பக்கங்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

ஒடிசாவில் ‘பில்லி சூனியம்’ மூடநம்பிக்கையால் விளைந்த கொடூரம்!



தாயுடன் 4 குழந்தைகளும் கொல்லப்பட்ட கேவலம்


புவனேசுவரம், பிப்.1 ‘சூனி யக்காரர்கள்’ என கூறிக்கொண்டு நான்கு குழந்தைகளுடன் தாயை யும் கொலை செய்த கொடூரம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள் ளது. அக்கொலைகள் தொடர் பானவர்களை ஒடிசா மாநில காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.

இவ்வழக்கில் ஏற்கெ னவே ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் பலர் கொலை வழக்கில் தொடர்பிருக் கலாம் என்று காவல்துறையின் விசாரணை நடைபெற்று வரு கிறது. மான்கிரி முண்டா என்ற பெண் மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் உடல்கள், அவர் களின் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் 26.1.2019 அன்று கண்டெடுக்கப்பட்டது.

சூனியக்காரர்கள் எனும் மூடநம்பிக்கையால் வயதான வர்கள் உள்பட பெண்களை இலக்கு வைத்து தாக்குவது வட மாநிலங்களில் நடந்து வரு கிறது. மூத்த காவல்துறை அதிகாரி கவிதா ஜலான் இது பற்றி கூறுகையில், "கைது செய் யப்பட்ட முக்கிய குற்றவாளி தான் ஒரு "மந்திரவாதி" என்று கூறியுள்ளார்.

சுந்தர்காத் மாவட்டத்திலுள்ள பழங்குடியின குடியிருப்பில் வாழ்ந்த பெண் மான்கிரி முண் டாவும், அவரது குழந்தைகளும் அந்த கிராமத்திலுள்ள இன்னொ ரு குடும்பத்தின் மீது சூனியம் செய்துள்ளதாக கைதானவர் களில் ஒருவர் கூறியுள்ளார். 25.1.2019 அன்றிரவு மான்கிரி முண்டாவும், அவரது குழந்தை களும் தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளது. மான்கிரி முண்டாவுக்கு ஒரு வயது குழந்தை உள்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.

மான்கிரி முண்டாவும், அவரது நான்கு குழந்தைகளும்  கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் வீட்டுக்கு அருகி லுள்ள கிணற்றுக்குள் இறந்து கிடந்தனர். உடல்களை அருகி லுள்ள கிணற்றில் வீசுவதற்கு முன்னால் மரக்கட்டையாலும், கோடரியாலும் அவர்களை வன் முறைக் கும்பல் தாக்கியுள்ளது.

பெண்களை சூனியக்காரிகள் என முத்திரை குத்துவது ஒடிசாவிலுள்ள பழங்குடியின சமூகங்களில் இன்னும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. இந்த கொலையில் ஈடுபட்டுள்ள பிறரையும் தேடி வருவதாகவும், அதிக கைதுகள் இருக்கும் என் றும் காவல்துறை தெரிவிக்கிறது.

"இத்தகைய மூட நம்பிக் கைகள் மீதான விழிப்புணர்வை கிராம மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்" என்று ஜலான் தெரிவித்திருக் கிறார். சூனியம் தடைசெய்யப் பட்டிருந்தாலும், சூனியத்தோடு தொடர்புடைய கொலைகள் ஒடிசாவில் அதிகரித்து வருகின் றன. சூனியக்காரர்களாக குற் றஞ்சாட்டப்பட்ட ஒரு குடும்பத் திலுள்ள மூன்று பேரை கடந்த ஆண்டு கொலை செய்த ஒன்பது பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இதே மாதிரியான காரணங் களால் அசாம் மற்றும் ஜார் கண்ட் மாநிலங்களில் பெண்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.

2017ஆம் ஆண்டு ஒடிசாவில் சூனியம் தொடர்பாக 99 வழக் குகள் காவல்துறையில் பதிவாகி யுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பதிவான 83 வழக்கு களைவிட இது அதிகமாகும்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மூட நம்பிக் கைகள் உள்ளன  கணவனை இழந்த பெண்களின்  நிலம் மற்றும் சொத்துக்களைக் குறி வைத்தும் இதுபோன்ற தாக் குதல்களை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 1.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக