பக்கங்கள்

வியாழன், 19 மே, 2022

இணைப்பு மொழியாக இருப்பதற்கு பயன் நிறைந்ததாக இருப்பது 'ஹிந்தி'யா அல்லது 'ஆங்கில'மா?

 

  • சீனிவாசன் ரமணி, விக்னேஷ் ராதா கிருஷ்ணன் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி
  • பிரபல ஆய்வு எழுத்தாளர்களால்  'இந்து' ஏட்டில் (15.4.2022 பக்கம் 9) எழுதப்பட்டுள்ள ஆய்வுப் பூர்வமான தரவுகள் நிறைந்த கட்டுரை இது.
  • போஜ்புரி, ராஜஸ்தானி உள்ளிட்ட 56 பிரிவுகளை உள்ளடக்கியதுதான் ஹிந்தி.
  • இந்தியாவின் தகவல் நுட்ப தலைநகரமாக பெங்களூரு திகழ்வதற்குக் காரணமே ஆங்கிலம்தான்.
  • பயன் நிறைந்ததாக இருப்பது ஆங்கிலமா? ஹிந்தியா? என்பதுதான் முக்கிய கேள்வி - பயன்பாடுதான் முக்கியம்.
  • ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் மாநிலங்கள்தான் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகின்றன (படம் 1)
  • ஹிந்தி பேசும் மாநிலங்களிலிருந்து தான் ஏராளமான மக்கள் ஹிந்தி  பேசாத மாநிலங்களுக்குக் குடியேறுகின்றனர்.
  • இதுபோன்ற அரிய தகவல்கள் இக்கட்டுரையில் குவிந்து கிடக்கின்றன.

(இணைப்பு மொழியாக ஹிந்தியைவிட ஆங்கிலம் இருப்பதே பயன் நிறைந்தது என்று குடியேற்றம் மற்றும் முன்னேற்ற சூழ்நிலை மாற் றத்தைக் கணிக்கும் புள்ளி விவரங்கள் ஒரு உறுதியான வழக்கைக் காட்டுகின்றன).

2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது தங்களது  கடிதப் போக்குவரத்துக்கு ஹிந்தி மொழிதான் முதல் தேர்வு என்று 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15 மாநில யூனியன் பிரதேச மக்கள்தான் தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் ஒரு நிபந்தனை உள்ளது. போஜ்புரி, ராஜ்ஸ்தானி, ஹிந்தி, சத்தீஷ்கர் உள்ளிட்ட 56 மொழிகள் (தாய் மொழிகள்) உள்ளடங்கிய மொழி யாக ஹிந்தி (ஒரு குடை) மொழி இருக்கிறது.

43% இந்தியர்கள் ஹிந்தி பேசுவதாகக் கூறப்பட்டாலும் 8.26% மக்கள் மட்டுமே குறிப்பாக தங்கள் தாய்மொழியாக ஹிந்தி பேசுகிறார்கள். ஹிந்தி இணைப்பு மொழியாக செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இதைக் குறிப்பிட்டுதான், மாநில மக்கள் ஒருவருடன் ஒருவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளும் போது ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியாவின் ஹிந்தி மொழியில் செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

அவ்வாறு அவர் கூறியது எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங் களையும் விமர்சனங்களையும் எழுப்பியது. பெங்களூரு இந்தியா வின் தகவல் தொழில் நுட்ப தலைநகரமாக ஆனதற்கு ஆங்கில மொழியே காரணம் என்று கருநாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலை வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழிக்கு மாற்றாக, ஹிந்தியைத் திணிப்பதற்கான வாதமே அது பெரும்பான்மையான இந்திய மக்களால் பேசப்படுகிறது என்பதுதான். ஆனால் ஹிந்தி மொழி பெரும்பான்மையான இந்தியர் களால் பேசப்படும் மொழி என்றுகூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பதில், ஒரு பயன்பாட்டு கேள்விக்கு பதில் கூற வேண்டும். இந்திய குடிமக்கள் மேன்மையான வாழ்க்கை ஒன்றைத் தேடும்போது, ஹிந்தி - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் எந்த மொழி பயன் நிறைந்ததாக இருக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி. வேறு சொற்களில் கூறுவதானால், ஹிந்தி பேசும் உள்ளூர் மக்கள் ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதால் அதிக பயன் அடைவார்களா அல்லது ஹிந்தி மொழி பேசாத மக்கள் மீது அவர்கள் பயன் பெறுவதற்கு ஹிந்தி மொழி திணிக்கப்பட வேண்டுமா?

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மனிதவள மேம்பாட்டு அட்டவணையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதிக மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் பகுதிகள் மேலான மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகின்றன. (படம் 1) ஹிந்தி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ள பகுதிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், அதை விடக் குறைவான மனிதவள மேம்பாட்டு குறியீடுகளைக் காட்டுகின்றன. (படம் 2) இதன் பொருள் என்ன வென்றால், உயர்ந்த வாழ்க்கைத் தரத்துக்கும் அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதற்கும் இடையே ஒரு ஆக்க பூர்வமான தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.

இதுவும்கூட குடி பெயர்பவர்களுடன் தொடர் புள்ள எண்ணிக்கையில் இருந்து பெறப்பட்டதாகும். மேலான வாழ்வாதாரங்களைத் தேடி ஹிந்தி பேசும் மக்கள் கொண்ட மாநிலங்களில் இருந்து கூடுதலான மக்கள் ஹிந்தி பேசாத மாநிலங்களுக்குக் குடிபெயர் கின்றனர். 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பொருளாதார ஆய்வில் பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் விவரங் களைப் பகுத்தாய்வு செய்வதன் மூலம் வேலையுடன் தொடர்புடைய குடியேற்ற விவரங்களை அளவிடு வதற்கு பயன்படுத்தப்பட்டது. இத்தகைய கீழ் வகுப்பு ஒன்றில் பயணம் செய்யும் அதிக அளவு பொருளாதார வசதியற்ற மக்கள் பெரும்பாலும் வேலை தொடர்பான காரணங்களுக்காகவே பயணம் செய்கிறார்கள் என்று அந்த ஆய்வறிக்கை வாதாடுகிறது. 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் அது போன்ற 90 லட்சம் பயணிகள் மேற்கொண்ட பயணங்களில் 200 கி.மீ. தொலைவுக்கும் குறைவான தூரம் பயணித்த பயணிகள் சேர்க்கப்படவில்லை.

2015-2016 ஆம் நிதியாண்டில் மாநில அளவில் பயணம் செய்த இறுதியான பயணிகளின் எண்ணிக்கை பற்றிய வரை படத்தை (படம் 4) காட்டுகிறது. தமிழ்நாடு, மகாராட்டிரா, குஜராத், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், கருநாடகா, பஞ்சாப் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான மக்கள் மற்ற மாநி லங்களில் இருந்து குடிபெயர்ந்து உள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், அரியானா, இமாசல பிரதேசம், சத்திஷ்கர் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான மக்கள் மற்ற மாநிலங்களக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.

அதிக அளவில் மக்கள் குடிபெயர்ந்த மாநிலங் களைக் காட்டும் 3ஆவது வரைபடத்துடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது, அதிக அளவில் மக்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களுடன் இந்த புள்ளி விவரங்கள் பொருந்துகின்றன. அதற்கு மாறாக அதிக அளவில் ஹிந்தி பேசும் மக்கள் குடியேறிய ஹிந்தி பேசாத மக்கள் வாழும் பகுதிகளில் இந்தி பேசும் மக்கள் வெகு சிலரே இருக்கின்றனர். இதற்கு விதி விலக்காக இருப்பவை கேரள, ஒடிசா மாநிலங்களும், மகாராட்டிரா மாநிலத் தின் சில பகுதிகளும்தான்.

இந்தியை தாய் மொழியாக பேசுபவர்களை மட் டுமே படம் 3 காட்டவில்லை; தங்களது இரண்டாவது மொழி அல்லது மூன்றாவது மொழி என்று ஹிந்தியைத் தேர்ந்து எடுத்திருக்கும் மக்களையும் இந்த படம் காட்டுகிறது. ஹிந்தி பேசும் மக்கள் 50% சதவிகிதம் அளவில் வாழும் ஹிந்தி மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குக் குடியேறிய மக்கள் பற்றி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் பகுத்தாய்வு ஒன்று (படம் 3) எதிர்மறைப் போக்கைக் காட்டுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து இதர மாநிலங் களுக்குக் குடியேறிச் செல்லும் மக்கள் மற்ற மாநிலங் களில் இருந்து ஹிந்தி பேசப்படும் மாநிலங்களுக்குக் குடிபெயரும் மக்களின் எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கை கொண்டதாக இருப்பதாகும் என்பதையே இந்த புள்ளி விவரங்களை காட்டுகின்றன. வேலை மற்றும் கல்வி ஆகிய காரணங்களுக்காக குடிபெயர்தல் உள்ளிட்ட அனைத்து வகையிலான குடிபெயர்தல்களும் இந்த பாணியில் தான் இருக் கின்றன என்பது தெரிய வருகிறது.

சுருங்கக் கூறினால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கை கொண்ட மக்கள் ஹிந்தி பேசப்படாத மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்து செல்கின்றனர் என்றும் ஒரு பகுதியின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டுக்கும் அதிக அளவிலான மக்கள் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி மொழி இருப்பதைவிட ஆங்கில மொழி இருப்பதையே இவை வலியுறுத்திக் கூறுகின்றன. இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு இது.

நன்றி: 'தி இந்து' 15.4.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக