியின் உச்சத்திற்கே சென்று, இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கூறினார்.

“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது…

ஆம். ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்-கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்’’ என்றார்.

மற்ற மதங்களை வெறுத்த பாரதி இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றார். இந்து மதவெறி கொண்டு கருத்து-களைக் கூறினார்.

“இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப் பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்த-தென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.’’

“இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.

“வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராமணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்.

வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்-தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்’’ என்றார்.

மேலும், இந்துமதம் ஜாதியைக் காக்கின்ற மதமாக இருந்தாலும் அந்த மதத்தால் பல கேடுகள் வந்தாலும், அது ஏழ்மைக்கும் வறுமைக்கும் காரணமாய் அமைந்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்து மதத்தையும் அதன் சாஸ்திரங்களையும் நாம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாம் அழிந்தே போவோம் என்கிறார்.

“ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்-களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப் பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தைக் கவனியாமல் அசிரத்தையாக இருப்போ-மேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை’’ என்கிறார் பாரதியார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார்.

“வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம்…. சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில் தான் பாரதி இதை எழுதியுள்ளார்).

இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்-கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்-களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.’’

சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம், மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இராம கோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஒன்று பட்டு நிற்க வேண்டி வரும். அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும்

மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்’’ என்கிறார் பாரதியார்.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:21 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பாரதியார், மதமாற்றம்

பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ் (90)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

டிசம்பர் 16-31,2021
December 16, 2021உண்மை

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ்

நேயன்

பசுவதைத் தடைச் சட்டம் என்று இன்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி, வன்முறையில் ஈடுபடுவதை, ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்-படுவதற்கு முன்னரே கூறியவர் பாரதி.

1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளார் கீழ்க்கண்டவாறு:

“பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும் யாகசாலையையும் கோவிலையும் நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை விபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே விபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும் யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியே-தான் சொல்கிறது.

பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்துமாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்.

இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள் என்று எழுதியுள்ளார் பாரதி.

கிறித்துவப் பள்ளிகளில் இந்துப் பிள்ளை-களைச் சேர்க்கக் கூடாது என்று இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துவதை, 18.8.1906ஆம் ஆண்டிலேயே பாரதி ‘இந்தியா ஏட்டில்’ தலையங்கம் எழுதியுள்ளார். அப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இந்துக் கடவுள் பற்றிக் கூற மாட்டார்கள். அதனால் இந்துப் பிள்ளை-களுக்கு இந்துக் கடவுள் பற்றித் தெரியாமல் போகிறது.

அதனால் அவர்களுக்குத் தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளார்.

பாரதியார் கிறித்துவர்களைத் தேசபக்தி அற்றவர்கள், இந்த மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று 1906இல் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்துபோய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லு-கிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரிகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.

இதைப் போன்று 1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “இந்தியாவில் மொழிப் பிரச்சினை தீர ஒரே வழி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்கின்றனர்.

இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமஸ்கிருதம்தான் வரவேண்டும் என்று 1920 இலேயே எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமஸ்கிருதம் மட்டும்தான் (தேவ பாஷை) தெய்வமொழி என்கின்றனர். பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார்.

பாரதி, இன்னும் தீவிரமாக ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

“எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக்கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப் படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி.’’

பாரதி அகண்ட பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர். பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைக்கிறார்:

“என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் மதபேதம், ஜாதி பேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், என்று கூறும் பாரதி,

பாப்பா பாட்டில் கூட,

“சேதமில்லாத இந்துஸ்தானம் -_ அதை

தெய்வமென்று கும்பிடடி பாப்பா’’

என்று பாப்பா பாட்டில் கூறியுள்ளார் பாரதி.

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் போலவே பாரதியும் உடன் கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார்.

செத்துப்போன காஞ்சி பெரிய சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரலில், உடன்கட்டை ஏறுதலை மிகவும் போற்றி எழுதியுள்ளார். அந்த நெருப்பு சுடாது, சந்தனம்போல் குளிர்ச்சியாய் இருக்கும், புடவைகூட எரியாது என்றும், அவ்வாறு உடன்கட்டை ஏறும் பெண்கள் உத்ததமிகள் என்று எழுதியுள்ளார்.

இதே கருத்தை அன்றைக்கே பாரதி எழுதியுள்ளார், என்பதிலிருந்து அனைத்து சனாதன செயல்பாடுகளுக்கும் பாரதி முன்னோடி என்பது விளங்குகிறது.

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம்.

சுருங்கக் கூறின், இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும், கிறித்துவரும் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்துவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. முகமதியர்களும், கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும் என்று தனது இந்து மத வெறியை வெளிப்படுத்திய பாரதி மற்ற மதங்களின் மீது வெறுப்பைக் கக்கினார் என்று உறுதியாகிறது.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:59 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆர்.எஸ்.எஸ், பாரதியார்

ஆர்.எஸ்.எஸ் கருத்தை அன்றே கூறிய பாரதி - (89)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (89)

டிசம்பர் 1-15,2021
December 1, 2021உண்மை

ஆர்.எஸ்.எஸ் கருத்தை அன்றே கூறிய பாரதி

நேயன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்-கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர். எஸ். எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

இந்தியாவிற்குப் பாரத தேசம் என்ற பெயர்தான் வேண்டும் என்பதற்கான காரணத்தை பாரதி கூறுகிறார்.

“பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்று சேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்திய படியால் இந்நாட்டிற்கு பாரத தேசம் என்ற பெயர் உண்டாயிற்று.’’

இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தப் பெயர்தான் வேண்டும் என்கின்றனர்.

பாரதியார் கூறுவதுபோல் இந்தியா முழுவதையும் பரதன் ஆண்டதாக வரலாற்றுச் சான்று ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் 56 தேசம் இருந்ததாகவும், 56 அரசர்கள் ஆண்டதாகவும் தான் பாரதக் கதையிலும் காணமுடிகிறது.

ஆங்கிலேயர் வருவதற்குமுன் இந்தியா என்ற ஒரே நாடு இருந்ததற்கான சான்று எதுவுமே இல்லை.

இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மத மாற்றம் ஏற்பட்டது குறித்துப் பாரதியார் குறிப்பிடுவதாவது:

“திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்-களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்-கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்’’ என்கிறார் பாரதியார்.

ஆனால் உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததற்குச் சான்றாதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. மாறாக, திப்புசுல்தான் பார்ப்பனர்களை ஆதரித்த செய்திகள்தான் நமக்குக் கிடைக்கின்றன. திப்புவின் ஆட்சியில் 45,000 முதல் 50,000 பார்ப்பனர்கள் அரசுப் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையைக் கூட அவன் ஏற்றுக் கொள்ளாமல் சிருங்கேரி சங்கராச்சாரி-யாரிடமே ஒப்படைத்துள்ளான். திப்பு, சிருங்கேரி சங்கரமடத்திற்கு 1791 இல் எழுதிய கடிதம் மூலம் இதை அறிய முடிகிறது.

“There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offences like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras.’’

இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க, சாஸ்தரா சண்டி ஜபம் நடத்த திப்பு சிருங்கேரி சங்கராச்சாரியைக் கேட்டுக் கொண்டார். ஓராயிரம் பார்ப்பனர்கள் 40 நாள்கள் ஜபம் செய்தார்கள். அந்தச் செலவு முழுவதையும் திப்புவே ஏற்றுக் கொண்டார்.  இப்படிப்பட்ட திப்புவா, பாரதி கூறுவது போல், பார்ப்பனரைக் கொடுமைப்படுத்தியிருப்பார்? பாரதிக்கு இஸ்லாமியரின் மீது இருந்த வெறுப்பையே இது காட்டுகிறது.

பறையர்களின் பேரில் பாரதி இரக்கங் காட்டுவதாகப் பலர் எழுதுகிறார்கள். ஏன் பாரதி அவ்வாறு செய்தார் என்றால், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்குப் போய்விடுகிறார்கள் என்ற எண்ணத்தில் தான் “1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்த போது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.”

.. எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்-களையும், முக்கியமாகத் திக்கற்ற குழந்தை-களையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள் ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதி பயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது.

மடாதிபதிகளும், ஸந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம் நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள்.

ஜாதிக் கொடுமையினால் ஒடுக்கப்-பட்டவர்கள் அதிக அளவில் மதம் மாறிய காரணத்தால் பாரதியார் கிழச்சாம்பான் கூறுவதைப் போல மதமாற்றம் வேண்டாம் என்பது பற்றி எழுதியுள்ளார். கிழச்சாம்பான் சொல்லுகிறார், “ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிற தென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொரு-வனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைத்தான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.’’

பாரதி இந்து மதத்தை நிலைநிறுத்த எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

ஆக முகமதியர்களையும், கிறித்துவர்களையும் எதிரிகள் என்றே பாரதியார் குறிப்பிடுகிறார்.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:08 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆர்.எஸ்.எஸ், பாரதியார்

பெரியார் என்றால் பதறுவது ஏன்?

 

சிந்தனைக் களம் : பெரியார் என்றால் பதறுவது ஏன்?

நவம்பர் 16-30,2021
  November 16, 2021உண்மை

கி.தளபதிராஜ்

இந்து சமய அறநிலையத் துறையால் கொளத்தூரில் தொடங்கப்பட்டிருக்கும் கல்லூரி பணி நியமனம் தொடர்பாக அண்மையில் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் 16.10.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில், “1928க்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர், முஸ்லிம் மாணவர்கள்கூட சேர முடியாது தடுக்கப்பட்ட நிலை இருந்தது. அதைத் திராவிடர் ஆதரவு ஆட்சிதான் மாற்றியது. காரணம், பச்சையப்பர் ஒரு ஹிந்து. அவரது அறக்கட்டளை மூலம் நடத்தப்-படுகிறது. நால் வருணத்தைத் தாண்டிய அவர்ணஸ்தர்கள் ஆதிதிராவிடர்கள்; ஆகவே, அவர்களையும் சேர்க்க முடியாது என்று பல ஆண்டு காலம் இருந்ததை தந்தை பெரியார் _- சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது” என்று குறிப்பிட்டிருந்தார். மேற்படி அறிக்கை குறித்து ‘தமிழ் இந்து’ நாளிதழில் ம.வெங்கடேசன் என்பவர் அக்டோபர், 22ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்-கள் சேர்த்துகொள்ளப்பட்ட நிகழ்வு _- பட்டியல் சமூகத் தலைவர்களின் போராட்ட வெற்றியின் குறியீடு. அதை மறைத்து பெரியார் கணக்கில் அந்தப் புகழைச் சேர்க்கப் பார்ப்பது நியாயம் இல்லை என்று கொந்தளித்திருக்கிறார். பெரியார் மீது ஏன் இந்த வெறுப்போ தெரியவில்லை.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்-களைச் சேர்க்க முடியாது என்று பல ஆண்டு காலம் இருந்ததை தந்தை பெரியார் -_ சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது என்று தான் ஆசிரியர் வீரமணி அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அது தானே உண்மை!

1917ஆம் ஆண்டிலேயே சேலத்தில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் “பஞ்சமர் சமுதாய மாணவர்களுக்கு இலவசக் கல்வி தரவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி.

1919இல் நடைபெற்ற தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் நிறைவேற்றப்-பட்ட “பார்ப்பனரல்லாதாரால் முழுமையாக நிர்வகிக்கத் தக்கதானதும், பார்ப்பனரல்லாத மாணவர்களின் சிறப்பு நலன் கருதுவதுமான மாணவர் விடுதிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிகள் மாகாணத்தின் பல இடங்களிலும் திறக்கப்படவேண்டும்” என்ற  தீர்மானம்தான் 3.2.1919 நாளிட்ட கடிதமாக அரசுக்கு அனுப்பப்பட, அது கவர்னரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, 17.3.1919இல் அரசாங்கப் பொதுப்பள்ளிகளில் பஞ்சமர்களைச் சேர்த்துக்கொள்வது பற்றி ஒரு நீண்ட ஆணையை அரசு வெளியிடக் காரணமாக அமைந்தது.

“அக்ரஹாரத்திலும், சாவடிகளிலும், கோவில்களிலும் உள்ள பள்ளிகளை  எல்லா ஜாதியினரும் அணுகக் கூடிய வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். பள்ளிக்கு வாடகைக்கு இடம் தருபவர்கள் பஞ்சமர் பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கூறினால் அவ்விடத்தில் உள்ள பள்ளிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். எல்லா ஜாதியாரும் அணுகக் கூடிய இடத்தில் பள்ளி உள்ளது என சான்றிதழ் அளிக்கப்பட்டாலொழிய,  பொதுப் பணத்தில் பள்ளிகள் கட்டப்படக்கூடாது.” என்றெல்லாம் பல்வேறு வரைமுறைகளை வகுத்திருந்தது அந்த ஆணை. அத்துடன் பாடிசன் கீழ் பணியாற்றும் பல துணை கலெக்டர்களால் தாழ்த்தப்-பட்டவர்களுக்கென பல பள்ளிகளும் திறக்கப்பட்டன.

19.11.1919 அன்று நடைபெற்ற லெஜிஸ்லேடிவ் கவுன்சில் கூட்டத்தில் எம்.சி.ராஜா, பஞ்சமர் மாணவர்களைச் சேர்க்காத அரசு உதவி பெறும் பள்ளிகளின் பட்டியலை அரசு அறிவிக்கக் கோரியபோது முழுமையான பட்டியல் தயாரிக்கப்படவில்லை என்று கூறி சென்னை பச்சையப்பன் கல்லூரி, கள்ளிக்கோட்டை ஜாமரின் கல்லூரி, திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளி போன்றவற்றை சான்றாக அரசு அறிவித்தது.

(1920 நவம்பரில் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றவர் எம்.சி.ராஜா. அப்போதைய சட்டசபைக்கு நீதிகட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்-பட்டார். சென்னை மாகாண சட்ட-மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட சமூக உறுப்பினர் எம்.சி.ராஜா.

1919ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அணுக முடியாத இடங்களிலுள்ள பள்ளிகளை இத்தகைய தடைகள் இல்லாத கட்டடங்களுக்கு மாற்றவேண்டுமென அரசு வெளியிட்டிருந்த ஆணையைப் பின்பற்றி நகராட்சிகளும், ஜில்லா போர்டுகளும் எடுத்த நடவடிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக அளிக்கும்படி ஆணை பிறப்பித்திருந்தது நீதிக்கட்சி.

கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற்றுவந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எண்ணிகையை பல மடங்காக உயர்த்தி 1923இல் ஆணையிட்டது நீதிக்கட்சி.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்து 17.10.1922இல் ஆணை பிறப்பித்ததும் நீதிக்கட்சியே.

காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார், தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். 1925ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் அவர் எழுதிய தலையங்கத்தில்,

“பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைவிட தீண்டப்-படாத சமூகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்து சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ முன்னேறவே இல்லை. சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச் சமூகங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கப்-பட்டிருக்கு-மேயானால் இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும், பிராமணக் கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா?” என்று கேட்டார். (‘குடிஅரசு’ – 8.11.1925)

மேலும் “தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடமையாகும். ஏனெனில் தீண்டாதார்களின் முன்னேற்றம்தான் பிராமணரல்லாதார் முன்னேற்றமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலம்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும்.” என்று எழுதினார். (‘குடிஅரசு’ – 15.11.1925)

பச்சையப்பன் கல்லூரியில் பார்ப்பனர் ஆதிக்கம் தலைதூக்குவதை அறிந்த பெரியார் அங்கு பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன சமையல்காரரை எதிர்த்து பார்ப்பனரல்லாத ஒருவரை சமையல்காரராக நிறுவிடச் செய்ததை தனது ‘குடிஅரசு’ இதழில் எழுதினார். அதனைத் தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும் போராடி பார்ப்பனரல்லாத ஒருவரை சமையல்காரராக நிறுவவே அதனை வரவேற்று, எல்லா பாடசாலைகளிலும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். (‘குடிஅரசு’ 6.3.1927)

சுயமரியாதை இயக்கம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்த இந்த காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியின் தமிழக வருகைச் செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

பச்சையப்பன் கல்லூரியில் 7.9.1927 அன்று பேசிய காந்தி, ‘பச்சையப்பன் கல்வி நிறுவனங்-களில் பஞ்சமர்கள் மற்றும் முஸ்லிம்களை அனுமதிக்க வேண்டும்’ என்று பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர்-களுக்கு வேண்டுகோள் விடுக்க, காந்தி பேசிய பிறகு, பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தனது நன்றியுரையில், ‘கல்லூரியை அனைத்துத் தரப்பு இந்தியர்களும் சேர்ந்து பயிலத்தக்கதாக மாற்ற முயற்சிப்பதாக’ கூறினார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ம.வெங்கடேசன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியை அங்கு அப்படி பேசவைத்த காலச் சூழலைப் பற்றியும் நாம் சற்று அறிந்துகொள்ள வேண்டும். தமிழகம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மைசூர் சென்ற காந்தி வர்ணாசிரம தர்மம் பிறவியிலேயே ஏற்பட்டது என்றுதான் பேசினார். இப்படி அவர் தொடர்ந்து பேசி வந்ததை அறிந்த பெரியார் காந்தியின் தமிழக வருகை பற்றி “குடிஅரசு’ ஏட்டில் தலையங்கம் எழுதினார்.

“சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வரப்போகிறார். தீண்டாமை பற்றிப் பேசும்போது அவரது வழக்கப்படியேதான் பேசித் தீருவார். அதன் மூலம் நமது எதிரிகளுக்கு அதிகமான பலம் ஏற்பட்டு நமது முயற்சியை ஒழிக்க அதை அவர்கள் உபயோகப்படுத்திகொள்வார்கள். அதை இப்போதே நாம் வெளிப்படுத்திவிடுவது மேலானதென்று கருதுகிறோம். அதாவது, மகாத்மா காந்தி நமது பார்ப்பனர்கள் சொன்னது போலவே நமது சமூக வாழ்வில் வர்ணாசிரம தர்மம் உண்டு என்றும், அது பிறவியிலேயே ஏற்பட்டது என்றும் அடிக்கடி சொல்லி வருகிறார்.

சமீபத்தில் மைசூரில் ஒரு கூட்டத்தில் தீண்டாமையைப்பற்றிப் பேசும்போதும், “இந்த சமூகத்தில் வர்ணாசிரம தர்மம் உண்டு என்றும், அது நமது சமூகத்திற்கு அவசியம் என்றும், ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும், அந்தந்த வருணத்தார் அந்தந்த தருமத்தைச் செய்யும்-போது அவரவர் அம்மட்டில் உயர்ந்தவர்கள் என்றும், பிராமணன் அவன் தர்மத்தைச் செய்யும்போது உயர்ந்தவனாகிறது போலவே மற்ற வர்ணத்தானும் அவனவன் தர்மத்தைச் செய்யும்போது தான் உயர்ந்தவனாகிறான்’’ என்பதாகப் பேசியிருக்கிறார். இதைத்தான் பார்ப்பனர்களும் தாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்பதற்குக் காரணங்களாகச் சொல்லி வருகிறார்கள்.

தீண்டாமை விஷயத்தில் மகாத்மாவுக்கு உள்ள குழப்பத்தைக் காண்பித்து, அவரும் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டவரே அல்லாமல் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவராகப் புலப்படவில்லை என்பதைக் காட்டுவதற்கே எழுதுகிறோமே அல்லாமல் அவர் மீது குறை கூறுவதற்காக அல்ல .”  என்று எழுதினார். (‘குடிஅரசு’ – 7.8.1927)

பெரியார், காந்தியின் வர்ணாசிரமக் கொள்கையை விமர்சித்து எழுதிய கட்டுரை தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. இது குறித்து பெரியாரும் எஸ்.இராமநாதனும் காந்தியை நேரிலும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள்.  இந்தியாவின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் காங்கிரஸ், இந்துமதம், பார்ப்பன ஆதிக்கம் மூன்றையும் ஒழிக்க வேண்டும் என்று காந்தியிடம் சொன்னதாக பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். மேற்படி பெரியார் சந்திப்பின் விளைவால் மைசூரில் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்துப் பேசிய காந்தி, பச்சையப்பன் கல்லூரியில் அப்படி பேசியிருக்கக் கூடும். எப்படியாயினும் காந்தியின் பேச்சு வரவேற்கக் கூடியதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே நேரத்தில் மன்னார்குடியில் பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட தேசிய உயர்நிலைப் பள்ளிக்கு காந்தி சென்றபோது அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம் இங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்டபோது, அப்படி யாரும் இங்கே படிக்கவில்லை என அந்தப் பார்ப்பனர் இறுமாப்புடன் பதிலளித்ததையும் அறிவோம்.

1927இல் இக்கல்லூரியின் பழைய மாணவர்களான எஸ்.துரைசாமி அய்யர், கே.வெங்கடாஸ்வாமி நாயுடு, என்.கிருஷ்ணமாச்சாரி ஆகிய மூவரும் ‘ஆதிதிராவிடர்களும் இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாகையால், பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அவர்களை அனுமதிப்பதற்கு ஏற்ப அறக்கட்டளை விதிகளை மாற்றியமைக்குமாறு’ சென்னை உயர் நீதி-மன்றத்தை அணுகினார்கள். மனுவில் இருந்த சில பிழை-களால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், அவர்கள் சொல்வதுபோல ஆதிதிராவிடர்களை ஏன் சேர்க்கக் கூடாது எனக் கேட்டது உயர் நீதிமன்றம். பிறகு, அறங்காவலர்கள் ஆதிதிராவிடர்களைப் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதன்படி, 1927இல்தான் ஆதிதிராவிட மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டனர். என்று அந்தப் பிரச்சனைக்கு மங்களம் பாடி முடித்துவிட்டார் கட்டுரையாளர். பிரச்சனை அத்துடன் முடிந்து விடவில்லை.

1927இல் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ந.சிவராஜ் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது மேலும் ஒரு வழக்கு தொடந்ததன் விளைவே அறங்காவலர்கள் கூடி தாழ்த்தப்பட்டவர்களை தங்கள் கல்லூரியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்தனர் என்ற செய்தியையும் காண்கிறோம். ஏனோ வசதியாக சிவராஜை அவர் மறைத்துவிட்டார்.

தீர்ப்பு வந்த பிறகும் அறக்கட்டளையினர் கூடி உனடியாக தாழ்த்தப்பட்டோரை கல்லூரியில் சேர்ப்பதற்கு முடிவெடுக்க இயலவில்லை. ஆறு டிரஸ்டிகளில் பார்ப்பனராக இருந்த ஒருவர் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

1927 அக்டோபர் 22, 23 தேதிகளில் சென்னையில் பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி (முதலியார்), தந்தை பெரியார் உள்ளிட்ட நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாட்டில் “பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை கல்லூரியின் அறங்காவலர்களுக்கு இந்த மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்களைச் சேர்க்காமல் ஒதுக்குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்பதாகும். இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்று செயல்படத் தவறினால் அக் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.

பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் தொடர்ந்து எழுதினார், “ஆதி திராவிடர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று அய்க்கோர்ட் தீர்ப்பு சொன்னதின் பலனாக பச்சையப்பன் கலாசாலையில் அவர்களைச் சேர்த்துகொள்ள தர்மகர்த்தாக்களில் பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்-கிறார்களாம். பச்சையப்பன் டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பனர் இருப்பதாகத் தெரியவருவதுடன், அந்த ஒரு பார்ப்பனரும் ஆதி திராவிடர்கள் இந்துக்களானாலும் அவர்களை கலாசாலையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அபிப்பிராயம் கூறி இருப்பதாகவும் காணப்-படுகிறது.” என்று எழுதி அந்தப் பூனைக்-குட்டியை இழுத்து சந்தியில் விட்டார்.

மேலும், “ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்துவர்-களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குப் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குள் போகலாம்; பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள், இக்கோவிலுக்குள் போகலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும் பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்யாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும், வழக்கமும் இருக்கின்றது.

ஆனால், தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்துக் கோவிலுக்குள் போகக்கூடாது என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெறிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும், கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன், நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்”.  என்று கல்லூரி நிருவாகத்தை கடுமையாகச் சாடினார். (‘குடிஅரசு’ – 27.11.1927)

அடிப்பவர் அடித்தால் தான் அம்மியும் நகரும் என்பது போல் கல்லூரி நிருவாகத்தில் ஊடுருவியிருந்த பார்ப்பன நாகம் தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. இதைத்தான் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் _- சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் தாக்கம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். பெரியார் என்றாலே சிலருக்கு எட்டிக்காயாய்க் கசப்பது ஏன்?

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் ‘சென்னை பச்சையப்பன் கலாசாலை டிரஸ்டிகள் ஆதிதிராவிடர்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொண்டதோடு, அவர்களையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கு இம்மாநாடு மகிழ்கின்றது’ (‘குடிஅரசு’ – 11.12.1927) என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டும் சுட்டிக்காட்டும் வெங்கடேசன், பச்சையப்பன் அறக்கட்டளையில் ஆதிதிராவிடர் சேர்க்கப்-படுவதற்குத் தடையாயிருந்த திரு.வெங்கடேச சாஸ்திரலு பார்ப்பனரை அந்த தீர்மானம் கண்டித்ததையும் மறைத்துவிட்டார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:48 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கல்வி, தளபதிராஜ், பெரியார்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

படம் செருகல்

படம் செருகல்
ஓபரா-அமெரிக்க நாத்திகர்
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்
    முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மு...
  • நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்
    வ நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! - தஸ்லிமா நஸ்ரீன் ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்...
  • பொன்மொழி
    தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த்  தோல்வியுறுவான்.   - நெப்போலியன் சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க...
  • ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
    எத்தர்களை  முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் ...
  • மறைந்த அயோத்திதாசர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
    May 20, 2021  • Viduthalai   ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக...
  • பாதர் எனக்கு ஒரு டவுட்?
    😇😇🤔 *மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?* *பாதர் : கேளு மகனே* *மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்...
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங்
      விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயக வாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக்...
  • வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2
    டாக்டர் துரை.சந்திரசேகரன் (வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாய...
  • புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
    பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்.... (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ...
  • கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
    ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! -ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்க...

லேபிள்கள்

  • .சிங்காரவேலர்
  • அக்ரகாரம்
  • அகவிலைப்படி
  • அண்ணல் அம்பேத்கர்
  • அண்ணா
  • அந்தணர்
  • அந்தணர் என்போர்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமர்நாத்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்யப்பன்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அழகிரி
  • அழிப்பு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுக்கரசு
  • அன்பழகன்
  • அனுபவம்
  • அனுமதி மறுப்பு
  • ஆ.இராசா
  • ஆ.ராசா
  • ஆக்கிரமிப்பு
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசீவகம்
  • ஆத்மா மறுப்பு
  • ஆதிக்கம்
  • ஆய்வு
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்.
  • ஆரிய பூமி
  • ஆரியம்
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர்கள்
  • ஆன்மீகம்
  • இ.மு. சுப்ரமணியம்
  • இணைப்பு மொழி
  • இந்தி
  • இந்தியா
  • இந்தியாவா ?
  • இந்தியாவா?
  • இந்து
  • இந்து மதம்
  • இந்துத்துவா
  • இந்துமத கொடுமை
  • இந்துமதம்
  • இந்துவெறி
  • இயக்கங்கள்
  • இயக்கம்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இராசராசன்
  • இராமச்சந்திரனார்
  • இராமலிங்க அடிகள்
  • இராமன்
  • இராமன் பட எரிப்பு
  • இராமாமிருதம்
  • இராமாயண காலம்
  • இராமாயணம்
  • இராமானுஜர்
  • இராவணன்
  • இழப்பு
  • இறுதிவுரை
  • இனம்
  • உணவு
  • உபநிடதம்
  • உபி
  • உமா மகேஸ்வரன்
  • உமாமகேசுவரனார்
  • உயிர்ப்பலி
  • உயிரிழப்பு
  • உரிமை
  • உரைகள்
  • ஊர்
  • எதிர்வினை
  • எம் பி
  • எரிப்பு
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓபரா
  • ஓமந்தூர் பி. ராமசாமி
  • க.அன்பழகன்
  • கட்சி
  • கட்டைவிரல்
  • கடவுள்
  • கடவுள் சிலை
  • கடவுள் மறுப்பு
  • கடை
  • கருப்புச் சட்டை
  • கருப்புச்சட்டை
  • கரோனா
  • கல்வி
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிதைகள்
  • கழகம்
  • களப்பிரர்
  • கற்பனை
  • கா.சு. பிள்ளை
  • காட்டுவாசி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • கார்த்திகை தீபம்
  • கால்டுவெல்
  • காவிரி
  • கான்சிராம்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கீழ்ப்பாக்கம்
  • கு.வெ.கி.ஆசான்
  • குங்குமம்
  • குடகு
  • குடியரசு இதழ்
  • குண்டுவெடிப்பு
  • குணம்
  • குமுதம்
  • குருக்கள்
  • குழந்தை
  • கேரளா
  • கேள்வி
  • கேள்வி பதில்
  • கேள்விகள்
  • கேள்வியும் பதிலும்
  • கைகள்
  • கைலி
  • கைவல்யம்
  • கொடுமை
  • கொலை
  • கோட்சே
  • கோயில்
  • கோயில்கள்
  • கோல்வால்கர்
  • கோழை
  • சங்கராச்சாரி
  • சட்டம்
  • சதி
  • சந்திராயன்
  • சபரிமலை
  • சமணம்
  • சமதர்மம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி விருது
  • சர்.சி.பி. அறிவுரை
  • சரத் யாதவ்
  • சரஸ்வதி நாகரிகம்
  • சரியா
  • சவர்க்கார்
  • சாகு மகராஜ்
  • சாகு மகாராஜ்
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாமி கைவல்யம்
  • சாலினி
  • சாவித்திரி பூலே
  • சாவு
  • சி.நடேசனார்
  • சிக்கல்
  • சிங்காரவேலர்
  • சித்தர்கள்
  • சித்திரவதை
  • சித்திரை
  • சிதம்பரம்
  • சிந்தனை
  • சிந்து
  • சிந்து – சரஸ்வதி
  • சிலை
  • சிவராஜ்
  • சிவன்
  • சின்னகுத்தூசி
  • சுடுகாட்டிலும் ஜாதி
  • சுப்பராயன்
  • சூத்திரர்கள்
  • செய்குத்தம்பி பாவலர்
  • சேரி
  • சொத்து
  • சௌந்தர பாண்டியனார்
  • டார்வின்
  • டி.ஏ.வி.நாதன்
  • தகுதி
  • தம்மபதம்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்
  • தமிழ் இந்து
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் தேசியம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் வேதம்
  • தமிழறிஞர்
  • தர்மதீர்த்தர்
  • தருமாம்பாள்
  • தலைவர்கள்
  • தளபதிராஜ்
  • தற்கொலை
  • தஸ்லிமா நஸ்ரீன்
  • தாகூர்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • தானம் 
  • திப்பு சுல்தான்
  • தியாகராயர்
  • திராவிடம்
  • திராவிடர் - ஆரியர்
  • திருக்குறள்
  • திருட்டு
  • திருப்பதி
  • திருமணம்
  • திருமா
  • திருவரங்கம்
  • திருவள்ளுவர்
  • திருவாங்கூர்
  • திருவிக
  • தில்லி
  • திலகர்
  • திறமை
  • தினமணி
  • தினமலர்
  • தீ விபத்து
  • தீங்கு
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • துரை.சந்திரசேகரன்
  • தேசியம்
  • தேவதாசி
  • தேவநேயப் பாவாணர்
  • தை
  • தொல்காப்பியம்
  • தொழிலாளர்
  • நம்பிக்கை
  • நம்பூதிரி
  • நரபலி
  • நன்னன்
  • நாகநாதன்
  • நாகரிகம்
  • நாசம்
  • நாராயண குரு
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நாஸ்திகம்
  • நீட்
  • நீதி
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நெரிசல்
  • நேயன்
  • பக்தி
  • பகத்சிங்
  • பகுத்தறிவாளர்
  • பகை
  • பட்டுக்கோட்டை அழகிரி
  • படத்திறப்பு
  • படை எடுப்பு
  • பண்டிகை
  • பண்டிதர்
  • பதவி
  • பதிப்புரிமை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பரமசிவம்
  • பரிதிமாற்கலைஞர்
  • பரிபாலனம்
  • பலி
  • பழங்குடியினர்
  • பனகல் அரசர்
  • பனகால் அரசர்
  • பாதிரியார்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பான்
  • பாரதம்
  • பாரதமா ?
  • பாரதமா?
  • பாரதி
  • பாரதியார்
  • பால்
  • பாலியல் வன்கொடுமை
  • பானகல் அரசர்
  • பாஜக
  • பிரசாதம்
  • பிராமணப் பெருமை
  • பிராமணர்
  • பிராமணியம்
  • பில்லி சூனியம்
  • புத்த - சமணம்
  • புத்தம்
  • புத்தர்
  • புரட்சி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புலவர் குழந்தை
  • பூசாரி
  • பூசை
  • பூணால்
  • பூணூல்
  • பூதம்
  • பெட்ரன்ட்ரஸ்ஸல்
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண் விமானி
  • பெண்கள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • பெரியார
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேய்
  • பேராசிரியர்
  • பொதுப்பணி
  • பொதுவுடமை
  • பொதுவுடைமை
  • பொப்பிலி அரசர்
  • பொன்மொழி
  • பௌத்தம்
  • மகாத்மா ஜோதி பாஃபூலே
  • மணியம்மை
  • மத வன்முறை
  • மதம்
  • மதமாற்றம்
  • மந்திரமா தந்திரமா
  • மயிலாடன்
  • மயிலை சீனி.வேங்கடசாமி!
  • மருத்துவ மனை
  • மறுப்பு
  • மறைமலை அடிகள்
  • மறைமலையடிகள்
  • மறைவு
  • மன்னர்கள்
  • மன்னராட்சி
  • மனு ஆட்சி
  • மனுதர்மம்
  • மனோன்மணியம்
  • மாணிக்க நாயக்கர்
  • மாநாடு
  • மார்க்ஸ்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மாற்று மதம்
  • மின்சாரம்
  • மின்நூல்
  • மீசை
  • மு.வ
  • முத்துராமலிங்கம்
  • முதல்வர்
  • மூடத்தனம்
  • மூடநம்பிக்கை
  • மேயர் ந.சிவராஜ்
  • மைல்கல்
  • மோகன் பகவத்
  • யுனஸ்கோ
  • ரஞ்சித்
  • ராமர் கோயில்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராஜராஜ சோழன்
  • ராஜாராம் மோகன்ராய்
  • ருத்திரன்.
  • லாலா லஜபதி
  • லெனின்
  • வ.உ .சி
  • வ.உ.சி.
  • வகுப்புரிமை
  • வந்தேறிகள்
  • வர்ணம்
  • வரலாறு
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன்முறை
  • வா உ சி
  • வாஞ்சி
  • வி.பி.சிங்
  • வித்தியாசம்
  • விபச்சாரம்
  • விபத்து
  • விருது
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீழ்ச்சி
  • வெறுப்பு
  • வேத காலம்
  • வேதம்
  • வேப்பமரம்
  • வைக்கம்
  • வைக்கம் வீரர்
  • வைகுண்டர்
  • ஜடாமுடி
  • ஜனநாயகம்
  • ஜனாதிபதி
  • ஜாதி
  • ஜாதி வெறி
  • ஜி. யு. போப்
  • ஜீவனோபாயம்
  • ஜீவா
  • ஜோதிராவ் புலே
  • ஜோதிராவ் பூலே
  • ஸ்மார்த்தர்
  • ஸ்வஸ்திகா
  • ஹிட்லர்
  • Bunch of Thoughts

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (70)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (25)
    • ►  மே (12)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2023 (45)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (39)
    • ▼  டிசம்பர் (3)
      • பா.ஜ.க. விற்கு 101 கேள்விகள் - சு.வெங்கடேசன் எம்.பி.
      • தமிழர் தலைவர் தலைமையில் 'கிரகண மூடநம்பிக்கை ஒழிப்ப...
      • இனவுணர்வைத் தூண்டும் குருமூர்த்திகள் (வள்ளலார், பெ...
    • ►  அக்டோபர் (14)
      • மதமாற்றத்தை எதிர்த்த பாரதி! (88)
      • பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ் (90)
      • ஆர்.எஸ்.எஸ் கருத்தை அன்றே கூறிய பாரதி - (89)
      • பெரியார் என்றால் பதறுவது ஏன்?
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (10)
  • ►  2020 (73)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (4)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (77)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (68)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (28)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (32)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (16)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (35)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மே (7)
    • ►  பிப்ரவரி (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.