பக்கங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

புத்தர் அறிவுரைகள்

இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.

------------------------

உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.

------------------------

கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.

------------------------

முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.

------------------------

பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டு கிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை.

ஆள் இல்லை!

...... முன்பு புராண இதிகாசங்களைத் தேடிக் கண்டு பிடித்தார்கள். பின்பு படித்தவர்கள் கூறினால் விளங்கிக் கொள்வார்கள்.

.... போகிற போக்கைப் பார்த்தால் வீடு தேடிப் போய் சொன்னாலும் கேட்க ஆள் அகப்படாது எனத் தோன்றுகிறது.

- கிருபானந்தவாரியார்
(10.6.1979 ஆனந்த விகடன், பக்கம் 55)

-விடுதலை,22.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக