பக்கங்கள்

வெள்ளி, 13 நவம்பர், 2015

மெக்கா அருகே நெரிசல்: 725 பேர் பலி


சவுதி, செப். 25_ மெக்கா அருகே மினாவில் வியாழக் கிழமை ஏற்பட்ட நெரிச லில் சிக்கி ஹஜ் பயணிகள் 725 பேர் பலியாகினர். 860க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
"சாத்தான் மீது கல்லெ றிதல்' நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளச் சென்ற போது வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு (இந்திய நேரப் படி காலை 11.30) திடீர் நெரிசல் ஏற் பட்டது. இது தொடர்பாக சவூதி உள் நாட்டுப் பாது காப்பு அமைச்சகம் தெரி வித்ததாவது: "சாத்தான் மீது கல்லெறிதல்' நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இந்த நெரிசல் விபத்து நேரிடவில்லை.
அந்த இடத்தைச் சென் றடைய அமைக்கப்பட்டு உள்ள ஜமராத் பாலத்தின் முகப்புப் பகுதியில் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 717 பேர் உயிரிழந்தனர்.  அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணி யில் 4,000 பேர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அவசர மருத் துவ உதவி அளிக்க 220 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.
விபத்து நடந்த இடத்தி லேயே இரண்டு முதலு தவி முகாம்கள் அமைக் கப்பட்டு, காயமடைந்தவர் களுக்கு மருத்துவ உதவி கள் வழங்கப்பட்டு வரு கின்றன. ஏற்கெனவே "சாத் தானின் மீது கல்லெறிதல்' நிகழ்ச்சியில் கலந்து கொண் டவர்களும், அந்த நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வந்து கொண்டிருப்பவர்களும் மாற்று வழிகளில் அனுப் பப்பட்டனர்.  திடீர் நெரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து உடனடி யாக எந்தத் தகவலும் இல்லை என சவூதி உள் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
4 பேர் இந்தியர்கள்
பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. இதில் 2 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள  நிலை யில், மூன்றாவதாக கேர ளாவின் திரிச்சூர் மாவட் டத்திற்குட்பட்ட கொடுங் கலூர் பகுதியை சேர்ந்த முகமது என்பவரும்,
நான் காவதாக தெலுங்கானா மாநிலத்தின் அய்தராபாத் துக்கு அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிபி ஜான் என்கிற பெண்மனியும் பலியாகியி ருப்பதாக அந்தந்த மாநி லத்தைச் சேர்ந்த அதிகா ரிகள் பத்திரிக்கையாளர்க ளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்கள் 1.5 லட்சம் பேர் நடப்பு ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட தாக கூறப்படுகிறது. நெரி சலில் சிக்கி உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

ஹஜ் புனித பயணத்தின் போது
இதுவரை நடந்த விபத்துகள்

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்கனவே பல முறை விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-
1975ஆ-ம் ஆண்டு டிசம்பர்: ஹஜ் பயணிகள் தங்கி இருந்த கூடாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் 200-க்கும் அதிகமானோர் பலி.
1987ஆ-ம் ஆண்டு ஜூலை: ஈரானிய போராட் டக்காரர்களுக்கும் சவுதி அரேபிய காவல் துறை யினருக்கும் இடையே நடந்த மோதலில் 400-க்கும் அதிகமாக ஈரானிய யாத்ரீகர்கள் பலி.
1990-ஆம் ஆண்டு ஜூலை: மெக்கா அருகே உள்ள அல்-முசீம் குகைப்பாதையில் நடந்த விபத்தில் 1,426 பயணிகள் உயிர் இழந்தனர்.
1994-ஆம் ஆண்டு மே: மினாவில் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது ஜமாரத் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 270 பயணிகள் பலி.
1997-ஆம் ஆண்டு ஏப்ரல்: மினாவில் ஹஜ் பயணி கள் தங்கி இருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 343 பயணிகள் சாவு.
1998-ஆம் ஆண்டு ஏப்ரல்: நெரிசலில் சிக்கி 119 பேர் பலி.
2004-ஆம் ஆண்டு பிப்ரவரி: ஜமாரத் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் இறந்தனர்.
2006ஆ-ம் ஆண்டு ஜனவரி: ஜமாரத் பாலத்தின் கிழக்கு நுழைவாயில் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 362 பேர் சாவு.
2015 செப்டம்பர் 11ஆம் தேதி: மெக்கா பெரிய மசூதியில் கிரேன் சரிந்து விழுந்ததில் 115 பேர்
விடுதலை,25.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக