பக்கங்கள்

செவ்வாய், 10 ஜனவரி, 2017

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்




திராவிட நாடு இதழில் (16.1.1944)  மூடநம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத் திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?

2) அது எது?

3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?

4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?

5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?

6) அதற்கு ஆதாரம் யாது?

7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?

8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப்படையாகக் கொண்டதா?

9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?

10) ஒரு தன்மையா?

11) ஒரு குணமா?

12) சிவனுக்கு உருவம் சொல்லப்படுகிறதே- அது ஏன்?

13)    அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?

14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக்கான பெயர்கள் வட மொழியில் இருப்பானேன்?

15) ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கும் அவர் களது பெண்டு பிள்ளைகளுக்கும் வேறு வேறு  பெயர்கள் ஏன்?

16) சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

17)  ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள்ளுகின்றதா? மறுக்கின்றதா?

18) சைவ சமயாச்சாரியர்கள் என்பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்வி களையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக் கின்றனரா?

19)    சமணர்கள் வேத வேள்வியை நிந்தனை செய் தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?

20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?

21)  சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?

22)    சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?

23)    சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர் களையும் துன்புறுத்தியதேன்?

24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?

25)    வடமொழிக் கதைகளையும் வடமொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர் களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?

26)    சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?

27) எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன?

28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?

29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?

30) விக்ரக ஆராதனை உண்டா?

31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?

32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?

33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?

34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?

35) சைவக் கோயில்களில் இப்போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுகின்றதா?

36)    அது சைவத்திற்கு முரணானது அல்லவா?

37)    முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?

38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?

39)    ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது  ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?

40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது?

41)    பிள்ளையார் என்ற ஒரு கடவுளுக்குச் சைவத்தில் இடம் இருக்கின்றதா?

42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள் ளுகின்றனரா?

43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?

44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகா புராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?

45)    நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

46)    அவை தனித்தனி கடவுள்களா?

47)    நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?

48)    மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

49) சமணர்கள் கழுவேற்றப்பட்டதைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?

50) திருநீறு எதற்காகப் பூசுவது?

51)    இலிங்கத்திற்கும், ஆவுடையாருக்கும் சொல் லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?

52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?

53)    இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?

54) கைலயங்கிரி எது? சுப்பிரமணியன் எது? கந்தன் எது? குமரன் எது?

55)    மலையரசன் மகனென்றால் என்ன?

56)    இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவை களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

57) இவை இப்படியே நடக்க வேண்டியது தானா?

58)    இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?

59)    அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்பலாமா? அல்லது இப் படியே இருக்க வேண்டுமா?

60)    சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண் டார்களா?

61)    மறுபிறப்பை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

62)    திதிகளை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

63)    பிராமணர்களை ஒப்புக்கொள்ளுகின்றார்களா?

64)    சமயாச்சாரிகளின் அற்புதங்களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ்வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என்பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

67) சைவர்களுக்குச் சரியான முறை எது?

68)    சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?

69)    வருணாசிரமம் உண்டா?

70)    உண்டென்றால் ஆதாரம் எது?

71)    இல்லை என்றால் ஆதாரம் எது?

72) இப்பொழுது அமலில் இருப்பதற்குக் காரணம் என்ன?

73)    சைவ மடங்கள் எதற்கு?

74) அவை இதுவரைச் சாதித்த தென்ன?

75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?

76)    இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?

77)    இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சம யத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?

78)    அருகதை உடையவர் யார்?

79)    பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல் களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?

நன்றி: திராவிட நாடு இதழ் 16.1.1944

-விடுதலை,15.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக